​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 14 September 2025

சித்தன் அருள் - 1933 - அன்புடன் அகத்தியர் - காட்மண்டு வாக்கு!






4/8/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: பசுபதி நாதர் மந்திர்.காத்மாண்டு நேபாளம்.

ஆதி பரம்பொருளை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே எம்முடைய ஆசிகளப்பா!!!

அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல வழிகளிலும் கூட உலகம் அப்பனே.. எப்படி எல்லாம் மாறப்போகின்றது? என்பதையெல்லாம் வரும் வரும் வாக்கியத்தில் யான் தெரிவிப்பேன் அப்பனே!!

அவை மட்டும் இல்லாமல் அப்பனே ஏனைய சித்தர்களின் ஆசிகளையும் கூட நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக.... அதாவது அருகிலே நிச்சயம் தன்னில் கூட

"""""" ஒரு பக்கம்.. உலகம் அழிவு!!

மறுபக்கம்...யாங்கள்!!!

 எப்படியெல்லாம்...... எம் பக்தர்களுக்கு அப்பனே!! பின் அருள் கூர்ந்து... அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே நலமாகவே எப்படி அருள்கள்??.. கொடுத்து அப்பனே பல மக்களை ஈர்த்து.. படும்படி  நிச்சயம் தன்னில்... பல வெற்றிகளை யாங்கள் கொடுத்து அப்பனே.. பின் சித்தன் என்றால்.. இப்படித்தான் இருக்க வேண்டும் என்றெல்லாம்.. அப்பனே யாங்களே ஏற்படுத்துவோம்.. அப்பனே!!

அவை மட்டுமில்லாமல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.... அப்பனே இன்னும் போட்டி பொறாமைகள் எதை எதையோ.. நினைப்பவர்களும் கூட அப்பனே... அதையெல்லாம் அகற்றி... அப்பனே..

சித்தன் அருள் இருந்தால்.. நிமிர்ந்து நிற்கலாம் இவ்வுலகத்தில்.. என்றெல்லாம் அப்பனே யாங்கள்.. நிச்சயம் செய்வோமப்பா!!!

குறைகள் வேண்டாம் அப்பனே... நல்விதமாகவே...

அதாவது இவ் பசுபதி நாதனும்... அப்பனே எவ்வகையான... ஆற்றல்கள் இருக்கின்றது என்பதை எல்லாம்... மனிதனுக்கு தெரியாதப்பா!!!

இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில்... பார்வதி தேவியும் கூட... நிச்சயம் அதாவது அறிந்தும் கூட..

நீர் எங்கெங்கு??? எதை புரிந்து கொண்டு... பின் ஈசனாரே!!!... அருள் கூர்ந்து பின் எங்கெல்லாம்... நிச்சயம் உன்னை தேடி.. வருகின்றார்களோ!!!!

பின் அவர்களுக்கெல்லாம்.. நிச்சயம் பின் நீங்கள் வரத்தை.. பின் அதாவது கொடுக்கவில்லை... என்றாலும்!!...

 யானே!!....நிச்சயம் அதாவது என் அன்பு கருணை படைத்தவன் மீது அன்பு கொண்டவருக்கெல்லாம்!!.... யாங்களே... நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே அதாவது நிச்சயம் பின் யாங்களும்.... அருள் கூர்ந்து... அதாவது நிச்சயம் தன்னில் கூட... பார்வதி தேவியும் யானே கொடுப்பேன்... பின் கருணை படைத்தவனே என்றெல்லாம்... ஈசனிடம் அப்பனே வரங்கள்... இவ்விடத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... பின் பெற்றாளப்பா பார்வதி தேவியும்!!!

அப்படியே ஆகட்டும்!!!.. என்று... ஈசனாரும் கூட அப்பனே!!!

இதனால்தான் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட எங்கெல்லாம்... வரங்கள்.. நிச்சயம் பல வழிகளிலும் கூட.. இருப்பது... அப்பனே பல வழிகளிலும் கூட எங்கு திருத்தலங்கள்??.. என்பதையெல்லாம் வரும் காலத்தில் அழகாகவே யான் எடுத்துரைப்பேன்.. என் பக்தர்களுக்கு அப்பனே!!

(பார்வதி தேவி ஈசனிடம் வரம் பெற்ற திருத்தலங்கள்)

இவை தன் நிச்சயம் தன்னில் கூட அழகாகவே.. கொண்டு சேர்ப்பார்கள்... எதை என்று புரிய இவ்வாறாக... அருள்கள் பெற்று அப்பனே.. நோய் நொடி இல்லாமல்.. அப்பனே நிச்சயம் வாழ்ந்திடலாம் அப்பனே!!!


அவை மட்டும் இல்லாமல் அப்பனே... இங்கு தரும் வில்வத்தையும் கூட அப்பனே !!

(பசுபதிநாதர் ஆலயத்தில் பிரசாதமாக கொடுக்கப்படும் வில்வ இலை மற்றும் ருத்ராட்சம்.. ஆலயத்திற்கு செல்வோர் வெளியில் இருந்து இவை இரண்டும் வாங்கிச் சென்று ஈசனுக்கு படைத்துவிட்டு அதை திரும்பவும் வாங்கி கொள்ளலாம்)



அழகாக இல்லத்திற்கு எடுத்துச் சென்று.. அப்படியே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே பின்  பார்வதி தேவியையும் ஈசனாரையும் வேண்டிட்டு... நிச்சயம் அவை மட்டும் இல்லாமல்... ருத்ராட்சத்தையும் எடுத்துச் சென்று அப்பனே.. நலமாகவே இல்லத்தில் வைத்து.. நிச்சயம் அனுதினமும் அதற்கு... அவ் ருத்ராட்சத்திற்கு சிறிதளமாவது.. பன்னீரை சரியாகவே.. தெளித்து அப்பனே அனுதினமும்... அப்பனே நிச்சயம் நமச்சிவாயா!!! என்றெல்லாம் மனதில் எண்ணிக்கொண்டு!!!

அப்பனே என்ன வேண்டும் (தம் வேண்டுதல்) என்றோ!!.. அப்பனே  நிச்சயம் அதாவது... மனதில் இவ் பசுபதி நாதனை வேண்டிக்கொண்டு.. அப்பனே அதாவது இங்கே இருக்கும்..என்ற எண்ணத்தை!!! நீங்கள் இல்லத்தில் இருந்தாலும் யான் பசுபதி நாதனிடம் தான் இருக்கின்றேன் என்று நினைத்து அப்பனே

(இப்பொழுது இந்த கணத்தில் பசுபதி நாதர் முன்பு நாம் இருக்கின்றோம் என்று மனதில் நினைத்துக் கொண்டு) 


நிச்சயம் தன்னில் கூட நமச்சிவாயா! சங்கரா!! என்றெல்லாம் அன்புடனே அழைத்தால் அப்பனே.. உன் இல்லத்திற்கு ஆசிகளோடு உங்கள் குறைகளை அப்பனே பின் போக போக அதாவது செல்லச் செல்ல நிவர்த்தி ஆகிக்கொண்டே செல்லும்!!

அதன் பிறகு அப்பனே நிச்சயம் காசி தன்னில் கூட அப்பனே அதாவது சரியாக அதாவது திருவேணி சங்கமத்தில் கூட அருள்பாலிக்கக்கூடிய அப்பனே பின் முப்பெரும் தேவர்களையும் கூட நினைத்து.. நீரை எடுத்து அப்பனே.. சரியாகவே ராமேஸ்வரத்தில் அப்பனே... கடல் அப்பனே (நீராடி )அங்கு பின் கழிக்க... அப்பனே பல தரித்தரங்கள் அப்பனே மனிதனிடத்தில் உள்ள அதாவது அழுக்குகள் நீங்குமப்பா!!

இன்னும் அப்பனே பல வழிகள் இருக்கின்றதப்பா இவ்வுலகத்தில் வாழ!!

ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட வாழ தெரியாமல் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான்..

இதனால்தானப்பா எப்படி என்பதையெல்லாம்.. இதனால் வரும் காலத்தில்... இன்னும் திட்டங்களை யாங்களே தீட்டியே...

அப்பனே சித்தர்களை நம்பினால் இவ்வாறெல்லாம் பின் உயர்வுகள் பெறுவார்கள்.. என்பதை எல்லாம் யாங்களே நிரூபிப்போம் அப்பனே.

குறைகள் வேண்டாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட...

சித்தர்களை அப்பனே பல வழிகளிலும் கூட.. அப்பனே இந்நாள் வரை தவறாகத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட. 

அதாவது எங்கள் படங்களை எல்லாம் வைத்து நிச்சயம் தன்னில் கூட... என் எதை என்று புரியாமல் கூட..

அப்பனே ஆனாலும் அவ் எண்ணத்தை... அதாவது எங்களிடத்தில் வந்தால்.. தூய்மை எண்ணம் வேண்டும் என்பேன் அப்பனே!!!

அப்படி இல்லையென்றால் தூய்மை எண்ணம் இல்லையென்றால்..அவ் அழுக்கு எண்ணமே... நிச்சயம் பாவமாக மாறி...அவ் அழுக்கே கொன்று விடும் என்பேன் அப்பனே..

செப்பி விட்டேன் அப்பனே நலன்களாகவே!!

என்றும் எதை என்று புரிய அப்பனே... இவ்விடத்திற்கு நிச்சயம் தன்னில் கூட... ஒரு சிறப்பு உண்டப்பா. 


ஈசன் ஏன்???.... நிச்சயம் தன்னில் கூட... சென்று சென்று அப்பனே எவ் எவ் தூரத்தில் இருந்து இங்கு வந்து  வணங்கி வணங்கி... அப்பனே...

ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல வழிகளிலும் கூட... பல ஞானிகள் பல ரிஷிமார்கள்.... ஈசனை பின் இவ்விடத்தில் நிறுத்த.... அப்பனே பன்மடங்கு நிச்சயம் உலகை... அழிவில் இருந்து காக்கலாம் என்றெல்லாம்.. அப்பனே பல நூறு வருடங்களுக்கு முன்பே கணித்தணர்... என்பேன் அப்பனே. 

இதனால்.. இங்கு. ஈசன் வர வேண்டும் என்பதற்காக இங்கு... பல ரிஷி மார்கள் இங்கு தவம் செய்து... அப்பனே பல நூறு ஆண்டுகளாக தவங்கள் செய்து.. இதன் பிறகே பின் நிச்சயம்.... பின் ஈசன் கையாலயத்தில் இருந்து இறங்கி.... அப்பனே இங்கு வந்து!!!

பின் ரிஷிகளே தவம் செய்து ஈசனை நினைத்து நிச்சயம் பல வழிகளிலும் கூட.. பின்.. ஈசனை இங்கே அழைத்து வந்து...

நிச்சயம் உங்களுக்கு என்ன தேவை???? என்று ஈசனாரும் கூற!!!!


ரிஷிமார்கள் அனைவரும் சேர்ந்து நிச்சயம்!!....

ஈசனே!!!!!

பின் ஆனாலும் உலகம் அழிவை நோக்கி செல்கின்றது... இதனைக் காப்பாற்ற உன் பல அருள்கள்... வேண்டும்.


 அதாவது மனிதன் ஒழுங்காக.. வாழப்போவதில்லை..

நிச்சயம் அதிர்ஷ்டம் இருந்தும் அதிர்ஷ்டம் இல்லாமல்.... நிச்சயம் பல வழிகளிலும் கூட அதாவது துன்பத்தை.. மனிதனே கலியுகத்தில் ஏற்படுத்தி கொள்ளப் போகின்றான். 

அதனால் நிச்சயம்... இவ்விடத்தில் சிறப்பு அறிந்தும்... எதை என்று.. அறிய நிச்சயம் தன்னில் கூட..

"""சூரியனும் சந்திரனும் நிச்சயம் தன்னில் கூட... அவ்வாறாகவே நிச்சயம் பின்... பிரதிபலிக்கும் பிம்பம் இங்கு.. அருகில் உள்ளது!!

(சூரியனைப் போல் சந்திரனைப் போல் ஈசனுடைய தரிசனம் அனைவருக்கும் எங்கிருந்து பார்த்தாலும் கிடைக்கும் படி செய்ய வேண்டும் என்பதற்கு ஈசனை எங்கே பிரதிஷ்டை செய்தால் சரியாக இருக்கும் என்று எண்ணி அவரை தவத்தின் மூலம் கயிலாயத்தில் இருந்து அழைத்து)


இவை நிச்சயம் தெரிந்து கொண்டனர் ரிஷிகள்!!!

இதனால் பின் ஈசனாரே!!


நிச்சயம் பின் நீங்கள் இங்கே... பின் எவை என்று கூற... எக்கண்ணினாலும் நிச்சயம் பின் வட்டமடித்து!! வட்டமடித்து!! அனைவரையும் எப்பொழுதுமே!!!.... (பார்க்க வேண்டும்) பின் நிச்சயம்.. தன்னில் கூட!! 

(பசுபதிநாதர் நான்கு திசைகளுக்கு நான்கு முகங்களும் உச்சியில் ஒன்று ஆக ஐந்து முகங்கள் அதாவது சதாசிவமாக அருள் பாலிக்கின்றார்... இவரை நான்கு வாயில்கள் வழியாகவும் தரிசனம் செய்ய முடியும் எப்படி.. பக்தர்கள் தரிசனம் செய்தாலும் ஈசனுடைய முகத்தையும் பார்க்க இயலும் )




 உங்களை அனைவருமே தரிசிக்க வருவார்கள்...

 அவர்களை நீங்கள் கண்ணோக்கி உற்று நோக்கி... நன் முறைகளாக பார்க்க!!! பல பாவங்கள் தொலையும்.. என்பதே!!


ஆனாலும் ஈசனாரும் பலமாக சிரித்தான்!!!

ரிஷிமார்களே!!!!


நிச்சயம்  யானே படைத்தேன் அனைவரையும் கூட!!

ஆனாலும்.. நிச்சயம் இப்படி எல்லாம்.. மனிதன் வாழ போகின்றானா???

(பக்தியோடு மனிதர்கள் வாழ போகின்றார்களா??? என்று ஈசனார்)

என்றால் என்ன?..எதை என்று புரிய!!!




ஆனாலும் ரிஷிமார்களே!!!!

உங்கள் அன்பிற்கு ஏற்றவாறே.. யான் நிச்சயம் தன்னில் கூட அழகாக இங்கு.. அனைத்து அதாவது எத் திசையிலும்

(நான்கு திசை மற்றும் மேல் நோக்கியும்)

 நோக்கி யான் அழகாகவே ... பின் கண்களை உருட்டுவேன்.. நிச்சயம் தன்னில் கூட இதனால் அனைவருமே.. என் கண்களில் படுவார்கள்!!

இதனால் பாவவினைகள் நிச்சயம்... நீங்கும் என்றெல்லாம் ஈசன்!!!

இதனால் நிச்சயம் அப்பப்பா!! பல வழிகளிலும் கூட... இன்னும் நட்சத்திரங்களை பற்றியும் கூட எடுத்துரைக்கப் போகின்றார்கள் சித்தர்கள்!!

கிரகங்களைப் பற்றி எல்லாம் எடுத்துரைக்க போகின்றார்கள் சித்தர்கள்!!! அப்பனே!!

ஒருவருக்கு அப்பனே பின் உடம்பில் எவ்.. கிரகத்தின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.. என்பதையெல்லாம்.. எடுத்துரைக்கும் பொழுது.. தெரியும் அப்பா...எவ் வியாதி நிச்சயம் உடம்பில் வரும்.. என்பதையெல்லாம் அப்பனே வரும் காலத்தில் அப்பனே..

அதுமட்டுமில்லாமல் எவ் கிரகங்கள் என்பதையெல்லாம் அப்பனே யாங்கள்.. சொல்வோம் அப்பனே எந் நேரத்தில் அப்பனே..

ஆனாலும் அப்பனே உங்களுக்கு தேவையானது சிறிது தான் என்பேன் அப்பனே...

அப்பனே கல்வி அதை யான் கொடுத்திடுவேன்... நிச்சயம் அப்பனே பணிகளும் யாங்கள் கொடுத்திடுவோம் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட... (திரு)மணங்களும் யாங்கள் செய்திடுவோம்.. அப்பனே

ஆனாலும் மிகப் பெரிய வெற்றிகள் பின் யார்..???????  தகுதி உடையவர்கள்?? என்பதுதான்.. இங்கு அப்பனே நிச்சயம் நிச்சயிக்கபடுகின்றது என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே நிச்சயம்.. எங்களை நம்பினோர்களை அப்பனே யாங்கள்.. நிச்சயம் பின் கைவிட போவதில்லை என்பேன். அப்பனே..

நலமாகவே வெற்றிகள் பல உண்டு என்பேன் அப்பனே....

நலன்களாகவே பல வெற்றிகளை அப்பனே யானே கொடுப்பேன் என்பேன் அப்பனே. 

ஆனாலும்.. அப்பனே அனைவரும் நன் முறைகளாகவே.. தேர்ச்சி பெற்று அப்பனே.. அவரவர் விருப்பப்படி நிச்சயம் வாழலாம்.. என்பேன் அப்பனே..

பாவம் சேராமல் வாழ்ந்திடலாம் என்பேன் அப்பனே. 

இன்னும் அப்பனே பல வகையிலும் கூட.. இங்கு எதை என்று அறிய அறிய ஒரு பிம்பம்... அப்பனே பெரிதாக மறைந்திருக்கின்றதப்பா!!... (பசுபதிநாதர் லிங்கத்திற்கு கீழே) அவனுடைய கீழே என்பேன் அப்பனே!!

அவ் கீழே அப்பனே பின்.. பிம்பத்தின் வழியாக இன்னும் பல ரிஷிகள் தவம் செய்து கொண்டே இருக்கின்றார்கள்.. என்பேன் அப்பனே..

அவ்.. எவ்வாறு என்பதையெல்லாம் அப்பனே பின் அவ் பிம்பத்தின் பின் எதை என்று கூற சார்ந்து.. (பாகமதி) நதியும் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றது... என்பேன் அப்பனே!!

(ஆலயத்தில் கிழக்கு வாயில் ஆலயத்தின் சுற்றுச்சுவர் ஒட்டியே பாகமதி நதி ஓடிக்கொண்டிருக்கின்றது)


இன்னும் அப்பனே எதை என்று புரிய.... பின் அதாவது தவங்கள் இயற்றிக் கொண்டே இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே. 

அவர்கள் நமச்சிவாயா நமச்சிவாயா என்றெல்லாம் அப்பனே ஈசனை.. நினைத்துக் கொண்டே இருப்பதால் அப்பனே... இங்கு வருபவருக்கெல்லாம் அவ் சக்தி.. கிடைக்கப்பெறும் என்பேன் அப்பனே!!!

அவை மட்டும் இல்லாமல் அவை தன் நிச்சயம் தன்னில் கூட கேட்கும்.. பாக்கியமும் கூட அப்பனே நிச்சயம் அமாவாசை பௌர்ணமி தன்னில் கூட சரியாகவே அமைதியாகவே.. தியானம் செய்தால் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட ரிஷிகள் அனைவரும் ஒன்றாக கூடி... தவத்தில் தியானிக்கும் நமசிவாயா என்ற சப்தமும்.. கேட்குமப்பா!!!

இவையெல்லாம் ரகசியங்கள்!!

இன்னும் அப்பனே...இத் திருத்தலத்தின் சிறப்பு இன்னும்.. அப்பனே பன்மடங்கு இருக்கின்ற தப்பா!!!

இன்னும் சித்தர்கள் வந்து செப்புவார்களப்பா!!!

அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்!! ஆசிகளப்பா!!



ஆலயம் மற்றும் விபரங்கள். 

வணக்கம் அகத்தியர் அடியவர்களே.. குருநாதர் இதற்கு முன்பாக நேபாள தேசத்தில் 2021 ம் ஆண்டில் குருநாதர் வாக்குரைத்து இருக்கின்றார்.. சித்தன் அருள் அன்புடன் அகத்தியர் 1049 பதிவு எண்ணில் வெளிவந்துள்ளது. 

சூரியனின் பிம்பம் சந்திரனின் பிம்பம்... இங்கு விழுகின்றது என்பதை ரிஷிகள் கணித்ததை குருநாதர் வாக்கில் குறிப்பிட்டிருக்கின்றார் அல்லவா. 

நேபாள நாட்டு தேசியக் கொடியிலும் நாணயங்களிலும் சூரிய சந்திர பிம்பங்கள் உள்ளது.

நேபாளத்தில் உள்ள பசுபதி நாத் கோவில்

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து வடமேற்கே 3 கிமீ தொலைவில் உள்ள தேவ்பதன் கிராமத்தில் பாக்மதி ஆற்றின் கரையில் பசுபதிநாத் கோயில் உள்ளது.

நேபாளத்தில் உள்ள பசுபதி நாத் கோவிலின் தரிசன நேரம்
பசுபதிநாதர் கோயிலில் நான்கு நுழைவு வாயில்கள் உள்ளன. கோயில் பிரதான நுழைவாயிலில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அதிகாரிகள் பொதுவாக பொதுமக்களுக்கான மற்ற நுழைவாயில்களை மூடுவார்கள், ஆனால் அவை சில பண்டிகைகள் மற்றும் நிகழ்வுகளில் மட்டுமே திறக்கப்படும்.

உள் கோயில் பகுதி தினமும் அதிகாலை முதல், இரவு 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை லிங்கத்தை வழிபடலாம், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை வழிபட வேண்டிய நேரம்.
அபிஷேக நேரம்: காலை 9 மணி முதல் 11 மணி வரை.

இக்கோயிலில் நிறுவப்பட்டுள்ள சிவலிங்கத்தின் ஐந்து முகங்களும் வெவ்வேறு குணங்களைக் கொண்டவை.

தெற்கு நோக்கிய முகம் அகோர் முக் என்று அழைக்கப்படுகிறது. மேற்கு நோக்கிய முகம் சத்யோஜாத் என்றும், கிழக்கு மற்றும் வடக்கு நோக்கிய முகங்கள் தத்புருஷ் மற்றும் அர்த்தநாரீஸ்வர் என்றும் அழைக்கப்படுகின்றன. மேல்நோக்கிய திசை இஷான் முக் என்று அழைக்கப்படுகிறது. அது உருவமற்ற முகம். இது பசுபதிநாதரின் சிறந்த முகம்.

இந்த சிவலிங்கம் மிகவும் மதிப்புமிக்கது மற்றும் அதிசயமானது. இந்த சிவலிங்கம் பர்சா கல்லால் ஆனது என்று மக்கள் நம்புகிறார்கள். பர்சா கல் இரும்பை தங்கமாக மாற்றும் வகையில் உள்ளது. பசுபதி கோயிலில் நான்கு திசைகளிலும் ஒரு முகமும், மேல்நோக்கி ஒரு முகமும் உள்ளது. ஒவ்வொரு முகத்திலும் வலது கையில் ருத்ராட்ச ஜெபமாலையும், இடது கையில் கமண்டலமும் இருக்கும்.


நேபாளத்தில் உள்ள பசுபதி நாத் கோயிலை அடைவதற்கான வழிகள்
பசுபதி நாத் கோயிலுக்கு விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக யார் வேண்டுமானாலும் நேபாளத்தை அடையலாம்.

விமானம்/விமானம் மூலம்
இந்தியாவில் இருந்து பசுபதிநாத் கோவிலை அடைய சிறந்த வழி காத்மாண்டு விமானம் மூலம். காத்மாண்டுவின் திரிபுவன் சர்வதேச விமான நிலையம் நகரத்திலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ளது. டெல்லியில் இருந்து காத்மாண்டுக்கு அனைத்து விமானங்களும் நேரடியாக இயக்கப்படுகின்றன.

டெல்லியில் இருந்து காத்மாண்டுக்கு சுமார் 800 கிமீ தூரம் உள்ளது, இதை 2 மணி நேரத்திற்குள் கடக்க முடியும். இருப்பினும், வானிலை காரணமாக காத்மாண்டுவிலிருந்து விமானங்கள் சில நேரங்களில் தாமதமாகின்றன.

தொடர்வண்டி மூலம்
இந்தியா மற்றும் நேபாளம் இடையே நேரடி ரயில் இல்லை. எனவே டெல்லியிலிருந்து கோரக்பூருக்கு ரயிலில் பயணிக்கலாம். பின்னர் அங்கிருந்து சனாலிக்கு பேருந்தில் பயணிக்கலாம். அதன் பிறகு, நேபாள எல்லையில் இருந்து காத்மாண்டுக்கு மற்றொரு பேருந்தில் செல்ல வேண்டும்.

சாலை வழியாக
இந்தியாவில் இருந்து சாலை வழியாக பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு நான்கு எல்லைக் கடப்புகள் உள்ளன. டெல்லியில் இருந்து காத்மாண்டுக்கு பேருந்து அல்லது கார் மூலம் பயணிக்கலாம். காத்மாண்டுவிற்கான மொத்த தூரம் சுமார் 1310 கி.மீ., இங்கு சென்றடைய ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே ஆகும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!