​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 3 July 2020

சித்தன் அருள் - 875 - அகத்தியப்பெருமானின் உத்தரவு!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்று நம் குருநாதர் ஒரு உத்தரவை தன் சேய்களுக்காக அளித்ததாக கூறி, அடியேனின் நண்பர் ஒருவர், அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்" வாசகர்கள், அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும் தெரிவிக்கும்படி செய்தி கொடுத்தார். நாம் அனைவரும் இதில் பங்கு பெறுவோம்.

நாளை குருபூர்ணிமா தினம். வந்த பாதையை, சற்று பின்நோக்கினால், போன வருட குருபூர்ணிமாவிலிருந்து (அன்று சந்திர கிரஹணம் இருந்தது) அனைத்து கிரகங்களும் ராகு, கேதுவின் பிடிக்குள் மாட்டிக்கொண்டு, இன்று உலகெங்கும் அனைத்து ஜீவன்களும் தவிக்கும் இன்றைய நிலைக்கு கொண்டு வந்து விட்டது. அப்படி தவித்த காலத்தில், தன் சேய்களை, எத்தனை தூரம் சென்று காப்பாற்ற வேண்டுமோ, அத்தனையும், நம் குருநாதர் அரணாக நின்று செய்துள்ளார். நாம் உணராத நிறைய தடைகளை உருவாக்கி வைத்திருந்தார்.

இனி அந்த தடைகளை விலக்கி, நம்மை, கூட இருந்து வழி நடத்த, அகத்தியப் பெருமான் தீர்மானித்திருப்பதாக செய்தி வந்துள்ளது.

நாளைய தினம் குருபூர்ணிமா பூசையை செய்து, முடிவில், அகத்தியர் அருளுடன், 16 முக தீபமேற்றி, மாலை நேரத்தில், சந்திரனுக்குகாக வெளியிடத்தில் வைத்திட வேண்டும். பூஜையில், மதுரை மீனாக்ஷியிடம், குருவிடம் வேண்டிக்கொள்ளச் சொன்னார். நம் பிரச்சினைகள் விலக கோரிக்கை (பொதுநல, தனிப்பட்ட) வைத்து, அவர் அருள் பெற்று நலமாக வாழ, அனைத்து அகத்தியர் அடியவர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில், சமர்ப்பணம்!


சித்தன் அருள்.................... தொடரும்!

5 comments:

  1. அகத்தீசாய நம நன்றி அய்யா

    ReplyDelete
  2. Sir today gurunadhar photo very reality

    ReplyDelete
  3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    சரிங்க ஐயா செய்கிறோம்

    ReplyDelete
  4. வேண்டுதல்

    அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!
    தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!.

    ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா தேவி சமேத சத்குரு ஸ்ரீ அகத்தீசாய நமக !

    அப்பனே!எங்கள் குருமார்களே,முனிவர் பெருமக்களே,ரிஷிமார்களே,முனிபுங்கவர்களே,சித்த புருஷர்களே மற்றும் ஆச்சாரிய பெருமக்களே இது காலும் தங்களை மறந்து நாங்கள் இறை நினைப்பு சற்றும் இன்றி கலியின் ஆட்டத்திற்கு உட்பட்டு கிடக்கின்றோம்.இறையும் குருவும் ஒன்றென உணர்ந்தோம்.ஆகையால் எங்களை எல்லோரும் உங்கள் சேய்களாக ஏற்று

    மானிட ரூபமுள்ள ருத்ர பசுபதியும்

    சிவ தத்துவம்,ஆத்ம தத்துவம்,வித்யா தத்துவம் மற்றும் சர்வ தத்துவங்களுக்கு மத்தியில் பிந்துவில் மும் மூர்த்திக்களையும்,பஞ்ச பூதங்களை ஆசனமாக கொண்ட அன்னை லலிதாம்பிகையும்


    இந்த தொற்று நோயின் பிடியில் இருந்து அனைத்து உலக மக்களையும் காப்பாற்றி உய்வித்து அருள தங்களின் பொற்கமல பாதார விந்தங்களை பணிகின்றோம்.

    ஓம் அனைத்து சித்தர்கள்,ரிஷிகள்,முனிவர்கள்,ஆச்சாரியர்கள் திருவடிகள் போற்றி ! போற்றி !

    ஓம் அனைத்து சித்தர்கள்,ரிஷிகள்,முனிவர்கள்,ஆச்சாரியர்கள் திருவடிகள் போற்றி ! போற்றி !

    ஓம் அனைத்து சித்தர்கள்,ரிஷிகள்,முனிவர்கள்,ஆச்சாரியர்கள் திருவடிகள் போற்றி ! போற்றி !

    ReplyDelete
  5. How to do guru poornima pooja sir?
    Any specific procedure?

    ReplyDelete