​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 9 June 2013

பஞ்சேஷ்டி - ஒரு அறிமுகம் - அகத்தியர் அடியவர்களுக்காக!

பஞ்சேஷ்டி - சென்னை கொல்கத்தா நெடும் சாலையில், சென்னையிலிருந்து சுமார் ஒரு முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும், அகத்தியர் உறையும் திருத்தலம்.  அகத்தியப் பெருமான் இந்த இடத்தில் ஐந்து மகா யாகங்களை செய்துள்ளார். அதன் பின்னர் லோக க்ஷேமத்துக்காக, பரத கண்டத்தை காப்பாற்றுவதற்காக பல முடிவுகளை எடுத்து அதை நடை முறைப் படுத்தினார் என்று கூறுகின்றனர்.  இந்த பதிவில், அந்த திருத்தலத்தை அறிமுகமில்லாதவ்ர்களுக்கு தெரிவிக்கலாம் என்று நினைத்த போது வலைப்பூவில் ஒரு ஒளிநாடா பார்க்க நேர்ந்தது.  அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  இன்றும் எல்லா மாதமும் "சதயம்" நட்ச்சத்திரம் அன்று, ஒரு உத்தரவின் பெயரால் சிறப்பு பூசையும் வழிபாடுகளும், அன்றைய தினம் மாலையில் நடப்பதாக தகவல்.  ஒரு முறை சென்று கலந்துகொண்டு அவர் அருள் பெறுங்களேன்.  அகத்தியருக்கு என்று ஒரு தனி சன்னதியும் உள்ளது. சிலா ரூபத்தில் அவரது பார்வை நம்மை மதி மயக்கிவிடும்.  குறிப்பாக அன்றைய தினம் அபிஷேகம் நடக்கும் போது உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.  எல்லோரும் நலமுடன் வாழ பிரார்த்தித்துக் கொண்டு, ஒளி நாடாவை பாருங்கள்.

ஓம் அகத்தீசாய நமக!

5 comments:

  1. Thank you very much for the video clip. Nice presentation about this temple in detail.

    ReplyDelete
  2. ஐயா, வணக்கம்,

    தங்களின் ஒளி நாடாப் பதிவுக்கும் முதற்கண் நன்றி.

    நேரில் சென்று தரிசனம் செய்தது போன்று உள்ளது.

    தங்களின் சேவைக்கு எங்கள் நன்றிகள் பல....

    அன்புடன்,

    மு. மோகன்ராஜ்,
    மதுரை.

    ReplyDelete
  3. THANK U VERY MUCH FOR THE WONDERFUL POSTING

    ReplyDelete
  4. Thank You Sir for this wonderful video. I will be very happy if the tower of this temple is maintained for atleast 6 months once. One should take care to remove the plants grown on the tower.

    ReplyDelete
  5. It was self contending and spiritually satisfying to see such an auspicious temple. Many many thanks for bringing forth to our view.

    ReplyDelete