​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 21 June 2016

சித்தன் அருள் - 353 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

"பணிவு என்பது இனிமையை வளர்க்கிறது. உறவை மேம்படுத்துகிறது. ஆக்கபூர்வமான அலைகளை வெளிக்கொண்டு வருகிறது. அந்த அலைகள் பிறர் மனதை சாந்தப்படுத்துகிறது.

"ஒரு வார்த்தை இவன் பேசமாட்டானா?" என்று அடுத்தவர் ஏங்கும் வண்ணம், வார்த்தைகளை குறைத்தே, பயன்படுத்த வேண்டும். ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாததை, ஒரு ஓவியம் சொல்லும் என்பார்கள். வார்த்தைகள், ரத்தின சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள்." - அகத்தியப் பெருமான் அருள்வாக்கு!

No comments:

Post a Comment