​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 31 May 2026

சித்தன் அருள் - 2213 - அன்புடன் அகத்தியர் - 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 7




அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 7 

நாள் :- 19/04/2026 (ஞாயிற்றுக்கிழமை) 
நேரம் :- காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 
இடம் : உலக நன்மைக்காக 09 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.

===========================
# அன்புடன் தேரையர் சித்தர் வாக்கு 
===========================

( அடியவர்கள் அவசியம் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரலையை அவசியம் பார்க்கவும். அதன் பின்னர் பின் வரும் வாக்கு ரகசியங்கள் நன்கு புரியும்) 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, படிக்கிறேன். கேளுங்க, அடுத்தாக தேரையர் என்ன சொல்றாருன்னு பார்ப்போம். 

தேரையர் சித்தர் :- "அறிந்தும், அடுத்தடுத்து, இவ்வெழுத்துக்களில் அனைத்தும் அடங்கும். இவை இல்லை என்றால் உலகம் இயங்காது." 

சுவடி ஓதும் மைந்தன் :- இந்த எழுத்துக்கள்ல “அ“வில் இருந்து...

அடியவர் :- அக்கண்ணா (ஃ)  வரைக்கும் இருக்கு. இதுல அடங்கி இருக்கு. இது இல்லனா...

சுவடி ஓதும் மைந்தன் :- இதுல தான் உலகம். எல்லா மதத்திலயும், எல்லா மொழிகளிலும்...

அடியவர் :-  இந்த எழுத்துக்களை பயன்படுத்துறாங்க.

சுவடி ஓதும் மைந்தன் :- பயன்படுத்தாத இல்லை.

அடியவர் :-  இல்லை.

தேரையர் சித்தர் :- இதனால்தான் அனைத்து மதமும் இறைவன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லா மதமும்… இறைவன். 


தேரையர் சித்தர் :- மனிதன் தான் இங்கு பிரித்து வைத்திருக்கின்றான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  மனிதன் தான்...


அடியவர் :-  பிரித்து வைத்திருக்கின்றான்.


===========================
# அகத்திய மாமுனிவரின் வீர விளையாட்டு…..
===========================


தேரையர் சித்தர் :- அடுத்து, என் அகத்தியனின் வீர விளையாட்டை பாருங்கள். எழுதுங்கள், எழுதுகோலை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அடுத்து, என் அகத்தியன் கண்டுபிடிச்சது நான் சொல்றேன்னு தேரையர் சொல்றாரு.


அடியவர் :-   வீர விளையாட்டு. குருநாதருடைய வீர விளையாட்டை பார்க்கலாம் வாங்கன்றாரு.


அடியவர் :-  உலகத்துல முதல் முறையாக ரகசியங்கள் எல்லாம் வெளிப்படுத்துறாங்க.


( இப்போது இவ்வேளையில் அனைத்து “ஆ” கார வரிசை எழுத்துக்களை எல்லாம் அழித்துவிட்டு அடுத்த படத்திற்கு தயாரானார்கள் அடியவர்கள் )


நேரலை :- https://www.youtube.com/watch?v=C5OQ5pL4GnY&t=5h23m36s  


===========================
# ஜாதக கட்டங்களில் உலகில் முதன் முறையாக ஆங்கில எழுத்துக்கள் 
===========================


தேரையர் சித்தர் :- "அறிந்தும், இவை தன் ஆ என்ற இடத்திலே, அறிந்தும்—அதாவது ஏது  என்று அறிய அறிய  மூன்று மூன்று, பின் நட்சத்திரங்கள்—இதனை மூன்று மூன்றாக ஆங்கிலத்தில் எழுதுக." 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, ஏபிசிடி எழுத சொல்றாரு. இங்க ஏபிசி, இங்க... ஏபிசி. எழுதுங்க ஐயா. ஏ, பி, சி. அப்படியே எழுதிடுவாங்க.


( ஒவ்வொரு ராசி கட்டத்திலும் 3 நட்சத்திரங்கள் இருக்கும். எனவே ஆங்கில எழுத்துக்களை மூன்று மூன்றாக, வரிசையாக  எழுத சொன்னார்கள். அடியவர்கள் பின்வருமாறு எழுதினார் அங்கு உள்ள ஜாதக கட்டத்தில்… 


மேஷம் - A, B , C 
ரிஷபம் - D, E , F 
மிதுனம் - G, H , I
கடகம் - J, K , L 
சிம்மம் - M, N, O
கன்னி - P, Q, R
துலாம் - S, T, U
விருச்சிகம் - V, W, X
தனுசு - Y , Z  - இத்துடன் 26 எழுத்துக்களும் நிறைவு.
மகரம் - 
கும்பம் -
மீனம்  -  ) 


தேரையர் சித்தர் :- இதை என்று அறிய, மீண்டும், அதாவது விட்டு இருக்கின்றதே அதை நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்? 


சுவடி ஓதும் மைந்தன் :-  இங்க ( மகரம், கும்பம் ,மீனம்  ராசிகளில் )    விட்டு இருக்குது இல்ல?  என்ன பண்ணப் போறீங்கன்றாரு. யோசிங்க?


அடியவர் 2 :-  இறுதி கட்டத்துக்கு என்ன செய்யப் போறீங்க?


சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன செய்யப் போறீங்கன்னு கேக்குறாரு.


அடியவர் :-  (சித்தர்கள்) அவங்க ஏதாவது சொல்லணும்.




தேரையர் சித்தர் :- "அறிந்தும், எவை என்று புரிய, கடைசியில் எங்கு முடித்திருக்கின்றான்?" 


சுவடி ஓதும் மைந்தன் :-  கடைசியில் எங்க?


அடியவர் :-  ஐ.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐ. எங்க தனுசு?


அடியவர் :-  தனுசு.


சுவடி ஓதும் மைந்தன் :-  குரு.


அடியவர் :-  குரு.


தேரையர் சித்தர் :- இவையெல்லாம் ( தனுசு ராசி )  இங்கிருந்து வந்துவிட்டாலே “ஓம்” காரத்தை அடைந்து விடலாம்.அதனாலே. 


சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாம் இங்கிருந்து வந்து இதுவரைக்கும் ( தனுசு ராசி )  தெரிஞ்சுச்சுங்கன்னாவே அடுத்து என்னது? ஓம்காரத்தை இறைவன் யார்? ஆங்கிலத்திலேயே சுலபமா அறிஞ்சுக்கலாம்ன்றாரு இறைவன். ஐயா புரியுதுங்களா? 


அடியவர் :- ஐ வரைக்கும் வந்துட்டோம்னா “ஓம்”காரம் யார்?


சுவடி ஓதும் மைந்தன் :-   “ஓம்”காரம் யார்? ஐயா சொல்லுங்க, எக்ஸ்பிளைன் பண்ணுங்க கொஞ்சம் ஐயா.


அடியவர் :- ஓம்காரம். ஆ, உ, ம். அதான் ஓம். அதோட ஆரம்ப எழுத்து சொல்றேன் பாருங்க. ஔம். அது ஆரம்பம். அதுதான்… அங்க இறைவனை வந்து பாக்குறதுக்கு போலாம்ன்றாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :- இல்ல இல்ல. இருங்க இருங்க எழுதிடுங்க. சொல்றேன் இருங்க. ஒரு நிமிஷம்.


===========================
#  தனுசு ராசி ரகசியங்கள் 
===========================


தேரையர் சித்தர் :- "அறிந்தும், ( தனுசு ராசி வரை ) இவையனைத்தும் பின் நிச்சயம் தெரிந்து வைத்திருந்தால், குருவானவன் உன்னிடத்திலேயே வருவான். தெரிந்து வைந்திருக்கவில்லை என்றால், நீ அலைந்தாலும் நிச்சயம் கிடைக்கப் போவதில்லை." 


சுவடி ஓதும் மைந்தன் :-  இதெல்லாம்?...


அடியவர் :- இந்த விஷயங்கள் அடிப்படை விஷயங்கள் எல்லாம் தெரிஞ்சிருக்கணும். தெரிஞ்சாதான் வந்து குருவானவர்ட்ட உங்களாலயும் போட முடியும், அவங்கள தேடி வர முடியும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  குரு வந்து நம்மளுக்கு இந்த Z , ஐ வரைக்கும் தெரிஞ்சிருந்தா அடுத்து குரு என்ன பண்ணுவாரு?


அடியவர் :- இறைவனை காமிப்பாரு.


சுவடி ஓதும் மைந்தன் :-  இறைவனை காண்பிப்பாரு. ஆனா இங்கிருந்து வர்றது...


அடியவர் :- குருவருள் கிடைக்கலன்னா இறையருள் கிடைக்காது.


சுவடி ஓதும் மைந்தன் :-  கிடைக்காது. ஐயா புரியுதுங்களா? 


===========================
#  உலகில் முதன் முறையாக அனைத்து கடவுள்களும் ஜாதக கட்டத்தில்…
===========================


தேரையர் சித்தர் :- அப்பா,  இப்பொழுது யான் ஏன் இங்கு ஆங்கில வார்த்தைகளை... இதனால் அனைத்தும் ஏது  என்று புரிய, அனைத்து தெய்வங்களிலும் அனைத்து சமயங்களிலும் எழுதுக. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப நான் ஆங்கிலத்துல ஏன் கொண்டு வந்தாருன்னா தேரையர் சொல்றாரு...


அடியவர் :-  எல்லா மொழிகளும்.


சுவடி ஓதும் மைந்தன் :- எல்லா மொழிகள். ஐயா... இயேசுநாதர் இங்க இருக்காரு. ஆமா. ஜீசஸ் எங்க இருக்கு? ஜே (J) எங்க இருக்கு? அங்க போடுங்க. ( கடகம் - J, K , L ) 


இவ்விடத்தில் நேரலை :- https://www.youtube.com/watch?v=C5OQ5pL4GnY&t=5h27m06s

அடியவர் :- ஜீசஸ். ( அடியவர் கடக ராசியில் - J என்று முன்பு எழுதப்பட்ட எழுத்தின் அருகில் “JESUS” என்று எழுதினார்கள். அதனை மேல் குறிப்பிட்டுள்ள காணொளியில் பார்க்கவும்) 


சுவடி ஓதும் மைந்தன் :-  அல்லாஹ் எங்க இருக்கிறார் வந்து?


