வணக்கம் குருநாதா. நீண்ட நாட்களுக்குப் பின் இந்தக் கேள்விகள். நிறைய இருக்கு. அத்தனை கேள்விகளும் உங்களுடைய அடியவர்கள் அனுப்பித் தந்தது, என்னுடைய கேள்வி என்று எதுவுமே கிடையாது. அவர்கள் திருப்திப்படுகிற அளவுக்கு எந்தெந்த பதிலை தர முடியுமோ, அதைத் தந்தால் அவர்களுக்கு தெரிவித்து விடுகிறேன் ஒன்று.
இரண்டாவது, இந்தக் கேள்விகளில் எனக்கு எந்த பங்கும் இல்லை; அதனால் எனக்கு ஆட்டோல ஆள் அனுப்பாதீங்க. யார் யார் கேட்டிருக்காங்களோ, அவங்களுக்கு அனுப்புங்க. ரைட்டா? இதனுடைய அர்த்தம் உங்களுக்கே புரியும். சரி!
1. உங்களுடைய அடியவர் ஒருவர் வேலூர் பக்கத்துல இருக்கிற பெரிய ஏரியூர், அப்படிங்கிற அகிலாண்ட பெருமாள் கோவில்ல, உங்களுக்கு எல்லா ஆயில்யத்துக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்ய விருப்பப்படுகிறார். அதற்கு உங்கள் அனுமதி வேண்டும் என்று கேட்கிறார்.
குருநாதர்: ஒரே வரியில்: நிச்சயம் உண்டு. செய்ய சொல்லலாம்.
2. ஐயனின் திருவடிகளை வணங்கி, தங்களை நித்தம் வழிபடும் அடியேனின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டி நிற்கின்றேன். தற்போதைய ராமேஸ்வரம் தீவு, குமரிக்கண்டம் காலத்தில் ஒரு மலையின் சிகரமாக இருந்ததும், பின்னர் ஆழிப் பிரளயத்தில் வக்ருளி ஆறு மறைந்தபோது ஒரு தீவாக மாறியது. அப்போது இருந்த ராமேஸ்வரம் கோவில், நீரில் கரையும் முன்பு, ஐயனே, அவ் மண் லிங்கத்தினை எடுத்து வந்து சிகரத்தில் பிரதிஷ்டை செய்து, தற்போதுள்ள திருத்தலம் ஸ்தாபனம் செய்தீர்கள். அடியேனுக்கு இந்த அற்புதமான காட்சியை காண அருள் செய்தீர்கள். அடியேனுக்கு கிடைத்த இந்த பாக்கியம், மற்ற அடியேர்களுக்கும் கிடைக்க, திருவாய் மலர்ந்து அருள வேண்டும்.
குருநாதர்: அறிந்தும் எது என்று புரியும். ஆனால் அனைவருக்குமே, அனைவருக்குமே ஒரே மனதாக எவை என்று புரியாது. அதாவது, பின் அனைவருக்கும் ஒரே மனதாக எவை என்ற பின் எவையும் இருப்பதில்லை. அதாவது, உலகத்தின் பின் நிச்சயம் உயிர்கள் வெவ்வேறாகவே—உயிர்கள், அதாவது வெவ்வேறாகவே, பின் நிச்சயம் எங்கேங்கோ சென்று விடுகின்றது. எதனால், எது என்று புரிய. எதனால், நிச்சயம் அவரவர் பின் உண்மை ஞானம், உண்மை பக்தி, உண்மை அன்பு இருந்தாலே, நிச்சயம் பின் தெரியும்.
3. யோக சாதனை செய்யும்போது கிடைக்கும் அனுபவங்கள் சித்தர்களின் அருளா, அல்லது மனதில் ஏற்படும் கற்பனையா என்று எவ்வாறு அடியேன்கள் தெரிந்து கொள்வது?
குருநாதர்: முதலில், இங்கு யானே ஒரு கேள்வி கேட்கின்றேன். யோகம் என்பது எதை குறிக்கின்றது முதலில்?
யோக சாதனை.
குருநாதர்: [யோக சாதனைன்னா அது என்னன்னு கேட்கிறார் அகத்தியர். என்னப்பா, என் மனசுல புரிஞ்சுக்கிறேன் என்றார்.] அப்பனே, இதற்கு எவை என்று கூற? முதலில் அர்த்தம்: தர்மத்தை காப்பது என்று பொருள். இதை காத்தாலே போதுமானது; அனைத்தும் தெரிய வந்துவிடும். தர்மத்தை காக்காமல், நிச்சயம் தண்ணீர் கூட. ஆனாலும் பல்வேறு பெயர்கள், நிச்சயம் இப்பொழுதெல்லாம் மாற்றி அமைத்து விட்டார்கள். அவ்வளவுதான். அதனால்தான், நிச்சயம் பின் அதிக அளவு, பின் பாவ புண்ணியங்களோ, நிச்சயம் கர்மா சேர்ந்து கொண்டே இருக்கின்றது. மனிதனுக்கு உண்மை உணர வேண்டும். உண்மை பொருளை உணர்வதற்கும், உண்மையை தேடிச் செல்ல வேண்டும்.
4. வணக்கம் ஐயா. தோப்புக்கரணம் பற்றி நாங்கள் இன்னும் விரிவாக சொல்கிறேன் என்று தாங்கள் இன்னும் விரிவாக சொல்கிறேன் என்று கூறினீர்கள். தயை கூர்ந்து கூறுங்கள் ஐயா, தோப்புக்கரணம் போடுவது எப்படி?
குருநாதர்: எதை என்று அறிய, அவ்வாறு செய்தாலே நரம்புகள், பின் நிச்சயம் தண்ணீர் கூட ஈர்க்கப்பட்டு, எதை—அதாவது, நிச்சயம் தண்ணீர் கூட—ஒரு சாதனமாகும். எவை என்று கூட பல வகைகள் கூட. நிச்சயம் தண்ணீர் கூட, பின்—அதாவது, பின் சுலபமாக, நிச்சயம் தண்ணீர் கூட, பின் ஏது என்று புரிய. அதாவது, இலகுவாக அறிந்தும் கூட, பின் இவ்வாறு நரம்புகள் ஆகிவிட்டால், எந்நோயும் வராது. மீண்டும் இதனைப் பற்றி விரிவாக சொல்கின்றேன். அதாவது, நிச்சயம் எவ்வாறு என்பதை எல்லாம், பின் இழுத்தால் எவ்வாறு என்பதை எல்லாம். ஐயா, இழுத்தால்னா, ரப்பர் சொல்லிட்டு சொல்றாரு. ரப்பர் மாதிரி ஆயிடுமாம் வந்து. ரப்பர் இப்ப நரம்புகள் என்ன பண்ணுமாம்? ரப்பர் மாதிரி ஆயிடனுமாம் வந்து. இப்ப ரப்பர் வந்து இப்படி இருக்குது வந்து. அது இழுத்தா இப்படி லூஸ் ஆயிடும்ல. அது மாதிரி வந்து தோப்புக்கர்ணம் போட்டோம்னா, அது அப்படி வந்து அந்த நரம்புகள் வந்து இழுத்துட்டு போயிடுச்சுன்னா, எந்த நோயும் வராதுப்பா. அப்பனே, பின் வயதாக வயதாக, பின் நரம்புகள் சுருங்கிக்கொண்டே, சுருங்கிக்கொண்டே. இதனால், அப்பனே, எவ என்று அறிய, பின் ரத்த ஓட்டமும் கூட. அப்பனே, நிச்சயம் தண்ணீர் கூட சிறிது. எவை என்று புரிய. அப்பனே, புரிந்துகொள். அப்பனே, இதனால் அங்கங்கு அடைப்பு ஏற்பட்டு விடுகின்றது. இதனால், அப்பனே, நிச்சயம் தண்ணீர் கூட. அது மட்டுமில்லாமல், அப்பனே, பின் சீராக எவ என்று கூற, வயதும், நிச்சயம் தண்ணீர் எவை என்று அறிய, பின் அதிவேகமாக எதை என்று புரிய. அதனால்தான் எனக்கு அவ்வளவு வயது, இவ்வளவு வயதெல்லாம், அனைத்தும் கூட. இதனால், எவை என்று அறிய, அப்பனே, இவ்வாறு விழுகின்ற பொழுது, அப்பனே, பின் நரம்புகள் எவை என்று புரிய, நிச்சயம் தண்ணீர் கூட. சுலபமாக, அப்பனே, நிச்சயம் தண்ணீர் கூட. அப்பனே, எவ்வாறு என்பது விரிவடையும். அப்பனே, இதனால், அப்பனே, நிச்சயம் தண்ணீர் கூட. ஆழ்ந்த சிந்தனை, இன்னும் பின் தியானத்தில் செல்லுதல், இன்னும் ஞானத்தை உணர்ந்து கொள்ளலாம். அப்பனே, அப்பனே, அனைத்தும் சொல்லிவிட்டாலும், அப்பனே, நிச்சயம் மனது ஏற்காதப்பா பல மனிதர்களுக்கு. அதனால், அப்பனே, பொறுத்திருந்தால், இதைப்பற்றி இன்னும் அறிவிப்பேன். இப்பொழுது போதும்.
5. அன்னை லோபா முத்ராதேவி, உடனுரை, தந்தை அகத்தீசனே, கரிவலம் வந்தநல்லூர், ஒப்பனை அம்மாள், உடனுரை, ஐயன் பால்வண்ணநாதர், திருக்கோவில், தங்கள் சன்னதியும் உள்ளது. லட்சுமணர், ஊர்மிளாதேவிக்கு தனி சன்னதியும் உள்ளது. இதன் மகத்துவம் அறிய, அருள் புரிய வேண்டும், எம் தந்தையே.
குருநாதர்: அப்பா, எது என்று அறிய, பல எவை என்று கூட, தேவாதி தேவர்களும் வந்து சென்றுதான், அப்பனே, இத்திருத்தலத்திற்கு, அப்பனே, பல வகைகள் கூட, பின் நன்மைகள். அப்பனே, பின் வேண்டியதை, பின் வேண்டியவாறு, அப்பனே, பின் இறைவன் கொடுப்பான். அப்பா, நிச்சயம், அப்பனே, சிறப்பு தளம். அப்பனே, பின் யானும் வந்திருக்கின்றேன், இத்திருத்தலத்திற்கு. அப்பனே, இன்னும், அப்பனே, ரிஷிகளும், குருமார்களும், இன்னும், அப்பனே, பலவற்றை, அப்பனே, பின் இந்திரனும், அப்பனே, நிச்சயம் என்று கூட, தரிசனம் செய்து, பல வகைகள் கூட, அப்பனே, சாபத்தை, பின் நீக்கிக் கொண்டார்கள். இதனால், அப்பனே, பல வகைகள் மனிதர்களுக்கு சாபத்தை, அப்பனே, நீக்கும் ஒரு தலமாகவே, சிறந்து விளங்குகின்றது என்பேன், அப்பனே.
6. ருத்ராட்சம், வில்வம், துளசி, வேம்பு, அருகம்புல், பசுஞ்சாணி. பதிலாக விபூதியிட்டு, தண்ணீரில் ஊற வைத்தால், புளித்து நாற்றம் வருகிறது. எப்படி குடிக்க முடியும்? வயிறு கெட்டு விட்டது என மருத்துவர் சொல்கிறார்கள்.
எது என்று அறிய, அப்பா, ஒன்று சொல்கின்றேன். அப்பா, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இவ்வாறகத்தான் அனுதினமும் அருந்தி கொண்டிருக்கின்றார்கள் மனிதர்கள். அப்பனே, சொல்லிவிட்டேன். ஆனால், நிச்சயம் ஏனப்பா, எவை என்றறிய, மூக்கிற்கு, அப்பனே, நிச்சயம் இவைதன் எவ்வாறு என்றெல்லாம். அப்பனே, பின் எதை என்று கூற, பின் வாசனை வருவதில்லையா? ஆனாலும், அதில் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ரசாயனம் கலந்து விடுகிறார்கள் என்பேன், அப்பனே. [என்ன சொல்றாரு தெரியுங்களா? டெய்லி நம்ம வந்து சிலவற்றை வந்து, அது என்ன பண்ணுதுன்னா, அது வாசனை வராம இருக்க என்ன பண்ணிருக்காங்க வந்து, அந்த கப்பு வராம, ஏதோ ஒன்னு போட்டுறாங்கப்பா. அதையே நீ சாப்பிட்டு இருக்கும் பொழுது, இதை சாப்பிடாம இருக்கறதுக்கு வந்து. என்றார். பின் நிச்சயம் தன்னில் கூட, உடலே ஒரு துர்நாற்றம் தானப்பா. நிச்சயம், அப்பனே, எவ என்று கூற, பின் துர்நாற்றத்தை வைத்துக்கொண்டு, பின் வீசி விடுவதுதானே சுடுகாட்டில். அப்பா, உடம்பே ஒரு துர்நாற்றம். துர்நாற்றம் தான் அடிக்குது. துர்நாற்றம் அடிக்குதுன்னு போய் எடுத்துட்டு போயிட்டு, அப்பனே, ஆனால் சுத்தி செய்கின்றோம் அல்லவா? அனுதினமும் நீராடி, அப்பனே, நிச்சயம் அறிவு வளரட்டும். அப்பனே, ஞானம் பெருகட்டும். அப்பனே, இன்னும் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம், நிச்சயம் பின் தெளிவாகட்டும். சொல்லிவிட்டேன். ஆழ்ந்து நீங்கள் தான் சிந்திக்க வேண்டும். அப்பா, நான் சொல்லிட்டேன். அது கூட கண்டுபிடிக்கலைன்னா, நான் என்ன பண்றதுன்றது வந்து, நிச்சயம் ஆழ்ந்த சிந்தையில் இருக்க வேண்டும். எவ்வாறு, ஏது, அகத்தியன் சொன்னான் என்றெல்லாம், நிச்சயம் தண்ணீர் கூட, குருநாதர் சொல்லிவிட்டான். எப்படி, ஏது என்று, பின் ஆழ்ந்து, பின் செல்ல வேண்டும். நிச்சயம் விடை தெரியும். அப்படி இல்லை என்றால், நிச்சயம் யானே சொல்வேன்.
7. அகத்திய பெருமானை பணிகின்றேன் ஐயா. ஞானாலயத்தின் மூலமாக வெளியிட்ட புத்தகத்தில், நமது ஜாதகத்தில் உச்சம் அல்லது ஆட்சி பெற்ற கிரகத்தில் இருந்து, நமது உயிர் வந்திருப்பதாக சொன்னீர்கள். தற்போது சித்தனருள் வாக்கில், இடைக்காடர் பெருமான் சந்திரன் நின்ற ராசி அதிபதி கிரகத்திலிருந்து, நமது உயிர் வருவதாக சொன்னாங்க. இதை எப்படி புரிந்து கொள்வது?
குருநாதர்: இதை இன்னும் விளக்கமாக. அதனால்தான், பின் அடிப்படை தத்துவமே மனிதனுக்கு தெரியவில்லை. அடிப்படை தத்துவமே தெரியாமல், இறைவனை வணங்கினாலும், நிச்சயம் அதனால்தான், அடிப்படை தத்துவங்கள் பலர், பின் பல பல காலத்தில், அவ்வாறு நிச்சயம் தன்னில் கூட, எவ்வாறு என்பதை எல்லாம், பின் யுகங்களாக, நிச்சயம் தெரிவித்து, எவை என்று கூற, அறிவில், அதாவது, விஞ்ஞானம் பூர்வமாகவே, நிச்சயம் பின் இறைவனையும், நிச்சயம் தன்னில் கூட, எவ்வாறு, பின் எவ்வாறு என்பதை எல்லாம், நிச்சயம் வடிவமைத்து, அழகாக. ஆனாலும், இன்றைய காலகட்டத்தில், அதுவும் மாறிவிட்டது. இதற்காகத்தான் சொன்னேன். எவ்வெவ் கிரகத்தில் மனிதன் வருகின்றான் என்பதை எல்லாம், நிச்சயம் தன்னில் கூட, இன்னும் இப்பொழுது பத்தாதப்பா. பின் நேரங்கள், [அது இப்ப வந்து சொன்னாலும் போதாது. அதை சொல்லிட்டார் வந்து. அது ஏதாவது எங்கனா ஒரு தளத்துல வந்து விவரிப்பார். அவர் வந்து.]
8. எல்லை இல்லா அருள் பெருங்கடல் அகத்திய மாமுனிக்கு நாயின் கடையோனின் அன்பு வணக்கங்கள். சிவபக்தன் தாயின் மீது பேரன்பு கொண்ட ராவணனின் பெருமைகளை எடுத்துரைத்தீர்கள். ஆனால் அவரை அழிக்க ராமனுக்கு ஆதித்த ஹிருதயம் உபதேசித்ததும் தாங்கள்தான். ஏன் இந்த முரண்பாடு?
குருநாதர்: அப்பா, எதை எவை என்று அறிய, அப்பா, இருவருமே நண்பர்கள். ஆனால் பிரிந்துவிட்டால் எவ்வாறு? ஆனாலும் ஒருவனுக்கு, ஐயோ, பாவம், பின் நண்பனை பிரிந்து விட்டேன் என்று ஒருவன், நிச்சயம் மீண்டும் உண்மையான நண்பர் இருந்தால், உண்மையான நண்பர்களாக இருந்தால், நிச்சயம் அவருக்கும், ஆனால் ஏதோ ஒரு விதத்தில் சண்டைகள். ஆனால் தூர் தூரமாக சென்றுவிடுகிறார்கள். ஆனாலும் அவன் மனதும், இவன் மனதும், எது என்று புரிய. அப்பா, இதற்கு என்ன என்று, நிச்சயம் மீண்டும் கேள். விவரமானதை, இவனை பிடித்து, இதனை, இவனையும் பிடித்தும், எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, எதற்காக, எவை, எதை என்று புரிய. அப்பப்பா, அறிந்தும் கூட, ராவணன் எதை, எதை என்று எண்ணி, தன்னைப்போல், அறிந்தும் கூட, சிவபக்தனாக இருந்து, நிச்சயம் தன்னில் கூட, என்னைப் போன்று, பின் எவர் வந்தாலும், நிச்சயம் வெல்ல முடியாது. நான்தான் முதல் சிவபக்தன் என்று, எதை என்று கூற, பின் அதாவது, ஈசனிடத்திலே முறையிட்டு, நிச்சயம் என்னை வெல்லக்கூடாது, ஈசனே என்றெல்லாம், எது என்று புரிய. அதனால், இவ்வாறாக, நிச்சயம் பின் பலபேருக்கு உபத்திரவம் செய்திருந்தான். எதை என்றறிய, பின் அறிந்து கூட, இதனால், நிச்சயம் எவ்வாறு வெற்றி கொள்வது என்று, சிறிது விளையாட்டுத்தான், அப்பா, முடிந்துவிட்டது. அப்பனே, பின் இதைத்தன், பின் ஆழமாக சென்று சொன்னால்தான் புரியும். அப்பா, இல்லையென்றால் புரியாது. அப்பா, எதை, ஏது என்று கூற, பிறவி நோக்கம் அறிய, அருள் கூர்ந்து, ஏதாவது ஒரு வழி அருளும். பிறவி நோக்கம் அறிய, அருள் கூர்ந்து, ஏதாவது ஒரு வழி காட்ட வேண்டும். அப்பா, நிச்சயம் உண்டு. அனைவருக்குமே பிறவியின் நோக்கம் என்பது தெரிந்து கொள்வதற்கு சாதாரணம் இல்லை. அதாவது, கல்வி கற்றால், அதாவது, எத்தனை வருடங்கள் நீங்கள் கல்வி கற்றீர்கள், அதற்கேற்ப, நிச்சயம் பின் வேலையும் அமைகின்றது. அதாவது, வேலைக்கும், பின் எவை என்று கூட தேடுகிறீர்கள். தொழிலுக்கும் தேடுகிறீர்கள். அதாவது, இதைத்தான் நான் சொல்வேன். ஆனாலும், உண்மை ஞானப்பொருளை தேடினால், நாங்களே அவனை, பின் வரவழைத்து, மரியாதையுடன் சொல்வேன். இதற்காகத்தான் நீ வந்தாய் என்று. ஆனால் முதலிலே சொல்லிவிட்டால், அதாவது, பின் ஒவ்வொருவருக்கும், நிச்சயம் திருமணம் செய்ய ஆசை, இன்னும் குழந்தை பாக்கியங்கள் என்றெல்லாம். ஆனாலும், நிச்சயம் இவையெல்லாம், இதெல்லாம் இருக்கின்ற பொழுது, நிச்சயம் தன்னில் கூட, துன்பம் ஒன்று கொடுத்து, நிச்சயம் பின் எவை என்று புரிய. அப்பொழுதுதான், நிச்சயம் பின், அதாவது, கடமையை செய்து கொண்டே இருந்தாலே, தானாகவே, நாங்களே முன்வந்து, கடமையை, நிறைவேற்றச் சொல். பின், பிறவியின் நோக்கத்தையும், அறிந்தும் ஏது என்று புரிய. அனைத்தும் சொல்ல, தயார், யாங்கள்.
9. மரம் நடும் பணியை தொடர, தங்களின் அருள் வேண்டுகிறேன்.
குருநாதர்: அப்பா, சிறப்பான வேலை இது. ஆனால் இவையெல்லாம் கேட்கக்கூடாது. அப்பா, செய்ய வேண்டும். செய்துவிட்டு, நிச்சயம் கேட்க வேண்டும். இத்தனை யான் செய்துவிட்டேன் என்று.
10. தந்தையே, வணக்கம். தந்தையே, ஏசநாதரின் தாய் மரியாளின் வாழ்க்கை மற்றும் இப்பொழுது அவர் இறைவனிடம் இருக்கும் நிலை. அவர்கள் காட்சி கொடுத்த வேளாங்கண்ணியில் அவர் இருக்கும் இடம். அங்கிருந்து அவர்களின் பிள்ளைகளின் வினைகளை எப்படி தீர்க்கிறார் என்பதை விளக்கிக் கூறுங்கள், தந்தையே.
குருநாதர்: ஏது என்று புரிய, பின் பின் உலகத்திற்கு ஒரே தாய், நிச்சயம் ஏது என்று புரிய. புரிந்துகொள், அப்பா, எது என்று கூற, பின் அதாவது, எது என்று புரிய. அப்பனே, எது என்று கூற, இதைப்பற்றி விவரமாக, அதாவது, அடிப்படை அடிப்படை விஷயங்களை, பின் தெரிந்து கொண்டால்தான், அப்பனே, நீயே சொல்லிவிடு. அப்பனே, எவை என்று அறிய, இதனால், அடிப்படை பின் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். பின் இவ் அடிப்படை தெரிந்தால் மட்டுமே, இதை யான் சொன்னாலும் புரியும். அப்படி இல்லை என்றால், அங்கு அப்படி சொன்னார்களே, இங்கு இப்படி சொன்னார்களே, இங்கு நண்பன் என்கிறார்களே, இங்கு தந்தை என்கிறார்களே, என்ன என்று குழப்பிக் கொள்வது, குழப்பிக் கொள்வார்கள். எதை என்று அறிய, அதனால், நிச்சயம் தன்னில் கூட சொல்கின்றேன். ஆனால் பெரிய சக்தி அங்கு அறிந்தும், எவை என்று அறிந்தும் கூட, அனைத்தும் ஒன்று இணைந்து, நிச்சயம் தன்னில் எதை என்று கூற, ஒவ்வொன்றாக அறிந்தும் கூட, பின்னே அங்கிருந்து பார்த்தால், ஒரு ஞான ஒளி தெரியும். ஆனாலும், அது சிறந்த எதை என்று புரிய, பின் உண்மை ஞானிக்கே தெரியும். அதனால்தான், அங்கு இருந்தாலே, பல வழிகளில் கூட, பின் உண்மை நிலையில் தெளிவுபட்டு, அனைத்தும் கிடைக்குமாம். அவன் ஞான ஒளி, பின் இந்நாளில்தான் படும் என்பது சித்தர்களுக்கு மட்டுமே தெரியும். இதனால், எவ்வாறு என்பது அன்றைய காலகட்டத்தில் மக்கள் ஓடி ஓடி, நிச்சயம் ஆண்டுகள் ஆண்டுகளாக அங்கே தங்கி, அறிந்தும் எதை என்று புரிய, பின் தெரியுமா, தெரியுமா என்றால், ஆனால் ஆண்டிற்கு ஒருமுறை தெரியும். எதை தன் ஆனாலும் அழிந்தும் விட்டது. மீண்டும் பின் வந்தது, எதை என்று மீண்டும் பின் அழிந்துவிட்டது.
11. ஐயா அகத்திசா அம்மா லோபாமாதா, தங்கள் திருவடி சரணம். உலகம் மேன்மை பெற, ஐயா, தங்கள் திருவாக்கில், அக்னியில் பிறந்த மாதா, எக்ஞசேனை, பாஞ்சால ராஜகன்னி, பாண்டவர் துணைவி, திரௌபதி, அம்மனின் சிறப்புகள் மற்றும் பெருமைகளை கேட்க வேண்டும் என்ற இன்னும் ஆவல்.
குருநாதர்: பெருமைகள் இவ்வுலகத்தை காக்க வந்தவர்கள் பெருமைகள் பற்றி எல்லாம் சொல்வேன். ஒவ்வொன்றாக ஒவ்வொரு திருத்தலத்திலும் சொல்வேன். அதை நன்கு, அதாவது, அதனால்தான் மனிதனுக்கு சக்திகள் ஏற்றப்பட வேண்டும். எப்படி ஏற்றுவது? இவ்வாறாக உலகத்திற்கு பின் வாழ்ந்தவர்கள் நிச்சயம் தன்னில் கூட இருக்கின்றார்கள். அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டாலே சக்திகள் அதிகமாக, அதிகமாக. அதேபோல், நிச்சயம் பின் ஒருவனுக்கு பணம் அதிகமாக, பின் அதாவது கேட்பான். எனக்கு பணம் அதிகமாக வரும். வேலையை நிச்சயம் தன்னில் கூட, அதாவது சிறப்பான ஒன்றை, பின் நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட சென்று, பின் அங்கு செய்தால், பின் பணம் அதிகமாக வரும் என்பது எல்லாம் நிச்சயம் அனைவரும் உணர்ந்ததே. எவ்வாறெல்லாம் இவ்வுலகத்தை, பின் ஆண்டார்கள் என்பவை எல்லாம், அவர்களைப் பற்றி எல்லாம் நிச்சயம் கூட வரலாறு தெரியாமல் போய்விட்டது. பின் வரலாற்றை எல்லாம் தெரிந்து கொண்டால், நிச்சயம் தன்னில் கூட உடம்பும், பின் நிச்சயம் தன்னில் கூட சக்தியாகும். இதனால் அனைத்தும் உணர்ந்து கொள்ளும் சக்தி பிறக்கும், தெளிவடையும். பக்திக்குள் உள்நுழைந்து, இதுதான் தர்மம் என்று நிச்சயம் தன்னில் கூட. இதனால்தான் அங்கும் இங்குமாக எதை என்று அறிய, பின் பல ஞானிகளைப் பற்றி தெரிவித்துக் கொண்டே இருக்கின்றேன். ஞானிகளைப் பற்றி தெரிந்து கொண்டாலே, அதாவது உண்மை பற்றி எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, பின் கல்விகளில் நிச்சயம் தன்னில் கூட வினா கொடுத்தாலும், அதற்கு சரியாக பதில் எழுத வேண்டும். எப்படி? நிச்சயம், அதாவது, நிச்சயம் படித்தால் மட்டுமே. அதேபோலத்தான் உண்மை ஞானக்காரர்கள் இங்கு இருக்கின்றார்கள். எதை என்று புரிய, அவையெல்லாம் நிச்சயம், பின் தெரியாமல், தெரியாமல், அதாவது மனிதன் பிழைத்துக் கொள்வான் என்றெல்லாம், நிச்சயம் எவை என்று கூற, பல வழிகளில் சுவடிகள் எழுதி வைத்திருந்தார், எழுதி வைத்திருந்தார்கள். அன்றே ஆனாலும், இதையெல்லாம் நிச்சயம், பின் மனிதன், பின் கலியுகத்தில் தெரிந்து கொண்டால், நிச்சயம் தன்னைத்தானே ஆள்வான் என்று அனைத்தும் புதைந்து கிடைக்கின்றது. மர்மமாகவே இருக்கின்றது. இத்தேசமானது, அதைப்பற்றி எல்லாம் சொல்கின்றேன். உலக இயக்கம் எப்படி? எதை இன்றைய கோள்கள் இயக்கம் எப்படி? ஏது என்றெல்லாம் தெரிவிக்கின்றேன். பொறுத்திருக்கச் சொல்.
12. ஓம் அன்னை லோபாமுத்ரா, தந்தை அகத்தீசர் திருவடிகளே சரணம். தந்தை, தந்தையே, புற்றுநோய்க்கு மருந்து தெரிவித்து மக்களை காக்க வேண்டும். சமீப காலங்களில் நிறைய இறப்புகள், அதிலும் பெண்கள் அதிகம்.
குருநாதர்: அறிந்தும் ஏது என்று புரிய, இப்பொழுதெல்லாம் அனைத்தும் ரசாயனமாகவே போய்விட்டது. அதாவது, மது என்று சொல்கின்றார்களே, அதில் இன்னும் ஏது என்று புரிய, பல வகையிலும் கூட, பின் எதை என்று அறிய, பின் பின் சிலவற்றை கலக்குகின்றார்கள். ஆனாலும், பின் என்னவென்று மனிதனுக்கு தெரிவதில்லை. அதுவே பல நோய்கள். அது மட்டுமில்லாமல், இன்னும் ரசாயனங்கள் எல்லாம் இட்டு, ஏது என்று புரிய, இன்னும் பின் மாமிசத்தில் எல்லாம் கலக்கின்றார்கள். இதனாலும், எவை என்று புரிய, இதனால் எதை, ஏது என்று புரிய, இன்னும் எதை என்று புரிய, இவ்வாறாக, பின் கலந்து கலந்து உட்கொண்டாலே, அறிந்தும் கூட, இன்னும் பின், அதாவது, கதிர்கள் மேலிருந்து உடனடியாக தாக்கி, ஆனாலும், பெண்களை ஏன் தாக்குகின்றது என்று யாராவது எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட, எவ்வாறு என்பதை எல்லாம், இதனால் இன்னும் பின் ஏற்கனவே, பின் முன் உரைத்தே விட்டேன். அனைத்தும் இவையெல்லாம் அதிகமாகும் கலியுகத்தில் என்று, ஆனால் இவ்வாறாக, பின் இவை, பின் அதாவது, அதிகமாகின்ற பொழுதுதான், பின் இவற்றிற்கெல்லாம் காரணங்கள், நிச்சயம் போதை பொருட்களே என்பேன். அவை தடுத்திட வேண்டும். அதனால்தான் மக்களை ஏற்படுத்தி, அனைவருக்கும், பின் விழிப்புணர்வு ஏற்படுத்தி, பக்தி கொள். ஏனென்றால், பின் நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறாகவே, நிச்சயம் தன்னில் கூட சென்று கொண்டிருந்தால், அனைவரும் நிச்சயம், பின் எதை, ஏது என்று கூட, எதையும் கவனிக்க மாட்டார்கள். இதனால்தான், நிச்சயம் அதை நிறுத்துவதற்கு, பின் இங்கே ஆட்கள் இருக்கின்றார்கள். யார் என்றெல்லாம், நிச்சயம் ஏற்படுத்தி, அதை நீக்குவேன். அதிவிரைவிலே, இதனால், நிச்சயம் தண்ணீர் கூட நல்லாற்றலை ஏற்படுத்த, பல வகையான மூலிகைகள் கூட இருக்கின்றது. அதை எடுத்துக்கச் சொல்.
13. ஐயா அகத்தீசா அம்மா லோபாமுத்ராதேவி, தங்கள் திருவடி சரணம். உலக மக்கள் மேன்மை பெற, மண்ணும் நீரும் கொடுத்து, மக்களை காத்த ஐயா வைகுண்டர் திருவருளை, முத்தமிழ் பிரியரும், திடமனம் கொண்டவருமான ஆகிய தாங்கள் திருவாக்கில் கேட்க, மிக ஆவல் கொண்டேன். எளியவனுக்கு அன்பு கூர்ந்து, இயம்பி அருள் புரிக!
குருநாதர்: அப்பனே, எது என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அவனும் ஏது என்று புரிய, பின் மக்களை காக்கவே வந்தான். அப்பா, மக்கள் திருந்துவார்கள் என்று எண்ணினான். ஆனாலும், அப்பனை பின் திருந்தவில்லை. அதனால், அப்பனே, அழகாக புத்தகத்தில் எழுதி வைத்துவிட்டான். இப்படித்தான் இருப்பார்கள் கலியுகத்தில் என்று. ஆனாலும், அவனும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றான். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் உலகத்தை எப்படியாவது காத்திட வேண்டும் என்று, நிச்சயம், அப்பனே, பின் அவனுக்கும் பல அருள்கள். அப்பனே, நிச்சயம், பின் எவை என்று புரிய, அப்பனே, கொடுத்துவிட்டோம். ஏற்கனவே, அப்பனே, பின் அவனும் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, இதனால், பின் வருங்காலத்தில், அப்பனே, உலகத்தை திருத்துவான். அப்பனே, எழுந்து வரச் சொல்லி இருக்கின்றேன். அவனையும் கூட.
14. திருச்சுனையில் இருக்கிற பாண்டியம்மாளின் உடல்நிலை இன்னும் சீராகவில்லை. அவருக்கு உதவுமாறு சுவாமியிடம் வேண்டிக்கொள்ளுங்கள்.
குருநாதர்:நிச்சயம் தன்னில் கூட, எவை என்று கூற, எப்பொழுதே, நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று போய் சேர்ந்திருக்க வேண்டும். காப்பாற்றி விட்டேன். அதனால, இன்னும் உடல் சம்பந்தமான பிரச்சனைகள், எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பின் ஏதோ ஒரு விஷயத்திற்காகவே, பின் அவளை, பின் வைத்திருக்கின்றேன். அவ்வளவுதான்.
15. எங்கள் சுவாமியிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால், அவர் எங்கள் அனைவருடனும் இருந்து, எங்களை விட்டு விலகாமலும், தன் கரங்களில் இருந்து எங்களை விடுவிக்காமலும் இருக்க வேண்டும் என்பதை தயவுசெய்து, அதில் எங்களுக்கு உதவுமாறு அவரிடம் வேண்டிக்கொள்ளுங்கள்.
குருநாதர்: எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பின் அனைத்தும், பின் அன்பே, தெய்வம்.
16. அசைவும் உண்டு இருந்து விட்டதற்கு பின், இப்பொழுது என்னவென்றால், கையும் காலும் எல்லாம் பிடித்து இழுக்கிறது. மருத்துவர் வந்து குறைபாடுகள் இருக்கிறது என்கிறார். என்ன செய்வது?
குருநாதர்: அப்பனே, உன்னை பார்த்து கேட்கின்றேன். ஒரு கேள்வி. அப்பா, பின் நிச்சயம் தன்னில் கூட, அது அதாவது, அதாவது, பின் ஒரு உயிரை கொல்லுகின்ற பொழுது, எவ்வாறெல்லாம் துடிக்கும்? கால்களாக தனியே எடுத்து, கைகளாக தனியே எடுத்து, அதாவது, கண்களையும் தனியே எடுத்து, இதனால், பின் அதை உட்கொண்டவன், நிச்சயம் தன்னில் கூட, பின் எப்பொழுதாவது ஒரு நாள், அது எவ்வளவு, பின் அவஸ்தை படுகின்றதோ இருக்கின்றதோ, அதேபோலத்தான். நிச்சயம் தின்று கொண்டிருந்தாலும் சரி, நிச்சயம் பின் நிறுத்தினாலும் சரி, நிச்சயம் எவ்வாறெல்லாம் ஆனாலும், பின் அதை அவனை விட்டும் செல்லாது. அவனை பின் சான்றோர்கள் விட்டும் செல்லாது. அனுபவித்தே ஆகவேண்டும்.
17. மேலை நாடுகளில் வசிப்பவர்கள் அசைவம் தான் உண்கிறார்கள். அவர்களுக்கு ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இல்லை.
குருநாதர்: ஏது என்று புரிய, அப்பா, இதனைத்தான், அப்பனே, இதனால்தான், பின் சில விஷயங்கள் முட்டாள்தனமாகவே கேட்கின்றார்கள். அப்பா, ஏனென்றால் சில கிரகங்கள், அப்பனே, ஏன் இங்கு திருத்லம் அமைத்தார்கள்? இங்கே கீழே, மேலே, எங்கு, எதற்காக என்றெல்லாம் இதை விஞ்ஞான பூர்வமாகவே விளக்குகின்றேன். அடுத்தடுத்த வாக்கில், நிச்சயம் தன்னில் கூட, அனைத்தும், பின் வாக்குகளை ஓதச் சொல். நிச்சயம் தெரிந்து கொள்வார்கள்.
18. தென்காசி கீழப்பாவூர் வாலீஸ்வரர் கோயில் பற்றி தெரிவிக்கவும்.
குருநாதர்: அப்பா, எதை என்று புரிய, ஒரு ஞானி இருந்தான். அப்பா, அங்கு அறிந்து கூட, இதனால், அப்பனே, பின் கலியுகத்தில், அப்பனே, முதலிலே, எது என்று கூற, பல மக்கள் போராட்டமாக, பல வழியிலும் கூட, ஏது என்று புரிய, எதை என்று அறியாமலே, நிச்சயம் தன்னில் கூட, கூட்டம் கூட்டமாக, எவை என்று கூற, மடிந்து கொண்டு இருந்தார்கள். நோய்களாகவே அறிந்தும், ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, அவன் முனியானவன், எதை என்று கூற, அங்கே இருந்து, பல வகையிலும் கூட, பின் நிச்சயம் பல நோய்களையும் குணப்படுத்தினான். சென்று கொண்டே இருந்தாலே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எவை என்று கூட, பின் அனைத்தும் மாறும் என்பேன். அப்பனே, வலிகள், உடம்பில் உள்ள வலிகளும், மனதில் உள்ள வேதனையும் கூட, என்பேன். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, நிற்காமல், ஏனென்றால், அப்பனே, அவன் ஒரு முனிவன், அப்பனே, இருந்து, அனைத்தும் காத்துக் கொண்டிருக்கின்றான். அப்பா, நிச்சயம் தன்னில் கூட.
19. அனந்த கோடி அண்டங்கள் பிரம்மாண்டத்தில் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றது. அங்கேயும் இது மாதிரி கோவில் மற்றும் மனிதர்கள் உள்ளார்களா?
குருநாதர்: அப்பா, இவையெல்லாம் விஞ்ஞானபூர்வமாக ஒரு பொருள் இடத்தில் எடுத்து உரைக்கின்றேன். அதனால் பொறுத்திருக்கச் சொல். இன்னும் மனிதனுக்கு பல விஷயங்கள் அறிந்து கொள்வதற்கு இருக்கும். ஆனாலும், இதற்கு விவரமான பதில், பின் நிச்சயம் உண்டு என்பேன். அப்பனே, இதனால், அதிவிரைவிலே, நிச்சயம்
20. ஐயா, மனிதனின் பாவம் தீர்ந்துவிட்டதை எவ்வாறு அறியலாம்?
