அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 04/02/2026 அன்று திருக்கோணேஸ்வரத்தில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு. இராவணேஸ்வரர் ரகசியங்கள் - பகுதி 7
நாள் : 04/2/2026 (புதன்கிழமை )
நேரம் : காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை
இடம் : திருகோணஸ்வரம், திருக்கோணமலை இலங்கை.
இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
====================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
====================================
ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன், அகத்தியன்.
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 04/02/2026 அன்று திருக்கோணேஸ்வரத்தில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு. இராவணேஸ்வரர் ரகசியங்கள் - பகுதி 7)
==========================================
# ஞானத்திற்கு மறுபெயர் வெற்றியாகும்
=========================================
குருநாதர் :- அப்பனே, இவையாவும் அறிவும் கூட, அப்பனே, இதனால் தெளிவுகள் பெற ஞானங்கள் அதிகமாகும் அப்பனே.
ஞானத்தை மனிதன் பெற்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஞானத்திற்கு மறுபெயர் வெற்றியாகும் என்பேன் அப்பனே.
===========================================
# ஞானத்திற்கான அதிபதி, கேது என்ற கிரகமே.
===========================================
குருநாதர் :- அதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட வெற்றி எவை என்று அறிய, அப்பனே, ஞானம் நிச்சயம் தன்னில் கூட குறிக்க வேண்டும் அப்பனே. இதனால், அப்பனே, அவ் ஞானத்திற்கான அதிபதி, அப்பனே, கேது என்ற கிரகமே என்பேன் அப்பனே.
===========================================
# கேதுவின் ஆதிக்கம் இன்னும் கூட (திருகோணமலை) இங்கு அதிகம்
============================================
குருநாதர் :- அப்பொழுது ஏன், எதற்கு இவ்வளவு ஆட்டங்கள் இங்கு நடைபெற்றது என்றால், அப்பனே, கேதுவின் ஆதிக்கம் இன்னும் கூட இங்கு அதிகம், அப்பா.
இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
===========================================
# திருகோணமலை இங்கு வணங்க வணங்க, அப்பனே, ஞானங்கள் பிறக்கும்.
============================================
குருநாதர் :- இதனால், அப்பனே, இங்கு வணங்க வணங்க, அப்பனே, ஞானங்கள் பிறக்கும்.
===========================================
# ஞானத்தின் மூலம் மனிதன் தன்னைத்தானே வெல்லலாம்.
============================================
குருநாதர் :- அப்பனே, மனிதன் தன்னைத்தானே வெல்லலாம்.
===========================================
# திருகோணமலை இங்கு வந்தால் மனிதன் முன்னேறி விடுவான் என்பதை எல்லாம் தெரிந்துவிடும்.
============================================
குருநாதர் :- ஆனாலும், அப்பனே, வருங்காலத்தில் மனிதன், அப்பனே, இங்கு நிச்சயம் தன்னில் கூட வந்தால், நிச்சயம் முன்னேறி விடுவான் என்பதை எல்லாம் தெரிந்துவிடும் என்பேன், அப்பனே.
குருநாதர் :- இதனால் எப்பொழுதும் மனிதன் முட்டாளாகவே இருக்க வேண்டும் என்று, அப்பனே, பிற மனிதர்கள் கெடுப்பார்கள் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- புரியுதுங்களா? எக்ஸ்பிளைன் பண்ணனுமா?
அடியவர்கள் :- வேண்டாம் அய்யா. நன்கு புரிகின்றது.
=============================================
# சுரா கல்லை எடுத்து வந்து தாயின் அருகில் வைத்தால், தாயின் உடல்நிலை சரியாகிவிடும் என்ற பரம இறை ரகசியத்தை அறிந்த இராவணேஸ்வரர்.
=============================================
குருநாதர் :- அப்பனே, நலமாகவே இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எங்கெங்கு எதை என்று அறிய, அப்பனே.
குருநாதர் :- இதனால், அப்பனே, பின் நிச்சயம் தாயவளுக்கும் அதாவது, அப்பனே, இப்படியே அறிந்து கூட. இதனால், அப்பனே, யோசனைகள் பல. அப்பனே, இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட பல வகையில் கூட நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- அதாவது, அப்பனே, கல்லை, பின் அதாவது சுரா கல்லை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எடுத்து வந்து இங்கு வைத்தால், அப்பனே, நிச்சயம் என் தாயின் பின் உடல் நிலைமை, பின் அதாவது சரியாகிடும் என்பதெல்லாம் தெரிந்துவிட்டது என்பேன் அப்பனே.
குருநாதர் :- இதனால், அப்பனே, இவை தன், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட தாயே, யான் கண்டுபிடித்துவிட்டேன், கண்டுபிடித்துவிட்டேன் என்று ஓடோடி நிச்சயம் பின் இராவணனும் கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- (அப்ப இராவணனுக்கு அந்த ரகசியம் எல்லாம் அப்பட்டமா தெரிஞ்சு போச்சு! அந்தச் 'சுராகல்' அபூர்வ சக்தியானதுன்னு புரிஞ்சுக்கிட்டு, அதைத் தேடிப் பிடிச்சு எடுத்துட்டு வந்துட்டாரு. "இதோ என் கையிலயே கிடைச்சிருச்சு, இதை வச்சு எல்லாத்தையும் சரி பண்ணிடலாம், நான் உண்மையைக் கண்டுபிடிச்சுட்டேன், கண்டுபிடிச்சுட்டேன்!" அப்படின்னு அந்தப் பெரிய சந்தோஷத்துல தன் தாயைப் பார்க்க ஓடோடி வர்றாரு. அந்த ஒரு கல்லுல தன் அம்மாவோட உடல்நிலை குணமாகிடும்ங்கிற அசைக்க முடியாத நம்பிக்கையோட, ஒரு குழந்தையாவே மாறி ஓடி வர்றாரு நம்ம ராவணன்! )
அடியவர் :- அவங்க அம்மா கிட்ட சொல்றாரு.
===============================================
# தாயாரின் உயர் பொது நல அறிவுரை.
===============================================
===============================================
# சுயநலமாக சுரக்கல்லை ஒருவருக்காவது கூட அவ்வாறு செய்யக்கூடாது.
===============================================
===============================================
# பொதுநலமாக சுரக்கல்லை நிச்சயம் பலபேருக்கு, நன்றாக நிச்சயம் வாழ வேண்டும் என்று எண்ணி செய்ய வேண்டும்.
===============================================
குருநாதர் :- இதன் எவை என்று அறிய, அப்பா, நிச்சயம் தன்னில் கூட அவ்வாறாவது நிச்சயம் தன்னில் கூட ஒருவருக்காவது நிச்சயம் தன்னில் கூட அவ்வாறு செய்யக்கூடாது. இதைத்தான் நிச்சயம் தன்னில் கூட பின் பலபேருக்கு நன்றாக நிச்சயம் வாழ வேண்டும் என்று எண்ணி செய்ய வேண்டும் என்று கூட அப்பொழுது கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- ( அப்ப அவங்க அம்மா என்ன சொல்றாங்கன்னா , 'இந்தச் சக்தி எனக்கு மட்டும் கிடைச்சா போதாதுப்பா, எனக்காக மட்டும் நீ எதையும் செய்யக்கூடாது. இது உலகத்துல இருக்குற எல்லாருக்கும், எல்லா விதத்திலயும் நன்மையைத் தரணும், எல்லாருக்கும் இது கிடைக்கணும்' அப்படின்னு அந்த ஞானிகளின் தாய், நல்ல மனசோட ஒரு பெரிய ஆசையைச் சொல்றாங்க ." ராவணன் தன் அம்மாவுக்காக அந்த அபூர்வமான சுராகல்லைக் கொண்டு வந்தாலும், அவர் அம்மாவோ தன்னலமில்லாமல், இந்தச் சக்தி மொத்த உலகத்துக்கும் பொதுவாப் போய் சேரணும்னு ராவணன்கிட்ட ஒரு கட்டளையாவே சொல்றாங்க. )
குருநாதர் :- நிச்சயம் தாயே, அதுபோலே நிச்சயம் தன்னில் கூட எடுத்து வருகின்றேன் என்று நிச்சயம் தன்னில் கூட. இதற்கும் பின் நிச்சயம் பின் ஓடோடி எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட பறக்கும் வித்தையும் கூட நிச்சயம் கற்று உணர்ந்தான்.
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட பின் அடியோடு எவ்வளவு எதை என்று புரிய, நிச்சயம் அவ்வளவு பலங்கள் பெற்று, நிச்சயம் தன்னில் கூட தாயின் பின் பேச்சை மீறாமல், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எப்பொழுதும் பின் வந்திருப்போர், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பலங்கள், வளம் பெற்று, நிச்சயம் வாழுகின்றான் இந்த உலகத்தில்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( பெத்த தாயோட பேச்சைக் கேட்டு நடந்தா இந்த உலகத்துல எதை வேணும்னாலும் சாதிக்கலாம்ங்கிறதுக்கு ஒரே ஒரு பெரிய எடுத்துக்காட்டு யாருன்னா, அது நம்ம இராவணன் மட்டும்தான்! )
=============================================
# இராவணேஸ்வரர் தன் அன்னையாக எடுத்துவந்து , உலக நன்மைக்காக வைத்த சூராக்கல்லின் ஒரு பகுதி கல்லை - மனிதன் திருடிவிட்டான்
=============================================
குருநாதர் :- எதை என்று கூற நெருங்க, நெருங்க, நிச்சயம் தன்னில் கூட நெருங்க, பிடுங்கினான், அறிந்து கூட எதை என்று புரிய, நிச்சயம் இதன் அருகில் எவை என்று கூட இங்கு வைத்து , நிச்சயம் தன்னில் கூட பின் வைத்தான், நிச்சயம் உடல் நலம் பின் சரியாகவே எது என்று அறிய. ஆனாலும் அக்கல்லை நிச்சயம் தன்னில் கூட மனிதன் திருடிவிட்டான் இப்பொழுது.
சுவடி ஓதும் மைந்தன் :- ( அப்ப அந்த கல்லை எடுத்து வச்சு வச்சாரு யாரு? இராவணன். அது என்ன ஆச்சு? அந்த அம்மா நல்லா குணம் ஆயிட்டாங்க . ஆனா அந்த கல்லுதான் இங்க வச்சிருக்காரு. அந்த கல்லு வந்து சக்தி அதிகமா இருக்குன்னு தெரிஞ்சு போச்சு. அதை மனிதன் திருடிட்டான். திருடு போயிருச்சு. )
அடியவர் :- அப்ப இங்க இருக்கிற சிவலிங்கம் ….அதையும் திருடிட்டாங்களா ?…..
குருநாதர் :- அப்பனே, பின் இதற்கும் பதில் இப்பொழுது இல்லை என்பேன், அப்பனே, பொறுத்திருந்தால் காலம் நேரம் வரும். அப்பொழுது உரைக்கின்றேன் யான்.
அடியவர் 2 :- அய்யா அந்த சுராக்கல்ல தான் சக்தி இருக்குன்னு மத்தவங்களுக்கு எப்படி தெரியும்? ( எப்படி தெரிய வந்தது மக்களுக்கு ?)
============================================
# சுராக்கல் அருகில் வந்தாலே நோய்கள் குணமாகும்
============================================
குருநாதர் :- அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, இங்கு பின் வந்தாலே, நிச்சயம் நோய்கள் குணமாகும், அப்பா, முதலில் என்பேன், அப்பனே, எதை என்று புரிய, அப்பனே,
============================================
# இராமேஸ்வரம் ஆலயத்தின் அடியில் இருப்பது இராவணேஸ்வரர் நட்டு வைத்த சுராக்கல் ஆகும்.
============================================
சுராக்கல் நட்டு வைத்த இராவணேஸ்வரர் திருவடிகள் போற்றி போற்றி போற்றி !!!
============================================
குருநாதர் :- அதேபோலத்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பல வகையில் கூட, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட இதேபோல் ராமேஸ்வரத்திற்கும் கூட பின் அடியில் இருப்பது சுராக்கலே என்பேன், அப்பனே, இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இங்க வந்தா உடம்பு எல்லாமே சரியாயிடும்,
அடியவர் 2 :- நோய்கள் போயிடும்,
சுவடி ஓதும் மைந்தன் :- நோய்கள் போயிடும். அதே மாதிரி ராமேஸ்வரம் அடியில இருக்கிறதும் சுராக்கள், ஐயா, சுராக்கள்,
============================================
# திருஅண்ணாமலை ஆலயத்தின் அடியில் இருப்பது இராவணேஸ்வரர் நட்டு வைத்த சுராக்கல் ஆகும்.
=============================================
சுராக்கல் நட்டு வைத்த இராவணேஸ்வரர் திருவடிகள் போற்றி போற்றி போற்றி !!!
============================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அண்ணாமலையின் பின் அடியில் இருப்பதும் பின் இக்கல்லே.
சுவடி ஓதும் மைந்தன் :- (திருவண்ணாமலையில் இருப்பதும், சிலை கீழ இருக்குது. அது வச்சுதான் எல்லாம் பண்ணிருக்காரு இராவணேஸ்வரர்)
==============================================
# தமிழகத்தில் திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் ஆலயத்திலும் , உச்சிஷ்ட கணபதி ஆலயத்திலும் அடியில் இருப்பது இராவணேஸ்வரர் நட்டு வைத்த சுராக்கல் ஆகும்.
=============================================
சுராக்கல் நட்டு வைத்த இராவணேஸ்வரர் திருவடிகள் போற்றி போற்றி போற்றி !!!
=============================================
குருநாதர் :- அப்பனே, இன்னும் பின் நெல்லையப்பனும் கூட.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட உச்சிஷ்ட கணபதிக்கு, அப்பனே, ஏன் இவ்வளவு சக்திகள் அங்கேயும் கூட அடியில் என்பேன் அப்பனே.
==============================================
# இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்கள் ஆலயத்திலும் அடியில் இருப்பது இராவணேஸ்வரர் நட்டு வைத்த சுராக்கல் ஆகும்.
=============================================
சுராக்கல் நட்டு வைத்த இராவணேஸ்வரர் திருவடிகள் போற்றி போற்றி போற்றி !!!
=============================================
குருநாதர் :- அப்பனே, இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட அனைத்தும், அப்பனே, பின் ஜோதிர்லிங்கங்கள் கூட, அப்பனே, அடியில் இருப்பது, அப்பனே, எவை என்று , அப்பனே, இவையே என்பேன், அப்பனே, சுராக்கல் என்பேன் அப்பனே.
குருநாதர் :- அதற்குத்தான் இன்னும் சக்திகள். பின் ஆனாலும் அவை பின் வளர வளர மனிதன் அழித்துவிட்டான். ஆனாலும், அப்பனே, இன்னும் சக்திகள் அழியவில்லையே.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப 12 ஜோதிர்லிங்கங்கள் கீழே இருப்பது என்னது, சுராக்கல் தான். அதனால என்ன பண்ணிட்டாரு,
அடியவர் :- அதுவும் வந்து சக்திகள் அழியலன்றாரு,
சுவடி ஓதும் மைந்தன் :- சக்திகள் இன்னும் அழியல.
அடியவர் :- அப்ப உச்சிஷ்ட கணபதி சொன்னாரு, சரியா புரியல,
சுவடி ஓதும் மைந்தன் :- உச்சிஷ்ட கணபதி, ஆமா, திருநெல்வேலில இருக்குது, திருநெல்வேலி இருக்குது, திருநெல்வேலி, உச்சிஷ்ட கணபதி.
சுவடி ஓதும் மைந்தன் :- அது வந்து சுராக்கல்ல செஞ்சது, அதுவும் கீழ கீழ இருக்குது, சுராக்கல்ல , அது வந்து செஞ்சதுன்றாரு, அது.
==============================================
# இந்தியாவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திலும் அடியில் இருப்பது இராவணேஸ்வரர் நட்டு வைத்த சுராக்கல் ஆகும்.
=============================================
சுராக்கல் நட்டு வைத்த இராவணேஸ்வரர் திருவடிகள் போற்றி போற்றி போற்றி !!!
=============================================
குருநாதர் :- அப்பனே, இன்னும் எதை என்று அறிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அறிந்து கூட, இன்னும், அப்பனே, எங்கெங்கு அமைத்தான் என்பதை எல்லாம், அப்பனே.
குருநாதர் :- பின் இன்னும் ஏழுமலையான் இடத்திலும், அப்பனே, இன்னும் எதை என்று புரிய, அப்பனே, பல மலைகளில் கூட, அப்பனே.
==============================================
# இராவணேஸ்வரர் நட்டு வைத்த சுராக்கல் அனைத்தும் வருவோருக்கெல்லாம் நல்லதையே செய்து கொண்டிருக்கின்றது.
=============================================
சுராக்கல் நட்டு வைத்த இராவணேஸ்வரர் திருவடிகள் போற்றி போற்றி போற்றி !!!
=============================================
குருநாதர் :- இப்பொழுது கூட, பின் அக்கல், அப்பனே, பின் இன்னும், பின் அதாவது, பின் வருவோருக்கெல்லாம் நல்லதையே செய்து கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே.
==============================================
# அன்பு அடியவர்கள் - இராவணேஸ்வரர் நட்டு வைத்த சுராக்கல் ரகசியங்களை, வருவோருக்கெல்லாம் நல்லதையே செய்து கொண்டிருக்கும் சுராக்கல் மகிமைகளை எடுத்து அனைவர்க்கும் சொல்லுங்கள். மக்கள் நலன் அடையட்டும்.
==============================================
குருநாதர் :- இதனால் நல்லதையே செய்து கொண்டிருக்கும் அக்கல்லை, பின் நிச்சயம் தன்னில் கூட எடுத்துரைக்காவிட்டால், பின் மதிப்பு ஏதப்பா?.
சுவடி ஓதும் மைந்தன் :- (அந்தக் கல்லோட மகிமை மத்தவங்களுக்குத் தெரியாம இருந்தப்போ கூட, அது எல்லாருக்கும் நன்மையைத்தான் கொடுத்துட்டு இருந்தது. ஆனா, இப்போ யாருக்குமே அதோட அருமை புரியலன்னா அப்புறம் அந்த கல்லுக்கு என்ன மதிப்பு இருக்கப்போகுது? அதோட சக்தியைப் பத்தி நான் எடுத்துச் சொல்லலன்னா, அந்த கல்லு வெறும் கல்லாத்தான் இருக்கும்; அதுக்கு உண்டான மரியாதையே இல்லாம போயிடும். )
அடியவர் :- திருப்பதி அங்கயும் இருக்குது, திருப்பதில.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆமாம் திருப்பதி அங்கயும் இருக்குது, இருக்குது.
============================================
# உலகில் உள்ள பல இடங்களில் கல்லை வைத்து வழிபடுகின்றனர். பின் வரும் வாக்கை வைத்து அடியவர்கள் சூட்சுமமாக புரிந்து கொள்க.
===========================================
===========================================
# “சுராக்கல்” - அக்கல் எங்கெங்கு உள்ளதோ, நிச்சயம் மனிதனை அங்கு ஈர்க்கும் அதிகம். இது போல எத்தனை திருத்தலங்கள், எத்தனை திருத்தலங்கள்.
===========================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அக்கல் எங்கெங்கு உள்ளதோ, நிச்சயம் தன்னில் கூட பின் அதை எதை என்று அறிய, நிச்சயம் மனிதனை அங்கு ஈர்க்கும் என்பேன், அதிகம்.
குருநாதர் :- நிச்சயம் எத்தனை திருத்தலங்கள், எத்தனை திருத்தலங்கள்.
அடியவர் :- ( ஆச்சரியம் ) ஓ….. (அந்த கல் சக்தி ) அதிகமா இழுக்கிற இடம்…. ஏழுமலை , திருவண்ணாமலை …..( போன்ற பல ஆலயங்கள் மக்களை ஈர்க்கிறது)
அடியவர் 2 :- அமாம். மக்களை ஈர்க்கிறது,
=========================================
# அக்கல் - நீங்கள் கேட்டதை அப்படியே கொடுக்கும்.
=========================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அதேபோலத்தான் அக்கல்லையும், நிச்சயம் தன்னில் கூட சிறு கல் கூட பின் கிடைத்தாலும், நிச்சயம் பின் எதை என்று அறிய, நீ கேட்பதை நிச்சயம் அவையும் அப்படியே கொடுக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( அந்த கல்லு கூட கொஞ்சம் கிடைச்சதுனாலே, நீங்க அதை வைத்துக் கொண்டால், நீங்க கேட்டதை அப்படியே கொடுக்கும். )
===========================================
# இராவணேஸ்வரர் தன - சுரா கல் ரகசியங்களை உலகில் முதன் முதலில் கண்டு உணர்ந்தார்
===========================================
குருநாதர் :- அப்பனே, இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய, அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, இதைத்தான், அப்பனே, முதலிலே கண்டு உணர்ந்தான்.
===========================================
# இறைவன் வழியே அனைத்தும் சாதித்தவர் இராவணேஸ்வரர்
===========================================
குருநாதர் :- அப்பனே இறைவன் வழியே அனைத்தும் சாதித்தவன் பின் இராவணனே என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- ( இறைவன் வழியிலே மாந்திரீகங்கள் இல்லாம, ஒன்னும் இல்லாம, இறைவன் வச்சு எல்லாத்தையும் சாதித்துக் கொண்டவர் யார் அப்படின்னா… முதல்ல இராவணன் தான் சொல்றேன், இராவணன் தான் )
==========================================
# இராவணேஸ்வரர் சக்தியின் ரகசியங்கள்
==========================================
குருநாதர் :- அப்பனே, அறிந்து கூட ஏன் இவ்வளவு சக்திகள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட?
குருநாதர் :- அப்பனே, தன் அன்னைக்காக அனைத்தும், அப்பனே, பின் செய்தான் என்பேன், அப்பனே, இதனால்தான் இவ்வளவு சக்திகள் என்பேன், அப்பனே.
==========================================
# இராவணேஸ்வரர் போல் சக்திகள் உங்களுக்கும் எப்போது கிடைக்கும்?
==========================================
குருநாதர் :- மனிதன், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக இருந்தால், அப்பனே, நிச்சயம் நீங்களும் இவ்வாறாக சக்தி பெற்றவராக இருக்கலாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- (அவருக்கு எல்லாமே கிடைச்சதுக்கு ஒரே ஒரு காரணம் தான், அது அவர் தாய் மேல வச்சிருந்த அந்தப் பாசம் மட்டும்தான். அதே மாதிரி தான் இப்போ இருக்குற மனிதர்களும்; அவங்க எந்த அளவுக்குத் தாய்க்கு மதிப்பு கொடுத்து பாசமா இருக்குறாங்களோ, அந்த அளவுக்கு அவங்களுக்கும் எல்லா நன்மைகளும் நடக்கும், அந்த சக்தியும் தானா வந்து சேரும். தாய்ப்பாசம் ஒன்னு இருந்தா போதும், அந்த மனுஷனுக்கு எல்லா சக்தியும் கண்டிப்பா கிடைக்கும்.)
===============================================
# உங்கள் முன்னோர்களின் புண்ணியங்களை உங்களுக்கு ஈர்த்து கொடுக்கும் சுரா கல் உள்ள ஆலயங்கள் - ராமேஸ்வரம் , நகுலேஸ்வரம், இன்னும் கூட (சுரா கல்) இருக்கும் ஆலயங்களுக்கு எல்லாம் சென்று வழிபடுங்கள்.
==============================================
குருநாதர் :- அப்பனே, எதை என்று புரிய, இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட முன்னோர்கள், அப்பனே, பின் நினைத்து நினைத்து, அப்பனே, முன்னோர்கள், அப்பனே, பின் நிச்சயம் எப்படியாவது சில புண்ணியங்களை, அப்பனே, சேகரித்து வைத்திருப்பார்கள், நிச்சயம் தன்னில் கூட
குருநாதர் :- நல்லதை செய்திருப்பார்கள் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- இவ்வாறாக, நிச்சயம், அப்பனே, ஆங்காங்கு சென்று ராமேஸ்வரத்திலும், இன்னும் நகுலேஸ்வரம் , இன்னும் கூட (சுரா கல்) இருக்கும் ஆலயங்களுக்கு எல்லாம் சென்று, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது என் முன்னோர்கள் என்ன தவம் செய்தார்களோ, பின் அனைத்தும், நிச்சயம் தன்னில் கூட தேங்கி நிற்கின்றது. அவையெல்லாம் எங்களுக்கு தந்து வெற்றிகளை, நிச்சயம் தன்னில் கூட தரும் என்று, பின் நிச்சயம் வேண்டிக்கொண்டால், நிச்சயம், பின் அக்கல்லானது, நிச்சயம், பின் பாவ புண்ணியங்கள் எல்லாம், பின் எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது அப்படியே, பின் ஈர்த்து கொடுக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- நகுலேஸ்வரம் , இன்னும் நிறைய கோயில்கள் வந்து இது மாதிரி இருக்கு.
==================================================
# உலகெங்கிலும் சுராக்கல்லை நட்ட இராவணேஸ்வரர்.
==================================================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பல வகையில் கூட, அப்பனே, பின் இராவணன், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட இவ் உலகத்தை, நிச்சயம் தன்னில் கூட, பின் எத்தனை எத்தனை, அப்பனே, எங்கெங்கு தேசங்களுக்கு சென்று, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, பின் ஈசன், அப்பனே, பின் எதை என்று, அப்பனே, கற்களை, அப்பனே, பின் நட்டினான் என்பேன் அப்பனே. அதற்கு, பின் சக்திகளை எவை என்று கூட தானாகவே.
சுவடி ஓதும் மைந்தன் :- ( அப்ப அவரு பல ஊர்ல, பல நாட்டுல என்ன பண்ணாருன்னா, இந்த கல்லுதான் 'சுராக்கல்'. அந்த சுராக்கல்லை தான் அவரு எல்லா இடத்துக்கும் போயி நட்டு வச்சுட்டு வராரு. )
குருநாதர் :- அப்பனே, மனிதன் கேட்பதை எல்லாம், நிச்சயம் தன்னில் கூட தந்தருளும் என்றெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- இதனால், அப்பனே, கலியுகத்தில், அப்பனே, பின் எதை என்று கூட தீய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சக்திகள், அதாவது, அப்பனே, பின் நிச்சயம் அதிகரிக்க, அதிகரிக்க, நிச்சயம் சில, அப்பனே, பின் திருத்தலங்களில் உள்ளதை, அப்பனே, தோண்டி எடுத்துவிட்டான் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- (மனுஷனோட மூளை ஏதோ ஒன்னு யோசிச்சு, அந்தச் சுராக்கல்லை வணங்க வணங்க ஏதோ ஒரு சக்தி கிடைக்குதுன்னு அவனுக்குத் தெரிஞ்சு போச்சு. அந்த அறிவு வளர வளர, அதுல இருந்து ஏதோ லாபம் வரும்னு நினைச்சு, அவன் என்ன பண்ணிட்டான்? அந்தப் புனிதமான கல்லைத் தோண்டி எடுத்துட்டான். தோண்டி எடுத்து அதைக் கொண்டு போயிட்டாரு. )
==============================================
# திருச்செந்தூரிலும் , அறுபடை வீடுகளிலும் - இராவணேஸ்வரர் பதித்த சுராக்கல்..
==============================================
குருநாதர் :- அப்பனே, பின் செந்தூரிலும், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் கூட, அப்பனே, அறுபடை வீடுகளும் இருப்பதும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
=========================================
# ஏன் இதற்கு மட்டும் அவ்வளவு சக்திகள்?
=========================================
குருநாதர் :- ஏன் இதற்கு மட்டும் அவ்வளவு சக்திகள் என்பதெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( அப்ப அங்கேயும் வந்து அந்தச் 'சுராக்கல்' இருக்கு. திருச்செந்தூர், அறுபடை வீடு இருக்குல்ல. அங்கேயும் கண்டிப்பா அந்தச் சுராக்கல்லைக் கொண்டு வந்து அவரு வச்சிருக்காரு. எல்லா இடத்துலயும் அந்தச் சக்தியைப் பரப்பணும்னு தான் எல்லாத்துலயும் அதை அங்கங்க கொண்டு வந்து வச்சிருக்காரு.)
==========================================
# இராவணேஸ்வரர் தாய் - ஞானிகளுக்கு இட்ட அருள் உத்தரவு.
==========================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட ஆனாலும், பின் நிச்சயம் இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட, பின் தன் அன்னையிடம், நிச்சயம் கற்றுக்கொள்ள, பின் ஞானிகள் இவ்வுலகத்திற்கு, நிச்சயம் தன்னில் கூட, தன்னால், பின் முடிந்தவரை என்னென்ன செய்ய வேண்டுமோ, அனைத்தும் செய்யுங்கள் என்றெல்லாம் முறையிட்டு, அவ் ஞானிகள், பின் உலகமெங்கும் சென்று, நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- பின் அன்பையும் கூட, நிச்சயம், பின் எவை என்று கூட, பாசத்தையும் கூட, கருணையும் கூட பரப்பினார். பின் இதுவே இறைவன் ஆகும் என்றும் சொன்னார்கள், நிச்சயம் தன்னில் கூட. பின் இவையெல்லாம், பின் யார் வளர்த்தார்கள் என்றால், நிச்சயம் தன்னில் கூட இராவணனுடைய பின் அன்னையே என்பேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( நிறைய ஞானிகளை இந்த உலகத்துக்காக வளர்த்துவிட்டது யாருன்னா, அது இராவணனுடைய அம்மாதான். அந்த அம்மா என்ன பண்ணாங்கன்னா, இந்த உலகத்துல எங்கெங்கெல்லாம் இடம் இருக்கோ அங்கெல்லாம் போய் இந்த சக்தியைப் பத்தி தெரியப்படுத்துங்கன்னு சொல்லி, ஞானிகளை அனுப்பி வச்சாங்க. இதுல மதம் அப்படிங்கறதெல்லாம் கிடையாது; எல்லா நாட்டுக்கும் போய் நல்லது செய்யுங்கள், அன்பு, கருணை, பாசத்தைப் பத்தி எல்லாருக்கும் சொல்லிக் கொடுங்கன்னு சொல்லி அவங்களை அங்கங்க அனுப்பி வச்சாங்க. )
===============================================
# அனைத்து ஞானிகளிலும் தர்மத்தை தான் போதிப்பார்கள்
===============================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட இப்படி வாழ்ந்தால் தான் உலகத்தில், நிச்சயம் தன்னில் கூட மனிதனால், நிச்சயம் துன்பம் இல்லாமல் வாழ முடியும் என்பதை எல்லாம், நிச்சயம் தன்னில் கூட பல ஞானிகள் எடுத்துரைத்தனர்.
குருநாதர் :- ஆனாலும் இன்றோ, அப்பனே, அவை மட்டுமில்லாமல் தர்மத்தின் வழி செல்க என்றெல்லாம், பின் நிச்சயம் தன்னில் கூட அனைவரும், நிச்சயம் தன்னில் கூட இவை தன் தர்மத்தின் வழி செல்லுக என்றெல்லாம், நிச்சயம் அனைத்து, பின் ஞானிகள் இடத்திலும் , நிச்சயம் தன்னில் கூட இவ்வன்னை எடுத்துரைத்திருக்கின்றாள். இதனால், நிச்சயம் தன்னில் கூட அனைத்து ஞானிகளிலும் தர்மத்தை தான் போதிப்பார்கள் என்பதை பார்த்து நீங்களே தெளிவு கொள்ளுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( அப்ப அம்மா என்ன பண்றாங்கன்னா, தர்மத்தைப் பத்திதான் எல்லாருக்கும் சொல்லிக் கொடுத்துட்டு இருக்காங்க. அதனாலதான் அங்க இருக்குற எல்லா ஞானிகளும் பார்த்தீங்கன்னா என்ன பண்றாங்க, தர்மத்தைப் போதிக்கிறாங்க. "தர்மத்தைக் கடைபிடிங்க" அப்படின்னுதான் எல்லாரும் சொல்லிட்டு வராங்க. அந்த அம்மா சொல்லிக் கொடுத்த தர்மத்தைத்தான் எல்லா ஞானிகளும் உலகத்துக்குப் பரப்புறாங்க. )
==================================
# நிச்சயம் தர்மம் தான் இறைவன்
==================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட தர்மம் தான் இறைவன் என்பவன்.,
சுவடி ஓதும் மைந்தன் :- அவங்க என்ன சொல்லி இருக்காங்கன்னா, தர்மம் தான் இறைவன்.
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட பின் தர்மத்தை கடைபிடித்தாலே இறைவன் எப்பொழுதும் பக்கத்தில் இருப்பான். அனைத்து ஒளிகளையும் கொடுப்பான். அனைத்தும் பின் வெற்றி கொள்ளலாம் என்று நிரூபித்தாள் , பின் இவ் அன்னையே.
சுவடி ஓதும் மைந்தன் :- ( தர்மம் தான் இறைவன் அப்படின்னு கூட சொல்லலாம். அப்ப யாரு தர்மத்தை சரியா கடைபிடிச்சு, அதைக் காக்குறாங்களோ, யாரு இறைவனை முழுசா நம்புறாங்களோ, அவங்க பக்கத்துலயே இறைவன் இருப்பாரு. இறைவன் அவங்க கூடவே இருந்து எல்லாத்தையும் பார்த்துப்பார், அவங்ககிட்ட இருந்து எதை வாங்கணுமோ வாங்கிட்டு, அவங்களுக்கு எதைக் கொடுக்கணுமோ அதைச் சரியா கொடுப்பாரு. )
===================================
# அன்பு குருநாதர் அளிக்க உள்ள அன்பு பரிசுகள்
===================================
குருநாதர் :- அப்பனே, நம்மை எதை என்று புரிய, இன்னும் புரிய பல விஷயங்கள் இருக்கின்றது. இதனால், நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் தெளிவடைந்த பின், சில ஞானங்களை, நிச்சயம் பின் உங்களுக்கு அள்ளிக் கொடுப்பேன்.
அடியவர்கள் :- ( மகிழ்ச்சியில் ) கை தட்டல்கள் …..
குருநாதர் :- இதனால், நிச்சயம் தன்னில் கூட உங்களை நீங்கள் வென்று, நிச்சயம் தன்னில் கூட பல வகையில் கூட நன்மைகள் , நிச்சயம் நீங்களும் செய்யலாம். நிச்சயம் எதை என்று புரிய, அறிந்து கூட.
=============================================
# உங்கள் எண்ணம் போல் வாழ்வு அளிக்கும் சுராக்கல்.
=============================================
=============================================
# அனைவர் இதயத்திலும் சுராக்கல் ஆனது, பின் சில சிறிய துகள் பதிந்துள்ளது.
=============================================
குருநாதர் :- இதனால் பின் ஏன் ஒருவருக்கு துன்பமே வந்து கொண்டிருக்கின்றது, ஏன் ஒருவனுக்கு இன்பமே வந்து கொண்டு இருக்கின்றது என்றால், நிச்சயம் அவரவர்கள், நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, பின் சுராக்கல் ஆனது, பின் சில சிறிய துகள், பின் நிச்சயம் தன்னில் கூட தான், நிச்சயம் தன்னை கூட, பின் இதயத்திலும் பதிந்துள்ளது. அனைவரும் இதயத்திலும். இதனால், நிச்சயம் நீங்கள் நினைக்க, நிச்சயம் தன்னில் கூட இப்படியும் எடுத்துக்கொள்ளலாம். திரும்பவும் அச்சுராக்கல் ஆனது, நிச்சயம் உங்களுக்கு அழகாக குறிப்பிக் கொடுக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( எண்ணம் போல் வாழ்க்கை, எண்ணம் போல் வாழ்க்கைன்னு இப்படியும் எடுத்துக்கலாம்னு அவரு சொல்றாரு. ஒரு சின்னத் துகள் மாதிரி நம்ம இதயத்துல ஒன்னு இருக்கும்; அப்போ நீங்க எதைக் கேக்குறீங்களோ, எதை மனசார நினைக்கிறீங்களோ அதுதான் நடக்கும், அதுவே தான் நடக்கும். நம்ம மனசுல என்ன விதைக்கிறோமோ அதுவே வாழ்க்கையா அமையுதுன்னு அழகா சொல்லிருக்காங்க. )
===============================================
# அவ் ஞானிகளின் வாழ்க்கை பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால்,சக்திகள் உங்களுக்கும் தோன்றும்.
===============================================
குருநாதர் :- அப்பனே, இவையெல்லாம் தெரிவித்தார்கள் அப்பனே, பின் எவை என்று கூற ஞானிகளின் பின், அப்பனே, நிச்சயம் தன்னை கூட.
குருநாதர் :- அவ் ஞானிகளின் வாழ்க்கை பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால், அப்பனே, நிச்சயம், அப்பனே, எவை என்று அறிய அறிய சக்திகள் உங்களுக்கும் தோன்றும் என்பேன் அப்பனே.
குருநாதர் :- இதனால், அப்பனே, நீங்களும் ஞானங்கள் பெற்று, அப்பனே, மற்றவர்களுக்கும் ஞானத்தை பற்றி சொல்லி, அப்பனே, உங்களையும் காக்கலாம், அவர்களையும் காக்கலாம். அப்பனே, புண்ணியத்தை கூட ஏற்படுத்திக் கொள்ளலாம் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- ( புரியுதுங்களா? சில விஷயங்கள் எல்லாம் ஞானத்தைப் பத்தி உங்களுக்கு அவரு சொன்னாருன்னா, நீங்களும் அதை மத்தவங்களுக்குச் சொல்லுவீங்க. அந்த மத்தவங்களும் அதைக் கேட்டுப் பிழைச்சுக்குவாங்க. அவங்க அப்படி நல்வழிப்பட்டு வர்ற அந்தப் புண்ணியம் பாத்தீங்கன்னா, அது உங்களுக்கே கிடைக்கும், உங்களுக்கே வந்து சேரும். மத்தவங்களுக்கு ஞானத்தைச் சொல்றதுனால உங்களுக்கும் பெரிய புண்ணியம் கிடைக்குதுன்னு தான் இதுல சொல்ல வர்றாரு. )
========================================
# நன்மையை செய்து கொண்டே இருந்தால், புண்ணியம் பின் ஏறிக்கொண்டே இருக்கும்.
========================================
குருநாதர் :- அப்பனே, அறிந்தும் கூட, இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் நன்மையை செய்து கொண்டே இருந்தால், புண்ணியம், அப்பனே, பின் ஏறிக்கொண்டே இருக்கும் அப்பனே.
=======================================
# உங்கள் புண்ணியங்களும் , பாவமும் நெருப்பு பிழம்பாக ஆகாயத்தில் இருக்கும் இறைவனிடத்தில் சேகரித்துக் கொண்டே போகும் .
=======================================
குருநாதர் :- நிச்சயம், அப்பனே, பின் எதை என்று அறிய, அப்பனே, பின் இறைவனிடத்தில் சேகரித்துக் கொண்டே, கொண்டே, கொண்டே போகும் அப்பனே.
குருநாதர் :- அதேபோலத்தான், அப்பனே, பாவங்களும் இறைவனிடத்தில், பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் சேகரித்து வைத்துக் கொண்டு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் போகட்டும், போகட்டும் என்று இறைவனும் விட்டுவிடுவான்.
==========================================
# இறைவன் நிச்சயம் ஒரு நாள் வாரி வழங்குவான் அப்பா.
# புண்ணியமானாலும் சரி, பாவமானாலும் சரி.
===========================================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் ஒரு நாள் வாரி வழங்குவான் அப்பா. புண்ணியமானாலும் சரி, பாவமானாலும் சரி, அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- ( நீங்க செஞ்ச புண்ணியம், பாவம் எல்லாம் ஒரு சேவிங்ஸ் அக்கவுண்ட் மாதிரி அங்க போய் சேர்ந்துடுச்சு. ஆனா, அந்த அக்கவுண்ட்ல இருந்து ஒரு நாள் உங்களுக்கு என்ன தேவைப்படுது, எதைக் கொடுக்கலாம்னு இறைவன் பார்க்கும்போது, உங்ககிட்ட சரியான எண்ணங்கள் மட்டும் இருந்தா போதும்; அவரு புண்ணியத்தை அள்ளி அள்ளிக் கொடுத்துட்டே இருப்பாரு. அப்போ யாராலயும் உங்களை ஒன்னும் பண்ண முடியாது. அதே நேரத்துல, நம்ம மனசு சுயநலமா எதாவது தேவைன்னு தப்பா யோசிச்சுப் பண்ணா, அவரு பாவத்தை மட்டும் கொடுத்துட்டாருன்னா அப்புறம் அதுல இருந்து மீளவே முடியாது. நீங்க எங்க போனாலும், என்ன பண்ணாலும் ஒண்ணுமே செய்ய முடியாது, அதுல இருந்து தப்பிக்கவே முடியாது. )
========================================
# உலகின் முதல் தேசமாக இலகையை மாற்றிய இராவணேஸ்வரர்.
========================================
குருநாதர் :- அப்பனே, இதனால், நிச்சயம் தன்னில் கூட, இராவணன் பல வெற்றிகளை, எதை என்று கூற, அப்பனே, பல அரசர்களை, அப்பனே, வெற்றிக்கொண்டு, அப்பனே, பின் உலகத்தில், அப்பனே, முதல், அப்பனே, தேசமாக, இத்தேசம் திகழ்ந்தது என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- ( அப்ப இந்த தேசம் என்ன ஆச்சுன்னா, இதுதான் முதல் தேசமா இருந்தது. முதல் தேசமாக அப்ப எக்கச்சக்க தேசங்கள் இருந்தது; அதுல எல்லாரையும் வெற்றி கொண்டு, "இந்த இலங்கை இதுதான்டா" அப்படின்னு சொல்லிட்டு முதல் தேசமா இதுவே வந்துடுச்சு. இதுலயே உங்களுக்குப் புரியுதுங்களா, இதுதான் அந்த நம்பர் ஒன், இந்த நம்பர் ஒன் இடத்துல அப்போ இலங்கைதான் இருந்தது. )
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 04/02/2026 அன்று திருக்கோணேஸ்வரத்தில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை இராவணேஸ்வரர் ரகசியங்கள் வாக்குகள் தொடரும்……)
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