அடியவர் :- 


சுவடி ஓதும் மைந்தன் :-  “A” வே வந்துட்டார். ( மேஷம் - A, B , C  )


அடியவர் :- அல்லாஹ்.. ( அடியவர் மேஷம்  ராசியில் - A என்று முன்பு எழுதப்பட்ட எழுத்தின் அருகில் “ALLAH” என்று எழுதினார்கள். அதனை மேல் குறிப்பிட்டுள்ள காணொளியில் பார்க்கவும்) 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்புறம் வேற நாமம் என்ன சமயமா இருக்குது?
Speaker 1
அடியவர் :-  புத்தர்.
Speaker 2
சுவடி ஓதும் மைந்தன் :-  புத்தர். ( மேஷம் - “B”UDHAR   ) இங்கேயே. ஐயா பாத்தீங்களா? எல்லாருக்கும் தெரியல. இந்த மாதிரி தெரியாத நம்ம இருக்கக்கூடாதுங்க ஐயா.


அடியவர் :-   குருநானக்,  மகாவீரர்.


( அது போலவே அங்கு அந்த , அந்த ராசிகளில் எழுதினார்கள். அதனை மேல் குறிப்பிட்டுள்ள காணொளியில் பார்க்கவும்) 

===========================
#  மகரம்   - ALPHA
#  கும்பம்  - BETA
#  மீனம்   - GAMA 
===========================


தேரையர் சித்தர் :- கதிர்கள் மூன்று. அவையும் இணை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா. காமா கதிர்கள். அது மூன்று கதிர்கள் இருக்குல்ல இங்க வந்து. 


அடியவர் 2 :-   ஆல்பா பீட்டா. ஆல்பா பீட்டா காமா. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இது வந்து ஆல்பா பீட்டா காமா.


அடியவர்   :-  ஓ!!!!!!!!  ஆல்பா.. பீட்டா.. காமா….


(அடியவர் மகர ராசியில் ALPHA, கும்ப ராசியில் BETA, மற்றும், மீன ராசியில் GAMA  என்று எழுதினார்கள்)


தேரையர் சித்தர் :- இதை அறிந்து இவ்வாறாக மீண்டும் ஒரு சுழற்சி. (ஃ) “அக்” என்பது போல் இரண்டு. 


( இவ்விடத்தில்  சுவடி ஊதும் மைந்தன் எண்ணத்திலும் நாடி ஓடினால் மட்டுமே இப்படி உரைக்க முடியும் என்று உணர்க. )


===========================
#  ஜாதக கட்டத்தின் நடுவில் INFINITY/இன்பினிட்டி. அதுவே இறைவன்.
===========================


சுவடி ஓதும் மைந்தன் :-  ( INFINITY ) இன்பினிட்டி. இங்க போடுங்க. இன்பினிட்டி. முடிஞ்சு போச்சு. ஐயா புரியுதுங்களா? எனக்கும் புரியல. இதுல சொல்ல வராரு என்னன்னு சொல்லிட்டு. 


தேரையர் சித்தர் :- ஏது  என்று புரிய, அப்பா அறிந்தும் இக்கட்டத்திலே அனைத்தும் முடிவடைந்து விடுகின்றது. அனைத்து மொழிகளிலும் இதிலே பேசலாம். கற்றுக் கொடுக்கின்றேன் மொழிகளைப் பற்றியும். 


அடியவர்   :-  ( ஆச்சரியத்தில் ) அப்பா !!!!!!!!!!!!!!!


சுவடி ஓதும் மைந்தன் :-  இதுலயே வந்து...


அடியவர்   :- எல்லா மொழிகளும் இருக்குன்றாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லா மொழிகளிலும் நீங்க பேசலாம். ஏய் எத்தனை மொழிகள் ஐயா? ஹிந்தி பேசலாம் இதுலயவே. இங்கிலீஷ் பேசலாம்.


அடியவர்   :- கர்நாடகா பேசலாம். மலையாளம் பேசலாம்.


சுவடி ஓதும் மைந்தன் :-  மலையாளம் பேசலாம்.


அடியவர்   :- மராத்தி பேசலாம்.


சுவடி ஓதும் மைந்தன் :-  தமிழ் பேசலாம். மராத்தி பேசலாம். குஜராத்தி பேசலாம்.


அடியவர்   :- உருது பேசலாம்.


சுவடி ஓதும் மைந்தன் :-  உருது பேசலாம். இன்னும் ஜப்பானி பேசலாம்.


அடியவர்   :- சைனீஸ் பேசலாம். கொரியன்.


சுவடி ஓதும் மைந்தன் :-  சைனீஸ் பேசலாம்.


