​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 10 May 2020

சித்தன் அருள் - 863 - அதிர்வலைகளும் தசவாயுக்களும்!


யோகாசனத்தை நமக்களித்தது சித்தர்கள்தான். ஒவ்வொருவரும், அவரவர் முறைப்படி பயிற்சி முறையை ஏற்படுத்தினார். பதஞ்ஜலி, திருமூலர், தன்வந்தரி சித்தர் போன்றவர்கள் யோகாப்யாசத்தில் முத்திரைகளை புகுத்தி, உடலின் குறைகளை எவ்வாறு நிவர்த்தி செய்வது, உடலை எப்படி உரமாக்குவது, நோயை எப்படி உடலை விட்டு விரட்டுவது என்பதை பற்றியெல்லாம் ஆராய்ந்து, மிக நுட்பமான முறைகளை வகுத்து தந்துள்ளனர்.

உதாரணமாக, ஒருவருக்கு உறக்கமே வரவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள், அவரை சின் முத்திரையில் பத்மாசனத்தில் அமர வைத்து, குறிப்பிட்ட அளவு நீளத்துக்கு இடது மூக்கு வழி சுவாசம் எடுத்து, வலது மூக்கு வழி விட செய்யும் பொழுது, 5, 10, 15 போன்ற நிலை வரும் பொழுது, ஒரு நொடி மூச்ச்சை உள்ளேயே இழுத்து பிடித்து வைத்தால், இரவு எட்டு மணிக்கே அவர் தூங்கி விழுவார். காலை சீக்கிரமே எழுந்து அன்றைய தினத்தை தொடங்குபவர்களையும், இது தூக்கத்தை வரவழைத்து அடித்துப் போட்டுவிடும். இதன் காரணம், அந்த சின் முத்திரையும், சற்று நேரம் இழுத்துப் பிடித்த மூச்சும், உள்ளே பார்த்த வேலைதான்.

முத்திரைகள், கை விரல்களின் நுனியில் ஏற்படுத்தும் அழுத்தம், நேராக எங்கு செல்ல வேண்டுமோ அங்கு சென்று உறங்கிப்போன உள்ளுறுப்பை செயல்படுத்துகிறது. இங்கும் அதிர்வுதான் வேலை செய்கிறது.

நமது கையிலுள்ள/காலிலுள்ள ஐந்து விரல்களும், பஞ்ச பூதங்களை கட்டுப்படுத்தும். யோகாவில், கைவிரல்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அவை யவன;

1. கட்டை விரல் - அக்னி தத்துவம்.
2. ஆள்காட்டி விரல் - வாயு தத்துவம்.
3. நடுவிரல் - ஆகாய தத்துவம்.
4. மோதிரவிரல் - நிலம் தத்துவம்.
5. சுண்டு விரல் - நீர் தத்துவம்.


முத்திரைகள் வழி, விரல்நுனியில் அதிர்வுகளை ஏற்படுத்தி, பிராணாயாமத்தில் தசவாயுக்களையும் தூண்டிவிட்டு, உடலின் உள்ளுறுப்புகளை செய்லபட வைப்பதே யோகாப்யாஸ பிராண சிகிர்சை எனப்படுவது.

ஒரு சில முத்திரைகளை இங்கு பார்க்கலாம். செய்முறை படமாக வேண்டியவர்கள் வலைப்பூவில் தேடி பார்த்துக்கொள்ளவும்.

மிருத சஞ்சீவினி முத்திரை:-


ஆள்காட்டி விரலை மடக்கி, கட்டை விரலால் ஆள்காட்டி விரலின் முன்புறமாக அழுத்தி, கட்டை விரலால், நடுவிரல், மோதிர விரலின் நுனியை தொட்டு, சுண்டு விரல் மேல் நோக்கி இருக்க செய்யும் முத்திரை "மிருத சஞ்சீவினி முத்திரை" எனப்படும். இது இருதயம், நுரையீரலை சூழ்ந்து நின்று பலப்படுத்தி, ஒருவரின் பிராணனை பிடித்து வைக்கும். மேலும் இருதயம், நுரையீரல் சம்பந்தமான பிரச்சினைகளை தீர்த்து வைக்கும். இதயத்தில் உள்ள அடைப்பு, இதயவலி, வளர்ச்சி குறைந்த இருதய, நுரையீரல் சுவர்களை உரம் ஏற்றும். இதை ஒருநாள் குறைந்தது மூன்று முறை 10 நிமிடத்துக்கு மேல் செய்து வந்தால், மருத்துவரே ஆச்சரியப்படுகிற மாற்றங்களை உள்ளே, மருந்தின்றி உருவாக்கலாம்.

