​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 10 December 2025

சித்தன் அருள் - 2030 - அன்புடன் அகத்தியர் - சபரிமலை வாக்கு!








2/12/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: சபரிமலை  மணிகண்டன் சன்னதி.


ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன், அகத்தியன். 

அப்பனே, அனைவருக்குமே ஆசிகள். 

============================================
# எப்போது சபரிநாதன் அனைத்தும் கொடுப்பார் 
============================================

அப்பனே நிச்சயம் தன்னில் கூட  யார், எப்பொழுது, எதை பெற வேண்டும்??? என்பவை எல்லாம் நிச்சயம் அப்பனே, பின் இவ் சபரிநாதனே அப்பனே, நிச்சயம். அப்பனே, தெரிந்து வைத்து!!!........ 

அப்பனே, இவ்வாறாக தெரிந்து வைத்து அனைத்து நலன்களையும் அப்பனே போகப்போக செய்வானப்பா. 

அப்பனே, அவை மட்டும் இல்லாமல் அப்பனே, அனுபவம் தான் அப்பனே, அப்பனே, நிச்சயம்  பின் காலங்கள், அதாவது கலியுகத்தில் சாலச் சிறந்தது என்பேன் அப்பனே. 

அவ் அனுபவத்தை யார் ஒருவன் பெறுகின்றானோ??, பின் அவனுக்கு அனைத்தும், பின் ஐயன் கொடுக்க தயார். 

ஆனாலும்  அப்பனே, அனுபவம் பெறாமல், அப்பன் இன்னும், அப்பனே, கஷ்டங்களில் சில, அப்பனே, தொல்லைகளை இழுத்துக்கொண்டு, அப்பனே, பின் அதன் மூலம், பின் அனுபவத்தை கொடுத்து அனைத்தும் கொடுக்கின்றான் என்பேன் அப்பனே.

அனுபவத்தை, அப்பனே நிச்சயம் தன்னில் கூட. பின் எவை என்று அறிய, அப்பனே, இவ்வாறு பின் கொடுக்க கொடுக்க, அப்பனே, பக்குவங்கள், பின் அதிகமாகின்ற பொழுது, அப்பனே, நிச்சயம், தன்னைத்தானே உணர்தல் சக்தி அதிகமாகின்ற பொழுது, அப்பனே, அப்பொழுதுதான் மற்றவர்களுக்கு உதவி செய்ய மனது வருமப்பா. 

அப்பொழுதுதான் ஐயன் கொடுப்பானே தவிர, பின் எப்பொழுதும் எதை என்று அறிய, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பன், பின் கொடுக்கவும் எதை என்று புரிய. அப்பனே, தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் அப்பனே.

============================================
# பக்குவங்கள் எல்லாம் வருவதற்கு  18 ஆண்டுகள் ஆகின்றது 
============================================

இதனால்தான் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இவையெல்லாம், இவ் பக்குவங்கள் எல்லாம், அப்பனே பின் நிச்சயம் வருவதற்கு, அப்பனே 18 ஆண்டுகள் அப்பனே, நிச்சயம் ஆகின்றது என்பேன் அப்பனே. 

இவ்வாறாக, அப்பனே, அவ் 18 ஆண்டுகள், அப்பனே, பின் ஆன பிறகுதான், அப்பனே.!!!


 ஆனாலும், சிலருக்கு அப்பொழுது கூட, பின் (பக்குவங்கள்) ஆவதில்லை என்பேன் அப்பனே. 

இதனால் பின் கஷ்டங்கள் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே. 

=================================================
# ஐயனை கொடுப்பதில் வல்லவர்
=================================================

நிச்சயம், தன்னில் கூட கொடுப்பதில் வல்லவன் அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, பின் ஐயனை போன்று யாரும் இல்லை என்பேன் அப்பனே. 

ஆனாலும், அப்பனே, நிச்சயம், தன்னில் எதை என்று புரிய, அப்பனே பக்குவத்தை, பின், அதாவது, நிச்சயம், கஷ்டங்களை அப்பனே கொடுத்து, கொடுத்து தான் அனைத்தும் கொடுப்பான் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

=================================================
# ஐயன் , ஒவ்வொரு மனதையும் ஆராய்ந்து கொண்டே இருக்கின்றார்.
=================================================

ஆனாலும், எவ்வாறாக ஒவ்வொரு மனதையும் கூட, அப்பனே, நிச்சயம், அப்பனே, பின் நிச்சயம், பின் மணித்துளி , மணித்துளியாக, அப்பனே, பின் ஆராய்ந்து கொண்டே இருக்கின்றான் என்பேன் அப்பனே. 

===================================
# சபரிமலையில் ஐயனின் கண்  பார்வை தானாகவே யார் மீது விழும்?
===================================

இதனால், அப்பனே, பின் அவ்வாறு, பின் நிச்சயம், தன்னில் கூட, பின் இவ்வாறு, பின் பல லட்ச, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, மனிதர்கள் வருகின்ற பொழுது,(சபரிமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள்)


 அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட, யார் எதை என்று கூற, தர்மத்தை செய்ய விரும்புகின்றார்களோ, பின் நிச்சயம் தன்னில் கூட, பின் அதை, என்று எதை என்று அறிய, அவர்கள், நிச்சயம் தன்னில் கூட, பின் தானாகவே சென்று, பின் அறிந்தும் கண் படுமப்பா!!! ஐயனின் என்பேன் அப்பனே. 

இவ்வாறாக, நிச்சயம். 

இதனால், அப்பனே, இதில் கூட, அப்பனே, பின் தர்மத்தை சரியாக பயன்படுத்துபவர்கள் அப்பனே, லட்சத்தில் ஒரு பத்து பேர்களே என்பேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே.

அப்பொழுது மற்றவர்கள் எல்லாம் எப்படி செல்கின்றார்கள் என்று நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்பேன் அப்பனே. 

இதனால், நிச்சயம், தர்மத்தை கடைபிடிக்க வேண்டும். 

===================================
# ஐயனின் முதல் தகுதி - தர்மத்தை வழி நடத்தி செல்வது.
===================================

அப்பனே, பின் எப்பொழுதும் எங்கு வேண்டும்? எது என்று அறிய அப்பனே, பின் அனைத்தும் எவை  என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, பின் ஐயனின் முதல் தகுதி,  அப்பனே  தர்மத்தை  அப்பனே, வழிநடத்தி செல்வதே என்பேன் அப்பனே. 

இவ்வாறு யார் ஒருவன் தர்மத்தை வழி நடத்தி செல்கின்றானோ,??? அவனுக்கு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அவன் இல்லத்திற்கே ஐயன் வருவானப்பா, நிச்சயம் தன்னில் கூட.

=======================================
# பந்தளத்தில் வாழ்ந்த ஒரு பெண்மணியின் உயர் பக்தி கதை. 
=======================================

இவ்வாறாக, அப்பனே, நிச்சயம், தன்னில் அறிந்து கூட, ஒரு பெண்மணியை பற்றி யான் எடுத்துரைக்கின்றேன் அப்பனே. 

நிச்சயம் தன்னில் எது என்று அறிய, அப்பனே, பந்தளம் தன்னில் கூட, அப்பனே, பின் அழகாகவே, நிச்சயம், தன்னில் அறிந்தும் புரிந்தும், அப்பனே, அதாவது, சேவை செய்து கொண்டிருந்தாள்  என்பேன் அப்பனே. 

(பந்தளம் அரண்மனையில்)



அதாவது, அமைச்சர்களுக்கும், பின் அரசர்களுக்கும், எதை என்று புரிய. அப்பனே, பல பல வகைகளில் கூட.

அப்பனே, நிச்சயம், தன்னில் எது என்று அறிய அப்பனே, அதாவது தேநீர் எவை என்று அறிய, அனைத்தும், அப்பனே நிச்சயம் தன்னில் கூட கொடுத்துக் கொண்டிருந்தாள்!! அப்பனே  நிச்சயம் அறிந்தும் கூட. 

ஆனாலும் நிச்சயம், அறிந்தும் புரிந்தும், இவ்வாறாக, நிச்சயம், அதாவது, சரணம், பின் துதிப்பார்கள் அனைவருமே நிச்சயம் தன்னில் கூட,  அறிந்தும் கூட, பின் சாமியே!!!, சரணம்!!! என்றெல்லாம். 

அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பல பல வழிகளில் கூட அப்படி, பின் எங்கும் எதை என்று அறிய இருந்தாற்போல் போல். 

ஆனாலும், அப் பெண்மணியோ நினைத்தாள்!! நிச்சயம்  தன்னில் கூட அறிந்தும். 

ஆனாலும் அப் பெண்மணி, நிச்சயம்  தன்னில் கூட, வாய் பேச முடியாதவள்!! நிச்சயம் தன்னில் கூட. 

ஆனாலும், பின் அழுது, அனைவருமே இப்படி, நிச்சயம் தன்னில் கூட, பின் சரண கோஷங்கள் சொல்கின்றார்களே,  பின் அதாவது ஐயன் நம் தனக்கு எதுவுமே கொடுக்கவில்லை என்று !!
எதை என்று புரிய. 

ஆனாலும், வாய் கூட பேச முடியவில்லையே என்று பின் ஏங்கினாள். 

ஆனாலும், தன் நிலைமை அவ்வளவுதான். பின், பாவப்பட்ட ஜென்மம் என்று அவளே நினைத்துக் கொண்டாள். 

இருப்பினும், நிச்சயம், தன்னில் கூட, அறிந்தும் கூட, பின், அதாவது, பின் சரணம் சொல்லுவோர்க்கெல்லாம் , யாம் பின் தேநீர், பின் அதாவது நீரையும், பின் கொடுக்கின்றோமே . நிச்சயம், தன்னில் கூட, அதில், பின், அதாவது, கொடுத்து, பின் அதிலேயே, பின், அதாவது, மணிகண்டனை பார்ப்பது போன்று, அவள் தன் உணர்ந்தாளப்பா. 

இதனால், நிச்சயம், தன்னில் கூட, மீண்டும் எவை என்று அறிய அப்பனே, பின் அதாவது அறிந்து கூட, பின் வருவோர்க்கெல்லாம் , நிச்சயம்,


 அதாவது வாய் பேசாமல் போயிற்று. 
(ஊமை பெண்)

நிச்சயம், நம் தனக்கு தாயும் இல்லை, தந்தையும் இல்லை நிச்சயம், தன்னில் கூட.

யாருக்காக வாழ்கின்றோம் ???. 

============================
# எது  நிச்சயம் தர்மம். 
============================

ஆனாலும், ஐயனை நினைத்து வருவோர்க்கெல்லாம் , நிச்சயம், தன்னில் கூட, பின் இலவசமாக அனைத்தும், பின் செய்து கொடுப்போம் என்பதெல்லாம். 

எப்படியோ நிச்சயம் தன்னில் கூட, பின் விறகுகள் வெட்டி, பின் அனைவர் இல்லத்திற்கு சென்று, நிச்சயம் தன்னில் கூட கொடுத்து, பின் நிச்சயம் அனைவருக்கும், பின் பசித்திட்டாளப்பா.  

இதுதான், அப்பா, நிச்சயம், தர்மம் என்பேன் அப்பனே. 

இதை கடைபிடிப்போர் யார் இக்கலியுகத்தில்?? என்பதை எல்லாம் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 

அப்பனே, எவை என்று புரிய ஆனாலும், இவ்வாறாகவே, பின் விறகு எவை என்று அறிய, பின் காட்டுக்கு செல்வது, வெட்டுவது. நிச்சயம். அதிலிருந்து, பின், அதாவது, அனைவருக்கும் விற்பது.  நிச்சயம். அதிலிருந்தும்  பின் வருமானத்தை, பின் அனைத்து, பின், அப்பனே, பின் அடியார்களுக்கும் கொடுப்பது.

அதாவது, எது என்று கூற, பின் நீரையும், எவை என்று அறிய, இன்னும் பல பல பலகாரங்களையும் கூட, அதாவது, இனிப்புகளையும் கூட, பின் வாரி வழங்குவது இவ்வாறாகவே. 

ஆனாலும், நிச்சயம், பின் மனதில் ஒன்றே ஒன்றே. 

நிச்சயம், பின், அதாவது, ஐயனே, பின், அதாவது, உனை, அதாவது எந்தனுக்கு, வயது ஆகிக்கொண்டே போகின்றது. 

உனை காணாவிடிலும், நிச்சயம், தன்னில் கூட, பின் அனைவரும் சரண கோஷம் சொல்கின்றார்களே,  அதையாவது யான் சொல்ல வேண்டுமே என்றெல்லாம். 

ஆனாலும், எதை என்று அறிய. ஆனாலும், இவையெல்லாம், நிச்சயம், தன்னில் கூட, பின் ஐயன் பார்த்துக் கொண்டே, பார்த்துக் கொண்டே. 

=======================================
# ஐயன் வந்து செல்லும் ரகசிய பாதை 
====================================
அவ்வழியில், நிச்சயம், தன்னில் கூட, இன்றளவும் இங்கிருந்து, நிச்சயம், தன்னில் கூட, தன் குளத்தில், பின் விளையாடி, அங்கிருந்தும் இங்கு வந்து கொண்டே தான் இருக்கின்றான் அப்பனே நிச்சயம், தன்னில் கூட. 

(சுவாமி ஐயப்பனின் பந்தள அரண்மனையில் ஐயப்பன் நீராடிய குளம் இன்றும் இருக்கின்றது அதில் நீர் எப்பொழுதும் வெதுவெதுப்பாக இருக்கும்)



இவ்வாறெல்லாம், பின் அவன் வந்த பாதை, அப்பனே, இன்னும், பின் அழகாகவே, நிச்சயம், தன்னில் கூட, பின் வருவானப்பா நிச்சயம், தன்னில் கூட.

=======================================
# புண்ணியங்கள் பெருகும் ரகசியங்கள் 
=======================================

இவ்வாறாக வருகின்ற பொழுது, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட யார் ஒருவன்?, பின் நிச்சயம், தர்மத்தை, பின் கடைபிடித்துக் கொண்டு வருகின்றானோ, நிச்சயம், அவன், பின் எதை என்று புரிய பின், அதாவது, ஐயனின் கண் தானாகவே, அவன் மேல் விழுமப்பா. பாவங்கள் போகுமப்பா. அப்பனே புண்ணியங்கள் பெருகுமப்பா. 

======================================
# எப்பொழுது பாவங்கள்  போகின்றதோ, அப்பொழுதுதான் புண்ணியங்கள் பெருகும்
======================================

““““““அப்பனே எப்பொழுது பாவங்கள் பின் போகின்றதோ, அப்பொழுதுதான் புண்ணியங்கள் பெருகுமப்பா.””””””” 

அப்பனே, நிச்சயம், பின், அதாவது,  பாவங்கள் எதை என்று அறிய அப்பனே, மனித உடம்பை சூழ்ந்து உள்ளதப்பா! அதிகமாக. 

ஆனாலும், புண்ணியங்கள் கூட சூழ்ந்து உள்ளதப்பா. 

ஆனாலும், பாவம் கலியுகத்தில் அதிகமாக சூழ்ந்துள்ளதால், அப்புண்ணியங்கள் செயல்படாமல், அப்படியே இருக்கின்றதப்பா. 

இதனால், அப்பனே, பின் தெய்வங்கள் அப்பனே பார்த்தால், அப்பனே உடனடியாக அப் பாவங்கள் விலகி, அப்பனே புண்ணியங்கள் செயல்பட ஆரம்பிக்கின்ற பொழுது, அனைத்தும் அப்பனே  நடக்குமப்பா. 

இதனால், தான் தன், அப்பனே, நிலைமைக்கு, தான் தான் காரணம் என்றெல்லாம், முன்னோர்கள் அழகாக எடுத்துரைத்துக் கொண்டே, 

இதை யார் ஒருவர் சரியாக பயன்படுத்துகிறார்களோ!?!??.... அப்பனே, அதற்கும் புண்ணியம் வேண்டும் அல்லவா அப்பனே!!!

இதனால் வந்தோமே, சென்றோமே என்றெல்லாம், அப்பனே, பலபேர்கள், அப்பனே, வந்து கொண்டுதான் இருக்கின்றார்கள் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 

ஆனாலும், அவர்களுக்கும்  கருணை படைத்து, ஏதோ, பின் மன்னிப்பு கொடுத்து, நிச்சயம், தன்னில் கூட, திருந்தி வா!!!!! என்றெல்லாம், அப்பனே, சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே ஐயன். 

ஆனாலும், மறுபடியும், மறுபடியும், தவறு செய்தால்தான் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அழகாகவே.

====================================
# ஐயன் அமர்ந்துள்ள யோக பட்ட  ஆசனத்தின்  பரம ரகசியங்கள் 
=====================================

ஏன், எதற்கு, பின், இக்கோலம், அப்பனே? 

இக்கோலத்தில், யார் ஒருவன், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அமர்ந்து, அப்பனே, பின், ஆசனங்களை சரியாக செய்து, அப்பனே, பின், இறைவனை நினைக்கின்றானோ, அவனுக்கு நோயே வராதப்பா. 

அப்பனே, சொல்லிவிட்டேன்.

(ஐயப்பனின் அமர்வு கோலம் ரகசியம் குறித்து குருநாதர் ஏற்கனவே கடந்த ஆண்டு.. சித்தன் அருள் அன்புடன் அகத்தியர் 1670 சபரிமலை வாக்கில் உரைத்து இருக்கின்றார். மீண்டும் படிக்க உணர்ந்து கொள்ள முடியும்.


ஐயப்பன் அமர்வு கோலம் ரகசியம் !!


அதாவது அப்படியே பின் தியானங்கள் அப்பனே இப்படி (சபரிமலை ஐயப்பன் அமர்ந்திருக்கும் கோலம் யோக பட்ட தபஸ்ரூப கோலம் முதுகுத்தண்டு நேராக ஐயப்பன் யோகாசன ரூபமாக, யோக பட்டையுடன், கையில் சின்முத்திரை காட்டி அமர்ந்திருக்கிறார். சின்முத்திரை என்பது ஞான நிலையை உணர்த்துவதாகும்.) 

 இப்படி  அமர்ந்தால் அப்பனே ஒன்றும் அப்பனே பின் செயல்படாமல் எதை என்று அறிய அறிய இருக்கலாம் என்பேன் அப்பனே !!!

அதாவது எதை என்று அறிய அறிய எவ் ஞாபகம் வராது என்பேன். அப்பனே!!

அதனால்தான் இக்கோலத்தில் அய்யன் அமர்ந்திருக்கின்றான் என்பேன் அப்பனே!!

ஆனாலும் அப்பனே இவ்வாறு அப்பனே அமர்ந்து கொண்டால் அப்பனே நிச்சயம் அப்பனே என்னென்ன? எவை என்று? அறிய அப்பனே பின் தெரியும் அப்பா!!

அப்பனே எங்கு எவை என்று அறிய அறிய அதை தடுத்து நிறுத்த அப்பனே மனது சாந்தி பெறுமப்பா!!!

ஐம்புலன்களையும் கூட அடக்கலாம் என்பேன் அப்பனே!!

(கண், காது, மூக்கு, வாய், மெய் · ஐம்பொறிகள். ஒருவன் ஐம்புலன்களையும் அடக்கியாண்டால் இந்த அகிலத்தினையும் வென்றிடலாம்.)

இதனால் இத் தவக்கோலத்திலே இருக்கின்றான் அப்பா அய்யன்!!)




அதிகாலையிலே, மாலை வேளையிலே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 

ஆனாலும், எதை என்று புரிய அப்பனே, இவ்வாறாகவே, அப்பனே, சரியாக, பின், அமர்ந்து, தியானங்கள் செய்து, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, சில மூலிகைகள் எல்லாம், அப்பனே, பின், உட்கொண்டு வந்தாலே, அப்பனே, அவை மட்டுமில்லாமல், நிச்சயம், தன்னில் கூட, இவையும் செய்வதற்கும், அப்பனே, பின், சரியாகவே, அவந்தனுக்கு, பின், அபிஷேகம் செய்கின்றார்களே அப்பனே,

(ஐயப்பனுக்கு செய்யப்படும் நெய்யபிஷேகம்.. அந்த நெய்)

அவ் நெய்யானது, அப்பனே, அதையும் அதிக அளவு உட்கொண்டு, அப்பனே, தியானம் செய்தால், அப்பனே, நிச்சயம், உள்ளுக்குள் ஒரு ஒளி, பின், புகுந்து, அப்பனே, அனைத்தும் தெரியுமப்பா. 

அப்பனே, சந்தர்ப்பங்கள், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, பின், வருபவர்கள் எல்லாம், அப்பனே, பல வருடங்கள், அப்பனே, இவன் சம்மதத்தால் தான் வருகின்றார்கள் அப்பனே, 

முன் ஜென்ம பந்தத்தால் தான்,  வருகின்றார்கள் அப்பனே. 

இவ்வாறாக, அப்பனே, பல பந்தங்கள், ஆனாலும், இவையும் தெரிந்து கொள்வதற்கும், புண்ணியம் வேண்டுமப்பா. 

அப்பனே, அவையும், அப்பனே, யான் சொல்வதற்கு, அப்பனே, ஐயனிடம், அப்பனே, உத்தரவு கேட்டு தான் சொல்ல வேண்டும் என்பேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 

ஆனாலும், நிச்சயம் சொல்லுவானப்பா. 

அப்பனே ஒவ்வொருவருக்கும், அப்பனே, 

இதனால் கவலைகள் வேண்டாம்.

அப்பனே மீண்டும் அப்பனே பின் அப்பெண்மணி, அப்பனே அறிந்தும் கூட, பின் அதாவது, பின், அனைத்தும் பார்த்தாளப்பா, நிச்சயம் தன்னில் கூட. 

அறிந்தும் புரிந்தும் கூட, எவ்வாறு?  எதை என்று அறிய, இன்னும் வயதாகிக் கொண்டிருக்கின்றதே, பின் நம் தனக்கு யார் துணை?  நிச்சயம், தன்னில் கூட. 

பின் அதாவது, ஏதோ உழைக்கின்றோம். 

அனைவருக்கும் கொடுக்கின்றோம். 

ஆனாலும், பின், நிச்சயம், தன்னில் கூட, இவர்களும் கூட, அதாவது, நாம் இறந்து விட்டால், நிச்சயம், தூரே , தூக்கி எறிந்து விடுவார்கள். 
அவ்வளவுதான்!!!
 யாரோ ஒரு அனாதை என்று, ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட.

ஆனாலும், இவையெல்லாம், நிச்சயம், ஐயன் பார்த்துக் கொண்டே இருந்தான் அப்பனே நிச்சயம், தன்னில் கூட.

===============================
# பக்தி எப்படி இருக்க வேண்டும் ?
===============================

அறிந்தும் கூட!!! இதனால் அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பக்தி என்பது, அப்பனே, எது என்று புரிய. எங்கிருந்தாலும், எப்பொழுதும் நினைத்துக் கொண்டு இருப்பதே, பக்தி என்பேன்!!!! அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 

அப்பனே, எவை என்று புரிய. ஆனாலும், கலியுகத்தில் குறைவுதானப்பா. அவையெல்லாம், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, அறிந்தும் கூட, 

ஆனாலும், மீண்டும் சோதனை கொடுத்தான், அப் பெண்மணிக்கு பார்ப்போம்!!! என்று. 

=============================================
( ஐயப்பன் ஆபரண பெட்டி என்பது திருவாபரணம் என அழைக்கப்படும், ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் புனிதமான ஆபரணங்களைச் சுமந்து செல்லும் பெட்டி ஆகும். பந்தள அரண்மனையிலிருந்து சபரிமலைக்கு இந்த பெட்டி கொண்டு செல்லப்படுகிறது.)
=============================================

அப்பனே, இவ்வாறாக, எது என்று புரிய. அப்பனே, நிச்சயம், பின், அதாவது, பின், அருகில் (ஆபரண) பெட்டியின் அருகில் வந்து, நிச்சயம், தன்னில் கூட, பின், எவை என்று அறிய. ஆனாலும், துடிதுடித்தாள். 

(ஐயப்பனின் திருவாபரண பெட்டியை தொட்டு வணங்க வேண்டும் என்று

எப்படியோ, அதை, நிச்சயம், வணங்க வேண்டும் என்று, நிச்சயம், எது என்று புரிய. 

ஆனாலும், அதுவும் கூட, பின், (கார்த்திகை) இவ் மாதமே என்பேன் அப்பனே. 

(இந்த சம்பவம் கார்த்திகை மாதத்தில் நடந்தது)

பின், அதாவது, பார்த்து பார்த்து, அனைவரும் எது என்று புரிய, எது என்று அறிய. 

ஆனாலும், ஓடி, எது என்று கூற மறைவாக, ஒரு நாள், பின், எது என்று அறிய, சென்றுவிட்டாளப்பா. 

சென்றிட்டு அப்பனே, பின், அதை கெட்டியாக, பின், ஆபரண பெட்டி, அப்பனே, பின், கெட்டியாக பிடித்துக் கொண்டாளப்பா.

ஆனாலும், இதை பார்த்த ஒருவன், எதை என்று புரிய. அப்பனே,


 மீண்டும், எதை என்று அறிய, பின், வந்துவிட்டாள், போதும் என்ற, பின், அழகாக, பின், மகிழ்ச்சி. ஐயனே!!, பின், நிச்சயம், பின், கட்டிப் பிடித்து விட்டேன் என்றெல்லாம். 

(ஆபரண பெட்டியை தொட்டு வணங்கி விட்டேன் என்ற மகிழ்ச்சியில் இதுவே போதும் என்று)



ஆனாலும், பின், (காவலாளி)  ஒருவன் யோசித்தானப்பா, 


நிச்சயம், இவள் தன், நிச்சயம், எதை என்று புரிய. 

அதாவது,  சென்றுவிட்டாள். 

ஆனாலும், அதில் இருக்கும் தங்க நகைகள் எல்லாம், நாம், நிச்சயம், பின், எடுத்துக் கொள்வோம் என்றெல்லாம். 

ஆனாலும், யோசித்து, பின், காவலாளியே, எடுத்துக்கொண்டானப்பா, அனைத்தும், 

ஆனாலும், எடுத்துக்கொண்டு, இல்லத்தில், நிச்சயம், வைத்துவிட்டு, எதை என்று புரிய. 

பின், அதிகாலையிலே, எது என்று அறிய, நிச்சயம்  தன்னில் கூட, அதாவது, பெண்மணி வந்து, இதில் இருக்கும், பின், தங்க நகைகள் எல்லாம், எடுத்துக் கொண்டு, சென்றுவிட்டாள் என்றெல்லாம். பழி போட்டு !!....., எதை என்று அறிய. அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. 

ஆனாலும், பின், எப் பெண்மணி???? அதாவது, அப் பெண்மணிதான் என்றெல்லாம் இவள் தனை, அதாவது, அழைத்தார்கள், அனைவருமே, நிச்சயம், 

பின், அதாவது, எது என்று புரிய. 

அரச சபை கேள்வி : - இங்கு வந்தாயா? என்றெல்லாம். 

அவ் பெண்மணி : - நிச்சயம், பின், அவையில் கூட,

 எதை யான் வந்தேன், நிச்சயம், எது என்று அறிய. 

அரச சபை கேள்வி : -  (ஆபரண ) பெட்டியை, பின், தொட்டாயா? 

அவ் பெண்மணி : -  யான் தொட்டேன் என்பதை எல்லாம். 

அரச சபை கேள்வி : -  ஆனாலும், பின், நகைகளை  எடுத்தாயா??? என்றெல்லாம், நிச்சயம், தன்னில் கூட. 

அவ் பெண்மணி : -  ஆனாலும், அதை எடுக்கவில்லை என்று, 

காவலாளி: - ஆனாலும், எவை என்று புரிய. ஆனாலும், நிச்சயம், தன்னில் கூட, யான் பார்த்தேன் என்று, காவலாளி. 

அதாவது, பின், அரசே!!, எது என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட, பின், வந்தாள், (ஆபரண பெட்டியை ) தொட்டாள். 

ஆனாலும், நிச்சயம், தன்னில் கூட, எதை என்று, அது எடுத்தாள் என்று சொல்லவில்லையே நிச்சயம் தன்னில் கூட.

இவளுக்கு, பின், நிச்சயம், தன்னில் கூட. இதனால், அவ் காவலாளி, நிச்சயம், தன்னில் கூட, பின் பெரிய ஒரு கம்பை, கம்பை எடுத்து, நிச்சயம், பின், அறிந்தும் கூட, பின் , அதாவது, முதுகில், எவை என்று அறிய, வீசி !!!.., அறிந்தும் கூட,

 பின் , அழுதாள் , எவை என்று அறிய, நிச்சயம், தன்னில் கூட. ஆனாலும், ஐயனே!!, எவை என்று கூட, பேச முடியவில்லை அவளால். 


ஆனாலும், அனைவருமே, நிச்சயம், தன்னில் கூட, அறிந்தும் கூட, எதை என்று புரிய. அறிந்தும், எதை என்று அறிய, நிச்சயம், இவள் திருடன் என்று, பின், நிச்சயம், தன்னில், எவை என்று புரிய. 

இதனால், அப் பெண்மணியை சிறையில் அடைத்து,



 மற்றொருவர், நிச்சயம், இங்கே கொன்று விடுவோம் என்றெல்லாம்.

அப்பனே, அப்பொழுதெல்லாம், நிச்சயம், தன்னில் கூட, பலத்த , பலத்த , எது என்று அறிய  அப்பனே, தண்டனைகள், அப்பனே இருந்தப்பா. 

இதனால், அப்பனே, பின், ஐயனும் பார்த்துக் கொண்டிருந்தான் அப்பனே, நிச்சயம் தன்னில், எதை என்று புரிய. 

அதாவது, நிச்சயம், அவள் உள்ளத்தில், பின், நினைத்தாள். 


ஐயனே,!!!! நிச்சயம், இத்தனை வருடங்கள் சேவை செய்தேன்.

ஆனாலும், நிச்சயம், தன்னில் கூட, இதுதான் தண்டனையா?????? என்றெல்லாம், மனதில் பின் உதித்தாளப்பா, 

இதனால்தான், அப்பனே, நிச்சயம், ஐயனுக்கு சேவை செய்வதில், சோதிப்பானப்பா, 

நிச்சயம், சோதித்து, அப்பனே கொடுப்பானப்பா. 

சிலர், அப்பனே ,  (ஐயன்) சோதிப்பதில் தோல்வி அடைந்து விடுகிறார்கள் என்பேன் அப்பனே. 

பின், இவ்வாறாக சென்றுவிட்டோம். ஒன்றும் நடக்கவில்லை என்று. 

அப்பொழுதுதான், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பின் , அதாவது, பொய் வேசமா????? என்றெல்லாம். ஐயன். 

இதுதான் நம்பிக்கை துரோகம் என்றும், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, இறைவன் மீது. இதனால், அவனுக்கு ஒன்றும் நடக்கப்போவதும் இல்லை. அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, 

அப்படியே, அப்படியே, நிச்சயம், சென்று, எவை என்று. 

ஆனாலும், (அவ் பெண்மணி) நம்பிக்கை விடவில்லை. 

நிச்சயம், ஐயனே, எதை என்று புரிய. பின், இத்தனை நாட்கள், ஏன், நிச்சயம், எந்தனுக்கு யார் சாட்சி???, பின், சொல்ல வருவார்கள் என்பதை எல்லாம், நிச்சயம், யாரும் இல்லையே!!!!

நிச்சயம், இவ் அனாதை என்று, நீயும் விட்டு விட்டாயா?? என்றெல்லாம், நிச்சயம், தன்னில். 

======================================
# சுவாமி ஐயப்பனின் கண்களில், நீர் பெருக்கெடுத்து.
======================================

““““ஐயனின், பின், கண்களில், நீர் பெருக்கெடுத்து அறிந்தும், புரிந்தும் கூட.”””””” 

இதனால், யாரும் இல்லையே!!!!! . 

யாரும் இல்லையே !!! என்றெல்லாம், நிச்சயம், பின், பேச முடியாது. 

ஆனாலும், பின், தண்டனை  இவள்தான். 

ஆனாலும், மெதுமெதுவாக, நிச்சயம், பின், அமைச்சர்கள்,அப் பெண்மணியிடம் நிச்சயம், தன்னில் கூட, பின், நகைகள், பின், கொடுத்துவிடு. 

ஐயனின் பின் நகைகள், பின் கொடுத்துவிடு. 

பின், இல்லை என்றால், நிச்சயம், பின், அறிந்தும், பின், தண்டித்து விடுவார்கள், கொன்று விடுவார்கள் முதலில். 

ஆனாலும், நிச்சயம், உனக்கு மரண தண்டனை தான். 

அதை கொடுத்தால் தான், நிச்சயம், தன்னில் கூட, இல்லையென்றால், நிச்சயம், தன்னில் கூட, பின், எவ்வாறு என்பதெல்லாம், எப்படி எல்லாம், உன்னை, பின், எவை என்று அறிய, அறிய, நிச்சயம், கஷ்டங்கள் கொடுக்க வேண்டுமோ, அவ்வாறு எல்லாம், நாங்கள் கஷ்டத்தை கொடுப்போம் என்று.

நிச்சயம், எதை என்று அறிய, அறிய. ஆனாலும், அப்பெண்மணி, நிச்சயம், எது என்று அறிய, மீண்டும், எவை என்று கூட, நம்பிக்கை பிறந்தது. 

நிச்சயம், யாம் யாருக்கும் துரோகம் செய்யவில்லை. 

நிச்சயம், தன்னில் கூட, பின், பேசவில்லை. பொய் பேசவில்லை. 

நிச்சயம், தன்னில் கூட, பின், எது என்று கூட, கஷ்டங்கள் பட்டு பட்டு, நிச்சயம், தன்னில் கூட, ஐயனுக்கு, பின், ஐயனின் அடியார்களுக்கும், பல வகைகளில் கூட, பின், உதவிகள் செய்து வந்தோம். 


ஆனாலும், இதற்காவது, ஐயன், நிச்சயம், வருவான் என்று,!!!!

 நிச்சயம், தன்னில், எது என்று புரிய, அறிந்தும், இவை என்று அறியாத நிலையில் கூட, நிச்சயம், அவை தன் , நிச்சயம், மனதில், நிச்சயம், ஐயன்!!! வருவான் என்றெல்லாம். 

ஆனாலும், நிச்சயம், பின், சிரித்தாள், பலமாக, நிச்சயம், தன்னில் கூட, 

அச் சிரிப்பிற்கு காரணம், நிச்சயம், அனைவருமே, பின், தவறாகவே,!!!!.......!?!?!? நிச்சயம், தன்னில், அறிந்தும், எதை என்று புரிய. 

ஆனால், இவள் தான்  எடுத்து, எடுத்திருப்பாள் என்றெல்லாம். 

ஆனாலும், பின், இவள் என்னதான், நிச்சயம், பின், எதை என்று புரிய செய்திருக்கின்றாள் என்பவை எல்லாம், நிச்சயம், அறிந்தும், புரிந்தும், எதை என்று அறிய. 

ஆனாலும், இவள் தங்கும் இடத்தில், பின், செல்வோம்.  அனைவரும் செல்வோம். நிச்சயம், பின், எங்கு ஓளித்து வைத்திருக்கின்றாள்? என்றெல்லாம். நிச்சயம், கயிறுகளையும் கட்டி. 

நிச்சயம், அங்கு சென்று பார்த்தாலும், ஒன்றுமில்லை, 

எதை என்று புரிய. ஆனாலும், இவை என்று அறிய, நிச்சயம், எதை என்று அறிய. ஆனாலும், இவள் எங்கெல்லாம், பின், விறகு வெட்டுகின்றாளோ, பின், அங்கெல்லாம், பின், புதைத்துள்ளாளா??? என்றெல்லாம். 

நிச்சயம், பின், எங்கும் இல்லை. 

ஆனாலும், பின், எதை என்று புரிய,  ஆனாலும், (அவ் பெண்மணி) ஐயனை நினைத்துக் கொண்டே, நினைத்துக் கொண்டே. 

ஆனாலும், நிச்சயம், பின், நிச்சயம், எவ்வாறு என்பதை எல்லாம் அறிந்தும், புரிந்தும், எதை என்று அறிய. 

ஆனாலும், இவைதன் , நிச்சயம், தன்னில் கூட, பின், ஐயனின். ஆனாலும், பின், இவள்  ஒன்றை, நிச்சயம், யோசித்து, அறிந்தும், எதை என்று அறிய. 

ஆனாலும், பின், அங்கிருந்து, எதை என்று கூற , யான், நிச்சயம், தன்னில் கூட, அங்கு வாழும் (சபரியில் வாழும் ஐயனை), எதை என்று புரியாத, அறிந்தும், எவை என்று கூட, பார்க்க வேண்டும் என்றெல்லாம் சைகைகளிலே, நிச்சயம், தன்னில் கூட. 

அதாவது, அச் சைகை என்னவென்று, யான் உரைக்கின்றேன். 

பின், அதாவது, இவ் சபரிமலை தன்னில், நிச்சயம், தன்னில், அறிந்தும் கூட, பின், அதாவது, பின், ஐயனை காண்பித்தால், அதை யான் காண்பித்து விடுவேன் என்று.

தர்மத்தை கடை பிடித்தாள், நிச்சயம், எதையுமே நினைக்கவில்லை. 

இதனால், இதை (சாக்காக) வைத்தாவது, ஐயனை கண்டு விடுவோமே என்றெல்லாம், நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, அறிந்தும், புரிந்தும் கூட. 

============================================
# திருஆபரணப்பெட்டி வரும் பாதையின் ரகசியங்கள் 
==============================================

இதனால், பின், அங்கிருந்து, பின், அதாவது, பந்தளத்திலிருந்து , நிச்சயம், தன்னில் கூட, இங்கு (சபரிமலைக்கு) அழைத்து வந்தார்களப்பா, 

““““நிச்சயம், இப்பொழுதெல்லாம், அவ்வழியாகத்தான், அப்பனே, அப்பெட்டியும் வருகின்றது என்பேன் அப்பனே  நிச்சயம், தன்னில் கூட.””””””

(திருவாபரணம் 

 இது சபரிமலையில் குடிகொண்டிருக்கும் ‎இறைவனான சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் ஆபரணம் ஆகும்.
மூன்று பெட்டிகளில் உள்ள புனிதமான ஆபரணங்களை, மகரவிளக்கு திருவிழா ‎நடைபெறுவதற்கு மூன்று நாள் முன்னதாக, பந்தளம் அரண்மனையில் இருந்து சபரிமலைக்கு (80 கி.மீ) தலைச்சுமையாகப் புறப்படும். 

இந்த ஆபரணப் பெட்டியைச் சுமப்பதற்காகவே, பாரம்பரியமாகவே சில குடும்பங்கள் இருக்கின்றன.
திருவாபரணப் பெட்டிகள்


இந்த திருவாபரணப் பெட்டி மட்டுமே ஐயப்பன் சந்நிதியை அடைகிறது. மற்ற இரண்டு பெட்டிகளும் மாளிகைப்புரத்தம்மன் சந்நிதிக்குச் சென்று விடும்.



திருவாபரணப் பெட்டி

ஐயப்பன் சன்னதி
திருமுகம்(சாஸ்தாவின் முகக் கவசம்)
ப்ரபா மண்டலம் (ப்ரபாவளி)
வலிய சுரிகை (பெரிய கத்தி)
செறிய சுரிகை (சிறிய கத்தி)
யானை, விக்ரஹம்-2
கடுவாய் புலி விக்ரஹம் 1
வெள்ளி கட்டிய வலம்புரிச் சங்கு
பூர்ணா புஷ்கலா தேவியர் உருவம்
பூத்தட்டம் (பூக்களை வைக்கும் தங்கத் தட்டு)
நவரத்தின மோதிரம்
சரப்பொளி மாலை
வில்வ மாலை (தங்க இதழ்களால் ஆனது)
மணி மாலை (நவரத்னங்களால் ஆனது)
எருக்கம் பூ மாலை (தங்க எருக்கம்பூக்களால் ஆனது)



வெள்ளிப் பெட்டி
வெள்ளிப்பெட்டி என்று அழைக்கப்படும் இந்தப் பெட்டியில்


மாளிகைபுறம் சன்னதி
தங்கக்குடம்
பூஜா பாத்திரங்கள்

தங்கக் குடம் ஒன்றும், மற்ற பூஜா பாத்திரங்களும் இருக்கின்றன.
இந்த தங்கக்குடத்தால் ஸ்வாமிக்கு பின்னர் நெய்யபிஷேகம் செய்யப்படும்



கொடிப்பெட்டி

மாளிகைப்புறம் சன்னதி
யானைக்கான நெற்றிப்பட்டம்
தலைப்பாறை மற்றும் உடும்பாறை மலைக்கான கொடிகள்
குடை மற்றும் யானை  ஊர்வலத்துக்கான பொருட்கள்.

மாளிகைப்புரம் சந்நிதிக்குச் செல்லும் இந்தக் கொடிப்பெட்டியில்,
யானைக்கான நெற்றிப் பட்டம், தலைப்பாறை மற்றும் உடும்பாறை மலைக்கான கொடிகள், குடை மற்றும் யானை ஊர்வலத்துக்கானப் பொருட்கள் உள்ளன.
கொடிப்பெட்டியில் உள்ளவைகளால் மறுநாள் யானை அலங்கரிக்கப்பட்டு மறுநாள் மணிமண்டபத்தில் இருந்து சரம்குத்தி வரை யானையில் ஊர்வலம் வரும்.





பந்தளம் அரண்மனையிலிருந்து திருவாபரணம் புறப்படும் கண் கொள்ளாக் காட்சியை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. வருடத்தின் மற்ற நாட்கள் முழுவதும் பந்தளம் அரண்மனையின் பொறுப்பில், பெட்டகத்தின் உள்ளே பத்திரமாக பூட்டி வைக்கப்பட்டிருக்கும் திருவாபரணம், வருடத்தில் வெகு சில நாட்களுக்கு மட்டும்தான் வெளியே கொண்டு வரப்படுகிறது.

மகர விளக்கு உத்ஸவத்தின் 3 நாட்கள் முன்பு, பந்தளம் அரண்மனையில், பூஜைகளை முடித்து சபரிமலை புறப்படுவதற்காக இன்றைய அரசர் (ராஜ குடும்ப ப்ரதிநிதி) உட்பட அனைவரும் காத்திருப்பார்கள். எத்தனை நேரம் ஆனாலும் எல்லோரும் வானை நோக்கிப் பார்த்தபடி காத்து இருப்பார்கள். கண்கூடாகக் காணும் அதியமாக வானில் கருடன் வந்து யாத்திரை துவங்க வட்டமிட்டு உத்தரவு தரும். திருவாபரணத்தை கருடன் வட்டமிட்ட

பிறகுதான் திருவாபரண யாத்திரை புறப்படும்.

பந்தளம் அரண்மனையிலிருந்து, நகரம், காடு, எஸ்டேட் என தலைச்சுமையாக புறப்படும் திருவாபரண ஊர்வலத்தைக் காண வழியெங்கும் உள்ள மக்கள், சாதி மத பேதமின்றி வாசல்களில் கோலமிட்டு, விளக்கேற்றி காத்திருந்து வரவேற்பது மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம்.

சுமார் மூன்று நாட்கள் காட்டுப் பாதையில் வந்து சேர்ந்த ஆபரணம் பெரியானைவட்டத்தை அடையும் போது உண்டாவது பரவசம். வட்டமிட்டுப் பறக்கும் க்ருஷ்ணப்பருந்து சாட்சியாய் உடன் வர, ஆட்டம் ஆடி துள்ளி துள்ளி மலைமேல் ஏறும் அந்தக் காட்சியை இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கும்.

சரங்குத்தி கடந்து பதினெட்டாம் படியேறி ஆபரணம் சந்நிதானம் அடைவதைக் கண்டாலே ஆனந்தம்.