அடியவர்   :- சொல்லிக் கொடுக்கிறேன்றாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-  நான் சொல்லிக் கொடுக்கிறேன்பா. 


===========================
#  ஏன் ஜாதக கட்டத்தின் நடுவில் இறைவன்.
===========================


தேரையர் சித்தர் :- அனைத்து சமயங்களையும்  கடந்தவன் இறைவன். இப்பொழுது புரிகின்றதா?


அடியவர் :- நிச்சயமா.


சுவடி ஓதும் மைந்தன் :- எல்லா...


அடியவர் :- இறைவன் ஒருவன் எல்லாத்தையும் கடந்தவன்.


சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாத்தையும் கடந்தவன். 


தேரையர் சித்தர் :- அனைத்து தேசங்களையும் கடந்தவன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லா தேசங்களையும் கடந்தவன்.


அடியவர் :- அதான் எல்லா மொழிகள், மதங்கள், இனங்கள், தேசங்கள் எல்லாத்தையும் கடந்தவன் இறைவன் என்பதை  இதன் மூலம் உணர்த்துறாங்க. 


தேரையர் சித்தர் :- அறிந்தும் ஏது என்று புரிய, இப்பொழுது ஒன்றைச் சொல்கின்றேன். அதாவது அனைத்தும் எழுத்துக்களும் தமிழ் எழுத்துக்களும் ஏது என்று புரிய, கூட்டுக. 


===========================
#  உயிரெழுத்துக்கள் - 12
# ஆங்கில எழுத்துக்கள் - 26
# ஆயுத எழுத்து - 1 
# ராசிகள் - 12
# ஆக மொத்தம்  - 51
# ஆல்பா, பீட்டா, காமா - 3
# 51 - 3 = 48 ( ஒரு மண்டலம் )
# ஒரு மண்டலம்(48) * 2 = 96 ( சிற்றிலக்கியங்கள் )
===========================


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா தமிழ் எழுத்துல இங்க எவ்வளவு எழுத்துன்னு கூட்டி எழுதிங்க ஐயாங்க. 


அடியவர் :- 12 உயிரெழுத்துக்கள். எழுதுங்க. 


தேரையர் சித்தர் :- அறிந்தும் ஏது என்று புரிய, அறிய இவை தன். அதாவது அறிந்தும் கூட அறிந்தும். அதாவது ஆங்கில எழுத்துக்களும் கூட்டு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  (26) ஆங்கில எழுத்துக்களும் கூட்டணும். எழுதுங்க.. ( அடியவரும்  அவ்வாறே எழுதினார்கள் ) 


தேரையர் சித்தர் :- அறிந்தும் அக் என்றையும் எழுது.


( அடியவரும்  அவ்வாறே ஆயுத எழுத்து அதற்கு 1 என்று எழுதினார்கள் ) 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஓகே.


தேரையர் சித்தர் :- கிரகங்களை  கூட்டு. 


சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா ராசியும்…..


அடியவர் :-  12.


நேரலை :-  https://youtu.be/C5OQ5pL4GnY?t=19822


( அடியவரும்  அவ்வாறே ராசிகளை 12 என்று  எழுதினார்கள் ) 


தேரையர் சித்தர் :- இவை அனைத்தும் கூட்டு.


சுவடி ஓதும் மைந்தன் :-  கூட்டுங்க. 


( அடியவரும்  அவ்வாறே  கூட்ட ….12 + 26 + 1 + 12 = 51 ) 


தேரையர் சித்தர் :- இதிலிருந்து ஏது என்று அறிய, அதாவது இவை தன் உணர்ந்து, இவை தன் மூன்று வகையான அறிந்தும், பின் கழி. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த கழி…ஆல்பா பீட்டா காமா கழிங்க.


அடியவர் :-  ஆல்பா, பீட்டா, காமா. மூணு கழிங்க …அதாவது -3. 


அடியவர் :-  51 -3 = 48.


அடியவர் 2 :- ஒரு மண்டலம்.


தேரையர் சித்தர் :- இவை தன் அனைத்தும் சரியாக விரதம் இவ்வாறாக இருந்தால் நிச்சயம் தன்னில் கூட மீண்டும் மீண்டும் அறிந்து கூற ஒரு உண்மை நிலை உங்களுக்கு புரியும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இவ்வாறு ஒரு 48 நாட்கள்….


அடியவர் :- அந்த ஒரு மண்டலம்னு சொல்றோம்ல, அந்த ஒரு மண்டலம் எப்படி வந்ததுன்றத காரணத்தை விளக்குறாரு.


சுவடி ஓதும் மைந்தன் :-   காரணம் காட்டுறாரு வந்து. அதே மாதிரி இறைவன் வந்து, ஒரு 48 நாள் நீங்க வந்து எதையும் வந்து சரியா வந்து விரதத்தை கடைபிடிச்சு இருந்தீங்கன்னா, இறைவன் யார் என்பது?  


அடியவர் :- புரியும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  புரியும். 


தேரையர் சித்தர் :- இவை தன் அறிந்தும் இதன் மூலமே பின் இன்னும் பின் அதனைப் பின். பெருக்கு இரண்டு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இரண்டால பெருக்குங்க ஐயா.