ஞான முத்திரை:-

ஆள்காட்டி விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். கையை பூமியை நோக்கி கவிழ்த்து வைக்க வேண்டும். நிமிர்ந்து இருந்தால் அது சின் முத்திரை. கட்டை விரல் நுனிகள் பிட்யூட்டரி மற்றும் நாளமில்லா (Endocrine) சுரப்பிகளுக்கு ஆதாரம். ஆள்காட்டி விரல் நுனியால் கட்டை விரலைத் தொடும்போது மேற்கண்ட சுரப்பிகளின் இயக்கம் சுறுசுறுப்படையும். மூளைக்கு அதிக ரத்த ஓட்டம் செல்லும், மூளை செயல்பாடு, நினைவாற்றல் அதிகரிக்கும். அறிவையும், மன ஒருமுனை படுத்தலையும் குறிக்கும். பத்மாசனத்தில் அமர்ந்து காலையில் செய்ய வேண்டும். ஒருமுனைப்படுதலை மேம்படுத்தி, தூக்கமின்மையை போக்கி, கோபத்தை கட்டுப்படுத்த உதவும்.


வாயு முத்திரை:-

ஆள்காட்டி விரலின் நுனிப்பகுதியால், கட்டை விரலின் அடிப்பகுதியைத் தொட்டவாறும், கட்டைவிரல் மெதுவாக வளைந்து ஆள்காட்டி விரலின் முனையை தொட வேண்டும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரை உடலில் உள்ள காற்றை சமநிலைப்படுத்துகிறது. உட்கார்ந்திருக்கும்போது, நிற்கும்போது அல்லது படுக்கும்போது என ஒரு நாளில் எந்த நேரம் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம். 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக செய்தால் வாயுவால் ஏற்படும் தொந்தரவை நிவர்த்தி செய்ய முடியும். தொடர்ந்து 2 மாதங்கள் செய்து வந்தால் வாயுப்பிடிப்பு, கீழ் வாதம், பாரிச வாயு போன்ற வியாதிகளை கட்டுப்படுத்தும். வயிறு சம்பந்தப்பட்ட வாயு உபாதைகளும் நீங்கும். உடலில் உள்ள அளவுக்கு அதிகமான காற்றை வெளியேற்றி, வாயுவினால் ஏற்படும் நெஞ்சு வலியை குறைக்க இது உதவும். ஆர்த்தரைடிஸ் மூட்டுவலி, ரூமாடிசம், ஸ்பான்டிலைடிஸ் எனப்படும் கழுத்துவலிகளை குறைக்க உதவும்.


 சித்தன் அருள்..................... தொடரும்!

8 comments:

  1. ஓம் அகஸ்த்தியாய நம
    ஐயா இதை செய்ய தகுந்த நேரம்.காலை,மாலை அத்துடன் சாப்பிடும் முன்பா.சற்று
    விளக்கவும்

    ReplyDelete
  2. Banukumar
    OM LOBAMUTHRA SAMETHA AGATHEESAYA NAMAHA
    OM LOBAMUDHRA SAMETHA AGATHEESAYA NAMAHA
    OM LOBAMUDHRA SAMETHA AGATHEESAYA NAMAHA

    ReplyDelete
  3. Om Agatheesaya Namaha! Thanks ayya, very beneficial tips! Kindly provide breathing practice tips before Dhyanam for beginners ayya.

    ReplyDelete
  4. அருமை.நன்றி ஓம் அகத்தீசாய நம!

    ReplyDelete
  5. ஓம் அருள்மிகு மூத்தோனே போற்றி போற்றி போற்றி

    ஓம் மனோன்மணி அம்பாள் சமேத வெள்ளியங்கிரி ஆண்டவர் போற்றி போற்றி போற்றி

    ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    நன்றிகள் ஐயா

    ReplyDelete
  6. Sir my father can't sit in padma shana what he can do
    Thank u sir

    ReplyDelete
    Replies
    1. N YouTube I saw a link that will help you to do padmasana within 1 week. Even I can't do I'm going to try it from today. If I get suci will share the link... thanks

      Delete