​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 16 January 2026

சித்தன் அருள் - 2071 - அன்புடன் அகத்தியர் - ஜிந்துபிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணியம் சுவாமி கோயில், கொழும்பு வாக்கு!






அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 24/12/2025  அன்று முருகப்பெருமான் உரைத்த வாக்கு

தேதி  : 24/12/2025, புதன்கிழமை
ஸ்தலம் : ஜிந்துபிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணியம் சுவாமி கோயில், கொழும்பு, ஜெயந்தி நகர், ஸ்ரீலங்கா.

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.

=======================================
# அன்புடன் முருகப்பெருமான் வாக்கு
=======================================

அகிலத்தை தன் கையில் வைத்துக்கொண்ட தாயே, தந்தையே, பணிகின்றேனே உமை. உரைக்கின்றேனே, பின் இவைதன் அறிந்து சில பின் புண்ணிய செய்தோருக்கெல்லாம் அறிந்தும் வேலனவனே.

=======================================
# பாடல் வடிவில் - அன்புடன் முருகப்பெருமான் வாக்கு
=======================================

என்னென்றும் எதனை விட்டிற்டிற்று,

அதனை என்றும் அருந்திட்டு வந்தீர்களே என்று சொல்லேனே,

என்ன என்று இக் கலியுகத்தில் என்னென்ன ஏது நடக்கின்றது என்று தெரியவில்லையே,

அறிந்து கொள்வீர், அன்றென்றும் தானே சித்தர்களே,

அன்றென்றும் தானே சித்தர்களே,

உமை காக்க வந்துள்ளார்களே, என்றும் நிச்சயம் தானே வெற்றியுமே,

அன்பென்று தானே இருந்திலர்களே,

அன்பென்று தானும் இருந்துள்ளீர்களே,

அதனையும் தன்னை பல மடங்கு தானென்று அகத்தியனே வந்திடுவான்,

அகத்தியனே வழிநடத்திடுவான்,

அறிந்தும் என்றும் எங்கள் ஆசிகள்,

வள்ளி தெய்வானையோடு வந்திட்டேனே,

வள்ளி தெய்வானையோடு வந்திட்டேனே,

என்றென்றும் ஞானங்கள் இன்னும் தானே கிடைக்கப்பெற்று, வல்லமையே,

என்றென்றும் ஞானங்கள் தானே கிட்டிற்று,

உமக்கு வெற்றியாலே,

உண்டு உண்டு என்பதை அறிந்தீர்களா,

உண்டு உண்டு என்றது அறிந்தீர்களா,

சித்தர்கள் தன்னை வழிநடத்துவார்கள்,

சித்தர்கள் தன்னையே வழிநடத்துவார்கள்,

அன்பென்றும் தானே உள்நின் நின்று,

எதனைத்தான் எடுத்திட்டு தானே வந்துள்ளீர்கள் தானே, பாவத்தையே,

பாவத்தை யானே நீக்கிடுவேனே,

பாவத்தை யானே நீக்கிடுவேனே,

அறிந்தும் உமை அறியாத இருந்தும் யானே தன்னை நன்கு உணர்ந்துண்டு,

எத்தனை எத்தனை பிறவிகள் தன்னை,

எத்தனை எத்தனை பிறவிகள் தன்னை,

வந்து வந்து எமை நாடி, எமை நாடி, புண்ணியத்தை,

புண்ணியத்தை சேர்த்துக்கொண்டீர்,

புண்ணியத்தை சேர்த்துக்கொண்டீர்,

அதனால் தானே புண்ணியம் தானே வழி நடத்துவோமே,

அகத்தியன் தன்னை, இன்னும் தன்னை,

அகத்தியன் தன்னை, இன்னும் தன்னை,

புண்ணிய காரியங்கள் ஈடுபடுத்திக் கொண்டு,

புண்ணியத்தை பெருக்கி தானே,

அதிலிருந்து நீங்கள் தன்னை, வாழ்ந்திடுவார்களே, வாழ்ந்திடுவார்களே,

உங்களை சார்ந்தோரும் தானே வாழ்ந்திடுவார்களே.

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-  (முருகப்பெருமான் வந்து சொல்வது என்னவென்றால்  “நீங்கள் எல்லாரும் புண்ணியம் செய்ய பிறந்தவர்கள். அதற்காகத்தான் இந்தப் பிறவி.”  அவ்வளவு தெளிவாக அவர் சொல்லி இருக்கிறார். )
 
அடியவர் :-  “உறவுகள் (பிறவிகள்) எடுத்து புண்ணியம் செய்து வந்திருக்கிறோம்.

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-
( பாடல் முடிந்ததும் முருகப்பெருமான்  அவர் சொல்வது:
“நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு என்ன தேவையோ, சில பாவங்களால் சில தடை, தாமதம் இருந்தாலும்,  சில விஷயங்கள் நடக்காமல் இருந்தாலும், அகத்தியர் பல வழிகளில் உங்களுக்கு புண்ணியத்தை சேர்த்து,  அந்தப் புண்ணியத்தின் வழியாக உங்களை எடுத்துச் செல்வார்.  அதனால் கவலைப்பட வேண்டாம்.”
அகத்தியர் என்ன செய்வார் என்றால்,  நீங்கள் இன்னும் சாதிக்க வேண்டிய காரியங்கள் இருக்கின்றன.  அதற்காக அவர் உங்கள் மனதை மாற்றி,  “இந்தப் புண்ணியத்தை இப்படிச் செய்தால் அந்த காரியம் நிறைவேறும்” என்று உணர்த்தி,  உங்களை சரியான பாதைக்கு அழைத்துச் செல்வார்.
நீங்கள் எந்தக் காரியத்தையும் விரும்பி இருந்தாலும்,  அகத்தியர் அதை உணர்ந்து, உங்களைப் பார்த்து,  அந்தப் புண்ணியப் பாதைக்கு ஏதோ ஒரு வழி  மூலமாக அழைத்துச் சென்று,  அந்தப் புண்ணியத்தை உங்களுக்கு கொடுப்பார். அந்தப் புண்ணியம் உங்களை உயர்த்தி,  உங்கள் வாழ்க்கையை மாற்றி விடும்.
பல பிறவிகளாக நீங்கள் கஷ்டப்பட்டு வந்திருக்கிறீர்கள்.  அந்தப் புண்ணியத்தால்தான் முருகப்பெருமான்  நானும் வந்திருக்கிறேன். உங்களுக்கு சொல்லுவதற்காகவே வந்திருக்கிறேன் வள்ளி தெய்வானை தேவியுடன்.
உங்கள் காரியங்கள்  சில பாவங்களால் தடைப்பட்டிருந்தாலும், அதை நான் எனது ஆசீர்வாதத்தால் மீட்டுக்கொண்டு உங்களை நல்லபடியாக முன்னேற்றிவிட்டு போகிறேன்.  கவலைப்பட வேண்டாம் என்று அவர் சொல்லி இருக்கிறார் இதுதான் பாடலில் வரும் பொருள். )
=======================================
# மீண்டும் பாடல் வடிவில் - அன்புடன் முருகப்பெருமான் வாக்கு
=======================================

என்னென்று எதனை என்றென்றுமே

எப்பொழுதும் பின் துணை இருப்பார், அறிந்தும்…….

அறிந்திருந்தானே, என்றென்றிருந்து எப்பொழுதும் எதனை காத்து நின்று, என் தந்தை தானே, அதற்காகவே

புண்ணியம் செய்தோர்கள், எப்பொழுதும்

புண்ணியர்கள் செய்தவர்கள், எப்பொழுதும்

வழியா வழியா வந்தவர்கள் தானே, ஒரு ஆன்மா தன்னை வழிநடத்தும்,

இதனால் தன்னை பிரச்சனைகள் பின் அகலுமே, அகலுமே,

மனிதனுக்கு இவையாவும் தெரியாதென்ற போதிலும், போதிலும் எவை என்று அறிந்து ,

அறிந்து ஒன்று செப்பினேனே, அறிந்து ஒன்று செப்பினேனே,

இதனை தன்று உமையாக்கி, பின் நீங்களாக, பின் இருந்தாலும்,

அவ் ஆன்மா தன்னை வழிநடத்திடுமே,

என் தந்தையர்  தாயின்  கட்டளையே,

====================================
# ஆதி ஈசன், அன்னை பார்வதி தேவியின்  கருணையால், கட்டளையால்  - உலகில் புண்ணியம் செய்யும் அனைத்து ஆன்மாக்களுக்கும் , மற்றொரு ஆன்மா துணை நிற்கும். இவ் வாக்கின் முக்கிய கருத்தே இந்த ரகசியம்தான். இவ் வாக்கின் மூலம் உலகிற்கு முதன் முறையாக வெளிவந்த ரகசியம் இது.
====================================

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-
( பொது வாக்கு ரகசியங்கள் :- யாரெல்லாம் புண்ணியம் செய்கிறீர்களோ, புண்ணியம் செய்யும் பாதைக்கு செல்கிறீர்களோ, என் தாயும் தந்தையும் — முருகப்பெருமான் சொல்கிறார் — “உங்களுக்கு தெரியாது… இந்த உலகத்தில் யார் ஒருத்தர் புண்ணியப் பாதைக்கு போகிறார்களோ, அவர்களுக்கு இன்னும் நல்லது நடக்கணும் என்று நினைத்து,  ஒரு ஆன்மா அவர்களுக்கு தெரியாமலே அவர்களுடன் சேர்ந்து நிற்கும்” என்று.
எல்லாருக்கும் ஒரு எக்ஸ்ட்ரா ஆன்மா வைக்கப்பட்டிருக்கும். நீங்கள் புண்ணியம் செய்தால், அந்த ஆன்மா உங்களை பாதுகாக்க நிற்கும். உங்களுக்கு தெரியாமலேயே, சிவன் அந்த ஆன்மாவை அனுப்பி வைத்திருக்கிறார். அது எப்போதும் உங்களை காக்கும்.
அதனால்தான் பெரிய பெரிய ஆளுங்க,  நல்லது செய்யும் போது,  யாராவது எதிர்த்தாலும்,  எதோ மனசு கலங்கினாலும், அவர்களுக்குத் தீங்கு செய்ய முடியாது. ஏனெனில் ஈசன் அறிந்திருக்கிறார். ஈசன் அவர் எல்லாரையும் காப்பாற்றுகிறார்.
முருகப்பெருமான்  சொல்கிறார்:  “இது யாருக்கும் தெரியாது.  நல்லது செய்பவர்களுக்கு ஒரு ஆன்மா எப்போதும் துணையாக இருக்கும். அது ஒரு இரண்டாவது என்ஜின் மாதிரி.”
ஒரு வண்டியில் இரண்டு இன்ஜின் இருக்கும் போல, ஒரு இன்ஜின் நின்றாலும், அடுத்த இன்ஜின் புஷ் பண்ணி முன்னேற்றும். எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், அந்த இரண்டாவது இன்ஜின் பின்னால் இருந்து  “விட்டுடாத… விட்டுடாத…” என்று தள்ளி முன்னேற்றும்.
இதை யாரும் அறிய மாட்டார்கள். ஆனால் என் தாய் தந்தை — முருகப்பெருமான் — சொல்கிறார்: “இது உலகத்துக்கு பொதுவான விதி. யாரெல்லாம் புண்ணியம் செய்து, அடுத்தவருக்காக உழைக்கிறார்களோ, அவர்களுக்காக ஒரு ஆன்மா எப்போதும் துணை நிற்கும்.”
இது ஒரு மறைமுகப் பொருள், ஒரு ஆழமான உண்மை என்று முருகப்பெருமான் கூறுகிறார் )

=======================================
# மீண்டும் பாடல் வடிவில் - அன்புடன் முருகப்பெருமான் வாக்கு
=======================================


என்றென்றும் அறிந்திடும் உண்மைதானே,

எப்பொழுதும் எங்கே, எவ்வளவுதானே,

எங்கே இருப்பேனே, அன்றென்றென்றும்

இங்கும் தானே, ஆசிகள் தானே, எப்பொழுதானே, எதை பின் நினைத்தாலும், தானே, யானே தருவேன்.

===============================================
ஸ்ரீ சிவசுப்பிரமணியம் சுவாமி ஆலயத்தில் முருகப்பெருமான்  அருளும்  ரகசியங்கள்
================================================

சுவடி ஓதும் மைந்தன்  :-  ( இந்த ஆலயத்தைப் பற்றி முருகப்பெருமான் சொல்கிறார்:  “எதை நினைத்தாலும், நான் தருவேன். வாருங்கள், நான் இங்கே இருக்கிறேன்.  இங்கே நீங்கள் எதை வேண்டிக் கொண்டாலும், அதை நான் தருவேன். )

=======================================
# மீண்டும் பாடல் வடிவில் - அன்புடன் முருகப்பெருமான் வாக்கு
=======================================

அன்பென்று எதன் என்று உண்டேனே,

சில சில சில சில யோசனைகள், எப்பொழுதும் பின் அவை தானே, குழப்பங்களாகி,

குழப்பங்களாகி, சற்றும் தாமதம் நீடித்துச் சென்றோமே, சென்றோமே.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-  (சில விஷயங்கள் நீங்கள் செய்யப் போகும் போது, நீங்கள் மனதில் ஏதாவது நினைத்து ஒரு காரியத்தை தொடங்கினால்,  அதிலே சில குழப்பங்கள் வரும். நீங்கள் ஏதாவது செய்ய நினைத்தாலும், அதைச் செய்யும் நேரத்தில் கொஞ்சம் குழப்பம்,  சில தடங்கல்கள், சில சந்தேகங்கள் வரும். சில குழப்பங்கள் வருவது சாதாரணம். ஆனா அவை எல்லாம் கொஞ்சம் நேரம் நீடிக்கும்.  அதுக்கப்புறம் எல்லாம் சரியாகி விடும். சரியாகி விடும்.)
=======================================
# மீண்டும் பாடல் வடிவில் - அன்புடன் முருகப்பெருமான் வாக்கு
=======================================

எவையே என்றும் அறிந்திலானே,

மனிதன் தன்னை அறிந்திலானே,

பின் ஏன் என்று குழப்பங்கள் வருவதென்று,

சொல்கின்றேனே, கேளடா,

சொல்கின்றேனே, கேளடா,

அறிந்தும் அவை தன் ஏன் தன்னின் பின் குழப்பங்கள் ஆகி நிற்கின்றன,

=======================================
# குழப்பங்கள் ஆகும் போது அறிவு,தெளிவு பலமாகும்
=======================================

குழப்பங்கள் ஆகும்போது அறிவுதானே,

குழப்பங்கள் ஆகும்போது அறிவுதானே,

தெளிவு பெற்று அறிந்திருவீர், உண்மை பொருளை, பின் உண்மை பொருளை,

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-  ( ஒரு காரியம் எடுக்கும்போது ஏன் தடங்கள், தாமதங்கள், கஷ்டங்கள்—even பெரிய கஷ்டங்கள்—வருகின்றன என்றால், அதன் காரணத்தை நீங்கள் அந்த நேரத்தில் அறிந்திருக்க மாட்டீர்கள். ஆனால் அந்த காரியத்தின் உள்ளே போகப் போக, “ஓ, இப்படித்தான்… இது இப்படித்தான்…” என்று அதன் பயனும் அறிவும் உங்களுக்கு தெளிவாகத் தெரியும். அறிவு இல்லாதபோது தான் தடங்கள் வரும்; “ஏன் , தடங்கள் நமக்கு வந்தது?” என்று எல்லாரும் சொல்லிக் கொள்வார்கள். ஆனால் ஏன் தடங்கள் வருகிறதென்று மனிதனுக்கு தெரியாது.
ஏதோ ஒரு தடை வரும், ஏனெனில் அந்த விஷயத்தைப் பற்றி நீங்கள் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும்; அப்போதுதான் அடுத்த படிக்கு செல்ல முடியும். நீங்கள் அறிந்தும் அறியாமலும் இருக்கும் அந்த இடைவெளியில் தான் கஷ்டம் வரும். அதனால்தான் இறைவன்—முருகப்பெருமான் —சொல்கிறார்: “உனக்கு அறிவு வளர வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தடங்கள், தாமதங்கள் வருகிறது.” நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்; “இது நடக்குமா?” என்று நினைத்தாலும் முயற்சி செய்ய வேண்டும்; பொறுத்து இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த அறிவு உங்களுக்கு வெளிப்படும், அப்போதுதான் காரியம் வெற்றி பெறும். இது என் ஈசன், என் அப்பாவின் கட்டளை. ஒரு காரியம் சாதாரணமாக டக்குனு முடிந்துவிட்டால் அதற்கு வழி இல்லை; அறிவு வளராது. டக்குனு நடந்தது என்றால் டக்குனு போய்விடும்—அவ்வளவுதான், முடிந்துவிடும். புரிகிறதா, ஐயா.)

=======================================
# மீண்டும் பாடல் வடிவில் - அன்புடன் முருகப்பெருமான் வாக்கு
=======================================

இவை யாவும் என்றென்றும், பின் அகத்தியன்  தானே, தெளிவுகள் தானே,

நிச்சயம் தன்னை பொறுத்திருந்தாலே, பின் அனைத்தும் தானே வழங்கிடுவானே .

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-  (  இப்ப எல்லாரும் கேட்கிறீங்களே, அகத்தியர் என்ன செய்வார் என்றால், தெளிவுகளை உங்களுக்கு கொடுப்பார். அப்போ அந்தந்த விஷயங்களை நீங்கள் எளிதாகப் புரிந்துகொள்வீர்கள். இன்னும் ஒரு மாதத்துக்குள்ளே, சில விஷயங்களில் உங்களுக்கு தெளிவு வரும். நீங்கள் அந்தந்த விஷயங்களை நினைத்துக்கொண்டே இருந்தால், அதற்கான தெளிவு உங்களுக்கே உள்ளிருந்து கிடைக்கும்.)

=======================================
# மீண்டும் பாடல் வடிவில் - அன்புடன் முருகப்பெருமான் வாக்கு
=======================================

எப்பொழுதும் பின் புண்ணியத்தை,

எப்பொழுதும் தன்னை புண்ணியத்தை,

நாடி நாடி, பின் செல்வோர்க்கு,

பின் அகத்தியன்  தானே இருப்பானே,

எப்பொழுதும் தன்னை இதில் தானே, மனதில் தானே வைத்துக் கொள்ளுங்கள்,

=======================================
# புண்ணியத்தை நாடி நாடி போக போக, அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவர் எப்போதும் துணை இருப்பார். அனைவரும் இதனை மனதில் தானே வைத்துக் கொள்ளுங்கள்.
=======================================


சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (புண்ணியத்தை நாடி நாடி போக போக, அகத்தியர் கூடவே இருப்பார், உங்களுக்கு வந்து தெரிவிப்பார்)

=======================================
# மீண்டும் பாடல் வடிவில் - அன்புடன் முருகப்பெருமான் வாக்கு
=======================================

எத்தனை எத்தனை …..

எப்பொழுதும் எவையே  என்று புண்ணியங்கள் செய்தோர்கள் வரவழைத்துள்ளேனே,


சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( நீங்கள் எத்தனை எத்தனை புண்ணியங்கள் செய்துள்ளீர்களோ, அதனால்தான் உங்களை நான் வரவழைத்தேன், “நான் வருகிறேன்” என்று முருகப்பெருமான் சொல்கிறார். முருகப்பெருமான் சாதாரணமாக வரமாட்டார், இப்படி நின்று நேராக சொல்ல மாட்டார். ஆனால் நீங்கள் பல விதங்களில், பலருக்கும் உதவியாக, நாலு பேருக்கு உதவிகரமாக இருந்ததால்தான், அந்தப் புண்ணியத்தின் பலனாகவே முருகப்பெருமான் நான் இப்போது வந்திருக்கிறேன் என்று முருகப்பெருமான்  அவர் கூறுகிறார்)

=======================================
# மீண்டும் பாடல் வடிவில் - அன்புடன் முருகப்பெருமான் வாக்கு
=======================================

ஆலயத்தில் பின் வைத்தேனே,

என்றென்றும் தானே, நிம்மதியாக, பின் அறிந்திருந்தும்,

பின் உன் மனிதனுக்கு வரும் காலில் நிம்மதி இல்லை,

வரும் காலங்களில் நிம்மதி இல்லை,

அறிந்தும் ஏன் என்று செப்பினேனே, பின் கடமைகள் தானே, ஒழுங்காக,

ஒழுங்காக, பணி செய்ய மாட்டான், அதற்காகத்தானே சித்தர்கள் தானே,

பின் அறிந்து உண்மையை மனிதனுக்கு செப்ப.


சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( வரும் காலத்தில் மனிதன் நிம்மதியாக வாழ மாட்டான்; ஏன் வாழ மாட்டான் என்றால், தன் கடமைகளை சரியாக செய்ய மாட்டான். கடமைகள் சரியாக செய்யாததால் வாழ்க்கையும் சரியாக இருக்காது. அதனால்தான் சித்தர்கள் வந்து, “நீ இது செய்தால் , இது இப்படி நடக்கும்; இதைச் செய்தால் அது நடக்கும்” என்று சொல்லப் போகிறார்கள். மனிதன் தவறாமல் நடக்க வேண்டியதைச் செய்ய வழி காட்டுவதற்காகத்தான் அவர்கள் இப்படிச் சொல்வார்கள்)

=======================================
# மீண்டும் பாடல் வடிவில் - அன்புடன் முருகப்பெருமான் வாக்கு
=======================================

இதனையும் என்றென்றும் எப்பொழுதும் அறிந்து கொண்டேன்,

யானே தானே, இல்லத்தில் தானே இருக்கின்றேனே,

இதைத்தானே முழுவதுமாக இங்கே தானே செப்பினேனே.


சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (  முருகப்பெருமான்  அவர் சொல்கிறார்: “உங்கள் வீட்டில், எல்லோர் வீட்டிலும் நான் இருக்கிறேன். இங்கிருந்து நான் சொல்கிறேன்—உங்கள் வீடுகளில் ஒவ்வொரு இடத்திலும் நான் இருக்கிறேன். உங்கள் வீட்டில் நான் இருப்பேன்.)

=======================================
# மீண்டும் பாடல் வடிவில் - அன்புடன் முருகப்பெருமான் வாக்கு
=======================================

கண்டிட்டேனே, இன்னும் தன்னை

தத்துவங்கள், பின் ஞானமாக்கி, பின் வெற்றி, பின் பெறுவீர்களே,


சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (  இன்னும் பல தத்துவங்கள்—எதை எதையெல்லாம் நீங்கள் அனுபவிக்கிறீர்களோ—அவை எல்லாம் பின்னால் ஞானமாக மாறும்; அந்த ஞானத்தால்தான் வெற்றியும் கிடைக்கும். மனிதன் ஒவ்வொரு விஷயத்தையும் நினைத்துக்கொண்டே இருப்பான்: “இது என்ன ஆகும்? இது எப்படி நடக்கும்?” என்று. அந்த எண்ணங்கள் தத்துவமாகி, பின்னர் ஞானமாக மாறும். இதுதான் உண்மை. வாழ்க்கை இப்படித்தான்—அனுபவம் ஞானமாகி, அந்த ஞானம் வெற்றியைத் தரும்.)

=======================================
# மீண்டும் பாடல் வடிவில் - அன்புடன் முருகப்பெருமான் வாக்கு
=======================================

தானே, தானே, வெற்றி தன்னை,

தானே, தானே, வெற்றி தன்னை,

வெற்றியும் யானும் கொடுத்திடுவேனே,

என்றென்றும் தானே, பயன்படுத்த தெரியாமல்,

அழிந்திடுவீர்களே, என்றென்றும் தானே,

மனிதன் இப்படித்தானே, காலங்கள், காலங்களாக,

எப்படித்தானே, குழப்பங்கள் ஏற்படுத்தி,

எப்படித்தானே, குழப்பங்கள் ஏற்படுத்தி,

பின் அனைத்தும் தானே கொடுத்திருந்தாலே, பின் வெற்றி தன்னை மறவாது.


சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (  முருகப்பெருமான் சொல்கிறார்: “நான் வெற்றியை உடனே கொடுத்துவிடலாம்; ஆனால் உடனே கொடுத்துவிட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்? அதைத் திருப்பி என்ன பண்ணுவீங்க? அதைத் தொலைத்துவிடுவீர்கள்… தொலைத்துவிடுவீர்கள்.” அதனால்தான் ஒரு காரியத்தை எடுக்கும் போது குழப்பங்களும், தடங்கல்களும் வரும். அந்த குழப்பங்கள் நிறைய வரும் போது, “இது என்ன? ஏன்?” என்று நீங்கள் அறிந்து கொள்ள ஆரம்பிப்பீர்கள்; அதிலிருந்து ஞானம் உருவாகும். வெற்றி உடனே டக்குனு கிடைத்தால், அதை நீங்கள் கடைசி வரைக்கும் வைத்துக்கொள்ள முடியாது. ஆனால் கஷ்டம், குழப்பம், அனுபவம் வந்த பிறகுதான் கிடைக்கும் வெற்றி வாழ்க்கை முழுவதும் நிலைத்து நிற்கும்.)

