அகத்தியர் அருளால் 06/01/2026, மார்கழி மாதம், ஆயில்யம் நட்சத்திரம், குருபூசை நாள் அன்று பொதிகை மலையில் புலத்தியர் சித்தர் உரைத்த வாக்கு
தேதி : 06/01/2026 , செவ்வாய்க்கிழமை, மார்கழி மாதம்
இடம் : பொதிகை மலை
இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
=======================================
# அன்புடன் புலத்தியர் சித்தர் வாக்கு
=======================================
அகிலத்தை ஆளக்கூடிய அகிலாண்டேஸ்வரியே!
அகிலத்தை அழகாக தன் கையில் இட்டி ஆட்டி படைத்தருளும் ஈசனாரே!
ஈசனின் மனதில் அழகாக குடிகொள்ளும், அனைத்தும் இயக்கும் திறமை பெற்ற பின் குருவே, அகத்தியரே!
உனையே பின்பற்றி எடுத்துரைப்பேனே, உன் அதிசயங்களை புலத்தியேனே.
அருள் எதைக் கூர்ந்து செயல்படுகின்றது இவ்வுலகத்தில் என்று தெரியாமல் யாரும் அறிவதில்லையே.
அறிந்தும் இன்னும் ஏனைய எப்பிறப்புகள் மனிதன் பிறப்பெடுத்தாலும், இறை நாமத்தை எதற்காக உச்சரிக்கின்றோம் என்பவை எல்லாம் தெளிவு அடைய போவதில்லை. இதனாலே தொல்லைகள்.
அறிந்தும் இவன், இவன் தன் உண்மையை, எதை என்று அறியாமலும், எதை புரியாமல் இருந்தாலும், அவற்றுக்கெல்லாம் நிச்சயம் தன்னில் கூட சரியாகவே முட்டுக்கட்டைகள் இட்டு, அதைத்தன் நிறுத்தி வைத்தார்கள். பின் பல பல மனிதர்களே.
மனிதர்களே இதைத்தன் இவ் கலியுகத்தில், இவ் முட்டுக்கட்டைகளை எளிதில் உடைத்தெறிந்து, பின் அதிசயங்களை காணச் செய்து, மக்களுக்கு இதுதான் உண்மை என்று நிரூபிக்கும் வல்லமை படைத்தவரே! பின் அகத்தியரே! அறிந்தும் இதைத்தன்.
அவை மட்டும் இல்லாமல், பல அதிசயங்கள் இவ் மார்கழி திங்களிலே.
அறிந்தும், இதைத்தன் ஓடி ஓடி எங்கெங்கேயோ எதை என்று அறிய ஞானங்கள் எங்கே கிடைக்கின்றது என்பதெல்லாம் தேடித் தேடி அலைந்து, எங்கும் காணவில்லையே என்றெல்லாம் பொதிகை தன்னில், பின் வந்து, பின் பல பல ஞானிகள் தன் பின் அதிசயத்தை, பின் உன்னிடத்தில் இயக்கும் சக்தி உள்ளது என்பதை உணர வைத்து, அகத்தியனே! பின் அங்கங்கு செல் என்றெல்லாம் உத்தரவிட்டு, பல பின் மகான்கள் இப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது உடம்பில்லாமல், உயிரோடவே.
===================================
# அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவர் பறவையாக வந்து ஆசீர்வதித்தார் பன்மடங்கு - 06/01/2026 , செவ்வாய்க்கிழமை , ஆயில்யம் நட்சத்திரம். அவ் பறவையை இங்கு இணைத்துள்ள படத்தில் காண்க.
==================================
இதன் இதன் நித்தம் ஏன் எதற்கு இப்பொதிகை தன்னில் கூட சிறப்புக்கள்.
அதாவது அகத்தியன் இன்றளவில் அனைவரும் ஆசீர்வதித்தான் பன் மடங்கு அறிந்தும் கூட.
இதனால் நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது பின் அகத்தியனே! அறிந்தும் இதைத்தன், பின் நேராக வந்தாலும், ஆனாலும், பின் ஒரு உயிர், அதாவது பின் கடந்து, பின் பறவையாக வந்து, அனைவரையும் பார்த்திட்டு, பின் என்னென்ன குறைகள் எல்லாம் ஆராய்ந்து, நிச்சயம் பின் போயிற்று.
இதுதான் இன்றைய நாளில், பின் சந்தோஷமான, சந்தோஷமான இப்படித்தான் பல அதிசயங்கள் மனிதனுக்கு கண்கூடாகவே நடந்து கொண்டிருக்கின்றது.
ஆனாலும், அதைப்பற்றி, அதைப்பற்றி நிச்சயம் தன்னில் யோசிப்பதில்லையே மனிதன் ஏன் எதற்கு என்றெல்லாம் நிச்சயம்.
======================================
# பொதிகை , கயிலை - ரகசியங்கள்
மூலப்பொருள் சக்தி எங்கிருந்து போகின்றதோ,
அங்கே வந்து சேவிக்க அனைத்தும் நலமாகும்.
=======================================
ஆனாலும், இவைத்தன் பன்மடங்கு ஏன் எதற்கு, பின் இங்குதான், பின் அலை அலையாக, அதைத்தன் நிரூபிக்க, பின் இங்கிருந்தே, பின் எழும், இதைத்தன் உயிராகவே பன்மடங்கு அறிந்தும், இதன் இங்கே எதிரொலித்து, இவைத்தன், இதைத்தன் நிரூபிக்க, இன்னும் பல பல பின் யுகங்களாகவே.
யுகங்களாகவே, கைலாயத்திலும் சுற்று சுற்று பல வடிவாக, பூமியின் தன்னில் கூட மேல்நோக்கி அறிந்து, இதைத்தன் நிற்க பன்மடங்கு, பின் இவைத்தன், பின் அலைகளாகவே, இங்கிருந்து, பின் புறப்படும் தென்றல், பின் கைலாயத்திலிருந்து புறப்படும் தென்றல், இரண்டும், இரண்டும் மோதி, பின் அவைத்தன், பின் பிரிய, பின் பன்மடங்கு அனைத்து, பின் அதாவது புவி தன்னிற்கும் சென்றடைகின்றது.
இதைத்தன் நிச்சயம் தன்னில் கூட, அதாவது எங்கிருந்து மூலப்பொருள், பின் போகின்றதோ, அங்கே வந்து, பின் சேவிக்க, அனைத்தும் நலமாகும்.
இவை புரிந்து கொண்டால், நன்று.
======================================
# குருநாதர் , அன்பு அகத்திய மாமுனிவர் அருள் கூர்ந்து,
அனைவருக்குமே இன்னும் இயக்கங்கள் கொடுப்பார்.
=======================================
இதைத்தானே, பின் நிச்சயம் புதுமையான, பின் அகத்தியனே! அருள் கூர்ந்து, அனைவருக்குமே இன்னும் இயக்கங்கள் கொடுப்பான்.
அகத்தியனே! அறிந்தும், பின் பன்மடங்கு, பின் இயலாதவருக்கெல்லாம், நிச்சயம் தன்னில் கூட, அருள் கூர்ந்து, ஒரு வாய்ப்பை, அதாவது சந்தர்ப்பத்தை கொடுத்து, கொடுத்து, அனைத்தும் சீர் செய்து, சமநிலைப்படுத்தும் திறமை, பின் குருநாதருக்கே உண்டு.
======================================
# குருநாதர் அன்பு அகத்திய மாமுனிவர் பொதிகையில் இருப்பதால் தான் உலகம் சம நிலமாக, சம நிலையாக சுற்றுகின்றது. இவ் உலகை வாழ வைக்கும் பொதிகை வேந்தன் திருவடிகள் போற்றி ! போற்றி !! போற்றி !!!
=======================================
இதைத்தன், அதனால்தான், எங்கு ஏது எவை என்று புரிய,
ஏன் இங்கு குருநாதர் அழகாக அறிந்தும், இவைத்தன், அகத்தியன், பின் எது எதிலிருந்து புறப்பட்டான் என்பதை எல்லாம் நிச்சயம், பின் சமநிலமாக, பின் சமநிலையாக சுற்றுவதற்கு புவியானது, நிச்சயம் தன்னில் கூட, இங்கு இருந்தால்தான், அகத்தியன், நிச்சயம் சமமாக, பின் சுற்றும்.
அப்படி இல்லை என்றால், நிச்சயம் தன்னில் கூட, இப்படி, அதாவது, நிச்சயம் தலை சாய்ந்தும், நிச்சயம் தன்னில் குப்புறமாகவும், நிச்சயம், பின் தலை மேவி (தலை குனிந்து) , பின் அப்படி, இப்படியாக சுற்றிக் கொண்ட பொழுது, மனிதன், நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது ஒழுங்காக நிற்க கூட முடியாது.
======================================
# குருநாதர் அன்பு அகத்திய மாமுனிவர், பொதிகையிலிருந்து கொண்டு , இவ் புவியை பல யுகங்களாக காத்து கொண்டு உள்ளார்கள்.
=======================================
இதனால் எதை என்று புரிய, இதனால்தான், பின் அகத்தியன், இங்கு நிச்சயம், பின் அதாவது ஏன் எதற்கு என்றெல்லாம், எத்தனையோ யுகங்களாகவே, யுகங்களாகவே, நிச்சயம் தன்னில் கூட, இங்கே இல்லம் அமைத்து, பின் வசித்துக் கொண்டிருக்கின்றான்.
அறிந்தும், ஆனாலும், இதுவும் கூட, அறிந்தும், எதை என்று கூட, இன்னும் கூட, சில சித்தர்கள் இங்கு, பின் வருவார்கள், அறிந்தும், எதைத்தான் அறிய.
======================================
# அன்பு குருநாதர் அருளும் பொதிகையிலே
புவியை இயக்கும் ரகசியம் உள்ளது.
=======================================
ஆனாலும், எங்கு எதற்கு, பின் சமநிலை படைத்த இப்புவியானது, சமநிலையாக ஏன் இயங்கிக் கொண்டிருக்கின்றது? எதற்கு புவி? அதாவது ஈர்ப்பு விசை எப்படி, பின் எதனால் என்பதை எல்லாம், நிச்சயம் இறைவனை தேடி, தேடி, பல மகான்கள் சென்று, சென்று அலைந்து, கடைசியில் பார்த்தால், இங்குதான் ரகசியம் உள்ளது என்றெல்லாம் அறிந்து, அகத்தியனிடம் வந்தார்கள்.
அறிந்தும், புரிந்தும், ஆனாலும், நிச்சயம், பின் அப்பொழுது இயக்குபவதே, அகத்தியன் தான் என்று தெரிந்து கொண்டு, பின் எதை என்று புரிய, பின் வரங்கள் பல பெற்று சென்று,
ஆனாலும், இதேபோல், பின் அதாவது பல ஞானங்கள் யாங்கள் படைத்தோம், அதேபோல், பின் அதாவது அகத்தியரே! அறிந்தும், இவைத்தன் ஒவ்வொருவருக்கும், நிச்சயம், பின் அங்கங்கு, பின் இருந்தால், நலன் என்று கருதி, பின் நீங்கள் அதை எங்களுக்கு கொடுங்கள் என்றெல்லாம்.
அதேபோலத்தான், பின் அழகாக, பின் குருவும், இதை, பின் இதை அறிந்தும், நீ அங்கே செல், நீ இங்கே செல், நீ அங்கிருந்தால் நல்லது என்பதை எல்லாம் தெளிவுபடுத்தி.
ஒரு சமயம் அறிந்தும், அனைவருமே நிச்சயம் இங்கு தேடி வந்துவிட்டார்கள். இங்கு சக்தி, அதாவது இங்கு அகத்தியன் இருக்கின்றான், அதனால்தான் என்றெல்லாம்.
ஆனாலும், எதை என்று புரியாமலும், இன்னும் அதாவது பூமியானது பலமாக அதிர்வடைந்தது.
ஆனாலும், பின் அனைவரும் செல்லுங்கள், உடனடியாக அங்கங்கு என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட செலுத்தி, இன்னும் கூட பல ஞானிகள், பின் அதாவது நான்கு புறங்களும் இருக்கின்றார்கள் எதை என்று புரிய. இமை (இமயம்) தன்னில் கூட, பின் புரிந்து கொண்டால் நன்று.
==============================
# காளி அன்னை ஆலய ரகசியங்கள் - பூமி சமநிலையோடு சுற்ற
=============================
அதாவது, பின் எங்கு எவை என்று அறிய, பின் அதாவது, பின் காளியிடம், அதாவது, நிச்சயம் தன்னில் கூட, பின் இப்பொழுதும் கூட, சிறப்பாக காளிகாதேவி, அங்கு.
இதைத்தன், பின் நான்கு, இவைத்தன், பின் உருவாக்க, அங்கங்கு, எங்கு என்பதை எல்லாம், இன்னும், இன்னும், இதனால்தான் சமநிலையோடு சுற்றுகின்றது.
நிச்சயம், அகத்தியன் இங்கிருந்து கிளம்பிவிட்டால், நிச்சயம் புவியானது எங்கெங்கோ, தடம் மாறி சுற்றி, பின் நீங்கள் ஓரிடத்தில் நிற்க முடிய, அதாவது, நிற்க முடியாமல் போய்விடும்.
இதைத்தன் குருநாதனே! அழகாக, நிச்சயம், இயற்கை, பின் இறைவன், ஆனாலும், செயற்கையாக, இதைத்தன் குருநாதனே! கண்டுபிடிப்பு பல பல.
இங்கு இருந்தால், உலகம் சமநிலையாக சுற்றும் என்பது, பின் குருநாதனுக்கு தெரியும்.
அறிந்தும் கூட, இன்னும் என்னென்ன கண்டுபிடிப்புகள், எதை என்று புரிந்தும் கூட.
=======================================
# என் குருநாதன் புகழ்,
நிச்சயம் குருநாதன் வேண்டாம் என்றாலும், யான் சொல்வேன்.
=======================================
ஏனென்றால், பின் அவரால், நிச்சயம், இதையெல்லாம் செப்ப முடியாது.
பின் என் குருநாதனின் புகழ், நிச்சயம், பின் குருநாதன் வேண்டாம் என்றாலும், யான் சொல்வேன்.
ஏனென்றால், மக்களுக்கு இன்னும் கூட, பின் யுகங்கள், யுகங்களாக போராடிக் கொண்டே இருக்கின்றார், அகத்தியனே! அருள் கூர்ந்து.
இதைத்தான், நிச்சயம், எப்பொழுதும், எங்கிருந்தாலும், புலத்தியனே, புலத்தியனே என்றெல்லாம், பின் அழைப்பதுண்டு, பின் குருநாதரே.
ஆனாலும், ஓடோடி வருவேன் அறிந்தும், என்ன வேண்டும் என்று.
ஆனால் மக்கள் எப்படி அலைந்து கொண்டு, திரிந்து கொண்டிருக்கின்றார்களே என்பவை எல்லாம், நிச்சயம், தன்னில், இவற்றிற்கெல்லாம், பின் விடிவெள்ளியாக, ஏதாவது, அறிந்தும், புரிந்தும், பின் கொடு என்றெல்லாம்.
================================
# இவ் புவி சுற்றுகிறது - ஆனால் எப்படி நாம் அனைவரும் நிலையாக நிற்கின்றோம்? என்று அவசியம் யோசியுங்கள்.
================================
ஆனாலும், இதைத்தான், நிச்சயம், அழகாகவே, இன்னும் கூட, அகத்தியனை பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை இங்கு.
அதாவது, உலகமெங்கும், நிச்சயம், தன்னில் கூட, அறிந்திருக்கவில்லை.
ஏனென்றால், பின் அதாவது, எப்படி புவியானது, பின் சரி, பின் சமமாக சுற்றுகின்ற பொழுது, எப்படி அனைவரும் ஆடாமல் இருக்கின்றார்கள் என்று யாராவது யோசித்தீர்களா என்ன?
நிச்சயம் யோசிப்பதில்லையே. இதனால்தான் மனிதன் இன்னும் மூடனாகவே இருந்து, இன்னும் பிறப்புகள் எல்லாம் பிறந்து, பிறந்து கஷ்டங்களோடு வாழ்ந்து வருகின்றான்.
இதனால் உண்மை நிலை என்ன என்றெல்லாம், சித்தர்கள் இன்னும் தெளிவடையச் செய்வார்கள்.
மனிதனின் நிலைமை மாறுகின்ற பொழுது, நிச்சயம் இயற்கையும் மாறும்.
இன்னும் கூட பல வழியில் கூட இன்னும் கூட செயற்கை எதை என்று புரிய, மக்கள் செயற்கையே பின் கடைபிடிக்கின்றனர்.
ஆனாலும், செயற்கையான முறையிலே அகத்தியன் வாக்குகள் எடுத்துரைத்து, நிச்சயம் தன்னில் கூட பக்குவப்படுத்தி, இப்படித்தான் வாழ்க்கை என்று நிரூபிக்கப் போகின்றான்.
================================
# குருநாதருக்கு ஈடு இணை யாரும் இவ்வுலகத்தில் இல்லை.
================================
“““““““ அனைத்தும் அறிந்தவன் அகத்தியனே! ””””””””
“““““““ இவ்வுலகத்தில் அறிந்தும் அகத்தியனுக்கு ஈடு இணை யாரும் இவ்வுலகத்தில் இல்லை. ””””””””
================================
# இனி வரும் வாக்குகள் புதுமையாக வரும்.
================================
இதைத்தன் எப்படி ஏது என்றெல்லாம், எங்கெல்லாம் பின் பலம் இழந்தால் நோய்கள் வரும் என்பதை எல்லாம் புதுப்புது அர்த்தங்களாக பரப்பி, பின் குருநாதன் அகத்தியனே அழகாக எடுத்துரைக்கப் போகின்றார், நிச்சயம் வரும் வரும் வாக்கியத்தில்.
இதுதான் உண்மை. இதுதான் சத்தியம்.
========================================
# குருநாதர் வாக்கினை நம்பினால் ……
========================================
நம்பினால் நம்புங்கள். பின் நம்பினோருக்கு நிச்சயம் தன்னில் கூட எப்பொழுதும் இறைவன் துணையிருந்து காப்புவான், காப்பாகவே இருப்பான்.
========================================
# குருநாதர் வாக்கினை நம்பாவிட்டால் ……
========================================
நம்பாதோருக்கு எப்பொழுதும் நிச்சயம் தன்னில் கூட, பின் அப்படியே, பின் எவை எவை நம்பாததெல்லாம் கொடுத்து, பின் நிச்சயம் அழிப்பான்.
இவ்வளவுதான் வாழ்க்கை.
===================================================
# வாழ்க்கை எவருக்கும் தொடர்வதும் இல்லை.
வாழ்க்கை எவருக்கும் முடிவதும் இல்லை.
===================================================
வாழ்க்கை எவருக்கும் நிச்சயம் தன்னில் கூட தொடர்வதும் இல்லை.
எவருக்கும் முடிவதும் இல்லை.
இதன் அர்த்தம் என்ன? யாராவது சொல்லுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- வாழ்க்கை எவருக்கும் தொடர்வதும் இல்லை, முடிவதும் இல்லை. இதுக்கு என்ன அர்த்தம்?
அடியவர் :- பிறந்து பிறந்து, அப்படியே வந்து கொண்டே இருக்கின்றார்கள்.
புலத்தியர் சித்தர் :- அப்பா, அறிந்தும், புரிந்தும், இவைத்தன் உண்மை நிலையை நிச்சயம் தன்னில் உருவாக்கவே.
இவைத்தன் நிச்சயம் மேற்சொன்ன அறிந்தும், இங்கிருந்தும், எங்கு எங்கு இருக்கின்ற என்பதை எல்லாம் ஒருத்தன், பின் எதை என்று நிரூபிக்கவே. இன்னும் கோடான பின் கோடி அறிந்தும் கூட எவை என்று கூட இவ் புவிதன்னில் பல வித்தியாசங்கள், பல நுணுக்கமான விஷயங்கள் எல்லாம் காணப்படுகின்றது.
இவையெல்லாம் நிச்சயம் பின் அகத்தியனுக்கே தெரியும்.
இவ் குருநாதன் நிச்சயம் அதை சரி நிலைப்படுத்தி விட்டால், மக்கள் அனைவரும் நிச்சயம் தன்னில் கூட மனதை மாற்றி அனைவரும் மௌனத்தை தான் செல்வார்கள்.
எது உண்மை, எது பொய் என்றெல்லாம் நிச்சயம் புரியும். அப்படி நிச்சயம் அவ் நேரங்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றது.
அப்பொழுது மக்களை பின் மனதை மாற்றிவிட்டால், அனைத்தும் சரியாகும் என்பவை எல்லாம் அவ் மக்கள் தெரிந்து கொண்டால், நிச்சயம் தன்னில் கூட பின் ஒரு விஷயம் கூட இங்கு தீயவை நடக்காது என்பதை எல்லாம் அகத்தியனுடைய இவைத்தன் யுகங்கள், யுகங்களாகவே அகத்தியன் போராடிக் கொண்டிருக்கையில்.
ஆனாலும், இப்பொழுது மனிதன் நிச்சயமாக இன்னும் கற்பித்துக் கொண்டே, இறைவன் அப்படி, இப்படி, இதை, அவை என்று சொல்லிக் கொண்டிருந்தால், நம்பப் போவதில்லை.
இதனால் புதுமையான விஷயங்கள் மனிதன் என்ன போக்கில் போகின்றானோ, அவ் போக்கில் சென்று மனிதனுக்கு திறமைகளை எவ்வாறெல்லாம் உள்நோக்கி நன்கு உணர்ந்து எப்படி செய்தால் நன்று என்பதை எல்லாம் தெளிவுபடுத்தத்தான் போகின்றார்கள் சித்தர்கள்.
மனிதனுக்கு அறிவும், பின் புத்தியும், பின் புகுத்து அறிந்தும், அவ் அறிவையும், அவ் பின் பின் அறிந்தும், அறிந்தும் கூட, பின் புத்தியும் சரியாக பயன்படுத்தாமல் போவதற்கு என்ன காரணங்கள் என்றெல்லாம் அறிந்தும், இவைத்தன்.
=============================
# செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு உலை
மனிதனின் மூளையை தாக்குகின்றது.
============================
ஆனாலும், இதைத்தன் செயற்கையாகவே உருவாக்கப்பட்ட ஒரு உலை அறிந்தும், இவைத்தன் அதைத்தான் அப்படியே மனிதனின் மூளையை தாக்குகின்ற பொழுது, மனிதன் பின் தன் எண்ணத்திற்கு ஏற்றவாறு தான் நடப்பான்.
பின் யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டான். நிச்சயம் உண்மை சொன்னால் பொய் என்று சொல்வான். பொய் சொன்னால் பின் உண்மை என்று சொல்வான்.
=============================
# பொதிகை , கயிலாயத்தின் காற்று அலைகள் ரகசியங்கள்.
எவ்வாறு இனி உலகம் காக்கப்பட உள்ளது?
============================
இப்படித்தான் நிச்சயம் அவைதன் இங்கிருந்து, பின் அதாவது குருநாதன் அகத்தியன் கைலாயத்திலிருந்து வரும் அறிந்தும் அலைகளும், இங்கிருந்து வரும் அலைகளும், நிச்சயம் பின் சமநிலைப்படுத்தி இன்னும் வேகமாக அடித்தால், அவ் உலை நிச்சயம் தன்னில் கூட அடங்கும்.
அப்பொழுது அடங்கினால் மட்டுமே மனிதன் அடங்குவான்.
களவு பொய், பொறாமை, கற்பழிப்பு அறிந்தும் எதை என்று அறிய, இன்னும் பின் அதாவது காக்கப்படும், பின் நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட.
இதனால்தான் மாயை ஒளிந்து உள்ளது. அறிந்தும், இன்னும், இன்னும் ஞானங்கள் பெற, நிச்சயம் தன்னில் கூட சித்தர்களே சாட்சி அறிந்தும்.
இதனால் மனிதனால் உலகத்தை திருத்தவும் முடியாது.
வேண்டுமென்றால் எதை எதையோ செப்பலாம்.
ஆனாலும், அறிந்தும் இதைத்தன் பின் உண்மையை கூட அப்படியே தான் மனிதன் வாழுகின்றான்.
====================================
ஏன் இவ்வுலகில் யாருமே குரு ஆக முடியவில்லை ?
===================================
அறிந்தும் யார் நிச்சயம் மனிதன், அதாவது குருவானவன் எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட பண்பாகவே, அன்பாகவே பேசி, நிச்சயம் எவை என்று உணர்ந்து, ஒரு உயிரை யார் அவன் காக்கின்றானோ, அவனே குரு.
ஆனால் இவ்வுலகத்தில் குருவானவன் இல்லை, சொல்லிவிட்டேன்.
அதனால்தான் அகத்தியன் கருணை மிக மிக உயர்ந்தது.
என் அகத்தியனின் அறிந்தும் இவைத்தன் புரிய, பின் அகத்தியனுக்கு ஈடு இணை இங்கே, பின் யாருமில்லை.
ஆனாலும், இதையே பின் அதாவது சித்தர்களால் ஒரு உயிரையும் கூட பிழைக்க வைக்க தெரியும்.
ஆனால் மனிதனாக, மனிதனால் முடியவில்லையே. இதனால்தான் குருவானவன் தோல்வி அடைந்து விடுகின்றான் இக்கலியுகத்தில்.
உண்மைப் பொருள் என்ன?
அறிந்தும் எதைத்தன் பின் அதாவது இன்னும், இன்னும் ஞானங்கள் சித்திக்குமடா அறிந்தும்.
இவைத்தன் கந்தனோடு அருளிட, இன்னும் கூட எதை என்று புரிய. ஆனாலும், இவைத்தன் முதலில் கந்தனோடு இடங்கள் தான் இருந்தது. அறிந்தும் எவை என்று.
ஆனாலும், பின் ஈசனே, நிச்சயம் பின் கைலாயத்திலிருந்து, கந்தன் விளையாட்டுப் பிள்ளை. அங்கிருந்தால், அனைத்தும் கெடுத்து விடுவான்.
அகத்தியனே செல் என்று, மறைமுகமாக கந்தனும் கூட இங்குதான் இருக்கின்றான் நலமாகவே.
யாருக்கு தெரியும் எவை என்று அறிய. இதனால்தான் பின் கந்தன் இருக்கும் இடமெல்லாம், நிச்சயம் தன்னில் கூட மலைகளாகவே.
இதனால்தான் அகத்தியன் சிறு பிள்ளைக்கு ஏற்றார் போல், அனைத்தும் செய்து கொண்டு, திரிந்து கொண்டு, அறிந்தும் இவை என் புரிய, இன்னும் ஞானங்களோடு, இன்னும் அதிசயங்கள், நிச்சயம் சித்தர்கள் செப்புவார்கள்.
இப்பொழுது போதும், ஆசிகள் அனைவருக்குமே அறிந்தும், புரிந்தும் கூட, என் குருநாதன் அழகாகவே, பின் நீங்கள் அனைவருக்கும் அறிந்தும், இங்குள்ள அனைவருக்குமே ஆசிகள் தந்துவிட்டான்.
========================================
# அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் ஆசீர்வாதங்கள் - 06/01/2026 , செவ்வாய்க்கிழமை , மார்கழி ஆயில்யம் - குருநாதர் அகத்திய மாமுனிவரின் குருபூஜை அன்புடன் கொண்டாடிய பக்தர்கள் அனைவருக்கும்.
========================================
அருளோடும் இன்றைய நாளில், பின் அங்கங்கு, நிச்சயம் தன் அகத்தியன் பரிபூரணமாக, நிச்சயம் எத்தனையோ, பின் நிச்சயம் மனிதர்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
அங்கெல்லாம் அகத்தியன் சென்று, பின் நிச்சயம் ஏதோ ஒரு முறையில் ஆசீர்வாதங்கள், லோபாபத்திரையோடு கொடுத்திட்டுத்தான், இன்றைய அளவில் கூட வந்து கொண்டே தான் இருக்கின்றான் இன்னும் கூட எதை என்று புரிய.
இதனால் சித்தனுக்கு, பின் நிச்சயம், பின் எவையும் இல்லை.
ஆனால் நீங்கள் என்ன, பின் ஏது செய்ய நினைக்கின்றீர்களோ, அவைகளாகவே முடியட்டும்.
இதுதான் அன்பின் எல்லை, இதுதான் அகத்தியன் கருணை.
ஆசிகள் !
ஆசிகள் !!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)



