​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 8 February 2017

சித்தன் அருள் - 589 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

அரைஞாண் கயிறு கட்ட வேண்டுமா?

அரை என்றால் இடுப்பு என்ற ஒரு பொருள் இருக்கிறது. இன்னொன்று, ஒட்டுமொத்த மனிதனின் அரைப்பகுதி, பாதிப்பகுதியை ஒட்டிதான் குண்டலினி சக்தி இருக்கிறது. கனகம் எனப்படும் தங்கத்திலும், வெள்ளியிலும், பஞ்சு நூலிலும் கயிறு கட்டிக் கொள்வதும், குறிப்பாக காளையினத்தவர் கட்டிக் கொள்வதும் சிலவகையான சூட்சுமமான சக்திகளை பெற உதவும். ஆனால் ஏதோ அங்காடியில் விற்கிறது. வாங்கிக் கட்டிக் கொள்வது போல் அல்ல. எப்படி முப்புரி நூல் எனப்படும் பூணூலை முறையாக ஜெபித்து அணிகிறார்களோ, இதையும் அப்படித்தான் அணிய வேண்டும். இதை மட்டுமல்ல. உடலிலே பிற்சேர்க்கையாக ஒரு அணிகலனை ஒருவன் அணிந்து கொள்ள வேண்டுமென்றால், ஏதோ அங்காடியில் வாங்கி அணிவதில் நன்மை ஏதுமில்லை. அதை முறையாக எடுத்து வந்து இல்லத்திலாவது அமர்ந்து, குறைந்தபட்சம் ஒரு சப்த தினங்களாவது பூஜை செய்து, மந்திர உருவேற்றி அணிய வேண்டும். அது உடலுக்கு கவசம் போல் ஒரு பாதுகாப்பைத் தரும். இதை ஆண்கள்தான் அணிய வேண்டும். பெண்கள் அணியக்கூடாது என்பதெல்லாம் இல்லை. யார் வேண்டுமானாலும் அணியலாம். பஞ்சலோகத்திலும் செய்து அணியலாம். பஞ்சு நூலாலும் அணியலாம். தவறொன்றுமில்லை. அஃதொப்ப, இது போன்ற பல்வேறுவிதமான சடங்குகளெல்லாம் இறை நம்பிக்கையையும், பிரார்த்தனையையும்  அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டவை.

1 comment:

  1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete