அன்புடன் அகத்திய மாமுனிவர் பெங்களூர் சத்சங்கம் - 12.November.2024 - பகுதி 6
ஆதி முதல்வனை மனதில் எண்ணி செப்புகின்றேன், அகத்தியன்.
( இவ் தொடர் வாக்கின்- 6 ஆம் பகுதி - குருநாதர் வாக்குகளை மட்டும் இப்போது பார்ப்போம் )
குருநாதர் :- நிச்சயம், பல பிறவிகள் எடுத்து எடுத்து வந்தால்தான், நிச்சயம் சித்தர்களையும் காண முடியும்.
குருநாதர் :- அறிந்து கூட, பல பிறவிகள் எடுத்து, மீண்டும் மீண்டும் வரவேண்டும். அப்பொழுதுதான் அகத்தினை அறிவான்.
குருநாதர் :-அதனாலதான், தாயே, என்னை யானே, இவ்வுலகத்தை காண்பிக்கப் போகின்றேன் இன்னும்.
அடியவர் :- அவரே காமிச்சுக்கிறார்.
சுவடி ஓதும் மைந்தன் :- கரெக்ட்.
குருநாதர் :- அறிந்தும் எதை என்றும் புரிந்து, புரிந்தும், பின் அனைவரும் எவை என்று அறிய அறிய, அகத்தின் ஏதோ பின் நிச்சயம் செய்வான் என்றுதான் வந்திருக்கின்றீர்கள். ஆனால், நிச்சயம் யான் செய்யப் போவதில்லை. நீங்கள் அன்பை தாருங்கள். செய்கின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( “எல்லாரும் அகத்தியர் செய்வாரு, செய்வாரு என்று சொல்கிறார்கள். ஆனால் நான் செய்ய மாட்டேன் என்று சொல்கிறேன். அப்படின்னு அவர் என்ன கேட்கிறார் தெரியுமா? உங்களிடத்தில் அன்பை மட்டுமே கேட்கிறார். அன்பை மட்டுமே கேட்கிறார். அவர் பணம் கேட்கவில்லை, சாப்பாடு கேட்கவில்லை, வேறு எதுவும் கேட்கவில்லை. அவர் வந்து கேட்பது அன்பு தான். )
அடியவர் :- அன்பு தான் கேக்குறாரு.
சுவடி ஓதும் மைந்தன் :- அன்பு தான் கேக்குறாரு. அதை கொடுத்தாவே போதும்ன்றார்.
குருநாதர் :- அப்பனே, நல்முறையாகவே பின் அனைத்தும் யான் செய்வேன். அப்பா,
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த அன்பு மட்டும் போதும். எனக்கு நினைச்சாவே போதும்ன்றார்.
குருநாதர் :- அறிந்தும் பின் அந்த அன்பு செலுத்துவதற்கும் புண்ணியங்கள் வேண்டும் என்பேன் அப்பனே. அப் புண்ணியங்கள் நிச்சயம் உங்களிடம் தேங்கி இருக்கின்றது.
சுவடி ஓதும் மைந்தன் :- அவ் அன்பு செலுத்தவும் உங்களுக்கு புண்ணியம் வேணும். ஆனால், உங்களிடத்தில் அந்த புண்ணியம் இருக்குதுன்றார்.
குருநாதர் :- இதை என்று அறிய அறிய, இதை விட்டுவிட்டு, நிச்சயம் பிள்ளைகள் எவையென்று கூட வாழ வேண்டும். இன்னும் பின் மனைவிகள், பின் அறிந்து கூட, பின் இன்னும் இல்லத்தில் பிரச்சனைகள் எதை என்றும் அறிந்து கூட. ஆனால், அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் நீங்களே.
சுவடி ஓதும் மைந்தன் :- ( “எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் நீங்கள்தான் என்று சொல்கிறார். இருந்தாலும், நீங்கள் அன்பை மட்டும் செலுத்துங்கள். உங்களுக்கு தெரியாமல் தவறு நடந்தாலும், சொல்லிக் கொடுக்க யாரும் இல்லாததால் அன்பு தான் முக்கியம். மீதியெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். )
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் என் சீடர்களிடத்தில் அப்பனே மறைமுகமாக இருக்கின்றார்கள். அப்பா, பண புண்ணியங்களை அவரிடத்தில் சேர்த்து வைத்துள்ள, சேர்த்து சேர்த்து வைத்துள்ளார்கள். அப்பனே, யான் சொல்லி சொல்லி அப்புண்ணியத்தை உங்களிடம் யான் கொடுக்கின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( “அகத்தியனுக்கு பல சீடர்கள் இருக்கிறார்கள். ஆனால் யாருக்கும் தெரியாது, நமக்கும் தெரியாது. அதனால், நீங்கள் அன்பை மட்டும் செலுத்துங்கள். என் சீடர்கள் மூலம் புண்ணியங்களை கொடுக்கின்றேன், அன்போடு முன்னேறுங்கள். )
குருநாதர் :- அப்பனே, புண்ணியங்கள் இல்லாமல் ஒன்றும் செய்ய இயலாது. அப்பா,
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த புண்ணியங்கள் இல்லாம ஒன்னும் செய்ய இயலாது. அப்பா,
குருநாதர் :- அப்பனே, உடனடியாக புண்ணியங்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமானாலும் முடியாது அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- உடனடியாகவும் புண்ணியம் முடியாது என்றார்.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், நிச்சயம் அறிந்து கூட எங்களை உணர்ந்து கொள்ளவே இவ்வுலகத்தில் ஆள் இல்லை அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- சித்தர்களை உணர்ந்து கொள்வதே ஆள் இல்லை. அப்பா,
குருநாதர் :- அதனாலதான் அப்பனே யான் சித்தன் ஆகின்றேன் என்று.
குருநாதர் :- அப்பனே, ஒரு சித்தன் என்பவன் ஞானி என்பவன் நீரிலில் நடப்பான் என்பேன். அப்பனே, நிச்சயம், அப்பனே, நெருப்பிலில் நடப்பான் என்பேன். அப்பனே, ஆகாயத்திலும் பரப்பான் என்பேன். அப்பனே, நிச்சயம், அப்பனே, இங்கே இருப்பான். அப்பனே, இன்னும், அப்பனே, பல மைல் தொலைவில் கூட இருப்பான் என்பேன். அப்பனே, ஆனால், அப்பனே, மனிதனால் முடியுமா? அப்பா, நிச்சயம் முடியாது. அப்பா, ஆனால், மனிதர்கள் பின் நீங்களும் சித்தர்கள் ஆகுவார்கள் என்று ஏமாற்றி பணம் பறித்துக் கொண்டிருக்கின்றார்கள். அப்பா,
சுவடி ஓதும் மைந்தன் :- ( “சித்தன் என்பவர் ஞானி; அவர் நீரில் நடப்பார், நெருப்பில் நடப்பார், ஆகாயத்தில் பரப்பார். அவர் இங்கேயும் இருப்பார், பல மைல் தொலைவில் இருப்பார். ஆனால் மனிதனால் இவை முடியாது. மனிதர்கள் சித்தர்கள் ஆகுவார்கள் என்று ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள். )
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், அப்பனே, உங்களுக்கு எங்க புத்தி போனது?
அடியவர் :- புரிஞ்சுக்கணும், புரிஞ்சுக்கணும்.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், அதனால்தான் முதலில் உங்களை நீங்கள் அறியுங்கள் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- ( “அதனால்தான் நான் சொல்கிறேன் — முதலில், நீங்க யாருன்னு நீங்களே தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுடைய வாழ்க்கை, உங்களுடைய வரலாறு, உங்களுடைய உள்ளார்ந்த நிலை பற்றி அறிய வேண்டும். ஏனெனில், பல பிறவிகளில் பேய் போலவும், பல வடிவங்களிலும் வந்து வாழ்ந்திருக்கிறீர்கள். அதனால், உங்களையே முதலில் அறிந்து கொள்ள வேண்டும். ஏன் என்றால், அதுவே உண்மையான தொடக்கம். )
அடியவர் :- மதுரை வாக்குல சொல்லி இருந்தீங்க? நான் உன்னுடைய பூர்வ ஜென்மத்தை பத்தி சொல்லுவேன்.
குருநாதர் :- தாயே, பின் அனைவருமே இப்படி அமர்ந்திருக்கின்றார்கள். நீ மட்டும் அங்கு (பின்னால்) அமர்ந்திருக்கின்றாயே. இது நியாயமா. ?
குருநாதர் :- தாயே, இதைப்பற்றி நீ சொல்ல வேண்டும்.
அடியவர்:- எனக்கு கால் வலி கொஞ்சம் இருக்கிறதுனால…..
குருநாதர் :- தாயே, பின் உன்னை விட இங்கு மூத்தவன் ஒன்று ஒன்று உள்ளது. நிச்சயம், பின் நிச்சயம், பின் அறிந்தும் கூட
சுவடி ஓதும் மைந்தன் :- ( “உங்களை விட இங்கே மூத்தவர் இல்லை என்று சொல்கிறார்கள். ஏய், உங்களுக்கு கால் வலி இல்லையா? அதனால் தான் உங்களுக்கு கால் வலி எடுக்கலாமா என்று கேட்கிறார். )
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால, நீங்க ஏன் உட்கார்ந்து கேள்வி கேக்குறாங்க?
குருநாதர் :- எவை என்ற அறிய, நிச்சயம் உண்டு. பொறுத்தாக வேண்டும், தாயே.
குருநாதர் :- தாயே, நிற்பதும் கூட, நிச்சயம் ஒரு கலையே.
குருநாதர் :- தாயே, பின் உட்கார்ந்து நிற்பதும் ஒரு கலையே.
குருநாதர் :- தாயே, பின் எவை? பின் எவை என்று அறிய, அறிய, நிச்சயம். பின் அவை இவை வலிக்கிறது என்று ஏன் உணர்வீர்கள்? உணர்கின்றீர்கள்? நீங்கள் நிச்சயம் இவையும் சோம்பேரித்தனமே.
சுவடி ஓதும் மைந்தன் :- ( “எனக்கு கால் வலிக்குது, கை வலிக்குது என்று சொல்கிறீர்கள். ஆனால், அது சோம்பேறித்தனமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. வலி என்றால் வலி தான் — கால் வலிக்குது என்றால் கால் வலிக்குது, கை வலிக்குது என்றால் கை வலிக்குது. அதற்கு மேல் எதுவும் இல்லை. இதை சோம்பேறித்தனமாகக் கருத வேண்டாம். )
குருநாதர் :- தாயே, இதனால் நிச்சயம் உன் நிலைமை அதுபோல். அதனால், அப்படியே பழக்கம் ஏற்பட்டுவிட்டது.
சுவடி ஓதும் மைந்தன் :- ( “உன் நிலைமை அப்படித்தான் இருக்கிறதா? அதனால், நீங்கள் நல்ல வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு உள்ளீர்கள். தவறாக நினைக்க வேண்டாம். அந்த பழக்கம் உனக்கு வந்துவிட்டது என்று அவர் சொல்கிறார். )
குருநாதர் :- ஆனாலும், கவலைகள் இல்லை. தாயே, அமருங்கள்.
குருநாதர் :- தாயே, எதை என்று புரிய, புரிய, நிச்சயம். இன்னும் பின் அறிந்து கூட எதையாவது செப்பு. அனைவருக்கும்
அடியவர் :- அகத்தியரை சரணாகதி அடைஞ்சு, அவர்கிட்ட அன்பு காமிக்கணும். அன்பு தான் வேற ஒன்னும் இல்ல.
குருநாதர் :- தாயே, அப்பொழுது இத்தனை நாட்கள் நீ அன்பு காட்டவில்லையா?
அடியவர் :- ( “உண்மைதான் — அன்பு இல்லை. ஆனால், அவருடைய கருணையால்தான் அவரை நேசித்து வந்தேன். நிஜமாகவே மனதின் ஆழத்திலிருந்து அன்பு எனக்கு வந்தது போல தெரியவில்லை. ஆனால் இப்போது அந்த உணர்வு எனக்கு இருக்கிறது. )
குருநாதர் :- தாயே, அறிந்து கூட இவ்வாறு அன்பு செலுத்தி விட்டாலே போதுமானது. அனைத்தும் யான் செய்து விடுவேன். உங்கள் இல்லம் இல்லம் தேடி வந்து, அனைத்தும் யான் செய்வேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( “அதனால்தான் அன்பை காட்டினாலே . ‘போதும்’ என்றார் அகத்தியர். அவர் உங்களுடைய வீட்டைத் தேடி வருவார். அப்போது நீங்கள் அங்கே கேட்டுக் கொள்ளலாம் என்றார். புரியுதுங்களா? )
குருநாதர் :- அப்பனே, அறிந்து கூட இதனால், அப்பனே, நிச்சயம் அப்பனே. நன்முறைகளாகவே அனைவருக்கும் பின் சில கர்மாக்கள் இருக்கின்றதப்பா. அனைத்தும் ஒழித்திடுவேன் அப்பனே.
=============================================
# மகத்தான புண்ணியங்கள் தரும் நவகிரக தீபம்
=============================================
===============================================
# நவகிரக தீபம் - சில கிரக பிரச்சனைகள் தீர்ப்பதற்கு
===============================================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் அறிந்து கூட சில கிரக பிரச்சனைகள் கூட. அப்பனே, இதை தீர்ப்பதற்கு, அப்பனே, ஒரு உபாயம் சொல்கின்றேன். அப்பனே, நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( “எல்லாருக்கும் ஒரு கிரகத்தோட பிரச்சனை இருக்கிறது. கிரகங்களால்தான் எல்லாருக்கும் பிரச்சனை. அதற்கான ஒரு உபாயம் நான் சொல்கிறேன். நான் சொல்லாததை கூட கவனமாகக் கேட்டு, பதிவு செய்து கொள்ளுங்கள். அது ஒரு பொதுவான வழிகாட்டியாக இருக்கும். )
=================================================
# ஒரு பட்டுத் துணியை மஞ்சள் தண்ணீர் நனையுங்கள்
=================================================
குருநாதர் :- அப்பனே, நன்றாகவே. அப்பனே, பின் அதாவது சரியாகவே அப்பனே. ஒரு பட்டி பட்டுத் துணியை அப்பனே, நல்விதமாகவே. அப்பனே, பின் அதாவது தூய மஞ்சளை அப்பனே, இட்டு பின் நனையுங்கள் நீர்னாலே.
சுவடி ஓதும் மைந்தன் :- ( “நல்ல ஒரு பட்டுத் துணியை எடுத்துக் கொண்டு, அதில் மஞ்சள் தண்ணீர் ஊற்றி நன்றாக மூழ்கடிக்க வேண்டும் என்று அவர் சொல்கிறார். )
குருநாதர் :- அறிந்தும் கூட அதை கீழே வையுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( “அந்த பட்டுத் துணியை விரித்து பரப்ப வேண்டும் என்று அவர் சொல்கிறார். மஞ்சள் துணி — அதில் மஞ்சள் போட்டு நன்றாக செய்து, அதை விரித்து பரப்ப வேண்டும் என்று கூறுகிறார். )
========================================
# பட்டுத் துணி அதன் மேலே வெற்றிலை பார்க்கும் கூட.
========================================
குருநாதர் :- தாயே, நிச்சயம் பின் இதை என்று அறிய, அறிய பின் அதன் மேலே வெற்றிலை பார்க்கும் கூட.
========================================
# வெற்றிலை பாக்கு , அதன் மேலே வெற்றிலை கோதுமை
========================================
குருநாதர் :- அறிந்தும் கூட, நிச்சயம் பின் உதாரணத்துக்கு, பின் சூரியனுக்கான பின் எவை என்று அறிய, அறிய தானியம். நீங்களே சொல்லுங்கள்.
அடியவர் :- கோதுமை
குருநாதர் :- அறிந்தும் கூட அதை பரப்புங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த வெத்தலை பாக்கு, வெத்தலை பாக்கு மேல கோதுமை பரப்பணும்.
=========================================
# இதன் மேலே பின் தீபம் வையுங்கள்.
=========================================
குருநாதர் :- அறிந்தும் இதை என்று புரிய, நிச்சயம் பின் இதன் மேலே பின் தீபம் வையுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதன் மேல கோதுமைல தீபம் வைக்கணும். வெத்தலை பாக்கு வச்சிட்டு கோதுமை இலகு இலையை வைக்கணும்.
=========================================
# இப்போது இதனை சூரிய தீபமாக நினைத்துக் கொள்ள வேண்டும்.
=========================================
குருநாதர் :- அறிந்தும் இதைத்தன் சூரியனாக அதை நினைத்துக் கொள்ள வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, அந்த தீபத்தை யார் நினைத்துக் கொள்ளனும்? சூரியனாக நினைத்துக் கொள்ள வேண்டும்.
குருநாதர் :- அறிந்தும் இதை என்று பயன்படுத்த, நிச்சயம் பின் அறிந்து கூட ஜோதியை.
சுவடி ஓதும் மைந்தன் :- ( “அப்ப, பற்றவைங்க. புரிகிறதா? பற்றவைங்க. ஐயா, இது எல்லாவற்றுக்கும், எல்லோருக்கும் பொதுவான வழி. இது ஒரு பொது ஜெனரல். )
=================================================
# தீபத்தில் - கிராம்பு , ஏலக்காய் , பச்சை கற்பூரம் - மாவாக்கி இடவேண்டும்
=================================================
=================================================
# சூரிய காயத்ரி மந்திரங்கள் கூட 108 முறை செப்புங்கள்.
=================================================
குருநாதர் :- அப்பனே, நன்றாகவே இவை என்று அறிந்தும் இதைத்தன் பின் உண்மை என புரிந்தும் கூட, நிச்சயம் தன்னில் கூட. பின் அதாவது, பின் அதாவது கிராம்பையும் கூட நல்விதமாகவே அறிந்தும் கூட. பின் பச்சை கற்பூரத்தையும் கூட, ஏலக்காயையும் கூட, நிச்சயம் பின் மாவாக்கி, நிச்சயம் பின் அத்தீபத்தில், பின் இட்டு, நிச்சயம் சூரியனுக்காக. பின் அதாவது காயத்ரி மந்திரங்கள் கூட 108 முறை செப்புங்கள்.
==================================================
# இதேபோல நவ கிரகங்களுக்கும் தீபங்கள் ஏற்ற வேண்டும்
==================================================
குருநாதர் :- இதேபோல் சந்திரனுக்கும், பின் குருவானவனுக்கும், ராகுவானவனுக்கும், கேதுவானவனுக்கும் நவதீபங்கள்.
அடியவர் :- ஒரே நாள்ல வைக்கணும் இல்ல, அது விசேஷமான நாளா? ( ஒரே நாளில் 9 தீபங்கள் ஏற்றி வழிபடவேண்டுமா ? அல்லது விசேஷமான நாளா?)
குருநாதர் :- எது என்று அறிய, அறிய தேர்ச்சி எவை என்று அறிய, அறிய பின் அதாவது பெறுவதற்கு, பின் அதாவது நிச்சயம், பின் தனித்தனியாக, நிச்சயம். பின் அதாவது ஒரே பாடத்தை எழுதலாமா?
சுவடி ஓதும் மைந்தன் :- ( தேர்ச்சி பெறுவதற்கு நிச்சயம், தனித்தனியாக செய்ய வேண்டும். ஆனால், அதே நேரத்தில் ஒரே பாடமாக எழுதலாமா?” )
அடியவர் :- அப்ப ஒரு ஒரு நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை
==================================
# அனைவருக்கும் வைக்கும் தேர்வு - நவகிரக தீபம்
==================================
குருநாதர் :- அறிந்து கூட, தாயே, இப்படியே செய்ய வேண்டும். அனுதினமும் இதனால்தான் முதலே சொன்னேன், அனைவருக்கும் ஒரு தேர்வை வைக்கின்றேன் என்று புரிகின்றதா?
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப முதலே சொல்லிட்டேன். இது எக்ஸாம், பாப்போம், நீங்க செய்றீங்களா இல்லையான்னு சொல்லிட்டு,
அடியவர் :- எவ்வளவு நாளைக்கு இது செய்யணும்?
குருநாதர் :- தாயே, நிச்சயம் செய்து கொண்டே வாருங்கள். நிச்சயம், தை மாசி வரை, தை மாசி வரை.
அடியவர் :- சரி, சரி,
========================================================
# இவ்வாக்கு உரைத்தபோது 2024 ஆம் ஆண்டு. அனால் இதனை தொடர்ந்து ஏற்ற நண்டு என்று வாக்கு பின்னை குருநாதர் உரைத்துள்ளார்கள். அடியவர்கள் இயந்தவரை வாழ்நாள் முழுவதும் செய்துகொண்டே இருக்கவும்.
=======================================================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், அப்பனே, எவை என்று ஒவ்வொரு நாளைக்கும் இதுபோல செய்ய வேண்டும்.
அடியவர் :- வீட்டுலயா? எங்க எங்க செய்யணும்? எல்லாத்தையுமே எங்க செய்யணும்?
குருநாதர் :- தாயே, அறிந்து கூட மருத்துவனிடம் செல்கின்றாய். இதை நிச்சயம் சாப்பிட வேண்டும் என்று சொல்கின்றார்கள். நிச்சயம், பின் எவ்வாறு என்பது, தாயே, இவையெல்லாம் கேள்விகளே இல்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- ( ஒரு மருத்துவர் வந்து எல்லாம் மாத்திரை சாப்பிடுங்க அன்று சொல்கின்றார். மாத்திரை சாப்பிட, நீங்க விட்டுருவீங்களா? )
குருநாதர் :- தாயே. ஆனாலும், நிச்சயம், பின் இதற்கு நிச்சயம் எவை என்று அறிய, இதனால் என்ன பலன் என்று கேட்கக்கூடாது.
அடியவர் :- சொல்றாங்க, செய்யணும்.
அடியவர் 2:- இப்ப ஒவ்வொரு கிரகத்துக்கும் தனி ஒவ்வொரு கலர் துணி இருக்கும் இல்லையா? அந்த மாதிரி வச்சு செய்யணுமா? இல்ல, எல்லாத்துக்கும்…
குருநாதர் :- எது என்று புரிய, புரிய, தாயே, நிச்சயம், பின் மஞ்சளிட்டும் எவை என்று அறிய, அறிய, தாயே, பின்பு எதை என்று அறிய, அறிய, தாயே, நிச்சயம், பின் இவையெல்லாம் உன் விருப்பத்திற்கு, அதாவது உங்களுடைய விருப்பத்திற்கு தகுந்தவாறு.
அடியவர் :- எப்படி ஒரு தீபம், விளக்குல ஒற்றை திரி, ஒரு திரி மட்டும் ஏத்தணுமா?
குருநாதர் :- தாயே, நிச்சயம், பின் இரட்டையாகவே வேண்டும்.
குருநாதர் :- தாயே, இதற்கும், பின் மண் சம்பந்தமான விளக்கையே தேர்ந்தெடுக்க வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( அகல் விளக்கு தான், மண் சம்பந்தப்பட்ட விளக்கையே தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு விளக்கு, ரெண்டு திரியை போட்டு, திரித்து. )
அடியவர் :- ஒரே காலத்துக்கு பண்ணுதா? அஸ்தமனம் பண்ணுதா? ( காலையில் அல்லது மாலையில் விளக்கு ஏற்ற வேண்டுமா ? )
===============================================
# சித்தனுக்கு, பின் நாள் எது? கோள் எது? நட்சத்திரம் எது? இரவு எது? பகல் எது?
===============================================
குருநாதர் :- தாயே, அறிந்து கூட எது என்று அறிய. அப்பனே, இங்கு ஒன்றை சொல்கின்றேன், அனைவருக்குமே, ஒரு சித்தனுக்கு, பின் நாள் எது? கோள் எது? நட்சத்திரம் எது? நிச்சயம், நன்மை எது? அதாவது இரவு எது? பகல் எது? நிச்சயம். எங்களுக்கு ஏதுமே இல்லையப்பா. அனைத்தும் நீங்கள் வைத்துக்கொண்டதுதான்.
குருநாதர் :- ஆனாலும், அப்பனே, அன்பிற்காக, அப்பனே, யான் ஏற்றுக்கொள்வேன்.
( அடியவர்கள் சில உரையாடல்கள் )
அடியவர் :- எல்லா நாளும் லேடீஸ் ஏத்த முடியாது இல்ல,
குருநாதர் :- தாயே? அதற்காகத்தான் ஒருவன் இருக்கின்றன உன்னிடத்தில்,
சுவடி ஓதும் மைந்தன் :- ( அம்மா உங்க வீட்டுக்காரர்)
அடியவர் :- யார் வேணா ஏத்தலாமா? இப்ப ஏன் அந்த தானியத்தை வந்து சேஞ்ச் பண்ணனும்?
குருநாதர் :- தாயே, அறிந்து கூட, இவைதன் கூட, உன்னுடைய இஷ்டமே
அடியவர் :- ஆனா, விளக்கு மட்டும் போட்டு, அந்த தானியத்தை அப்புறம் என்ன பண்றது? ஆத்துல விட்டுறதா? இல்ல, இல்ல, பரவி போட்டு,
குருநாதர் :- தாயே இன்னும் தேர்ச்சியை எவை என்று கூட, இன்னும் தேர்வே எழுதவில்லை.
அடியவர் :- ஒரு நாள், அப்படித்தான் டெய்லியே, அந்த மாதிரி சொல்லணும்,
குருநாதர் :- தாயே. நிச்சயமாக, சத்தியமாக,
சுவடி ஓதும் மைந்தன் :- ஒன்பது விளக்குனா, ஒன்பது விளக்கு, 108 வாட்டி சொல்லணும்,
========================================
# நவகிரக தீபம் வழிபாட்டில் பலன்கள் எதிர்பார்க்க கூடாது.
========================================
குருநாதர் :- தாயே. இதனைப் பற்றி போகப்போறேன், உங்களுக்கே புரியும். ஆனாலும், எதையும் பின், அதாவது பலன்கள் எதிர்பார்க்க கூடாது.
========================================
# நவகிரக தீபம் வழிபாட்டில் - எந்த ஞாபகமும் எங்கும் இருக்கக்கூடாது.
========================================
குருநாதர் :- தாயே. எந்த ஞாபகமும் எங்கும் இருக்கக்கூடாது.
சுவடி ஓதும் மைந்தன் :- ( எந்த ஞாபகமும் இருக்கக்கூடாது. அது ஏத்தும்போது, எந்த ஞாபகமும் இருக்கக்கூடாது. எந்த ஞாபகம் இல்லாமல் அந்த மந்திரம் மட்டும் தான் சொல்லணும். )
அடியவர் :- ( இப்ப ஒரு ஒரு நாளைக்கும், ஒரு ஒரு சித்தர்கள் போற்றி அது 108, அது சொல்லலாமான்னு கேட்கிறோம். )
குருநாதர் :- தாயே. பின் இவையெல்லாம், பின் நீ செப்பினாலும் சரி, செப்பாவிடனும் சரி.
சுவடி ஓதும் மைந்தன் :- இதெல்லாம் உன் இஷ்டம் தான் அம்மா. சொன்னாலும் சரி, சொல்லாவிட்டாலும் சரி.
குருநாதர் :- தாயே இதை நீ செப்பினாலே போதுமானதாம்மா.
========================================
# நவகிரக தீபம் வழிபாட்டில் - பிரதிபலன் நிச்சயம் எதிர்பார்க்கக் கூடாது.
========================================
குருநாதர் :- தாயே. இவற்றிற்கெல்லாம், பின் எதற்கு என்றெல்லாம் யார் வருங்காலத்தில் விவரிப்பேன் நிச்சயம். மீண்டும் மீண்டும், பின் நிச்சயம், பிரதிபலன், நிச்சயம், எதிர்பார்க்கக் கூடாது.
சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கு ஏற்றும் போது, மனதில் ஒன்னும் எதிர்பார்க்காம, இதை செய்யணும். )
அடியவர் :- அதே, அதே தானியத்தை, மிக்ஸ் பண்ணிக்கலாமா? எத்தனை மாத்திரம்?
குருநாதர் :- தாயே, நிச்சயம், பின் போக போக, உங்களுக்கே புரியும். எத்தனை மாத்திரம்? மாத்திரம் அல்ல, உங்களுக்கே புரிஞ்சுரும்மா. இதெல்லாம்
அடியவர் 1 :- அந்த ஒன்பது விளக்கு ஏத்துறேன். ஒன்பது விளக்கும் ஒரே காயத்ரி மந்திரம் சொல்லணுமா? வேற வேற சொல்லணுமா?
அடியவர் 2 :- இல்ல, அந்த அந்த அந்த கிரகத்துக்கு உண்டான காயத்ரி மந்திரம் சொல்லணுங்களா?
அடியவர் 3 :- அந்த அந்த அப்ப, இந்த வெத்தலையை, வெத்தலையை மாத்தணுமா?
சுவடி ஓதும் மைந்தன் :- ( மாற்ற வேண்டும். வாடிவிடும் அல்லவா? )
குருநாதர் :- அப்பனே. போக போக, நீங்களே புரிந்து கொள்வீர்கள். இதனைப் பற்றி
========================================
# பரிகாரம் என்று எண்ணக்கூடாது. தேர்வு என்று எழுத வேண்டும்.
========================================
குருநாதர் :- தாயே, இதை பரிகாரம் என்று எண்ணக்கூடாது. தேர்வு என்று எழுது,
சுவடி ஓதும் மைந்தன் :- (தேர்வு, எக்ஸாம், இது எக்ஸாம், பரிகாரம் எல்லாம் எண்ணக்கூடாது. வந்து, இது வந்து ஒரு எக்ஸாம், உங்களுக்கு. )
========================================
# நவகிரக தீபம் 1% - யான் உங்கள் இடத்திற்கு வருவேன்.
========================================
குருநாதர் :- தாயே, ஏன் எதற்கு? நிச்சயம், பின் ஒரு சதவீதத்தை மட்டும் சொல்கின்றேன். யான் உங்கள் இடத்திற்கு வருவேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( ஒரு சதவீதம் மட்டும் சொல்றேன். நான் வருவேன், 99% சொல்ல. உங்க வீட்டுக்கு நான் வருவேன். )
குருநாதர் :- ஏன் எதற்கு?
========================================
# நவகிரக தீபம் 2% - நீங்கள் சோம்பேறிகளா இல்லையா என்று யானும் வந்து பார்ப்பேன்.
========================================
குருநாதர் :- பின் இரண்டாவது சதவீதத்தை சொல்கின்றேன். நிச்சயம், பின் நீங்கள் சோம்பேறிகளா இல்லையா என்று யானும் வந்து பார்ப்பேன்.
அடியவர்:- ஐயா, இப்ப எங்கயாவது நம்ம டிராவல் பண்ணும்போது, அந்த இடத்துல வச்சு செய்யலாங்களா?
குருநாதர் :- தாயே, எதை என்று அறிய அறிய நிச்சயம், பின் இவையெல்லாம் சோம்பேரி தான் கேட்டுக் கொண்டிருப்பான்.
அடியவர் :- சோ, தை மாசி, ரெண்டு மாசம் பண்ணனும்.
குருநாதர் :- அறிந்து கூட, அப்பனே, நிச்சயம், 100% சொல்லிவிடுகின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆமாப்பா, இது விளையாட்டா சொல்றாரு. அவர் 100% நான் சொல்லிடுறேன்ப்பான்றாரு.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், அப்பனே, அறிந்து மறிந்து, ஒரு ஆசிரியன், ஒரு மாணவரிடம், நிச்சயம், இவை செய்துட்டு வா என்று சொன்னால், நிச்சயம், அதை செய்து வந்தால், அவன் ஆசிரியர் என்ன செய்வான்?
அடியவர் :- சந்தோஷம்,
சுவடி ஓதும் மைந்தன் :- ( பாஸ்மார்க் கொடுத்து விடுவார் ) .
குருநாதர் :- அவை கூட அனைவரும், அதாவது உங்களை பார்த்து, நியாயமாகவே கேட்கின்றேன். ஒரு வேலைக்கு செல்கின்றீர்கள். நிச்சயம், ஒரு தலைவன் சொல்கின்றான். அப்போது நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பீர்களா?
சுவடி ஓதும் மைந்தன் :- ( “நீங்கள் என்ன சம்பளத்துக்கு வேலைக்கு போகிறீர்கள்? ஏன் அதைச் செய்ய வேண்டும்? நான் ஏன் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் என்ன செய்வீர்கள்? அதே மாதிரி நீங்களும் செய்யுங்கள். மீதியை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். )
அடியவர் :- ( தீபம் நல்லெண்ணெயில / நெய்யில போடுங்க. எது என்று )
குருநாதர் :- தாயே, நிச்சயம். தாயே, பின் செய்வதெல்லாம், பின் நிச்சயம். பின் எப்படியாவது செய்யுங்கள்.
========================================
# நவகிரக தீபம் 3% - கிரகங்கள் தன் சுற்றுவற்றை, சுற்றுவட்ட பாதையில் இருந்து மாறப்போகின்றது. இதனால் பல மக்களுக்கும் கூட தொல்லை வரப்போகின்றது.
========================================
குருநாதர் :- ஏன் எதற்கு? பின் மூன்றாவது சதவீதம் சொல்கின்றேன். நிச்சயம், கிரகங்கள் தன் சுற்றுவற்றை, சுற்றுவட்ட பாதையிலிருந்து மாறப்போகின்றது. இதனால் பல மக்களுக்கும் கூட தொல்லை வரப்போகின்றது.
குருநாதர் :- பின் நிச்சயம், அதாவது பின் வளி மண்டலத்தில், பின் ஒரு நேர்கோட்டில் தான் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் அனைத்தும் நடக்கும். ஆனால் அதிலிருந்து பிரியப்போகின்றது.
குருநாதர் :- ஆனாலும், இதனால் என்ன பயன் என்று நீங்கள் கேட்கக்கூடாது.
அடியவர் :- நாங்க கேட்க மாட்டோம்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆனா இதனால் என்ன பயன்? அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? கேட்கக்கூடாது.
குருநாதர் :- பின் உரைப்பேன். இதனைப் பற்றி
குருநாதர் :- அறிந்து கூட, இது உங்களுக்காக மட்டுமல்ல.
சுவடி ஓதும் மைந்தன் :- இது உலகத்துக்காக. இது உங்களுக்கு மட்டும் இல்ல. இது உலக நன்மைக்காக.
குருநாதர் :- அறிந்தும் எதை என்று புரிந்தும் கூட, சூரியனின் பின் ஈர்க்கும் சக்தி, நிச்சயம் எதை என்று அறியறிய. தாயே, சொல்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( சூரியன் ஈர்க்கும் சக்தி அது என்ன தானியம்? )
அடியவர் :- கோதுமை.
======================
# தீபத்தின் சக்திகள்
======================
குருநாதர் :- தாயே, நிச்சயம், இது தீபத்திற்கும் பல பல பின் சக்திகள் உண்டு. ஆனால் இதை அறிவதே இல்லை.
குருநாதர் :- தாயே, நிச்சயம், தீபம் என்று சாதாரணம் ஏதோ ஏற்றுகின்றோம் என்று ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.
குருநாதர் :- தாயே, நிச்சயம், வருங்காலத்தில் அழிவுகள் தான் என்பேன்.
குருநாதர் :- நிச்சயம், எம் மந்திரம் செப்பினாலும், நிச்சயம், எதைச் செய்தாலும், எவை என்று அறிய அறிய. நிச்சயம், பின் தலைகீழ் நின்றாலும், நிச்சயம், இறைவனை கெட்டியாக பிடித்துக் கொண்டாலும், சாவது சாவதுதான்.
குருநாதர் :- அறிந்து கூட, இதனாலதான்,
=======================================
# நவகிரக தீபம் ஏற்றும் போது எந்த நினைப்பும் இருக்கக்கூடாது
=======================================
குருநாதர் :- தாயே, நிச்சயம், பின் எதைப் பற்றியும் நினைக்கக்கூடாது. இதனால் உங்களுக்கும் புண்ணியம் வரும்.
குருநாதர் :- இன்னும் இன்னும், தாயே, நிச்சயம், பின் அதாவது இவ்வுலகத்தையே காக்க வேண்டும். யாங்கள் ஆனாலும், நிச்சயம், இன்னும் கூட எங்களுக்கு வாக்குகள் இல்லை. பின் எதை என்று புரிய புரிய ஆனாலும், இப்படி எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். எங்களுக்கு மட்டும் வாக்குகள் இல்லை. அங்கு மட்டும் படிக்கின்றார்கள் என்று, தாயே, பின் ஏன் எதற்கு என்றால், அத்தகுதி அவனிடத்தில் இல்லை. செய்யவும் மாட்டான்.
அடியவர் :- ஓ.
சுவடி ஓதும் மைந்தன் :- ( ஏன் எனக்கு மட்டும் படிக்கவில்லை? அவர்களுக்கு மட்டும் படிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். ஏன் அந்த தகுதி அவர்களிடம் இல்லை? புரிகிறதா? அப்ப அந்த தகுதி இல்லாதவனிடம் பேசினாலும், அது வீணாகும் என்று அவர் கூறுகின்றார். )
========================================
# அவசியம் இன்னும் பலர் நவகிரக தீபம் ஏற்றவேண்டும்
=======================================
குருநாதர் :- அறிந்தும் கூட, நிச்சயம், பின் இதை பின்பற்றுவார்கள். நிச்சயம், யானே பின்பற்ற வைக்கின்றேன் பல மக்களை.
குருநாதர் :- தாயே, நிச்சயம், பின் இதனால் எவை என்று அறிய முன்னோர்கள் எல்லாம், நிச்சயம், பின் தீபத்தில், பின் எவை என்று எரியவிட்டு நன்றாக வாழ்ந்தார்கள். இன்று மின்சாரம் வந்தது. என்ன வாழ்ந்தார்கள்?
சுவடி ஓதும் மைந்தன் :- முன்னாடி எல்லாம் தீபத்தை எரியவிட்டு நன்றாக வாழ்ந்தாங்க. இன்னைக்கு மின்சாரம் வந்தது. என்ன வாழ்ந்தார்கள்னு கேக்குறாங்க.
அடியவர் :- (அகல் விளக்கு ) அது இயற்கை, ( மின்விளக்கு இது ) செயற்கை.
====================================
# மின்விளக்கு - நம் உடம்பில் இருந்து மனிதன் யோகத்தை நிச்சயம், ஈர்த்துக் கொள்கின்றது.
====================================
குருநாதர் :- தாயே, நிச்சயம், எரியும் அல்லவா? அதில் கூட, நிச்சயம், எவை என்று கூட வேதியல் தன்மை இருக்கின்றது. அது கூட, நிச்சயம், மனிதன் யோகத்தை, நிச்சயம், ஈர்த்துக் கொள்கின்றது.
சுவடி ஓதும் மைந்தன் :- ( மின்விளக்குகள் நம்ம உடம்புல இருந்து எனர்ஜி எடுத்துக்குது.)
குருநாதர் :- ஆனால் (மண் அகல் ) விளக்கு சரியாகவே பின் எடுத்துக் கொள்வதில்லை. (புற உலக சக்தியை ) ஈர்த்து, பின் அதன் முன்னே அவன் தனக்கும் கொடுக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- (“அந்த தீபம் அப்படியே இல்லை. நாம் அதை அருகில் வைத்தால், அது ஈர்த்து நமக்கே கொடுக்கும். அது ரிவர்ஸாக வேலை செய்கிறது — அங்கிருந்து ஈர்த்து நமக்கே தருகிறது. இது நம்மிடமிருந்து எடுக்கிறது, நம்மிடமிருந்தே பெறுகிறது. அது பாசிட்டிவ், இது நெகட்டிவ். புரிகிறதா? )
குருநாதர் :- தாயே, இதனால் நிச்சயம், பின் அறிந்தும் கூட, இதனால்தான் இறைவனும் தெரியாமல் இருக்கின்றான். மின்சாரம் தெரியாமல் இருக்கின்றது.
குருநாதர் :- இதனால்தான்
குருநாதர் :- அப்பனே என் பக்தருக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றே உங்களை அழைத்தேன். யான்
=========================================
# குருநாதர் வாக்கு கேட்டாலே பாவம் பறந்து போகும்.
=========================================
குருநாதர் :- தாயே, எது என்று அறிய என் வாக்குகளை கேட்டாலே, நிச்சயம், பின் பாவம் போகும். பறந்து,
குருநாதர் :- தாய், தந்தையர் பேச்சை கேட்டாலே, பிள்ளைக்கு நிச்சயம், பின் தெளிவு வரும். பாவங்களும் போய்விடும்.
குருநாதர் :- இதனால்தான் நிச்சயம். அதனால்தான் உங்கள் இடத்திலிருந்து, நிச்சயம், பின் யான் எதையுமே எதிர்பார்க்கவில்லை. பின் அன்பை மட்டுமே எதிர்பார்க்கின்றேன். அதை விளையுங்கள். பின் மீதியெல்லாம் யானே தருகின்றேன்.
குருநாதர் :- பின்பு, ஏன் பின் அதாவது அதை இவை என்று எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறீர் என்பது எல்லாம் நிச்சயம் வருவரும் காலத்தில். அதனால், நிச்சயம், நீங்கள் மீண்டும் மீண்டும் சொல்கின்றேன். நிச்சயம், உங்களிடத்திலே இருந்து, நிச்சயம், பிரச்சனைகள் யான் கேட்டு யான் சொன்னால், நிச்சயம், பின் எந்தனக்கும், பின் உங்களுக்கும், பின் எவை என்று அறிய எதை யான் செப்புவது?.
குருநாதர் :- தாயே, இதை மனிதன் செய்வான். சித்தர்கள் ஆனால் செய்யப் போவதில்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- ( “ஆனால் இது யார் செய்வார்கள்? மனிதன் தான் செய்வான். உங்களிடம் வந்து பிரச்சனையை கேட்டு, பதில் சொல்வது மனிதன் தான். ஆனால் இவர்கள் யார்? சித்தர்கள் தேவையில்லை என்றார். மிகச் சிறப்பாகச் சொன்னார் — தேவையில்லை என்றார். )
குருநாதர் :- அதனால், அப்பனே, நீங்கள் அனைவருமே கஷ்டத்தில், கஷ்டத்தில் நுழைந்து, நிச்சயம் வந்துள்ளீர்கள். அதனால்தான், பின் நிச்சயம் யான் இழுக்கின்றேன். மீண்டும் அங்கே செல்லாதீர்கள் என்று
( போலி வழிகளில் மாட்டிக்கொள்ளாதீர்கள் )
குருநாதர் :- நிச்சயம், இவ்வாறு தோல்வி அடையவில்லை என்றாலும், நிச்சயம் உங்களுக்கு பக்குவங்கள் பிறந்திருக்காது.
========================================
# நவகிரக தீபம் 5% - மற்றவர் நலனை விரும்புங்கள். உங்கள் நலனை யான் விரும்புகின்றேன்.
========================================
குருநாதர் :- இதனால், தாயே, நிச்சயம் மற்றவர் நலனை விரும்புங்கள். பின் உங்கள் நலனை யான் விரும்புகின்றேன்.
குருநாதர் :- தாயே, ஐந்தாவது சதவீதத்தை பற்றி சொல்லிவிட்டேன். இங்கு
குருநாதர் :- அறிந்து கூட, பின் அகத்தியன், நிச்சயம் எதை என்று அறிந்து, பின் சொன்னாலும், நிச்சயம் செய்துவிடுங்கள். பின் உங்களுக்காக யான் இருக்கின்றேன்.
குருநாதர் :- அப்பனே, பின் நிச்சயம் அறிந்தும், அறிந்து கூட, இதனால், அப்பனே, மீண்டும் எந்தனுக்கு அதைத்தா, இதைத்தான என்று, நிச்சயம், அப்பனே, கேட்டுக் கொண்டிருக்காதீர்கள் என்பேன் அப்பனே.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், நிச்சயம், என்னிடத்தில் வந்துவிட்டால், அப்பனே, என் பக்தர்கள் அறிவுள்ளவராக இருக்க வேண்டும். அப்பனே, நிச்சயம், கீழாக இருக்கக்கூடாது எண்ணங்களை.
குருநாதர் :- நிச்சயம், அதற்காகத்தான் அறிந்து கூட பல வகைகள் உங்களுக்கு செப்பிக் கொண்டிருக்கின்றேன். எவ்வளவு செப்பினேன், உங்கள் பிரச்சனைகள், உங்கள் பிரச்சனைகளை என்னால் திறக்க முடியாத என்ன ?.
============================================
# அகத்திய மாமுனிவரை ஒரு ஜோதிடன் போன்று எண்ணிவிடக்கூடாது.
============================================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் என்னை ஒரு ஜோதிடன் போன்று எண்ணிவிடக்கூடாது. நீங்கள்
============================================
# அகத்திய மாமுனிவர் - இவ்வுலகில் ஜோதிடத்தை பரப்பியவர்.
============================================
குருநாதர் :- அப்பனே, ஜோதிடத்தை பரப்பியவனே யான் தானப்பா,
சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியனுக்கு எல்லாம் தெரியும்ன்றார். ஜோதிடத்தை பரப்பியவரே அவர்தான்.
குருநாதர் :- அப்பனே, ஆனால் இன்று தவறாக போய்க்கொண்டிருக்கின்றது என்பேன். அப்பனே,
சுவடி ஓதும் மைந்தன் :- ஆனால் இன்றைய நினைவில் அந்த ஜோதிடம் என்பது தவறாக போய்க்கொண்டிருக்கின்றது.
குருநாதர் :- அப்பனே, சொல்லத் தெரியாமல், அப்பனே, அனைவருமே, அப்பனே, ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு, இதைச் செய், அதைச் செய் என்றெல்லாம். இப்படித்தான், அப்பனே, பின் சொல்லிக் கொண்டிருக்கின்றான். ஆனால் மனிதனுக்கு வருங்காலத்தில், அதாவது கலியுகத்தில், ஒன்றும் நடக்கப்போவதில்லை. ஜோதிடம் பொய் என்று சொல்லப் போகின்றான். ஆனால், பின் கஷ்டங்கள் பட்டு கண்டுபிடிப்பது நாங்கள்.
==============================================
# இவ்வுலகத்தில் உள்ள அனைவருமே எங்களுக்கு குழந்தைகள் தான்.
==============================================
குருநாதர் :- அப்பனே, இவ்வுலகத்தில் உள்ள அனைவருமே எங்களுக்கு குழந்தைகள் தானப்பா. அக்கிரகங்களை சரியான வேகத்தில் இயக்க வேண்டும். அப்பனே, சரியான அப்பனே, பாதையிலே மீண்டும் தள்ள வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். அனைவரும் நன்றாக வாழ வேண்டும் என்று இப்பொழுது சொன்னாயே. அப்பனே, நிச்சயம், அப்பனே, இவ்வாறு நடந்தால், அப்பனே, நிச்சயம் உலகத்தில் மனிதன் மனிதனை அடித்துக் கொள்வான். அப்பனே,
அடியவர் :- ஐயா, என்ன சொல்றாருன்னா, ஐயா, இந்த மாதிரி கிரகங்கள் இருக்கும்போது, மனுஷன் மனுஷனுக்கு அடிச்சுப்பான். இன்னைக்கு வழியில சண்டை நடந்துட்டு இருக்கு. சண்டை நடந்திருக்குதுப்பா.
அடியவர் 2:- போர் நடந்துட்டு இருக்குதுப்பா.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், பின் அகத்தியன் அனைவருக்குமே பொதுவானவன் என்பேன் அப்பனே.
===================================
# அகத்திய மாமுனிவரை தந்தை என்று எண்ண வேண்டும்.
===================================
குருநாதர் :- அப்பனே, தந்தை என்று எண்ண வேண்டும். நீங்கள் அனைவருமே ஜோதிடன் என்று எண்ணக்கூடாது. ஒரு ஜோதிடன் என்று எண்ணக்கூடாது.
அடியவர் :- இந்த அம்மாவை உட்கார வச்சுக்கோங்க. வேணாம், நான் நிக்கிறேன்.
குருநாதர் :- அறிந்து கூட, அப்பனே, அதாவது, அப்பனே, நீயாவது சொல்கிறாயே அப்பனே, அவன் பிள்ளை கூட அது மாதிரி சொன்னதில்லை என்பேன். அப்பனே,
சுவடி ஓதும் மைந்தன் :- ( “இப்ப நீயாவது அந்த அம்மாவைப் பரிதாபப்படுகிறாய். ஆனால் அவன் பிள்ளை கூட அப்படி நினைக்கவில்லை. )
குருநாதர் :- அப்பனே, இன்னும் அனைவருக்குமே வாக்குகள் உண்டு என்பேன். அப்பனே, என் பக்தர்களை தெளிவுபடுத்தி, அப்பனே, நல்லொழுக்கத்தை கொடுத்து அனைத்தும் கொடுப்பேன்.
குருநாதர் :- அப்பனே, அதனால் ஒவ்வொருவருக்கும் ஒரு வேலை வைத்திருக்கின்றேன். அது வருங்காலத்தில் யான் உரைப்பேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாருக்கும் ஒரு ஒரு வேலை வைத்திருகின்றார் .
அடியவர் :- ( ….)
குருநாதர் :- அப்பனே, பின் முந்திக்கொண்டு வந்துவிட்டாயே. அப்பனே, எழுந்து நில்.
குருநாதர் :- அப்பனே, நீ கற்பிக்க வேண்டும். அப்பனே, நல்லொழுக்கத்தை மக்களுக்கு புகுத்த வேண்டும் என்பேன் அப்பனே. யான் துணையாக இருப்பேன். கடை நாள் வரையிலும் கவலை இல்லை அப்பனே. ஆனால் பேசத் தெரியாமல் பேசிவிடாதே என்பேன் அப்பனே. அப்பனே, பல பேர், அப்பனே, பின் சண்டைகளே வந்திருக்கும். யான் காத்துக் கொண்டிருக்கின்றேன் உன்னை.
குருநாதர் :- அப்பனே, இதனால், அப்பனே, இன்னும், அப்பனே, விரிவுபடுத்துகின்றேன். கவலை இல்லை. நீ விரும்பியவாறு
குருநாதர் :- அப்பனே, நல்முறையாகவே. அப்பனே, இன்னும் இதுபோல், அப்பனே, பின் நிறைய மனிதர்கள் தேவையப்பா.
குருநாதர் :- அதனால், ஒவ்வொரு மனிதனுக்கும் இவ்வுலகத்தில் ஒரு வேலை உண்டு. அதை சரியாக தெரிந்து கொண்டாலே, நிச்சயம் வாழ்வான். அதை சரியாக, பின் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், கஷ்டங்களோடு, கஷ்டங்களாக திரிந்து கொண்டே இருப்பான்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( “ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வேலை உண்டு. அதை அறியவில்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது. அந்த வேலையை யார் சிறப்பாகச் செய்கிறார்களோ, அவர்களின் பாவம் போகும். அதனால், எல்லோருக்கும் நான் சொல்கிறேன் — ஒவ்வொருவருக்கும் தனித்தனி வேலை இருக்கிறது.)
(அகத்திய மாமுனிவர் வாக்கு கேட்க சென்னையில் இருந்து ஓடோடி வந்த அடியவரை பார்த்து )
குருநாதர் :- நல்விதமாகவே அறிந்தும், அறிந்தும் கூட, இதனால், நிச்சயம், பின் அகத்தியம் செப்புகின்றான் என்று ஓடோடி வந்தீர்களே அங்கிருந்து. நிச்சயம், பின் அதற்காக, நிச்சயம், உன் இடத்திலே நான் தங்கி இருக்கின்றேன் சில நாட்கள்.
குருநாதர் :- அறிந்து கூட, பின் அப்பொழுதெல்லாம், நீங்கள் கேட்பீர்கள், யாங்கள் மட்டும் வரவில்லையா என்று, நிச்சயம், பின் அனைவருக்கும் செய்கின்றேன்.
குருநாதர் :- ஏனென்றால், நிச்சயம், பின் அவ்வளவு தொலைவு, பின் எவை என்று அறிய அறிய, யானே அன்று சென்றிருக்க வேண்டும்.
குருநாதர் :- இதனால், இங்கு எங்கு எதை குறிப்பிடுகின்றது என்றால், அன்பு மட்டுமே.
குருநாதர் :- அறிந்தும் எதை என்றும் புரிந்து கூட, இன்னும் இன்னும் இதே போலத்தான், அனைவருக்கும் யான் வாக்குகளில் பின் தெரிவிப்பேன்.
குருநாதர் :- அனைவருக்குமே எம்முடைய ஆசிகள், பின் அறிந்தும் எது என்று புரிந்து கூட, ஏன் இவர்களை, இவர்களை மட்டும் எழச சொன்னேன் என்று யாருக்காவது தெரியுமா?
அடியவர் :- அவங்களுக்கு கொடுப்பினை இருக்கு
குருநாதர் :- தாயே, அப்படி நினைக்கக்கூடாது என்பேன்.
குருநாதர் :- அறிந்து கூட, அப்பனே, எவை என்று புரிய புரிய. ஆனாலும், இவர்கள் அங்கும் இங்கும் திரிந்து ஒன்றுமே நடக்கவில்லை. இதனால்தான், நிச்சயம் எழுப்பி யான் இருக்கிறேன் என்று தைரியப்படுத்துகின்றேன்.
குருநாதர் :- எவை என்று புரிய புரிய. இன்னும் சில நாட்கள் சென்று, இப்படியே பின் சென்று கொண்டே இருந்தால், நிச்சயம் இத்தனை செய்தும் வீண் என்று எண்ணி விடுவார்கள்.
குருநாதர் :- அறிந்தும் எவை என்றது அறிய. பின், நிச்சயம், பின் அனைவருக்குமே, நிச்சயம் நல்லதை செய்ய யான் காத்திருக்கின்றேன். உலோபா முத்திரையோடு,
குருநாதர் :- நீங்கள் காத்திருக்க தேவையில்லை.
குருநாதர் :- பின், நிச்சயம் சொன்னேன். அன்பு மட்டுமே.
குருநாதர் :- அதனால், அப்பனே, மீண்டும் மீண்டும் அறிந்தும் அறிந்தும் கூட, எவை என்று அறிய. நிச்சயம், இன்னும் என் பக்தர்கள் இருக்கின்றார்கள். அப்பா, இன்னும் பக்குவங்கள் படவில்லை என்பேன். அப்பனே,
குருநாதர் :- பின், நிச்சயம் என்னை திட்டியும் தீர்த்திருக்கின்றார்கள். அகத்தினே, உன்னை நம்பினேனே. இவையெல்லாம் என்று
குருநாதர் :- அப்பனே, ஆனால் நன்மை செய்திருக்கின்றேன். ஆனாலும், யான் சிரிப்பேன். அங்கு,
குருநாதர் :- ஆனால், இவர்கள் எல்லாம் தெரியாதவர்கள் தான் என்பேன். ஆனாலும், இவர்களுக்கும் பின் வருங்காலத்தில் பாடத்தை எடுப்பேன்.
குருநாதர் :- அப்பனே, எதை என்று அறிய. அதனால்தான், அப்பனே, மீண்டும் மீண்டும் சொல்கின்றேன். அப்பனே, பின் என் பக்தர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என்பேன் அப்பனே.
குருநாதர் :- உங்களுக்கு, பின் அனைவருக்குமே திறமைகள் உண்டு. அத்திறமைகள் வெளிக்காட்ட வேண்டும். அவ்வளவுதான். ஒரு தந்தை என்ன நினைப்பான்?
அடியவர் :- டிஸ்டிங்ஷன் வேணும்.
சுவடி ஓதும் மைந்தன் :- உங்களுக்கு எல்லாமே தெரிஞ்சுக்கணும்ன்றாரு.
குருநாதர் :- நிச்சயம், நான் சொன்னேனே. அதை செய்தாலே, நிச்சயம் சில விஷயங்கள் உங்களுக்கே தெரியவரும்.
சுவடி ஓதும் மைந்தன் :- தீபம், அது ஏத்துனாவே நிறைய தெரியும் வரும்ன்றார்.
குருநாதர் :- அப்பனே, இத்தோடு, பின் இப்பாடம் முடிவதில்லை என்பேன். அப்பனே, மறுபாடமும் இருக்கின்றது.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம். அப்பனே, அதாவது புத்தகத்தில், நிச்சயம் இப் பாகத்தில் என்பது ஆசிரியருடைய வேலை. நிச்சயம், அதை செய்வதும், செய்யாததும் மாணவனுடைய வேலை. செய்தால், பின் நன்று.
குருநாதர் :- தாயே, எதை என்று அறிய. தந்தையானவன் நல்லதுதான் சொல்லிக் கொடுப்பான். ஆனால், ஏமாற்ற மாட்டான் நிச்சயம். இதை செய்தால், அதை தருகின்றேன் என்று
குருநாதர் :- நிச்சயம், பின் தந்தையிடம் கேட்கலாமா? நிச்சயம், இவையெல்லாம் பிரச்சனைகள் எல்லாம்
அடியவர் :- கேட்கக்கூடாது.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம். அப்பனே, இதனால்தான், அப்பனே, இங்கு எவை என்று அறிய. அப்பனே, இதை தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள், அப்பனே, நிச்சயம். அப்பனே, அப்பொழுது நீங்கள் பின் ஏதோ ஜோதிடனை அணுகுகிறீர்கள் தான் என்று அர்த்தம்.
குருநாதர் :- அப்பனே, இப்பொழுது சம்பந்தம் வேண்டுமா? வேண்டாமா? நீங்களே எடுத்துரையுங்கள்.
அடியவர்கள் :- வேணும், வேணும், வேணும்.
============================================
# எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், இத்தந்தை தீர்த்து வைப்பானப்பா.
============================================
குருநாதர் :- அப்பனே, அப்பொழுது இத்தந்தை உங்களுக்கு நன்றாகத் தான் செய்வான். அப்பனே, கவலை விடுங்கள். அப்பனே, தன் கடமை. அப்பனே, நீங்கள் சென்று கொண்டே இருங்கள் அப்பனே. எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், இத்தந்தை தீர்த்து வைப்பானப்பா.
குருநாதர் :- அறிந்தும் எதை என்றும் புரிந்தும் கூட, இதனால், நிச்சயம், தந்தைக்கு தெரியாத தன் பிள்ளைகளை எப்படி காப்பாற்ற, அப்பா?
குருநாதர் :- பின், நிச்சயம், எதை என்று புரிய புரிய. அதனால், அப்பனே, இப்படியே நடங்கள் போதுமானது.
குருநாதர் :- அப்பனே, நீங்கள் எல்லாம் எந்தனுக்கு சிறு பிள்ளைகள் தானப்பா.
குருநாதர் :- அப்பனே, பல விஷயங்கள் உங்களுக்கு தெரியாதப்பா. இனிமேலும் கற்பிக்கின்றேன்.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், சொல்லிக் கொடுப்பதற்கு முன்பே, அப்பனே, அனைத்தும் கேட்டுவிட்டால், என்ன லாபம்?
குருநாதர் :- அப்பனே, ஒவ்வொரு நிலைமையும் யான் அறிந்தேன். அப்பனே, நிச்சயம், எதை என்று புரிய புரிய. அப்பனேஎவ்வளவு எனக்கு தெரியுமப்பா.
===============================================
# வாழ முடியாத கலியுகத்தில் , வாழ வைக்கின்றேன்.
================================================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், அறிந்து கூட. அப்பனே, எந்தனைக்கு தெரிகின்ற பொழுது, அப்பனே, எவை என்று புரிய புரிய. அப்பனே, அனைத்தும் சரி செய்து வருகின்றேன். அப்பனே, மெது மெதுவாகவே, அப்பனே, எல்லாம் சரி செய்கின்றேன். அப்பனே, கலியுகத்தில் வாழ முடியாத காலம் அப்பா. அப்பனே, வாழ வைக்கின்றேன்.
(அன்புடன் அகத்திய மாமுனிவர் பெங்களூர் சத்சங்கம் - தொடரும் …. )
ஓம் ஶ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
