​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 22 July 2026

சித்தன் அருள் - 2253- அன்புடன் அகத்தியர் - 28/06/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 6




அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28/06/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த 11 வது சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 6

நாள், நேரம்  : 28/06/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 


இடம் : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.

முழு கூட்டு பிரார்த்தனை நிகழ்வின் நேரலை :-  
https://www.youtube.com/watch?v=q8Hs63mXjrc&t=1s 


===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================

இவ் பதிவின் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=24125 

குருநாதர் :- தாயே எதை என்று அறிய இன்னும் நிச்சயம் தன்னில் வேலோனை பற்றி பலமாக பாடு.  ஏனென்றால் வேல் எதற்காக என்றெல்லாம் சொல்லிவிட்டேன். மீண்டும் எப்படி பின் பலப்படுத்த வேண்டும் என்றெல்லாம்…இதனால் நிச்சயம் தன்னில் கூட அவன் ஆசிகளாலே இன்னும் சொல்ல போகின்றேன். இன்னும் பலமாக பாடு நிச்சயம் முருகனை நோக்கி.


அம்பிகை வேடம் அணிந்த சிறுமி :- ( குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் …என்ற பாடலை பாடினார்கள் ) 

நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=24151

( பாடல் பாடி முடித்த பின்னர் ) 

குருநாதர் :- தாயே கண்கள் பின் விழியட்டும் இன்னும் பாடலை பாடு 


சுவடி ஓதும் மைந்தன் :- இதே பாடல். இன்னொரு முறை பாடுங்க.


அம்பிகை வேடம் அணிந்த சிறுமி :- ( குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் …என்ற பாடலை பாடினார்கள் ) 

( பாடல் பாடி முடித்த பின்னர் ) 

===========================
# வேற்றாகி விண்ணாகி பாடலை பாடுக…
===========================
# ஆதி ஈசனாரின் கோபம் தணிக்கும் மகத்தான பாடல்.
===========================

குருநாதர் :-  அப்பனே அனைவரும் எழுந்து நின்று, அப்பனே அனைவருக்காகவும் பின் எதை என்று கூற என்று இறைவனிடத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே வேற்றாகி எனும்  பாடலை, அப்பனே பின் எவை என்று பின் பின்னே இருப்பவனை பாடசொல் அனைவரும்.


ஓதுவார் அடியவர் :- ஈசன் கோபப்பட்டு கைலாயத்தில் இருக்கும்போது அந்த பாடலை பாடிதான் மகிழ் வச்சாங்க அப்பேற்பட்ட ஒரு அற்புதமான பாடல். அதனால எல்லாருமே கைதட்டி பாடணும்


பாடகர் :- ( வேற்றாகி விண்ணாகி பாடலை பாட ஆரம்பித்தார்கள்…) 


https://youtu.be/q8Hs63mXjrc?t=24604 


( பாடல் பாடி முடித்த பின்னர் ) 

===========================
# வேற்றாகி விண்ணாகி பாடலை மீண்டும் பாடுக…
===========================
# ஆதி ஈசனாரின் கோபம் தணிக்கும் மகத்தான பாடல்.
===========================

குருநாதர் :-  அப்பனே மீண்டும் பாடு அனைவருக்கும் அப்பனே . பின் ஒரு தெம்பு வரட்டும் 


பாடகர் :- ( வேற்றாகி விண்ணாகி பாடலை மீண்டும் பாட ஆரம்பித்தார்கள்…) 


https://youtu.be/q8Hs63mXjrc?t=25247


( பாடல் பாடி முடித்த பின்னர் ) 

===========================
# ஓங்கி ஒலிக்கட்டும் கைலாய வாத்தியம்
===========================

குருநாதர் :- அப்பனே பின் ஆடட்டும் ஈசன் அப்பனே பின் கைலாய வாத்தியத்தை….


கைலாய வாத்திய ஒலி :- ( கருணை கடல் உத்தரவுக்கு பின்னர் ஓங்கி ஒலித்தது கைலாய வாத்தியம் அங்கு…. ) 


கைலாய வாத்திய ஒலி நேரலை :-  https://youtu.be/q8Hs63mXjrc?t=25984


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா எல்லாரும் ஒரு ஜோரா கை தட்டுங்க ஐயா. அவங்க கஷ்டப்பட்டு அடிக்கிறாங்க ஐயா. எல்லாரும் நல்லா கை தட்டுங்க அப்ரிஷியேட் பண்ணுங்க அவங்கள…


அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் )


(மீண்டும் வாக்குகள் ஆரம்பமானது ) 


https://youtu.be/q8Hs63mXjrc?t=27915


===========================
# தீய எண்ணங்களை எண்ணக்கூடாது.
===========================


குருநாதர் :-  . அப்பனே, இதனால்தான் அப்பனே, எதை என்று புரிய. அப்பனே, தீய எண்ணங்களை அப்பனே பின் எண்ணக்கூடாது என்பதற்கெல்லாம் அப்பனே, அப்படி எண்ணினாலும் அப்பனே, இப்பொழுது ருத்ராட்சை அணிந்து கொண்டிருக்கின்றீர்களே, அதைத்தான் அப்பனே பின் நிச்சயம் ஈற்றுக்கொள்ளும் என்பேன் அப்பனே. இதனால்தான் அதனையே அப்பனே பின் வணங்குகின்றோம் அப்பனே, ஈசனாக. 


சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றார் தெரியுங்களா? ஏன் ருத்ராட்சம் அணியுறோம்? தீய எண்ணங்களை நினைக்கக்கூடாது. அப்படி லைட்டா நினைச்சுட்டா கூட, அந்த ருத்ராட்சம் என்ன ஆயிடும்? ஈர்த்துக்கும் வந்து. அதனால்தான் என்னது அந்த ருத்ராட்சதையை சிவமா நினைக்கிறோம். 


===========================
# நல்லெண்ணங்கள் வளர்கின்ற பொழுது உங்கள் வாழ்க்கையும் நிச்சயம் பின் நல்லதாகவே ஆகும். 
===========================


குருநாதர் :-  எதை என்று புரிய இப்படி நடந்தால் நிச்சயம் தன்னில் கூட நல்லெண்ணங்களே வளரும். நிச்சயம் நல்லெண்ணங்கள் வளர்கின்ற பொழுது உங்கள் வாழ்க்கையும் நிச்சயம் பின் நல்லதாகவே ஆகும். ஏனென்றால் வருங்காலத்தில் நிச்சயம் தன்னில் கூட, கலியுகத்தின் கட்டாயம் நிச்சயம் தன்னில் கூட,  அழிவுகள் தான் என்றே நிச்சயம் ஏற்கனவே பிரம்மனால் எழுதப்பட்டது. நிச்சயம் தன்னில் கூட. ஆனாலும் நிச்சயம் சிறு சிறு விஷயங்களை நீங்கள் நல்லதாக செய்து அதைத்தான் நிச்சயம் மாற்ற வேண்டும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  கலியுகத்தில் என்ன நடக்கணும்? பிரம்மனால் எழுதப்பட்டது என்னது?


