​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 12 April 2015

ஓதியப்பருடன் ஒரு வித்யாசமான அனுபவம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

ஒதிமலையில் ஓதியப்பர் அடியேனை ஆட்கொண்டபின் (அதற்கு முன்னரே அவர் அருளை உணர்ந்து ஒதிமலைக்கு சென்றேன்), வாழ்க்கையின் அத்தனை தேடல்களையும் சுருட்டி கூட்டி, வேண்டாம் என்று வைத்துவிட்டு, அவருடனான அருகாமையை எப்பொழுதும் வளர்த்துக் கொள்வதிலேயே கவனம் செலுத்தினேன். எத்தனை விதமான ச்ரமங்கள் வந்தாலும், "ஓதியப்பா! நீ என்ன பதில் சொல்கிறாய்" என்று கேட்டு, அவர் பதில்படி நடக்கத் தொடங்கினேன். ஒவ்வொரு வினாடியும் "ஓதியப்பா" என்று தான் மனது கூறும், ஜெபிக்கும். எங்கேனும் செல்ல வேண்டி வந்தால் "ஓதியப்பா! நீ கூடவா!" என்று அன்புடன் வேண்டிக் கொள்கிற உரிமையை கூட அவர் எனக்குத் தந்துள்ளார் என்பது ஒரு நிதர்சனமான உண்மை.

"நீ யாரை வேண்டுமானாலும் வழிபடு! ஆனால் முருகனை வழிபட்டால் உன்னால் தாங்க முடியாது! அவ்வளவு விளையாடுவான் உன் வாழ்க்கையில்" என்று என் குருநாதர் அடிக்கடி கூறும் பொழுது,

"என்ன முருகா! இப்படி சொல்கிறீர்கள்? நீங்களே அவரைத்தான் நொடிக்குநொடி கூப்பிட்டு, வழிபட்டும் வருகிறீர்கள். இப்படி இருக்க, உங்கள் இந்த தீர்ப்பை நான் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்" என்று திருப்பி கேட்டிருக்கிறேன். எந்த கேள்வியையும் கேட்கிற உரிமையை என் குருநாதர் எனக்கு தந்திருந்ததே, அத்தனை தைரியமாக கேட்கத் தோன்றியது.

"அது தான் உண்மை! உன்னிடம் சொல்லவேண்டும் என்பதற்காக சொல்லிவிட்டேன். பின்னர் அவனிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் பொழுது "குருநாதா" என்று என்னை அழைக்காதே! நீ அவனிடம் மாட்டிக் கொண்டுவிட்டால், பின்னர் நான் பொறுப்பல்ல" என்று அன்புடன் ஆசிர்வதித்தார்.

குருநாதர் சொன்னதால், நான் முருகப்பெருமானிடம் சற்று தள்ளியேதான் இருந்தேன். அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ அதை செய்துவிட்டு "இதை ஏற்றுக் கொள்" என்று கூறி விட்டு விலகிவிடுவேன்.

ஆனால், விதி என்று ஒன்று இருக்கிறதே! அதை மாற்ற யாரால் முடியும்? ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டபின், அகத்தியப் பெருமான், முருகரை கைகாட்டி, "அங்கு செல், அவனிடம் சரணடை, அவன் காப்பாற்றுவான்" என்று கூறியதால், வேறு வழி இன்றி, ஓதியப்பரிடம் சென்று அமர வேண்டி வந்தது. அகத்தியப் பெருமான் கூறியதை அப்படியே ஓதியப்பரிடம் சொல்லி, செய்த பின், பிரச்சினையிலிருந்து விடுபட முடிந்தது. அன்று முதல், அவர் என்னை ஆட்கொண்டதாகத்தான் நான் உணர்கிறேன்.

நான் வசிப்பதோ ஒதிமலையிலிருந்து ஒன்றரை நாள் பயண தூரத்தில். உள்ளுக்குள் "பார்க்க வேண்டும் அவரை" என்று எண்ணம் எழும் பொழுது சென்று தரிசனம் செய்து வருவேன்.

எங்கேனும் செல்லவேண்டும் என்றால் "ஓதியப்பா! நீ என்ன சொல்கிறாய்! போகலாமா? வேண்டாமா? நீ கூட வர வேண்டும். அப்படி என்றால், சென்று என்ன சொல்கிறாயோ அதை செய்து வருகிறேன்" என்று வேண்டிக் கொண்டால், பதில் கொடுப்பார்.

