​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 7 August 2014

சித்தன் அருள் - 188 - அகத்தியர் அருள்வாக்கு - 2


முதற்கேள்வி: அகத்தீஸ்வராய நமஹ! இந்த அருட் குடிலை, நாங்கள் தஞ்சாவூரிலே நீண்டகாலமாக நாடி வருகிறோம். இந்த நாடி வருவதினுடைய நோக்கம் என்ன? ஒன்று ஞான வழி அடையவேண்டும். இரண்டாவது குடும்பத்திலே உள்ள சில சச்சரவுகள், துயரங்கள் நீங்க வேண்டும். நோய்கள் நீங்கவேண்டும். இவ்வாறான கார்யங்களுக்காக இந்த ஜீவநாடியை நோக்கி நாடி வருகிறோம், மற்ற இடங்களிலே ஓடி ஓடி களைத்து, உண்மை இல்லை, பொய்யை கண்டோம், துயரம் கண்டோம், துயரம் நீங்கவில்லை என்று, இந்த ஜீவநாடியை நோக்கி வருகின்றோம். இந்த வருகின்ற வேளையிலேயே, அய்யா அநேக வகையான நன்மைகளை, எனக்கும் மற்றவர்களுக்கும் செய்து வந்தாலும், இன்னும் சில சூட்சுமமான விஷயங்களை கற்றுக்கொள்ள, அதை நானும் முயற்சி செய்யவில்லை, அய்யாவும் கொடுத்தபாடில்லை. சில யோகா, வாசி, மூச்சை அடக்கினால், வாசி யோகங்களை, ப்ராணா யோகத்தையோ, அல்லது வாசி யோகத்தையோ, அல்லது லய யோகத்தையோ, ஒரு மனிதன் கற்றுக் கொண்டால், பயிற்சியின் பிரகாரம் எடுத்துக் கொண்டால், நோய்கள் எவ்வளவோ குறைந்து வருகின்றன. இதை சித்தர்களே ஏற்கனவே, பல ஏடுகளில் சொல்லியிருக்கின்றார்கள். "நீ காசிக்கெல்லாம் கால் வலிக்க நடந்து சென்றாலும், வாசிதனை மறந்துவிட்டால் என்ன பயன்" என்று சூட்ச்சுமமாக சொல்லி, இந்த வாசியை கற்றுக்கொள், வாசியை கற்றுக்கொள் என்று சொல்லி, அதற்குரிய ஆசானும் எங்களுக்கு கிடைத்த பாடில்லை, ஏதோ கிடைப்பதை கொண்டு, ஒரு பாதியான முறையிலே செய்யும் பொழுது, ஓரளவுக்கு நோய்கள் கட்டுப்படுகின்றன, சில நன்மையான விஷயங்கள் தெரிகின்றன. ஆகவே, இந்த அருட்குடிலில், இந்த யோகநிலை கற்றவர்கள், யாராவது ஒருவரை தேர்ந்தெடுத்து, அல்லது ஒரு ஆசிரியரை தேர்ந்தெடுத்து, தஞ்சாவூரில் உள்ள அருட்குடிலிலே, யாரோ ஒருவர் பயிற்சி கொடுத்தால், நோய்கள் நீங்கும், இதற்காக ஆசுபத்திரியிலே போய் கோடிக்கணக்காக சிலவு பண்ணறாங்க, கான்சருக்கு செலவு பண்ணறாங்க, எங்களுக்கு இதை நீக்குவதற்காக, இந்த அருட்குடிலிலே எங்களுக்கு ஒரு நல்ல ஆசிரியரை தேர்ந்தெடுத்து, இந்த யோக பயிற்ச்சியை ஏற்ப்படுத்தி தர முடியுமா என்பது, ஒரு பொதுக் கேள்வி."

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புகிறோம். இஃதொப்ப இன்னவனின் வினாவிற்கு இஃதொப்ப அவன் கூறியதை, அஃதாவது வாசியை, திருப்பி வாசித்தால் அதுவே பிரணாயாமம் அப்பா. வாசியை திருப்பித் திருப்பி வாசி. அதுவே பிரணாயாமம். இன்னும் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். எமை நோக்கி வருகின்ற மனிதர்கள் பெரும்பாலும் காணபிம்பப் பேழையிலே எங்களை வைத்து கற்பனா கதையையெல்லாம் பிம்பமாக்கிக் காட்டுகிறார்களே ? அதை எண்ணியும், அஃதொப்ப இயம்புங்கால், நல்விதமாய் காதைகளை வாசித்து, வாசித்து, அந்தக் காதைகளில் உள்ளவற்றைப் போலவே தொடர்ந்து இஃதொப்ப எம் வாழ்க்கையிலும் சித்தர்கள் தலையிட்டு அனைத்தையும் தீர்த்து வைப்பார்கள் என்று நம்பிக்கையோடு வருகிறார்கள். தவறொன்றுமில்லை. இருந்தாலும் எப்படி படிப்படியான ஒரு முன்னேற்றமோ அஃதொப்ப, மழலை, தன் மழலை மாறாத நிலையிலே கல்வி கற்க முனையும்பொழுது அந்த மழலையின் மன நிலைக்கு ஏற்ப வித்தைகள் அங்கே பயிற்றுவிக்கப்படுகின்றனவோ, அதைப்போலதான் எம்மிடம் வருகின்ற மனிதர்களின் மனோநிலையை அறிந்துதான் யாங்களும் வாக்கைக் கூறுகிறோம். இஃதொப்ப நிலையிலே, இங்கு வருகின்ற மாந்தர்களின் பூர்வீக பாவங்கள் குறைந்தால் ஒழிய வாசி யோகமோ அல்லது அது தொடர்பான எந்தவொரு சாகா கலையும் சித்திப்பது என்பது மிக, மிக அரிது. இல்லையென்றால் ஆங்காங்கே மனிதர்கள் பயிற்றுவிப்பதாக கூறப்படுகிறதே, அங்கு சென்று வேண்டுமானால் கடுகளவு அறிந்து கொள்ளலாம். எனவே பாத்திரத்தை சுத்தி செய்யாமல் பாலைக் காய்ச்சினால் பால் திரிந்து விடுமப்பா. எனவேதான் எம்மைப் பொறுத்தவரை எம்மை நாடி வருகின்ற மனிதனுக்கு யாங்கள் இப்படியெல்லாம் கடுமையான யோகப் பயிற்சியையெல்லாம் கூறாமல் இஃதொப்ப மிக எளிதான பக்தி மார்க்கத்தையும் அதோடு சார்ந்த தர்மத்தையும் கூறுகிறோம். இப்பொழுதும் கூறுகிறோம், இனியும் கூறுவோம், முன்பும் கூறினோம். நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அவரவர் மனம், அவரவர் விதிப்படி செயல்பட்டு விட்டுப் போகட்டும். “ ஆனால் விதி மாற வேண்டும். எங்கள் மதியில் நிம்மதி அமர வேண்டும் “ என்று இந்த ஜீவஅருள் ஓலை முன்னே வருகின்ற மனிதன், 100 –க்கு 100 விழுக்காடு யாம் கூறுவதை உளமார ஏற்றுக் கொண்டால், கட்டாயம் படிப்படியான முன்னேற்றம் இறைவனருளால் கிட்டுமப்பா. எனவே யாமே தக்க காலமறிந்து எம்மிடம் வருகின்ற மாந்தர்களுக்கு ‘ இதுகாலம் இவன் லோக வாழ்க்கையிலே நுகர்ந்து வந்த துன்பங்கள் போதும். இனி யோக வாழ்க்கையை நோக்கி செல்லலாம், என்ற ஒரு நிலை வரும் சமயம், யாமே அது குறித்து போதிப்போம். சிலருக்கு போதித்தும் இருக்கிறோம். ஆனால் போதித்தும் பலன் ஏதுமில்லை. மீண்டும், மீண்டும் லோகாயம் நோக்கிதான் மனம் ஓடிக்கொண்டே இருக்கிறது. எனவே பற்றற்ற தன்மை வராத வரை, பெருந்தன்மையான குணம் வளராத வரை, "என் வீடு, என் மக்கள், என் மனைவி, என் ஆஸ்தி" என்கிற எண்ணம் விட்டுப்போகாத வரை வாசியோகம் எவனுக்கும் சித்திக்காதப்பா.

இரண்டாவது கேள்வி: ஓம் நமச்சிவாய! ஒன்றே எண்ணில் ஒன்றேயாம், பலவே எண்ணில் பலவேயாம். அன்றே எண்ணில் அன்றேயாம். ஆம் என்னில் ஆமேயாம் என்று இறைவனை எப்படி அறிந்து கொள்வது என்று யுத்த காண்டத்திலே, கம்ப ராமாயணத்திலே கம்பர் கூறுகின்றார். இது வழி சென்றால் இறைவனை அடையலாம். இவ்வழி சென்றால் இறைவனை அடையலாம், அவ்வழி சென்றால் இறைவனை அடையலாம் என்று தடுமாறி, பல நிலைகளிலே நாங்கள் செல்லுகின்றோம். நான் செல்லுகின்றேன் என்று பழியை என்மேல் சுமத்தி நான் இந்த வாசகத்தை துவங்குகின்றேன். ஒருவனா இறைவன், பலவா என்ற கேள்விக்கு, ஒன்றே எனில் ஒன்றேயாம், பலவே எனில் பலவேயாம் என்று சொல்லிவிட்டார். ஒன்று என்றால், நமச்சிவாயம் ஒன்றே, அந்த ஜோதிவடிவான, வடிவமற்ற இறைவன் என்றும் சொல்லலாம். பலவே என்றால், 700 கோடி மக்கள், இன்று உலகத்தில் பறந்து இருக்கின்ற அனைவரும் அந்த இறைவன் என்று சொல்லலாம். குறிப்பாக, என் முன் காட்ச்சியாக காணுகின்ற அகத்தியர், அகத்தியரின் வாக்காக, வாக்கினை சொல்லுகின்ற திரு.கணேசன் அவர்களும் இறைவனாக, நானும் இறைவனாக, இங்கு கூடியிருக்கின்ற அன்பர்கள் அனைவரும் இறைவனாக ஏற்றுக் கொண்டால், இது நீங்களாக இருக்கின்ற உலகத்தில் இருக்கின்ற அனைவரும் இறைவனாகவும் ஏற்றுக் கொண்டால்,  "சர்வ ஜனா சுகினோ பவந்து" என்று சொல்லுகின்றோம். உலகத்தில் இருக்கின்ற அனைத்து மக்களும், இன்பமாக, இனிதே வாழ வேண்டும் என்கிற எண்ணத்திலே ஒருவன் தலைப்பட்டால், பல நிலைகளை சொல்லி, அம்மே என்று சொல்லி, இருந்தால் இருக்கட்டும், இல்லாவிட்டால் போகட்டும் என்கிற நிலையை நான் கேட்க விரும்பவில்லை. அம்மே! என்றால், அப்படி இருந்தால், அவர் இருக்கின்றார் என்றால், நீங்கள் சொல்லிவிட்டீர்கள், நான் கேட்பதற்கு முன்னாகவே, என் அகத்தியர் எனக்கு வக்களித்தாற்போல் ஏற்றுக்கொள்ளுங்கள், ஒளியற்றவர் என்று சொல்லி ஒளியே இல்லாமல் இறைவன் இருக்கலாம் என்று சொன்னால், பஞ்ச பூதங்களை தாத்பர்யமாக நாம் நினைக்கின்றோம். வானாகி மண்ணாகி, வளியாகி, ஒளியாகி, ஒலியாகி, ஊனாகி, உயிராகி, உண்மையும் இன்மையுமாய் ........................ தான் நான் என்று சொல்லி, நான் என்பது எனது என் மக்கள் என்று சொல்லி, நான் எப்பொழுது தலைப்பட்டு அதை பற்றியே சிந்திக்கின்றேனோ, அதுகால், எனக்கு இந்த இறை அருள் கிடைக்காது என்று சொல்லுகிறீர்கள். நான் இதை எல்லாம் விட்டு செல்லவேண்டும் என்றால், நான் என்ன செய்ய வேண்டும், நானே என்னை விடவேண்டும் என்றால், அது என்ன முறை? என்று தான் நான் கேட்க விரும்புகின்றேன். மேலும் மகாபாரதத்திலே, கிருஷ்ணர் அன்று அர்ஜுனனுக்கு சொல்ல்லுகின்றார் "நான் இல்லாத நாளும் இல்லை, நீ இல்லாத நாளும் இல்லை, என்றும் நிறைந்திருக்கின்ற ஒரு தத்துவத்தை அவனுக்கு உணர்த்துகின்றார். எக்காலத்திலும் நீங்கள் இருந்தீர்கள், எக்காலத்திலும் நானும் இருந்தேன் ஆனால் அது உனக்கு புரியவில்லை. அர்ஜுனா நீ இல்லாத நாளும் இல்லை, கிருஷ்ணனாகிய நானும் இல்லாத நாளும் இல்லை. ஆகையினால், இந்த 700 கோடி ஜனங்களும், ஆன்மாவாக அலங்கரித்துக்கொண்டு கொண்டு, இந்த உலகில் இருந்து ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள் என்று ஒத்துக்கொண்டால், நான் இல்லாத நாளும் இல்லை, நீர் இல்லாத நாளும் இல்லை என்றால், பிறப்பு என்பது வந்து கொண்டே இருக்கும், அந்த தளையை நீக்க முடியாது. பிறப்பறுக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கின்றோம். பிறந்து கொண்டே இருப்போம், இறைவனை வணங்கிக் கொண்டே இருப்போம் என்ற தத்துவம் உண்மையா, அல்லது இந்த பிறவியை விடுத்து நான் இறைவனாக சென்று விட்டேன் என்று மறு பிறப்பின்றி வாழ வேண்டும் என்று நினைத்தால், இந்த இறைவனை போற்றக் கூடிய பலன் இல்லாமல், இறை அருளை பற்றி வகுக்கக்கூடிய நிலை இல்லாமல், உலகம் அனைத்தும், மகா பிரளயம் ஏற்ப்பட்டு அனைத்தும் அவர்களுக்கு ஒன்றாகிவிட்டால், உலகம் என்பது தேவை அற்றதாகும். ஆகையினால் என்னுடைய கேள்வி. மறு பிறப்பு வேண்டுமா? அல்லது பிறவாத வரம் வேண்டும். அப்படி மறுபடியும் பிறந்து விட்டால், உன்னை மறவாத வரம் வேண்டும் என்கிற பல்லோர் கருத்தினை நானும் ஏற்றுக் கொண்டு, பிறவி தொடர்ந்து வரவேண்டும் என்று வேண்டிக்கொள்ளவேண்டுமா, பிறவாத வரம் வேண்டுமா என்கிற கேள்விக்கு நான் இங்கு உங்கள் முன் கேட்டுக் கொள்கிறேன்.

​​அகத்தியரின் பதில்: இறைவனின் கருணையை கொண்டு, இன்னவனுக்கு, இன்னவன் வினாவிற்கு, இத்தருணம் யாங்கள் இயம்புவது, ஒன்று, மந்திரி ஒருவன் இருக்கிறார், மிகவும் உயர்ந்த பதவி என்று வைத்துக் கொள்வோம். அவனை எனக்குத் தெரியும், என் தோழன், என்னோடு கல்வி பயின்றவன் என்று ஒருவன் கூறுவது உயர்வா, அல்லது அந்த மந்திரி, எல்லாம் எமக்குத்தெரியும், என்னுடன் கல்வி பயின்றவன், உள்ளே அழைத்து வாருங்கள் என்று கூறுவது சிறப்பா? இறைவனை தெரியும் என்று மனிதன் கூறுவதை விட, இத்தனை கோடி மனிதர்கள், இவனை எமக்குத் தெரியும், அதோ வருகிறாள், யார், எம்பால் என்று காரைக்கால் அம்மையாரை பார்த்து முக்கண்ணன் கூறினாரே, அதோ வருகிறார், யார், நம் தோழன் என்று சுந்தரரை பார்த்துக் கூறினாரே, அதைப் போல இறைவனைத்தேடி நாம் செல்ல வேண்டாம். ஒவ்வொரு மனிதனையும் தேடி இறை வரும் வண்ணம் ஒவ்வொரு மனிதனும் பக்குவம் அடைந்தால் போதும். எப்படி பக்குவம் அடைவது என்பதற்குத்தான் பல்வேறு நீதி மொழிகள் இருக்கின்றன. யாமும் சிலகாலமாக இறைவன் அருளால், வாக்கினை ஓதிக்கொண்டிருக்கிறோம். எனவே, என்ன செய்ய வேண்டும். என்ன செய்யக்கூடாது? இது வேண்டுமா, வேண்டாமா? பிறவி தொடர்வதா, தொடராமல் இருப்பதா? இது போன்ற அனைத்தையும் விட்டுவிட்டு, எந்த விதமான எண்ணங்களும் இல்லாத வெற்று பாத்திரமாக மனதை வைத்து இறையிடம் பரிபூரண சரணாகதி என்பதை எண்ணங்களால் வைத்து மனிதன் வாழ்ந்தால், அவன் யார், அவன் எதற்கு, எதை செய்யவேண்டும், எதை செய்யக்கூடாது என்பதை இறையே உணர்த்தும். எனவே, இன்னவனுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இது பொருந்தும். எல்லோரும் இறையில் நகை கொள்ளார். ஆனால் கனகம் இருக்கிறதே, அது கனகம் என்று தெரியாத நிலையிலே, சேற்றிலே அமிழ்ந்து கிடந்தால், யாரும் மதிக்கமாட்டார்கள். தூய்மை படுத்தினால், கனகம் என்று தெரியும். அதுபோல, பற்று, மாயை, அறியாமை, ஆசை, சுயநலம், தன்முனைப்பு போன்ற அழுத்துதல் போன்றவை, மனித ஆன்மாவை மூடியிருக்கின்றன. இவற்றை விட்டுவிட்டால், எல்லோரும் இறை நிலைக்கு உயர வாய்ப்பு உண்டு.

