​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 22 November 2025

சித்தன் அருள் - 2017 - அன்புடன் அகத்தியர் - சபரிமலை வாக்கு!








17/10/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: சபரிமலை மணிகண்டன் சன்னதி.

ஆதி மூலனை மனதில் எண்ணிச் செப்புகின்றேன், அகத்தியன். 

அப்பனே, நலங்களாகவே. அப்பனே, பல மாற்றங்கள் இவ்வுலகத்தில் அப்பனே நிகழப் போகின்றது என்பேன், அப்பனே. நிச்சயம் தன்னில். 


அப்பனே,
 எவ்வாறு?? என்பதையெல்லாம் அப்பனே ஏற்கனவே பின் செப்பியும் விட்டேன், அறிந்தும்!!!.


 அப்பனே, இன்னும் இன்னும் அப்பனே, அழிவுகள் அப்பனே, பலமாகவே அப்பனே.

 இதனால்தான் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் எங்கெங்கு? எதை என்று அறிய, அப்பனே, இவைதன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் பக்தி என்ற பாதையை தேர்ந்தெடுத்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அன்பாலே, அப்பனே, பின் வெல்லலாம் என்பேன், அப்பனே.


 பல ஆபத்துக்கள் பின் மனிதன் உணராமல் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.


 அதனால்தான் அப்பனே, அனைவரும் ஒன்று சேர்ந்து, அப்பனே, நிச்சயம் இறைவனை பாடி துதித்து வேண்டி வேண்டி, என்றெல்லாம் அப்பனே.

 (கூட்டு பிரார்த்தனைகள்)


ஆனாலும், அவைதன் அப்பனே, மனிதன் உணர்வதே இல்லை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.


 ஏன்?, எதற்கு?, பேராபத்துக்கள், பேரழிவுகள் அப்பனே, பின் வந்து கொண்டே தான் இருக்கின்றது என்பேன், 
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அடுத்தடுத்து!!!,


 இவைதன் அப்பனே, மாற்ற, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, சக்திகள், அப்பனே, நிச்சயம் ஒன்றிணைய, அப்பனே, நல்விதமான, அப்பனே, மாற்றங்களையும் கூட, ஏற்றங்களை கூட காணலாம். 


(வரும் பேராபத்துகளில் இருந்து காத்துக் கொள்ள சக்திகள் ஒன்றிணைய வேண்டும்! சக்திகளை ஒன்றிணைக்க கூட்டு பிரார்த்தனைகள் வழிபாடுகள்)


ஆனாலும், அப்பனே, மனிதனின், மனிதனின், எதை, எவை, எதை, பொறுத்தே அமையும் என்பதையெல்லாம் அப்பனே, எதனை பொறுத்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எவை என்று அறிய அறிய, அப்பனே, 

(மனிதர்களின்  எண்ணங்கள் மனோநிலை பொறுத்தே நன்மை தீமை.. இவை முடிவு செய்யப்படுகின்றது)



இதைதன் பின் முடியாமலும் மனிதன் திணறிக் கொண்டே இருக்கின்றான், அப்பனே, எவை என்று புரிய.

 இதனால், அப்பனே, சில மாற்றங்கள் நிச்சயம்  உண்மையானதாகவே இருக்குமப்பா!!, எதை என்று பொறுத்தே.


(மாற்றங்கள் ஏற்படுவது உறுதி உண்மை)

 இதனால், அப்பனே, பின் நல்விதமாக, அப்பனே, பின் மனிதனுக்கு யாங்கள் உரைத்து தெளிவுகள் பின் பெற்று தந்து கொண்டே இருக்கின்றோம்.



 ஆனாலும், மனிதன் என்னவோ,!?!?... நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, புத்திகள், அதாவது, நிச்சயம் தன்னில் கூட,


 பாவங்களை நிச்சயம் பின் போக்கிவிட்டால், புண்ணியங்கள் அதிகமாகி விடும் என்பதையெல்லாம் அப்பனே, நிச்சயம் கலியனுக்கு தெரியும்.

(மனிதர்கள் பாவத்தில் தான் இருக்க வேண்டும் என்பது கலி புருஷனின் எண்ணம்)

 இதனால், மனிதனின் பாவம், பாவம் தன்னில் கூட, பின் எடுத்து எடுத்து, இதனால், அப்பனே, மனிதன் நன்றாக, அப்பனே, சிந்தித்து செயல்பட்டாலே, புண்ணியத்தை அடைந்து விடலாம் என்பேன், அப்பனே,

(மனிதர்கள் பாவத்திலிருந்து புண்ணிய பாதையில் வரவேண்டும்)


 நிச்சயம் அப்புண்ணியம் பல வகையில் கூட காப்பாற்றும் என்பேன், அப்பனே, நலங்களாகவே.


 ஏன், எதற்கு, இவ் மணிகண்டனின் அறிந்தும் கூட, அப்பனே, எப்படி?, ஏன்?, எதற்காக, அப்பனே, நல்வழிகள் பல பல, அப்பனே, பயன்படுத்தி, அப்பனே, பல வழிகளில் கூட, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட!!. 

(மணிகண்டனின் அருள் பெறும் ரகசியம்)


இதனால், அப்பனே, பின் எதை என்று பொறுத்து, அப்பனே, பின் எவை என்று அறியாமலும் இருந்தாலும், அப்பனே, எதற்காக, தனி பாதுகாப்பு என்பவை எல்லாம், அப்பனே, வருங்காலத்தில், பின் எதற்காகவே, எதை, எவை என்று பொறுத்து அமையுமப்பா.

(மனிதர்களின் எண்ணங்கள் நடவடிக்கைகள் அதாவது குறிப்பாக மண்டலகால விரதங்கள் பக்திகள் இதை பொறுத்துதான் ஐயப்பனின் அனுகிரகம் அமையும்)



 இதனால், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் உணர்ந்து, அப்பனே, பிரபஞ்சம், பின் சக்தி, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அவ் சக்தியானது, அப்பனே, நிச்சயம் பின் ஓரிடத்தில் நின்று, அப்பனே, பின் அச் சக்தி, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பல வகைகளில் கூட, அப்பனே, பின் அவ் சக்தியை, அப்பனே, பின் பல கிரகங்கள், நிச்சயம், அப்பனே, பல நட்சத்திரங்கள், அப்பனே, பின் சுற்றி சுற்றி கொண்டே இருக்குமப்பா.

(நம் குருநாதர் ஏற்கனவே பிரம்மாண்டத்தில் இருந்து ஒரு சக்தி இங்கே வந்தடைகின்றது என்பதை ஏற்கனவே 

சித்தன் அருள் 1188

சித்தன் அருள் 1191 

பதிவு எண் வாக்குகளில் ஏற்கனவே கூறியுள்ளார் மீண்டும் ஒருமுறை படித்து உணர்ந்து கொள்ளவும்)



 அப்பனே, இவ்வாறு சுற்றிக் கொண்டிருக்கும் பொழுது, அப்பனே, அச் சக்தியானது, அப்பனே, சில வழிகளில் கூட...(அவ் சக்தியின்) உண்மை தத்துவத்தை, அப்பனே, நிச்சயம் புரிந்திருப்பார், அறிந்திருப்பார், எவருமில்லை. அப்பனே,


 இதன் தன்மை எப்படி உணர வைத்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அவ் சக்தியானது, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, அதாவது, அப்பனே, சில வழிகளில் கூட, அப்பனே, பின் அவ்வாறாகவே, அப்பனே, இவை சுற்ற, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, சுற்றிக் கொண்டே இருக்கும், அப்பனே, பலமாகவே,


 அப்பனே, நிச்சயம் இவ்வாறு சுற்றிக் கொண்டிருக்கையில், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அச் சக்தியானது, ஒரு ஒரு வருடத்திற்கு, அப்பனே, நிச்சயம் ஒருமுறை அசைவுறுமப்பா.

 இவ்வாறு அசைவு கொண்ட நேரத்தில், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அதிலிருந்து சில ஒளி கதிர்கள், அப்பனே, நிச்சயம் அப்படியே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, கீழே விழுமப்பா. 


அவைதன் அப்பனே, நிச்சயம், அப்பனே, பின் சிறு, அப்பனே, மணித்துளிகளே!!!!, அப்பனே,

அவ் சிறு மணித்துளிகள்தான், அப்பனே, நிச்சயம், அப்பனே, அறிந்தும் கூட, பின் அதாவது, பின் மூன்று மாதங்கள், அப்பனே,!!!!

(மேலிருந்து அசைந்து விழும் சக்தியின் ஒளிக்கதிர்கள் மேலே சில மணி நேரங்கள் மட்டுமே!!

ஆனால் நமது புவியின் இயக்கம் கணக்குப்படி மூன்று மாதங்கள் கார்த்திகை மார்கழி தை)



 அதாவது, கார்த்திகை,!! மார்கழி,!! 
தை!!,

 அப்பனே,


 நிச்சயம் தன்னில் கூட, எவை என்று புரிய, அப்பனே, நிச்சயம் பின், அவ் சக்தி, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, அவ் ஒளியானது, பின்  பிரமாதமாக, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பற்றி, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அங்கிருந்து, அப்பனே, அப்படியே, அப்பனே, எதை என்று கூற, அப்பனே, பலமாகவே, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, நிச்சயம் எதை என்று, அப்பனே, பின் ஒளிர்ந்து புரிந்து, அப்பனே, அதாவது, அவ் சக்தியானது உமிழும், அப்பனே,!!!


 பின் ஒளி, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அதாவது, உமிழ்ந்து விடும், அப்பனே, நிச்சயம், அவ் உமிழ்கின்ற நேரத்தில், அப்பனே, கார்த்திகை என்றும் கூட, அப்பனே, அவ்வாறு கார்த்திகை மாதத்தில் தொடங்கி, அப்பனே, தை மாதத்தில், அப்பனே, நிச்சயம், அப்பனே, பின் இவ் மலையை, அப்பனே, பின் நிச்சயம் வந்து அடையுமப்பா.

(சக்தியின் ஒளிக்கதிர்கள் சபரிமலையில் கார்த்திகை மாதத்தில் வந்தடையும்)



 இதனால், (ஒளிக்கதிர்கள்) அங்கிருந்து புறப்படுகின்ற நேரத்திலிருந்தே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, வெளிச்சங்கள், அப்பனே, இங்கு பலமாக படுமப்பா.


 அப்பனே, இவ்வாறு படுகின்ற நேரத்தில், அப்பனே, நிச்சயம், அப்பனே, இவ் மணிகண்டனை  வேண்டி வேண்டி துதித்து துதித்து, அப்பனே, வருபவர்களுக்கெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட,


(கார்த்திகை மாதத்தில் மண்டல காலத்தில் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை வரும் பக்தர்களுக்கு)


 அப்பனே, அவை மட்டுமில்லாமல், அப்பனே, நிச்சயம் பின் பசித்திருந்து!!!, அப்பனே, பல விரதங்களை கடைபிடித்து, அப்பனே, பின் ஞானங்கள், அப்பனே, பின் அப்படியே, நிச்சயம் தன்னில் கூட,!!


 அப்பனே, அனைத்து, அப்பனே, நிச்சயம், இவ்வாறு பசித்திருக்கும் பொழுது, உடலில் உள்ள செல்கள், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, பசித்ததோடு, அப்பனே, அப்படியே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, வலுவிழந்து இருக்குமப்பா.

(முறையாக விரதம் அனுசரித்து வரும் பக்தர்களுக்கு)


 அவ் ஒளியானது, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, இங்கு பின் சமமாகவே பாய்கின்ற நேரத்தில், அப்பனே, உள்ளிருக்கும் அவ் செல்கள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பலமாகவே, அறிந்தும், அப்பனே, அப்படியே, எதை என்று புரிய, அப்பனே, பின் அவ்சக்தி, அப்பனே, வந்து கொண்டே இருக்கும் நேரத்தில், அப்பனே, நிச்சயம், அப்பனே, இவை எதை என்று புரிய, அப்பனே, இவையும் கூட, அப்பனே, பின் நிச்சயம் அறிந்தும் கூட, அப்படியே, பின் ஏற்றங்கள்,!!!!


(சக்தியின் ஒளிக்கதிர்கள் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் உடலுக்குள் நுழையும்)


 அவ்வாறாக, அதாவது, அப்பனே, பின் மீண்டும் புத்துணர்ச்சி பெறுமப்பா. 


இதனால், அப்பனே, உடம்பில் உள்ள, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பல வழிகளில் கூட, நல்விதமாகவே, அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, நல் முறையாகவே, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, சில சில தரித்திரங்கள், அதாவது, பாவம், பின் நிச்சயம், பின் அணு தன்னில் கூட, அப்பனே, நிச்சயம் தொலைந்து, அப்பனே, பின் இன்னும் புண்ணியங்கள், அப்பனே, உடல் ஆரோக்கியம், அப்பனே, நிச்சயம், நிச்சயம் தன்னில் கூட,


 அவ் நேரத்தில், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஒன்றேதான் சொல்ல வேண்டும் என்பேன், அப்பனே, மணிகண்டா!!!!! சபரியனே!!!!, எவை என்று கூற, பின் ஐயப்பனே,!!!!! என்றெல்லாம், அப்பனே,!!!


(ஐயப்பனை சரண விளி... ஐயப்பன் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தால் அந்த ஜோதி ஒளிக்கதிர்கள் உடலுக்குள் வேகமாக நுழையும்)


 இவ்வாறாகவே, அப்பனே, நிச்சயம் கூறிக்கொண்டே இருந்தால், அப்பனே, நிச்சயம், அப்பனே, பின் அச்சக்தியானது, உள்ளிழுத்து, உள்ளிழுத்து, அனைத்து, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, பின் உடம்பில் உள்ள செல்கள், பின் அனைத்திலும் பரவுமப்பா. 


இதனால், அப்பனே, நிச்சயம் மீண்டும் புத்துணர்ச்சி பெறுகின்றான் என்பேன், அப்பனே, அறிந்தும் கூட!!

 இதனால், அப்பனே, பலமாக, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, அருள்கள், அப்பனே!!!,


 இவ்வாறாகவே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பலமுறை, அப்பனே, பல வழிகளில் கூட, அப்பனே, வந்திட்டு சென்றால், எதை என்று புரிய, அப்பனே!!!

(இப்படி சபரிமலைக்கு மண்டல காலத்தில் வந்து சென்று கொண்டே இருக்க வேண்டும்)


ஆனாலும், அப்பனே, யாங்கள் எல்லாம், அப்பனே, பின் அவரை,(ஐயப்பனை) நிச்சயம் தன்னில் கூட, பின் நிச்சயம், எவை என்று புரிய, அப்பனே, காணாமல் தவிக்கின்றோமே, என்றெல்லாம் எண்ணுவரும் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் கார்த்திகை, மார்கழி, பின் தை தன்னில் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அவனை, நிச்சயம் பரிபூரணமாக, பின் நிச்சயம் தன்னில் கூட, பின் அறிந்து கூட, இவ் ஒளியானது, அப்ப, நிச்சயம், பின் அண்ணாமலையிலும் கூட, நன்றாகவே, எதை என்று புரிய!!!!

(சபரிமலைக்கு சென்று ஐயப்பனை காண முடியவில்லையே என்று சிலருக்கு வயது உடல் நிலை காரணமாக போக முடியாவிட்டாலும் திருவண்ணாமலைக்கு சென்றால் அங்கு கிரிவலப் பாதையில் அமர்ந்து ஐயப்பனை நினைத்து தியானங்கள் செய்தால் அங்கும் ஐயப்பனின் அருள் ஆசிகளும் ஒளிக்கதிர்களின் சக்தியையும் பெற முடியும்)


 அப்பனே, அவ்வாறாக, நிச்சயம், பின், பின், பின், வலங்கள், அதாவது, மலையை வருகின்றோம், வலங்கள் வருகின்றோமல்லவா?
(கிரிவலம்)

 (கிரிவலம் செய்யும் இடங்களில்) 
அங்கு அமர்ந்து, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பின் தியானங்கள், அப்பனே, நிச்சயம், ஐயனை வேண்டி, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, இன்னும் ஒளிர்வுகள், அப்பனே, நிச்சயம், அப்பனே, நல் முறையாகவே அமையுமப்பா.


 இதனால், ஆற்றல் கிடைக்குமப்பா.


 இதனால், பாவம் தொலைந்து, சில புண்ணியங்கள் ஏற்படுமப்பா.


 அப்பனே, இதனால், அப்பனே, அவ் நேரத்தில், பின் நல்லவையாகவே நினைக்க வேண்டும் என்பேன், அப்பனே.


 அவ்வாறு நல்லவை, பின் நிற்க, எதை என்று அறிய, அப்பனே, பின் நல்லவை, பின், பின் நினைத்து, அப்பனே, நிச்சயம், பின், அதாவது, மனதோடு, உறுதியோடு, பின் அன்போடு, ஐயனை வணங்க வேண்டும்.

அப்படி இல்லை என்றால்!!!!, ஏதேதோ!?!? குழப்பத்தோடு, பின் வந்தால், அப்பனே, அச்சக்தியானது!!!....., எதை என்று அறிய, அப்பனே, அப்படியே விழுகின்ற பொழுது, நிச்சயம், நீ என்ன குழப்பத்தில் இருக்கின்றாயோ, அதையே, நிச்சயம், தன்னில் கூட, அமிழ்த்தி, அப்பனே, அப்படியே, பின் ஒட்டிக்கொள்ளும் அளவிற்கு, உடம்பில், அப்பனே, ஏற்பட்டுவிடும்.


 இதனால், அப்பனே, சோகங்கள், அப்பனே,!!

 இதனால்தான், அப்பனே, பின் எவ்வாறு?, எங்கு?, எதை என்று பொறுத்து, அப்பனே, நிச்சயம், நல் மனதோடு, நிச்சயம், அப்பனே, பின் எதையும் எண்ணாமல், அப்பனே, இறைவனையே, சேவித்துக் கொண்டிருக்க, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, அவ்வாறே, அவ்சக்தியானது, நிச்சயம், அப்படியே, பின் எவ்வாறு, நீ எண்ணுகின்றாய்? என்பதை எல்லாம், அப்பனே, அப்படியே, ஒட்டிச் சென்றுவிடும்.


 இதனால், அப்பனே, பக்தி சிறக்கும், அப்பனே, வருங்காலத்தில், உயர்ந்து காணலாம் என்பேன், அப்பனே.





 இதனால்தான், அப்பனே, சில பக்தர்கள், அப்பனே, நன்றாக வாழ்கின்றார்கள்!!,


 சில பக்தர்கள், அப்பனே, நிச்சயம், தோல்வியற்று, அப்பனே பின் நிச்சயம், மனக்குழப்பத்தோடு வாழ்கின்றார்கள்.


 ஆனாலும், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பின் எதை என்று கூற, பின் பல பக்தர்கள், அமைதியாக, பின் ஒழுக்கங்களாகவே, அமைதி, எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம், தெரியாமல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பேன், அப்பனே.


 ஏனென்றால், ஞானம் என்பது அவர்களுக்கு புரியும்ப்பா. 


அப்பனே, நிச்சயம், எவ்வாறு, ?எவ்வாறு? என்பதை எல்லாம், அப்பனே, நிச்சயம், பின் தத்துவங்கள், 18 தத்துவங்கள், அப்பனே, 



(சபரிமலைக்கு மாலையிட்டு எப்படி கார்த்திகை மாதம் தொட்டு மண்டலகால விரதம் இருந்து பக்தர்கள் வாழ்கின்றார்களோ அதே போல வாழ்க்கை முழுவதும் விரத நெறியை கடைப்பிடித்து வாழ வேண்டும்.

இதைப் பற்றி ஏற்கனவே நம் குருநாதர் சபரிமலையில். 19/7/2022 சித்தன் அருள் 1163... வாக்கில் விரதம் என்பது என்ன எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி வாக்கில் உபதேசம் செய்துள்ளார்.

அது மட்டும் இல்லாமல் 7/1/2023 சித்தன் அருள் 1257 ல் சபரிமலை 18 படிகள் தத்துவ ரகசியங்கள் ஐயப்பனின் அனுக்கிரகம் குறித்து குருநாதர் வாக்குகள் கூறியுள்ளார் அனைவரும் மீண்டும் ஒருமுறை படித்து உணர்ந்து கொள்ளவும்)


இன்னும் பல, அப்பனே, பின் நட்சத்திரங்கள், எவை என்று புரிய, அப்பனே, பின் ராசிகள், எதை, ஏன்?, எதற்காக?, ராசிகள் என்று, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, 


அவ் வவ், நிச்சயம், தன்னில் கூட, பின் ராசி என்பது கூட, பின் அதிர்ஷ்டம் ஆகினால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, கிரகங்கள், அப்பனே, ஒவ்வொரு, அப்பனே, பின் நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, எவை என்று பொறுத்து, அப்பனே, எதற்காக,? ராசிகள் என்றெல்லாம், அப்பொழுதெல்லாம், அப்பனே, பின் ராசி என்று எதற்காக அழைக்கின்றோம்? என்பவை எல்லாம், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, பின் அறிந்தும், எவை என்று புரியாமல் இருந்தாலும், மனிதனுக்கு தெளிவுகள் பன் மடங்கு, அப்பனே, பின் நிச்சயம், பின் கொடுப்போம், அப்பனே. 


இதனால், அப்பனே, தெளிவடைந்து, பல வழிகளில் கூட, அப்பனே, இதனால், அப்பனே, பின் உண்மையை தெரிந்து கொண்டு, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட,!!!


 அப்பனே, நீங்களும், அப்பனே, பின் எதை என்று அறிய, அப்பனே, மனதாலே நினைத்துக்கொண்டு, இல்லத்திலே கூட, அப்பனே, பின் எவை என்று புரிய, அப்பனே, அவ் மாதத்தில், அப்பனே, பின் எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம், அது என்று அறிய.


 இதற்கு சரியான எடுத்துக்காட்டு, அப்பனே, பின் ஐயப்பனே!!!!!! என்று அழைப்பதே, அப்பனே, நிச்சயம், பின் எதை என்று கூற, அப்பனே, பின் அவ்வொளியானது வருகின்றது, அல்லவா? அப்பனே, அதற்கும், அப்பனே, அதாவது, அனைவருமே மனிதர்கள், அப்பனே, பின் நிச்சயம், பின் எவை என்று கூற, பெயரை அழைத்து, அழைத்து, அப்பனே, நிச்சயம், அதேபோலத்தான், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, இதற்கும் சக்தியானது, அப்பனே, பின் எவை என்று அறிய, அப்பனே, மறைமுகப் பொருள், அப்பனே, இவைதன், அப்பனே, நிச்சயம், பின் ஐயனே,!!!! 
 அதாவது,

 ஐயப்பனே,!!

 மணிகண்டனே!!, 

பின் சபரிநாதனே!!

 இன்னும் பல தத்துவங்கள், அப்பனே நிறைந்த, அப்பனே, பின் அழைத்தாலே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, பின் அவ்வொளியானது, அப்பனே, பிரிந்து சென்று, அப்பனே, அங்கங்கு தாக்குமப்பா.

(கார்த்திகை மார்கழி தை மாதத்தில் இல்லத்தில் இருப்பவர்களும் ஐயப்பனை மனதார தொழுது ஐயப்பனை சரணம் அதாவது ஐயனே ஐயப்பனே மணிகண்டனே சபரிநாதனே இன்னும் சாமியே சரணம் ஐயப்பா என ஐயப்பனின் திருநாமங்களை ஐயப்பனின் தத்துவங்கள் சரணம் நாமங்கள் கூறினாலே கூறி அழைத்தாலே அந்த ஒளி சக்தி நம்மை வந்து அணுகும்)


 இதனால், அப்பனே, எதற்காக, இறைவனை வணங்குகின்றோம்??, எதற்காக, பின் அழைக்கின்றோம்?? என்பவை எல்லாம், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, எதை என்று புரிய, அப்பனே. அவ்வாறு, நிச்சயம், இங்கிருந்து, பன்மடங்கு,!!!! சாமியே, பின் சரணம், ஐயப்பா என்றெல்லாம், சரணம் இடுவார்கள், அல்லவா?


 அப்பனே நிச்சயம், தன்னில் கூட, அவ்சக்தியான, பின் ஒளியின் தன்மை கூட, அப்ப, நிச்சயம், அப்படியே, எது என்று அறிய, உள்ளுக்குள், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அதாவது, உள்ளுக்குள், பின் இழுத்து, அப்பனே, உடம்பில் பரவுமப்பா.


(சபரிமலையில் சுவாமியே சரணம் ஐயப்பா என்று சரண கோஷம் அழைத்து அருளை பெற்றவர்கள்)


 அப்படியே, பக்தியாக, இல்லத்திற்கு சென்றாலே, போதுமானதப்பா. அப்பனே, இல்லத்தில் உள்ள அனைவருக்குமே புண்ணியம்!!!, 


ஆனால் மனிதனோ, இந்நிலையில், அப்படி செய்வதே இல்லை.!!!


 எங்கெங்கோ, அலைந்து, திரிந்து, அப்பனே, எதை எதையோ!? செய்கின்றான், அப்பனே.

இதனால்தான், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, இங்கு (சபரிமலைக்கு) சென்று, அப்பனே, தரிசித்து, அப்பனே, இல்லத்தை அடைந்து, எதை என்று அறிய, அப்பனே, நிச்சயம், அனைவரும், பின் நிச்சயம், இல்லத்தில் உள்ளவர்களுக்கும் சக்திகளும் கொடுங்கள்.


 ஆனாலும், மனிதன், அப்பனே, பின் அவ்வாறு கொடுப்பதே இல்லை என்பேன், அப்பனே. 


ஆனாலும், அப்பனே, அங்கு சென்றேன்!!!, இங்கு சென்றேன்!!!, எதுவுமே நடக்கவில்லை என்று, அப்பனே.


ஆனாலும், எப்படி?, ஏது?, எவை என்று புரிய, அப்பனே, எப்படி வணங்க வேண்டும்?? என்பதை எல்லாம், அப்பனே, தெள்ளத் தெளிவாக குறிப்பிட்டுக் கொண்டே வந்து கொண்டே இருக்கின்றேன், அப்பனே.


 இதனால், அப்பனே, மனிதன் எல்லை மீறினால், அப்பனே, பின் இறைவனும் கூட எல்லை மீறுவான் சொல்லிவிட்டேன்,அப்பனே!!!!


 அப்பனே. இதனால், பெருத்த அழிவுகள், அப்பனே, வந்து கொண்டே,!!!!....


 ஆனாலும், அப்பனே, அதை தடுக்க, அப்பனே, யாங்கள் வாக்குகள் சொல்லிக் கொண்டே இருக்கின்றோம், அப்பனே. அப்பனே, நலங்களாகவே, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட,!!


 இவ்வாறாகவே செய்திட்டு, செய்திட்டு, அப்பனே, நீங்கள் வெற்றி பெற்று, அப்பனே, மற்றவர்களையும் வெற்றி பெறச் செய்து, அப்பனே, பின் புண்ணியங்களையும் கூட ஆக்குக, அப்பனே, நலங்களாகவே,


 அப்பனே, பின் அதாவது, மணிகண்டனின் ஆசீர்வாதங்கள்,!!!! அப்பனே, பல கோடி, அப்பனே, மனிதனுக்கு எவை என்று கூற இருந்தாலே, அப்பனே நிச்சயம், தன்னில் கூட, 

(மணிகண்டனின் ஆசிர்வாதங்கள் மனிதர்களுக்கு கிடைத்து விட்டாலே அனைத்தும் மாறிவிடும்)



அப்பனே, பின் அதாவது, எவ்வாறு? இவந்தனுக்கு பிடிக்குமோ?, அவ்வாறாக, அப்பனே, விரதம் இருந்து விட்டாலே, அப்பனே, நிச்சயம், இவ்வுலகம் உனை போற்றுமப்பா, நல்விதமாக,


(ஐயப்பனுக்கு பிடித்தவாறு பக்தி விரதங்கள் அனுசரிக்க வேண்டும்)


 அப்பனே, எண்ணங்கள் உயர்வாக இருந்தால், அப்பனே, நிச்சயம், அப்பனே!!!!!!

, அதாவது, என்னால் வர முடியவில்லையே என்றெல்லாம், அப்பனே, ஏங்குபவருக்கும் கூட, அப்பனே,!!..... மனமறிந்து, அப்பனே, நிச்சயம், ஆனந்த கண்ணீரோடு இருந்தாலே, அப்பனே, ஐயன், தன் இல்லத்திற்கு வருவானப்பா.

(சூழ்நிலைகள் காரணமாக சபரிமலை செல்ல முடியாதவர்கள் வீட்டில் பக்தியோடு ஆனந்த கண்ணீரோடு ஐயப்பனே என்று தொழுதாலே ஐயப்பன் தம் தன் வீட்டிற்கு வருவார்)



 அப்பனே, இன்னும், அப்பனே, லீலைகள், அப்பனே, சொல்வேன், நலங்களாகவே, அப்பனே, 


கேட்டு, அப்பனே, நன்கு அறிந்து, அப்பனே, எவ்வாறு எல்லாம், அப்பனே, இவ்வுலகத்தை வெல்லலாம்? என்பவை எல்லாம், அப்பனே, பின் , அறிந்திருந்து, அப்பனே, உங்கள் சந்ததிகளுக்கும் கூட, இவை பயன்படுத்தட்டும்,


(குருநாதர் இன்னும் ஐயப்பனின் லீலைகள் இன்னும் பல ரகசியங்களை வாக்குகளில் கூறப்போகின்றார் இதைக் கேட்டு நாமும் பயன் பெற்று நம்மளுடைய பரம்பரையும் பயன்படுத்திக் கொள்ளட்டும்)


 அப்பனே, இன்னும், அப்பனே, பல நூல்கள், அப்பனே, எவ்வாறு, எவ் தத்துவத்தை?, எவ் மந்திரத்தை? உச்சரித்தால், அப்பனே, பின் நட்சத்திரத்தையும் காணலாம், எவை என்று புரிய, அப்பனே !!


அப்பனே, பின் எது என்று உன் சொந்த, உன் சொந்த, அப்பனே, பின் நட்சத்திரம்,

(அவரவர் ஜென்ம நட்சத்திரம்)

 எவ்வாறு, அப்பனே, எவ்வாறு எல்லாம், அப்பனே, பின் கிரகங்களையும் கூட, அப்பனே, ஆராய்ச்சிகள், இன்னும், இன்னும், அப்பனே, என் பக்தர்களுக்கு, யான் செப்பி தெளிவுபடுத்தி, அப்பனே, நிச்சயம், அவர்களையும் கூட, அப்பனே, மற்றவர்களுக்காக, அப்பனே, விளக்கச் செய்து, அப்பனே, புண்ணியத்தையும் கூட, பின் மற்றவர்களுக்கும் புண்ணியத்தையும் கூட!!!!,


 இவ்வுலகத்தில் புண்ணியம் (செய்வது சேகரிப்பது) சாதாரணம் இல்லை என்பேன், அப்பனே.


 அதில், அதனை, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, கலியுகத்தில், கலியுகத்தில் செய்ய முடியாத போல், அப்பனே, பிரம்மனும் கூட, அப்பனே, பின் ஏற்கனவே முன் உரைத்தார்களே, அப்பனே. 

(கூட்டு பிரார்த்தனையில் பிரம்மா கலியுகத்தில் மனிதர்களால் புண்ணியம் செய்வது கஷ்டம் என கூறிய வாக்கு)


இதனால், அப்பனே, முன் நின்று, அப்பனே, புண்ணிய பாதைக்கு வாருங்கள் என்பேன், அப்பனே. 

நிச்சயம், வந்துவிட்டாலே, போதுமானதப்பா.

 அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, ஒரு அடி, அப்பனே, பின் எடுத்து   வையுங்கள், அப்பனே. பல அடி வைத்து வைக்க, அப்பனே, தாராளமாக, அப்பனே, இறைபலங்கள் உங்களை வரவேற்க, அப்பனே. (காத்திருக்கின்றது)


(தூய்மையான எண்ணத்தோடு இறைப்பாதையில் நாம் ஒரு அடி வைத்தால் இறைவனின் சக்தி நம்மை நோக்கி 100 அடி எடுத்து வைக்கும்)


ஆனாலும், அப்பனே, நன்முறையாகவே, அப்பனே, அதாவது, அப்பனே, பரந்த, அப்பனே, பின் நிச்சயம், தன்னில் கூட, மனதை வையுங்கள், நன்முறைகளாகவே. இதில் இல்லம் அமைத்துக் கொண்டால், இறைவன், அப்பனே, யாராலும் ஒன்றும் செய்ய முடியாதப்பா.
(பரந்த மனதில் இறைவன் வந்து அதாவது பரந்த மனதான இல்லத்தில் வந்து இறைவன் குடி புகுவார்)

 அப்பனே, ஐயனின் ஆசீர்வாதங்கள், நலங்கள், அப்பனே, மீண்டும், அப்பனே, ஒரு வாக்கியத்தில் செப்புகின்றேன், ஆசிகள், ஆசிகள்.!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!