​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 5 February 2026

சித்தன் அருள் - 2098 - அன்புடன் அகத்தியர் - திருக்கேதீஸ்வர சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு 4


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 29.1.2026 அன்று திருக்கேதீஸ்வரத்தில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 4

நாள் : 29/01/2026 (வியாழக்கிழமை) 
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 
இடம் : திருகேதீஸ்வரம் , மன்னார் மாவட்டம் , இலங்கை
Google map :- https://maps.app.goo.gl/bi3iBs3vGWBQYyY99

அன்புடன் குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளால் - அகில இலங்கை அகத்திய மாமுனிவர் மன்றம்,  இலங்கை  இந்து சமய அலுவலகங்கள் கலாச்சார திணைக்களம் மற்றும் இலங்கை  திருக்கேதீஸ்வரர் ஆலய திருப்பணி சபை  இணைந்து நடத்திய கூட்டுப் பிரார்த்தனை என்று அடியவர்கள் அறியத்தருகின்றோம்.

========================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
========================================

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 29.1.2026 அன்று திருக்கேதீஸ்வரத்தில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 4)

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட பின் அனைத்து மாசு எவை என்று புரியு நிச்சயம் எது என்று ராகு கேதுவின் நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் புரிந்தும் கூட பின் நிச்சயம் பின் அருகிலே சேர்க்காது என்பேன். நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் சக்தியை. 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-  (அரச மரம் அல்லது போதி மரத்தின் கீழ் அமரும்போது தீய சக்திகளாலும், ராகு-கேது போன்ற கிரகங்களின் எதிர்மறைத் தாக்கங்களாலும் பாதிப்பு ஏற்படாது. பொதுவாகத் தீய சக்திகள் மனிதர்களைச் சூழ்ந்து மனதை அழுக்காக்க முயற்சிக்கும்; ஆனால், இந்த மரத்தின் ஆற்றலானது அந்த எதிர்மறைத் தூண்டல்களை அப்படியே தடுத்து நிறுத்திவிடும். ராகு-கேதுவின் பிடியில் இருப்பவர்கள் கூட அந்த மரத்தடியில் அமர்ந்து தியானிக்கும்போது, அவர்களுடைய எண்ணங்கள் தீய வழியில் செல்லாது (அழுக்காகாது). ஒருவன் தீயதை நினைக்க முயன்றாலும் அந்த இடத்தின் புனிதத்தன்மை அதனைத் தடுத்து, மனதைச் சுத்தமாக வைத்திருக்கும்.)

====================================================
# சித்தார்த்த கௌதம  புத்தர் இவ் உலகை வென்ற ரகசியங்கள்  
# கிரகங்களின் கதிர்வீச்சுகள் அண்டத மரம்  - அரச மரம்
====================================================

குருநாதர் :-   பின் கதிர்வீச்சுக்கள் நிச்சயம் அவ்வமரத்தை அண்டுவதே இல்லை. கிரகங்களின் பின் கதிர் வீச்சுக்களை. இதனால்தான் பின் வென்றான். பின் நிச்சயம் புத்தன் கூட 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-  (புத்தர் தன்னைத்தானே வென்று ஞானம் பெற்றதன் பின்னணியில் உள்ள அறிவியல் மற்றும் ஆன்மீக ரகசியத்தை இப்போது நாம் உணரலாம். கிரகங்களின் தாக்கம் இல்லாத ஒரு இடத்தில் தவம் செய்யும்போது மட்டுமே ஒருவரால் முழுமையான ஞானத்தை அடைய முடியும். அரச மரம் என்ற போதி மரம் அத்தகைய கிரக கதிர்வீச்சுகளின் பாதிப்பு இல்லாத இடமாக இருப்பதால், புத்தர் அங்கு அமர்ந்து தியானித்து ஞானம் பெற்றார். இதே தத்துவத்தின் அடிப்படையில் தான் பிள்ளையார் சிலைகளும் அரச மரத்தடியில் வைக்கப்படுகின்றன; ஏனெனில் அந்த இடம் கிரகங்களின் எதிர்மறைத் தாக்கங்களிலிருந்து விடுபட்ட, தூய ஆற்றல் நிறைந்த இடமாகும்.)

ஒரு அடியவர் :- ( அரச மரத்தடியில் பிள்ளையார் குறித்து ஒரு கேள்வி )

குருநாதர் :-   அப்பனே யோசித்துக் கொள் நீயே அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. முதலில் அப்பனே அதனால்தான் அப்பனே முதல் எவை என்று ஒரு யாருக்கு செய்கின்றார்கள் என்று பார் நீயே அப்பா. இவையெல்லாம் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சாதாரணமானவை. 

சுவடி ஓதும் மைந்தன் :- நீயே யோசிச்சுக்கோப்பா. ஏன் பிள்ளையார் அங்க இருக்கிறாரு? ஏன் உடனே வரத்தை கொடுத்துறாரு? ஏன் அவர் சுத்துனா? ஏன் வரத்தை கொடுத்துருவாரு? எதனால் அது வந்து அவ்வளவு பவர்?….. 

===========================================
# மனிதனுக்கு சக்திகள் வேண்டும் என்றால் முதலில் அழுக்குகளை நீக்க வேண்டும் 
===========================================

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட அப்பனே. அதாவது உங்களுக்கு சக்தி வேண்டுமென்றால் முதலில் அழுக்குகளை அப்பனே பின் எதை என்று புரிய அப்பனே, பின் நிச்சயம் நீக்க வேண்டுமானால் அப்பனே, பின் தெரிந்து கொள்ளுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  (முதலில் ஒரு மனுஷனுக்குத் தேவையானது சக்திதான். ஆனா, அந்தச் சக்தியை அடையணும்னா, முதல்ல நம்மள நாம வெல்லணும். நம்மள நாம வெல்லணும்னா என்ன பண்ணணும்? மனசுல இருக்கிற அழுக்கை எல்லாம் நீக்கணும். அந்த மன அழுக்கை நீக்குறதுக்கு அரச மரம் ஒரு பெரிய கருவியா இருக்கு. புத்தர் தன்னைத்தானே வென்று, இந்த உலகத்தையே ஜெயிச்சார்னா, அதுக்கு இந்த அரச மரத்தடியில் அவர் உட்கார்ந்ததுதான் மிக முக்கியமான காரணம். அரச மரத்தோட ஆற்றல் மனசுல இருக்கிற அழுக்கை நீக்கி, உங்களை நீங்களே ஜெயிக்கிறதுக்கு கண்டிப்பா வழிவகுக்கும்.)

============================================
# சுரா கல் சக்தி , எப்பொழுதும் அரச மரத்தில்  பதிந்து கொண்டே இருக்கும். 
============================================

குருநாதர் :-  அவை மட்டுமில்லாமல், நிச்சயம் தன்னில் கூட சுரா கல்லானது சக்தியானது, நிச்சயம் அம்மரத்தில் பதிந்து கொண்டே இருக்கும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதுமட்டுமில்ல, அந்த சுராகலனது வந்து அதனுடைய வேர்கள் என்ன பண்ணும்? இழுத்துக் கொண்டே இருக்கும். இழுத்துக் கொண்டே இருக்கும். 

=====================================================
# சுரா கல்லிற்கும் , வில்வ மரத்திற்கும் பல சம்பந்தங்கள் உண்டு.
# வில்வ மரம் பின் இலைகளை தொட்டவன் கெட்டதில்லை.
=====================================================

குருநாதர் :-   நிச்சயம் தன்னில் கூட ஏன்? எதற்காக? எவை என்று கூற, நிச்சயம் தன்னில் கூட. அவை மட்டுமில்லாமல், நிச்சயம் தன்னில் கூட ஏன் இதற்கும் பின் அதாவது வில்வ மரத்திற்கும் பல சம்பந்தங்கள் உண்டு. நிச்சயம் தன்னில் கூட வில்வ மரம் கூட நிச்சயம் அச்  சுராக்கல்லின் தன்மையை ஈர்த்துக் கொண்டே இருக்கின்றது. இதனால் வில்வ மரம் பின் இலைகளை தொட்டவன் கெட்டதில்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :- (அரச மரத்தைப் போலவே வில்வ மரமும் தெய்வத் தன்மையுள்ள 'சுராக்களின்' சக்தியைத் தன்பால் ஈர்க்கும் அற்புதம் கொண்டது. அதனால்தான் வில்வ இலையைத் தொட்டு வணங்குபவர்களுக்கு எந்தக் காலத்திலும் கெடுதல் நேராது என்று உறுதியாகச் சொல்கிறார். வில்வத்தின் மகிமை அப்படிப்பட்டது; அதைத் தொடுகிற ஒருத்தன் கெட்டுப் போனதாகச் சரித்திரமே இல்லை. அந்தத் தெய்வீக சக்தியைத் தன்னுள் இழுத்து வைத்திருக்கும் வில்வ இலைகளைத் தொடுபவர்களுக்குப் பாதுகாப்பு கிடைப்பதோடு, அவர்கள் வாழ்வும் சிறப்பாக அமையும் என்பதுதான் இதனோட ரகசியம்.)

=======================================
# குருந்த மரம் - சக்திகள் இன்னும் அதிகம்
=======================================

அடியவர் :- குருந்த மரம்? 

குருநாதர் :-   எது என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, எவை என்று புரிய அப்பனே, இதன் தன்மையை இன்னும் அதிகம் என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க சொன்னீங்க பாருங்க. அதன் தன்மையை இதனோடு இது இன்னும் கூட கூட தான் இருக்குது. 

=======================================
# உலகம் அறியாத சிவராத்திரி ரகசியங்கள்.
# சிவராத்திரி -  சூராக்கல்லும்  , நெருப்பிழம்பும் நேர் கோட்டில் நிற்கும் ஒரே நாள்.
# அதீத சக்திகள் சூராக்கல்லின் மீது பட்டு உலகெங்கிலும் பரவும்  
=======================================

குருநாதர் :-   எது என்று அறிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, எவை என்று அறிய நிச்சயம், அப்பனே, நிச்சயம், அப்பனே. அதாவது அப்பனே, அவ் பின் யார் சொன்னேனே, நெருப்பு பிளம்பு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 

அப்பனே, அறிந்தும் புரிந்தும் கூட, அப்பனே, பின் அதாவது, நிச்சயம் தன்னில் கூட. அதாவது, சுற்றி அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் கீழிருந்து, அப்பனே, மேல் எதை என்று அறிய, பின் பூமி எதை என்று கூற  போகும் என்பேன் அப்பனே. 

அதற்கு அதனால், அப்பனே, அருகிலே இருக்கும் என்பேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. பின் அதாவது, ஒரு கோடி மைல். நிச்சயம் தன்னில் கூட, ஒரு உதாரணத்துக்காக சொல்கின்றேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 

இதனால், அப்பனே, சிறிது. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அதன் நேர்கோட்டில், பின் எதை என்று அறிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பூமி ஆனது நிற்கும் அப்பா.

இதனால், அப்பனே, உடனடியாக ஆற்றல் பூமிக்கு வரும். இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. இவ்வாறாக, பின் பூமிக்கு வருகின்ற பொழுது, அது பின் நேர் முறையாகவே. அப்பனே, பின் அதாவது, நிச்சயம் சுராக் கல்லில் எதை என்று அறிய அப்பனே, பின் படும் அப்பா.  

அச் சுராக் கல்லில் படிந்து  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. பின் அதாவது, பின் இவ்வமரம். அப்பனே, பின் அதாவது, சொன்னேனே. அப்பனே, பின் எவை என்று ஒரு இன்னும் வில்ல இலைகள் கூட அப்பனே, அதிக சக்திகள் சில மரங்கள் ஆகிவிடும் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட .

அன்றைய தினத்தில் அப்பனே, நிச்சயம் தன்னில்  ஈசனை, அப்பனே, பின் சேவிப்பவர்களுக்கு, நிச்சயம் தன்னில் கூட. உடல் புத்துணர்ச்சி பெறும். அப்பனே, பின் துன்பங்கள் நீங்கும் என்பதெல்லாம் அப்பனே, ஐதீகம் என்பேன் அப்பனே. 


==============================================
(குருநாதர் வாக்கின் சுருக்கம்)
1) சிவராத்திரி மற்றும் புவி நேர்கோட்டு ரகசியம்:-
சிவராத்திரி அன்று விண்வெளியில் நிகழும் ஒரு அதிசயத்தைப் பற்றி இங்கு அன்பு குருநாதர் உரைக்கின்றார்கள். அந்தப் பேரொளி அல்லது நெருப்புப் பிழம்பிற்கு மிக அருகாமையில் (உதாரணத்திற்கு ஒரு கோடி மைல் தொலைவில்) பூமியானது நேர்கோட்டில் வந்து நிற்கிறது. அந்தச் சமயத்தில், அந்த நெருப்புப் பிழம்பிலிருந்து வெளிப்படும் அதீத ஆற்றல் எந்தத் தடையும் இன்றி நேரடியாகப் பூமிக்கு வந்து சேர்கிறது.
2) சுராக் கற்களும் வில்வ மரத்தின் சக்தியும்:- 
நேரடியாக வரும் அந்த ஆற்றல், பூமியில் உள்ள சுராக் கற்களின் (தேவ அதிர்வு கொண்ட இடங்கள்) மீது பட்டுப் பிரதிபலிக்கிறது. இந்தத் தெய்வீக ஆற்றலை உள்வாங்கிக் கொள்ளும் வில்வ மரம் போன்ற குறிப்பிட்ட மரங்கள், அன்றைய தினத்தில் வழக்கத்தை விட அதிக சக்தியைப் பெற்று விடுகின்றன.
3) வழிபாட்டின் பலன்கள்:- 
இவ்வளவு பேராற்றல் நிறைந்த அந்த நன்னாளில், ஈசனை மனமுருகி வேண்டுபவர்களுக்கு உடலளவில் பெரும் புத்துணர்ச்சி கிடைப்பதோடு, அவர்களின் வாழ்வின் துன்பங்கள் அனைத்தும் நீங்கும் என்பது திண்ணம். இது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, இயற்கையோடு இணைந்த ஒரு மாபெரும் சக்தி பரிமாற்றம் என்பதே குருநாதர் உரைத்த வாக்கின் முக்கிய கருத்தாகும். 
=============================================================

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-  (சிவராத்திரி கொண்டாடுறதுக்கு பின்னாடி ஒரு பெரிய அறிவியல் ரகசியம் இருக்குங்க. அன்னைக்கு அந்தப் பேரொளி பிம்பமான இறைவனோட சக்தி பெரிய நெருப்புப் பிழம்பா இருக்குது. பூமி சுழன்று வரும்போது, ஒரு குறிப்பிட்ட கட்டத்துல, நம்ம பூமி ,  அந்த நெருப்புப் பிழம்புக்கு நேரா வந்து நிக்குது. அப்போ அந்த நெருப்புப் பிழம்பு ஒளியானது நேரா பூமியில பட்டு எதிரொலிக்கும். அப்படி வர்ற சக்தி முதல்ல , சுரா கல்லில் பட்டு , பின்னர்  வில்வ மரத்துல ( போயி மோதும். அந்த நேரத்துல நாம சிவராத்திரி விரதம் இருந்து, வில்வ இலைகளால சிவனுக்கு அர்ச்சனை செஞ்சோம்னா, அந்தத் தெய்வீக சக்தி நமக்குள்ள நேரடியா இறங்கி நம்மளோட சக்தியைப் பலமடங்கு அதிகமாக்கும். இதுக்காகத்தான் சிவராத்திரி அன்னைக்கு வில்வ அர்ச்சனைக்கு அவ்வளவு முக்கியத்துவம் தர்றோம்.)

குருநாதர் :-   அப்பனே நிச்சயம் அன்றைய தினத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் பன்மடங்கு. அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அவ் மரத்தின் புத்தனும்.

================================================
# சிவராத்திரியில் -   ஆடுகளுக்கும் சக்திகள் அதிகம்
================================================

குருநாதர் :-  அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவ் அப்பனே நேரத்தில் அப்பனே ஆடுகளுக்கும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எது என்று அறிய அப்பனே பின் நிச்சயம் ஆடுகளுக்கும் சக்திகள் அதிகம் என்பேன். அப்பனே அப்பொழுது நிச்சயம் அதற்குப் பின் அப்பனே பின் தீனிகள் கொடுத்தால் அப்பனே இன்னும் உயர்வுகள் தான் ஏற்படும் என்பது நிச்சயம். 

சுவடி ஓதும் மைந்தன் :- ( அந்த நேரத்துல மனுஷங்களுக்கு மட்டும் இல்லாம, ஆடு மாடுங்க போன்ற ஜீவராசிகளுக்கும் அதீத சக்தி கிடைக்குதுங்க. பிரபஞ்சத்தோட அந்தப் பேராற்றல் பூமிக்கு வர்ற அந்தச் சமயத்துல, நம்ம கூடவே இருக்குற இந்த விலங்குகளும் ரொம்பவே வலிமை அடைஞ்சிடுது. அதனாலதான் அந்த நேரத்துல நாம அந்த ஆடு மாடுகளைக் கும்பிட்டு மதிக்கணும்னு சொல்றாங்க. அப்படிச் செஞ்சோம்னா, அந்த ஜீவராசிகளோட சக்தியும் இன்னும் அதிகமாகும், அது மூலமா நமக்கும் நல்லது நடக்கும். இது அந்த நேரத்தோட இருக்குற ஒரு பெரிய விசேஷம்.)

===============================================
# இயேசுநாதர் , ஆட்டினை கையில் எடுக்க முக்கிய காரணம் 
===============================================

குருநாதர் :-  இதனால்தான் எடுத்தான் நிச்சயம் இயேசு எதை என்று ஆட்டினை.

சுவடி ஓதும் மைந்தன் :- ( இதனால்தான் ஜீசஸ் அந்த தெய்வீக சக்தியைப் புடிச்சுக்க ஆட்டைத் தன்னோடு வச்சுக்கிட்டார். அந்த ஆற்றல் மக்களுக்கும் போய்ச் சேரணும்னு ஆசைப்பட்டுதான், அவர் ஆட்டை அணைச்சுக்கிட்டு மக்களுக்கு ஒரு அடையாளமா அதைக் காட்டினார். அந்தப் பேராற்றலை எப்படிப் பயன்படுத்தணும்னு மக்களுக்குத் தெரியணும்கிறதுக்காகவே அவர் அப்படிச் செஞ்சார்.) 

===================================================
# நபிகள் பெருமான் மாடுகளை விரும்பிய ரகசியங்கள் 
===================================================

குருநாதர் :-   இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட பின் மாடுகளை பின் நபிகள் விரும்பினான். நிச்சயம் தன்னில் கூட. ஆனால் பின் நிச்சயம் அது தலைகீழாக மாறிவிட்டது இப்பொழுது. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( இதனால்தான் நபிகள் நாயகம் அவங்க , மாடுகள் மேல ரொம்ப விருப்பம் வச்சு நிறைய வளர்த்தாங்க, ஏன்னா அதுங்ககிட்ட இருக்கிற அந்த விசேஷ சக்தியை அவர் உணர்ந்திருந்தார். ஆனா, இன்னைக்கு இருக்குற காலத்துல அந்தப் பழைய ரகசியங்களும் முறைகளும் அப்படியே மாறிப்போச்சு. அந்தச் சக்தியைப் பயன்படுத்தத் தெரியாம மக்கள் இப்ப எல்லாத்தையும் வேற மாதிரி மாத்திட்டாங்க. )

======================================================
# இறைவனால் , ஏன் இயற்கை சீற்றங்கள் உண்டாகின்றது?
======================================================

குருநாதர் :-   நிச்சயம் தன்னில் கூட எப்பொழுதெல்லாம் நிச்சயம் தன்னில் மாறுகின்றதோ, அப்பொழுதெல்லாம் நிச்சயம் தன்னில் கூட இயற்கை சீற்றங்கள். நிச்சயம் தன்னில் ஏனென்றால் இவ் இயற்கை சீற்றங்கள் பின் வரவில்லை என்றால் இறைவனை நிச்சயம் தன்னில் கூட மனிதன் நம்பப் போவதில்லை. இதனால்தான் நிச்சயம் தன்னில் அடிக்கடி பின் யான் இருக்கின்றேனா? யான் இருக்கின்றேனா? காண்பித்துக் கொண்டே இருக்கின்றான் நிச்சயம் தன்னில் கூட. ஆனாலும் இறைவன் நிச்சயம் பின் உயிரிடத்தில், அனைத்து உயிரிடத்தில் மிகுந்த கருணை வைத்துள்ளான். 

சுவடி ஓதும் மைந்தன் :- ( இயற்கை சீற்றங்கள் ஏன் வருதுன்னா, மனுஷன் ரொம்பத் திமிருல இறைவனையே மறந்து "எல்லாம் நான்தான்"னு சொல்ல ஆரம்பிச்சிடுறான். அப்படி அவன் கடவுளை இல்லைன்னு சொல்லாம இருக்கவும், தப்பைத் திருத்திக்கவும் தான் இயற்கை வழியா சில அழிவுகள் நடக்குது. மனுஷன் தன் எல்லையைத் தெரிஞ்சுக்கணும்ங்கிறதுக்காகவே, இறைவன் இந்த மாதிரி மாற்றங்களை அப்பப்போ கொடுத்துக்கிட்டே இருக்காரு.)

=====================================
# வரவிருக்கும் நுண்ணுயிர் பேராபத்து 
=====================================

குருநாதர் :-  ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இன்னும் அப்பனே சற்று இறைவன் நிச்சயம் தன்னில் கூட. அப்பனே பின் அதாவது நிச்சயம் பின் அதாவது அதாவது சூடேற்றினால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அதாவது பின் அவ் தயாரித்து வைத்துள்ளானே. அதிலிருந்து அப்பனே பின் ஒரு கசிவு வெளியே வரும் அப்பா, நிச்சயம் தன்னில் கூட. அது பின் நுண்ணுயிராக மாறி பின் அனைத்திடத்திற்கும் சென்று. அப்பனே பின் அவை உடனே உடனடியாக மனிதன் இறந்து விடுவான் என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இன்னும் என்ன பண்றாங்க? 

அடியவர் :- அணுக்கசிவு. 

சுவடி ஓதும் மைந்தன் :- (உலக நாடுகள் யாருக்கும் தெரியாம மனுஷனே தயாரிச்சு மறைச்சு வச்சிருக்கிற அந்த அணு ஆயுதங்கள்ல கசிவு ஏற்பட்டுச்சுன்னா பெரிய ஆபத்து வந்துடும். வெயில் அதிகமாகும்போது அந்த அணுக்கசிவு, நுண்ணுயிரிகளா மாறி, பாக்டீரியா வைரஸ்னு காத்துல கலந்து மனுஷங்களையே கொன்னுடும். இப்படி மனுஷன் உருவாக்குன ஆபத்தே அவனுக்கு வினையா மாறிடும்னு ஐயா ரொம்ப எச்சரிக்கையா சொல்றாரு.)

===============================================
# உண்மைகளை சொல்லிச் சொல்லி மனிதனுக்கு அனைத்தும் யாங்கள் நிச்சயம் கொடுத்து விடுவோம். 
===============================================

குருநாதர் :-   எது என்று புரிய இன்னும் பின் உண்மைகளை சொல்லிச் சொல்லி மனிதனுக்கு அனைத்தும் யாங்கள் நிச்சயம் கொடுத்து விடுவோம். 

சுவடி ஓதும் மைந்தன் :- (உங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்க கொடுக்கத் தயார், ஆனா அதுக்கு முன்னாடி சில உண்மைகளை நீங்க தெரிஞ்சுக்கணும். எல்லாத்தையும் எடுத்த உடனே உங்ககிட்ட கொடுத்துட்டா, அதை வச்சு நீங்க என்ன பண்ணப் போறீங்கன்னு ஒரு கேள்வி வருது. அதனால, ஒரு தகுதி வந்த பிறகுதான் அந்த விஷயங்கள் உங்களுக்குக் கிடைக்கும்னு சொல்றாங்க.)

==========================================
# அச் சக்தியை யான் வரும் காலத்தில் என் பக்தர்களுக்கு சில பக்தர்களுக்கு யான் கொடுப்பேன். 
==========================================

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட பின் மனிதன் பின் தன்னைத்தானே வென்று மற்றவர்களையும் கூட பின் காப்பாற்றலாம். அசக்தியை யான் வரும் காலத்தில் என் பக்தர்களுக்கு, சில பக்தர்களுக்கு யான் கொடுப்பேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- (தன்னைத்தானே வென்று பக்குவப்பட்ட பக்தர்களுக்கு குருநாதர் ஒரு விசேஷ சக்தியை கொடுப்பாராம். "என் மேல உண்மையான பக்தி வச்சிருக்கிறவங்களுக்கு இந்த ஆற்றலைத் தருவேன்"னு குருநாதர் சொல்லி இருக்காருங்க ஐயா. அந்த சக்தியைப் பெறுறவங்க, அதைத் தங்களுக்கு மட்டும் வச்சுக்காம மத்தவங்களுக்கும் உதவி செஞ்சு, அவங்களைக் காப்பாத்தணும்ங்கிறதுதான்.)  

=========================
#  கீழே கேது - மேலே ராகு 
#  கீழே ராகு -  மேலே கேது
========================= 

குருநாதர் :- அறிந்தும் அப்பனே எது என்று அப்பனே நிச்சயம் தன்னில் கூட இப்பொழுது பின் ராகுவும், அப்பனை நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று ராகு பின் கீழே இருந்தால் அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது கேதுவும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது நிச்சயம் பின் இவ்வாறாக மாறி மாறி அப்பனே நேரடியாகவே. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( பூமிக்கு மேல ராகுவும், கீழ கேதுவும் ஒரு நேர்கோட்டுல அதாவது வடதுருவம் தென் துருவம் மாதிரி நேரடியா இணைஞ்சே மாறி மாறி இருக்குதுங்க ஐயா. இந்த ரெண்டு புள்ளிகளும் ஒன்னோடொன்னு கனெக்ட் ஆகி ஒரு பெரிய ஒளி பாதையை உருவாக்கி, அந்த ஆற்றலை நேரடியாக இறைவன் கிட்ட கொண்டு போய் சேர்க்குது. இதனோட சக்தி அவ்வளவு பெருசுங்கிறதுனாலதான், ராகு-கேதுவோட பிடியை மீறி யாராலயும் ஒண்ணுமே செய்ய முடியறது இல்லை. )

==========================================
# அடுத்து குரு தேவன் வீட்டிற்கு , தர்ம தேவன் , சனி தேவன் வருகை 
# தர்ம தேவன் கிரக பெயர்ச்சி - மார்ச் 2026 - கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு.
# மீன ராசி - குரு தேவனின் இல்லத்தில் , தர்ம தேவன் - சனி தேவன் வருகை.
============================================

குருநாதர் :-  இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இன்னும் அப்பனே கிரகங்களை பற்றி சொல்லுவேன். அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவ்வாறெல்லாம் கிரகங்கள் இயங்குகின்றது என்பேன். அப்பனே இதனால்  அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அப்பனே பின் அடுத்து அப்பனே பின் பின் சனிக்கோளானது. அப்பனே நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் கூட சரியாகவே. அப்பனே நிச்சயம் தன்னில் கூட எது என்று புரிய பின் குருவை தொடும் என்பேன் அப்பனே 

சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்து என்ன ஆகுது? சனி சனி கோளானது குருவை தொடும். 

குருநாதர் :-  அப்பனே குருவான நிச்சயம் தன்னில் கூட பின் எது என்று கூற பின் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருந்தால் மட்டுமே சனியின் தொல்லைகள் வளராது என்பேன். அப்பனே அப்படி மீறி இருந்தால் நிச்சயம் அழிவுகள் பலபல என்பேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  (சனி கோளும் இப்போ குரு கோள் (வியாழன் கோள்) நெருங்கி வந்துட்டு இருக்காருங்க. குருவுக்கு என்ன பிடிக்கும்னா, நாம செய்ற சுத்தமான பக்தியும் மத்தவங்களுக்குச் செய்ற நல்ல காரியங்களும் தான் ரொம்பப் பிடிக்கும். இப்படி நாம நல்ல வழியில இருந்தா மட்டும்தான் தர்ம தேவன் ஆன சனி தேவனோட பாதிப்பு நம்மகிட்ட இருக்காது; இல்லாட்டி மத்தவங்களுக்குக் கிடைக்கிற மாதிரி கஷ்டமான பலன்கள் தான் வந்து சேரும்.)

============================
#  சுத்தமாக இருக்க வேண்டும். 
============================

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட மீண்டும் சொல்கின்றேன். நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் பின் குருவானவன் பின் இருக்கும் இடத்திற்கு நிச்சயம் சனி சனியவன் வரப்போகின்றான். குருவினிடம் அதாவது சுத்தமாக இருக்க வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  (குரு பகவானுக்குரிய இடத்திற்கு சனி பகவான் வரப்போகிறார், அதாவது இந்தச் சனிப் பெயர்ச்சி ரொம்ப முக்கியமானதுங்க. இந்த நேரத்துல நாம ரொம்பவே கவனமாவும், நேர்மையாவும் (கரெக்டா) இருக்கணும். அப்படி இல்லாமத் தப்பு பண்ணோம்னா, சனி பகவான் விடமாட்டாரு; பெரிய அழிவுகளையும் கஷ்டங்களையும் தான் சந்திக்க வேண்டியிருக்கும்னு ஐயா எச்சரிக்கிறாரு.)

==================================
# தீயவன் மட்டும் வாழ்கின்றானே ? ஏன் ?
==================================

குருநாதர் :-  ஆனால் இப்பொழுது கேட்கிறீர்களே, தீயவன் வாழ்கின்றான், வாழ்கின்றான் என்று நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய, அப்பொழுது புரியும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த மூணு வருஷத்துல ( மார்ச் 2026 முதல் - 2028 வரை  )   புரியும். தெரியவரும். புரியுதுங்களா  ஐயா?

============================================
# தீயவைகளை மக்களுக்கு  சொல்லும் ஆன்மீகவாதிகளுக்கு ….
============================================

குருநாதர் :-  நிச்சயம் இப்பொழுது எதை என்று அறிய பின் அதாவது தீயவை எல்லாம் சொல்லி தீயவையெல்லாம் பின் சொல்கின்றானே. அவனை நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது ஆன்மீகத்தில் இருந்தே அவனை அழிக்கும். அவனுக்கு கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றது. இருக்கும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ( சனிப் பெயர்ச்சி வரும்போது முதல்ல அடி விழறது என்னவோ இந்த ஆன்மீகத்துல இருக்கிறவங்களுக்குத்தான். குருவோட இடத்துக்கு சனி வரும்போது, ஆன்மீகம்ங்கிற பேர்ல பொய் சொல்றவங்களுக்கும் ஏமாத்துறவங்களுக்கும் சனி பகவான் சரியான தண்டனை கொடுப்பாரு. கள்ளச்சாமியார்கள் எல்லாம் இந்த நேரத்துலதான் மொத்தமா மாட்டிக்கிட்டு அடிபடுவாங்கன்னு சொல்றாரு ஐயா.) 

குருநாதர் :-  நோய்களாலும் அவதிப்படுவான். முதலில் 

சுவடி ஓதும் மைந்தன் :-  முதல்ல சனி பகவான் என்ன பண்ணுவாரு? நோயை தான் கொடுப்பார். 

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய அறிய முதலில் இவரை திருத்தினாலே, நிச்சயம் மற்றவர்கள் திருந்தி விடுவார்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த பொய் சொல்றவங்க ஐயா, புரியுதுங்களா? ஐயா, இந்த பொய் சொல்றவங்க வந்து திருத்தினாலே, அதாவது  அடிக்கிற அடியில மற்றவங்க பயந்துருவாங்க. திருந்துருவாங்கன்றார். 

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட முதலில் பின் எங்கு பின் அதாவது எவை என்று கூட கையை வைக்க வேண்டுமோ அங்கு சனீஸ்வரன் கையை வைப்பான். 

சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்து யாருக்கு ஐயா? ஆன்மீகவாதிக்கு தாங்க. பயமா இருக்குது. அடுத்து ஏன்னா எங்க கை வைக்கிறாரு? ஆன்மீகவாதிகள் தான் கையை வைக்கிறார். ஏன்னா அவருடைய சுத்தமா இருக்கணும். உண்மையா இருக்கணும். குரு இடத்துல வராரு. அவர் வந்து அப்படி வந்து சுத்தமா இல்லைன்னா, என்ன பண்ணுவாரு?..

குருநாதர் :-  நிச்சயம் பின் மக்கள் அனைவருமே நிச்சயம் தன்னில் கூட ஒழுக்க சீலர்களாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நிச்சயம் தன்னில் கூட சனியவன். நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது நிச்சயம் பின் குருவிடம் கேட்டு நிச்சயம் இப்படி வளர்த்திருக்கின்றாயே என் பிள்ளைகளை? நிச்சயம் எதை என்று புரிய புரிய  அதாவது யானே  அழிக்கின்றேன் என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( குருவுக்கும், கோயிலுக்கும்னு சில கட்டுப்பாடுகள் இருக்கு. அங்க இருக்கிறவங்க ரொம்ப ஒழுக்கமாவும் நேர்மையாவும் இருக்கணும்னு குரு எதிர்பார்க்கிறாரு. ஆனா, ஒழுக்கம் இல்லாம உலகத்துல எதையெதையோ சேர்த்து வச்சுக்கிட்டு தப்பா நடக்குறவங்களைப் பார்த்தா, சனி பகவான் சும்மா விடமாட்டாரு. "என்னடா இப்படி வளர்த்து வச்சிருக்கீங்க"ன்னு சொல்லி, அத்தனையையும் அவரே அழிச்சுட்டு சரியான தண்டனையைக் கொடுப்பாருன்னு, ஐயா எச்சரிக்கிறாரு.)

குருநாதர் :- எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக எவை என்று புரிய, இதில்தன் நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிந்தும் கூட பின் இவ்வாறு தான் நிச்சயம் தன்னில் கூட மோட்சப் பதவியை கொடுப்பான். 

சுவடி ஓதும் மைந்தன் :- ( எல்லாரும் செஞ்ச தப்புக்கு ஏத்த மாதிரி இங்க தண்டனை கிடைச்சே தீரும், அந்தத் தண்டனையோட கடைசி கட்டம் தான் மரணம்ங்கிற மோட்சப் பதவி. ஒவ்வொருத்தருக்கும் அவங்க தப்புக்கு ஏத்த தண்டனையை வரிசையா கொடுத்துக்கிட்டே வந்து, கடைசியில எல்லாத்தையும் முடிச்சு வச்சிடுவாரு. தப்பிக்கவே முடியாது, தண்டனை கொடுத்து முடிக்குறதுல அவர் ரொம்ப தெளிவா இருக்காருன்னு ஐயா சொல்றாரு.)

குருநாதர் :- இதைத்தன் அப்பா, நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும். இதனால் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அவ்வாறாக. அப்பன், நிச்சயம் பின் நல்லவர்கள் இல்லை என்றால், அப்பன், நிச்சயம் மனிதன் மனிதனுக்குள்ளே அப்பனை சண்டைகளை பின் ஏற்படுத்துவான் என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :- சரியா இல்லைன்னா என்ன பண்ணுவாரு? மனுஷனுக்குள்ள சண்டையை அனுப்பிச்சு, மனுஷனுக்குள்ள சண்டையை வந்து ஏற்படுத்தி அனுப்பிச்சுவார். 

குருநாதர் :- அப்படியும் இல்லை என்றால், நிச்சயம் அதாவது கசிவு திறனை எடுத்து வருவான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்படியும் இல்லை என்றால் என்ன பண்ணுவாரு? அணு  கசிவு.

====================================
# தர்மதேவன், சனி தேவன்  இப்போது இருக்கும் மீன ராசிக்கு அடுத்த வீடு நெருப்பு தேவன் செவ்வாய் தேவன் வீடு - மேஷ ராசி. தர்ம தேவன் அங்கு கையை வைத்தால் வெடித்து சிதறும்…..
==================================== 

குருநாதர் :- ஏனென்றால், நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று புரிய அதாவது பின், நிச்சயம் பின் செவ்வாயின் அருகிலே இருக்கின்றான். நிச்சயம் பின் கையை வைப்பதற்கு, நிச்சயம் தன்னில் கூட பின் அதிக நேரம் ஆகாது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( அடுத்து செவ்வாயோட வீட்ல சனி பகவான் லைட்டா கை வச்சா கூட என்ன ஆகும்னு நினைக்கிறீங்க? செவ்வாய்ங்கிறது நெருப்பு கிரகம். அந்த நெருப்பு மேல சனி பகவான் லேசா தொட்டா கூட போதும், அந்த ஆற்றல் தாங்காம எல்லாம் வெடிச்சு சிதறி வெளிய வந்துடும். கதை முடிஞ்சதுன்னு தான் சொல்லணும்; அந்த அளவுக்கு இது ஒரு ஆபத்தான சேர்க்கை. இறைவன் எல்லாமே இப்படி ஒரு கணக்கோட தான் சுத்தி வர வச்சிருக்காரு. அந்த நெருப்புப் பிழம்புல சனி கை வச்சா, அது கசிஞ்சு பெரிய அழிவை உண்டாக்கிடும்னு ஐயா ரொம்பத் தெளிவா எச்சரிக்கிறாரு.)

===============================================
# இறைவன் அனுப்பிய குழந்தைகளையே , அடித்து நொறுக்கிய உலகம். 
===============================================

குருநாதர் :- இவை தன், நிச்சயம் தன்னில் கூட. இதனால் நல்லவைகள் ஆகவே, நிச்சயம் தன்னில் கூட பல ஞானியர்கள், நிச்சயம் தன்னில் கூட உலகத்திற்கு வந்தனர். ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட பின் தர்மத்தை போதித்தனர். நிச்சயம் இப்படி இருந்தால், கலியுகத்தில் வாழ்ந்து விடலாம் என்று. நிச்சயம் அப்படி இல்லை இங்கு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப, பல ஞானிகள் வந்து சொன்னாங்க. வந்து இந்த உலகத்தில் இப்படி இருந்தால் மட்டும்தான் வாழலாம். தர்மத்தை கடைபிடிச்சா மட்டும்தான் வாழலாம். இல்லையென்றால் வாழ முடியாது. 

குருநாதர் :- நல்லோர் பின் சொல்ல வந்தவர்கள் எல்லாம் பின் அடித்து நொறுக்கினர். இதுதான் உலகம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  யாரெல்லாம் நல்லது சொன்னவன் வந்தாங்களோ, அவங்க எல்லாம் என்ன பண்ணாங்க? அடிச்சு, அவமானப் படுத்திட்டாங்க. அடிச்சு, அவமானப்படுத்தி, இது பண்ணிட்டாங்க. 

குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட. ஆனால் இறைவன் விடுவானா என்ன? இறைவனே, நிச்சயம் பின் அனுப்பிய பின் குழந்தைகளுக்கே இவ்வளவு தண்டனை எதை என்று அறிய அறிய பின் ஒன்றும் சுகம் கூட அனுபவிக்காமல் 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஒரு சுகமும் அவங்க அனுபவிக்கல. சில விஷயங்கள் எல்லாம் அனுபவிக்கல. ஆனால் இவ்வளவு தண்டனைகள் அவங்களுக்கு எது இருக்குப்பா? 

===================================================
# சிவபுராணம் - திருத்தலங்களின் உள்ளே பாடினால் 1000 மடங்கு பலன் 
===================================================

குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாகவே இன்னும் இன்னும் ஞானங்கள், நிச்சயம் தன்னில் கூட இன்னும் சிறப்புகளை கூட பின், நிச்சயம் தன்னில் கூட இதனால், நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் பின் இத்திருத்தலத்தில், அதாவது ஒவ்வொரு திருத்தலத்தில், நிச்சயம் தன்னில் கூட பின் உள்ளே, நிச்சயம் தன்னில் கூட படிப்பதற்கு, நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய இன்னும் சக்திகள் அதிகம். 

குருநாதர் :- ஏனென்றால், நிச்சயம் தன்னில் கூட பல பின் , பல பல பின் , அதாவது பின் , அதாவது சித்தர்கள், யாங்கள் பல மூலிகைகள் இட்டு, நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட, நிச்சயம் தன்னில் கூட புதைத்து வைத்துள்ளோம் உள்ளே. 

குருநாதர் :- இதனால், நிச்சயம் தன்னில் கூட (சிவபுராணம் ) இப்பாடலை எதை என்று பாடினாலே, நிச்சயம் பல பின் , நிச்சயம் தன்னில் கூட பின் ஆயிரத்திற்கு சமமாகும். நிச்சயம் தன்னில் , நிச்சயம் தன்னில் கூட வெளியே சொல்வதை விட, நிச்சயம் உள்ளே சொல்வது. ஆனால் சில ஆலயங்களில், நிச்சயம் மனிதன் பிழைத்துக் கொள்வான் என்பதற்கு இணங்க  பின் பின் அனுமதிக்கே, அனுமதியே கிடையாது என்பது போய்விட்டது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ( திருத்தலங்கள்ல உட்கார்ந்து சிவபுராணத்தை ஒரே ஒரு முறை பாடினா கூட, அது ஆயிரம் மடங்கு பலனைத் தரும்னு ஐயா சொல்றாரு. ஏன்னா, அந்த இடங்கள்ல சித்தர்கள் மூலிகைகளை அடியில புதைச்சு வச்சிருக்காங்க; நாம அங்க பாடும்போது அந்த அதிர்வுகள் மூலிகைகளோட சேர்ந்து நமக்குத் தேவையான ஆரோக்கியத்தையும் சக்தியையும் கொடுக்கும். ஆனா, இந்த ரகசியம் தெரிஞ்ச சில பேரு, "அநியாயம் தான் இந்த உலகத்துல நடக்கணும்"னு முடிவு பண்ணி, மனுஷங்க உள்ள உட்கார்ந்து படிக்கக் கூடாதுன்னு தடுத்துட்டாங்க. "வெளிய போய் படிச்சுக்கோ"ன்னு சொல்லி நம்மள வெளியேத்துறதுனால, அந்த இடத்தோட முழு பலனும் மனுஷங்களுக்குக் கிடைக்காமலே போயிடுதுங்கிறதுதான் கசப்பான உண்மை.) 

குருநாதர் :- இதனாலதான் அப்படி நிச்சயம் தன்னில் கூட பின் ஒரு முறை சொன்னால், அப்ப நிச்சயம் தன்னில் கூட பின் ஆயிரம் முறை சொல்வது போல் திருத்தலத்தில் உள்ளே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  சிவபுராணத்தை திருத்தலத்தில் சொன்னா ஆயிரம் தடவை வந்துரும். 

==========================================
# திருஞானசம்பந்தர் பெருமான் கையாண்ட ரகசியங்கள் 
==========================================

குருநாதர் :- இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் எவை என்று புரிய பின் அதாவது திருஞானசம்பந்தன் நிச்சயம் தன்னில் கூட பல பல வழியிலும் கூட பின் நிச்சயம் தன்னில் கூட எதை என்று அறிய அறிய நிச்சயம் தன்னில் கூட பின் திருத்தலம் திருத்தலமாக  சென்று பாடலை பாடினான். 

==============================================
# சிதிலமடைந்து கிடைக்கும் ஆலயங்கள் , சக்திமிக்க ஆலயங்களில் ,  ஒரு முறை திருவாசகத்தை (முற்றோதல்) பாடினாலே போதும். ஆயிரம் முறை அத்திருத்தலம் உயிர் பெற்றுவிடும்.
=============================================== 


குருநாதர் :-  நிச்சயம் இவ்வாறாக ஒரு பாடலை பாடினாலே ஆயிரம் முறைக்கு சமம் என்று அவனுக்கு தெரியும். இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட பின் இன்னும் கூட பின் அழியும் தென் திருத்தலங்கள் இருக்கின்றது. பின் ஒரு முறை நிச்சயம் பின் அதாவது பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட பின் திருவாசகத்தை பாடினாலே போதும். ஆயிரம் முறை அத்திருத்தலம் உயிர் பெற்றுவிடும். 

சுவடி ஓதும் மைந்தன் :- (பாடல் பெற்ற ஸ்தலங்கள்ல திருவாசகம் போன்ற பாடல்களைப் பாடுறது ஒன்னும் சும்மா இல்லைங்க. ஒரு முறை அங்க பாடினாலே அது ஆயிரம் முறைக்குச் சமம்; அந்த அதிர்வுகள் மூலமா சக்தியை இழந்து கிடக்குற அந்தப் பழைய கோயில் மறுபடியும் உயிர் பெற்றுடும். இன்னைக்குத் தமிழ்நாட்டுலயும் இந்தியாவுலயும் எத்தனையோ புண்ணிய ஸ்தலங்கள் கவனிப்பாரில்லாம அழிஞ்சு போய்க் கிடக்குது. அந்த இடங்களுக்குப் போய் நாம மனமுருகிப் பாடினா, அந்தத் திருத்தலங்கள் மறுபடியும் உயிர் பெறும்; அது மூலமா அந்தப் பகுதி மக்களும் நல்லா இருப்பாங்க, எத்தனையோ பேரோட வாழ்க்கை செழிக்கும்னு ஐயா சொல்றாரு.)

குருநாதர் :-  ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட கலியுகத்தில் எப்படி எப்படியோ இதனால் நிச்சயம் மீண்டும் ஒருமுறை பின் சிவபுராணத்தை பாடுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :- அனைவருமே மீண்டும் வந்து சிவபுராணத்தை பாடனும்.

அடியவர்கள் :- ( சிவபுராணம் பாட ஆரம்பித்தனர் )

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 29.1.2026 அன்று திருக்கேதீஸ்வரதில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு தொடரும்….. )

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!