அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு
விழிப்புணர்வோடு வாழப் பழகிக்கொண்டால். ஒரு மனிதன் பாவம் செய்ய வேண்டியிருக்காது. ஒரு மனிதனை பாவம் செய்யத் தூண்டுவது எது? ஆசை, பேராசை, அறியாமை, இது போன்ற குணங்கள்தான். ஒரு மனிதன், தெரியாமல் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு உண்டு. ஆனால் ஒரு மனிதன் தெரிந்தே செய்யும் பாவங்களே அதிகம். எதையாவது ஒரு சமாதானத்தை தனக்குத்தானே கூறிக் கொள்கிறான். இந்த காரியத்தை இதற்காக செய்தேன், அதற்காக செய்தேன், என்றெல்லாம் கூறிக்கொண்டு அவன் செய்யும் தவறுகள்தான், பாவங்களாக மாறுகின்றன. எனவே, பலகீனமான மனிதர்களே பாவங்களை செய்கிறார்கள். மனதை உறுதியாக வைத்து, எந்த நிலையிலும் பாவம் செய்யமாட்டேன், தவறு செய்யமாட்டேன் என்ற உறுதியோடு இருந்தால், ஒரு மனிதனுக்கு பாவம் செய்யக்கூடிய எண்ணமும், சூழலும் அமையாது. எனவே, அப்படி ஒரு சூழலை ஏற்படுத்திக் கொண்டால், அவனுக்கு தோஷமும் வராது.
