​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 16 June 2017

சித்தன் அருள் - 698 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு 

இஃதொப்ப எத்தனை நல்ல ஆத்மாவாக இருந்தாலும் எமை நாடுகின்ற தருணம் அவனின் கிரக நிலையும், இறைவனின் அனுமதியும் இருக்கும் பட்சத்தில் யாம் இறைவன் அருளைக்கொண்டு வாக்குகளைக் கூறுகிறோம். ஒரு வேளை நாங்கள் வாக்கே கூறவில்லை என்பதாகக் கொண்டாலும், அதனால் அந்த ஆத்மா அல்லது அந்த மனிதன் முழுக்க, முழுக்க தகுதியற்றவன் என்றோ அல்லது தீயவன் என்றோ பொருளல்ல. அல்லது நாங்கள் தொடர்ந்து நாழிகை, நாழிகையாக வாக்கைக் கூறுகிறோம் என்பதற்காக அவன் ஆன்மீகத்தில் உயர்ந்தவன் என்றோ, குணத்தில் உயர்ந்தவன் என்றோ பொருள் அல்ல. எனவே இவையெல்லாம் அந்தந்த நாழிகையின் கிரக நிலையைப் பொருத்தும், அந்தந்த மனிதனின் வினைப்பயனைப் பொருத்தும் அமைவதாகும். இஃதொப்ப தொடர்ந்து ஒரு மாணாக்கனை வைத்துக்கொண்டு ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டேயிருந்தால், இதை சிறப்பு என்பதா ? தனி கவனம் செலுத்துகிறார் என்பதா ? அல்லது ஒரு முறை உரைத்தாலே புரிந்து கொள்ளும் மாணவனை அந்த ஆசிரியர் சரியாக கவனிக்கவில்லை என்று கூறுவதா ?. பலமுறை திரும்ப திரும்ப போதிக்க வேண்டிய நிலையில் இருந்தால் கேட்கின்ற மாணாக்கனின் கிரகிக்கும் திறன் குறைவு என்பது பொருள். ஒரு முறை குறிப்பாக கூறினாலே ஒரு மாணாக்கன் புரிந்து கொண்டு விட்டால் கிரகிக்கும் திறன் அஃதொப்ப சிந்தனையாற்றல் சரியாக இருக்கிறது என்பது பொருள்.

4 comments:

  1. ஓம் லோபமுத்ரா சமேத அருள்மிகு அகத்தியர் அய்யா துணை

    ReplyDelete

  2. ஓம் அகத்தில் ஈசனை வைத்தவா போற்றி.

    ஓம் ! லோபாமுத்ரா சமேத அகத்தீஸ்வராய நம

    ReplyDelete
  3. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete