​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 11 June 2026

சித்தன் அருள் - 2227 - அன்புடன் அகத்தியர் - 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 13



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 13 ( நிறைவு பகுதி )

நாள் :- 19/04/2026 (ஞாயிற்றுக்கிழமை) 
நேரம் :- காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 
இடம் : உலக நன்மைக்காக 09 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை. 


நேரலை:- https://youtu.be/C5OQ5pL4GnY?t=37707

===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு….. 
===========================


குருநாதர்:- அப்பனே, அழகாக அறிந்தும் எது என்று புரிய, சரியாகவே புரிந்து அறிந்தும் கூட இன்னும் பல வகையில் கூட ஐந்தாம் இடத்தை பின் கடக்க ரகசியங்கள் சொல்வேன். 


சுவடி ஓதும் மைந்தன் :- ஐந்தாம் இடத்தை கடந்தால் மட்டும்தான் எல்லாம் உண்டு.


அடியவர்:- இருக்கும். எல்லாம் சரியா இருக்கும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  சரியா இருக்கும். அந்த ஐந்தாம் கட—அந்த ஐந்தாம் இடத்தை வந்து கடக்கவில்லை என்றால்...


அடியவர்:-  சரியா தெரியல அப்படின்னா முடிஞ்சது.


சுவடி ஓதும் மைந்தன் :- ஒண்ணுமே தெரியாது. ஏன்னா அடுத்து ஐந்தாம் இடத்தில் குழந்தை பாக்கியம். அடுத்து ஏழாம் இடம் என்பது திருமணம். 10 தொழில். 11 வருமானம். 12... ம்... மோட்ச ஸ்தானம்ங்க ஐயா. இறைவனை காணது இல்லைங்க ஐயா.  தெரியாமல் போய்விடும். அப்ப அஞ்சுலவே நிறுத்திட்டார். அஞ்சுல நிறுத்திட்டார். அஞ்சிலே பெரும் சந்தேகம் நம்மளுக்கு வந்து, அந்த அஞ்சை கடந்தவன்... அஞ்சை கடந்தவன் எல்லாத்தையும் கடப்பான். அஞ்சை கடக்கவில்லை என்றால்...


அடியவர்:-  அங்கேயே நிக்க வேண்டியதுதான்.


சுவடி ஓதும் மைந்தன் :-  அங்கேயே நிக்க வேண்டியதுதான். 



===========================
# ஐந்தை கடக்க - “நமச்சிவாய வாழ்க” 
===========================


குருநாதர்:- அறிந்தும் எவை என்று புரிய, அதாவது ஐந்தை கடக்க வேண்டும் என்றால் ஐந்து எழுத்தோனை பிடியுங்கள். போதும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  திருப்பி என்ன சொல்லிட்டாரு?


அடியவர்:-  ஈசனை.


சுவடி ஓதும் மைந்தன் :-  உன்னால கடக்க முடியலன்னா என்ன பண்ணனும்?


அடியவர்:-  நமச்சிவாய.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐந்தோனை கடக்க முடியவில்லை என்றால் யாரை பிடிக்கணும்?


அடியவர்:-  நமச்சிவாயனை பிடிக்கணும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  நமச்சிவாயனை தான் பிடிக்கணும். 


குருநாதர்:- அறிந்தும் ஏது என்று அறிய, பின் அதாவது அறுபடையோன், பின் வெல்வான் ஏது என்று புரிய. ஏழுபடையோன் ஏது என்று அறிய, அஞ்சான் அறிந்தும் எவை என்று புரிய. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப அஞ்சில் கடக்கணும்னா, அஞ்சை பிடிச்சிட்டுங்கன்னா யாருக்கு—யாருக்கு அருள் கிடைக்கும்?


அடியவர் 4 :- ஆறுபடை முருகன்.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆறுபடை முருகனும் கிடைக்கும். ஏழு மலையானும் கிடைக்கும். 


குருநாதர்:-  அறிந்தும் ஏது என்று புரிய, பின் விட்டுவிடுவானா என்ன? சனீஸ்வரன் என்ற—சனீஸ்—எவை என்று அறிய, சனீஸ்வரனே சனி பட்டம் எவை என்று புரிய. 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப...எட்டாம் இடம். சனீஸ்வரனும் எட்டு என்பது விட்டுருவார். 


குருநாதர்:-  அறிந்தும் ஏது என்று அறிய, அதனால் பின் ஒன்பதாம் இடமும் மிகவும் சிறப்பு. அறிந்தும் ஏது என்று புரிய, அதாவது பாக்கியம் செய்வதற்கு இப்பிறவிலே வாய்ப்பு அளிப்பான் இறைவன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஒன்பதாம் இடம் சாதாரணம் இல்லைங்க ஐயா.


அடியவர் :- பாக்கிய ஸ்தானம். ஒன்பதாம் இடம் பாக்கிய ஸ்தானம். அந்த பாக்கியம் அளிப்பதற்கு இறைவன் வந்து வாய்ப்பு அளிப்பார் அப்படின்றாங்க.


குருநாதர்:-  அறிந்தும் எது என்று அறிய, அதனால் ஐந்தோடன் ஐந்தாம் இடம் ஏது என்று புரிய மிகவும் பங்கு வகிக்கின்றது. பின் இதைத் தன் ரகசியமாக பல வழியில் கூட ஏதோ—அதாவது யான் குழப்பி விட்டேன் என்று குழப்பிக் கொள்ளுங்கள். ஏனென்றால் எது என்று அனைத்தும் புரியும்படி சொன்னாலும் இவர் கேட்பதில்லை. ஏது என்று அறிய.


சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றாருன்னா, சுலபமா எதுன்னு கிடைச்சிட்டாலும்...


அடியவர் 4 :- இப்ப இந்த கணக்கு சொன்னதுனால எல்லாரும் போட்டு குழப்பிட்டு இருப்போம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கணக்கு. வீட்ல இருக்க சொன்ன மாதிரி மூணு பேர், நாலு பேர் எல்லாத்தையும் போட்டு இந்த திசையா, அந்த திசையான்னு போட்டு குழப்பிட்டு இருப்போம். கொஞ்சம் குழப்புங்க. குழப்ப குழப்ப இன்னும் புத்தி தெளிவாகும். இன்னும் வந்து நிறைய விஷயங்கள் வந்து நமக்கு வந்து புலப்படும், தெரிய ஆரம்பிக்கும். எல்லாத்தையுமே எளிமையா சொல்லிட்டா, அதுக்கு மதிப்பு இருக்காது. அதனால நீங்க எல்லாம் குழப்புங்க. குழப்புனதுக்கு அப்புறம் கண்டிப்பா குருநாதர் தெளிவு கொடுப்பாருங்க.


குருநாதர்:-  அனைத்தும் இலவசமாக கொடுத்துவிட்டால் மனிதன் சோம்பேரி ஆகிவிடுவான். அதனால் இதுவும் யான் இலவசமாக தரப்போவதில்லை.


அடியவர்கள் :- ( கை தட்டல்கள் )


அடியவர்:- குருநாதருக்கு நிச்சயமா தெரியும் அது. அவர் தெளிவா ஒரு கால்குலேஷன் சொன்னாருன்னா ஈசியா குலதெய்வத்தை கண்டுபிடிக்கலாம். அவர் சொல்ல மாட்டாங்க. எல்லாத்தையும் ஈசியா கொடுத்தா அதுக்கு மதிப்பு இல்ல. அதனாலதான் நீங்க கண்டுபிடிங்க. வேலை செஞ்சுட்டு வாங்க. ஹோம்வொர்க் பண்ணிட்டு வாங்க. அதுக்கப்புறம் நான் சொல்றேன் இந்த வழின்றாங்க.




குருநாதர்:- அறிந்தும் ஏது என்று புரிய, ஆனாலும் அனைத்தும் ஏது என்று அறிய நமச்சிவாயனை அறிந்து கூட எங்கெங்கு சென்றால், பின் அதாவது ஒவ்வொரு—பின் லக்னக்காரனும், பின் ராசிக்காரனும் எங்கெங்கு சென்றால் என்பவை எல்லாம் யான் அறிந்து வைத்திருக்கின்றேன். நிச்சயம் சொல்வேன்.




அடியவர் 4:-  ஒவ்வொரு ராசிக்காரங்களுக்கும், ஒவ்வொரு லக்னக்காரங்களுக்கும் எங்கெங்க போகணும். நீங்க ஆல்ரெடி எங்கெங்க போயிருக்கீங்க. இன்னும் எங்கெங்கெல்லாம் போனா அந்த எலுமிச்சம் பழம் எப்படி மேல ஏறி வந்ததோ அதே மாதிரி நம்மளும் வாழ்க்கையில மேல ஏறி வந்துருவோம். அந்த ரகசியம் தெரியும். சொல்றேன்.


குருநாதர்:-  அறிந்தும் அப்பனே, அனைத்தும் ஏது என்று அப்பனே சுலபமாக கிட்டிவிட்டால் அப்பனே மதிப்பே இருக்காதப்பா. அதனால்தான் அப்பனே எது என்று கூட இறைவனிடம் மன்றாடுங்கள் என்பேன் அப்பனே. நிச்சயம் சொல்வேன்.


அடியவர் :-ஆமா. எல்லாம் ஈசியா கிடைச்சிட்டா அதுக்கு மதிப்பு இருக்காது. கஷ்டப்படுங்கப்பா.


குருநாதர்:-  அறிந்தும் எதை என்று புரிய இவ்வாறாகவே பல வருடங்கள் ஏன் எதற்கு பல பின் மன்னர்கள் ஆட்சி செய்தார்கள் என்பவை எல்லாம் எதற்காக அறிந்தும் கூட அதாவது ஏது என்று புரிய இவ்வாறாக நீங்கள் கேட்கின்றீர்களே… எங்கு ஆன்மா இருக்கின்றது என்பது நிச்சயம் அவ் ஆன்மாவினுடைய பின் நிச்சயம் தன்னில் கூட எலும்புகளில் சிதற கிடைக்கும் பின் நுண்.. பின் புழு புழுக்கள் நிச்சயம் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு இடத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். நிச்சயம் அழியாது தாயே.


அடியவர் :- ( ஆசிரியத்தில் ) அப்பா.


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன சொல்றாரு பார்த்தீங்களா யாராவது ஒன்னு கேட்டாங்க பாருங்க.. அந்த… ஐயா எக்ஸ்பிளைன் பண்ணுங்க 


===========================
# குலதெய்வ ரகசியம் என்ற  வாக்கின் தொகுப்பாக..அருமையாக எடுத்துரைத்தார் அடியவர்.
===========================


அடியவர் 4 :- கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு அம்மா வந்து கேட்டாங்க அதாவது வந்து முன்னாடி வந்து குருநாதர் வந்துட்டு தனுஷ்கோடியில வந்து எல்லா ஆன்மாக்களுக்கும் வந்துட்டு, பித்ரு தர்ப்பணம் கொடுக்கலாம் அப்படின்னு சொல்லிட்டு. 


அப்ப இப்போ இன்னைக்கு சொல்லும்போது ஒவ்வொரு திசையில இருக்கிற கடலை நோக்கி போகணும் அப்படின்னு சொன்னதுனால, ஒரு அம்மா வந்து குழப்பம் ஆயிட்டு, இல்ல முதல்ல தனுஷ்கோடி போகலாம்னு சொன்னீங்க இல்ல. இப்ப எதுக்கு ஒவ்வொரு திசையில இருக்கிற கடலுக்கு போகணும்னு இப்ப ஏன் மாத்தி சொல்றாங்க… அப்போ எல்லா ஆன்மாவும் தனுஷ்கோடிக்கு போகாதா ?  அப்படின்னு ஒரு கேள்வி அங்க அந்த அம்மா வச்சாங்க. 


அதுக்கு தான் குருநாதர் என்ன சொல்றாருன்னா வந்துட்டுங்க இறைவனை முழுமையா நம்பி இருக்கிற எல்லா தனுஷ்கோடி போகணும்னா அந்த ஆன்மாக்கும் ஒரு சக்தி வேணும். சக்தி இல்லாத ஆன்மாக்கள் எல்லாம் அந்தந்த இடத்துல அப்படி அப்படி தங்கி இருக்கும். சொல்லணும்னா வந்துட்டு. அது எங்க தங்கி இருக்கும்னா குலதெய்வ கோயிலை சுத்தி தான் தங்கி இருக்கும். அந்த குலதெய்வ கோயிலோட திசையை அதனாலதான் கண்டுபிடிக்க சொல்றோம். எங்க இருக்குன்னு சொல்லிட்டு. அது அந்த அடிப்படையில தான் அந்த திசைக்கு அருகில் இருக்கிற கடல். 


இப்ப மேஷ ராசினா கிழக்கு. கிழக்கு திசை. உங்களுக்கு கிழக்குதான் வந்துட்டு எங்க வந்து குலதெய்வம் இருக்கோ அதுக்கு அருகில் இருக்கிற கடல். அந்த அந்த திசையை நோக்கி போகும்போது அந்த ஆன்மாவை உங்களால பிரார்த்தனை பண்ணி அந்த குலதெய்வ கோவில்ல இருந்து இழுத்துக்கொண்டு கடல்ல நீர்ல விட்டு மோட்ச கதியை அடைய வைக்க முடியும் சொல்லணும்னா வந்துட்டு. அதே மாதிரி இதுக்கு முன்னாடி எவ்வளவோ ஆன்மாக்கள் பிறந்திருக்கும் மன்னர்களா இருந்திருப்பாங்க.. ராஜாக்களா இருந்திருப்பாங்க. 


பல நூறு வருடங்கள் வந்து ஆட்சி செஞ்சிருப்பாங்க சொல்லணும்னா.. வந்துட்டு அவங்க எல்லாம் இறந்தே போனாலும் அவங்களோட எலும்புகள் வந்து முழுமையா வந்து அழியறது கிடையாது. சரிங்களா வந்துட்டுங்க. மத்த இதெல்லாமே அழிஞ்சாலும் எலும்பு அழியல அப்ப அந்த அணுக்கள் வந்து இன்னும் இருக்கத்தான் செய்யுது சொல்லணும்னா வந்துட்டு.


அடியவர்  :-அந்த எலும்புகளை சாப்பிடக்கூடிய நுண்ணுயிர்கள் வந்து இன்னும் உயிரோட இருக்குதுப்பா அப்படின்றாங்க.


அடியவர் 4 :- சோ அப்ப இன்னும் அப்போ அந்த அந்த நுண்ணுயிர் மூலமா அந்த ஆன்மா இன்னும் இருக்கத்தான் செய்யுது. அந்த எலும்புல அந்த ஆன்மா இருக்குது. அந்த எலும்பை சாப்பிடக்கூடிய நுண்ணுயிர் இருக்குன்னா அந்த நுண்ணுயிருக்குள்ள அந்த ஆன்மா இருக்குது அப்ப இது எல்லாத்தையும் கட்டி இழுத்து நம்ம மோட்ச கதியை அடைய வச்சாதான், நமக்கு நம்ம வாழ்க்கையில எல்லாமே நல்லபடியா நடக்கும்.


குருநாதர்:- இவை அறிந்தும் ஏது என்று புரிய ஆனாலும் பின் அவ் நுண்ணுயிர் பல வழியில் கூட பின் கடக்கும். அதாவது பின் ஒரு இடத்தில் பின் அதாவது பின் ஏது என்று அறிய இறக்கின்றான். அறிந்தும்  கூட ஓரிடத்தில் புதைக்கின்றார் ஆனாலும் சிறிது தூரத்தில்…மற்றொரு புதைக்கிறார். ஆனாலும் பின் எவை என்று அறிய பின் தானாகவே சேர்ந்துவிடும் அவை.


அடியவர் :- எல்லாம் ஒரே இடத்தில் புதைக்கிறது எல்லாம் ஒன்னு சேர்ந்துரும்ன்றாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப அந்த எலும்பு நுண்ணுயிர் இருக்கு பாருங்க அது வந்து அது என்னன்னா ஒருத்தரை உங்க முன்னோர்கள் ஒரு இடத்துல புதைக்கிறாங்க இன்னொருத்தரை இன்னொரு இடத்துல புதைக்கிறாங்க ஆனால் அது என்ன ஆகும் வந்து.


அடியவர் :- எல்லாம் ஒன்னா சேர்ந்துரும்ன்றாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஒன்னா சேர்ந்துரும்ன்றாரு வந்து.


அடியவர் 4 :-  அது இல்லாம நம்ம வந்து கடைசியா என்ன பண்றோம்னா அஸ்தியை கரைக்கிறோம் இல்லைங்களா? நீர்ல தான் கரைக்கிறோம் அதே நீர்ல எவ்வளவோ அஸ்திகள் கரைக்கப்படுது அப்போ அந்த ஆன்மா மத்த ஆன்மாக்களோட சேர்ந்து பயணம் பண்ணுது சொல்லணும்னா வந்துட்டுங்க. ஒன்னா சேர்ந்துருது. அதுதான் சொல்ல வராரு வந்துட்டுங்க.


அடியவர் :- இல்ல அது ஒன்னா சேர்ந்துரும்ன்றாங்க அது பிரச்சனையா நல்லதா அப்படின்னு குருநாதர் கேட்கணும். 


குருநாதர்:- அறிந்தும் எவை என்று எதைப் புரிய இவ்வாறே இல்லை அதாவது நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட. அவ் எலும்புகளில் இருக்கும் நுண்ணுயிர்கள், பின் தேடி ஏது என்று அறிய, சொந்த பந்தங்களாக அனைத்தும் பின் இணைந்துவிடும்.


அடியவர் 4 :-அடடா.


சுவடி ஓதும் மைந்தன் :-   அந்த எலும்புகள்ல வந்து எல்லாம் இருக்குல்ல சில சில உயிர்கள் இருக்குமா அது வந்து நீங்க வந்து 1000 kmல இருந்து அந்த பக்கம் போனாலும் அது என்ன ஆகுமா.


அடியவர்  :- தேடி வந்துரும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  இறந்திருக்காங்கன்னா தேடி வந்துரும். அந்த நுண்ணுயிர் மூலமா நுண்ணுயிர் அந்த சின்ன ஒரு நுண்ணுயிர் 


அடியவர்  :- அதான் அணு. 