அடியவர் :- கெட்டதுதான் நடக்கணும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  அழிவுதான் என்று எழுதப்பட்டது. அப்ப இது மாதிரி ஆட்கள் எல்லாம், நல்லோர்கள் எல்லாம் வந்து, ஈசன் சிவனடியார்கள் இருக்காங்க. இன்னும் எத்தனையோ பேர் முருகன் அடியார்கள் எத்தனையோ இருக்காங்க வந்து. அதை வந்து அவங்க எல்லாம் கொண்டு சேர்த்து ?


அடியவர் :-  கொஞ்சம் கொஞ்சமா நல்ல எண்ணங்களை வளர்த்து மாத்தணும்ன்றாங்க. 


குருநாதர் :-  அப்பனே, ஏனென்றால் அடுத்தடுத்து அப்பனே, மனிதன் தீய விஷயங்களைத்தான் பரப்புவான் என்பேன் அப்பனே. இவ்வாறு தீய விஷயங்களை பின் பரப்புகின்ற பொழுது மனிதனின் அப்பனே இருதயத்தில் அப்பனே, தீய எண்ணங்கள் தான் உட்காரும் என்பேன் அப்பனே.


அடியவர் :-  வேற தீய விஷயங்களை வந்து… பரப்ப பரப்ப,  எல்லா பேரும் அதை கேட்டு கேட்டு மனிதனுடைய இருதயத்துல.


சுவடி ஓதும் மைந்தன் :-  வருங்காலத்தில தீய எண்ணங்களை மனிதன் பரப்புவானாம். அந்த தீய எண்ணங்கள் என்ன ஆகுமாம்?


அடியவர் :-  இருதயத்துல போய் பதியுமாம்.


சுவடி ஓதும் மைந்தன் :-  இருதயத்துல? 


அடியவர் :-  எல்லாம் பதியப்படும் எல்லா தீய எண்ணங்களும்.
https://youtu.be/q8Hs63mXjrc?t=28028


குருநாதர் :-   அப்பனே, கைலாயம் எது என்று கூறப்பின் வாத்தியம் கூட அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அவ் இருதயத்தில் இருக்கும் தீய சக்தியை ஒழிப்பதற்கும் பயன்படுகின்றது.


அடியவர் :-  சிவாய நம. இந்த கைலாய வாத்தியம்.


சுவடி ஓதும் மைந்தன் :-  கைலாய வாத்தியம் எதுக்கு?


அடியவர் :-  இருதயத்துல.


அடியவர் :-  இருக்கக்கூடிய அந்த தீய எண்ணங்களை தீய சக்திகளை அழிக்க பயன்படுத்தப்படுகிறது. 


===========================
# பிம்பத்திற்கு, அதாவது எதிராளிக்கு  சக்தி ஏற்றும் - திருக்கையிலாய வாத்தியம், நாதஸ்வரம். 
===========================


குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சில சில அப்பனே பின் சிலவற்றால் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட உங்களுக்கு அப்பனே பின் அதாவது பின் இறைவனிடத்தில் விருப்பம் இல்லாமல் கூட இருக்கலாம் என்பேன் அப்பனே. 


குருநாதர் :-  ஏனென்றால் இதற்கும் சில சில அப்பனே, யான் முன்னே எடுத்தேனே பின் நிச்சயம் தன்னில் கூட அவைத்தன் சரியான பிம்பம் அப்பனே பின் முன் எவை என்று கூறப்பனே பின் இதனால் அப்பனே, நல்லாற்றலை பின் அதாவது பொம்மைக்கு வழங்கிட இவ்வாற்றல் தேவைப்படுகின்றது என்பேன் அப்பனே.


அடியவர் :-  சிவாய நம. குருநாதர் எக்ஸ்பிளைன் பண்ணாங்கல்ல, ஒரு உருவம் முன்னாடி ஒரு பொம்மையை வச்சு அதுக்கு முன்னாடி ஒரு பிம்பத்தை வச்சு சொன்னாங்கல்ல, சூட்சும உருவம், ஸ்தூல உருவம். அப்போ அந்த ஸ்தூல உருவத்துக்கு ஆற்றலை பெருக்குறதற்கு உண்மையிலேயே இந்த ஆற்றல் வந்து ரொம்ப உதவுது. கைலாய வாத்தியம் ரொம்ப உதவுது.


===========================
# எச்சரிக்கை - வியாதிகள் 
===========================


குருநாதர் :- அப்பனே, இன்னும் எது என்று கூற அப்பனே பின் இன்னும் நோய்கள் அப்பனே பின் நிச்சயம் நரம்புகளால் பல பல அப்பனே, இன்னும் அப்பனே பல விஷ அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் நிச்சயம் பின் சிறு சிறு அப்பனே பின் வியாதிகள் அப்பனே, பல மனிதனுக்கு ஏற்படும் என்பேன் அப்பனே. 


===========================
# வைத்தியம் - திருக்கயிலாய வாத்தியம், நாதஸ்வரம். 
===========================
# அவசியம் கேட்க வேண்டும் - திருக்கயிலாய வாத்தியம், நாதஸ்வரம். 
===========================



குருநாதர் :- இதனால் அன்றெல்லாம் அப்பனே, வைத்தியம் எவை என்று கூறப்பட பின் அதாவது வைத்தியத்தை பின் நாதஸ்வரமாக அப்பனே இன்று அப்பனே, எதை என்று கூற அப்பனே இப்படியே கைலாயமாக அப்பனே, உடம்பில் அனைத்து அதிர்வுகளும் ஏற்படுகின்ற பொழுது சில நோய்கள் மாறும் அப்பா. அவ்வளவுதான் அப்பனே.


குருநாதர் :-  அனைத்தும் பின் நிச்சயம் தன்னில் கூட உணர்த்தித்தான் வைத்துள்ளார்கள் அப்பனே, விஞ்ஞானப் பூர்வமாக அப்பனே. ஆனால் மனிதன் அதை பயன்படுத்துவதே இல்லை.


அடியவர் :-  சிவாய நம. சிவாய நம.


