​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 13 July 2020

சித்தன் அருள் - 878 - அனந்தபத்மநாபர், இனி அமைதியாய் பள்ளி கொள்வார்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!! 

பத்மநாபஸ்வாமி கோவில் பிரச்சினை தொடங்கி போன வாரம் வரை என்னிடம் அறிமுகமுள்ளவர். நண்பர்கள், அடியவர்கள் எல்லோரும் கேட்ட கேள்வி ஒன்று தான்.

"என்ன! இப்படியாகிவிட்டது! இனிமேல் நிம்மதியே போய்விடுமே!" என்றனர்.

உண்மைதான், தொடக்கூடாததை தொட்டால் நிம்மதி போய்விடும் என்பது உண்மை. இதை, பலரின் வாழ்க்கையில் இந்த காலங்களில் அவர் நிரூபித்து காட்டினார். 

இதன் தொடர்பாக, அடியேன் அனைவருக்கும் தெரிவித்த ஏக பதில் இது ஒன்றுதான்.

"வைத்தவனுக்கு தெரியும், அதை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று. நம் மனம் ஒரு பொழுதும் நிதியில் செல்ல வேண்டாம்!"

இன்று, தீர்ப்பு வந்த பொழுது, அதைத்தான் அடியேன் உணர்ந்தேன். வைத்தவன் அதை காப்பாற்றிக் கொண்டான்.

இனி. சித்தனருளில் விளக்கப்பட்ட "அகத்தியரும், அனந்தசயனமும் என்கிற தொகுப்பை ஒரு முறை படித்தால், நிறைய விஷயங்கள் புரியும்.

அனந்தபத்மநாபருக்கு, அடியவர்கள், தெற்கு வாசலில், இன்று மாலை விளக்கு போட்டு நன்றி தெரிவித்தனர்.





கிழக்கு வாசலில் போடப்பட்ட தீபம்!

அனந்த பத்மநாபர்!

அகத்தியப்பெருமானுக்கு நன்றி தெரிவித்து அடியேன் வீட்டில் போட்ட விளக்கு!

இதைவிட சிறப்பாக பத்மநாபாருக்கு யார் நன்றி தெரிவிக்க முடியும்?


ஓம் பத்மனாபோ, அமரப்பிரபோ!

ஓம் ஸ்ரீ லோபாசமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

சித்தன் அருள்...................தொடரும்!

5 comments:

  1. ஸ்ரீ பத்மநாப சுவாமிக்கு நன்றி

    ReplyDelete
  2. Sree Anantha Padma Nabha Swamigaley Namaha . Ulagil ella athmakkalayum cornavilirunthu Kappattaname enru thazmayudan vendi kolkiren

    ReplyDelete
  3. Plz pray Tamil nadu Hindu temple sir

    ReplyDelete
  4. Ayya plz send agathiyar kalyana photo

    ReplyDelete
  5. அகத்தீசாய நம நன்றி அய்யா

    ReplyDelete