​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 21 July 2020

சித்தன் அருள் - 882 - அகத்தியர் அறிவுரை!


மோட்சமது பெறுவதற்கு சூட்சஞ் சொன்னேன்
மோகமுடன், பொய் களவு கொலை செய்யாதே
காய்ச்சலுடன் கோபத்தை தள்ளிப்போடு; காசினியிற்
புண்ணியத்தைக் கருத்திக் கொள்ளு;
பாய்ச்சலது பாயாதே; பாழ்போகாதே - பலவேத சாஸ்திரமும் பாருபாரு
ஏச்சலில்லாதவர் பிழைக்கச் செய்த மார்க்கம் 
என் மக்கா ளெண்ணி யெண்ணிப்பாரீர் நீரே!
பொருள்:-
 
மோட்சம் என்கிற விடுதலை பெறக்கூடிய வழியை சொல்கிறேன். ஆசை, களவு, கொலை செய்யாதீர்கள். கோபத்தை தள்ளி விடுங்கள். உலகத்தில் புண்ணியத்தை, நல்வினையை எண்ணி செயல்படுங்கள். பாபங்கள் - தீய செயல்களை செய்யாதே, என்று பல சாஸ்திரங்கள் கூறுவதைப் பாருங்கள். பழிச்சொல் இல்லாதவர்கள் வழியை எண்ணிப்பாருங்கள். நல்லோர் வழியில் செல்லுங்கள்.

அகத்தியரின் அருள் வாக்கு:-

மனிதனாக பிறந்தவன், இறைவனே இறங்கி வந்து தவறு செய்யச் சொல்லினும், திடமான மனதுடன் மறுத்து, அதர்ம வழியில் நான் செல்ல மாட்டேன் என்ற எண்ணத்தில், அவ்விடத்தை விட்டு விலகி விடவேண்டும், அதர்மத்துக்கு துணை போகக்கூடாது, செய்யக்கூடாது. குறிப்பாக எம் சேய்களுக்கு ஆன அறிவுரை இது என்று உரைத்துள்ளார், முன்னரே.
  
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

ஏன் குருநாதரின் இந்த பாடலும், விளக்கமும், அருள் வாக்கும் இப்போது இங்கு தொகுக்கப்படுகிறது என பலரும் நினைக்கலாம். கூர்ந்து கவனியுங்கள்.

நடக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு காரணம் உண்டு, காரியமும் உண்டு. இது முன் செய்த வினை. யாரோ ஒருவர் இறையை பழிப்பதால், இறைக்கு அவதூறு சேர்வதில்லை. அந்த பழிப்பை மனதுள் இருத்தி, இறையை குருநாதரை வணங்க வேண்டிய நல்லநேரத்தை, நாம் அவர்களுக்காக விரயம் செய்யக்கூடாது/செலவிடக்கூடாது. இதை விட்டு விலகி மனதளவில் விருப்பு வெறுப்பு இன்றி, வெகு தூரம் சென்று விடவேண்டும். அதுவே நம் உயர்விற்கு, வழிவகுக்கும்.

இன்று இருக்கும் நிலை ஏன் என்று நந்தீசர் நாடியில் உரைத்தார். இறை சுத்தம் செய்ய இறங்கி வரும் பொழுது, அவருக்கு வேலை மிகவே எளிதாகும். சரியான காரணமும் அமைந்துவிடும்.

நாம் காரணமாகவோ, எதிர்காரணமாகவோ இருக்க வேண்டாம் என்பதே, சித்தன் வாக்கு!

சித்த மார்கத்தின் எளிய அறிவுரை:-

இறைவனே தமிழ் உருக்கொண்டிருக்கும் இந்த நாட்டில்தான், அந்த தமிழை வைத்தே, இறை நிந்தனை நிறையவே நடக்கிறது. இறை நிந்தனை செய்பவனை விட்டு விலகி விடவேண்டும். நம் கண்கள் அதை பார்க்கும்படியோ, நம் செவிகள் அதை கேட்க்கும்படியோ வைத்திருக்கக்கூடாது. கொடுத்தால், வாங்கும் கரங்கள் இருந்தால்தான் கொடுத்தது போய் சேரும். அதுபோல், இறை நிந்தனையை கேட்டு உள்வாங்க ஒருவரும் அங்கிருக்க கூடாது. உன்னை நீயே விலக்கிவிடு, அந்த சூழ்நிலையை, மனதை விட்டு அகற்றிவிடு. நீ ஏன் ஒரு சாட்சியாய் இருக்க வேண்டும்?

வாழ்க்கை நன்றாய் அமைய, வாக்கில் தெய்வம் குடியிருக்க வேண்டும். தமிழை, முருகோனை தயையுடன் உபயோகியுங்கள். உங்கள் நாவில், வாக்கில் சுப்ரமண்யன் உறைவான். உங்களை எப்பொழுதும் சித்தர்கள் சுற்றி நின்று காப்பார்கள்.

சித்தன் அருள்................... தொடரும்!

4 comments:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
    அய்யன் அருள் வழி ஐயா
    நன்றி ஐயா

    ReplyDelete
  2. Sri lopamudra samata agastiyar thiruvadi saranam.ivv valiyae nadakiroam.Ayya.

    ReplyDelete
  3. லோப முத்ர சமேத அகத்தீசாய நமக

    ReplyDelete