===========================
# எச்சரிக்கை - வருங்காலத்தில்  கர்ப்ப பிரச்சனைகள் அதிகமாக வரும்.
===========================


குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் அதை மட்டும் பின் எவை என்று கூற அப்பனே பின் கர்ப்பம் எவை என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் வருங்காலத்தில் அப்பனே, நிச்சயம் கர்ப்ப பிரச்சனைகள் அதிகமாக வரும் அப்பா, நிச்சயம் தன்னில் கூட 


===========================
#  திருக்கயிலாய வாத்தியம் வாசித்தால்  - கர்ப்பத்தில் உள்ள நோய்களும் அழியும்.  
===========================
#  திருக்கயிலாய வாத்தியம் அதுவே சிறந்த  வைத்தியம் 
===========================

குருநாதர் :-   இதனால் அப்பனே பின் இச் “சிவ” அப்பனே பின் “தாண்டவம்” எதை என்று புரிய, அப்பனே, கைலாயத்தை அப்பனே பின் வாசித்தால் பின் நிச்சயம் கர்ப்பத்தில் உள்ள அப்பனே நோய்களும் அழியும் அப்பா. 


குருநாதர் :-   ஏனென்றால் அப்பனே, ஒரு ஒளியானது ( விண்வெளியில் இருந்து ) நேரடியாக கர்ப்பத்தை தான் வயிற்றைத்தான் தாக்க போகின்றது வருங்காலத்தில். இதனால் அப்பனே, முக்கியம் இக்கைலாய வைத்தியம்.


அடியவர்கள் :- ( வருங்கால சந்ததியை காக்கும் இவ் தடுப்பு அறிவுரையை கேட்டு , கை தட்டல்கள் )


அடியவர் :-  சிவாய நம. சிவாய நம. வருங்காலத்துல நிறைய வைரஸ் நிறைய நுண்கிருமிகள் தாக்க போகுதுப்பா. மனிதனுக்கு நிறைய நோய்கள் வரப்போகுது.


சுவடி ஓதும் மைந்தன் :-  வயித்துல தான் பிரச்சனைகள் ஏற்படும்ன்றாரு.


அடியவர் :-  பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சனைகள் நிறைய வரும். வயித்து பிரச்சனைகள் நிறைய வரும். அப்போ இந்த கைலாய வைத்தியம் அவங்களுக்கு வைத்தியம் தரும் அப்படின்றத சொல்றாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-   வைத்தியம் கைலாய வாத்தியம். அது வாத்தியம் கிடையாது.


அடியவர் :-  வைத்தியம்.


சுவடி ஓதும் மைந்தன் :-   வைத்தியம்.


சுவடி ஓதும் மைந்தன் :-   யாருக்கும் தெரியலைங்க ஐயா. இது தெரியாம நம்ம.


அடியவர் :-   இதை மனுஷன் பயன்படுத்த மாட்டேன்றாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-    இது ஒரு வைத்தியம் அய்யா. 


குருநாதர் :-  அப்பனே, நடனங்களில் ஈசனின் நடனங்களில் 108 எது என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய அப்பனே, எதை என்று புரிய அப்பனே. 


குருநாதர் :-   பின் இதனால் அப்பனே, நிச்சயம் இவ் கைலாய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் ஈசன் எவை என்று கூற அப்பனே பின் அப்படி பின் நிச்சயம் அசைத்து ஆடினால் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எவ்  நோயும் அப்பனே வராதப்பா. திரையும் அப்பனே, நன்கு செயல்பட ஆரம்பிக்கும். அப்பனே, நிச்சயம் பாவமும் விலகிப் போகும் அப்பா.

===========================
( இங்கு திரை என்பது குருநாதர் உரைத்த உங்கள் முன் உள்ள பிம்பம் என்ற எதிராளி என்ற சென்சார். அது நன்கு செயல்படும்.) 
===========================

அடியவர் :- சிவாய நம.


சுவடி ஓதும் மைந்தன் :-    அப்ப.


அடியவர் :-  ஈசனுடைய நடனங்கள் 108.


சுவடி ஓதும் மைந்தன் :-    ஈசனுடைய நடனங்கள்.


அடியவர் :-  காரணங்கள் இருக்கு அதுக்கு.


சுவடி ஓதும் மைந்தன் :-    108.


அடியவர் :-  அதை ஆடுனா.


சுவடி ஓதும் மைந்தன் :-    அதை ஆடினால் இந்த தட்டி கைலாய வாத்தியத்தை தட்டி.


அடியவர் :-  தட்டி.


சுவடி ஓதும் மைந்தன் :-    அதை ஆடினால்.


அடியவர் :-  எந்த நோயும் அண்டாது.


சுவடி ஓதும் மைந்தன் :-    நோய்களே வராது.


அடியவர் :-  ஓடிப்போயிரும்.


===========================
#  திருக்கயிலாய வாத்தியம்  - அனைத்து அதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்தும். நீங்கள் விரும்பியதை அடையலாம்.
===========================


குருநாதர் :-  அனைத்து அதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்தும். நீங்கள் விரும்பியதை அடையலாம். ஆனாலும் நிச்சயம் உங்கள் திரை பின் நிச்சயம் தன்னில் கூட வெளியிடுமா என்ன.?


சுவடி ஓதும் மைந்தன் :-    எல்லாரும் முன்னாடி? 


அடியவர் :-   ஒரு.


சுவடி ஓதும் மைந்தன் :-  திரை போட்ட.


அடியவர் :-   திரை இருக்கு.


சுவடி ஓதும் மைந்தன் :-  அதான் சென்சார் சென்சார்.


அடியவர் :-   சென்சார் விடுமா.


குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் இதை பயன்படுத்துவதற்கும் இவ் வைத்தியம் தேவைப்படுகின்றது. நன்றாக. 


https://youtu.be/q8Hs63mXjrc?t=28224


சுவடி ஓதும் மைந்தன் :-  ரிப்பேர். சென்சாரை ரிப்பேர் பண்றதுக்கு யார் தேவைப்படுது? 


அடியவர் :-    இந்த வைத்தியம்.


சுவடி ஓதும் மைந்தன் :- இந்த வைத்தியம்.


அடியவர் :-    கைலாய வைத்தியம் தேவைப்படுது.


===========================
# திருமணத்தில்  மேள தாளம் - மணமக்கள் இருவரின் எண்ணத்தை சீராக்க 
===========================


குருநாதர் :-  அப்பனே, அன்றைய காலத்தில் மேள தாளம் அப்பனே நிச்சயம் திருமணத்தில் வைத்தார்கள் என்பேன் அப்பனே. இதனால் அப்பனே, அதை சீராக்கவே என்பேன் அப்பனே. 


குருநாதர் :- மணமகன் என்னவோ நினைத்திருப்பான். மணமகள் என்னவோ நினைத்திருப்பாள். 


குருநாதர் :- ஆனாலும் அப்பனே, அதை மனதாக ஒழுங்காக இருவரும் ஒருவராகவே எண்ண வேண்டும் என்றே அப்பனே, மேலதாளத்தை உருவாக்கினார் என்பேன் அப்பனே. இதுதான் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
அடியவர்கள் :- ( உண்மையை உணர்ந்து …கை தட்டல்கள் ) 


அடியவர் :-   சிவாய நம. சிவாய நம. அந்த மிருதங்க நாதஸ்வரங்கள் எதுக்காக வச்சாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-  எதுக்கு வச்சாங்க.


அடியவர் :-  அப்படின்ற உண்மையை சொல்றாங்க. கணவன் அதாவது அந்த மணப்பெண்ணுக்கும் மணமகனுக்கும் வேறு வேற எண்ணங்கள் இருக்கலாம். பிரச்சனைகள் இருக்கலாம். அதை சீர் செய்யணும். அந்த மணமேடையில அதை சீர் செஞ்சு ரெண்டு பேரும் நிம்மதியா வாழ்றதுக்காக அந்த நாதஸ்வரமும் அந்த மிருதங்கமும் உருவாக்கப்பட்டது.


===========================
# திருமணம் - விஞ்ஞான பூர்வ விளக்கம். 
===========================


குருநாதர் :-  அப்பனே, எது என்று அப்பனே, இதனைப் பற்றியும் இப்பொழுது திருமணத்தைப் பற்றி யான் விளக்கப் போகின்றேன் அப்பனே. அப்பனே, விஞ்ஞான பூர்வமாகவே.


அடியவர் :- சிவாய நம.


சுவடி ஓதும் மைந்தன் :-  இப்ப திருமணத்தைப் பற்றி விளக்கப் போகிறார்.


அடியவர் :-  விஞ்ஞானபூர்வமாக.


சுவடி ஓதும் மைந்தன் :-  விஞ்ஞானபூர்வமாக.


அடியவர் :-  நம் மாபெரும் விஞ்ஞானி குருநாதர் அகத்திய பெருமான் திருமணத்தை விஞ்ஞானபூர்வமாக விளக்கப் போகிறார்.


சுவடி ஓதும் மைந்தன் :-  விஞ்ஞானம் எல்லாம் நீங்க வந்து கோடி ரூபாய் கொடுத்தாலும் வந்து ஏன்னா உண்மை தெரியல மக்களுக்கு. உண்மை தெரியாம இறைவனை வணங்கினா என்ன ஆகும்?


அடியவர் :-  ஒரு பிரயோஜனமும் இல்லை.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஒரு பிரயோஜனமும் இல்லைன்றாரு. தெரிஞ்சு வணங்கிக்கோங்க ஐயா. 
…………..
…………..
…………..


சுவடி ஓதும் மைந்தன் :-   ஏன் கஷ்டப்படுறீங்கன்னா நீங்கள் ஏதோ ஒரு விதத்தில் தவறு செஞ்சிருக்கிறது அந்த பிம்பம். 
…………..
…………..
…………..
அம்மை அடியவரின் ஒரு நல் விளக்கம் :- https://youtu.be/q8Hs63mXjrc?t=28420 


குருநாதர் :-  அப்பனே எதை என்று புரிய ஒருவன் தவறு செய்கின்றான் என்றால் அப்பனே எப்பொழுது பாதிக்கும் என்றெல்லாம் யான் உரைக்கின்றேன். அப்பனே நீங்கள் அனைவரும் சொல்லிக்கொண்டே இருப்பீர்கள். தவறு செய்தவன் நல்லவனாகவே அதாவது நன்றாகவே இருக்கின்றான் என்று. அதற்கு முதலில் அப்பனே இதுதான் அடிப்படை தத்துவமே. அதை கூட உங்களுக்கு தெரியாமல் அப்பனே இதனை விளக்கப் போகின்றேன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  முதல்ல எல்லாரும் நினைப்பாங்களாம். என்னடா அவனவெல்லாம் தவறு செஞ்சவங்க. நல்லா இருக்குறாங்கன்னு சொல்லிட்டு வந்து….. அதை வந்து நான் முதல்ல விளக்கப் போகின்றேன். 


இவ்விடத்தின் நேரலையை  அவசியம் காண்க - பின் வரும் வாக்குகளை புரிந்து கொள்ள:-  https://youtu.be/q8Hs63mXjrc?t=28592


===========================
# பூமியை கர்ப்பம் போல் பாவித்து ஆரம்ப முனையில் 1 என்று எழுதுக 
===========================


குருநாதர் :-  அப்பனே எது என்று அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட முதலில் அப்பனே பின் எதை என்று அப்பனே பின் உலகத்தில் அப்பனே முனையில் அப்பனே எது என்று குறித்து அப்பனே பின் மனிதனின் அப்பனே பின் ஒன்று என்று எண்ணிக்கொள் அப்பனே பின் கர்ப்ப எவை என்று அறிய. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா முதல்ல இங்க போட சொல்றாரு. ஒன்னு. இதுதான் கர்ப்பம். ஓகேங்களா ஐயா ஐயா ஐயா எக்ஸ்பிளைன் ஓகேங்களா இங்கதான் பிறக்கிறார். மனுஷன் இங்க பூமி இங்க ஐயா மேல வந்து இந்த ஆன்மா வந்து 


அடியவர் :- பூமியோட மேற்பகுதியில மனுஷன் பிறக்கிறான். 


குருநாதர் :-  அப்பனே அனைத்தும் அப்பனே நிச்சயம் இந்த ஒவ்வொருவருக்கும் அப்பனே பின் ஒவ்வொரு எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 


குருநாதர் :-  அங்கங்கு  அப்பனே செயல்பாடுகள் அப்பனே பின் எவை என்று புரிய. இச்செயல் பாட்டில் இருக்கின்ற பொழுது ஒருவன் பிறக்கின்றான் அப்பனே புவி தன்னில் கூட 




சுவடி ஓதும் மைந்தன் :-  ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு ஆற்றல் உண்டு.  இந்த புவியை வந்து சும்மா சுத்தல.  ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு ஒரு ஆற்றலோட சுத்தினே இருக்குது வந்து.  அப்ப (1 என்று எழுதிய இடத்தை சுட்டிக் காட்டி) இங்க ஒரு ஆற்றல்ல ஒருத்தர் பிறக்கிறார். ஓகேங்களா?
 
https://youtu.be/q8Hs63mXjrc?t=28644 


குருநாதர் :-   அப்பனே அடுத்தடுத்து இப்படியே அப்பனே எது என்று புரிய 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப இங்க ஒரு ஆற்றல் இருக்கும். இங்க ஒரு மனுஷன் பிறப்பான். இங்க ஒரு ஆற்றல் இருக்கும். இங்க ஒரு மனுஷன் பிறப்பான். இங்க ஒரு ஆற்றல் இருக்கும். இங்க ஒரு மனுஷன் பிறப்பான். இங்க ஒரு ஆற்றல் இருக்கும். இங்க ஒரு ஐயா புரியுதுங்களா ( அவ் வரைபடத்தில் வட்டத்தில் , அதாவது பூமியின் மேற்பரப்பில் ஒவ்வொரு இடங்களாக சுட்டிக்காட்டி விளக்கினார்கள் ) 


===========================
# ஏன் வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ?
===========================


குருநாதர் :-    அப்பனே மிகவும் கீழான அப்பனே பின் ஆற்றத்தில் அப்பனே பிறப்பவன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே முதலில் கஷ்டப்படுபவன் அப்பனே. பின் மேல் ஏறும் வரை காத்திருக்க வேண்டும். 


