"சித்த மார்கத்தில்" நுழைந்து கவனித்த பொழுது, பல நேரங்களில் சித்தர்கள் உதிர்த்த அறிவுரைகள், உங்கள் அனைவருக்காக!
- மனம் ஒன்று படவேண்டும், தினமும் த்யானம் செய்.
- எண்ணம் கரைந்து மௌனமாக வேண்டும், புருவமத்தியில் கவனத்தால் ஓம் என்று எழுது.
- முகம் மறக்க வேண்டும், உன் முகத்திலிருந்து தொடங்கு.
- எதற்கும் பயப்படாத மனம், ஆன்மீகத்துக்கு வேண்டும். இறையை உள் அமர்ந்து.
- மந்திரம், ஜபம், யாகாதி கர்மங்கள் யாருக்கு தேவை என கண்டுபிடி, செயல்கள் தெளிவாகும்.
- அதிர்வலைகளே, சக்தி இருப்பின் சாட்சி.
- பிரார்த்தனை நியாயமானால், உடன் நிறைவேற்றப்படும். பொதுநலமானால், யோசிக்கும் பொழுதே நடந்துவிடும்.
- நம் செயல்களுக்கு சாட்சி பூதம் நாராயணன்.
- அனுபவிக்க விதித்து கர்மக் கயிற்றுடன் அனுப்பியது சிவம்.
- கிரிவலம், ஒரு கர்ம கயிற்றை அவிழ்த்து இறைவனை கட்டுகிறது.
- பசியாற்றுபவன், பசிக்காமல் இருக்கும் நிலை அடைவான்.
- எப்படி வாழ்ந்தால் இறைவனுக்கு பிடிக்குமோ, அப்படி வாழ்வது, இறை, சித்தர்கள் அருகாமையை கொண்டு தரும்.
- எளிய வாழ்வு, சுமப்பது எளிது. கர்மாவும் சேராது.
- கர்மபரிபாலனம், கர்மபரிவர்த்தனம் என இரண்டு உண்டு.
- கைநீட்டுபவனிடம் இல்லை என்று கூறாதே.
- வீட்டை விட்டு, கோவிலை விட்டு செல்லும் பொழுது "உத்தரவு" என கூறி செல்.
- விளக்கு ஏற்றும் பொழுதும், தீபத்தை குளிரவைக்கும் பொழுதும், பிரணவத்தை ஓது.
- பூர்வ ஜென்ம எதிரிகள், இப்பொழுது நண்பர்கள், பூர்வ ஜென்ம நண்பர்கள் இப்பொழுது எதிரிகள் - இருவரும் நம் கர்மாவை கழிக்க வந்தவர்கள்.
- எதற்காக ஒரு இடம் செல்கிறோம் என்று தெரியாமலே இருந்தால், அமைதியாக நடப்பவைகளை கவனி. மிகப்பெரிய பாடங்கள் அங்கு கற்பிக்கப்படும்.
- இறைவன் திருவடியன்றி, எதுவும் நிலையில்லாதது.
- மரணம் இறைவன் தீர்மானித்தது, முன்னரே தெரிய வந்தால் கூறி பிரம்மஹத்தி தோஷத்தை வாங்கிக் கொள்ளாதே.
- த்யானத்தில் உள்ளே சிவத்தை பார்ப்பதே அதோமுகம்.
- இறந்த பின் உடல் பஞ்சபூதத்தில் சேரும், ஆத்மா பராபரத்தில் சேரும்.
- உறவுகள் கேட்டு வாங்கி வந்ததல்ல. நம் கர்ம கழிவுக்காக வந்தவர்கள்.
- ஒரு உயிரை மாய்க்க ஆயுதம் தேவை இல்லை. தவ வலிமையுடையவனின் வாக்கே போதும்.
- ஒருவனுக்கு இரு ஜாதகங்கள், பிறந்த பொழுது, நிகழ் காலம். இரண்டையும் பார்ப்பவன், கர்மாவை சரியாக பார்ப்பான்.
- தினமும் பஞ்ச பூதங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
- அஷ்ட திக்கை கட்ட தெரிந்தவனை அணுகுவது கடினம்.
- மனிதனிடம் பேசுவதே, கர்ம பரிவர்த்தனை நடத்தும்.
- இறந்த மனிதன் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டால், அவ் உறுப்புகள் பஞ்ச பூதத்துக்கு வந்து சேரும் வரை அந்த ஆத்மா அலைய வேண்டி வரும்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