=======================================
# மீண்டும் பாடல் வடிவில் - அன்புடன் முருகப்பெருமான் வாக்கு
=======================================

எவ்வை என்று அறிந்தீர்களே,

எப்படிதானே அறிந்தீர்களே,

எப்பொழுதும் எங்கள் துதித்து தானே பாடியுள்ளீர்கள், நீங்களே தானே,

எத்தனை எத்தனை பிறவிகள் தானே,

போராட்டங்கள், வாழ்க்கை வாழ்ந்து தானே, இங்கு தானே வந்திருக்கின்றீர்கள்,

எப்படி எப்படி, எதன் என்றும்,

அறிந்தும் தானும் குறிக்கோளாக நிறைவேறவில்லையே,

மீண்டும் பிறப்பெடுத்து வந்துள்ளீர்களே.


சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (  ஒவ்வொருவரையும் நான் பார்த்திருக்கிறேன்—நீங்கள் எல்லாரும் ஒவ்வொரு பிறவியிலும் போராட்டத்திற்காகவே வாழ்ந்தவர்கள். போராட்டங்களை வாழ்ந்து வாழ்ந்து, சிலர் வெற்றி பெற முடியாமல் இறந்துவிட்டீர்கள்; பின்னும் திரும்பி பிறந்திருக்கிறீர்கள். புரிகிறதா? ஒவ்வொரு பிறவியிலும் ஏதோ ஒரு போராட்டம் நடத்துவதற்காக, நன்மைக்காக, மக்களுக்காக நீங்கள் வந்திருக்கிறீர்கள். அதனால்தான் அது புண்ணியம். அதனால்தான் முருகப்பெருமான் இங்கே வந்து சொல்கிறார்: “இந்தப் பிறவியிலும் நீங்கள் போராட்டத்திற்காகத்தான் வந்திருக்கிறீர்கள்; போராட்டத்திற்காகத்தான் பிறந்திருக்கிறீர்கள்.” இதுதான் உண்மை.)

=======================================
# மீண்டும் பாடல் வடிவில் - அன்புடன் முருகப்பெருமான் வாக்கு
=======================================

எப்படி ஏது அறிந்திருந்தும் உண்மை தன்னும்

போராட்டங்களாகி, பின் வெற்றியும் தானே உண்டாகும்.


சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( போராட்டத்துக்குப் பிறகு தான் உங்களுக்கெல்லாம் வெற்றி கிடைக்கும்; ஒரு காரியம் என்றால் அது சாதாரணமாக இருக்காது. அதற்காக போராட வேண்டும்—போராட்டம் வந்த பிறகே வெற்றியும் வரும்)

=======================================
# மீண்டும் பாடல் வடிவில் - அன்புடன் முருகப்பெருமான் வாக்கு
=======================================

இப்படித்தானே, என்றென்றும், மெய் எத்தனை ஞானங்கள், தெளிவுகள் தானே,

யானே தானே, இங்கு கொடுக்கின்றேன்.

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( முருகப்பெருமான் சொல்கிறார்: “இன்னும் உங்களுக்கு வெற்றி பெறுவதற்கான தெளிவுகளை நான் கொடுத்துக் கொண்டே இருக்கிறேன்… இங்கேயே கொடுத்திருக்கிறேன். நீங்கள் வெற்றி பெற வேண்டியதற்கான வழியையும் நான் உங்களுக்கு கொடுத்துவிட்டேன். நானே வந்து அதை உங்களுக்கு கொடுத்திருக்கிறேன். பார்க்கலாம்.)

=======================================
# மீண்டும் பாடல் வடிவில் - அன்புடன் முருகப்பெருமான் வாக்கு
=======================================

அன்றென்றும் எதனையும் பெற்றிட்டு,

பெற்று, பின் அருகில் தானே, நிச்சயம் தன்னையில் வெற்றிகள் உண்டு.


சுவடி ஓதும் மைந்தன் :- அருள் பலங்கள் நிறைய இருக்குது, வந்து அப்ப அருள் பலங்கள் இருந்தும், வெற்றிகள் உண்டு,

=======================================
# மீண்டும் பாடல் வடிவில் - அன்புடன் முருகப்பெருமான் வாக்கு
=======================================

எத்தனை எத்தனை குறைகள் தன்னை,

எத்தனை எத்தனை குறைகள் தன்னை,

எப்பொழுதும் பின் அதை தன்னை பக்குவமாக எடுத்துக் கொள்ளுதல்.


சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( வெற்றி கொடுத்திருக்கிறேன், வெற்றி எல்லாருக்கும் உண்டு. ஆனால் சில குறைகள் இருக்கும். அந்தக் குறைகளை நீங்கள் பெரிய பிரச்சினையாக நினைக்கக்கூடாது. அவை குறைகள் அல்ல; இறைவன் உங்களுக்கு பக்குவம் கொடுக்க வைத்திருக்கும் அனுபவங்கள். நீங்கள் வளர வேண்டும் என்பதற்காகத்தான் இறைவன் அந்த பக்குவத்தை கொடுத்திருக்கிறார்)

=======================================
# மீண்டும் பாடல் வடிவில் - அன்புடன் முருகப்பெருமான் வாக்கு
=======================================


அம்மையும் அப்பனும், அன்றென்றும் எத்தனை எத்தனை எத்தனை அழிவுகள் தானே, இன்னும் இன்னும் பின் வந்து கொண்டிருக்க,

எத்தனை எத்தனை அழிவுகள் தானே, வந்து கொண்டிருக்க, எத்தனையே,

எவ்வாறு என்பதும் தெரியவில்லை மனிதனுக்கு

பின் சந்தோஷமாகவே,

 பின் வாழ்கின்றானே,

பின் வாழ்கின்றானே,

அத்தனையும் தானே, சித்தர்கள் தானே,

அத்தனையும் தானே, சித்தர்கள் தானே,

எதிர்த்து நின்று போராடுவார் தானே,

யார் யார் தன் சித்தர்களை எடுத்து எடுத்து வந்திடுவார்களே,

மனிதர்களை தன்னை அதற்கு நிற்க வைப்பார்களே.


சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (  எத்தனை மனிதர்கள் “நாம் வாழ்வோம், சந்தோஷமாக இருப்போம்” என்று நினைத்தாலும், அழிவு வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அந்த அழிவின் நடுவிலும், சித்தர்கள் யாரின் மூலமாக என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து, அவர்களின் வழியாக அதை உலகத்துக்கு பரப்புவார்கள். இதுதான் உண்மை—புரிகிறதா? அய்யா)

=======================================
# மீண்டும் பாடல் வடிவில் - அன்புடன் முருகப்பெருமான் வாக்கு
=======================================

ஒன்றென்றும் என்றென்றும் அறிந்தீர்களே,

எப்பொழுதும் பின் ஆசிகள் தானே,

பின் வள்ளி தெய்வானையோடு வந்து கொடுத்திட்டேன்,

அனைவருக்குமே ஆசிகள் தானே,

 ஆசிகள் தானே !

ஆசிகள் தானே !!

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (  ஓகேங்க ஐயா… அப்ப என்ன சொல்கிறார் என்றால், “வள்ளி தெய்வானையோடு நான் உங்களுக்கெல்லாம் ஆசிகள் கொடுத்துட்டேன் எல்லா ஆசிகளும்  வள்ளி தெய்வானையோடு மூலமாகவே உங்களுக்கு நான் கொடுத்தவையே” என்று முருகப் பெருமான்  கூறுகிறார். புரிகிறதா அய்யா)


=======================================
# ஆலய விபரங்கள் ஜிந்துப்பிட்டி முருகர் ஆலயம் - ஸ்ரீலங்கா
=======================================

கொழும்பில் உள்ள ஜிந்துபிட்டி முருகன் ஆலயம், ஸ்ரீ சிவசுப்பிரமணியம் சுவாமி கோயில் என்று அழைக்கப்படுகிறது, இது ஜெயந்தி நகரில் அமைந்துள்ளது; இது ஒரு புகழ்பெற்ற முருகன் கோயிலாகும், பல ஆண்டுகளாக ஆடி மாத விழாக்கள் மற்றும் சிறப்புப் பூஜைகள் இங்கு சிறப்பாக நடைபெறும், பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட்டு வருகின்றனர்.

கோயில் பற்றிய சில தகவல்கள்:-
முழுப் பெயர்: ஜிந்துபிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணியம் சுவாமி கோயில்.
அமைவிடம்: கொழும்பு, ஜெயந்தி நகர்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!