குருநாதர்:அப்பா, பாவம் எங்கிருந்து வருகின்றது? புண்ணியம் எங்கிருந்து வருகின்றது? அப்பா, இதனால்தான் அடிப்படை, நிச்சயம் தன்னில் கூட தெரிந்தே கொள்ள வேண்டும். இவ் அடிப்படை, நிச்சயம் தன்னில் கூட, இன்னும், அப்பனே, விவரமாகவே சொல்கின்றேன். அப்பனே, ஒரு இடத்தில் வைத்து, அப்பனே, இதனால், நிச்சயம் தன்னில் கூட, பாவமாவது ஏது? புண்ணியமாவது ஏது? பாவமாவது எப்பொழுது தீரும்? புண்ணியமாவது எப்பொழுது தீரும்? அப்பனே, இவையெல்லாம் கணக்காகவே நகர்ந்து கொண்டிருக்கின்றது. இதற்கு விடை, , அதிவிவரமாகவே, விஞ்ஞான பூர்வமாக எடுத்துரைத்தால் தான், அப்பனே வருங்காலத்தில், அப்பனே, அப்படியே பின்பற்றிக் கொண்டால், பாவம் அதை செய்தால், பாவம் இதை செய்தால், புண்ணியம் என்று ஆனாலும், விஞ்ஞான முறையாகவே, அப்பனே, நான் எடுத்து உரைக்கிறேன்! அப்பனே, சுவடிகளில் கூட, அப்பனே, அதையும் மறைத்துவிட்டு, ஆனாலும், அதையும் எடுத்துக்கொண்டு சென்று விட்டார்கள். அப்பனே, அனைத்தும், பின் நிச்சயம் தன்னில் கூட, யார் இவை செய்தவை? அப்பனே, பின் இறைவனை வணங்கி தான், அப்பனே, செய்து கொண்டேன். ஆனாலும், இதுவும் ஒரு இடைவேளை, அப்பனே, பின் பயன்படுத்திக் கொண்டான். பொறுத்திருக்கச் சொல். அவனுக்கு புரியும். எது என்று அறிய, நிச்சயம் இறைவனுக்கு புரியும். எவை என்று அறிய, பின் நிச்சயம் இறைவனுடைய தலையிலிருந்து, பின் எவை என்று கூற, பின் அனைத்தும் சொல்லித் தர போகின்றேன். மனிதனுக்கு என்றெல்லாம், இறைவனிடத்திலே, பின் கேட்டு, எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் வந்துவிட்டேன். இதனால் கவலையில் வேண்டாம். நிச்சயம் தன்னில் கூட பொறுத்திருக்கச் சொல். அறிந்தும் ஏது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட வரும் காலங்களில், விவரமாக வாக்குகள் எல்லாம் வரும். அப்பொழுது தெரிந்து கொள்ளலாம், புரிந்து கொள்ளலாம், தன்னையும் வெல்லலாம்.
21. ஐயா, உலகத்தில் நடக்கும் விபத்துகளை தடுக்க என்ன வழி செய்ய வேண்டும்?
குருநாதர்: அப்பா, பின் அதாவது ஏது என்று அறிய, நிச்சயம் இவையெல்லாம் முடியாத காரணம். ஏனென்றால், இறைவன் ஒரு உயிரை அனுப்புகின்றான். எப்பொழுது எடுப்பான் என்பவை எல்லாம், நிச்சயம் இறைவனுக்கு மட்டுமே தெரியும். அதனால், இவையெல்லாம், நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, நிச்சயம் தன்னில், இறைவனின் இடத்திலே இருக்கின்றது. எதையும் எப்படி, நிச்சயம் பின் அறிவியல் வழியாகவே விளக்குகின்றேன். பொறுத்திருந்தால், இதனால், பின் இவையெல்லாம், பின் சாதாரணமாக நடந்தே தீரும். எவை என்று அறிய, பின் எதை என்று புரிய, இவையெல்லாம் நிறுத்தவும் முடியாது. ஏனென்றால், நிச்சயம் அதாவது, விபத்துக்கள் ஏன் ஏற்படுகின்றது என்றால், நிச்சயம் எதைப் பற்றியும் கூட, அதாவது இவையெல்லாம், நிச்சயம் பின், அதாவது பின் எவை என்று புரிய, சில மாந்திரீகத்தால் தான், நிச்சயம் தன்னில் கூட, விபத்துக்கள் ஏற்படுகின்றது. சொல்லிவிட்டேன். இதைத்தான் எப்படி இவ் மாந்திரீகத்திற்கும் கிரகங்களுக்கும் ஒத்து வராது. எப்படி அச்சக்தி, பின் நிச்சயம் ஒவ்வொரு இடத்திற்கு சென்றால், நிச்சயம் தன்னில் கூட, பின் அசக்தி பலமாக விழுகின்ற பொழுது இசக்திக்கும் அசக்திக்கும் பிடிக்காது. நிச்சயம் அங்கேயே எதை என்று புரிய, நிச்சயம் இதனால் இவ்வாறு விபத்துக்கள், பின் நிச்சயம், பின் நடப்பவர்கள் எல்லாம், நிச்சயம் தன்னில் கூட, மாந்திரீகத்தில் ஒன்று, இவன் நுழைந்திருக்க வேண்டும். இல்லையேல் தொடர்பு இருக்க வேண்டும். அவ்வளவுதான் சொல்லிவிட்டேன். இன்னும் விவரமாக மாந்திரீகத்தை விஞ்ஞான வடிவாக விவரிக்கின்றேன்.
22. ஐயா, ஒரு மனிதன் தீவிர வழிபாடு செய்வதால், இறைவனை அடைய முடியுமா? அல்லது உலகத்தில் உயிர்களுக்கு சேவை செய்வதே இறை வழிபாடு ஆகுமா? மேலை நாட்டில் ரெட் கிராஸ் போன்றவர்கள், அன்னை தெரசா போன்றவர்களை, இறைவன் அதுபோன்று, இறைவனை அதுபோன்று அடைந்தார்களா?
குருநாதர்: அறிந்தும், பின் இறைவனே, சில கிரகங்களில் இருந்து எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, சில விஷயங்களுக்காக இங்கே அனுப்புகின்றான். இதனால், நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறாக, இறைவனே அனுப்புகின்ற பொழுது, நிச்சயம் பின் அவனை, நிச்சயம் அவளையும், நிச்சயம் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. ஆனாலும், மக்கள் போட்டி, பொறாமைகள் எதை என்று புரிய. ஆனாலும், இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட, இறைவன் அது எப்படி அனுப்புகின்றான் என்பது எல்லாம் இன்னும் அடிப்படையிலே இருக்கின்றது. சொல்வேன், பின் என்னை நம்பியவர்களை நான் கைவிட்டதில்லை. அதனால், நிச்சயம் தன்னில் கூட, எவை என்று கூற, பின் அதனால்தான், பின் புதுமையான வழிகள் எல்லாம் எடுத்து வந்துவிட்டேன். ஏனென்றால், சிறிது காலம், பின் சென்றிருந்தால், அகத்தியன் வணங்கியும் பிரயோஜனம் இல்லை என்றெல்லாம் சொல்லிவிட்டு இருப்பார்கள். ஆனாலும், என் காதால் அதை கேட்டுவிட்டேன். நிச்சயம் அதையெல்லாம் ஏனென்றால், எதை என்று கூட, நாங்கள் கண்டுபிடிப்பது, கண்டுபிடித்ததும், அவ்வளவு சுலபமானது அல்ல. அதையெல்லாம் உங்களுக்கு, பின் தெரிவிக்கின்றேன். என்னை வணங்கியவர்களுக்கு,
பூலோகத்திலே, அப்பா, மனிதனின் பூர்வ ஜென்மம், அந்த ஆத்மா எப்படிப்பட்டது என்பது, தங்களைப் போன்ற சித்த புருஷர்களுக்கு தெரியும். எங்களுக்கு தெரியாது. ஆத்மா இறைவனிடம் எப்படி எண்ண வேண்டும், இதையும் கூட, விஞ்ஞானபூர்வமாகவே விவரிக்கின்றேன். இவையெல்லாம் அடிப்படை ரகசியமாகவே இருக்கின்றது. இதையெல்லாம் அடிப்படையிலே, பின் நிச்சயம் கற்றுக்கொள்ள வேண்டும். நிச்சயம் இவையெல்லாம் கற்று உணர்ந்தால்தான், மற்றவை தெளிவாகவே, தெளிவு பெறுதல், அதி சிறப்பு. நிச்சயம் இதனை அதிவிரைவிலே சொல்கின்றேன். விளக்கமாக.
23. இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் நன்றாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர, இறைவா, நீங்கள் மட்டும் போதும். தங்கள் அருள் மட்டுமே போதும். வேறு எதுவும் தேவையில்லை என வேண்டுவது தவறா? அப்படி வேண்டினால்,
குருநாதர்: எவை என்று புரிய, அதாவது கடமைச் செய் என்றே, நிச்சயம் கீதையில் கூட, அதாவது எதை என்று கூற, பின் அதாவது எவை என்று அறிய, மனைவி, பின் இன்னும், பின் அதாவது குழந்தைகள், இன்னும் இவனைச் சார்ந்து எல்லாம் இருப்பார்கள். ஆனால் இவர்கள் எல்லாம் விட்டுவிட்டு, இறைவா, நீ மட்டும் போதும் என்றால், பின் எவ்வளவு, ஏது என்று புரிய, எதை என்று, இது எவ்வாறு நியாயம்? பின் நிச்சயம் தன்னில்கூட, பின் அதாவது, பின் மனைவி இடத்திலே உண்மை இல்லை. பிள்ளைகளிடத்திலே உண்மை இல்லை. இறைவா, நீதான் வேண்டும் என்று, என்னிடத்தில் உண்மையாக இருக்கப் போகின்றார்கள் மனிதர்கள்.
24. அப்படி வேண்டினால், அடுத்த ஜென்மத்தில் அந்த ஆத்மாவுக்கு ஒன்றுமில்லை என்பதுதான் விதியா? அதை மாற்றக் கூட, நீங்களே போராட வேண்டாமா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், இறைவனிடம் எல்லோரும் சரியான வேண்டுதலை வைக்க உதவும். இறைவா, நீ மட்டும் போதும் என தவறாக வேண்டி யாரும் கஷ்டப்படக்கூடாது என்பதால்,
குருநாதர்: எதை ஏது என்று புரிய, அப்பப்பா, அறிந்தும் கூட, அறிவாளி என்றே நினைத்துக் கொள்கின்றார்கள் மனிதர்கள். எது என்று புரிய, ஆனால் இவ்விஷயத்தில் பல தெளிவுகள் அறிந்தும் கூட, உன் உண்மை எதை என்று அறிய, இவ்வாறெல்லாம் நீண்டு, எவ்வாறு என்பதெல்லாம் ஏன் இறைவனை, பின் வேண்டிக் கொள்வோம் என்பதெல்லாம் கூட தெரியாமல், ஏனென்றால், பின் இறைவன், அதாவது நீ வேண்டிக்கொண்டு, நீ வேண்டிக்கொள்வது எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, எதை என்று கூற, பின் எவ்வாறு என்பதெல்லாம், பின் இறைவன் மனது வைத்தாலும், இறைவன் மனது, பின் வைத்தால்தான், நீயும் கூட அங்கே, பின் நிச்சயம் வேண்டிக்கொள்ள முடிகின்றது. அப்பா, இது யாருக்காவது தெரியுமா? ஏனென்றால், வேண்டிக்கொள்வதும் ஒரு பாவமே என்பேன். அப்பனே, இது யாருக்கு தெரியும்? பின் அறிவாளியாக கேள்வி கேட்டுள்ளீர்கள் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். அப்பா,
25. ஒவ்வொரு கோவிலிலும், ஒவ்வொரு ஊரிலும், சிவபுராணம் படித்து கூட்டு பிரார்த்தனை செய்ய, அகத்தியர் உத்தரவு தர வேண்டும்.
குருநாதர்: அப்பா, இவை நிச்சயம் எடுத்து வரவேண்டும். ஏனென்றால், அறிந்து கூட, உலகம் நிச்சயம் தன்னில் கூட, எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, எதை கற்பிக்கின்றோமோ, அதைத்தான் நிச்சயம் மனிதன் செய்வான். இதனால், எதை என்று கூற, பின் பல வகையில் கூட, பின் கலியுகத்தில், பின் நிச்சயம் மனிதன் அழிவதற்காக, அனைத்து விஷயங்களும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றான் மனிதனே. இதனால், நிச்சயம் தன்னில் கூட, சில விஷயங்கள் நான் சொல்கின்றேன். எப்படி, எப்படி ஊடுருவும் என்பதெல்லாம், பின் மனதை மாற்றினால், நிச்சயம் அனைவரும் தெய்வத்தின் அருள் பெற்றுவிடுவார்கள்.
26. அறிவியல் என்ற பெயரில், அசுர சக்திகள் எல்லையை கடந்துவிட்டன. அதை அழிக்க, வழிகாட்ட வேண்டும். குறிப்பாக, தொலைத்தொடர்பு, கதிர்வீச்சு, செயற்கை உணவுகள், செயற்கை மருத்துவம், இவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, வழிகாட்ட வேண்டும்.
குருநாதர்: நிச்சயம் தன்னில் கூட, அப்பா, அதனால்தான், அதிவிரைவாகவே, நிச்சயம் பல வாக்குகள் வந்து கொண்டே இருக்கின்றது. முதலில், அடிப்படை எல்லாம் தெரிவிக்கின்றேன். பொறுத்திருக்கச் சொல், அவ் அடிப்படை விஷயங்கள் எவையும் கூட, பின் நிறைய எவை என்று கூற, இன்னும் கூடுதலாக, எவை என்று கூற, அறிந்தும் கூட, இதனால், நிச்சயம் இருக்கின்றது. அப்பா, இவையெல்லாம் எப்படி, ஏது முதலில் உருவாகின்றது, எப்படி, அது பின் பின் ஊடுருவு, எதை என்று கூற, மனிதனுக்கு தீங்கு விளைக்கின்றது என்பதெல்லாம் நான் தெரிவித்து, பின்பு, பின் இதனை, பின் எவை என்று கூற, எவ்வாறு தடுப்பது என்பது கூட சொல்கின்றேன். அப்பா, அதனால், கேள்வியும் யானாக இருக்கின்றேன், விடையும் யானாக இருக்கின்றேன். கேட்பதாக, பின் மனிதனாக இருக்கட்டும்.
27. உற்சாகம், செயல் திறன், இவை இரண்டும் ஒரு செயல் தொடங்க, பெரும் பங்களிக்கின்றன. ஆனால், இறையருளும், குரு அருளும், தொடங்கிய ஒவ்வொன்றினை தொடர முடியாமல், தடைபட காரணம் என்ன, தந்தையே?
குருநாதர்: ஏன், எதற்கு, இவையும் கூட, இப்பொழுது யான் சொன்னால், பின் பாவம் என்று சொன்னால், நிச்சயம், பின் மனிதன் வருங்காலத்தில் ஏற்றுக்கொள்ள மாட்டான். புண்ணியம் என்று சொன்னாலும், ஏற்றுக்கொள்ள மாட்டான். ஏனென்றால், இதற்கு இவையெல்லாம் கேட்பான் என்று, நிச்சயம், பின் கலியுகத்தில், அறிந்தும், ஏது என்று கூறிய மனிதன், இவையெல்லாம், பின் நிச்சயம் கேட்பார்கள் என்பதெல்லாம் யான் உணர்வோம். அதனால், இதற்கு அறிவில், பின் நிச்சயம் தன்னில் கூட, நான் கண்டுபிடித்திருக்கின்றேன். இதற்கு மூலாதாரமே, நிச்சயம் தன்னில் கூட, பின் முதுகு தண்டே, எங்கு எவ், பின் நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று கூற, பின் ஒரு, பின் கண்ணிமைக்கும் நேரத்தில், எங்கு உள்ளது என்பதெல்லாம், அங்கு தட்டினால், அங்கு அமிழ்த்தினால், நிச்சயம் அமுக்கினால், நிச்சயம் தன்னில் கூட, பின் ஓடுவான், சிறந்து விளங்குவான், அனைத்திலும் திறமை பெறுவான். அவையெல்லாம் சொல்கின்றேன். பொறுத்திருக்கச் சொல், அதற்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஆனாலும், பின் அப்புண்ணியத்தை எல்லாம் யானே, நிச்சயம் தன்னில், இறைவனிடத்தில் கேட்டு, சில மனிதர்களுக்கு கொடுத்து, அதையும் புரிய வைக்கின்றேன். நிச்சயம், பொறுத்திருக்கச் சொல். ஆசிகள்.
28. அகத்தியர் ஐயா, வணக்கம். என் கேள்வி, இவ்வுலகில் அசைவம் உண்பது எப்போது குறையும்? ஒவ்வொரு நாளும் 20 லட்சத்திற்கு மேல் உயிரினங்கள் பலியாகிறது. அதை நீங்கள் கண்டிப்பாக காப்பாற்ற வேண்டும். எல்லா சித்தர்களும் சேர்ந்து ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
குருநாதர்: எதை என்று அறிய, ஆனாலும், அனைவரும் முடிவு எடுத்துவிட்டால், நிச்சயம், பின் மனிதனை, பின் அழித்தால்தான், பயம் ஏற்படுத்தினால்தான், நிச்சயம் தன்னில் கூட. ஆனால், ஐயோ, அங்கே அழிந்துவிட்டதே. ஐயோ, இங்கே அழிந்துவிட்டதே. எவ்வாறு, இறைவன் இல்லையே என்று, அப்படியும் பேசுகின்றார்கள். இப்படியும் பேசுகின்றார்கள். இதனால், பின் எப்படி, பின் முடிவெடுப்பது? நிச்சயம் தன்னில் கூட, பின் இதற்கு தகுந்தார் போல், விவரமான வாக்கு ஒன்றை கூறுகின்றேன்.
29. கலியுகத்தில் பேராசை, காமம், கோபம், இவைகளில் இருந்து கடக்க என்ன வழிகள் உள்ளன, குருநாதர் அப்பனே?
குருநாதர்: எதை ஒன்று அமைதியாக, எதை என்று புரிய, எவை என்று ஆற்றில், அதாவது சுடுகாடு என்பார்களே, அங்கு உறங்கிட வேண்டியதுதான் முதலில். இதை ஏன், நிச்சயம் ஏன் சொன்னேன் என்று நீங்கள் சிந்திப்பீர்களா, இங்கு?
இப்படித்தானே இந்த மருந்தெல்லாம் கொண்டு போறது. மனதை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி என்று வழிகாட்ட வேண்டும். அப்பா, ஏது என்று புரிய, இது மனிதனால் முடியாது. ஆனாலும், நாங்கள் சொல்லிய உபகரணங்கள் எல்லாம், பின் பயன்படுத்தி வந்தாலும், நிச்சயம் தன்னில் கூட, அவையும் ஒரு நாள், எதை என்றது, நிச்சயம் தன்னில் கூட, பின் சரியாக பயன்படுத்தி வந்தாலே போதுமானது. நான் சொல்கின்ற எல்லா விஷயத்தையும் சரியாக பயன்படுத்திக் கொண்டு வந்தாலே போதுமானது.
30. அப்பா, கருப்பணசாமி, முனீஸ்வரர் போன்ற தெய்வங்களை, உயிர் பலி இல்லாமல் வழிபட வேண்டிய முறைகள் என்ன என்று தெளிவுபடுத்த வேண்டும்.
குருநாதர்: அப்பா, யாரும் எதையும் கேட்பதில்லை. ஆனால், நிச்சயம் தன்னில் கூட, மனிதனுக்கு ருசியானதை, இறைவனுக்கு படைக்கின்றேன் என்று சொல்லி, எதை என்று கூற, பின் கடைசியில், இவனே உட்கொள்கின்றான். இதுதான் தர்மமா? நீங்களே சொல்லுங்கள்.
31. கணபதி மூர்த்தங்கள் பழம்பெரும் ஆலயங்களில் பல இருப்பதின் தாத்பர்யம் என்ன என்று கூற வேண்டும், குருநாதா.
குருநாதர்: எதற்காக? நிச்சயம் தன்னில் கூட, நந்தி எதை என்று அறிய, நிச்சயம் எதற்கு என்று அறிவியல் பூரணமாகவே விவரிக்கின்றேன். அப்பொழுது புரியும்.
32. அன்புள்ள அப்பா, குருநாதா, சங்குநாதத்தின் சிறப்பை எடுத்துரைக்க வேண்டும்.
குருநாதர்: ஏது என்று புரிய, இதைத்தான் நிச்சயம் இதனைப் பற்றி விவரமாக ஓதி வருதல் சிறப்பு. ஏது என்று அறிய, பின்பு உரைக்கின்றேன்.
33. கந்த சஷ்டி கவசங்கள் ஆறு இருப்பினும், இறை சித்தரால் திருச்செந்தூர் தேவசேனாபதி கவசம் மட்டும் கீர்த்தி பெற்ற சிறப்பு என்ன என்று கூற வேண்டும்.
குருநாதர்: இதனைப் பற்றி யான் சொல்லிவிட்டேன். இதனால் இருக்கும் சக்தி என்னவென்று விஞ்சானபூர்வமாகவே சொல்லிவிட்டேன். இன்னும் சொல்கின்றேன். கடத்தி எவை என்று புரிய, எங்கு கடத்தி, எதை என்று புரிய. [இது வந்து கடத்தி என்று சொல்லிட்டு, அந்த கோயிலை பற்றி கடத்திகள்னு சொல்லிட்டாரு. வந்து கடைசியா, கடத்தி, கடத்திகள், ஒரு கூட்டு பிரார்த்தனை சொன்னாரு. வந்து கடத்திகள் அங்கதான் சொல்லிட்டு, விவரிச்சாரு, இன்னும் அது எத்தனை வரும்னு சொல்றாரு. வந்து புரியல எனக்கு. ஓகே, அப்படியே போடு. ஐயா, கடத்தி பவர், பவர், அங்க இருக்குது. வந்து போன கூட்டு பிரார்த்தனை சொன்னாரு. இதை பத்திதான் இந்த செம்பு வேல் வச்சு, அது வந்து இப்படி போட்டு, எங்க இருந்து கடத்தி, எங்க திருச்செந்தூர் இருக்குது. எங்க இருந்தா வந்து ஏன் வந்து இவரை வந்து முருகரை வந்து ஏன் வந்து சொல்றா? அவர் ஒரு கடத்தி மாதிரி சொல்லிட்டு, அதனால சொல்லி இருக்காரு. மின் கடத்தி, மின் கடத்தி மாதிரி சொல்லி இருக்காரு.]
34. வலம்புரி, இடம்புரி, கணபதிகளின் சிறப்புகள் என்ன என்று கூற வேண்டும்.
குருநாதர்: ஏது எவை என்று புரிய, இவையும் யான் விஞ்ஞானபூர்வமாகத்தான் விவரிப்பேன்.
35. நரசிம்மர் சாந்தி அடைந்தால்தான் லட்சுமி நரசிம்மராக காட்சி தருகிறார் என்றால், சரபருக்கும் நரசிம்ம மூர்த்திக்கும் இடையே நடைபெற்ற நிகழ்வு என்ன?
குருநாதர்: ஏது என்று புரிய, நிச்சயம் இருவருமே மனக்குழப்பத்தை தீர்ப்பவர்கள் தான். எதற்காக, எவை என்று அறிய, இருவரும் இணைந்தால், நிச்சயம் மனம் என்பது இருக்காது. நிச்சயம் அங்கு குழப்பம் என்பதே இருக்காது. [மனம் என்பது போயிடுமா? சரபேஸ்வரரோ, நரசிம்மரும் சேர்ந்து, நரசிம்மர் இப்படி சேர்ந்து இருந்தா, மனமே இருக்காதா? மனமே போயிடுமா? அப்ப எங்க மனசு யோசிக்க தோணும்? மனது எங்க வருத்தம் வரும்? எல்லாம் ஒன்றேன்றாரு.]
36. கார்த்திகை மாதம், வலம்புரி சங்கினால் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகம் சிறப்பாக கருதப்படுவது ஏன்?
குருநாதர்: அப்பா, கார்த்திகை மாதத்திற்கு ஒரு சிறப்பே உண்டு. ஏன் இதனை? பின் சங்கு எதை, எவை, எதற்காக என்றெல்லாம் அறிந்தும் இதனைத்தன் நிச்சயம் விவரமாக, விவரமாக சொல். புரியும். இதையும் விஞ்ஞான முறையில் எடுத்து வருகின்றேன், யான். நிச்சயம் கேட்கச் சொல்.
[எல்லாத்துக்குமே அப்புறம் சொல்றேன், அப்புறம் சொல்றேன்னு தள்ளி போட்டுட்டு போனீங்க. எப்படி அறிந்தும் இப்பொழுது சொன்னால் புரியுமா? அப்பா, இன்னும் மூன்று நான்கு, பின் மணி நேரங்கள் எவை என்று எடுத்துக்கொண்டால், எவ்வாறு? அப்பா, மூன்று மணி நேரம், நாலு மணி நேரம், அஞ்சு, அப்படி போகுமா? வந்து இதெல்லாம் சொன்னோம்]
37. தர்மஸ்தல அருகில் இருக்கும் குக்கே சுப்பிரமணியாவிற்கும், பெங்களூர் அருகில் இருக்கும் காட்டி சுப்பிரமணியாவிற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று விவரிக்க வேண்டும்.
குருநாதர்: நிச்சயம் தன்னில் கூட உண்டு, சொல்லிவிட்டேன்.
38. தற்காலத்தில் வாழும் உண்மையான இறைத்தூதர்களை இனம் காணுவது எப்படி? மூக்குப்பொடி சித்தர், விசிறி சாமியார், மகாபெரியவா, இவர்கள் இருந்தபோது பலருக்கும் மகிமை தெரியவில்லை.
குருநாதர்: அப்பா, பின் எப்பொழுதும் இருக்கின்ற பொழுது மகிமை தெரியாது. ஆனால் இறந்தால் எவை என்பதையே பின், ஐயயோ, இப்படி எல்லாம் செய்தார்களே என்று தான் சொல்வார்கள். இது மனிதனின், எதை என்று புரிந்து கொள்ள, நிச்சயம் அதனால்தான் மனிதன் விசித்திரமானவன். இதனால் சொல்கின்றேன், வருங்காலத்தில் ஏனென்றால் சித்த குள்ளர்கள் தான் வருவார்கள். ஏது என்று புரிய, தேசத்தை காக்க, வருங்காலத்தில் ஏனென்றால், நிச்சயம் தன்னில் கூட, எதற்காக என்றால், மனிதனிடத்தில், நிச்சயம் பின் இறைவன் ஒப்படைத்துவிட்டான். நிச்சயம் தன்னில் கூட கேட்டது என்று மனிதனே என்று ஆனாலும், இதை தடுக்க எவை என்று ஒரு சித்தர் குள்ளாருக்கு எவை என்று கூறுகின்ற ஓடி ஓடி வந்து கொண்டே இருக்கின்றார்கள். பல விஷயங்கள் இப்பொழுது கூட பின் வந்துட்டு சிலர் தடுத்துக்கொண்டு, ஆனால் எங்கு எப்பொழுது அவர்கள் பின் இருப்பார்கள் என்பதை எல்லாம் சொல்கின்றேன். அவர்கள் பார்த்தாலே புண்ணியம், அவர்களின் பின் எவை என்று கூற, பின் ஆறுதல், அதாவது நிச்சயம் சக்தி இவர்களுக்கு கிடைத்துட்டால், இவர்களும் அப்படியே மாறிவிடுவார்கள். என் பக்தர்களுக்கு வருங்காலத்தில் அதை சொல்கின்றேன்.
39. ஐயனே, உண்மையான பக்தி என்றால் என்ன? இதனை தெரிந்து கொண்டால் இறை வந்தால் கொண்டாட முடியும். இத்தனை பாடங்கள் கேட்டும் அடியேனுக்கு தெளிவில்லை. ஆனால் எளிமையாக உரைக்க வேண்டும். உண்மையான பக்தி என்றால் என்ன?
குருநாதர்: உண்மையான பக்தி என்றால், அதாவது பக்தி என்று இங்கு எதன் மீது நிச்சயம் சொன்னார்கள் என்பதே தெரியவில்லை. அதாவது உணவின் மீது பக்தியா, நீரின் மீது பக்தியா, இல்லையென்றால் பெண்ணின் மீது பக்தியா, எதன் மீது பக்தி, எதன் மீது பக்தி, நிச்சயம் மீண்டும் பின் சரியாக, பின் அதாவது கேள்வியை சரியாக கேட்க தெரியாதது போல், எதை என்று அறிய, நிச்சயம் கேட்கச் சொல். எதன் மீது பக்தி என்று முதலில் அது சொல்ல மாட்டேன்.
40. பிரதமை திதி, அஷ்டமி திதி, நவமி திதி, சந்திராஷ்டமம், அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் அலுவல் ரீதியாக தவிர்க்க முடியாத முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய அவசியம் மற்றும் மேலதிகாரிகள் புதிய நபர்களை சந்தித்து பேசுவது போன்று, இதனால் மேற்கொண்டு அலுவல் ரீதியாக கர்மா சேராமல் இருக்க, பிரச்சனைகள் வராமல் இருக்க, தாங்கள் பிரார்த்தனை முறைகளை தெரிவிக்க வேண்டும்.
குருநாதர்: எதை எவை என்று புரிய, இதற்கும் சம்பந்தங்கள் உண்டு பல. ஆனாலும் இவையெல்லாம் விவரமானதெல்லாம் நிச்சயம் தன்னில், அதாவது பின் இப்பொழுதெல்லாம் சிறுவர்களுக்கு சொல்லிக் கொடுப்பார்கள். அதாவது படத்தைப் பார்த்து பதில் சொல் என்றெல்லாம் அதேபோலத்தான் இவை கற்பித்தால் மட்டுமே உண்டு. ஆனாலும் நிச்சயம் அனைத்தும் இழந்தவனுக்கு இவையெல்லாம் பின் எதற்கு?
