​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 14 May 2026

சித்தன் அருள் - 2212 - நந்தியார் வட்டை பூ!


நந்தியார் வட்டை பூ, எங்கும் எளிதாக கிடைப்பது,  பூக்களிலேயே மிக உன்னதமான மூலிகை சக்தி உடையது என சித்தர்கள் கூறுகிறார்கள். இது கண் பார்வை சம்பந்தமான எந்த குறையையும் (தூரப்பார்வை, கிட்டப்பார்வை, வெள்ளெழுத்து, கண் புரை, குளுகோமா) போன்றவைகளை சரி செய்யும்.

சரி எப்படி உபயோகிப்பது?

நான்கு அல்லது ஐந்து பூக்களை பறித்து, 100 அல்லது 200 மில்லி சுத்தமான தண்ணீரில் போட்டு குறைந்தது மூன்று மணி நேரம் வைத்து இருந்து, பூக்களை அகற்றி அந்த நீரை ஒரு கண்ணாடி குடுவையில் எடுத்து, தொடர்ந்து தினமும் காலை ஒரு சொட்டு இரு விழிகளிலும், மாலை ஒரு சொட்டு இரு விழிகளிலும் விட்டு வந்தால், எந்த குறை இருந்தாலும் அது விலகிவிடும். கண்ணாடியை ஒதுக்கி வைத்துவிடலாம், கண் புரை காணாமல் போய்விடும், அறுவை சிகிர்ச்சையை தவிர்க்கலாம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!