சித்தன் அருள்............... தொடரும்!

11 comments:

  1. ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
    ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
    ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி

    ReplyDelete
  2. Karthiken, thank you. What is the meaning of the word "kaadhai" in the sentence "kaadhaigalai vaasithu". Also, "pimba pezhai" -- does it mean 'mirror'?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா

      காணபிம்பப் பேழையிலே எங்களை வைத்து கற்பனா கதையையெல்லாம் பிம்பமாக்கிக் காட்டுகிறார்களே ? அதை எண்ணியும், அஃதொப்ப இயம்புங்கால், நல்விதமாய் காதைகளை வாசித்து, வாசித்து, அந்தக் காதைகளில்
      =====================================
      காணபிம்பப் பேழை = தொலைகாட்சி பெட்டி ( TV )
      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
      காதைகள் = தற்போது சித்தர்களை பற்றி பல புத்தகங்கள் வெளிவருகின்றன.

      பொருள்
      -------------
      காப்பியத்தின் பெரும்பிரிவு

      பயன்பாடு
      --------------------
      சிலப்பதிகாரம் 3 காண்டங்களை உடையது. (புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம்)
      கம்பஇராமாயணம் 6 காண்டங்களை உடையது.

      விளக்கம்
      -----------------
      காதை என்பது காப்பியத்தின் உட்பிரிவு. ஒவ்வொரு நீண்ட பாடலும் காதை எனப்படும். (உம்) அடைக்கலக்காதை, வழக்குரை காதை (சிலப்பதிகாரம் 30 காதைகளை உடையது.)

      நன்றி

      Delete
    2. Kaadhai = Kadhai, Kaadhaigalai vaasithu = kadhaigalai padithu, pimba pezhai = tholaikatchi petti - oliparappum siddhar kadaigal- Om agatheesaya namaha

      Delete
  3. Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!

    ReplyDelete
  4. Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha

    ReplyDelete
  5. Om Sri lopamutra samedha agatheesaya namaha

    ReplyDelete
  6. As I had blogged earlier I had the privilege of attending the Arul Vaakku session at Bangalore.It was and is still a mesmerizing experience.

    Ganesan Ayya was sitting on the floor ( not sitting on a sofa as depicted in the picture.) All of us were also sitting on the floor while there were a row of chairs at the end to accommodate people who could not sit on the floor because of knee problems.

    While the sketch done here is beautiful this change must be made in the sketch.

    ReplyDelete
  7. Ohm Agatheesaaya Namaha
    Ohm Agatheesaaya Namaha
    Ohm Agatheesaaya Namaha

    ReplyDelete