"சேர்த்த பாபத்தை குறைப்பதற்கும், இனி பாபம் செய்யாமல் வாழ்வதற்கு மட்டும்தான் மனித தேகம், மனிதப் பிறவி. சிந்திக்கும் ஆற்றலை, இறை மனிதனுக்கு தந்ததின் காரணம், பிறர் துன்பங்களைக் கண்டு வருந்த, இரங்கவேண்டும் என்பதற்காகத்தான். அப்படிப்பட்ட இந்த எண்ணம் யாருக்கு இருந்தாலும், அவர்கள் உயர்ந்த ஆத்மாக்களே! இதில், விலங்கு, விருஷம், மனிதன் என்ற பேதமில்லை." - அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு!
அகத்தியர் அறிவுரை!
அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்கப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment