69. சிவபுராண கூட்டு பிரார்த்தனையில், கர்மபரிபாலனமன்றி, கர்மபரிவர்த்தனை தான் நடக்கிறது என்பது தெளிவாகிறதே.
குருநாதர்: தீயவையா செய்கின்றார்கள்! நல்லவை தானே செய்கின்றார்கள். சில சில நல்லவைகளை செய்யச்செய்ய சில சில கர்மாக்கள் ஓடும், நிச்சயம்! இவ்வுலகத்தில் நல்லோர்கள் குறைவு. நல்லோர்களை வைத்து இவ்வுலகத்தை மாற்ற வேண்டும். அவரவர் எண்ணங்கள் அவரவரையே தாக்கும்.
70. சித்தர்களை நம்பி இறங்கி வருபவர்களை, கைபிடித்து ஏற்றி விடுகிறீர்களா? அல்லது கைவிட்டு நடுத்தெருவில் விட்டு அனுபவிடா! என்று விடுகிறீர்களா?
குருநாதர்: நிச்சயம், முதலில் கை விட்டுவிடுவோம், பார்ப்போம் இவன் எண்ணம் என்னவென்று அறிய! அதற்கு சரியானவனாக இருந்தால் ஏற்றி விடுவோம். நிச்சயம் அடுத்தவனுக்கு உதவாத மனிதன் இருந்தால் என்ன லாபம்? அதனால் தான், எங்களை நாடி வருவோர்க்கு, முதலில் கஷ்டத்தை அளிப்போம். இதை அனைவரிடத்திலும் தெரியப்படுத்து! நிச்சயம் அக்கஷ்டத்தை தாங்கினால் உயர்த்துவோம், இல்லையெனில் விட்டுவிடுவோம் யாங்கள். சித்தனுடைய பண்பு, முதலில் கஷ்டப்படுத்துவதே, கஷ்டப்படுத்துவதே. இதற்கு தயாராக இருந்தால் வாருங்கள்.
அடியவர்: பார்த்துப்பா! நடக்க கால் இருக்கணும்! (ஜானகி ராமனிடம் - உனக்கு எத்தனை வயசாச்சு? முப்பது ஆச்சுங்க என்றார். உனக்கு 50 அல்லது 60 வயதாகட்டும்)
71. கால பைரவர் அம்சங்களுக்கு 3 ஆண்டுகளாக நல்வாழ்வு இல்லை. அவற்றை அழிக்கும் வேலை நடைபெருகிறது. அகத்தியர் பெருமான் இதை தவிர்க்க வழி காட்ட வேண்டும்.
குருநாதர்: காப்பாற்றச்சொல்! படையை உருவாக்கச்சொல்! அதுவும் இறைவன் அம்சம்தான்.
72. குருவே சரணம். ஏன் மனிதனின் தரம் ஜாதியால் நிர்ணயம் செய்யப்படுகிறது.இதற்கு முடிவே இல்லையா?
குருநாதர்: நிச்சயம் தன்னில் கூட, எங்களுக்கு அதெல்லாம் தேவை இல்லை.
73. தந்தையே தங்கள் திருபாதங்களை பற்றி பணிந்து வேண்டுகிறேன், வெளிநாடுகளில் இருக்கும் தங்களின் குழந்தைகளாகிய நாங்கள் தந்தை வழிகாட்டும் கோயிலுக்கு செல்ல இயலாதநிலையில் எப்படி வீட்டில் இருந்து வழிபடுவது என கருணையுடன் வழிகாட்ட வேண்டுகிறேன்.
குருநாதர்: நிச்சயம் நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை. அதுபோல், நினைத்தாலே யாங்கள் வருவோம், வழிகாட்ட.
74. சித்தர்களை நம்பி வரும் சாதாரண மனிதனை அழைத்து சென்று, நடு வீதியில் விட்டு விடுவார்களா? அல்லது அனுபவித்துவிட்டு வா என விலகி செல்வார்களா?
குருநாதர்: நிச்சயம், முதலில் கை விட்டுவிடுவோம், பார்ப்போம் இவன் எண்ணம் என்னவென்று அறிய! அதற்கு சரியானவனாக இருந்தால் ஏற்றி விடுவோம். நிச்சயம் அடுத்தவனுக்கு உதவாத மனிதன் இருந்தால் என்ன லாபம்? அதனால் தான், எங்களை நாடி வருவோர்க்கு, முதலில் கஷ்டத்தை அளிப்போம். இதை அனைவரிடத்திலும் தெரியப்படுத்து! நிச்சயம் அக்கஷ்டத்தை தாங்கினால் உயர்த்துவோம், இல்லையெனில் விட்டுவிடுவோம் யாங்கள். சித்தனுடைய பண்பு, முதலில் கஷ்டப்படுத்துவதே, கஷ்டப்படுத்துவதே. இதற்கு தயாராக இருந்தால் வாருங்கள்.
75. சித்தர்கள் சொன்ன வார்த்தையை காப்பாற்றுவார்களா?
குருநாதர்: நிச்சயம், முதலில், நாங்கள் சொல்வதை காப்பாற்றுவார்களா?
76. தத்தோலி மகரிஷி, புலத்திய பிரம்மா மகரிஷியின் வம்சம். இவர் தான் முதல் மனுவாகிய சுவயம்புவ மனுவின் காலத்தில் அகத்திய மகரிஷியாக இருந்திருக்கிறார் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது.
குருநாதர்: இதற்கெல்லாம் விஞ்சான படிப்பு படித்திருக்கவேண்டும். அப்பொழுதுதான் சொல்வேன்.
77. வணக்கம் அகத்தியரப்பா! பஞ்சபூத ஸ்தலங்களுக்கு செல்லும் பொழுது வேறு கோயில்களுக்கும் செல்லலாமா ஐயா!
குருநாதர்: எதை உட்கொள்ள வேண்டுமோ அதைத்தான் உட்கொள்ள வேண்டும். இஷ்டத்துக்கு சென்றால் இஷ்டத்துக்குத்தான் நடக்கும். அனைவரும் தன் சந்தோஷத்துக்காகவே இறைவனை காண வருகிறார்கள். இறைவனே, ஒரு சந்தோஷப் பொருளாகிவிட்டான்.
அடியவர்: அது தப்பில்லையே!
குருநாதர்: அப்பா! எதற்காகப் போராடுகின்றோமோ, அதற்காகத்தான் போராட வேண்டும் முதலில். பின்பு வரட்டும் தேடி.
அடியவர்: சந்தோஷ மனநிலையில் இருக்கிற இறைவனை பார்ப்பது அடிப்படையான ஒரு ஆசை தானே?
குருநாதர்: சில திருத்தலங்கள் இருக்கின்றது. அதற்குமட்டும் சென்று பின் இல்லம் திரும்பி மறுபடியும் வேறு திருத்தலங்களுக்கு வந்தால், இறைவனே மகிழ்வான், இவ்வளவு பக்தியா என்று.
78. அகத்தியர் ஐயாவுக்கு வணக்கம் நன்றாக இருக்கிறீர்களா அகத்தியரப்பா. நாங்கள் வெளிநாட்டில் வாழ்கிறோம் கூட்டுப்பிரார்த்தனை வழிபாட்டில் கலந்து கொள்ள முடியவில்லையே என்று ஏக்கமாக இருக்கிறது,எங்களுக்கும் உங்களுடைய அருள் ஆசிகள் வேண்டும் ஐயா!
குருநாதர்:நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலை. அதுபோல், நினைத்தாலே நாங்கள் வருவோம்.1
79. Kindly tell us any remedy for intense tooth decay at the age of 20.
குருநாதர்:அப்பா! அனைத்தும் இருக்கின்றது. பின் சித்தன் அருள் என்று வலைத்தளம் உள்ளது. அதில் கூறியதை கடைபிடித்தாலே, நீடூழி வாழ முடியும்.
அடியவர்: ஏற்கனவே என் தலையை உருட்டி கொண்டு இருக்கிறார்கள், இதுல நீங்க வேறயா?
குருநாதர்: அப்பா! நல்லதை செய்யப்போனாலே இப்படித்தான் அப்பா! பிறர் கெடுக்கத்தான் பார்ப்பார்கள். ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அவன் சொல்லிவிட்டான், இவன் சொல்லிவிட்டான் என்று மனம் மயங்க கூடாது எப்பொழுதும் தன்னில் கூட. இது யாங்கள் தேர்ந்தெடுத்து நடத்துவது. அப்பா! அனைத்தும் இறைவன் நடத்துகிறான் என்று உணர்ந்தவன், அனைத்தும் இறைவன்தான் நடத்துகிறான் என்று சொல்வான். பொறாமைக்காரன்தான் அவை, இவை என்று சொல்வான். பொறாமைக்காரர்கள்தான் பக்தி மார்கத்தில் அதிகமாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு யாங்கள் என்ன தண்டனை கொடுப்பது?
80. Kindly tell us the ways of restoring liver from deceases like fatty liver, liver failure,etc that too at 20s and 30s who never consume alcohol.
அப்பா! கலியுகத்தில் வரும், அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ப! நிச்சயம் சொல்லிவிட்டேன்! அதெல்லாம் மாற்ற முடியாதது. ஏன் என்றால் நல்ல எண்ணம் இருந்தாலே போதுமானது. யாங்கள் வந்து மாற்றிவிடுவோம்! ஆனால், தீய எண்ணங்களை வைத்துக்கொண்டு, இறைவன் எங்கு இழுக்க வேண்டுமோ, அங்கு இழுப்பான். அதை காக்கவே நங்கள் ஓடோடி வந்து கொண்டு இருக்கின்றோம். இதையாவது செய்யுங்கள் அப்பா! ஒரு எல்லைக்குத்தான் பார்ப்போம், யாங்கள் கூட.
81. Hairfall, baldness treatment is a very big business an lot of money is spent by the suffering people. Kindly , please tell us the ways of getting rid of that. Thank You.
குருநாதர்: எதற்கும் ஆசை படாமல் இருந்தால், அவனுக்கு முடி வளரும்.
82. Please do something for srilankan tamils to enjoy their rights equally.
குருநாதர்: அதனால் தான் அங்கு சென்று இருக்கின்றேன் யான்.
83. Like regular kootu prarthanai, if all the Ahathia Bhavan devotees do prayer for the underprivileged, deceased orphans on regular basis at a particular time, would it be helpful. Kindly direct the right people to arrange.
குருநாதர்: அப்பனே! இப்படிப்பட்ட எத்தனையோ பிரச்சினைகளை தீர்க்க வேண்டித்தான் கூட்டு பிரார்த்தனையை எடுத்து வந்தேன். அதனால் அப்பனே! திருமணம் ஆகாதவர்களுக்கும், மாற்று திறனாளிகளுக்கும், அனாதையானவர்களுக்கும் நிச்சயம் எடுத்து வருவேன். இதை யார் எதிர்த்தாலும், அவர்களுக்குத்தான் நிச்சயம் தண்டனை உண்டு என்பேன். இதனால் நல்லோர்களுக்கு உதவி செய்வதே இதன் நோக்கமாகும். இவர்கள் சாபமே, எதிர்ப்பவனை கொன்றுவிடும் என்பேன்.
84. How the kalikkam treatment, putting drops on eyes by some vaithiars is helpful, useful. Please kindly direct.
குருநாதர்: அப்பனே! எடுத்துக் கொள்வது மனிதன் இயல்பு, அதை சரிப்படுத்துவது, இறைவன் இயல்பு.
85. Om Agatheesaya Namaha. concept of Multiverse, parallel universe theories proposed by quantum physics implies same personality/entity exist in parallel universe at the same point in time. Is this concept same as multiple appearances of Siddhas and Gods at different places?
குருநாதர்:நிச்சயம் அப்பா! அனைத்து கிரகங்களிலும், மாந்தர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்களப்பா. இருந்தாலும் யாருக்கும் தெரிவதில்லை, நிச்சயம் உண்டு.
அடியவர்: அப்படியானால், இந்த கர்மாவை எல்லாம் எடுத்து அங்கு வைத்துவிட வேண்டியதுதானே! இப்பொழுது நான் முதலில் கேட்ட கேள்வி புரிந்ததா? கூட்டு பிரார்த்தனைக்கு வந்தால் ஒருவர் கர்மாவை மற்றவர் முதுகில் ஏற்றி விடுகிறீர்கள் என்பது உண்மை தானே.
குருநாதர்: அப்பா! கர்மா அழிவதே இல்லை. அப்பா! அதை நடத்துவதே நான். அனைத்து கர்மாவையும் யான் சுமக்க வேண்டும்.
அடியவர்: யார் முதுகு காலியாக இருக்கிறதோ அவன் முதுகில் ஏற்றி விட்டுவிடுகிறீர்கள்!
குருநாதர்: அப்பா! என் பக்தன் தாங்குவானப்பா, அனைத்தும்.
அடியவர்: உங்கள் பக்தர்கள், அடியேனிடம் வழி கேட்கிறார்கள், என்ன செய்வதென்று.
86. இவ்வுலகில் நல்லவர்கள் அமைதியாக வாழ யோசிக்கும் முன்னரே கெட்டவர்கள் நன்றாக வாழ்ந்து சென்று விடுகிறார்களே!
குருநாதர்: நிச்சயம் யார் சொன்னது. இவர்கள் பார்த்தார்களா என்ன?
அடியவர்: யார் சொன்னது என்று கூறினால், அதெல்லாம் நீங்கள் பேசக்கூடாது என்கிறீர்கள். அது உங்கள் பழக்கமாகிவிட்டது.
குருநாதர்: கெட்டவன் வாழ்கின்றான் என்று சொல்கிறானே! அதை கூட ஒரு கெட்டவன்தான் சொல்ல முடியும். நல்லவன், எப்படியோ இறைவன் வாழ்க்கை கொடுத்துவிட்டான் என்றுதான் சொல்வான். தெரிந்துகொள் மகனே, நீயும் கூட!
அடியவர்: நான் தெரிந்து கொள்கிறேன்! ஆனால், நீங்கள் சொல்கிற எல்லா நல்லதையும் செய்து கொண்டுதான் இருக்கின்றேன்!
குருநாதர்: கெட்டவனும் வாழட்டும், நல்லவனும் வாழட்டும். நல்லவனும், கெட்டவனும் இறைவன் செயலே. பாகுபாடின்றி அமைதியாக இரு. உண்மையான பக்தன் அனைத்தும் இறைவன் செயல்தான் என்று. குற்றம், குறைகள் எதுவும் இங்கில்லை.
அடியவர்: சொல்வதில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும்.
குருநாதர்: சொல்லிவிட்டேன். நல்லவனையும், கெட்டவனையும் உருவாக்கியது இறைவன். அப்படியென்றால், இறைவனைத்தான் கேள்வி கேட்க வேண்டும். அதனால்தான், கூட்டு பிரார்த்தனையில் பல உண்மைகளை உரைக்கப் போகின்றேன். அதை தெரிந்து கொண்டு செய்வார்கள், பல மாற்றங்கள் ஏற்படப்போவது உறுதி.
அடியவர்: தனிப்பட்ட முறையில், என்னென்ன தவறுகள் எங்கெங்கு நடக்கிறதோ, அங்கெல்லாம் திருத்த வேண்டியது குருநாதர் கடமை.
குருநாதர்: அனைத்தையும் ஒழுங்குபடுத்தி, அனைத்தையும் நல்லபடியாக உருவாக்குவேன், கவலைகள் வேண்டாம்.
87. பற்று அறுத்து இரு என்கிறீர்கள். கடமையை செய் என்கிறீர்கள். குடும்பத்துக்காக இவ்வுலக விஷயங்களை தேடி செல்லத்தான் வேண்டியுள்ளது. குடும்பத்தை வேண்டாம் என்று வைத்து, இறை வழியை தேர்ந்தெடுத்தால், மறுபடியும் ஜென்மத்தை கொடுத்து, கடமையை செய்து விட்டு வா என்று தானே இறை சொல்லும்.
குருநாதர்: உங்கள் ஆசைக்காக ஓடி ஓடி குடும்பத்தை அமைத்துக் கொண்டு நீங்களே செய்ததை, இறைவனை குறை சொன்னால் என்ன பயன்?
அடியவர்: இல்லையே! குடும்பத்தையும், குழந்தையையும் விதியில் எழுதிவிட்டது இறை தானே!
குருநாதர்: இறையே எழுதிவிட்டாலும், திருமணமே வேண்டாம் வேண்டாம் என்று யோசிக்க வேண்டும். சிறுவயதிலேயே பக்குவங்கள் கொடுத்து விட்டால் எல்லாம் தெரிந்து கொள்வான். ஆசைகள் அலையாய் மனதுள் ஓடி, ஓடுவான் பெண்ணை தேடி. அவஸ்த்தை படத்தான் வேண்டும். புரிந்துகொள்.
அடியவர்: அப்போ! குடும்பத்தை அமைத்துக் கொள்வதும் தவறு என்கிறீர்கள்!
குருநாதர்: நிச்சயம் தவறு என்று சொல்லவில்லை.
அடியவர்: அதேதான். இதைத்தான் பகவத் கீதையில் கிருஷ்ணனும் சொன்னார். எல்லாத்தையும் சொல்லிட்டு, நானா சொன்னேன், நானா செய்தேன் என்பார். அதைத்தான் நீங்களும் கூறுகிறீர்கள்.
குருநாதர்: அப்பா! இப்படித்தான் சொல்வேன். பெண்ணை தேடி ஓடுவது! தன் ஆசைக்காகவே அப்பனே. இறைவன் அனைத்தையும் கொடுக்கத்தான் செய்கின்றான் அப்பா! அதனுடன் பக்குவத்தை உணர்த்துகிறான், அப்பனே!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)