அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 4
நாள் :- 19/04/2026 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் :- காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம் : உலக நன்மைக்காக 09 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.
நேரலை :- https://www.youtube.com/watch?v=C5OQ5pL4GnY&t=4h06m30s
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
( அன்பு அடியவர்கள் அனைவரும், பின் வரும் வாக்கை படிக்கும் முன்னர், இந்த பகுதியின் நேரலையை அவசியம் பார்க்கவும்.
இவ் பகுதி வாக்கின் நேரலை :-
https://www.youtube.com/watch?v=C5OQ5pL4GnY&t=4h06m30s
குருநாதர் :- அப்பனே, இவைதன் உலகம் இயக்க அப்பனே பின் “அ” என்றே அப்பனே, சித்தர்கள் எது என்று புரிய.
சுவடி ஓதும் மைந்தன் :- உலகத்தை இயக்க முதல்ல என்ன பண்ணிருக்காரு?
அடியவர்கள் :- “அ”
குருநாதர் :- அப்பனே, எது என்று புரிய, இதுவும் தமிழை வளர்த்தவன் அப்பனே பின் முருகன்.
சுவடி ஓதும் மைந்தன் :- இங்க வந்து தமிழை வளர்த்தவன் யாரு?
அடியவர் 1 :- ( அகத்தியர் )
சுவடி ஓதும் மைந்தன் :- முருகன்.
அடியவர் 2 :- மேஷ ராசி செவ்வாய், முருகப்பெருமான்.
குருநாதர் :- அப்பனே, அறிந்தும் கூட முருகன் ஏது என்று அறிய அகத்தினாகவே இருக்கட்டும் என்று “அ” என்றே.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப தமிழை வளர்த்தவர் முருகன். நீதான் வளர்த்தவர்ன்றாரு அகத்தியராம். அப்ப முருகன் என்ன பண்றாரு? அது நீயாவே வளர்த்துக்கட்டும்பா, உன் பேரே இருக்கட்டும்பான்னு சொல்லிட்டு “அ” அகத்தியர். அகத்தியன். ஓகேங்களா? அகத்தியன்.
அடியவர்கள் :- ( பலத்த கைதட்டல்கள் )
குருநாதர் :- அப்பனே, இங்கே முருகன் கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- ( மேஷ ராசியில் அகத்தியர் + முருகர் என்று எழுதவேண்டும்) அகத்தியன் + முருகர் எழுதுங்க ஐயா. “அ” + “மு”. ஐயா அகத்தியர், அகத்தியர்னு எழுதுங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியன் + முருகர்.
ஐயா அகத்தியன் + முருகர்.
அடியவர் 2 :- அது செவ்வாய் ராசி. மேஷம்.
சுவடி ஓதும் மைந்தன் :- மேஷம் முதல் (ராசி).
குருநாதர் :- அப்பா, இங்கிருந்தே வாழ்க்கை தொடங்குகின்றது. நிச்சயம் இதிலேயே தோல்வி அடைகின்றான். மற்ற ராசிகளுக்கு எப்படியப்பா மனிதன் செல்வான்?
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த “அ” என்ற எழுத்திலேயே எல்லாமே தோல்வி அடைஞ்சிடுறீங்களாம் வந்து. இதுதான் வந்து உலக இயக்கம். இந்த ராசி கட்ட தான் உலக இயக்கம்ன்றார் வந்து. ஆனால் இந்த முதல்லவே நீங்க தோல்வி அடைஞ்சிடுறீங்கன்றார் வந்து. அது எப்படின்னு கேட்கலாம்.
குருநாதர் :- அப்பா, அறிந்தும் முதலில் ஏது என்று சொல்ல. எதை என்று புரிய. அம்மை, அப்பர்.
சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- ரவுண்ட் பண்ணிக்கோங்க. ரவுண்ட் பண்ணிக்கோங்க. அப்பா. அம்மை அப்பர்.
( எழுது பலகையில் அம்மை, அப்பர் என்ற வார்த்தைகளை சுழித்தார்கள். இதனை மேலே கொடுக்கப்பட்டுள்ள இவ் பகுதியின் நேரலை பதிவில் பார்க்கவும் )
குருநாதர் :- அறிந்தும் இதனை எவை என்று புரிய, இதை என்று அறியாமல் இருந்தாலும் நிச்சயம் பின் அடுத்த, அதாவது பின் இன்பத்திற்கு போக முடியாது.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாரும் அம்மாவும் அப்பாவும் அறிய முடியாமல் இருந்தால், “ஆ” க்கு போக முடியாதுப்பான்றாரு. இதையே நீ அறியல. அடுத்த இன்பத்திற்கு எப்படி நீ போகப்போற?
( அதாவது மேஷ ராசி - அம்மா , அப்பா - என்பது அடிப்படை. இது தெரியாமல் அடுத்த ராசிக்கு எப்படி போக முடியும். அடுத்த ராசியானா ரிஷபமே இன்பம் ராசி)
குருநாதர் :- அப்பா அனைத்தும் வேண்டும் என்கின்றான் மனிதன். பணம் வேண்டும். அதாவது குழந்தை பாகம், குழந்தை பாக்கியம், திருமணம் வேண்டும் என்று. ஆனாலும் முதலிலேயே தோல்வி அடைகின்றான். அடுத்து பின் அறிந்தும் கூட.
குருநாதர் :- அப்பனே, இதைத்தான் எது என்று அறிய. அனைத்தும் பின் கொடுப்பவன், அனைத்தும் உயிர்ப்பிப்பவன் சுக்கிரனே. இதை நீ முதலில் பின் ஏது என்று அறியாமல் பின் எப்படியப்பா சுகபோகங்கள் கிடைக்கும்?
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாம் கொடுக்கிறது யாரு? சுக்கிரன். எழுதுங்க அய்யா அடுத்து…
அடியவர் 2:- ரிஷப ராசி. சுக்கிரன்.
சுவடி ஓதும் மைந்தன் :- சுக்கிராச்சாரியர். சுக்கிரன். நீ இதையே அறியலைன்னா உனக்கு இன்பம் கொடுத்து என்ன பயன்? முதல்ல அறத்தை அறியணும். அம்மா அப்பா. அகத்தியன் முருகன் இங்கிருந்து தொடங்குறாரு. உலக இயக்கத்தை யார் தொடங்குனீங்க வந்து? அம்மையப்பர். அம்மை அப்பர். முருகன். அகத்தியன். எல்லாமே வந்து இங்கிருந்து சுத்துறாங்க பூமியை. ஐயா புரியுதுங்களா? யாராவது புரியலைன்னா கேட்கலாம். ஏன்னா இது வந்து உங்க வாழ்க்கைக்கு அடுத்த லெவலுக்கு உங்க பிள்ளைகளுக்கும் எடுத்து போறது வந்து. அதனால வந்து புரியாக்கிட்டு கேட்கலாம் வந்து. சரியா? திருப்பி இதுல சொல்லுவார்.
குருநாதர் :- அப்பனே, அறிந்தும் ஏது என்று புரிய, அப்பனே, இப்படியே படித்து படித்து சொல்லுக.
( “அ” கர வரிசை வார்த்தைகள் அனைத்தும் படித்து, படித்து ஒவ்வொன்றாக சொல்ல உத்தரவிட்டார்கள்)
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இதனையே வெல்ல முடியல யாராலும். இதனையே படித்து படித்து சொல்லுகன்றாரு. எல்லாம் எழுதுங்க எல்லாம் வந்து. அப்ப…
===========================
# எப்போது இன்பம் கிடைக்கும்?
===========================
குருநாதர் :- அப்பனே, பிறர் ஏது என்று புரிய, அதாவது உலகத்தில் உள்ள அனைத்தும் இறைவனுக்கு சொந்தம். அதில் தன் நிச்சயம் யாரை அன்பை காட்டுகின்றானோ, அடுத்த கட்டத்திற்கு செல்கின்றான். ஆனால் அன்பு காட்டுவதில்லையே.
சுவடி ஓதும் மைந்தன் :- இதான் அடுத்த அன்பு. அன்பு எழுதுங்க ஐயா. இது அன்பு. ஓகேங்களா?
சுவடி ஓதும் மைந்தன் :- அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு காட்டணும். நீ அதையே காட்டல. எப்படி அடுத்த ராசிக்கு போவ? எப்படி உனக்கு சுக்கிரன் இயங்குவார்? ஆக்டிவேஷன் ஆவார்? ஆக மாட்டாரு. அப்ப என்னங்க ஐயா?
சுவடி ஓதும் மைந்தன் :- அன்பு காட்டணும்.
குருநாதர் :- அப்பா அறிந்தும் கூட அனைத்திற்கும் அன்னம் ஈய வேண்டும். (உணவு தானம் செய்ய வேண்டும்)
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா இதை சுழிச்சிருங்க. அவர் சொன்னதெல்லாம் சுழிச்சிருங்க. அடுத்து ஐயா அண்டம். இதுதான் அண்டம். முதல்ல அண்டம் வந்து இதுதான் தொடங்குது. அண்டம் சுழிச்சிருங்க. அண்டம். இதுதான் முதல்ல சுற்று. யாரெல்லாம் எட்டி வச்சுக்கிறாங்கன்னா ஃபுட்பால் உலகத்தை யார் யாரு? அம்மையப்பர். முருகர். அகத்தியர். ஓகேங்களா?
குருநாதர் :- இதை என்று அறிய அப்பப்பா இவைதன் பெரிய அப்பனே கோளாகவே, அதாவது நட்சத்திரமாகவே உள்ளது என்பேன் மேலே.
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த மூன்று பேரும், அகத்தியரும், அம்மையப்பரும், முருகரும் பெரிய கோளா இருக்காரு. நட்சத்திரமா இருக்காரு வந்து.
( அம்மையப்பர் ஏற்கனவே ஒரு பெரும் நெருப்பு பிழம்பு என்று குருநாதர் உரைத்துள்ளார்கள். கனோபஸ் என்ற நட்சத்திரம் அதுவே அகத்திய பிரம்ம ரிஷி நட்சத்திரம்…இது போல அனைவரும் விண்வெளியில் பெரும் நட்சத்திரம் ஆக உள்ளார்கள் )
===========================
# அனுதினமும் அன்னம் இடுக…
===========================
குருநாதர் :- அறிந்தும் இவை என்று அறிய யார் எதை எவை என்று கூற அன்னத்தை மறக்கக்கூடாது.
சுவடி ஓதும் மைந்தன் :- அன்னத்தை எல்லா ஜீவராசிகளுக்கும் கொடுக்கணும்ன்றாரு. அன்னம்.
குருநாதர் :- அப்பனே இவ்வாறாக ஏது என்று புரிய அறிந்தும் கூட தேரையன் சொல்கின்றான். இவை அனைத்திற்கும் காரணங்கள் உண்டு.
( இப்போது தேரையர் சித்தர் வந்து வாக்குகள் உரைக்க ஆரம்பித்தார்கள் )
===========================
# அன்புடன் தேரையர் சித்தர் வாக்கு
===========================
தேரையர் சித்தர் :- இதைத்தன் தேரையனே ஏது என்று புரிய
சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப தேரையர் சித்தர் தான் பேசுறார்.
தேரையர் சித்தர் :- அறிந்தும் இவைத்தன் இங்கு இருப்பவை அனைத்தும் வென்றாக வேண்டும். அதாவது கட்டங்கள் பன்னிரண்டு அறிந்தும் கூட எதை என்று புரிய. ஆனாலும் ஒன்றிலேயே நீங்கள் தோல்வி அடைந்தால், மற்றவை 11 எப்படி பின் அறிந்தும் கூட பின் அறிந்தும் வெற்றி காணப் போகின்றீர்கள்?. நிச்சயம் அவ்வாறு இதிலேயே தோல்வியுற்றால், பிறவி பிறவி வந்து கொண்டே இருக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றாரு தெரியுங்களா? நீங்க இதிலேயே 12 கட்டங்கள் இருக்கு. ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, 11, 12. நீங்க இதிலேயே ஒன்னு காட்டுறது இல்ல நீங்க எப்படிப்பா 12 கட்டத்தை வந்து நிறைவேற்ற போறீங்க? ஐயா புரியுதா? 12 கட்டத்தை எப்படி நிறைவு செய்யப் போறீங்க? இதுல தோல்வி உற்றோம்னா முடிஞ்சுச்சு.
அடியவர் :- ஆரம்பத்திலேயே முடிஞ்சு போச்சு.
சுவடி ஓதும் மைந்தன் :- ( அருமையான விளக்கங்கள் உரைத்தார்கள். அதனை நேரலையில் அவசியம் பார்க்கவும்.)
சுவடி ஓதும் மைந்தன் :- இன்னைக்கு அட்சய திருதியை திதி. எல்லாம் உங்க வீட்ல நிரம்பும். இதுதாங்க ஐயா உண்மை எல்லாம் தெரிஞ்சுக்கணும்
அடியவர்கள் :- ( கைதட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- ( அருமையான விளக்கங்கள் உரைத்தார்கள். அதனை நேரலையில் அவசியம் பார்க்கவும்.)
தேரையர் சித்தர் :- அறிந்தும் ஏது என்று புரிய இவ்வாறாக அறிந்தும் இதை புரியாமல் இருந்தால் இதிலே பின் மனிதன் பின் இறந்து விடுகின்றான்.
சுவடி ஓதும் மைந்தன் :- இதுல ஒன்னும் புரியலையே ன்னா, என்ன பண்ணுவாரு?
அடியவர் :- அங்கேயே இறந்துடுறார்
சுவடி ஓதும் மைந்தன் :- இங்கேயே இறந்துடுறாங்க ஐயா. அப்ப இறைவனை எப்படிங்க காண்பாங்க? சொல்லுங்க ஐயா இன்னும் எத்தனை கட்டம் தாண்டனும்?
சுவடி ஓதும் மைந்தன் :- 11 கட்டம் தாண்டனுங்க ஐயா. ( ரிஷபம் முதல் மீனம் வரை )
சுவடி ஓதும் மைந்தன் :- இதுலயே தோல்வி அடைஞ்சாருங்க ஐயா. அது என்ன சொல்றாருன்னா…..
தேரையர் சித்தர் :- எதை என்று அறிய ஒன்றொன்றும் பிரித்து எழுதுக
சுவடி ஓதும் மைந்தன் :- ( ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் , அருமையான விளக்கங்கள் உரைத்தார்கள். அதனை நேரலையில் அவசியம் தவறாமல் பார்க்கவும்.)
………………….
………………….
………………….
………………….
………………….
………………….
………………….
………………….
………………….
………………….
………………….
………………….
===========================
# ரிஷப ராசி - பாடம் ஆரம்பம்….
===========================
https://www.youtube.com/watch?v=C5OQ5pL4GnY&t=4h21m00s
தேரையர் சித்தர் :- அறிந்தும் அப்பனே அடுத்த வாய்ப்பாடு எழுதுக. “ஆ” என்று
சுவடி ஓதும் மைந்தன் :- “ஆ”… ஐயா இதெல்லாம் அழிங்க ஐயா. ஐயா இது புரிஞ்சுதா ஐயா.
( இப்போது “அ” கர வரிசை வகுப்பு முடிந்தது. “ஆ” என்ற எழுத்தில் தொடங்கும் அடுத்த பாடம் ஆரம்பம் )
தேரையர் சித்தர் :- அப்பனே அனுதினமும் இதை கடைபிடித்தால் முதலிலிருந்து இரண்டாவதிற்கு செல்லலாம்
சுவடி ஓதும் மைந்தன் :- ( அருமையான விளக்கங்கள் உரைத்தார்கள். அதனை நேரலையில் அவசியம் பார்க்கவும்.)
தேரையர் சித்தர் :- அப்பனே இவ்வாறாக இருந்தால் முதலில் அழகு பெறும்.
சுவடி ஓதும் மைந்தன் :- இதெல்லாம் வந்து இருந்துச்சுன்னா அழகு பெறும்
தேரையர் சித்தர் :- இதனாலே அழகன் முருகன்
சுவடி ஓதும் மைந்தன் :- இதனாலே அழகன்னா யாரு அழகன்? முருகன். முருகன். “ஆ” - ரிஷப ராசியில் அழகன் முருகன்
தேரையர் சித்தர் :- அறிந்தும் கூட மனது கூட அழகு.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப மனதும் அழகா இருக்கணும் அப்ப இதுதான் முருகன் என்றார் வந்து ஓகேங்களா.
தேரையர் சித்தர் :- இதனாலே கேட்ட வரத்தை கலியுகத்தில் கொடுப்பவன் அனைத்தும் தெரிந்து வைத்திருந்தால்.
சுவடி ஓதும் மைந்தன் :- இதெல்லாம் தெரிஞ்சிருக்கணும் தெரிஞ்சுக்கணும். அப்பதான் என்ன அள்ளிக் கொடுப்பார் முருகன். தெரியலன்னா என்ன பண்ணுவாரு?
தேரையர் சித்தர் :- எதை என்று அறிய அப்பனே குறியிட்டு சந்திரன் என்று இடு
சுவடி ஓதும் மைந்தன் :- ( ஒரு குறி போட்டு, மேஷ ராசி மேல் சந்திரன் என்று எழுதுங்கள் )
நேரலை :- https://www.youtube.com/watch?v=C5OQ5pL4GnY&t=4h23m32s
===========================
# சந்திரன் எப்போது மன குழப்பத்தை ஏற்படுத்துவார் ?
===========================
தேரையர் சித்தர் :- அறிந்தும் கூட இவையெல்லாம் இல்லாவிடில் சந்திரன் பின் குழப்பி நிச்சயம் தன்னில் கூட கஷ்டங்கள் ஏற்படுத்தி கடைசியில் பின் சுடுகாட்டில் இட்டுவிடுவார்கள்.
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :-
( ஜோதிடத்தில் சந்திரன் 'மனோகாரகன்' (மனதிற்கு அதிபதி) என்று அழைக்கப்படுகிறார். ஒரு மனிதனின் எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் மன அமைதி அனைத்தும் சந்திரனின் பிடியில் உள்ளன.
எச்சரிக்கை குறிப்புகள்: நெறி தவறிய வாழ்க்கை: அறம் (தர்மம்), அன்பு மற்றும் இறை வழிபாடு (தீபம் ஏற்றுதல் போன்ற நற்செயல்கள்) இல்லாதபோது, மனோகாரகனாகிய சந்திரன் எதிர்மறையான விளைவுகளைத் தருவார்.
மனச் சிதைவு: வாழ்க்கை வீணானது என்கிற விரக்தி அல்லது "ஏன் வாழ்கிறோம்?" என்கிற எதிர்மறை எண்ணங்களை உருவாக்கி, ஒருவரை மனநலம் பாதிக்கப்பட்டவரைப் போல (பைத்தியம்) மாற்றக்கூடும்.
இறுதி விளைவு: சரியான வழிகாட்டுதல் அல்லது மனக்கட்டுப்பாடு இல்லாதபோது, அது ஒருவரை வாழ்க்கையின் விளிம்பிற்கே (சுடுகாட்டிற்கே) கொண்டு சென்றுவிடும். )
தேரையர் சித்தர் :- ஏன் எதற்காக இவையெல்லாம் சொல்கின்றேன் என்றால் இறைவனை காட்டத்தான் அனைத்தும். நிச்சயம் இறைவன் யார் என்றே தெரியவில்லை உங்களுக்கு.
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :-
(தேரையர் இதையெல்லாம் ஏன் சொல்றாருன்னா, இறைவன் யாருன்னே நமக்கு இன்னும் சரியா தெரியல. குருநாதர் சொல்ற மாதிரி, நாம இன்னும் ஒன்னாம் வகுப்புலயே தான் இருக்கோம்; அந்த 'அ'னா ஆவன்னாவைக் கூட இன்னும் அரைகுறையா தான் தெரிஞ்சு வெச்சிருக்கோம். இப்படி இருந்தா, 13-ம் இடத்தில் கடைசியாக இருக்கக்கூடிய இறைவனை எப்படி பார்க்க முடியும்? ஆனா, இந்த விஷயங்களை எல்லாம் நீங்க சரியா தெரிஞ்சுக்கிட்டீங்கன்னா, இறைவன் இருக்கின்றார் என்பது உறுதி. அப்புறம் யாராலயும் இறைவன் இல்லைன்னு சொல்ல முடியாது; நிச்சயம் இறைவனைக் காணலாம். )
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …….)
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