சுவடி ஓதும் மைந்தன் :- அணு, ஓகே, ஐயா புரியுதுங்களா? 


https://youtu.be/C5OQ5pL4GnY?t=38258


===========================
# ஆன்மாவின் அசாத்திய, அதி விரைவு  பயண வேகம் 
===========================


குருநாதர்:-  அறிந்தும் இவை யாவும் இதனால் நிச்சயம் தன்னில் கூட ஆன்மாக்கள் ஏது என்று அறிய அதாவது பின் அணுவிலிருந்து ஏது என்று புரியும் துகளாக ஏது என்று அறிய ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அதாவது பின் ஒரு சிட்டிக்கை அறிந்தும் கூட பின் நிமிடத்திற்கு பின் பல எது என்று கூட மைல் பல ஆயிரம் பின் மைல்கள் தொலைவில் பின் கடக்கும் அவ் ஆன்மா.


அடியவர் 4 :- ஒரு ( குறுகிய காலத்திற்குள் ) இதுக்குள்ள பல ஆயிரம் மைல் கடந்து போயிடுது அந்த துகழ். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த துகழ் என்றது என்ன தெரியுங்களா? நம்ம ஆன்மாதான் துகழ்ன்றாருங்க ஐயா. ஆன்மாதான் அப்ப ஒரு இப்படி (என்ற கண் இமைக்கும் நேரத்தில் )  ஆனா என்ன தெரியுமா போகும்?  பல ஆயிரம் மைல் போயிடும்.


===========================
# ஒருவர் இறந்தவுடன் - அவ் ஆன்மா என்ன ஆகும் ?
===========================


குருநாதர்:-  அறிந்தும் ஏன் எதற்கு எவை என்று புரிய இறந்தவுடன் ஆன்மா அறிந்தும் கூட அதாவது அணுவானது வெடித்து சிதறி, எது என்று அறிய பல லட்சம் அறிந்தும் கூட, பின் மைல் தொலைவில் சென்று விடுகின்றது. ஆனாலும் 11வது நாள் பின் 12வது நாள் அனைவரும் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று ஒரு இடத்தில் கூடுகின்ற பொழுது, நிச்சயம் அவையே நினைத்துக் கொண்டிருக்கின்ற பொழுது மீண்டும் இங்கு வருகின்றது. 


அடியவர் :- சிவாய நம!!!! 


அடியவர் :-  இறக்குறப்போ எல்லாம் வெடிச்சு சிதறுன்றாங்க. அந்த காரியம் பண்றாங்க இல்லையா?. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இறந்துச்சுன்னா அந்த ஆன்மா வந்து ஒரு செகண்ட்ல 


அடியவர் :- பல ஆயிரம் மைல் கடந்து போயிருது 


சுவடி ஓதும் மைந்தன் :-  கடந்து போயிடும். 


அடியவர் 4 :- வெடிச்சு சிதறி 


சுவடி ஓதும் மைந்தன் :-  வெடிச்சு  சிதறி ஆனா அந்த ஆன்மாவோட துகழ் நமக்கு 


அடியவர் :-  காரியம் சொல்றோம்.. காரியம்னு வைக்கிறோம்ல ( ஒருவர் இறந்த பின்னர் சில நாட்கள் கழித்து வைக்கும் காரியம் என்ற நிகழ்வில்  ) 


சுவடி ஓதும் மைந்தன் :-  வைக்கிறீங்களா… அப்போ அது நினைச்சுனே ஒரு பத்து நாள் 


அடியவர் :-   அப்ப நினைக்கிறோம்ல எல்லா பேரும் அந்த இறந்து போன அந்த உயிரை நினைக்கிறப்போ.. எல்லாம் திருப்பி ஒன்னு சேர்ந்துரும்ன்றாங்க அந்த இடத்துல 


சுவடி ஓதும் மைந்தன் :- திருப்பி என்ன ஆகும். 


அடியவர் :- ஒன்னு சேர்ந்துரும்ன்றாங்க


சுவடி ஓதும் மைந்தன் :- ஒன்னு சேர்ந்துரும்ன்றாரு 


===========================
# இறைவன் என்ற காந்தகம்
===========================


குருநாதர்:-   பின்பு ஏது என்று அறிய பின் இதற்கு பின்பு மோட்சம் கொடுப்பதா என்று இல்லையா என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட மீண்டும் பின் இறைவனிடத்தில் தான் உண்டு அறிந்தும் கூட. பின் ஏது என்று கூற  அதாவது இறைவன் காந்தகம். அதனால்தான் பின் இங்கு காந்தகத்தை எடுங்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :-  காந்தகத்தை எடுங்க ஐயா. 


அடியவர் :-  ( கந்தகத்தை எடுத்து வந்தார்கள் ) 


குருநாதர்:- எதை எவை என்று புரிய, ஆனாலும் பின் சரியாக வைத்தால்தான் இறைவிடம் செல்லும். அப்படி இல்லை என்றால் நிச்சயம் இறைவன் அப்படியே நிறுத்துவான். அப்பொழுது என்ன அவ் நிச்சயம் அவ் துகழ் என்ன செய்யும்?
https://youtu.be/C5OQ5pL4GnY?t=38406




சுவடி ஓதும் மைந்தன் :-  சரியான நேரத்தில் வச்சு மனசு சேர்ந்திடும். அப்ப சரியாக இல்லை என்றால் என்ன ஆகும் சேராது. 


சுவடி ஓதும் மைந்தன் :-   https://youtu.be/C5OQ5pL4GnY?t=38412
( கந்தகத்தை இணைத்து விளக்கங்கள் அவசியம் நேரலையை பார்க்கவும். ) 


===========================
# இரண்டு காந்தங்களின் எதிர் எதிர் துருவங்கள் ஈர்க்கும் (Opposites attract), 
# இரண்டு காந்தங்களின்  ஒத்த துருவங்கள் விலக்கும் (Like poles repel)." 
===========================

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா புரியுதுங்களா 


குருநாதர்:- ஆனாலும் அனைத்தும் இறைவனிடம் பிரிந்து வந்ததுதான் ஏனென்றால் இறைவன் வீசுகின்றான். பின் அதாவது பின் கை ஏது என்று படும் அல்லவா அப்பொழுது எண்ணிக்கொள்ளுங்கள்.
https://youtu.be/C5OQ5pL4GnY?t=38470




சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாமே இறைவனிடமிருந்து வந்த துகழ் தான்.


குருநாதர்:- அறிந்தும் இவை தன் அதனால்தான் இறை பக்தியை பின் பயன்படுத்திக் கொண்டு வெல்லலாம் அனைவருமே. 


அடியவர் :-  இறைவன் துகழு. அப்போ அந்த இறைவன் துகளை ஒன்னு சேர்க்கிறதுக்கு இறைபக்தியை பயன்படுத்தி தான் ஒன்னு சேர்த்து இறைவன் கிட்ட போக முடியும் அப்படிங்கிறாரு. 


குருநாதர்:- இவைதன் அனைத்தும் ஏது என்று புரிய அதனால்தான் பின் இதில் ஒரு மதம் என்றே யான் குறிப்பிடவில்லை அனைத்தும் இப்படித்தான் இயங்குகின்றது. 


அடியவர் :- ம் 


சுவடி ஓதும் மைந்தன் :- இது வந்து ஒரே மதத்தில் மட்டும் நான் சொல்ல பண்றது வந்து மொத்தமா எல்லாம் 


அடியவர் :- அப்படித்தான்.. இப்படித்தான் இயங்குது 


சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாம் இயங்குது என்றார் 


குருநாதர்:- அறிந்தும் இதனால்தான் மனிதன் புதுமையான விஷயங்கள் செல்கின்றான். அதனால் யாங்களும் புதுமையான விஷயங்களாகத்தான் எடுத்து வருவோம். 


அடியவர் :-  சிவாய நம 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப என்ன பண்றார் மனிதன்?  மனுஷன் பழைய விஷயங்களே சொன்னா… என்ன பண்ணுவாங்க?  இனிமேல் 


அடியவர் :-  நம்ப போறதில்லை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  நம்ப போறதில்லை. அதனால வித்தியாசமா சொல்லணும். வித்தியாசமானதெல்லாம் சொன்னா மட்டும்தான் நீங்க வித்தியாசமா புதுசு புதுசா கண்டுபிடிக்கிறீங்க இல்ல. அதனால நாங்களும் ? 


அடியவர் :-  புதுசா கண்டுபிடிக்கிறோம் பாருங்க 


சுவடி ஓதும் மைந்தன் :-  புதுசா வந்து கண்டுபிடிக்கிறோம்ன்றாரு வந்து 


குருநாதர்:-  ஏது என்று புரிய இதனால் புரியாமல் இருந்தாலும் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட சித்தர்கள் மீது நம்பிக்கை வைத்து நிச்சயம் தன்னில் கூட பின் நடந்தால் புரியும் அனைத்தும். 


அடியவர் :-  எங்க மேல நம்பிக்கை வைங்கப்பா. சித்தர்கள் மேல நம்பிக்கை வைங்க வச்சா எல்லாமே புரியும் 


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாமே புரியும். 


===========================
#  ஐந்தெழுத்துக்கு  உரியவர் அருள் அவசியம் வேண்டும்.
===========================


குருநாதர்:-  அறிந்தும் ஏது என்று புரியும் இதனால் ஐந்தாம் இடம். அதனால்தான் இதை வெல்ல வேண்டும் என்றால் பின் அதாவது ஐந்தெழுத்துக்கு  உரியவன்  நமச்சிவாயனே. 


அடியவர் :- ஐந்தாம் இடத்தை வெல்லனும்னா அவர்தான் ஐந்தெழுத்துடைய 


சுவடி ஓதும் மைந்தன் :-   ஐந்துக்கு  உரியவன் யாரு? 


அடியவர் :- நமச்சிவாயன் 


சுவடி ஓதும் மைந்தன் :-  நமச்சிவாயன் மட்டும்தான். அவர்தான் 


அடியவர் :- அந்த இடத்தை வந்து புரிய வைப்பார் 


சுவடி ஓதும் மைந்தன் :-  புரிய வைப்பார் 


அடியவர் :- கடக்க வைப்பார் 


சுவடி ஓதும் மைந்தன் :-  கடக்க வைப்பார் 


அடியவர் :- இறைவனை காண்பிப்பார் 


சுவடி ஓதும் மைந்தன் :-  இறைவனை காண்பிப்பார். அப்படி இல்லை என்றால் முடியாது 


குருநாதர்:-  அதனால்தான் ஏது என்று அறிய குலதெய்வத்தை ஏது என்று புரிய அனைத்து இடங்களிலும் பின் கல்லாக நிறுத்தி வைத்திருக்கின்றார்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால் என்னவோ புரியவில்லை என்பதனால்தான் என்ன பண்றது எல்லா இடத்திலும் 


அடியவர் :- கல்லா இருக்கிறார் இறைவன் 


சுவடி ஓதும் மைந்தன் :- கல்லு மாதிரி இறைவனை வச்சிருக்காங்க இறைவன் வச்சிருக்காரு வந்து 


குருநாதர்:-  அறிந்தும் ஏது எவை என்று தவிர ஏது என்று புரியும் அனைத்திலும் அறிந்தும் கூட பின் ஒன்றின் பின் ஒன்றாகவே நிச்சயம் இன்னும் விளக்கங்கள். ஏன் எதற்கு இத்தனை அவதாரங்கள்? இத்தனை பின் விதவிதமாக பின் முகங்கள்? என்பதை எல்லாம் சொல்கின்றேன் 


அடியவர் :-  இன்னும் இத்தனை அவதாரங்கள் எதுக்கு இத்தனை முகங்கள் எதுக்கு எல்லாம் அப்படின்றதுதான் வந்து இன்னும் வரக்கூடிய காலங்கள்ல நாங்க சொல்றோம்ப்பா விளக்குறோம் அப்படின்னு சொல்லி இருக்காங்க 


குருநாதர்:-  அறிந்தும் அப்பனே யான் சொல்லியதை நல்முறையாக செய்யுங்கள் 


அடியவர் :-  அந்த காயின்ஸ் புற்றியே அந்த காயின் பூஜை சொல்லி இருக்காங்க இல்ல நன்முறையில் செய்யுங்கன்னு சொல்லி இருக்காங்க ம் 


குருநாதர்:- அப்பனே அடுத்தும் கூட அப்பனே நீர் வருகின்றது அல்லவா அதையும் பின் நிச்சயம் கொடுங்கள் அப்பனே எது என்று புரிய அதனுள்ளே அப்ப நிச்சயம் தன்னில் கூட அப்பனே சிவபுராணத்தை ஓதுங்கள் அனைவருக்காகவும் என்பேன் அப்பனே பின்பு உரைப்பேன் 


சிவபுராணம் பாராயணம் :- ( ஆரம்பமானது )  
https://youtu.be/C5OQ5pL4GnY?t=38665


( பாராயணம் முடிந்த பின்னர் வகுக்கள் ஆரம்பமானது )


===========================
#  அடுத்த கூட்டு பிரார்த்தனையில் - “காசி மண்” அனைவருக்கும்…
===========================


குருநாதர்:-  அறிந்தும் எதை என்ற குறிப்பிட்ட அறிந்தும் கூட இதனால் இதன் தன்மை அதிகமாகும் ஐந்தாம் இடத்தை கடக்க. இதனால் காசி தன்னில் பின் அறிந்தும் கூட மணல் எடுத்து அடுத்த முறை அனைவருக்கும் கொடுக்க இதிலிருந்து எடுத்துக்காட்டுவார்கள் சித்தர்கள். 


அடியவர் :- அடுத்த முறை வந்து காசியிலிருந்து மணல் எடுத்துக் கொடுக்க சொல்லி இருக்காங்க. அதிலிருந்து சித்தர்கள் வந்து சில விளக்கங்கள் கொடுப்பாங்கன்னு சொல்லி இருக்காங்க.


சுவடி ஓதும் மைந்தன் :- அதிலிருந்து என்ன செய்யணும்னு சொல்லுவாங்க. இப்ப நீங்க எல்லாம் கேட்டீங்க பார்த்தீங்களா, அந்த டவுட் எல்லாம் அதுல கிளியர் ஆகும். அவர் எல்லாம் கேட்டாருங்களா, அப்ப அதிலிருந்து ஐயா புரியுதுங்களா? 


குருநாதர்:-  அப்பனே, இதற்கு பின் ஏதோ ஒரு வழியை சொல்லிவிட்டாலும் புரியாதப்பா. இதனால் அப்பனே, செயல்முறை, அதாவது செய்முறையாகவே விவரிக்கின்றேன்.


அடியவர் :- காசியிலிருந்து செயல்முறையாவே வந்து சும்மா சொன்னா எல்லாம் புரியாதுப்பா. செயல்முறையாவே உங்களுக்கு விளக்குனாதான் புரியும் அப்படின்றாங்க.


https://youtu.be/C5OQ5pL4GnY?t=39329


===========================
#  காலம் காலங்களாக பயன்படுத்திய ரகசியங்கள்.
===========================


குருநாதர்:-   அப்பனே, ஏது என்று புரிய. இதனால்தான் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட கவலைகள் வேண்டாம் அப்பனே. நடமாகவே. காலம் காலங்களாக எது என்றறிய பயன்படுத்தியதை மீண்டும் அப்பனே பயன்படுத்தி பின் நிச்சயம் பின் உங்களை நீங்கள் வெல்லுங்கள் என்பேன் அப்பனே.


அடியவர் :- காலம் காலமாக பயன்படுத்தியது தான் இதெல்லாம். இதையெல்லாம் நாங்க உங்களுக்கு சொல்லித் தரோம். இதை பயன்படுத்தி உங்களை நீங்கள் வெல்லுங்க அப்படின்றாங்க.


===========================
#  கங்கை அன்னையின் “காசி மண்” மகிமைகள் 
===========================


குருநாதர்:-   அப்பனே, சரியாகவே. அப்பனே, பின் காசி தன்னில் அப்பனே பின் எதை என்று புரிய அப்பனே. பின் நிச்சயம் எவை ஆறு அறிந்தும் கூட அப்பனே சரியாகவே அப்பனே பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட அழகாக இல்லத்தில் பின் நிச்சயம் அப்பனே பின் அதாவது வையுங்கள் என்பேன் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :- இது வந்து காசியிலிருந்து நீங்க என்ன பண்ணனும் தெரியுங்களா, நிச்சயமா இதுக்காக ஒரு இடத்தை வச்சு தனியா நீங்க வையுங்கன்றார் வந்து.


குருநாதர்:-   அப்பனே, இதன் ஆற்றல் போக போக கூடும் என்பேன் அப்பனே.


அடியவர் :-  இதனுடைய ஆற்றல் போக போக கூடும்ன்றாங்க.


குருநாதர்:- அப்பனே, பின்பும் ஏது என்றறிய அப்பனே நிச்சயம் தண்ணீர் கூட பின் மண்ணையும் எடுத்து வந்தால் இதற்குரிய ஆற்றலையும் யான் சொல்லிக் கொடுக்கின்றேன் அப்பனே.


அடியவர் :- மண் எடுத்துட்டு வந்தா இதற்குரிய ஆற்றலையும் சொல்லிக் கொடுக்கிறேன்னு சொல்றாங்க. 


அடியவர் :-  ( சந்தேகம் ) அது காசி கங்கை உள்ள இருக்கிற மண் எடுத்துட்டு வர்றது தானே?


சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா ஆமா.


அடியவர் :- கங்கை மண்.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆமா கங்கை மண். ஓகேங்களா. 


குருநாதர்:-  அப்பனே, அனைத்திற்கும் தெளிவுகள் கிடைக்கும். ஆனாலும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது நிச்சயம் நீங்கள் அனைவரும் அப்பனே நிச்சயம் எதை என்று புரிய அப்பனே பின் அதாவது படித்தால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் தேர்ச்சி பெற முடியும். படிக்காமல் வந்து கேள்விகள் கேட்டு கொண்டிருந்தால் அப்பனே யான் சொல்வதும் புரியாது அப்பனே சொல்லிவிட்டேன்.


அடியவர் :-  படிக்காம கேள்வி எல்லாம் கேட்கிறா இன்னும் பதில் சொன்னாலும் புரியாதுப்பா. படிச்சிட்டு வாங்க. அப்பனாதான் புரியும்ன்றாங்க.


குருநாதர்:-  அப்பனே, ஒருவன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பத்தாம் வகுப்பு எதை என்று புரிய அப்பனே பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் தேர்வில் உட்கார்ந்தான் அப்பா. ஆனாலும் அப்பனே பின் ஒன்றுமே எழுதவில்லையாம்ப்பா. இதற்கு என்ன அர்த்தம் அப்பா?