[அனைத்தையும் இழந்தவனுக்கு இல்ல, பொதுவா சொல்றாரு. எல்லாத்தையும் இழந்தவனுக்கு அஷ்டமி, நவமி ஏன் பார்க்கணும்? எல்லாத்தையும் இழந்தவனா, எல்லாத்தையும் வேண்டாம்னு வச்சவனா?]
[இல்லைங்க, ஐயா, இது வந்து என்ன சொல்றாருன்னா சில பேர் எல்லாத்தையும் இழந்து இருக்காங்க. வந்து ஒண்ணுமே இல்லாம சந்நியாசம் மாதிரி போறவங்க, இதெல்லாம் எதுக்குப்பான்னு கேக்குறாரு. அப்பனா இருப்பவனுக்கு இதெல்லாம் இந்த நேரத்துல ஒரு ஆபீஸ்ல நான் வேலை பார்க்கிறேன். என்னன்னா இந்த மாதிரியான நாட்கள்ல, திதிகள்ல முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டாம்னு முன்னாடி சொல்லி இருக்காரு. அவர் ஏது என்று புரிய, எதற்காக நிச்சயம் தன்னில் எவையும் கூட, நிச்சயம் இதையும் கூட, பின் விஞ்ஞான பொருள்களில் பின் விவரிப்பேன். அனைத்தும் பார்க்கச் சொல், ஐயா, இதுவும் விஞ்ஞான பொருளை தான் விவரிப்பாராம். அஷ்டமி எதற்கு, நவமி எதற்கு, எதுன்னு சொல்லிட்டு, இதெல்லாம் பல நேரங்கள் ஆகும்.]
41. அக்னி நட்சத்திரம், இதன் உண்மையான கூற்று என்ன? இந்த சமயத்தில் செய்ய வேண்டியவை, தவிர்க்கக்கூடியவை பற்றி சொல்ல வேண்டும்.
குருநாதர்: அப்பா, ஏது என்று புரிய, வருடத்திற்கு ஒருமுறை சூரியனிலிருந்து பின் ஒரு துளி, ஏது என்று புரிய, பின் ஒரு கல் வெளிவரும். நிச்சயம் அவைதன் எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட மீண்டும் பின் சமநிலை, பின் ஆக்க ஒரு மாதம் ஆகும். அவ்வளவுதான். அவ்நேரத்தில்தான் பின் அனைத்தும் இதையும் சொல்கின்றேன்.
42. ஒரு அடியவர் எந்த ஒரு இறைமூர்த்தத்தை வழிபட்டாலும், எப்பொழுது அவர் பக்தனாக அங்கீகாரம் பெற்றார் என்று தெரிந்து கொள்வது எப்படி? வணங்குபவர்கள் அனைவரும் பக்தர்களா என்று தெரிய வேண்டும்.
குருநாதர்: அப்பா, அறிந்தும் கூட, எதை என்று புரிய, இது நீயே கூற வேண்டும். உணவு, அனைவருமே உணவு உட்கொண்டு, உட்கொண்டுள்ளார்கள், உட்கொள்கின்றார்கள். ஆனாலும் அனைவருமே பின் நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று புரிய, உணவு பிரியர்கள் என்று சொல்ல முடியுமா? என்ன, அனைவருமே எதை என்று புரிய, அனைவருமே நீரை அருந்துகிறார்கள். அனைவருமே பின் எப்படி இவ்வாறு சொல்வது? நீயே கூறு.
[பொதுவா சொல்ல முடியாது. இருந்தாலும், அவரவர் தேவைக்கு ஏற்ப, அவரவர்கள் நடந்து கொள்கிறார்கள்]
குருநாதர்: இதே போலத்தான், நிச்சயம் தன்னில் கூட, அவரவர் பசிக்கு ஏற்ப, நிச்சயம் நடந்து கொள்கிறார்கள். என்ன பசிக்கு ஏற்ப என்று நீயே புரிந்துகொள்.
43. வெற்றிலை தீபம் போட சொல்லி இருக்காரு. அந்த தீபம் அப்புறம் ஸ்பெஷலா போடக்கூடிய தீபங்களை வீட்டில் ஏற்றலாமா? இலுப்பை எண்ணெய் தீபம் வீட்டில் ஏற்றி, மிகுந்த பாதிப்பு, குடும்பத்தில் நடந்தது, நடந்துவிட்டது. பயமாக உள்ளது. தெளிவு வேண்டும், ஐயா.
குருநாதர்: இலுப்பை எண்ணெய் எதை என்று புரிய, அனைத்தும் தீய சக்திகளும், பின் நிச்சயம், பின் எவை என்று இழுத்து, நிச்சயம், பின் வெளியே துரத்துவதுதான். நிச்சயம், தன்னில் கூட, பின் இவ்வெண்ணெய், அதாவது தீய சக்திகளில் சிக்கிக் கொண்டு, ஆனாலும் எவை என்று புரிய, [ஐயா, எல்லாத்தையும் எடுக்கிறதுதான். இழுப்பு, இழுக்கிறதுதான். வந்து, இலுப்பு, இலுப்பு எண்ணெய், எல்லாத்தையும் இழுத்து, தந்து, வெளியே துரத்துறதுதான். வந்து, இழுப்பு, எண்ணெய், ஆனாலும், அதனால் இல்லத்தில் . தீயவை வந்து, சில தீய சக்திகள் வந்து, இழுத்துக்கொண்டு இருக்குது. அப்படிங்கிறாரு.]
44. பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம் பற்றி அருளுங்கள்.
குருநாதர்: ஏது என்று புரிய, இதனை ஒவ்வொரு நாளும் 108 முறை சொல்லி வரச் சொல். நிச்சயம், இதற்கு விவரம் சொல்கின்றேன். அவனைப் பற்றி தெளிவுபடுத்தி வருகின்றேன்.
45. ஸ்ரீ சிவகாமி தாயார் உடனுறை ஸ்ரீ காமேஸ்வரர் ஆலய திருப்பணி குறித்து அருளுங்கள், ஐயனே.
குருநாதர்: ஏது என்று புரிய, ஆனாலும், பின் அனைவரும் திருப்பணி என்றால், நிச்சயம் எதை என்று அறிய, ஏது என்று புரிய, சுலபமாக என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அப்படி இல்லை. இறைவன் சோதிப்பான், பல வழியில் அடிப்பான், நொறுக்குவான். எதை என்று அறிய, புரிந்து கொள்வதற்கு உண்மை ஞானத்தை, உண்மை ஞானத்தை, கடைசியில். ஆனால் சிலர், பின் என்ன? இத்திருத்தலத்திற்கு பின் செய்தேனே, அனைத்தும் இழந்துவிட்டேன் என்று சிலர் எப்படி, எப்படியோ ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, எதற்காக, எவை என்று கடைசியில், பின் நிச்சயம் தன்னில் கூட, தர்மம் கூட, ஏந்த வைப்பான். நிச்சயம் இவ்வாறாக, நிச்சயம் செய்வதற்கு தயாராக இருந்தால், நிச்சயம் இறைவனே செய்து முடிப்பான். அவ்வளவுதான்.
46. மேற்சொன்ன ஆலயத்தில், தங்கள் உத்தரவின் பெயரில், மகாசிவராத்திரி அன்று, அணையா தீபம் ஏற்றி, வழிபாடு செய்தோம். இதற்கு தங்கள் ஆசி வேண்டி பணிகின்றோம், ஐயா.
குருநாதர்: ஏது எவை என்று புரிய, எம்முடைய ஆசிகள் இதற்கு ஏது என்று அறிய, இன்னும் விவரமானதெல்லாம் சொல்கின்றேன்.
47. குருவே, சரணம். தாங்கள் அருளிய மகாசிவராத்திரி வழிபாட்டை, மாத சிவராத்திரி வழிபாட்டில் தொடரலாமா, ஐயனே?
குருநாதர்: எல்லாம் எதை என்று கூற, அனைத்தும் பின் அன்பே. இதனால், அன்புடன் நிச்சயம் செய்யும் காரியத்தை, இறைவன் ஏற்றுக் கொள்வான். நிச்சயம், எம்முடைய ஆசிகள் பரிபூரணம். அப்போ இல்ல, மாத சிவராத்திரியும் பண்ணலாம்.
48. தங்கள் அருளால், இன்றைய தினம் நடைபெற்ற அரசமர பிள்ளையார் உழவாரப் பணி, அரசமர தியானம், அரசமர வழிபாடு பற்றி கூறுங்கள், ஐயா.
குருநாதர்: அதாவது சிவபுராணத்தில், அதாவது ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, அவன் அருளாலே, அவன்தாள் வணங்கி என்றெல்லாம். இதனால், நிச்சயம் பிள்ளை, அவனுடைய அருள், அரசமர பிள்ளையாருக்கான முக்கியத்துவம் என்ன? ஏது என்று புரிய, அப்பா, எதையும் யான் பின் விஞ்ஞான முறையில் தான் எடுத்துரைப்பேன். சொல்லிவிட்டேன். பொறுமை காக்கச் சொல். நிச்சயம் வெளிவரும் வாக்குகள்.
49. பல அடியார்கள் இணைந்து, தைப்பூச பால்குடம் எடுக்க, பதிவு செய்து, சில முருகப்பெருமான் தலங்களுக்கு சென்று வந்ததால், பால்குடம் எடுக்க இயலவில்லை. இதற்கு பிராய்ச்சித்தமாக, எங்களுக்கு வழிகாட்டுங்கள், தந்தையே.
குருநாதர்: நிச்சயம், பின் வந்து கொண்டே இருக்கின்றது. ஒருமுறையா, எவை என்று ஒரு மாதிரி மாறி, எதை என்று அறிய, நிச்சயம் பின் இறைவன் எப்பொழுதும் மறைவதில்லை.
50. தற்போது நிலவி வரும் போர் சூழல் சரியாகி, மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ அருளுங்கள்.
குருநாதர்: நிச்சயம், எப்படியோ, எப்படியோ, போயிருப்பதை, நிச்சயம், எப்படி, எப்படியோ, இழுத்து வந்து கொண்டே தான், எதை என்று கூற, நிச்சயம் தன்னில் கவலை இல்லை. அதனால் பார்த்துக் கொள்கிறோம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
