​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 1 April 2015

ஒதிமலை ஓதியப்பர் கோவில் கும்பாபிஷேகம் - 01/05/2015 - ஒரு தகவல்!


ஓம் லோபாமுத்திரா சமேத அகத்தியப் பெருமானுக்கு நமஸ்காரம்!

அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!

அடியேனுக்கு கிடைத்த ஒரு தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில், கீழே தருகிறேன்.

ஒதிமலையை உங்களுக்கெல்லாம் "சித்தன் அருள்" வலைப்பூ வழி திரு.கார்த்திகேயன் அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளார். போகர் சித்தருக்கு சொந்தமான, அவர் பூசித்த ஓதியப்பர் கோவிலில் மே மாதம் ஒன்றாம் தியதி (01/05/2015) (சித்திரை மாதம் 18வது நாள்), வெள்ளிக்கிழமை அன்று கும்பாபிஷேகம் நடத்திட, ஓதியப்பர் அனுமதி கொடுத்துள்ளார்.  நாவாக்னி ஹோமம் நடத்தி கும்பாபிஷேகம் செய்வதாக தகவல்.

இந்த அரிய வாய்ப்பில் நீங்கள் அனைவரும் பங்கு பெற்று ஓதியப்பரின் அருளை பெற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

இப்படி ஒரு வாய்ப்பு இனி எப்பொழுது கிடைக்கும் என்று தெளிவாக கூறுவது கடினம்தான்.

ஓம் சரவணபவாய நமஹ!

1 comment:

  1. Om Saravana Bhava !!!
    Om Saravana Bhava !!!
    Om Saravana Bhava !!!

    ReplyDelete