சிலவேளை "சரி", சிலவேளை "வேண்டாம்", சிலவேளை "சற்று பொறு", சிலவேளை வழி மாற்றி வேறு இடத்திற்கு விடுதல் என எதிர் பார்க்காமல் பல விஷயங்கள் நடக்கும். ஆனால் எல்லா நிலைகளிலும் ஆச்சரியமாக விஷயங்கள நடக்கும் என்பதே உண்மை.

அம்பாள், அருணாசலம், ஓதியப்பர், அகத்தியர் என அந்த பாதையில் நடந்து சென்ற நான், பெருமாள் பக்கம் போனது மிக குறைவு. "வேண்டாம்" என்கிற எண்ணம் எதுவும் கிடையாது. நேரம் இல்லாமல் போனது என்பதே என் தாழ்மையான எண்ணம். உண்மை தானே, ஒருத்தர கவனிப்பதே பெரும் பாடு. இதுல நாலு பேரிடம் வேலைபார்ப்பது என்றால் அவ்வளவு எளிதா?

சிறுவயதிலிருந்தே பெருமாள் கோவில் என்றாலே, பெருமாளை விட அங்கு கொடுக்கப்படும் பிரசாதம் தான் (சர்க்கரை பொங்கல், புளியோதரை, வெண்பொங்கல் போன்றவை) என்னை பெரும்பாலும் கவர்ந்தது. கோவிலுக்கு போய் "என்ன பெருமாளே! சௌக்கியமா!" என்று கேட்டுவிட்டு ப்ரசாதம் வாங்கி சாப்பிட்டு வருவது ஒரு பழக்கம். 

கடந்த இரு வருடங்களாக சித்தன அருள், திரு.கார்த்திகேயன் கேட்டுக் கொண்ட படி, கோடகநல்லூரில் "அந்த நாளில்" பெருமாளுக்கு ஏதோ ஒருவிதத்தில் சேவை செய்கிற ஒரு பாக்கியம் கிடைத்தது. 2014ம் ஆண்டின் "அந்தநாளில்" என்னுள் மிக மிக திருப்தி உண்டாயிற்று. அதற்குப் பிறகு பலமுறை கோடகநல்லூர் சென்று அவரை தரிசிக்கிற பாக்கியம் கிடைத்தது. நிறைய அருளும் கூடவே, வாரி வாரி வழங்கினார். மிக அக மகிழ்ந்து போன நான், ஓதியப்பரிடம் ஒரு கேள்வியை கேட்டுவிட்டேன்.

"ஓதியப்பா! பெருமாள் அடியேனை கூப்பிடுகிறார்! நிறைய சேவை செய்கிற பாக்கியத்தை தருகிறார். நான் உன்னை விட்டு அவரிடம் போய் வேலை பார்க்கட்டுமா?" என்று கேட்டுவிட்டேன்.

அப்படி ஒரு கேள்வியை கேட்டிருக்க கூடாது என்று பிறகுதான் புரிந்தது.

கேட்டதெல்லாம் அருள்கிறார் என்பதற்காக கேள்வி கேட்பதிலும் ஒரு தன்மை இருக்க வேண்டாமா? அது இல்லாமல் போனது எனக்கு.

த்யானத்தில் அமர்ந்து கேள்வியை கேட்ட பொழுது "நாளை உனக்கான விரிவான பதில் வரும். தெளிவாக இரு!" என்று பதில் வந்தது.

கேள்வி கேட்டவுடன் பதில் வராமல், காலம் தாழ்த்திய பதில் வரும் என்ற பொழுது "போச்சுடா! நாம தேவை இல்லாம கேள்வியை கேட்டு மாட்டிண்டுட்டோம். இது தேவையா?" என்று உணர்ந்தேன். கையிலிருக்கும் வெண்ணையை வைத்து திருப்தி படாமல், இப்படி அலைவதே தவறு என்று மனம் உணர்ந்தது. இருந்தாலும், சரி! நாளை என்ன பதில் வருகிறது என்று பொறுத்துப் பார்ப்போம், என்று அமைதியானேன்.

என்ன இருந்தாலும், மனிதன் தானே! இரவெல்லாம் தூக்கம் இல்லை. மறுநாள் செவ்வாய்க்கிழமை. நான் முருகரை நினைத்து விரதம் இருக்கும் நாள். விரதம் தொடங்கினேன். நிற்க!