சுவடி ஓதும் மைந்தன் :- (பூமியின் கீழ் பகுதியை சுட்டி காட்டி) இங்க ஒருத்தர் பிறக்குறாருன்னா இந்த ஆற்றலோட சின்ன வயசுல இருந்து கஷ்டப்படணும். ஒரு ஆற்றல் வரையே வந்து இந்த ஐயா புரியுதுங்களா இங்க வந்து இந்த புவி தன்னில் வந்து இங்க பிறக்கும் பொழுது 


அடியவர் :- புவியோட கீழ் பகுதியில பிறக்கிறவங்க மேல ஏறுறதுக்கு கஷ்டப்படணும். வாழ்க்கையில கஷ்டப்பட்டு தான் மேல் பகுதிக்கு வர முடியும். அவர் என்றார் அவர். 


குருநாதர் :-   அப்பனே நிச்சயம் தன்னில் கூட எது என்று புரிய அப்பனே மீண்டும் அப்பனே எவை என்று சுற்றி வர அப்பனே பின் சில வருடங்கள் ஆகும். அப்பனே பின்பு உயரத்தில் எட்டி விடுவான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இப்ப ஒரு ஆற்றலை இங்க பிறக்குறாங்கன்னா இந்த பூமியானது வந்து இப்படியே சுத்தி இங்க ஏறணும் கஷ்டம் தான் பண்ணனும் இப்படியே சுத்தி டக்குனு இப்படியே சுத்தி இப்படியே சுத்தி இங்க திருப்பி அவன் எந்த இதுல எந்த போஸ்ட்ல இங்க பிறந்தானோ அது வந்து ஒரு 30 லயோ 40 லயோ வருகின்ற பொழுது வருடங்கள்ல வந்து இவன் எந்த வேணாலும் மேல போயிடுவாரு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா திடீர்னு சொல்றாங்க இல்ல… டேய் ஒண்ணுமே இல்லாதவன்…. நேத்து மேல போயிட்டேன்னு சொல்றீங்களா டேய் எப்படிடா இவன் வந்து ? இப்படி ஆயிட்டான்னு சொல்றீங்களா ஐயா. புரியுதுங்களா ஐயா? 


குருநாதர் :- அப்பனே இதே போலத்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஒருவன் ஒரு ஆற்றலோடு அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே தவறு செய்தால் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே இதையும் புவி தன்னிலே அப்பனே முனையிலே 


https://youtu.be/q8Hs63mXjrc?t=28751


சுவடி ஓதும் மைந்தன் :-  ( பூமியின் மேல் பாகத்தை சுட்டிக்காட்டி ) இங்க ஒருத்தன் தவறு செய்றான் ஓகேங்களா இங்க ஒரு வயசு ஓகேங்களா 


குருநாதர் :-  அப்பனே எது என்று புரிய அப்பனே இப்பனே வயதிகள் எது என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட இப்படியே இங்க ஒன்னு இங்க 10 வயசு… 20 வயசு… 30 வயசு… 40 வயசு… 50 வயசு… ஓகேங்களா ஐயா புரியுதுங்களா ஐயா ?


அடியவர் :- அதாவது ஒரு மனிதன் வந்து ஒரு இடத்துல பிறக்கிறாரு ஒரு தவறு செஞ்சதுனால அப்போ அந்த ஒவ்வொரு பகுதியும் வந்து வயசா பிரிக்கிறாங்க பூமி 10 வயது 20 வயது 30 வயதுன்னு 


===========================
# 15 வயது வரை பொறுத்துக் கொள்ளும் பிரபஞ்சம் 
===========================


குருநாதர் :- அப்பனே எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவை என்று புரிய இறைவனால், எது என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே நல்விதமாகவே அப்பனே இவ்வாறாக முதலிலிருந்தே அப்பனே, பின் ஒருவன் அப்பனே ஒரு 15 வயதில் தவறு செய்கின்றான் என்றால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் அப்பனே பிரபஞ்சம் பொறுத்துக் கொள்ளும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  15 வயசுல ஒருத்தர் தப்பு பண்றாரு வரைக்கும் அதுவரைக்கும் ஏற்காது.  15 லிருந்து தான் ஸ்டார்ட்டிங் உங்களுக்கு வந்து.. அப்போ ஒரு 15 வயசுல வந்து ஒருத்தர் தப்பு பண்றாருன்னா…. 


குருநாதர் :- அப்பனே 20…. 30….. அப்பனே எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அப்பனே ஆனாலும் ஒரு நாள் சலித்துவிடும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  தவறு செஞ்சுட்டே இருந்தா என்ன ஆயிடும்?  ஒரு நாள் டயர்ட் ஆயிடுவான்.  என்னடா இது? திருடுனே இருக்கோம். திருட்டு வேணாம்டா அப்படின்னு சொல்லிட்டு…. அப்ப 15 20 25 30 40 இல்ல இதுல 15 20 25 அவ்வளவுதான். அப்ப….. 


https://youtu.be/q8Hs63mXjrc?t=28835


===========================
#  பிரபஞ்சம் எப்போது தண்டனை கொடுக்கும்? 
===========================


குருநாதர் :- அப்பனே இவ்விசையானது அப்பனே நிச்சயம் தன்னில் கூட மீண்டும் எவை என்ற பின் மீண்டும் அங்கு வருவதற்கு அப்பனே அவ் ஆற்றல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஒரு பத்தோ 15 வருடமோ நிச்சயம் தன்னில் கூட. இதனால் அப்பனே தண்டனைகள் நிச்சயம் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இங்க தப்பு பண்றான்னா…. இந்த பூமி இங்க இருக்குமா? இங்க வந்துரும்.  இங்க இருக்கும்போது தப்பு பண்ணோம்னா ஐயா இது ஒரு ஆற்றலோட இயங்குதுங்க ஐயா இந்த ஆற்றல் 20 25 30 லோட தப்பு பண்ணோம்னா உங்களுக்கு என்ன பண்ணும் இப்படியே சுத்தி வரும் பொழுது திருப்பி இப்படியே சுத்திட்டு வரும் பொழுது சில ஆண்டுகள் ஆகும். வரும் திருப்பி சுத்தி அந்த இடத்துக்கு வரும் திருப்பி வந்துச்சுன்னா…. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப என்ன வயசு இருக்கோ அப்ப தாக்கிடும். ஐயா அப்ப என்ன வயசு இருக்கோ தாக்கிடும். அப்ப உங்களுக்கு என்ன வயசு இருக்குதோ அப்ப அது தாக்கும். ஐயா புரியுதுங்களா எல்லாருக்கும்? அப்ப தவறு செய்தவன் என்ன பண்ணுவான் வந்து? பூமி ஒரு ரவுண்டு வரணும். ஐயா புரியுதுங்களா? 


சுவடி ஓதும் மைந்தன் :-  உடனடியா தண்டனை கிடைக்காது. நீ இந்த பூமி வந்து இங்க சுட்டுற இடத்துல நீ இங்க தப்பு பண்ணியன்னா ஓகேங்களா இங்க தப்பு பண்ணீங்களேன்னா இதை வந்து இதை அப்படியே இங்க ஒரு ஆற்றலோட 


அடியவர் :-  ஐயா அதாவது அதுதான் கீழ போறவன் மேல வருவான் மேல போறவன் கீழ வருவான்னுவாங்க இல்ல கீழ வரும் 


சுவடி ஓதும் மைந்தன் :-  பூமி திருப்பி இங்க அந்த ஆற்றல் வரும் பொழுது 


அடியவர் :-   அதற்குரிய தண்டனை கிடைக்கும் 


===========================
#  பிரபஞ்சம் எப்போது உங்கள் குழந்தைகளுக்கு தண்டனை கொடுக்கும்? 
===========================


குருநாதர் :-  அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய நிச்சயம் பல தவறுகள் செய்திருந்தாலும் அப்பனே பிரித்து பிரித்து அப்பனே உங்களுக்கு தண்டனை கொடுத்துவிடும். 


சுவடி ஓதும் மைந்தன் :-   இங்க ஒருத்தர் தான் நீங்க தவறு செய்றது/ அதான் சொன்னார் இல்ல… a4… அப்புறம் = a*a*a*a* எல்லாருக்கும் பிரிச்சு தண்டனை கொடுக்குமாம். 


அடியவர் :-  கரெக்டா பிரிச்சு பிரபஞ்சம் வச்சு செய்யும் 


சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா புரியுதுங்களா? அப்ப யாருக்கு கொடுக்கும் நீங்க வேணா தெரியாம தப்பு பண்ணிடலாம் 20 30 வயசு அடுத்ததுல ஒரு ரவுண்டு வரும் பொழுது யாருக்கு யாருக்கு கொடுக்கும்? உங்களுக்கு அதிகமா ஆயிடுச்சுன்னா… உங்களுக்கு மட்டும் கொடுக்காது a4 a4 குழந்தை…. குழந்தை… எல்லாம் குழந்தைக்கும்  கொடுக்கும். 


===========================
#  தவறு செய்தவர்கள் பரம்பரை எப்போது அழியும் ?
===========================


குருநாதர் :-  அப்பனே மீண்டும் அதேபோல் இருந்தால் அப்பனே அடுத்த வட்டத்தில் எவை என்று நகரும் பொழுது அனைத்தும் அழிந்து விடுவார்கள்.


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப நீங்க இந்திலயும் திருப்பியும் வந்து ஒரு அடியில ஸ்டெப்எடுக்கலன்னா… இந்த ரவுண்டு அடுத்த முறை வரும் பொழுது…. எல்லாருமே யாருமே இருக்க மாட்டாங்க. க்ளோஸ் பண்ணிடும். அந்த பரம்பரையே க்ளோஸ். ஐயா புரியுதுங்களா? ஐயா யாருக்காவது புரியுதுங்களா? 


அடியவர் :- செய்யற பாவத்துக்கு ஏற்ப… அந்த குடும்பமோ… அந்த பரம்பரையோ அழிந்துவிடும்.


===========================
#  தவறு செய்பவர்கள், திருந்தி வாழ , எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் ?
===========================


குருநாதர் :-  ஆனாலும் மேலேறுகின்ற பொழுது… மேலேறும் பொழுது ஒரு வாய்ப்பை கொடுக்கும் அப்பா பிரபஞ்ச சக்தி 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப இங்க தப்பு பண்றோம்னா இப்படி வரும் பொழுது மேல் ஏறும் பொழுது இங்க வரும் பொழுது ஒரு சான்ஸ் கொடுக்கும் சான்ஸ் ? 


அடியவர் :-  ஒரு வாய்ப்பு கிடைக்கும் 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஒரு வாய்ப்பு கொடுக்கும் 


குருநாதர் :- அப்பனே நிச்சயம் நெருங்க.. நெருங்க.. ஆற்றல் நிச்சயம் தன்னில் கூட நல்லதை பயன்படுத்திக் கொள் என்று 


சுவடி ஓதும் மைந்தன் :-  இதை நெருங்க நெருங்க அப்படியே சுத்தி நெருங்க… நெருங்க… ஒரு நல்லது பண்றான்னு சொல்லிட்டு இங்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கும். 


குருநாதர் :-  அப்பனே நிச்சயம் தன்னில் கூட அதே பின் அப்பனே நெருங்குவதற்கும்… ஐந்து ஆண்டுகளோ… பத்து ஆண்டுகளோ…. பக்திகள் நீங்கள் இருக்க வேண்டும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இங்கிருந்து இங்க வரதுக்கே அஞ்சு ஆண்டுகளோ… பத்து ஆண்டுகளோ…  என்ன ஆகும்? 


அடியவர் :-   ஒரு வாய்ப்பு 


சுவடி ஓதும் மைந்தன் :-  பக்தியிலே இருக்கணும் 


குருநாதர் :-  அப்பனே ஆனால் மனிதனோ மனம் மாறிவிடுகின்றான். மீண்டும் சுற்றுகின்றது. அவ்வளவுதான் வாழ்க்கை. 


சுவடி ஓதும் மைந்தன் :-   இங்க வரும்பொழுது அதுக்குள்ள என்ன பண்ணிடுறான்? அப்பதான் நல்லது நடக்க போகுது. அதுக்குள்ள என்ன பண்ணிடுறான் மனுஷன்? 


அடியவர் :- மாறல…


சுவடி ஓதும் மைந்தன் :-   ஏய் என்னடா கடவுள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் போச்சுடா வாழ்க்கை. என்னடா வணங்குறது நம்ம எவ்வளவு என்ன பண்ணிடுறான்?  அடுத்த ஒரு ரவுண்டு என்ன ஆகுது முடிச்சு 


அடியவர் :- அவ்வளவுதான் முடிஞ்சு போச்சு 


குருநாதர் :-  அப்பனே பின் பிழைத்துக் கொள்ள முடியாதப்பா யாராலும் 


சுவடி ஓதும் மைந்தன் :- அவ்வளவுதான் முடிஞ்சது. அவ்வளவுதான் உங்களோட தாத்தா பாட்டி என்னங்க ஐயா பிள்ளை குழந்தைகள் என்ன ஆயிடும்?  a4 டோட்டல் காலி. a4 டோட்டல் காலி 


அடியவர் :-  வாஷ் அவுட் காலி 


சுவடி ஓதும் மைந்தன் :- வாஷ் அவுட் உலகம் எப்படி தெரியுமா இயங்குது இப்ப தெரியுதா இயங்குது உலகம் சாதாரணம் இல்ல ஐயா புரியுதுங்களா 


அடியவர் :-  உருண்டைன்றது… நாம செய்யறது நமக்கு திருப்பி எப்ப வேணாலும் வரும். அப்படிங்கிறதுதான் தாற்பரியம். 


===========================
#  இறை வழியில் தொடர்ந்து பாடல்கள் பாடுபவர்கள் வாழ்வில் உயரும் ரகசியம் 
===========================
# பொறுத்தார் ஏன் கட்டாயம் பூமி ஆள்வார்கள் ? என்ன ரகசியம் ?
===========================


குருநாதர் :- அப்பனே இதே போலத்தான் நல்லதை கூட அப்பனே எண்ணிக்கொள்ளலாம் 


சுவடி ஓதும் மைந்தன் :-  இதே போல தான் நல்லது இங்க நீங்க நல்லது செஞ்சீங்கன்னா ஓகேங்களா?  நல்லது செஞ்சீங்கன்னா இங்க அடிக்காது உங்கள வந்து…. இங்க நல்லது இங்க பண்ணீங்கன்னா, இது ரவுண்டு அடிக்கும் பொழுது, அப்படியே வரும் பொழுது, அஞ்சு வருடமோ பத்து வருடமோ, 15 உங்களுக்கு தெரியாது. அது அப்புறம் வந்து இங்க வந்து சக்சஸ் ஆயிடும் அவ்வளவுதான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப a*a*a* உங்களை வந்து அப்படியே என்ன பண்ணும் தூக்கிட்டு போகும் மேல உங்களுடைய வாரிசுகள். உங்களுடைய பிள்ளைகள் என்ன பண்ணுவாங்க? 


குருநாதர் :- அதனால்தான் ஞானியர்கள் அதுவரை பொறுத்திருக்க வேண்டும் என்பதற்காக பாடல்கள் எல்லாம் பாடுங்கள் என்று எழுதி வைத்தார்கள் அப்பா அப்பனே 


அடியவர் :-  அதெல்லாம் நடக்குற வரைக்கும் நீங்க பொறுத்திருக்க வேண்டும் என்று பாடல்கள் எல்லாம் படிங்கன்னு சொன்னாங்க நிறைய தேவாரம் திருவாசகம் பாடல்கள் எல்லாம் படிச்சு பாவத்தை 


குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் புவியானது பொறுத்துக் கொள்ளாது அப்பா. நீங்கள் தான் அப்பனை பொறுத்துக் கொள்ள வேண்டும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  புவியானது வந்து பொறுத்துக் கொள்ளாது சுத்தினே இருக்கும் நீங்கள் தான் பொறுத்துக் கொள்ள வேண்டும் 


குருநாதர் :- அப்பனே ஆனால் நீங்கள் பொறுத்துக் கொள்வதில்லை அப்பனே. பூமி உங்களை அழித்து விடுகின்றது. 


சுவடி ஓதும் மைந்தன் :- ஆனா அந்த பொறுமை உங்களுக்கு இல்ல. அதனால என்ன பண்ணுது பூமி? உங்களை அழிச்சிருது. போடான்னு சொல்லிட்டு…. சுத்துற சுத்துல நீங்க என்ன பண்றது? வாஷ் அவுட். காத்திருக்கிறது இல்ல. போடா நீ வந்து உனக்கு ஒரு சான்ஸ் கொடுத்தேன் 


அடியவர் :-  பயன்படுத்திக்கல…. 


சுவடி ஓதும் மைந்தன் :-  பயன்படுத்திக்கல 


===========================
# நீங்கள் என்ன செய்தாலும் , எப்படி அது திரும்பி உங்களுக்கு வருகின்றது ?
===========================


குருநாதர் :- அப்பனே உள்ளே இத்தனை ஆற்றல்கள் இருக்கின்றன அப்பனே. அதனால் நீ என்ன செய்கின்றாயோ அப்பனே பின் ஆற்றல் பின் நிச்சயம் சமம் ஆற்றல். 


சுவடி ஓதும் மைந்தன் :-  உள்ள இத்தனை உடுக்கு சத்த ஆற்றல் இருக்குது. எல்லா ஆற்றலும் எந்த ஆற்றல் இருக்குது எனர்ஜி 


அடியவர் :-  அழகா சொல்றாங்க குருநாதர் அதாவது மேல இருந்து வர்ற ஆற்றலுக்கு சமமா கீழ ஆற்றல் இருக்கு. 


அடியவர் :-   அப்படின்றப்ப நீங்க என்ன செய்றீங்களோ அதான் உங்களுக்கு திருப்பி கொடுக்கும். பூமி அந்த பிரின்சிபல்ல தான் இயங்குது. 


அடியவர் :-  அதே பிரின்சிபல்ல தான் நம்ம கர்மாவும். 


அடியவர் :-   நல்லது செஞ்சா அதே ஆற்றல் நல்லது கிடைக்கும். 


அடியவர் :-   கெட்டது செஞ்சா அதே ஆற்றல் கெட்டது கிடைக்கும். 


குருநாதர் :-  அப்பனே எது என்று புரிய அப்பனே இதனால் நிச்சயம் தன்னில் கூட இவை யாருக்குமே தெரியவில்லை என்பேன்  அப்பனே. 


===========================
#  குழுவினருக்கு…..
===========================


குருநாதர் :-  ஏன் என்றால் அப்பனே பின் எதை என்று கூற பின் இதை உருவாக்குபவர்களுக்கே  தெரியவில்லை. பாவம் அப்படி இருக்கின்றது. 


அடியவர் :- சிவாய நம.


சுவடி ஓதும் மைந்தன் :-   இது யாருக்குமே தெரியாது. இங்க வந்து எல்லாரும் இருக்கிறாங்க பாருங்க… ( கூட்டுப்பிரார்த்தனை குழுவினரை) இவங்க எல்லாம் வந்து உட்கார்ந்து இருக்காங்க பாரு…. இது வந்து ஒருத்தர் ஒருத்தர் ஏற்று (வழிபாட்டை) நடத்துபவர்கள் அவனுக்கே தெரியாதுப்பா இது. 


குருநாதர் :-  அப்பனே பாவம் செய்கின்றான் என்பேன் அப்பனே. நிச்சயம் பாவத்திலிருந்து விலக்கத்தான் அப்பனே இப்படி. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அவனுக்கே தெரியாதாம். இங்க இந்த அம்மா நல்லது பண்றதா.. இங்க இன்னொரு அம்மா நல்லது பண்றதா… அவங்களுக்கே தெரியாது. முட்டாளா இருக்குறாங்க வந்து. 


சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா புரியுதுங்களா அம்மா உங்கள தான் சொல்றாரு 


அடியவர் :-  அம்மா வாங்க உங்கள தான் சொல்றாரு 


சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றாரு தெரியுமா?  இங்க ஓடி போறாங்க… இப்படி ஒதுங்கி போறாங்களே… அவங்களுக்கே இந்த விஷயத்தை தெரியாது. ஏன்னா புரிஞ்சுக்கொள்வதற்கு அது புண்ணியம் இல்லைன்றாரு. இதான் உண்மை. இதான் உண்மை 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப நீங்க அப்படி போற இப்படி போற யாருக்காவது இருக்குன்னா வந்து அது இல்லை தெளிவு இல்லை நீங்க தான் சொல்லணும்ன்றாரு ஆனா அது கூட வந்து கேக்குறதுக்கு கூட வந்து பொறுமை இல்லை. அதான் சொல்றாரு. 


இவ்விடத்தின் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=29225 


குருநாதர் :-  தாயே பின் யான் என்ன சொன்னேன் என்று நீ கூறு? 


சுவடி ஓதும் மைந்தன் :- நான் என்ன சொல்றேன்னு நீ கூறுன்றாரு 


கூட்டுப்பிரார்த்தனை குழு அம்மை அடியவர் :- நமசிவாய!!!!! ஈஸ்வரன் ஐயா என்ன சொன்னாரு குருநாதர்?  சொல்லுங்க கொஞ்சம்.  


அடியவர்கள் :- ( குருநாதர் உங்களை தான் கேட்டார்கள் )


கூட்டுப்பிரார்த்தனை குழு அம்மை அடியவர் :-  (நீங்க) சொல்லுங்க அதை (நான் ) கேட்டு ( எல்லோருக்கும்) சொல்றேன். (நீங்க) சொல்லுங்க 


அடியவர் :-  ( பின்வருமாறு எடுத்துரைத்தார் ) 


அடியவர் :- ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை உண்டு. அந்த பிரின்சிபல்ல தான் பூமி இயங்குது. மேல இருந்து ஒரு ஆற்றல் பூமிக்கு வருதா? அதேபோல அந்த ஆற்றலை வாங்கி கீழிருந்து இங்க இருக்கக்கூடிய ஸ்தலங்கள்ல இருந்து ஆற்றல் திருப்பி கொடுக்கப்பட்டு ஆற்றல் சமநிலைப்படுத்தப்படுகிறது. அப்ப பூமி வந்து ஒரே சுற்றுவோட்ட பாதையில சுற்றுது. 


அடியவர் :-  அதேபோல தான் நாம உங்களுடைய பிறவியில நீங்க எந்த வயசுல 15 வயசுக்கு மேல எந்த வயசுல.. நீங்க என்ன தவறு செய்தாலும் அல்லது நல்லது செய்தாலும்… அது வந்து இந்த பூமியோட சுழற்சி வேகத்துக்கு ஏற்ப …அது திருப்பி உங்களுக்கு நல்லதையோ கெட்டதையோ திருப்பி கொடுக்கும். ஆனாலும் இறைவன் ஒரு வாய்ப்பு தர்றார். இது மேல போறப்போ உங்களுக்கு ஒரு சான்ஸ் கிடைக்கும். 


அடியவர் :-  அப்போ நீங்க நிறைய நல்லது அதாவது தேவாரம் திருவாசகம் பாடல்கள் எல்லாம் படிச்சு நீங்க அறிஞ்சு உணர்ந்துக்கிட்டீங்கன்னா பிழைச்சுக்கலாம். இல்ல அப்படின்னா உங்க பரம்பரை உங்களுடைய குடும்பம் மனைவி குழந்தைகள் எல்லாரும் காலச்சக்கரத்துல அழிஞ்சு போயிருவாங்க. இதுதான் இந்த பூமியுடைய சுத்தும் வேகத்துல நம்ம கர்ம வினையும் சுத்தி சுத்தி நம்மள தாக்குது 


இவ்விடத்தின் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=29296


குருநாதர் :-  தாயே முதலில் எதை என்று கூற , நிச்சயம் தன்னில் கூட அறிந்தும்  கூட முதலில் சொல்லித்தா. 


குருநாதர் :-  எவை என்று கூற பின் இதைத் தான் நீ சொல்லித் தர வேண்டும்.  


குருநாதர் :-  ஏனென்றால் பின் நிச்சயம் உன்னிடத்தில் இருப்பவர்களுக்கே ஒன்றும் தெரியாமல் இருக்கின்றார்கள். நாய்கள் போல் இருக்கின்றார்கள். நாய்க்கு கூட எவை என்று கூற  தெரியும் சில விஷயங்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால உன் கூட இருக்கிறாங்க இல்ல.. இது மாதிரி குரூப் நீங்க எல்லாம் ஏற்படுதினீங்க இல்ல… அதான்.  முதல்ல இது வந்து அவங்களுக்கு பாடம் எடுமா.  ஒன்னும் புரியாம இருக்கிறாங்க வந்து. அவங்களுக்கு புரியாட்டி ஒன்னும் பண்ண முடியாது. நாய்களுக்கு கூட சில அறிவு இருக்கு. மனுஷனுக்கு அறிவில்லை….. 




===========================
# ஏன் இக் கலியுகத்தில் பைரவனை வணங்குகின்றோம்?
===========================

https://youtu.be/q8Hs63mXjrc?t=29326

குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட இதனால் ஏன் இக்கலியுகத்தில் பைரவனை வணங்குகின்றோம் என்றால் அப்பனே உலகம் பின் சுற்றுவது அப்பனே பைரவனுக்கு தெரியும் என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஏன் பைரவர் அதிகமா வணங்குறோம் 

மற்றொரு அடியவர் :- கால பைரவர் 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஏன்?  காலத்தை அறிந்தவர். 

சுவடி ஓதும் மைந்தன் :-  (குழு அம்மை அடியவரை பார்த்து ) நீங்க போங்க. எல்லாரும் சொல்லிக் கொடுங்க 

பாடகர் :- ஜானகி இது முதல்ல சொன்னது எதுக்குன்னா தவறு செஞ்சவன் நல்லா இருக்கானேன்றதுக்கு தான்,  அந்த கோட்பாடே சொல்றாரு.  அதை தான் முதல்ல சொல்லணும்.  தவறு செஞ்சவன் நல்லா இருக்கான் ( பின்னாளில் கஷ்டப்படுவார்கள். ) 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!