​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 11 June 2016

சித்தன் அருள் - 348 - அகத்திய பெருமான் அருள் வாக்கு!

"இந்த உலகம் நமக்கு மட்டுமல்ல, இது இறைவன் படைத்தது. இங்குள்ள நீர் காற்று, ஆகாயம், பூமி, விருட்சங்கள் பொதுவானது. நாம் எப்படி இந்த உலகத்தில் வாழ்வதற்கு வந்திருக்கிறோமோ, அதைப் போலத்தான் பிற உயிர்களும் வந்திருக்கிறது என்கிற எண்ணம் வந்துவிட்டாலே, யார் மீதும் சினம், ஆத்திரம், பொறாமை எழாது. அனைவரும் நம்மை போன்ற உணர்வுள்ள மனிதர்கள் என்று எண்ணிவிட்டாலே, அங்கே நன்மைகள் நடந்துகொண்டே இருக்கும். எனவே, இந்த உண்மையை புரிந்துகொண்டால், மனித நேயம் வளரும், அங்கே நற்செயல்கள் அதிகமாகும். நற்செயல்கள் அதிகமாக அதிகமாக அங்கே நல்லதொரு மனித பிணைப்பும், சமூக பிணைப்பும் உருவாகும். அப்படிப்பட்ட உயர்ந்த உச்சகட்ட சமூக நலத்திலே பிறக்கின்ற குழந்தைகளும், உயர்வாகவே இருக்கும். ஆனால் சதா சர்வகாலமும் கோபமும், எரிச்சலும், மன உளைச்சலும், பிறர் மீது பொறாமையும், குற்றச்சாட்டுகளும் கொண்டு யார் வாழ்ந்தாலும், இந்த எண்ணப்பதிவு, வாரிசுக்காக, வாரிசுதோறும், வாரிசு வழியாக, வம்சாவளியாகக் கடத்தப்பட்டு, கடத்தப்பட்டு, தீய பதிவுகள் எங்கும் ஆட்க்கொண்டு, அந்த தீய பதிவுகள் எல்லார் மனதிலும் நுழைந்து, தவறான செய்கைகளை ஊக்குவித்துக் கொண்டே இருக்கும். எனவே தான் நல்லதை எண்ணி, நல்லதை உரைத்து, நல்லதை செய்யவேண்டும், என்று யாம் எம்மை நாடுகின்ற மாந்தர்களுக்கு என்றென்றும் கூறிக் கொண்டிருக்கிறோம்." - அகத்தியப் பெருமான் அருள்வாக்கு!

No comments:

Post a Comment