அடியவர் :- இரண்டால பெருக்குங்க ஐயா. 48*2 போடுங்க. 


எழுது பலகையில் எழுதும் அடியவர் :- (96 என்று எழுதினார்கள்).


தேரையர் சித்தர் :- எதை என்று அறிய சிற்றிலக்கியங்கள் எவ்வளவு?


அடியவர் :- 96 சிற்றிலக்கியங்கள்.


தேரையர் சித்தர் :- எதை என்று அறிய அப்பா அனைத்தும் எழுதுக பார்ப்போம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாம் எழுதுக சிற்றிழைக்கம். ஐயா.


அடியவர் :-  ஐயா கூகுள் ஆண்டவரை தான் கூப்பிடணும்.
Speaker 2
சுவடி ஓதும் மைந்தன் :-  96 ஐயா புரியுதுங்களா?
96 சிற்றிழைக்கங்கள்.


அடியவர் :- ( சொல்ல சொல்ல , எழுது பலகையில் எழுதும் அடியவர் அப்படியே எழுதினார்கள் ) 


96 இலக்கியங்கள். 
அகப்பொருள் கோவை எழுதுங்க ஐயா. ஐயா இன்னொன்னு சொல்றேன் ஐயா வரிசையில. வரிசையில. 
அகப்பொருள் கோவை. வரிசையில. 
அகப்பொருள் கோவை. 
அங்கமாலை. 
அட்டமங்கலம். 
அங்கமாலை. 
அட்டமங்கலம். 
அரசன் விருது. 
அலங்கார பஞ்சகம். 
அலங்கார பஞ்சகம். 
அனுராக மாலை.
அலங்கார பஞ்சகம்.


நேரலை : https://youtu.be/C5OQ5pL4GnY?t=19961


தேரையர் சித்தர் :-  அறிந்தும் அப்பா அனைத்தும் நீ சொல். அனைவரையும் சொல்லச் சொல்.


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாரும் சொல்லுங்க .


அடியவர் :-  அம்மா எல்லா பேரும் சொல்ல சொல்ல சொல்லுங்க. இதை சொன்னாலே சில விஷயங்கள் இருக்குன்னு சொல்றாங்க போல. எல்லாரும் திருப்பி சொல்லுங்க. 96 சிற்றிலக்கியங்கள் இப்ப சொல்லி இருக்காங்க தேரையர் பெருமான். அதை சொல்றேன் எல்லாரும் திருப்பி சொல்லுங்க.


( இப்போது அடியவர் சொல்ல சொல்ல அனைவரும் அங்கு அதனை அப்படியே சொல்ல ஆரம்பித்தனர்… )  


அகப்பெருள் கோவை.
அங்கமாலை.
அட்டமங்கலம்.
அரசன் விருது.
அலங்கார பஞ்சகம்.
அனுராக மாலை.
அரண்மனை வஞ்சி.
ஆற்றுப்படை.
இணை மணிமாலை.
இயல்பு நவீர்ச்சி மாலை.
இரட்டை மணிமாலை.
இருவா இருபது.
உலா.
உலா மடல்.
உளத்திப்பாட்டு.
ஒளிங்கை மாலை.
உற்பவ மாலை.
ஊசல்.
ஊர் நேரிசை.
ஊர் வெண்பா.
ஊர் இன்னிசை.
என் செய்யுள்.
ஐயடிகள்.
ஒளியலந்தாதி.
ஒருவா ஒருவது.
கண்படை நிலை.
கலம்பகம்.
காட்சி மாலை.
காப்பு மாலை.
காரிகை.
காப்பியம்.
குடைநிலல்.
குலகன்.
குரவஞ்சி.
கேசாதிபாதம்.
கைக்கிளை மாலை.
கையருநிலை.
கொடிமாலை.
கோவை.
சதகம்.
சாதகம்.
சின்னப்பூ.
செருக்கல வஞ்சி.
செவி அறிவூறு.
தசாங்கம்.
தசாங்கத் தயல்.
தண்டக மாலை.
தவம்.
தாரகை மாலை.
தாரை மாலை.
தானை மாலை.
தூது.
தும்பை மாலை.
துகிலடை நிலை.
தொகைநிலைச் செய்யுள்.
நயனப்பத்து.
நவகண்டம்.
நவமணி மாலை.
நாமமாலை.
நாளிகை பத்து.
நான்மணி மாலை.
நால்வர் நாற்பது.
நாரை விடுதூது.
நொண்டி நாடகம்.
பதிகம்.
பதிற்றந்தாதி.
பயோதரப்பத்து.
பரணி.
பல்சந்த மாலை.
பவனிக்காதல்.
பன்மணி மாலை.
பாதாதி கேசம்.
பில்லைத் தமிழ்.
புகழ்ச்சி மாலை.
புறநிலை.
பெயராரவம்.
பெயர் நேரிசை.
பெயர் இன்னிசை.
பெருமகிழ்ச்சி மாலை.
பெருங்காப்பியம்.
போர்க்கெழு வஞ்சி.
மங்கள வெல்லை.
மடல்.
மணிமாலை.
மும்மணிக்கோவை.
மும்மணி மாலை.
மெய்கீர்த்தி.
மேக விடுதூது.
வசந்தமாலை.
வஞ்சி மாலை.
வரலாற்று வஞ்சி.
வறுக்கக்கோவை.
வறுக்கமாலை.
வாகைமாலை.
விருத்தப்பயன்.
வீர வெட்சி மாலை.


அடியவர் :- திருச்சிற்றம்பலம். 




அடியவர் :-  இதெல்லாம் 96… நமக்கு 96 இப்பதான் நான் முதல் கேள்விப்படுறேன் குருவருளால… சிற்றிலக்கியங்கள் 96 இருக்குன்னு தெரியும். but …. 96 counting…


===========================
#  ஆல்பா, பீட்டா, காமா - அலைகள் உங்கள் கண்களுக்கு எப்போது தெரியும்? 
===========================


இவ்விடத்தின் நேரலை :- https://youtu.be/C5OQ5pL4GnY?t=20150


தேரையர் சித்தர் :-  அறிந்தும் இவை தன் அறிய அதாவது பின் இவை என்று அறியாமல் இருந்தாலும் இவ் காப்பியங்கள் மூன்று மாதத்தில் சரியாக எவன் உச்சரிக்கின்றானோ,  அவனுக்கு அதாவது பின் இவ்வாறாக அதனைப் பற்றி, அதாவது நிச்சயம் ஒரு அலை நிச்சயம் செல்லும். அதாவது அவ் அலை பற்றி தெரியும், பின் ஆங்கிலத்திலே சொல்வார்களே. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இதை வந்து, அந்த சிற்றிலக்கியங்கள் வந்து, மூணு மாசங்கள்ல வந்து, இதெல்லாம் படிச்சோம்னா, ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் போல தான், ஆல்பா பீட்டா காமான்னு…. அந்த அலை வந்து உங்களுக்கு தெரியும்ன்றார். மூணு மாதத்துல அப்ப ஆல்பா பீட்டா காமா பத்தி தெரியும் பாருங்க.


அடியவர் :- அந்த ஒளிக் கதிர்வீச்சு தான் அந்த இறைவனை பார்க்கிறதுக்கு ஒரு மூலம்னு சொல்ல வராங்க. அந்த ஒளிக்கதிர்வீச்சை பார்க்கிறதுக்கு தான்…. 


தேரையர் சித்தர் :-  அப்பா மீண்டும் அதாவது அறிந்தும் கூட அதாவது ஒன்பது கிரகங்கள் ஆனாலும் 12 கட்டங்கள் ஏன்? 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஒன்பது கிரகங்கள் தான் இருக்குது. ஏன் 12 கட்டங்கள்? 


அடியவர் :-  கிரகங்கள் ஒன்பது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இருக்குது ஓகே. மொத்தத்துல ஒன்பது கிரகங்கள். ஏன் 12 கட்டங்கள் விட்டாங்க? 


அடியவர் :-  ஒன்பது கிரகங்கள். மூன்று கதிர்வீச்சு. 


தேரையர் சித்தர் :-  இவ் ஒன்பது கிரகங்களை ஏது என்று புரிய சரியாகவே பின் அதாவது அறிந்து கொண்டால், நிச்சயம் இவ் கோடானது உங்கள் கண்களுக்கு தெரியும். 


சுவடி ஓதும் மைந்தன் :- இந்த ஒன்பது கிரகங்களையும் நீங்க வந்து அறிஞ்சுக்கினீங்கன்னா ஆல்பா பீட்டா காமா வந்து 


அடியவர் :-  கண்ணுக்கு தெரியும்ன்றாங்க கண்ணுக்கு தெரியும் அந்த 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப ஐயா யாருங்க ஐயா ஐயா புரியுதுங்களா ஐயா அப்ப என்ன ஆச்சு ஒன்பது +  மூணு = 12.  முடிஞ்சு போச்சு. அப்ப இன்பினிட்டியை காணலாம். இன்பினிட்டி யாரு? 


அடியவர் :-  முடிவில்லாதவன் 


சுவடி ஓதும் மைந்தன் :-  முடிவில்லாதவன். ஆதியும் அந்தமும் இல்லாதவன் 


இவ்விடத்தின் நேரலை :- https://youtu.be/C5OQ5pL4GnY?t=20266


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப ஆங்கிலத்தில் 26 … ஆனா 27 வது என்ன வருது? இன்பினிட்டி.. அப்ப 27 நட்சத்திரங்கள் ஐயா புரியுதுங்களா? 27 நட்சத்திரங்கள். 12 மெய்யெழுத்துக்கள். 