அடியவர் :- பத்தாம் வகுப்பா ஒன்னும் எழுதலையாம் தேர்வுல போயி. இதுக்கு என்ன அர்த்தம்னு கேக்குறாங்க.


குருநாதர்:- ஏது என்று புரிய அப்பனே இப்படித்தான் பல மனிதர்கள் அப்பன் நிச்சயம் தன்னில்  கூட அப்பனே பின் ஒன்றும் தெரியாமல் அப்பன் தேர்வில் மட்டும் வெற்றி பெற வேண்டும் என்று அப்பனே அமர்ந்து கொண்டு அப்பனே வெற்றியும் பெற்று, அப்பனே மனிதர்களும் கெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் அப்பா.


அடியவர் :- ஒன்னும் தெரியாம அவங்க வெற்றி பெற்று வெற்றி பெற்று இருக்காங்கன்னு சொல்றாங்க அவங்க.


சுவடி ஓதும் மைந்தன் :- அதனால ஒன்னும் தெரியாம?


அடியவர் :-  கேடுதான்.


குருநாதர்:-  அப்பனே, இதனால் அப்பனே சொல்லிக் கொடுக்கின்றேன் அப்பனே நிச்சயம் தன்னில் கவலைகள் வேண்டாம் அப்பனே. ஒவ்வொன்றும் அப்பனே ஒவ்வொரு முறையும் உங்களை வெல்ல அப்பனே நிச்சயம் யான் பின் செய்முறை விளக்கமாகவே கூறி பின் நிச்சயம் அனைத்தும் வெல்ல வைக்கின்றேன்.


அடியவர் :- கவலைப்படாதீங்கப்பா. ஒவ்வொரு தடவையும் உங்களுக்கு செயல்முறை விளக்கமாகவே உங்களை வெல்வதற்குரிய வழிகளை நாங்க சொல்லிக் கொடுக்கிறோம் அப்படின்றாங்க.


===========================
#  கங்கை அன்னையின் “காசி மண்” எடுத்து வர அடியவர்கள் மூலம் கருணை கடல் ஏற்பாடு  
===========================


குருநாதர்:- அப்பனே, நலமாகவே ஏது என்று புரிய அப்பனே இதனால் அப்பனே ஒவ்வொன்றுக்கும் அப்பனே வித்தியாசங்கள். அப்பனே, பின் உங்களை நீங்கள் வெல்ல வேண்டுமானால் அப்பனே சில சிறப்பு ஏது என்று அறியப்ப நிச்சயம் தன்னில் கூட பல வகையான அப்பனே ஏது எங்கு சென்றால் அப்பனே எங்கு கிரக பலன்கள் அதிகமாக அப்பனே விழும். அப்பனே எங்கு சக்தியில் கூடும் அவை எடுத்து வந்தால் அப்பனே நீங்கள் சொன்னாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பாவங்கள் வலிவிடுமா என்பது சந்தேகம் தானப்பா. அதனாலே பின் நிச்சயம் அப்பனே பின் நிச்சயம் எடுத்து வந்து உங்களுக்கு கொடுக்கச் சொல்லி இருக்கின்றேன்.


அடியவர் :-  அதாவது சில இடங்கள் வந்து சொல்றாங்க. சொன்னா அங்க போனா அவங்க சக்திகள் கூட சொல்றாங்க பட் உங்களுக்கு அதெல்லாம் போக முடியுமான்னு தெரியல. அதனாலதான் இந்த வழிமுறைகளை நாங்க சொல்றோம். இந்த நீர், மண்ணெல்லாம் எடுத்துட்டு வந்து உங்களுக்கு கொடுக்கச் சொல்லி செயல்முறைகளை சொல்ல சொல்றோம். சக்திகளை ஏத்துறதுக்கு வழி பண்றோம் அப்படின்றாங்க.


குருநாதர்:-  அப்பனே, அடுத்த முறை அப்பனே நிச்சயம் ஆன்மாக்கள் பற்றியே உரைப்பேன் அப்பனே. அனைத்தும் ஏது என்று புரிய அப்பனே பின் சொல்கின்றேன்.


அடியவர் :- அடுத்த முறை வந்து ஆன்மாக்களை பத்தி சொல்றேன். எல்லாத்தையும் சொல்லித்தரேன் அப்படின்னு சொல்றாங்க.


குருநாதர்:-  அப்பனே, ஏனென்றால் அப்பனே இதனை பின் முழுமை பெற்றால்தான் அப்பனே அடுத்தடுத்தும் அப்பனே பின் உயரிய இடத்தையும் பின் பிடிக்க முடியும். இவ்வுலகத்தையும் காக்க முடியும் என்பேன் அப்பனே.


அடியவர் :-  அதாவது இந்த அஞ்சாம் இடத்தை பத்தி இன்னும் நிறைய எக்ஸ்பிளைன் பண்றேன். முன்னோர்கள் ஆன்மாக்கள் பத்தி இது எல்லாம் புரிஞ்சுகிட்டாதான் அடுத்த இடத்துக்கு போக முடியும். இறைவனை பத்தி அறிய முடியும்ன்றாங்க.


குருநாதர்:- அப்பனே, அதனால் உங்களை வென்று அப்பனே இவ்வுலகத்தில் அப்பனே மக்களையும் தெளிவுபடுத்தலாம். அப்படி இல்லை என்றால் அப்பனே தெளிவுபடுத்த முடியாதப்பா.


அடியவர் :-  உங்களை வென்று பிறரையும் மக்களையும் நீங்க தெளிவுபடுத்தலாம். இல்லைன்னா ஒண்ணுமே செய்ய முடியாது. ஜீரோ தான்றாங்க.


குருநாதர்:- அப்பனே, நலங்களாகவே எது என்று புரிய அப்பனே இதனால் அப்பனே நல்விதமாக பின் வேண்டுவதெல்லாம் அப்பன் நிச்சயம் தன்னில் கூட தடை தாமதம் பட்டாலும் அனைத்தும் கொடுப்பேன் யான்.


அடியவர் :-  எல்லாத்தையும் நான் கொடுக்கிறேன் அப்படின்றாங்க குருநாதர்.