இசை இறைவனின் மறுஉருவம் என்று எண்ணுபவன் நான். எல்லாவிதமான இசையையும் கேட்பேன். அதில் மேலை நாட்டு சங்கீதமும் அடங்கும். அதில் "Trance" என்கிற இசை என்னை மிகவும் கவர்ந்தது. ஏன் என்றால், ஒரு ஆராய்ச்சியில், "Trance" இசை வலியின் உச்சத்தை உடலுக்கு கொடுக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வலியின் உச்சத்தை "Trance" இசை வடிவம் வழி உணர்வதும், வலி அற்ற தன்மையை "ரெய்கி" இசை வடிவம் வழி உணர்வதும், இரு நிலைகளிலும் நம் உடல், மனம், எண்ணம் எப்படி இருக்கிறது என்று சுய பரிசோதனை செய்து கொள்ள ஒரு வழி.

இன்டர்நெட்டில் "Trance" இசை வடிவம் இலவசமாக கொடுக்கிறார்கள். அதில் பாடல் என்று சொல்லப்போனால் மிக குறைவாகவே இருக்கும். இசை தான் கூடுதல்.

எனக்கு பிடித்தமான பாடல்களை கேட்டுப் பார்த்துவிட்டு, தேவையானதை டவுன்லோட் செய்து கொள்கிற பழக்கம் உண்டு. அப்படி ஒரு பாடலை அன்று கேட்டு பிடித்துப் போகவே, அதை தரவிறக்கினேன்.

சற்று கூர்ந்து கவனித்த பொழுது, "இதை நன்றாக கவனி" என்று மனம் கூறியது.

பாடலையும் தரவிறக்கி அதன் உச்சரிப்பை கவனித்த பொழுது, அதன் லிரிக்ஸ் (எழுத்து வடிவம்) தேடி பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

அதையும் கண்டுபிடித்து வாசித்த பொழுது, ஓதியப்பரிடம் என் கேள்வி மிக சிறிதாக இருந்தாலும், அதற்கான பதில், அதில் விரிவாக இருப்பதை உணர முடிந்தது. சும்மா சொல்லக்கூடாது! நமக்கு புரியும் விதத்தில் மிகத்தெளிவாக பதில் கிடைப்பது என்பது, மிக அரிது.

"எங்கு வேண்டுமானாலும் செல்! என்ன நல்ல விஷயமும் செய்! ஆனால் என்னை விட்டு விட்டுப் போவது என்பது முடியாது!"  என்று தெளிவாக ஓதியப்பர் சொல்வதை அன்று புரிந்து கொண்டேன்.

ஹ்ம்ம்! ஓதியப்பரே நெனச்சிருப்பார்! "இந்த மாதிரி முட்டாள்களை எல்லாம் வெச்சுண்டு நான் காலம் தள்ளவேண்டி இருக்கிறதே" என்று.

அந்த பாடலை கீழே தருகிறேன். படித்துப் பாருங்கள்.

It’s raining, it’s pouring
A black sky is falling
It’s cold tonight
You gave me your answer
"Goodbye"
Now I’m all on my own tonight
And when the "big wheel" starts to spin
You can never know the odds
If you don’t play you’ll never win
We were in heaven you and I
When I stay with you and close my eyes
Our fingers touch the sky
I’m sorry baby
You were the sun and moon to me
I’ll never get over you, you’ll never get over me

அனுபவம் எப்படி வேண்டுமானாலும் வரலாம். ஆனால், அது வரும் பொழுது தெளிவாக  உள்வாங்குகிறோமா என்பதில் தான் நம் ஆசி உள்ளது. விதி என்ன என்பதும் அப்பொழுது புரியும்.

இந்த அனுபவம், இத்துடன் நிறைவு பெற்றது.

6 comments:

  1. Brother Sairam,

    What a heart touching experience, Yes last night we had discussed the same thing, that having shouldered our responsibilities he does guide or give us a path to tread, but sometimes due to illusion we either don't realize Guru's guidance or sometimes feel cannot afford to wait,

    Excellent, thanks for making it clear, it came as an eye opener at the right moment, May Guru Sayee and Mahamuni Ayya guide and bless us ever,

    Om Agatheesaya Namaha: Aum Sairam

    ReplyDelete
  2. Brother Sairam,

    Please share the link for us to enjoy the music too, Thanks, Aum Sairam

    ReplyDelete
    Replies
    1. enjoy the acoustic version of the song

      https://www.youtube.com/watch?v=sAouQH-34hs

      agnilingam

      Delete
  3. sir, my name is surendran, may i know ur address or phone no.wil you please tell us.

    ReplyDelete
  4. Sir please tell your address and phone number

    ReplyDelete
  5. Om Agastheesaya Namaha !!!
    Om Agastheesaya Namaha !!!
    Om Agastheesaya Namaha !!!

    ReplyDelete