(இவ்விடத்தில் பல உரையாடல்கள். அதன் சாரம் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.  ) 


உயிர் எழுத்து - 12
ஆங்கில எழுத்துக்கள் - 26
ஆயுத எழுத்து (ஃ)   - 1
மொத்தம் = 12 +26+1 = 39
infinity - 1 
மொத்தம் 39 + 1 = 40 




தேரையர் சித்தர் :-  ஏது என்று புரிய இவை தன் அறிய அறிந்தும் இவை தன் வென்றால் அறிந்தும் அனைத்தும் வெல்லலாம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இதை வந்து வென்றாலே அனைத்தும் வெல்லலாம் என்றார் வந்து. இது எப்படிங்க ஐயா? உயிரெழுத்துக்கள் 12. உயிரெழுத்து படிக்கணும். ஆயுதம் தெரியணும். ஆங்கிலத்துல எழுத்து எல்லாம் தெரியணும். இதை வந்து நீங்க இந்த உலகத்தை வெல்லலாம். 




சுவடி ஓதும் மைந்தன் :-  அப்புறம் ஓம்கார பொருள்…. ஐயா ஐ வரை செஞ்சுக்கினீங்கன்னா, அடுத்து உங்களை யார் இயக்குறது?


அடியவர் :-  இறைவனை இயக்க ஆரம்பிச்சுருவார்.


சுவடி ஓதும் மைந்தன் :-   இறைவன்… குருவானவரை இயக்குவாருங்க ஐயா. ஓம்காரம் யாருன்னு தெரிஞ்சுக்கிறோம். ஆல்பா பீட்டா காமா தெரியும். எல்லாம் ஓம் என்ற ஓம் ஓம்னு சொல்றீங்களே அது என்னன்னு அதுவும் கண்ணுக்கு தெரியும்ன்றார். உந்துகாரம் ஒன்னும் இல்லைங்க ஐயா ஐயா புரியுதுங்களா 


அடியவர் :-  அப்படின்னா ஐயா நம்ம இங்க இருந்து இதுவரைக்கும் ( மேஷ ராசியில் இருந்து தனுசு ராசி வரைக்கும் )  நம்ம கஷ்டப்பட்டு வரணும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  வரணும் 


அடியவர் :-  குரு வந்து இறைவனை காண்பிப்பார். ( அதாவது ஆல்பா , பீட்டா , காமா மூலமாக )


சுவடி ஓதும் மைந்தன் :-  ரைட் அவ்வளவுதான். முடிஞ்சு போச்சுங்க ஐயா. அப்ப குரு வந்து இங்க இருந்து ( தனுசு ராசியில் இருந்து ) இங்க ( மீன ராசி வரை ) இயக்குவார் ஓம்காரத்தை. ஓம்காரனா யாரு?  ஓம் யாரு? ஆமா குரு.


இவ்விடத்தின் நேரலை :-  https://youtu.be/C5OQ5pL4GnY?t=20414


தேரையர் சித்தர் :-  அப்பா இவை என்று அறிய அடுத்து பின் பக்கத்தில் இடு பின் “ம்” மை 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஒ  பக்கத்துல இடுங்க ஐயா “ம்”மை. 


எழுதும் அடியவர் :-  மகர ராசி அங்கு  “ஒ” அதனுடன் “ம்” அதனை இணைந்தார்கள். ( மகர ராசி  - ஒம்) 


சுவடி ஓதும் மைந்தன் :-  (கும்ப ராசி) அதுலயும் இருங்க…ஓம் ஓம் ஓம் 


எழுதும் அடியவர் :-  கும்ப  ராசி அங்கு  “ஓ” அதனுடன் “ம்” அதனை இணைந்தார்கள். ( கும்ப ராசி  - ஓம்) 


தேரையர் சித்தர் :-  அறிந்தும் கடைசியிலும் இடு இவ்வாறு 


எழுதும் அடியவர் :-  மீன  ராசி அங்கு  “ஔ  அதனுடன் “ம்” அதனை இணைந்தார்கள். ( மீன ராசி  - ஔம்) 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஓகேங்களா 


தேரையர் சித்தர் :-  அறிந்தும் இப்பொழுது பின் அதாவது முதலிலேயே எடு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இப்ப முதலிலேயே எடு என்றார் வந்து, இப்ப அ எடுங்க, ( மேஷ ராசி அருகில் ) அம் எழுதுங்க. அப்படியே எழுதுங்க ஐயா. ஒரு மந்திரம் இங்க எழுதுங்க மேல… 


அடியவர் :-  தனியா எழுதுங்க 


எழுதும் அடியவர் :-  ( பின்வருமாறு எழுது பலகையில் மேலே எழுதினார்கள் ) 


அம் ஆம்  ஓம் ஔம்


அடியவர் :-  நாலு மந்திரம் சொல்லிக் கொடுத்திருக்காங்க குருநாதர் 


தேரையர் சித்தர் :-  அறிந்தும் ஏது என்று புரிய பின் “இ”லும் இவ்வாறு இடு 


எழுதும் அடியவர் :-  ( இம் என்று எழுதினார்கள் ) 


தேரையர் சித்தர் :-  இன்னும் இ பற்றி இயக்கவில்லை. யான் சொல்கின்றேன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இன்னும் நான் வந்து இ பற்றி சொல்லல. இ பற்றி சொல்கின்றேன். ஐயா  அம் ஆம் இம், ஓகேங்களா? 