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாத்தையும் கொடுக்கிறார். கொஞ்சம் தடைப்பட்டாலும்.


அடியவர் :-  தடைப்பட்டாலும் நேரமானாலும் காலமானாலும் கொடுக்கிறேன்றாங்க.


குருநாதர்:-  அப்பனே, இதனால் ஐந்தாம் பகுதியிலே நிற்கின்றீர்கள் என்பேன் அப்பனே எது என்று புரிய. அப்பனே அடுத்தடுத்து சித்தர்கள் சொல்வார்கள் அப்பா. அதை மீறி வரவேண்டும் என்று.


அடியவர் :-  நிச்சயமா அதை மீறி நம்ம தாண்டி வரணும். அடுத்தடுத்து சித்தர்கள் எல்லாம் சொல்லித் தரோம். உங்களுக்கெல்லாம் சொல்லித் தரோம். தாண்டி எப்படி வர்றதுன்னு சொல்லி.


குருநாதர்:-  அப்பனே, அதை மீறி வந்தால்தான் அப்பனே இறைவனையும் காண முடியும் என்பேன் அப்பனே.


குருநாதர்:-  இல்லையென்றால் அப்பனே, பின் அதிலேயே நின்று அப்பனே மீண்டும் மீண்டும் இறப்பி. அப்பனே மீண்டும் மீண்டும் பிறப்பி.


அடியவர் :-  இறைவனை அறியலைன்னா மீண்டும் மீண்டும் பிறப்புதான்.


சுவடி ஓதும் மைந்தன் :- இறக்கணும்.


அடியவர் :-  இறக்கணும். பிறக்கணும். இறக்கணும். சுழற்சிதான். சுழற்சியில.


குருநாதர்:-   அப்பனே, நலங்களாக அப்பனே பின் அதாவது நிச்சயம் ஈசனுக்காக ஒரு பாடலை பாடு. அப்பனே, அனைவரிடத்திலும் அப்பனே நல்விதமாக அப்பனே அனைத்து நலங்களும் ஏற்பட. அப்பனே, ஈசனை நினைத்து அப்பனே நீரை கொடுங்கள். அப்பனே, நமச்சிவாய என்று சொல்லி.


அடியவர் :-  அக்கினி தீர்த்தம் என்ன பண்றதுங்க ஐயா?


குருநாதர்:-  அப்பனே, நல்விதமாக ஏது என்று புரிய அப்பனே இவைதன். அப்பனே, எவ்வாறு செய்தாலும் சரியே. 


சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, காசி தண்ணிர்  மட்டும் பத்திரமா வைக்கிறது சொல்லி இருக்காரு வந்து.


அடியவர் :-  சரி, அக்கினி தீர்த்தம் குளிக்கிறதுக்கு பயன்படுத்திக்கலாம்.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஏதாவது ஒன்னு ஆமா.


அடியவர் :-   சரி.


குருநாதர்:- அப்பனே, ஏது என்று புரிய அப்பனே இவ்வாறு அப்பனே பின் ஈசனை நினைத்து பாடி அப்பன் நல்விதமாக அப்பன் நமச்சிவாய என்று கொடுத்து அனைவருக்கும் அப்பனே பின் நலமாக அப்பனே பின் எதை என்று புரிய அப்பனே பின் ஏது என்று புரிய அடுத்த வாக்கிலும் விவரமாக இன்னும் குறிப்பிடுகின்றேன். 


குருநாதர்:-  ஏனென்றால் அப்பனே நிச்சயம் சிறிது அப்பனே குறிப்பிட்டு அப்பனே ஏது என்று அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்து கூட.  அதனால் பல வகையான நன்மைகள் ஏற்பட அப்பனே சொல்லிக் கொண்டே இருப்பேன் அப்பனே.  ஏனென்றால் வரும் சன்னதிகளுக்கு இது நிச்சயம் எடுத்துச் செல்வார் என்பேன் அப்பனே எதை என்று புரிய. அதனால் அவர்களும் பயன்படுத்தி வெற்றிக் கொள்வார் வாழ்க்கையை.


அடியவர் :-   நிறைய விஷயங்களை சொல்லித்தரேன். உங்களுடைய சந்ததிகளுக்கும் பயன்படுத்திக்கிறோம். இப்போதைக்கு இந்த நீரை வந்து நமச்சிவாய மந்திரத்தை சொல்லி எல்லாருக்கும் நீரை கொடுங்கப்பா அப்படின்றாங்க.


குருநாதர்:-  அப்பனே, அம்மையே அனைவருக்குமே எம் ஆசிகள் மீண்டும் சித்தர்கள் வந்து வாக்குகள்  எது என்று புரிய அப்பனே அழகான செப்புவார்கள் அதை பயன்படுத்திக் கொள்க. அப்பனே வெற்றியும் கொள்க ஆசிகள் !!!!  ஆசிகள் !!!! . 


அடியவர் :-  அய்யா, அடுத்த கூட்டு பிரார்த்தனை எங்க?


குருநாதர்:-   அப்பனே எது என்று புரியும் அப்பனே நலமாகவே எவை என்று அப்பனே நீங்களே அப்பனே  ஏது என்று புரிய.  இதனால் அப்பனே பின் அடுத்தும் ஏது என்று அறிய அப்பனே அதனால் சில ரகசியங்கள் சொல்ல வேண்டும். இங்கிருந்தேதான் சொல்ல வேண்டும் என்பேன் அப்பனே. 


அடியவர்கள் :- ( கை தட்டல்கள் ) 


அடியவர் :-   அடுத்த மாதம் வச்சக்கலாம் இல்ல ?


அடியவர் :-  24ஆம் தேதி.


அடியவர் :-   ஐயா  நமச்சிவாய மந்திரத்தை சொல்லி தீர்த்தத்தை கொடுக்க சொல்றாங்க எல்லாம் அப்படியே உடாந்துருங்க…


( இறைவனை நோக்கி உயர் எண்ணங்களுடன் கூட்டுப் பிரார்த்தனை….) 




பாடகர், அடியவர்கள்  பாடிய பாடல் :-  
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே
https://youtu.be/C5OQ5pL4GnY?t=39727

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்குகள் நிறைவு முடிந்தது. )

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!