​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 9 May 2013

அருள் நிறைந்த வாழ்க்கைக்கு!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!


இன்று வரை சித்தன் அருளை வாசித்து வரும் சித்தர் அடியவர்களுக்கு ஓரளவுக்கு தர்மம் எது அதர்மம் எது, எதில் சேர்ந்திருக்கவேண்டும், எதிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நமது தின வாழ்க்கையில் எளிய செயல்களால் தவம், பூசை செய்து நன்மை அடைய முடியும் என்று பல சித்தர்களும் கூறியுள்ளனர்.  உதாரணமாக, (திருமூலர் என்று நினைக்கிறேன்) நமது நெற்றியை "சிவன் விளையாடும் தெரு" என்கிறார்.  உள்ளே இறை இருப்பதை கண்டு உணர்ந்ததால் நெற்றியில் திருநீர் அணிகிறேன் என்கிறார், இன்னொரு சித்தர்.    பல பெரியவர்களுடன் கலந்து உரையாடியதிலிருந்தும், சித்தர் உரைகளை படித்ததிலிருந்தும், தெரிந்து கொண்ட சில நல்ல விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.  இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று நான் யாரையும் நிர்பந்தப் படுத்தவில்லை.  விருப்பமுள்ளவர், இந்த தொடரில் வரும் நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டு, செயல் படுத்தி வாழ்க்கையை சீர் படுத்திக் கொள்ளலாம். 

இவற்றுக்கான ஆதாரங்களை தேடாதீர்கள்.  நடை முறைப்படுத்தி நன்மை அடையுங்கள்.

"பூசை முறை" என்று சித்தர்கள் சொல்வது "நம்முள்ளே இறையை கண்டு" மானசீகமாக செய்கிற பூசையைத்தான்.  வெளியே உருவ வழிபாட்டில் அவர்கள் செய்ததெல்லாம் உலக, மனித நன்மைக்காகத்தான்.  உருவ வழிபாட்டை எதிர்த்தவர்கள் சித்தர்கள் என்று ஒரு வழக்குச்சொல் இன்றும் உண்டு.  உண்மை.  தனிப்பட்ட மனிதனை உபதேசிக்கும் போது, அவன் கர்மா இடம் கொடுத்தால், உருவ வழிபாட்டை எதிர்த்தனர், உள் பூசையை அறிவுறுத்தினர்.  கலியின் பாதிப்பினால், உள்பூசை என்பது எல்லோராலும் முடியாது, மனித மனம் உலக இன்பங்களை நோக்கி பயணிக்கும்.  அப்படிப்பட்ட மனிதனை நல் வழிப்படுத்த எண்ணி,  பொது  நலத்திற்காக தங்கள் ஆத்ம சக்தியை பகிர்ந்து புற வழிபாட்டிற்காக லிங்கமாக அமர்ந்தனர், கோவில்களை அமைத்தனர்.  அப்பொழுதும் அவர்கள் எண்ணம் "மனித மேம்பாட்டில்" தான் இருந்தது.  உருவ வழிபாட்டை செய்கிறவன் என்றேனும் ஒருநாள் உணர்ந்து, உள் நோக்கி திரும்பட்டும் என்கிற எண்ணத்தில் தான் வெளி பூசை என்கிற உருவ வழிபாட்டையும் நிறுவினர்.  அனைத்தையும் துறந்தவர்கள், எது வந்ததோ அதையும் ஏற்றுக்கொள்கிற மனபக்குவத்தையும் கொண்டிருந்தனர்.  அதனால் எதையும் இகழவில்லை.

வாழும் முறையில் செய்கிற காரியங்களால் எப்படி மேன்மை அடையமுடியும் என்பதை பார்ப்பதற்கு முன், என் நண்பர் பகிர்ந்து கொண்ட ஒரு ஒளிநாடாவை பார்ப்போம்.  இறைவன் ஒரு "மகா சிவராத்திரியின் போது தன்னை வெளிப்படுத்திக் கொண்ட காட்சி.  அவனது கண்கள், த்ரிநேத்ரம், மூக்கு, ஜடை, முகத்தின் வடிவம் ஆகாயத்தில் தெரிந்ததை இயல்பாக படம் பிடித்துள்ளார் யாரோ ஒரு பாக்கியவான்.


சித்தன் அருள் .................. தொடரும்!

4 comments:

  1. HARI OM NAMASHIVAYA.
    HARI OM NAMASHIVAYA.
    HARI OM NAMASHIVAYA.
    HARI OM NAMASHIVAYA.
    HARI OM NAMASHIVAYA.
    HARI OM NAMASHIVAYA.
    HARI OM NAMASHIVAYA.
    HARI OM NAMASHIVAYA.

    ReplyDelete
  2. have seen this before it is great

    ReplyDelete
  3. Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha

    ReplyDelete