​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 30 June 2017

சித்தன் அருள் - 709 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

மாயை, மாயை, மாயை, மாயை என்று பொதுவாகக் கூறினால் எங்ஙனம் புரியும்? என்று மனிதர்கள் வினா எழுப்பலாம். உண்மைதான். வெறும் உலகியல் பற்று கொண்டு, உலகியல் ஆசை கொண்டு, உறவுகளில் சிக்கிக் கொண்டு, உடல் இச்சைக்குள் மாட்டிக்கொண்டு உடல் சேவையே உண்மையான சேவை. அதை நோக்கி செல்வதே வாழ்க்கையின் இலட்சியம் என்று வாழ்கின்ற மனிதர்களுக்கு அதனைத் தாண்டிய நிலை புரிவது கடினம் என்றாலும் உயர்ந்த விஷயங்களை, நல்ல விஷயங்களை, மீண்டும், மீண்டும், மீண்டும், மீண்டும், மீண்டும் எடுத்துக் கூற, கூற, கூற, கூற இறைவன் தந்திட்ட அந்த சிறிய அறிவிலே ஒரு சிறிய சிந்தனை வெளிச்சம் புதிதாகத் தோன்றட்டுமே! என்றுதான் நாங்கள் கூறிக்கொண்டே இருக்கிறோம்.

No comments:

Post a Comment