அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 29.1.2026 அன்று திருக்கேதீஸ்வரத்தில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 11 (நிறைவு பகுதி)
நாள் : 29/01/2026 (வியாழக்கிழமை)
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
இடம் : திருக்கேதீஸ்வரம் , மன்னார் மாவட்டம் , இலங்கை
Google map :- https://maps.app.goo.gl/bi3iBs3vGWBQYyY99
அன்புடன் குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளால் - அகில இலங்கை அகத்திய மாமுனிவர் மன்றம், இலங்கை இந்து சமய அலுவலகங்கள் கலாச்சார திணைக்களம் மற்றும் இலங்கை திருக்கேதீஸ்வரர் ஆலய திருப்பணி சபை இணைந்து நடத்திய கூட்டுப் பிரார்த்தனை என்று அடியவர்கள் அறியத்தருகின்றோம்.
========================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
========================================
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 29.1.2026 அன்று திருக்கேதீஸ்வரத்தில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 11 - நிறைவு பகுதி )
=========================================
# மாமிசம் உண்ணும் தேசங்களில் அழிவுகள்
=========================================
அடியவர்:- (அகத்தியர்) அப்பா, அதுல வந்து வேற்று மதத்துல வந்து மாமிசம் சாப்பிடுறவங்க எல்லாம் வந்து நல்லாத்தான் இருக்குறாங்க?
குருநாதர் :- அப்பனே, எது என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அவ்வாறு கிடையாது அப்பா, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் எவ்வாறு என்பதெல்லாம் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அவ்வாறு, அப்பனே, உட்கொள்வோன் முதல் அப்பனே, பின் அழிவுதான் ஏற்படும் அவ் தேசத்தில், அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- (கடைசியில இதையெல்லாம் சேர்த்து என்னதான் பண்ணுவாங்க? எல்லாத்தையும் ஒண்ணா திரட்டுவாங்க, அப்புறம் மொத்தமா அழிச்சிருவாங்க.)
===================================
# இறைவன் அளிக்கும் தண்டனை :- அனைவரையும் 1000, 2000, 5000 , 10,000 என்று ஒன்றாக நிற்க வைத்து அடிப்பார் (அழிப்பார்).
====================================
குருநாதர் :- இதனால், அப்பனே, இப்படியே தெரிந்து கொள்வது நன்று என்பேன் அப்பனே. இதனால், அப்பனே, சிறு சிறுதாக, அப்பனே, கஷ்டங்கள் கொடுத்து தான் ஒன்றாக நிற்க வைத்து, அப்பனே, ஆயிரம், அப்பனே, 2000, அப்பனே, 5000, 10000 என்று அடிப்பான் அப்பனே, இறைவன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன பண்ணுவாங்க? எல்லாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் எல்லாம் தண்டனை கிடையாது. எல்லாரும் என்ன பண்ணுவாங்க? வந்து சேர்த்து வச்சு அடிச்சு விட்டுருவாங்க.
====================================
# இறைவன் அழிக்கும் விதம் - பூகம்பம் , மழை ….
====================================
குருநாதர் :- அதனால்தான், அப்பனே, பூகம்பங்கள் . அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. நீர், அப்பனே, பின் எதை என்று அறிய அப்பனே, பின் நீர் பூகம்பங்களாலும் , அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட மழைகளாலும், அப்பனே, இன்னும், அப்பனே, எதை எதையோ அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அழிவினால், அப்பனே, அழிவு வந்து கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே.
===================================
# இறைவனின் கருணையும் பேரழிவும்
===================================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, எடுத்துக்கொள்வோம் அப்பனே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. இறைவனுக்கு, அப்பனே, பின் எவை என்ற ஒரு இமைக்கும் நேரத்தில், அப்பனே, நிச்சயம் தன்னில் வெப்பத்தை, பின் அதிகமானால், அப்பனே, அவ் கசிவு மனிதனால், நிச்சயம், பின் தயாரிக்கப்பட்டதே அதைத்தான், அப்பனே, பின் வெடித்து, அப்பனே, காற்றினில் பரவ. அப்பனே, நிச்சயம், அப்பனே, அனைவரும் இறந்து விடுவார்கள். ஆனாலும், அப்பனே, இறைவன் அப்படிப்பட்டவன் இல்லை என்பேன் அப்பனே. பொறுத்தும், பொறுத்து பார்ப்பான் என்பேன் அப்பனே.
அடியவர்:- (அகத்தியர்) அப்பா, இந்த மீனவர்கள் வந்து மீனவர் குடும்பத்திலேயே பிறக்குறாங்க. அவங்களுக்கு வேற தொழிலே இல்லை. இப்ப, அது?
குருநாதர் :- அப்பனே, இதையும் எதை என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இதைப் பற்றியும் கூட விவரமாக விவரிக்கின்றேன் என்பேன் அப்பனே. பொறுத்திரு.
அடியவர்:- சிவனே வந்து மீனவரா வந்திருக்காருன்னு, இது அந்த ஆலயங்கள்ல வந்து பலியிடுறாங்க தானே? சுவாமிக்குன்னு சொல்லி, அதைப்பற்றி அகத்தியர் அப்பா என்ன சொல்றார் ?
======================================
# மனிதனின் சுயநலம் - அசைவம் உணவு. இறை சட்டத்திற்கு எதிரானது.
======================================
குருநாதர் :- அப்பனே, அனைத்தும் எது என்று அறிய அப்பனே, மனிதன் தின்பதற்கே என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாமே மனிதன் தான் தின்பது.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எது என்று புரிய அப்பனே, இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் எவை என்று புரிய அப்பனே, பின் அவ்வாறெல்லாம், அப்பனே, வாழ்பவர்கள் எப்படி அப்பா, நலமாக வாழ்வார்கள்?
சுவடி ஓதும் மைந்தன் :- மாமிசத்தை கொல்றவரும் எல்லாம் எப்படி நலமாக வாழ்வார்கள்?
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய அப்பனே, இதனால், அப்பனே, இன்னும் கூட, அப்பனே, பின் எவை என்று புரிய புரிய, அப்பனே, பின் இதனால், அப்பனே, பின் வருங்காலத்தில் உங்களுக்கே தெரியும்படியே அப்பனே, யான் நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் உண்மை நிலை அப்பனே, இப்பொழுது சொன்னாலும் புரியாது. அப்பா, அப்பனே, பின் காண்பிக்கின்றேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- ("இப்ப நான் இதைச் சொன்னா உங்களுக்குப் புரியாது. ஒரு விஷயத்தைப் படம் போட்டு விளக்கினா எப்படித் தெளிவா இருக்குமோ, அதே மாதிரி இறைவன் உங்களுக்கு எல்லாத்தையும் 'லைவா' (நேரடியா) காட்டப்போறாரு. அகத்தியர் மூலமா உங்களுக்குச் சொல்ல வர்றது என்னன்னா—தவறு பண்றவங்களுக்கு என்ன நடக்கும்னு இறைவன் கண்ணெதிரே நேரடிச் சம்பவமாவே நடத்திக் காட்டிடுவாரு. 'அப்ப பாத்துக்கோப்பா உன் நிலைமையை'ன்னு அவர் எச்சரிக்கிறாரு. அந்தச் சமயம் வரும்போது நீயே எல்லாத்தையும் நேர்ல பார்த்து உணந்துப்ப, அதுவரைக்கும் பொறுத்திருந்து பாரு". )
=======================================
# நல்லதை செய்க! என்று சொன்னாலும் செய்ய மாட்டான்.
# அழிவுகள் வந்தா இறைவன் இப்படி செய்து விட்டானே என்று பேசுவது.
========================================
குருநாதர் :- அப்பனே, முதலில் அப்பனே, பின் நல்லதை செய்க. நல்லதை செய்க என்று அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சொன்னாலும் செய்ய மாட்டான். அப்பா, அழிவுகள் வந்தால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இறைவன் இப்படி செய்துவிட்டானே என்று அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- ("நல்லது பண்ணு, ஒழுங்கா நடந்துக்கோ, நல்ல விஷயங்களைப் படிச்சு அதன்படி நடன்னு சொன்னா யாரும் கேக்குறது இல்லை. ஆனா, ஒரு பேரழிவு வந்து எல்லாம் கையை மீறிப் போகும்போதுதான், 'ஐயோ, இறைவன் இப்படி பண்ணிட்டாரே'ன்னு எல்லாரும் திருந்த ஆரம்பிக்கிறாங்க. தப்பு பண்ணும்போது இறைவனை நினைக்காதவங்க, கஷ்டம் வந்ததும் அந்தப் பழியைத் தூக்கி இறைவன் மேல போடுறாங்க. ஆனா, மனுஷன் திருந்தணும்னுதான் இறைவன் இப்படிச் சில சம்பவங்களை நடத்துறார். இதையெல்லாம் பார்த்து அப்பவாவது மாறுவாங்களான்னு பார்த்தா, மறுபடியும் அதே பழைய நிலைக்குத்தான் வராங்க." )
அடியவர் :- அப்ப வந்து இப்ப இறைவனை கும்பிடுறவங்க கஷ்டப்படுறாங்க. அவங்களை நல்லா வச்சிருந்தா,
=========================================
# துன்பப்படுபவன் - மிகவும் நல்லவன், மிகவும் பாக்கியம் உடையவன், மிகவும் ஞானம் உடையவன் பின் நிச்சயம் நன்மை அடைவான். அனைவரையும் வாழ வைப்பான்.
=========================================
குருநாதர் :- அப்பனே, பின் இதுவரை என்ன கேட்டுக்கொண்டிருந்தாய் என்பேன். அப்பனே, துன்பப்படுபவன் அப்பனே, பின் எவை என்று அறிய அப்பனே, மிகவும் நல்லவன் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே. மிகவும் பாக்கியம் உடையவன். அப்பனே, மிகவும் ஞானம் உடையவன். அப்பனே, மிகவும் பின் நிச்சயம் நன்மை அடைவான். மிகவும், அப்பனே, பின் அனைவரும் வாழ வைப்பான். அப்பனே,
சுவடி ஓதும் மைந்தன் :- யார் ஒருத்தர் துன்பப்படுறாரோ, அவர் என்ன பண்ணுவாரு?
அடியவர் :- பின்ன நல்லா வாழ்வாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- ("இப்ப யார் ஒருத்தர் கஷ்டப்பட்டுத் துயரப்படுறாரோ, அவர் பின்னாடி கண்டிப்பா நல்லா வாழ்வாரு; அதுமட்டுமில்லாம இன்னும் நாலு பேரை வாழ வைக்கிற அளவுக்கு உயர்வாரு. இதை நான் ஏற்கனவே இங்க பலமுறை தெளிவா சொல்லிட்டேன். ஆனா மனுஷங்க நல்லா இருக்கும்போது, வசதி வாய்ப்போட இருக்கும்போது இதையெல்லாம் பெருசா எடுத்துக்கிறது இல்லை. கஷ்டம் வரும்போதுதான் இந்த உண்மையை உணர்றாங்க. ஆனா, தர்மப்படி நடக்குறவங்க படுற கஷ்டம் தற்காலிகமானதுதான், அவங்களுக்கான நல்ல காலம் கண்டிப்பா வரும்.")
அடியவர் :- இப்ப இறைவனை கும்பிடுறவங்க நல்லா இருந்தா, அதை பார்த்து இறைவனை கும்பிடாதவங்க நல்லா இருக்க ஆசைப்படுவாங்க.
===================
# பக்தி என்ற நடிப்பு
===================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, எப்படி ஏது என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. இறைவன், அப்பனே, எப்படி பின் வணங்குகின்றான்? அப்பனே, உந்தனுக்கு தெரியுமா அப்பா?
குருநாதர் :- அதனால், அப்பனே, இதைப்பற்றி நான் சொல்லிவிட்டேன் அப்பனே, பின் நடிப்பு என்பது, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட.
அடியவர் :- இப்ப இறைவனை கும்பிடுறாங்க, கஷ்டப்படுறாங்க தானே? அவங்க நல்லா வச்சுக்கோங்களேன். நல்லா இருக்கும்போது,
=====================================
# இறைவனை வணங்குவோன் எப்பொழுதும் கெட்டுப்போவதில்லை
=====================================
குருநாதர் :- அப்ப நிச்சயம், அப்பனே, பின் இறைவனை வணங்குவோன் எப்பொழுதும் கெட்டுப்போவதில்லை என்பேன் அப்பனே.
குருநாதர் :- அப்பனே, ஆனாலும், அப்பனே, பின் நேரங்கள் ஆகும், அவ்வளவுதான்
சுவடி ஓதும் மைந்தன் :- நல்லா வாழ்வதற்கு நேரங்கள் ஆகும். அவ்வளவுதான்.
================================
# துன்பங்களை கடந்தால் - இன்பம்
================================
குருநாதர் :- அப்பனே, ஏனென்றால் பொறுத்துக் கொள்ள வேண்டும், அல்லவா? அப்பனே, அனைத்தும் கூட, அப்பனே, பின் அனைத்தும் கடந்து வந்தால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- அப்பனே, ஒன்றுமே நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்ற பக்குவங்கள் இல்லாவிடில், அப்பனே, இறைவன் அருகிலே சேர்க்க மாட்டான். அப்பா,
சுவடி ஓதும் மைந்தன் :- ஒண்ணுமே தெரியாதுன்னா இறைவன் என்ன பண்ணுவாரு? இறைவனை வணங்கினாலும் சரி, என்ன பண்ணாலும் சரி, அருகிலே வந்து வர முடியாது. அப்ப, துன்பப்பட்டாதான் இறைவனிடத்தில் வர முடியும்.
=========================================
# இறைவனைக் காண பின் ஒரு நேர்வழி - துன்பமே
=========================================
குருநாதர் :- அப்பனே, பின் அதாவது ஏற்கனவே சொல்லிவிட்டேன். அப்பனே, பின் நிச்சயம் இறைவனைக் காண, அப்பனே, பின் ஒரு நேர்வழி என்றால், அப்பனே, துன்பமே என்பேன். அப்பனே,
குருநாதர் :- அப்பனே, குறை இல்லாமல் இவ்வுலகத்தில் யாரும் பிறந்ததில்லை. அப்பா,
குருநாதர் :- அப்பனே, குறை இல்லாமல் யாரும் இறைவன், ஏனென்றால், அப்பனே, நிச்சயம் பின் அவன் நன்றாக இருக்கின்றான் என்று பின் நீ சொல்வாய் அல்லவா? அதனாலதான் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- ("மனுஷங்க பொதுவா என்ன பண்ணுவோம்? மத்தவங்களைப் பார்த்து அவன் என்னப்பா நல்லா இருக்கான் அப்படின்னு சொல்லிடுவோம். ஆனா, உண்மையிலேயே அவர்கிட்ட போய் கேட்டாத்தான் தெரியும், அவருக்குள்ள எத்தனை குறை இருக்குன்னு. இவர்கிட்ட கேட்டா இவர் ஒரு குறையைச் சொல்லுவாரு, அவர்கிட்ட கேட்டா அவர் ஒரு குறையைச் சொல்லுவாரு. வெளியில பாக்குறதுக்கு எல்லாரும் நல்லா இருக்கிற மாதிரி தெரிஞ்சாலும், ஒவ்வொருத்தருக்கும் ஒரு கஷ்டம் இருக்கத்தான் செய்யுது. அதனால யாரையும் பார்த்து தப்பா எடை போடக்கூடாது. அதனாலதான் இறைவன் என்ன பண்றாருன்னா...")
அடியவர் :- அப்ப வந்து படைப்புல தான் தப்பு இருக்கு.
குருநாதர் :- அப்பனே, எது என்று அறிய அப்பனே, இவையும் சொல்லிவிட்டேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- அப்பனே, பின் எவை என்று கூற அதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட,
=====================================
# உடலை இரும்பு போல் ஆக்கினால் , அனைத்தும் சுப வாழ்க்கை.
=====================================
குருநாதர் :- அப்பனே, பின் எவ்வாறு நீங்கள், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் உடம்பை, அப்பனே, பின் வைத்திருந்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு ஆகலாம், அப்பனே, பின் இரும்பு போல் ஆக்கின்றீர்களோ, அப்பனே, அவ்வளவுக்கு அவ்வளவு சக்திகள் அதிகமாகின்ற பொழுது, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட தானாகவே, அப்பனே, பின் எவை என்று கூற பின் நிச்சயம் தன் ஆன்மா பெருக்கெடுத்து, அப்பனே, நிச்சயம் அனைத்தும், அப்பனே, பின் சுப வாழ்க்கையை கண்டும் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- ("உடம்பை ஏன் இரும்பாக்கச் சொல்றாருன்னா, அதுக்கு ஒரு காரணம் இருக்கு. நீ தவம் செஞ்சு, தியானம் பண்ணி உன் உடம்பை இரும்பைப் போல உறுதியாக்கிட்டேன்னா, அதுக்கப்புறம் உனக்குள்ள ஒரு விஷயம் புரியும். 'இறைவன் யாருக்காக எதைச் செஞ்சிருக்காரு, நாம யாரால உருவாக்கப்பட்டோம்'கிற ரகசியம் அப்பதான் உனக்கு விளங்கும். உன் உடம்பையும் மனசையும் நீயே கட்டுப்படுத்தி ஜெயிச்சிட்டேன்னா, அப்புறம் நீ ஒரு சாதாரண மனுஷன் கிடையாது; நீயே ஒரு ஞானியா மாறிடுவ. அந்த நிலையை அடையத்தான் முதல்ல உடம்பை உறுதி செய்யணும்னு சொல்றாரு.")
=========================================
# அசைவ உணவு - அதிலிருந்து எந்த சக்தியும் மனிதனுக்கு வருவதில்லை.
========================================
அடியவர் :- இப்போ (அகத்தியர்) அப்பா, இப்ப குழந்தைகளுக்கு வந்து சத்து தேவை என்று சொல்லி இந்த எல்லாருமே வந்து பொதுவா மாமிசம் கொடுப்பாங்க. அதுக்கு அகத்தியர் அப்பா என்ன சொல்றார்?
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் பின் அதிலிருந்து எந்த சக்தியும் வருவதில்லை என்பேன் அப்பனே, இவ்வளவுதான்.
குருநாதர் :- அப்பனே, எது என்று அறிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் சைவ எவை என்று அறிய அப்பனே, பின் சமயத்தை சார்ந்தவர்கள் எல்லாம், அப்பனே, பின் எப்படி வாழ்ந்தார்கள் என்பேன் அப்பனே?
சுவடி ஓதும் மைந்தன் :- ( சைவம் பின்பற்றினர் எப்படி வாழ்ந்தார்கள்?
======================================
# சைவத்தொழில் இருப்பவர்கள் மட்டுமே புதிது புதிதாக கண்டுபிடிக்க முடியும் இவ்வுலகத்தில்.மூளை பலமாக செயல்படும்.
======================================
குருநாதர் :- அப்பனே, சைவத்தொழில் இருப்பவர்கள் மட்டுமே புதிது புதிதாக கண்டுபிடிக்க முடியும் இவ்வுலகத்தில். அப்பனே, மூளை பலமாக செயல்படும் என்பேன் அப்பனே.
======================================
# வருங்காலத்தில் கல்விகள் கெடும்.
# அறிவுகள் எல்லாம், அசைவ உணவு அவை மூடிவிடும்.
=======================================
குருநாதர் :- அப்பனே, இதனால்தான், அப்பனே, பின் வருங்காலத்தில் கல்விகள் கெடும் அப்பா. ஏனென்றால், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அறிவுகள் எல்லாம், அறிவுகள் எல்லாம், அவை மூடிவிடும் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- ("மாமிசம் சாப்பிட்டா அறிவு மழுங்கிடும், எதையும் தெளிவா யோசிக்க முடியாதுன்னு சொல்றாங்க. உலகத்துல பெரிய பெரிய கண்டுபிடிப்புகளைச் செஞ்ச விஞ்ஞானிகளும், உலகத்துக்கே வழிகாட்டுற ஞானிகளும் பெரும்பாலும் சைவம் சாப்பிட்டவங்களாத்தான் இருந்திருக்காங்க. ஏன்னா, அந்த உணவு முறையாலதான் அவங்க அறிவு தெளிவா இருந்துச்சு. ஆனா, அசைவம் சாப்பிடுறப்போ அறிவு மூடிப்போயிடும்; இதனால வருங்காலத்துல வர்ற பிள்ளைங்க சாதிக்கணும்ன்ற எண்ணம் இல்லாம, சும்மா ஜாலியா சுத்திட்டு மொக்கையாவே இருந்துடுவாங்க. ஸ்கூலுக்குப் போயிட்டு ஏதோ வந்தோம் போனோம்னு இருப்பாங்களே தவிர, வாழ்க்கையில பெருசா எதையும் சாதிக்கிற அந்த வல்லமை அவங்களுக்கு இல்லாமப் போயிடும். இதான் சைவத்தோட முக்கியத்துவம்.")
குருநாதர் :- அப்பனே, இவ்வாறு தின்கிறார்களே அப்பனே, இவர்களை கேட்டுப்பார். அப்பனே, பின் நாளை பொழுது என்ன ஆகவேண்டும் என்று.
குருநாதர் :- அப்பனே, ஆனாலும் சைவத்தில் இருப்பவர்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ்வுலகத்தை அப்பனே பின் காக்க என்பார்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- ("ஆனா சைவம் சாப்பிடுறவங்க எப்பவுமே ஒரு படி மேலதான் யோசிப்பாங்க. 'நான் இந்த உலகத்தையே காக்கணும், பெரிய சயின்டிஸ்ட் ஆகணும், தெய்வ பக்தி செலுத்தணும்'னு பெரிய பெரிய லட்சியங்களோட இருப்பாங்க. ஆனா அதே சமயம் அசைவம் சாப்பிடுறவங்களைப் பத்தி பேசும்போது என்ன சொல்லுவாங்களாம்? 'உனக்கு என்ன தெரியும்? உனக்கு என்ன புரியும்? கறி சாப்பிடுறதால அறிவு மழுங்கிப்போயிருக்கும்போது உன்னால என்ன செஞ்சிட முடியும்?'னு கேப்பாங்க. அதாவது, ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கிற தெளிவு அசைவம் சாப்பிடுறவங்களுக்கு இருக்காதுன்னு இவங்க நினைக்கிறாங்க.")
===========================================
# திருக்கேதீஸ்வரத்தில் சக்திகள் அதிகம்.
==========================================
குருநாதர் :- அப்பனே, இவையெல்லாம் அப்பனே ஏன் எதற்காக இங்கு சொல்கின்றேன் என்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சக்திகள் அதிகம்.
==========================================
# அதிக சக்திகள் உள்ள இடத்தில் வாக்குகள் சொன்னால் , வாக்குகள் தோற்காது.
==========================================
குருநாதர் :- இவ் சக்திகள் அப்பனே பின் அதிக இடத்தில் சொன்னால், அப்பனே, நிச்சயம் அப்பனே பின் வாக்குகள் தோற்காது.
குருநாதர் :- இவ் வருங்காலத்தில் எடுத்தே ஆக வேண்டிய கட்டாயம் அப்பனே. ஏனென்றால் அழிவுகள் பலம். எடுத்தே ஆக வேண்டும். இப்படி நடந்து கொண்டே ஆக வேண்டும் என்பதெல்லாம், அப்பனே, யாங்கள் உணர்வோம் அப்பனே.
குருநாதர் :- எத்தனையோ அப்பனே பின் ஆண்டுகளில் அப்பனே என்ன நடக்கின்றது என்பதெல்லாம், அப்பனே, ஏற்கனவே ஆனாலும் அவை மறைத்து வைத்து, அப்பனே, பின் இன்னும் யாங்கள் இப்படி சொல்லிக் கொண்டிருக்கின்றோம் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- ("அதனால எங்களுடைய வாக்கு என்னைக்குமே அழியாது. ஏன் இதையெல்லாம் இவ்வளவு சக்தியான இடத்துல நின்னு சொல்றோம்னா, இங்க சொல்லப்படுற வாக்கு காலத்துக்கும் அழியாம வரலாற்றுல நிலைச்சு நிக்கும். பின்னாடி ஒரு காலத்துல அழிவு ன்னு ஒண்ணு வரும்போதுதான் மனுஷங்க இதையெல்லாம் எடுத்துப் பார்ப்பாங்க. 'அன்னைக்கே இப்படிச் சொல்லிருக்காங்களே, இப்படி இருந்தாதான் தப்பிக்க முடியும்னு அப்பவே காட்டியிருக்காங்களே'ன்னு உணர்ந்து, இந்த ஞானத்தைப் பயன்படுத்துவாங்க. அதுக்காகத்தான் இதையெல்லாம் இப்பவே பதிவிடுறோம்.")
குருநாதர் :- அப்பனே, எப்பொழுதும் பின் சாகும் நேரம் தான். அப்பனே, பயம் வரும் என்பேன்.அப்பனே, மனிதனுக்கு அப்பனே.
=====================================
# இறைவன் மீது முதலிலே பயம் வந்துவிட்டால், அனைத்தும் பின் நடக்கும்.
=====================================
குருநாதர் :- அப்பனே, இறைவன் மீது முதலே பயம் வந்துவிட்டால், அப்பனே, அனைத்தும் அப்பனே பின் நடக்கும் அப்பா.
==========================================
பின் வரும் வாக்கின் சுருக்கம் :- இவ்வுலகில் மனிதன் கேட்கும் அனைத்தையும் இறைவன் தயங்காது வழங்குகிறான் என்பதை நான் ஏற்கனவே பலமுறை எனது உரைகளில் தெளிவுபடுத்தியுள்ளேன். இருப்பினும், இறைவன் வழங்கும் அந்தப் பொருட்செல்வங்களோ அல்லது உலகியல் இன்பங்களோ உண்மையான அமைதியைத் தருவதில்லை என்பதையும், அவற்றால் பெரிய பயன் ஏதுமில்லை என்பதையும் மனிதன் உணர்வதற்குள் காலம் கடந்துவிடுகிறது. இந்த வாழ்வியல் யதார்த்தத்தை ஒருவன் புரிந்து கொள்வதற்கே ஐம்பது அல்லது ஐம்பத்தைந்து வயதுகள் ஆகிவிடுகின்றன என்பதுதான் கசப்பான உண்மை.
===========================================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அனைத்தும், அப்பனே, நீ கேட்கின்றாய். அப்பனே, நிச்சயம் அனைத்தும் இறைவன் கொடுக்கின்றான் என்பேன். அப்பனே, ஆனாலும், அப்பனே, இதை பின்பும், அப்பனே, அதாவது, அப்பனே, பின் பலமுறை உரைகளில் உரைத்துவிட்டேன். அப்பனே, அனைத்தும் கொடுத்து, அதனால் பயனில்லை என்று, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட தெரிந்து கொள்வதற்கே 50, 55 வயதுகள் ஆகிவிடுகின்றது என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- ("இறைவன் நீ கேட்டதெல்லாம் கொடுக்கிறாரு, ஆனா அதனால ஒரு பிரயோஜனமும் இல்லைன்னு நீ புரிஞ்சுக்கிறதுக்குள்ள 50, 55 வயசு ஆயிடுது. இததான் அவர் ஏற்கனவே சொல்லியிருக்காரு. உனக்கு நல்ல கல்வி கொடுப்பாரு, ஆனா அதால ஒன்னும் ஆகப்போறது இல்லைன்னு ஒரு கட்டத்துல புரிய வைப்பாரு. ஒரு வேலை கொடுப்பாரு, ஆனா அதுவும் போயிடும். சரி, ஒரு துணை வருவாங்கன்னு பார்த்தா அவங்களாலயும் நிம்மதி இல்லாம வெறுப்பு தான் மிஞ்சும். பிள்ளைகளை ஆசை ஆசையா பெத்து வளர்ப்ப, ஆனா அவங்களே நாளைக்கு உன்னை 'போடா'ன்னு சொல்லும்போது மனசு உடைஞ்சு போயிடும். இப்படி படிப்பு, வேலை, குடும்பம்னு எல்லாத்துலயும் அடிபட்டு, 'இதெல்லாம் இவ்வளவுதானா?'ன்னு நீ வெறுத்துப் போறதுக்குள்ள வயசு பாதிக்கு மேல போயிடுது. அப்புறம்தான், 'இறைவா, நீதான்ப்பா உண்மை'ன்னு அவரைத் தேடி ஓடுறோம்.")
அடியவர் :- அதுக்கப்புறம் கடவுளை தேடுறோம்.
குருநாதர் :- பின் அப்பொழுதுதான் நிச்சயம் தன்னில் கூட பயம் எவை என்று கூற போய்,, நீ எதுவும் அப்பனே, பின் இவ்வுலகத்தில் பின் நிரந்தரம் இல்லை என்று அப்பொழுதுதான் புரிகின்றான். நிச்சயம் அது முதலாகவே புரிந்துவிட்டால், இவையெல்லாம் எளிதாக கிடைத்துவிடும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ("ஐயா, உங்களுக்கு புரியுதுங்களா? இதெல்லாம் வெறும் மாயைதான், இதுல ஒண்ணுமே இல்லைன்னு நீங்க முன்னாடியே தெரிஞ்சுக்கிட்டீங்கன்னா, வாழ்க்கையில மத்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு ரொம்ப எளிமையாவே கிடைச்சிரும்னு சொல்றேன். ஒரு மனுஷன் மனசுல தெளிவு வந்துட்டா, அவனுக்கு எல்லாமே சுலபமா அமையும். அப்போ இதெல்லாம் ஒரு பெரிய விஷயமாவே தெரியாது, நிஜமாவே ஒரு பெரிய விஷயமே இல்லை.")
===========================================
# அப்பனே, உண்மைப் பொருள், மெய் ஞானம்.
# பொய் பொருள் , பொய் ஞானம் (மாயை)
# அவ் மெய் ஞானம் வந்துவிட்டால் , பொய் ஞானம் என்ற மாயை, தானாக வந்து சேர்ந்துவிடும்.
===========================================
குருநாதர் :- அப்பனே, உண்மைப் பொருள், அப்பனே, மெய் ஞானம். அவ் மெய் ஞானத்தை எப்பொழுது பின் உணர்கின்றார்களோ, பின் பொய் ஞானம் (மாயை) அனைத்தும், பின் நிச்சயம் தானாக வந்து சேர்ந்துவிடும் மனிதனிடத்தில். நிச்சயம் அது பொய் ஞானமும், நிச்சயம் தன்னில் கூட, பின் அனைவரையும் காக்க வைக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ("மெய் ஞானம் எப்போ ஒருத்தருக்குத் தெரியுதோ, அப்போ இந்த பொய் ஞானம் எல்லாம் தானாவே விலகிடும். மெய் ஞானம்னா யாரு? அதுதான் கடவுள். கடவுளைப் பத்தின உண்மை தெரிஞ்சிருச்சுன்னா, இந்த மாயைங்கிற பொய் ஞானம் எல்லாம் தானாவே போயிடும். மாயை உங்களைச் சுத்தி வரத்தான் செய்யும், ஆனா அதைப்பத்தின தெளிவு உங்களுக்கு இருக்கிறதுனால, அது உங்களை எப்போவும் பாதிக்காது. எப்பா, இது இப்படித்தான் இருக்கும், நாம இப்படித்தான் கண்ட்ரோலா இருக்கணும்னு உங்களுக்குத் தெரிஞ்சிரும். அந்தத் தெளிவு வந்துட்டா வாழ்க்கையை அழகா கையாளுவீங்க." )
குருநாதர் :- அப்பனே, இதனால, அப்பனே, பல விஷயங்கள், அப்பனே, உலகம் எப்படி உருவானது? அப்பனே, நிச்சயம், பின் மனிதன் எப்படி உருவாகின்றான்? என்பதெல்லாம் இன்னும் வாக்குகளில் யான் செப்புவேன் அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. பின் எங்கெங்க செப்ப வேண்டுமோ, அங்கங்கே செப்புவேன்.
குருநாதர் :- அப்பனே, இறைவன் யார்? அப்பனே, இறைவனை எங்கு காணலாம்? அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, இறைவன் ஏன்? எதற்காக? அப்பனே, நிச்சயம், தன்னில் கூட எவை என்று புரியும். அப்பனே, பின் அனைத்தும் சொல்வேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- இறைவன் யார்? எங்கு இருக்கின்றான்? எதற்காக? இறைவன் படைத்த எல்லாத்தையும் நான் வந்து உங்களுக்காக சொல்லுவேன்.
================================================
# இறைவனின் ரகசியங்கள் , உண்மை நிலை இனிவரும் காலங்களில் இன்னும் தெளிவாக, பலமாக உலகிற்கு வெளிப்படும்
================================================
================================================
பின் வரும் வாக்கின் சுருக்கம் :- ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளில் ஒரு குறிப்பிட்ட காலத்தைக் கடந்த பிறகுதான், வாழ்க்கையின் உண்மை நிலையை முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது. இத்தனை ஆண்டு கால அனுபவங்களுக்குப் பிறகு, ஒரு மனிதன் அறியாமையிலிருந்து விடுபட்டு உண்மையை உணர்ந்து வெளியே வர வேண்டும் என்பதே இறைவனின் மாறாத கட்டளையாக இருக்கிறது. இவ்வளவு காலம் இதற்காக ஆகிவிட்டாலும், இறைவனின் ஆணைப்படி அந்தப் பரம்பொருள் குறித்த உண்மை நிலை இனிவரும் காலங்களில் இன்னும் தெளிவாக வெளிப்படும் என்பது உறுதி.
=================================================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, ஒவ்வொரு காலகட்டத்திலும், அப்பனே, இத்தனை வருடங்கள், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, ஒரு மனிதன், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பின் இத்தனை வருடங்கள் ஆயினால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, உண்மையில் தெரியக்கொண்டு தெரிய. அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பின் வெளிவர வேண்டும் என்பதே நிச்சயம். இறைவனுடைய, பின் நிச்சயம், தன்னில் கூட, இது கட்டளை என்பேன் அப்பனே.
குருநாதர் :- இதனால் இத்தனை வருடங்கள் ஆகிவிட்டது, ஆனால் உண்மை நிலை இனிமேலும் வெளிவரும் அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- ("ஆயிரம் வருஷமோ, இல்ல அஞ்சுநூறு வருஷமோ—இத்தனை வருஷங்களுக்குப் பிறகு உண்மைகள் எல்லாம் கண்டிப்பா வெளிய வரணும்ங்கிறது இறைவனோட கட்டளை. அந்தந்த காலகட்டத்துல எதை எப்போ வெளிய கொண்டு வரணும்னு அவர் முடிவு பண்ணிட்டாரோ, அதை யாராலயும் தடுக்க முடியாது. காலச்சக்கரம் சுத்தும்போது மறைக்கப்பட்ட உண்மைகள் தானாவே வெளிப்படும். யாரு எவ்வளவு தடுத்தாலும், அந்த நேரம் வரும்போது அந்த ரகசியங்கள் வெளிய வந்தே தீரும்.")
=================================================
# இறைவனின் உண்மை யார் தடுத்தாலும், அவருக்கு அடி விழுந்து,உண்மை, பின் வேகமாக முன்னே செல்லும்.
=================================================
குருநாதர் :- அப்பனே, உண்மை எது என்று புரியும். அப்பனே, யார் தடுத்தாலும், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, பின் அவருக்கு கீழே விழுந்து, அப்பனே, உண்மை, பின் வேகமாக முன்னே செல்லும் அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு உண்மையை யார் தடுத்தாலும் என்ன ஆகும்? அவர் கீழே விழுவாரு, ஆனால் உண்மை எவ்வளவு போகும்? அடிச்சிட்டு போயிட்டே இருக்கும், அடிச்சிட்டு போயிட்டே இருக்கும்.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, எது என்று பொய்யும், எது என்ற அப்பனே, இதுபோலே. அப்பனே, ஆனாலும், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, பின் பாதியிலே நின்றுவிடும். பின் யாரும் எழுப்ப முடியாது. அப்பா,
சுவடி ஓதும் மைந்தன் :- பொய் கூட என்ன சல்லுன்னு போகும். எங்க நின்னுடும்? நடுவுல நின்னுடும்.
============================================
# சக்திகள் எங்கு இருந்தனவோ, எங்கு கிரகங்கள் தாக்கம் இல்லையோ, அங்கு எல்லாம் சுவடிகள் எல்லாம் எழுதப்பட்டது.
============================================
குருநாதர் :- அப்பனே, மனிதனுக்கு தெரியாதப்பா, எங்கு சென்று, அப்பனே, எங்கு உரைத்தால், அப்பனே, நிச்சயம், சக்திகள் என்பது எல்லாம். அப்பனே, நிச்சயம், அப்பனே, பின் எதை என்று கூட.
குருநாதர் :- இதனால்தான், அப்பனே, பின் சக்தி வாய்ந்த , பின் இடத்தில், அப்பனே, எடுத்துரைத்தால், அப்பனே, எதற்கு அப்பனே, சக்திகளும், அப்பனே அழியாதப்பா, அழியாது.
குருநாதர் :- இதனால்தான், அப்பனே, சுவடிகள் எல்லாம், அப்பனே, நிச்சயம், எங்கெல்லாம், அப்பனே, கிரகங்கள் தாக்கம் இல்லையோ, அங்கெல்லாம் எழுதி, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, பின் அப்படியே யாங்கள் வைத்திருந்தோம் என்போம். அப்பனே. ஆனாலும், இன்றளவும் அதை, நிச்சயம், எங்கெங்கோ பயன்படுத்தி, அப்பனே. புது புதிதாக.
சுவடி ஓதும் மைந்தன் :- ("கிரகங்களோட தாக்கம் எங்கெல்லாம் இல்லையோ, அந்த மாதிரி இடங்களைத் தேடித்தான் ஓலைச் சுவடிகளை எழுதி வச்சாங்க. அதனாலதான் அந்தச் சுவடிகள் எல்லாம் அழியாம அப்படியே இருக்கு. அதே மாதிரி, எந்தெந்த இடத்துல என்னென்ன சக்திகள் இருக்கோ, அந்தந்த இடத்துல நின்னு சொன்னா மட்டும்தான் அந்த வாக்குகள் பலிக்கும், அதுதான் சரியாவும் வரும். அந்த இடத்தோட சக்திதான் அந்த வார்த்தைகளுக்குத் தனி மரியாதையைக் கொடுக்குது.")
================================
# அவன் அருளாலே , அவன் தாள் வணங்கி…
# ஈசன் கிருபையாலே, இங்கு வாக்குகள் வருகின்றது
================================
குருநாதர் :- அப்பனே, நலங்களாகவே இதனால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட இவையும், அப்பனே, பின் ஈசன் கிருபையாலே, அப்பனே, அனைத்தும் நடக்கின்றது.
சுவடி ஓதும் மைந்தன் :- இதுவும் இங்க உட்கார்ந்து வந்து, ஈசன் அருள் இல்லாம இங்க உட்கார முடியுமா? நம்மளால முடியாது.
குருநாதர் :- அப்பனே, நல்விதமாக இதனால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட எவை என்று அறிய. அப்பனே, நிச்சயம், தன்னில் கூட மனிதன், அப்பனே, மனிதன், அப்பனே, உண்மை நிலை தெரிந்து கொள்ளவில்லை. அதனால்தான், அப்பனே, இப்படி வாழ்கின்றான்.
குருநாதர் :- அப்பனே, கற்றுக் கொடுத்துவிட்டார்கள். அப்பனே, நிச்சயம், தன்னில் கூட இப்படி வாழ்ந்தால் எதை என்று புரியும். அப்பனே, நிச்சயம், தன்னில் கூட
சுவடி ஓதும் மைந்தன் :- ( மனுஷனே மனுஷனுக்குத் தீமையைக் கத்துக் கொடுத்து, இன்னைக்கு இப்படி ஒரு நிலைமையை உருவாக்கிட்டான்.)
குருநாதர் :- அப்பனே, கலியுகத்தில் மனிதன் அழிய வேண்டும் என்பது விதி. ஆனாலும், அப்பனே, இவ்வாறு, அப்பனே, பின் அழிய வேண்டும் என்றால், தீவைத்தான் பின் கற்பிக்க வேண்டும் என்பது விதி.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், தன்னை ஒரு தாய் தந்தை. அப்பனே, நிச்சயம், தன் பிள்ளைக்கு, அப்பனே, எப்படி எதை என்று, அப்பனே, பின் முதல்லயே கற்றுக் கொடுத்துவிட்டால், அப்பனே, நன்றாகும்.
குருநாதர் :- ஆனாலும், அப்பனே, இவ்வாறாக விட்டு விட்டு விட்டு இருந்தால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட சித்தர்களும் இல்லை, கடவுளும் இல்லை என்று பொய் என்று சொல்லிவிட்டு இருப்பார்கள் என்பேன். அப்பனே, அதனால்தான், அப்பனே, யாங்கள், அப்பனே, விடவில்லை என்பேன். அப்பனே, இவ்வளவு எதை என்று, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- ("இன்னும் கொஞ்சக் காலம் போனா, 'இறைவன் இல்லை, சித்தர்கள் எல்லாம் பொய்'னு சொல்ற அளவுக்கு உலகம் மாறிடும்னு சித்தர்களுக்குத் தெரியும். அதனாலதான் நாங்க என்ன பண்றோம்னா, அந்தந்த காலகட்டத்துல நாங்களே மனுஷங்க ரூபத்துல அவதரிச்சு வர்றோம். வந்து, எந்த நேரத்துல எதைச் செஞ்சு மனுஷங்களை நல்வழிப்படுத்தணுமோ, அப்படிச் செஞ்சு அவங்க எண்ணங்களை மாத்தி, சரியான பாதைக்குக் கொண்டு வர்றோம்.")
====================================
# வாக்குகள் பின் வரும் சந்ததிகளுக்கு நன்றாக பயன்படும்.
====================================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பின் எவை என்று புரியும். அப்பனே, நிச்சயம், அப்பனே, எவை என்று புரிய அப்பனே, இதனால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. இவை, இவை அப்பனே, பின் வரும் சந்ததிகளுக்கு அழகாக பயன்படும் என்பேன் அப்பனே.
குருநாதர் :- அப்பனே, திருவாசகத்தை, அப்பனே, நிச்சயம், இப்படி கூட ஓதிக்கொண்டுதான் இருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- ( "திருவாசகம் எப்போ எழுதப்பட்டதுன்னு யோசிச்சுப் பாருங்க? அது ஒரு சாதாரண இடத்துல பிறக்கல, மிகப்பெரிய சக்தியான இடத்துல இருந்து உருவானது. அப்படி ஒரு பவர்ஃபுல் இடத்துல எழுதப்பட்டதுனாலதான், இத்தனை வருஷம் கழிச்சு இப்ப கூட நாம அதை விடாம படிச்சுட்டு இருக்கோம். சக்தியான இடத்துல வர்ற வாக்கு என்னைக்குமே அழியாதுங்கிறதுக்கு திருவாசகமே ஒரு பெரிய சாட்சி." )
குருநாதர் :- இதனாலதான், அப்பனே, எங்கு எதை என்று அறிய அப்பனே, பின் நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, ஒருவன், அப்பனே, பின் எப்படி உயர்ந்தவன் ஆகின்றான்? அப்பனே, எப்படி தாழ்ந்து நிற்கின்றான்? என்பதெல்லாம், அப்பனே, நிச்சயம், முன் முன்னுரைத்த, அப்பனே, பின் வாக்கிலே நான் தெரிவித்து விட்டேன்.
குருநாதர் :- அப்பனே, இதனால், அப்பனே, இன்னும் கிரகங்கள் பற்றியும் கூட, அப்பனே, எவ்வாறு எதை என்று, அப்பனே, பின் எப்படி நீ எவை என்று அப்பனே, பிறக்கின்றாய்? எப்படி பின் நிச்சயம் நடக்கின்றாய்? எப்படி எல்லாம், அப்பனே, பின் அப்பனே, உயிர் எங்கு இருக்கின்றது என்பதெல்லாம், அப்பனே, தெரிவிக்கின்றேன் அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. இவையெல்லாம் தெரிந்துவிட்டால், அப்பனே, உடனே நீ வெல்லலாம்.
குருநாதர் :- அப்பனே, இப்படியே நன்றாக இரு என்று ஆசீர்வதித்து கொடுத்து விடுவேன். அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, பின் ஆனால் ஒன்றும் தெரியாமல், அப்பனே, கொடுத்தால் என்ன பயன்?
சுவடி ஓதும் மைந்தன் :- ("இப்பவே உன்னை பார்த்து 'நீ நல்லா இருப்ப'ன்னு நான் சொன்னா, அது நடந்துடும், நீயும் நல்லா ஆகிடுவ. ஆனா, உனக்கு எதுவுமே தெரியாம, எந்தப் புரிதலும் இல்லாம நான் எதைக் கொடுத்தாலும் அதனால ஒரு பிரயோஜனமுமே இல்லப்பா. கஷ்டப்பட்டு எதையும் கத்துக்காம வர்ற நல்லது நிலைக்காது. வாழ்க்கைன்னா என்ன, உண்மைன்னா என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு நீ எதையும் வாங்கிக்கிட்டாதான் அது உனக்கு உருப்படியா இருக்கும்னு அவர் சொல்றாரு.")
========================================
# துன்பம் ஒன்று இருந்தால்தான், மிகப்பெரிய இன்பத்தையும் காண முடியும், வெற்றியும் காண முடியும்.
========================================
குருநாதர் :- அதனாலதான், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட துன்பம் ஒன்று இருந்தால்தான், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, பின் மிகப்பெரிய இன்பத்தையும் காண முடியும், வெற்றியும் காண முடியும்.
சுவடி ஓதும் மைந்தன் :- துன்பம் ஒன்று இருந்தால் மட்டும்தான் பெரிய பெரிய வெற்றி காண முடியும். பெரிய வெற்றியை காண முடியும்.
குருநாதர் :- அப்பனே, இன்பமே கண்டிருந்தோர், அப்பனே, எப்படி பின் நிச்சயம் தன்னை பெரிய வெற்றியை காண முடியும்?
சுவடி ஓதும் மைந்தன் :- இன்பம் மட்டும் கண்டுகொண்டிருந்தால் எப்படி பெரிய வெற்றியை காண முடியும்?
குருநாதர் :- அப்பனே, அப்படி இறைவன் கொடுத்தாலும் அனைவரையும் கெடுத்து விடுவான்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்படி இறைவனே கொடுத்துவிட்டாலும் மற்றவங்க கெடுத்து விடுவாங்க. மற்றவங்க எல்லாம் வந்து கெட்டுருவாங்கன்றார்.
==================================
# கூட்டுப்பிரார்தனையில் இருந்த அனைவருக்கும் ஆசிகள்
==================================
குருநாதர் :- அப்பனே, பரிசுத்தமான ஆசிகள் என்பேன். அப்பனே, நிச்சயம், தன்னில் கூட.
==================================
# அனைவருக்கும் நால்வர்கள் ஆசிகள்
==================================
குருநாதர் :- பின் அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பன் நல்விதமாக நால்வர்களும் வந்து ஆசீர்வதித்து விட்டனர் என்பேன் அப்பனே. நல்விதமாக இதனால், அப்பனே, நல்முறையாகவே, அப்பனே, இன்னும் வெற்றிகள் உண்டு.
குருநாதர் :- அனைவருக்குமே, அப்பனே, யான் தருகின்றேன். அப்பனே, கவலை விடுங்கள் அப்பனே, நிச்சயம்.
குருநாதர் :- ஒவ்வொரு அப்பனே, பின் ஒவ்வொருவருக்கும், அப்பனே, பின் அதாவது இவ்வுலகத்தில் பிறந்த அனைவருக்குமே பிரச்சனைகள் உண்டுதான், உண்டுதான். ஆனால், அப்பன் கவலைகள் இல்லை அப்பனே.
குருநாதர் :- நல்விதமாக ஈசனை நினைத்து வேண்டிக்கொள்ளுங்கள் அப்பனே, சரியாகும் என்பேன் அப்பனே.
குருநாதர் :- இத்தலம் மிகச் சிறப்பு வாய்ந்தது என்பேன் அப்பனே, நிச்சயம், தன்னில் கூட.
குருநாதர் :- பின் இடையிடையே, அப்பனே, நீர்நிலைகளில், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, நீராடி, அப்பனே, நிச்சயம், தன் துன்பத்தை போக்கிக் கொள்ளுங்கள் என்பேன் அப்பனே. உயர்ந்த அப்பனே, பின் இடத்தையும் உங்களை நிச்சயம் இறைவன் அழைத்துச் செல்வான் என்பேன் அப்பனே நிச்சயம்.
குருநாதர் :- பின் அதாவது, பின் மற்றவர்களுக்காக, அப்பனே, பின் திருவாசகத்தை பாடி, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, முடிவு செய்யுங்கள் என்பேன் அப்பனே.
குருநாதர் :- மீண்டும், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, சந்திப்போம். நிச்சயம், மீண்டும் வாக்குகள் , பின் எதை என்று கூற இன்னும் சித்தர்கள் வருவார்களப்பா.
குருநாதர் :- ஏராளமான உண்மைகளை தெரிவிப்பார்களப்பா. உண்மைகளை தெரிந்து கொண்டு, அப்பனே நீங்களும், அப்பனே, பின் உங்களை காத்து, அப்பனே, மற்றவர்களையும் காத்து, அப்பன், நிச்சயம், தன்னில் கூட.
குருநாதர் :- என்னென்ன எதை என்று அறிய, அப்பனே, பின் பல மூலிகைகள் பற்றி சொல்லித் தருகின்றேன் அப்பனே.
குருநாதர் :- பின் பல மந்திரங்கள் கூட, அப்பனே, பின் நிச்சயம் சொல்லித் தருகின்றேன் அப்பனே. ஆனால் முதன்மை, பின் என்னவோ அதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே.
குருநாதர் :- ஆசிகள், ஆசிகள், அப்பா. மற்றொரு தலத்திலும் எடுத்துரைக்கின்றேன். ஆசிகள், ஆசிகள்,
அடியவர் :- இதுல அகத்திய பெருமான் அடிக்கடி இந்த இறைவனை பாடச் சொல்லி சொல்றேன். இதுல அகத்திய பெருமான் அருளிய சண்முக சடாச்சரத்தின் மகிமை கொஞ்சம் கேட்டு சொல்லுங்க. ?
குருநாதர் :- அப்பனே, இதைப்பற்றி எங்கு சொல்ல வேண்டுமோ, அங்கு சொல்கின்றேன். அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப இங்க சொல்லிட்டேன். அடுத்து எங்க சொல்லணுமோ, அதை நான் சொல்றேன்பா.
அடியவர் :- ( …………..)
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், தன்னில் கூட அதை எழுதி வா. அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. அப்பனே, அப்படியே, அப்பனே, சொல்கின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- உங்களுக்கு ஒரு டெஸ்ட் கொடுத்திருக்காரு. நீங்க அதை எழுதிட்டு வான்னு சொல்லிட்டாரு. ஐயா, எழுதிட்டு வாங்க. அதை எழுதிட்டு வான்றார். அது என்ன பண்ணனும்னோ, அதை சொல்லுவார்.
அடியவர் :- அது மாதிரி இன்னும் ஒன்று, முருகப்பெருமான் மூல மந்திரம் இருக்கு. கந்த குரு கவசத்தில், அதுவும் இந்த கலிகாலத்துல வந்து அதை ஜெபிக்கிறதுனால….
==============================
# மந்திரங்கள் இவ்வுலகத்தை காப்பதற்கே.
==============================
குருநாதர் :- அப்பனே, அனைத்தும் காப்பதற்கும், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. அப்பனே, அனைத்தும், அப்பனே, மந்திரங்கள் , அப்பனே, இவ்வுலகத்தை காப்பதற்கே.
குருநாதர் :- ஆனாலும், அப்பனே, நிச்சயம், அதை உயிர் யாங்கள், அப்பனே, தருவோம் என்போம் அப்பனே நிச்சயம், தன்னில் கூட. என்னென்ன தோன்றுகிறதோ, அவையெல்லாம் எழுதிக்கொண்டு வா அப்பனே, பின் எவை என்று. அப்பனே, பின் அதனைப் பற்றி, பின் உயிர் எவ்வாறு கொடுப்பது என்பதெல்லாம், அப்பனே, தெரிவிக்கின்றேன். ஆசிகள், ஆசிகள்,
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாத்துக்கும் என்ன பண்ணனும்? உயிர் கொடுத்தாதான் உண்டு.
குருநாதர் :- அப்பனே, சுவடிகளில் அவ்வாறுதான் யாங்கள் உயிர் கொடுத்து எவை என்று வைத்திருந்தோம். அப்பனே, நிச்சயம், மனிதன், அப்பனே, தவறாக பயன்படுத்தியதால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட என்ன விளைவு?
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாத்துக்கும் உயிர் இருக்குது.
குருநாதர் :- அப்பனே, இப்பொழுது திருவாசகத்திற்கு, அப்பனே, அவ்வளவு உயிர். அதனால்தான், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட
சுவடி ஓதும் மைந்தன் :- இப்பொழுது திருவாசகத்திற்கு அவ்வளவு உயிர்.
குருநாதர் :- அப்பனே, இன்னும், அப்பனே, பின் நிச்சயம், தன்னில் கொடுக்கின்றேன். அப்பனே, நலமாக. ஆசிகள், இப்பொழுது போதும். அப்பா. ஆசிகள், ஆசிகள்,
சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப போதும். திருவாசகம் பாட சொல்றார்.
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 29.1.2026 அன்று திருக்கேதீஸ்வரதில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு நிறைவு அடைந்தது)
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