தேரையர் சித்தர் :-  அறிந்தும் பின் “உ” பற்றியும் சொல்கின்றேன் 


சுவடி ஓதும் மைந்தன் :-  உம் 


எழுதும் அடியவர் :-  ( உம் என்று எழுதினார்கள் ) 


===========================
#  ஈரேழு பதினான்கு உலகங்களின் மன்னன் நடராஜ பெருமான் ஆடும்  ஆட்டத்தின் ஒலி மந்திரம் -  “அம்  ஆம் இம் உம் ஓம் ஔம்”
===========================


நேரலை :- https://youtu.be/C5OQ5pL4GnY?t=20497


தேரையர் சித்தர் :-  அனைத்தும் எழுது 


சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாத்தையும் எழுது. தனியா எழுதுங்க அய்யா.




எழுதும் அடியவர் :-  அம்  ஆம் இம் உம் ஓம் ஔம் ( என்று எழுதினார் )


தேரையர் சித்தர் :-  அப்பா எதை என்று அறிய இவ்வாறாக பின் ஈசன் நடனமாடிக்கொண்டே இருக்கின்றான் அதாவது நடராஜனாக பின் அதாவது கால்களையும் கைகளையும் தூக்கி தூக்கி. அது பின் அதாவது ஒலியானது இவ்வாறாக பின் கேட்டுக்கொண்டே இருக்கும் 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா புரியுதுங்களா? நடராஜர் வந்து எப்பவுமே ஆடிக்கொண்டே இருப்பாராம் வந்து. ( விளக்கங்கள் அளித்தார்கள் ) 


தேரையர் சித்தர் :-  கடைசியில் ஏது என்ற அறிய பின் ஔம் என்ற சத்தம் 


சுவடி ஓதும் மைந்தன் :-  இதெல்லாம் அப்படியே…. எப்படி சொல்றாருன்னா…. எப்படிங்க? அப்படியே ஔம் என்ற வந்து ஒலிக்கும் 


அடியவர் :-  அதாவது இந்த பேரொளி பிழம்பு….முன்பு குருநாதர் சொன்னாங்கல  பேரொளி பிழம்பு…அதாவது  ஈசன் நடனமாடிக்கொண்டு உலகத்தை இயக்குறாரு. அப்ப இயக்குறப்போ வந்து, அந்த ஒலியின் சப்தத்தினால கிரகங்கள் அனைத்தும் இயக்கப்படுது அப்போ அந்த ஒலிகள் வந்து… இந்த ஒலிகள் எல்லாம் வருதுன்றாங்க…. அந்த ஈசன் நடனம் ஆடுறப்போ. 


தேரையர் சித்தர் :-  இதைத்தன் அறிந்தும் ஏது என்று புரிய அனைத்தும் பின் அறிந்திருந்தால் காதுகளுக்கும் கேட்கும் இவ் பின் எவை என்று ஒலி  


சுவடி ஓதும் மைந்தன் :-  ஒலியானது காதுக்கும் கேட்கும்ன்றாங்க ஏன்னா தெரிஞ்சிருந்தா கேட்கும் இதெல்லாம் வந்து அறிஞ்சிருந்தான்றார்.


===========================
#  ஈரேழு பதினான்கு உலகங்களின் மன்னன் நடராஜ பெருமான் ஆடும்  ஆட்டத்தின் ஓசை - நம்மால் கேட்க முடியும். ஆனால் ….
===========================

வணக்கம் அடியவர்களே , நாம் தியானம் செய்யும் போது ஒரு ஒலி எப்போதும் நம் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும். இதனை அனைவராலும் உணர இயலும். 

ஆனால் அந்த ஒலியில் உள்ள இந்த மந்திரங்கள் , அதன் மந்திர அட்சர ஓசையை (அம்  ஆம் இம் உம் ஓம் ஔம்)   நம்மால் இப்போது கேட்க/உணர  இயலாது. ஏனென்றால் அன்புடன் தேரையர் சித்தர் உரைப்பது போல,  நாம் இன்னும் நிறைய அறிந்திருக்க வேண்டும்.

அவ் இறை ஒலியை , ஓசையை உணர்வதே பெரும் புண்ணியமாகும்.  

தியானம் செய்து முயன்று பார்த்து, நீங்கள் கேட்கும் அந்த அவ் இறை ஒலி எப்படி என்று  இங்கு பதிவிடுங்கள் உங்கள் கருத்துக்களை. 

நமது அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளால், 

அவ் இறை ஓசை கேட்க, உங்கள்  தியானங்கள் தினமும் நடக்கட்டும். 

அவ் இறை ஓசையின் மூலம் உங்கள் மாயை திரை விலகட்டும்.

அவ் இறை ஓசையின் மூலம் உங்கள் கர்மங்கள் விலகட்டும்.

அவ் இறை ஓசையின் மூலம் உங்கள் புண்ணியங்கள் பெருகட்டும். 

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …….)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments: