அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28/06/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 1
நாள், நேரம் : 28/06/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம் : உலக நன்மைக்காக 11 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.
முழு கூட்டு பிரார்த்தனை நிகழ்வின் நேரலை :-
https://www.youtube.com/watch?v=q8Hs63mXjrc&t=1s
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
குருநாதர் :- ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்
அம்மையே அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். கவலைப்பட தேவையில்லை.
அனைவருக்குமே ஈசனும் நிச்சயம் பார்வதியும் துணை இருந்து, பின் எவ்வாறு செய்வதெல்லாம் செய்து நிச்சயம் சித்தர்கள் யாங்கள் பின் நல்முறையாகவே பின் எங்களை தேடி வருபவருக்கு எல்லாம் நல் ஆற்றலையும் கொடுத்து, நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய, என்ன வேண்டுமோ அதை நிச்சயம் செய்து தருவோம் மெதுமெதுவாக.
சுவடி ஓதும் மைந்தன் :- புரியுதுங்களா? என்ன வேண்டுமோ, எல்லாம் வேண்டுமோ, எதாவது இது பண்ணனுமோ, அதெல்லாம் வந்து நாங்க சொல்லித் தருவோம்.
குருநாதர் :- அப்பனே, அறிந்து கூட எதையே செப்பிக் கொண்டு, செப்பிக் கொண்டிருந்தாலும், இவர்களுக்கு சிறு சிறு அப்பனே, நிச்சயம் தன்னில் ஏது என்று புரியும். அப்பனே, இதனால் சோர்வும் ஏற்படும்; இதனால் இடையிடையே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, குழந்தையை ஒரு பாடலை பாடிட்டு, பின்பு உரைப்பேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, அந்த அம்மா, அவர் சொல்லுங்க.
( குழந்தை அம்மை மேடை ஏறி , சுவடியின் அருகில் அமர்ந்தார்கள் )
குழந்தை அம்மையின் பாடல் ( ஜனனி ஜனனி பாடல் ) :-
நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=15304
===========================
# இருவரும் இணைந்து பாடுக
===========================
குருநாதர் :- தாயே, அழகாகவே, நிச்சயம் தன்னில் கூட பாடும். அடுத்த பாடலை நீயும் பின் பைத்தியனும்.
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க ரெண்டு பேர் சேர்ந்து ஒரு பாடல். நீங்க கொஞ்சம் பாடுங்க.
குழந்தை அம்மை , பாடகர்:- (இருவரும் இணைந்து “என் அப்பன் அல்லவா” பாடல் பாடினார்கள் … )
நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=15604
(பாடல் முடிந்ததும் வாக்குகள் ஆரம்பமானது )
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
குருநாதர் :- அப்பனே, அம்மையே, அனைவருக்குமே எதை என்று கூற, ஒரு ஒரு விதத்திலும் கூட சில சில கஷ்டங்கள், எதனால் என்பவை எல்லாம். ஆனாலும் இன்றைய கால கட்டத்தில் கூட, மாய வித்தைகள் எல்லாம். இவையெல்லாம் ஓடி விட வேண்டும் என்றெல்லாம் இறைவனிடத்தில் மன்றாடி, இவர்களுக்காக ஒரு பாடலைப் பாடு.
சுவடி ஓதும் மைந்தன் :- இது என்ன சொல்றார்னா, எல்லாரும் ஒரு ஒரு கஷ்டம். அதே மாதிரி இந்த காலத்துல வந்து, நெகட்டிவ் போர்ஸ் நிறைய வருதுன்னு சொல்றார் வந்து. இதெல்லாம் இறைவா, உன்னால்தான் தடுக்க முடியும். யாரால? சிவபெருமானால்தான் தடுக்க முடியும். அதனால அவங்களை எப்படி சொல்றார்னா, இது வந்து அவங்களை கஷ்டத்துக்கு போட்டும், அந்த இறைவனை மன்றாடி ஒரு பாடல் பாடமான்றார் வந்து.
சுவடி ஓதும் மைந்தன் :- எப்படி பாடுவீங்க?
குழந்தை அம்மை :- ( உத்தரவை நன்கு கேட்டுக்கொண்டார்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாருக்கும் வந்து கஷ்டம் இருக்குதுமா? குட்டி, எல்லாருக்கும் ஒரு ஒரு கஷ்டம். அது யாரால் தீர்க்க முடியும்னா, சிவபெருமானால் தான் தீர்க்க முடியும். அப்ப, இன்றைய காலகட்டத்துல எல்லாருக்கும் அதைவிட கஷ்டம் என்பது ஒன்னு ஒன்னு வேறு.
சுவடி ஓதும் மைந்தன் :- இன்னொன்னு, நெகட்டிவ் போர்ஸ் வந்து அடிக்குது எல்லாருக்கும். எப்பா, அதெல்லாம் வராம காத்து நில்லுப்பா. அது வராம நின்னாதான் உன்னை வந்து எல்லாரும் வணங்குவாங்கப்பா. அதனால வந்து, எப்படி சொல்றது, அதெல்லாம் வரக்கூடாது. எல்லாருக்கும் எதுவும் வரக்கூடாது. எல்லா குறைகள் வரக்கூடாது வந்து. அதனால நீ உருகி பாடுமான்றார் வந்து. யாருக்காக? இங்க இருக்கிற எல்லாத்துக்காகவும் உருகி ஈசனிடத்தில் பாட வேண்டும். அது மாதிரி பாடல் பாடுமான்றார் வந்து.
குழந்தை அம்மையின் பாடல்:- ( ஏது பிழை செய்தாலும் ஏழை எனக்கு…முருகா நீயல்லால் தெய்வமில்லை )
நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=16071
===========================
# மற்றவர்களுக்காக இல்லத்தில், ஆலயங்களில் வேண்டிக்கொண்டால் - அது மிக்க புண்ணியம் தரும் உங்களுக்கு. உங்கள் குழந்தைகளை இப்படி சொல்லிக் கொடுத்து வேண்ட செய்யுங்கள்.
===========================
குருநாதர் :- அழகாகவே. ஏன், எதற்காக, மனிதன் எதை என்று பின்பற்றுகின்றான் என்பவை எல்லாம் தெரியாமல் சென்று கொண்டே இருக்கின்றது. காலத்தின் கட்டாயம் எதை என்றே மனிதனுக்கு தெரியாமல், புரியாமல், வலம் வந்து கொண்டிருக்கின்றது.
குருநாதர் :- இதனால் நிச்சயம் தன்னில் கூட நல் மனதாய் உள்ளவர்கள் எல்லாம், நிச்சயம் தன்னில் கூட இறைவனிடத்தில் மன்றாடி, நிச்சயம் அடுத்தவர்களுக்காக வேண்டிக்கொண்டாலே, நிச்சயம் பின்—அதாவது வேண்டிக்கொண்டவர்களுக்கும் பின்—புண்ணியம் நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய.
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றார் தெரியுங்களா? என்ன சொல்றாருங்க ஐயா? அகத்தியரால எல்லாமே பண்ண முடியும். அகத்தியர் எல்லாமே தெரியும், இறைவன் பால எல்லாமே பண்ண முடியும். ஏன்னா நல்ல மனசு உடையவர்கள், வந்து மத்தவங்களுக்காக வேண்டிக்கினாங்கன்னா வந்து என்ன ஆகும்? புண்ணியம் வரும். யாருக்கு புண்ணியம் வரும்?
அடியவர் 2:- வேண்டுறவங்களுக்கு.
சுவடி ஓதும் மைந்தன் :- வேண்டுறவனுக்கும் புண்ணியம் வரும். ஐயா, சொல்லுங்க, வேண்டுறவங்களுக்கும் புண்ணியம்.
அடியவர் :- பேசுறவங்களுக்கும் புண்ணியம், கேட்கிறவங்களுக்கும் புண்ணியம்.
சுவடி ஓதும் மைந்தன் :- புண்ணியம் என்றார். அதனால்தான் நல்லவையே கேட்க வேண்டும்.
===========================
# உங்களிடம் உள்ள பதிவு செய்யும் கருவி - உங்கள் முதுகில் உள்ளது
===========================
குருநாதர் :- எதை எது என்று புரிய. அப்பனே, இப்போதெல்லாம் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவை என்று அறிய. அப்பனே, ஒரு நிச்சயம் காப்பு போல், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அனைவரும் எது என்று புரிய. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, தொலைநோக்கி, அதாவது தொலைபேசியில், அப்பனே, வைத்துள்ளார்கள். அப்பனே, நிச்சயம் அதுதான் அனைத்தும் பதிவு செய்கின்றது.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாருமே என்ன பண்றாங்களாம்? போன்ல மெமரி கார்டு இருக்குதாம் வந்து.
அடியவர் :- சிப்பு (chip).
சுவடி ஓதும் மைந்தன் :- சிப்பு. அந்த நீங்க வந்து என்ன பண்றீங்க?
அடியவர் :- காப்புன்றாங்க அதை. ஒரு காப்பு மாதிரி ஒன்னு இருக்கு.
சுவடி ஓதும் மைந்தன் :- காப்பு மாதிரி இருக்குதாம் வந்து.
அடியவர் :- அதுதான் எல்லாத்தையும் பதியுதாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதுலயேதான் இருக்குதுப்பா. அது என்னன்னா நீ வந்து என்னென்ன பண்றியோ, அது வந்து மெமரி ஆகுதுன்றார் வந்து. ஐயா, புரியுதுங்களா?
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட நீ எதை பார்த்தாலும் அதைத்தன் பின் சேமி.
சுவடி ஓதும் மைந்தன் :- நீ எதை பார்த்தாலும், எதை செய்தாலும் என்ன ஆகுது?
அடியவர் :- அதுல சேமிச்சிரும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதுல ரெக்கார்ட் ஆகுது.
அடியவர் :- ரெக்கார்ட் ஆயிடும்.
===========================
# உங்கள் முதுகில் உள்ள மர்மம்
===========================
குருநாதர் :- அறிந்தும் பின் மானிடனுக்கு, அதாவது முட்டாள் மானிடனுக்கு, அவையெல்லாம் தெரியாமல் இருக்கின்றது. நிச்சயம் முதுகின் பின்னே எவை ஏது என்று அறிய, நிச்சயம் தெரியாமல். அதனால்தான் உன் கண்களை கூட நிச்சயம் பின் உன் முதுகையை பார்க்க முடியவில்லை. நிச்சயம் அதுபோல் ஒரு சிறிய காப்பு, பின் அதனையும் கூட நிச்சயம் தன்னில் கூட.
===========================
# நீங்கள் காணும் அனைத்தும் உங்களால் உருவாக்கப்பட்ட திரைப்படமே
===========================
குருநாதர் :- அதனால் நீ எதை பார்க்கின்றாயோ, எதை கேட்கின்றாயோ, அதுபோலே நிச்சயம் சேமித்து, பின் மீண்டும் உனக்கு அதுவே காட்டுகின்றது. அவ்வளவுதான். இது திரைப்படம் தான் நீயே.
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றார் தெரியுங்களா? ஒரு செல்போனை பத்தி எடுத்துட்டு வராரு ஜெனரலா. அப்ப நீ எதை பார்க்கிறியோ, ஏது பார்க்கிறியோ, அது என்ன ஆகும்?
அடியவர் :- எல்லாம் அதுல பதியுது.
சுவடி ஓதும் மைந்தன் :- திரும்ப திரும்ப வந்து மெமரில சேவ் ஆகி உனக்கு அதே வரும். அது பார்க்கலாம், இதுவும் பார்க்கலாம்னு சொல்லிட்டு. அதே போலத்தான் நீ எதை நினைக்கிறியோ, அது மீண்டும் சேவ் பண்ணி வச்சுக்கும்.
அடியவர் :- சேவ் பண்ணி வச்சுக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, புரியுதுங்களா? அது உனக்கே வரும்.
அடியவர் :- இப்ப இந்த YouTubeல இந்த ஷார்ட்ஸ் எல்லாம் பார்க்கிறீங்க இல்ல? அந்த ஷார்ட்ஸ்ல வந்து பார்த்தீங்கன்னா, எதை நீங்க அதிகமா பார்க்கிறீங்களோ, அது சம்பந்தமான தகவல்தான் முன்னாடி முன்னாடி வந்து நிக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- உங்க முன்னாடி முன்னாடி வந்து நிக்கும். நீங்க அழுகுற சீன் பார்க்கிறீங்களா? என்ன ஆகும்?
அடியவர் :- அழுகுற சீனாதான் வந்து நிக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அழுகு சீராதான் வந்து நிக்கும். ஏன்னா பதிவு. அப்ப வந்து நீங்க நாங்க வெற்றியாளன்னு சொல்றாங்களா? நிறைய நிறைய பேர் வெற்றி ஆகுறாங்க இல்ல? அவங்கள பார்த்தா என்ன ஆகும்? அடுத்து நீங்க வெற்றி ஆக போறீங்கன்னு சொல்றாரு அகத்தியர் வந்து. புரியுதுங்களா? அவங்க ஏன்னா இப்ப வெற்றி பெரிய பெரிய ஆளு இருக்கறாங்க இல்ல வந்து. அது மாதிரியே நீங்க ஆயிடுவீங்கன்றாங்க வந்து. அதே மாதிரி மந்திரத்தை உச்சரித்தால் என்ன பண்ணுவீங்க? திரும்ப திரும்ப அதுவே வரும்.
சுவடி ஓதும் மைந்தன் :- இறைவனை நாடிக்கொண்டே இருந்தால் திரும்ப திரும்ப அதே வரும். கடைசியில் ஒன்னுதான் இங்க மிச்சம். புண்ணியத்தை நாடிக்கொண்டே இருந்தால், புண்ணியமே செஞ்சினே இருக்கலாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- பாவத்தை வந்து
அடியவர் :- நோக்கி சென்றால்
சுவடி ஓதும் மைந்தன் :நோக்கி சென்றால்
அடியவர் :- பாவம் வந்துகிட்டே இருக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- பாவம் வந்துகிட்டே இருக்கும்.
===========================
# மீண்டும் மீண்டும் பாவத்தில் கால் வைக்கும் மனிதன்
===========================
குருநாதர் :- அப்பனே, இப்பொழுதெல்லாம் பாவத்தில் தான் முதல் காலடி வைக்கின்றான் மனிதன்.
சுவடி ஓதும் மைந்தன் :- இப்பொழுதெல்லாம் எதுல முதல்ல வைக்கிறாரு.
அடியவர் :- முதல் பாவம் பக்கம் தான் முதல் பார்க்கிறான் மனுஷன்.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் மனிதன் எவ்வளவு பெரிய அறிவாளி என்று நீங்கள் சிந்தித்துக் கொள்ளுங்கள்.
குருநாதர் :- சாக்கடை பின் நிச்சயம் இருக்கின்றது. நிச்சயம் அதில் பின் ஒருவன் பின் காலடி வை என்றால் நிச்சயம் வைத்திட மாட்டான்.
குருநாதர் :- ஆனால் நிச்சயம் அவ்வளவு பெரிய அறிவாளி மனிதன் அங்கு பாவம் இருக்கின்றது என்றால் முதலிலே அங்குதான் கால் வைப்பான். இதுதான் கலியுகம்.
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றான் தெரியுங்களா? "மனிதன் எவ்வளவு பெரிய அறிவாளி ஆகிறான் பாருங்க" என்றார். மனிதன் எவ்வளவு பெரிய அறிவாளி! இன்னொரு மனிதன் வந்தா, "டேய், அங்க சாக்கடை இருக்குதுடா, கால் வைக்காதடா"ன்னு என்ன பண்ணுவானாம்?
அடியவர் :- வைக்க மாட்டான்.
சுவடி ஓதும் மைந்தன் :- வைக்க மாட்டான். ஆனா அதே மனிதன், "டேய், அங்க பாவம் இருக்குதுடா"ன்னு சொன்னா, என்ன பண்ணுவானாம்?
அடியவர் :- காலை வைப்பானாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- முதல்ல காலை அங்கேதான் எடுத்து வைப்பானாம். அப்ப மனிதன் எப்படி இருக்கிறான்? எப்படி இருக்கிறான்?
அடியவர் :- எவ்வளவு பெரிய முட்டாளா இருக்கேன்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- அவ்வளவு பெரிய அறிவாளி ஆகிறான் என்றாங்க.
அடியவர் :- அதான், மறைமுகமா.
சுவடி ஓதும் மைந்தன் :- முட்டாளா இல்ல.
அடியவர் :- பெரிய அறிவாளி.
சுவடி ஓதும் மைந்தன் :- பெரிய அறிவாளியா மனுஷன்.
அடியவர் :- மறைமுகமா ( முட்டாள் என்று சொல்கின்றார்.)
அடியவர் :- ( சிரிப்புகள் )
குருநாதர் :- நிச்சயம், தன்னில் கூட "இவ் அறிவே அவனை பின் கீழே தள்ளிவிடுகின்றது."
அடியவர் :- அந்த அறிவு தான் அவனுடைய அழிவுக்கு காரணமாகுது. கீழே தள்ளுறது அவனை. மேலிருந்து கீழே தள்ளிவிட்டுறது.
சுவடி ஓதும் மைந்தன் :- தள்ளிவிடுறது.
===========================
# மனித உடம்பில் இருக்கும் முன்னோர்கள் ஆன்ம துகள்கள்
===========================
குருநாதர் :- எதை ஏன் என்று புரிய. இதனால் இன்னும் இன்னும் கூட... இதனால் இவ்வாறாக சிறு சிறு துகள்கள் எல்லாம் நிச்சயம் மனிதனில் ஒட்டிக்கொண்டு உள்ளது. இவை பின் ஒட்டிக்கொண்டு இருக்கையில், மனிதனுக்கு எப்பொழுதுமே நல்லெண்ணமும் வராது. நிச்சயம் தன்னில் கூட ஏது என்று புரியாது. நிச்சயம் தன்னில் கூட சோம்பலாகவே இருப்பான். மனிதனுக்கு பல துகள்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- துகள்னா என்ன துகள்?
அடியவர் :- அணுத்துகள்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு ஒரு துகள் மனிதனுக்கு ஒட்டிருக்கும் பொழுது, அவன் என்ன பண்ணாலும்...
அடியவர் :- அதெல்லாம் பதிவுகள். நீங்க பண்றது, செய்யறது எல்லாம் போய் ஒட்டிக்குது. அதுல போய் பாவங்களை நிறைய செஞ்சுறதுனால, இந்த பாவம் எல்லாம் அதுல போய் ஒட்டிட்டு இருக்கு, அந்த துகள்கள்ல. அதனால மனுஷன் சோம்பேரி ஆயிடுறான் என்றாங்க.
===========================
# ஏன் சிவதாண்டவம் பாட வேண்டும் ?
===========================
===========================
# ஆதி ஈசனாரையும் விட்டு வைக்காத அணுத்துகள்கள்
===========================
குருநாதர் :- ஈசனுக்கே இவை உண்டு. அதனால்தான் ஈசன் சிவதாண்டவம். எதை என்று புரிய. இப்படி ஆடினால் எல்லாம் பின் கலைந்து ஓடும் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- ஈசனே ஒரு தடவை ஒட்டிக்கொண்டு தான் இருந்தது அந்த துகள்கள் எல்லாம் வந்து. அதனால்தான்...
அடியவர் :- சிவதாண்டவம்.
சுவடி ஓதும் மைந்தன் :- சிவதாண்டவம் எதுக்கு?
அடியவர் :- அந்த துகள் எல்லாத்தையும் கலைச்சு.
சுவடி ஓதும் மைந்தன் :- துகள் எல்லாத்தையும்?
அடியவர் 2 :- விரட்டணும்.
சுவடி ஓதும் மைந்தன் :- விரட்டணும். அப்ப விரட்டினாதான்...
குருநாதர் :- ஏது என்று புரிய. அதாவது, நிச்சயம் தன்னில் கூட அனைவரும் எதை? உறக்கத்தின் நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றார்கள். மீண்டும் சிறிது விட்டால் இவர்கள் உறக்கம் விடுவார்கள் இங்கே. இதனால் நிச்சயம் பின் நல் பாடலாக எவை என்று கூற, சிவதாண்டவமாக.
தேவி காளி அன்னை உபாசகர்:- ( சிவ தாண்டவம் பாடல் பாடினார்கள் )
அகஸ்தீஸ்வராய நமஹ. ஓம் காளி …..
நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=16938
( சிவ தாண்டவம் பாடி முடித்த பின்னர்..குருநாதர் வாக்குகளை அருளினார்கள் )
===========================
# சிவதாண்டவம் பாடலின் முழு விளக்கம்
===========================
===========================
# உடம்பில் பின்னி பிணைந்திருக்கும் முன்னோர்கள் ஆன்மாக்களை ஓட விரட்ட வேண்டும்
===========================
குருநாதர் :- அப்பனே அனைவருக்கும் ஏன் எதற்காக இச்சிவ தாண்டவம் உதவுகின்றது. அப்பனே எது என்று புரிய அப்பனே ஈசன் நடனத்தால் அப்பனே ஈசனை அப்பனே தொட வேண்டும் என்றாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல்வேறுபட்ட ஆன்மாக்கள் அப்பனே உடம்பில் ஒட்டி கொண்டிருப்பது என்பேன் அப்பனே.
குருநாதர் :- இதனால்தான் அப்பனே உங்களால் அப்பனே எதை செய்தாலும் அப்பனே பின் மனக்குழப்பங்கள் இன்னும் இன்னும் ஏனைய பின் முன்னோர் என் ஆன்மாக்கள் அப்பனே பின்னி பிசைந்து எவை என்று கூற இருக்கின்றது என்பேன் அப்பனே.
குருநாதர் :- அவையெல்லாம் ஓட அப்பனே முதலில் இவையெல்லாம் ஓடினால் தான் அப்பா , யாங்களும் வந்து வாக்குகள் செப்ப முடியும்.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாரிடமும் என்ன இருக்கு?
அடியவர் :- முன்னோருடைய ஆன்மாக்கள்
சுவடி ஓதும் மைந்தன் :- முன்னோருடைய ஆன்மாக்களும் ?
அடியவர் :- பின்னி பிணைந்திருக்குது.
சுவடி ஓதும் மைந்தன் :- பின்னி பிணைந்திருக்குது சில எண்ணங்கள், சில இது எல்லாமே அது பின்னி பிணைந்து எல்லாருக்கும் உங்கள இறைவன நினைக்க முடியாது சூழ்நிலை சில நேரத்தில் ஏற்படுது.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப முதல்ல சிவதாண்டவம் ஈசன் நடனம் ஆடினார்
சுவடி ஓதும் மைந்தன் :- எதற்கு நடனம் ஆடினார் அதனால முதல்ல சிவனை வந்து அட்டாச் ஆகணும் வந்து சிவன் எப்படி ஆடுறார்?
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா உலுக்கும்.. முதல்ல அந்த ஆன்மாக்கள் என்ன ஆகும் உங்களுக்கு புடிச்சிருக்குது ஒன்னு ஒன்னு அப்படியே பிடிச்சிருக்குது வந்து
அடியவர் :- ஒரு உலுக்கு உலுக்கினால்தான் அவங்க சொல்றது உரைக்கும் அது எல்லாம் கீழ விழுகும் பறந்து போகும்
சுவடி ஓதும் மைந்தன் :- இல்லையென்றால் உங்களால் நல்லது நினைக்க முடியாது. நல்லதும் செய்ய முடியாது ஒன்னும்..செய்ய முடியாது. நல்லது எண்ண முடியாது.
அடியவர் :- சித்தர்கள் வாக்கும் கிடைக்காது உங்களுக்கு
சுவடி ஓதும் மைந்தன் :- வாக்கும் கிடைக்காது. அப்படி வந்து அதெல்லாம் இருந்துச்சுன்னா சித்தர்களால நாங்களும் உங்களுக்கு வந்து முடியாது அதனால நீங்க ஒரு 10% இப்படி வாங்க. நாங்க ஒரு 90% அப்படி வரோம். ஆமா அப்படிதான்
அடியவர் :- கருணை கருணை கருணை. உண்மையில
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால ஏன் முதல்ல பாட சொன்னார் என்றால் அதெல்லாம் விளக்கணும்.
குருநாதர் :- இதுவும் விஞ்ஞானம் பூர்வமாகவே எடுத்து. ஆனால் மனிதன் சொல்வான் எதையோ பின் பைத்தியக்காரன் போல் செப்பி கொண்டிருக்கின்றான் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆனா மனிதன் சில தீய மனிதர்கள் பார்த்தார்னா, அவர்கள் பார்த்தாங்கன்னா, என்ன பண்ணுவாங்களாம்? ஏதோ பைத்தியக்காரன் உளறுகின்றார்கள் என்று சொல்லி ..அதெல்லாம்
===========================
# ஏன் நல்லவற்றை பார்த்தால் சிலருக்கு எரிச்சல் வருகின்றது.
===========================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட சில எவை என்ற எதிர்மறை ஆற்றலும் அவனிடத்தில் ஆனாலும் அவனுக்கு என்ன ஆக போன்றது அவனுக்கு தெரியவில்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- ஏன் நல்லது பார்த்தா சிலருக்கு எரிச்சல் வருதன்னா, அவங்க வந்து எதிர்மறை ஆற்றல்
சுவடி ஓதும் மைந்தன் :- நெகட்டிவ் போர்ஸ் அதிகமா இருக்குது ஆனா அதனுடைய விளைவு என்ன ஆக போறது என்பது
அடியவர் :- அவன் அழிய போறது அவனுக்கு தெரியாது
சுவடி ஓதும் மைந்தன் :- அவனுக்கே தெரியாது
===========================
# காளிதேவின் உபாசகர் மகிமைகள் - தீய சக்திகளை ஓட ஓட விரட்டும் வல்லமை கொண்டவர்.
===========================
குருநாதர் :- அப்பனே ஏன் எதற்கு இவன் பல மந்திரங்களை ஓதியவன் எதை என்று கூற பின் காளிதேவின் உபாசகன் எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட. இவன் வாயில் வந்தால் நிச்சயம் உங்களுடைய ஆற்றல் ஏறும்.
அடியவர் :- சிவாய நம. பின்னாடி உக்காந்துருங்க ஐயா பத்தி சொல்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- இவர் வந்து பல மந்திரங்கள் கற்றவர். பல மந்திர உபாசனம் செய்தவர்.
அடியவர் :- காளிதேவி உபாசகர்
சுவடி ஓதும் மைந்தன் :- காளிதேவி உபாசகர். அப்ப இவருடைய
அடியவர் :- வாயில இருந்து சில விஷயங்கள் சொன்னா
சுவடி ஓதும் மைந்தன் :- சொன்னா சில வார்த்தைகள் பாடினால்…அது என்ன ஆகும்?
அடியவர் 2:- எல்லாருக்கும் நல்லது நடக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- உங்களுக்கு வந்து எதிர்மறை ஆற்றல் எல்லாம் இருக்குது பிச்சுக்கொண்டு ஓடும் முதல.
அடியவர் 2:- பிச்சுக்கொண்டு ஓடுறாங்க
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று அறிய அறிய பின் இறங்கு முறமாக, ஏறு முகமாக மாறுகின்ற பொழுது..
சுவடி ஓதும் மைந்தன் :- மைனஸ்ல இருக்கின்ற பொழுது உங்களுக்கு அது பிளஸ் ஆகும் போது, நாங்க எளிமையா உங்களுக்கு வாக்கு சொல்லி தட்டி விட்டலாம். புட்பால் மாதிரி எட்டி உதைக்கலாம். அப்படியே அப்படியே போயிடலாம்.
அடியவர் :- அப்பதான் புரிய ஆரம்பிக்கும்
சுவடி ஓதும் மைந்தன் :- அப்பதான் புரிய ஆரம்பிக்கும்
அடியவர் :- இல்லையென்றால் புரியாது
குருநாதர் :- இதனால் மனிதனுக்கு ஒன்றொன்று பின் சொல்லி பின் புரியப்படுத்த வேண்டுமென்றால் அப்பப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- மனிதனுக்கு வந்து நாங்க சொல்லி புரியப்படுத்தனும்னா எங்களால
அடியவர் :- முடியாதுப்பா சாமி
சுவடி ஓதும் மைந்தன் :- முடியாதப்பா
===========================
# காளி தேவியின் உபாசகனை இன்னொரு முறை பாடச் சொல்.
# எதிர்மறை ஆற்றல் அனைத்தும் விலகட்டும்
===========================
குருநாதர் :- இதனால்தான் முடிவெடுத்தோம் எது என்று புரிய, இதனால் பின் இவந்தன் தன் வாயால் பல வழியில் கூட எதை என்று கூற பின் பல புண்ணியங்களும் எவை என்று கூற பல மந்திரங்களும் சொல்லியவன். இவனிடத்தில் பின் எவை என்று கூற உங்களிடத்திலும் எதிர்மறைப் பின் ஆற்றல் அதிகமாக இருக்கின்றது. அதனால் இவனை இன்னொரு முறையும் பாடசொல். அனைத்தும் விலகட்டும்.
அடியவர் :- சிவாய நம !!!!! சிவாய நம !!!!!
சுவடி ஓதும் மைந்தன் :- உங்க கையில நெகட்டிவ் போர்ஸ் அதிகமா இருக்குதான். எல்லாம் இந்த செய்வன அது இதுன்னு செய்றாங்கல்ல நிறைய இருக்குது. அதெல்லாம் வந்து இவரும் காளி தேவியின் உபாசகர். இவர் பாடுகின்ற பொழுது அதெல்லாம் பிச்சி ஓடட்டும் அப்பறம் நான்
வாக்கு சொல்றேன் என்று சொல்கின்றார். ரிபீட்.
===========================
# எதிர்மறை ஆற்றல் அனைத்தும் விரட்ட காளி தேவியின் உபாசகர் சிவ தாண்டவம் பாடலை பாட ஆரம்பித்தார்கள்
===========================
பாடல் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=17614
காளி தேவியின் உபாசகர் :- ( அனைவரின் எதிர்மறை சக்திகளை விரட்ட வேண்டும் என்றால் , பல போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டும். காளி அன்னையின் உபாசகர் முதலில் பாடவே சிரமப்பட்டார்கள். பின்பு நீர் ஆகாரம் கொடுத்து , பின்னர் பாட ஆரம்பித்தார்கள்…)
பாடல் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=17744
===========================
# சிவ தாண்டவம் பாடல்……..
===========================
பாடல் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=17855
( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28/06/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை அதனில் உரைக்கப்பட்ட வேல் பூசை வாக்கு பகுதி நிறைவு அடைந்தது)
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)
.jpeg)
.jpeg)