திருவாபரணப்பெட்டி, பம்பை, நீலிமலை வழியாக சந்நிதானத்தை மகரசங்கராந்தி அன்று அடையும்.இன்றும் நடக்கும் அதிசயம் என்னவென்றால் திருவாபரணம் எங்கு சென்றாலும் கருடன் அதன் மேலேயே பறந்துவருவதுதான். சந்நிதானத்தைப் பெட்டி அடைந்ததும் கருடன் சந்நிதானத்தை மூன்றுமுறை வலம்வந்துப் பின் பறந்து மறையும்.
பயண வழி:
ஆரம்பம்: பந்தள அரண்மனையில் இருந்து புறப்படும்.
பாதை: மகரஜோதிக்கு மூன்று நாட்களுக்கு முன், தலைச்சுமையாகப் புறப்பட்டு, பம்பை, நீலிமலை வழியாகச் செல்லும்.
வழிநெடுக: பக்தர்கள் வீடுகளில் கோலமிட்டு, பூக்கள் தூவி வரவேற்பார்கள், சரணகோஷங்கள் முழங்கும்.
இலக்கு: சபரிமலை சன்னிதானத்தை அடைந்து, மகரவிளக்கு அன்று ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். 


திருவாபரணம் சந்நிதானம் அடையும் நொடி. மொத்த சபரிமலையும் நிலை கொள்ளாத ஆனந்த நிலையில் தன்னை மறந்து இருக்கும்.வானில் மாமலை மேலே மகர நக்ஷத்ரம் உதித்து நிற்க, கொடிமரத்தை கருடன் வட்டமிட, அந்த ஆபரணங்கள் சந்நிதானத்துக்குள் சென்று, ஐயப்பனுக்கு சார்த்தி தீபாராதனை நடக்கும் அந்த நொடி, பொன்னம்பல மேட்டில் ஜோதி தெரிய ... மனம், உடல், இடம், காலம் என அனைத்தும் மறக்கும் பேரானந்தம்; அது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒன்று.

சுவாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷம் மட்டுமே அங்கே சத்தியம்!)





அப்பனே, புரிந்து கொள்ளுங்கள் அப்பனே., 

ஏனென்றால், பல தெரியாத விஷயங்கள் எல்லாம், அப்பனே, நிச்சயம், அப்பனே, புதைந்துள்ளது. 

அதிசயங்கள், அப்பனே, நிச்சயம், பின், இன்னும், அப்பனே, பல வகைகளில் கூட, அப்பனே, 

ஆனால், மனிதனுக்கு தெரிவதில்லை. அப்பனே.

அதனால், தெரிந்து, உண்மை நிலையை தெரிந்து, வணங்கினால், அப்பனே, நிச்சயம், அப்பனே, பின், இறைவன், எதை என்று கூற , பின், உடனடியாக, வரங்கள் கொடுத்து விடுவானப்பா, 

தெரியாததனால் தான், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, சில கஷ்டங்களையும் கொடுத்து, அப்பனே, பின், தெரிந்து கொள்!!, தெரிந்து கொள்!! என்றெல்லாம் அப்பனே. 

இதனால் தான்   அப்பனே, சொல்லிக்கொண்டே வருகின்றேன். 

பின், அனைத்தும் தெரிந்து கொண்டு, இறைவனை வணங்குங்கள்.

 அது தான் பக்குவம். 

தெரிந்து கொண்டு, வணங்காமல், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. 

தெரிந்து கொள்ளாமல், அப்பனே, வணங்கினாலும், நிச்சயம், ஒன்றும் பிரயோஜனம் இல்லை என்பதெல்லாம்  அப்பனே. 

============================================
# சுவாமி ஐயப்பன் - பந்தளத்தில் ஒளித்து வைத்துள்ள  சுவடி ரகசியங்கள்  
==============================================

அப்பனே, எவ்வாறு, பின், அதாவது, பல வகைகளில் கூட, அப்பனே, ஐயனின், அப்பனே, வரலாறு தெரிவதற்கும், அப்பனே, பின், புண்ணியங்கள் வேண்டுமப்பா. 

அப்பனே இவ் வரலாறுகள் எல்லாம், அப்பனே, நிச்சயம், ஒளித்து வைக்கப்பட்டுள்ளது என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில். 

இன்னும், ஐயனே, பின், எழுதி வைத்த ஓலைச்சுவடிகள் எல்லாம், அப்பனே, பின், பந்தளத்தில் புதைந்துள்ளதப்பா, ஓரிடத்தில் என்பேன் அப்பனே, நிச்சயம், தன்னில் கூட.




அவையெல்லாம், அப்பனே, பின், இப்பொழுது வெளியே கொண்டு வந்தாலும், அவையெல்லாம், அப்பனே, பின், நிச்சயம், தன்னில் கூட, திருடிவிட்டு, அப்பனே, பின், அவையெல்லாம், பின், மனிதன், பின், அதாவது, தனக்காக, அப்பனே, பின், எதை எதையோ செய்து விடுவான் என்பேன் அப்பனே. 

அதனால்தான், ஐயன் யாருக்கும் தெரியாத அளவு, ஓரிடத்தில் வைத்திருக்கின்றானப்பா, இன்னும் சுவடிகள்  என்பேன் அப்பனே. 

(தான் எழுதிய சுவடிகளைப் பற்றி ஹரிஹரசுதன் ஐயப்பன் முதல் முறையாக ஜீவநாடியில் வந்து வாக்குகள் தந்த... உரையில் கூறியது சித்தன் அருள் அன்புடன் அகத்தியர் 1802.  ஸ்ரீ ஐயப்பன் வாக்கு மீண்டும் படிக்க நன்று


பின் அறிந்தும் பின் யான் எழுதிய சுவடிகளும் கூட இன்னும் அறிந்தும் பின் பந்தளத்தில் பின் தள்ளாடுகின்றது.. அதை படிப்பதற்கும் ஆள் இல்லையே!!!

அதை சரியாக யார் ஒருவன் படித்தால்... பின் இவ்வுலகம் நிச்சயம்.. உலகம் ஒளி பெறும்..

பின் ஆனால் படிக்க ஆள் இல்லையே!!!

எத்தனை?? எத்தனை?? சுவடிகளோ!!!!... அறிந்தும் பின் படித்து அதாவது.. எத்தனையோ தெரியாமல் படித்தும் கூட... மனிதர்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றார்களே தவிர....

ஆனால் உண்மை பொருளை விளங்குவதற்கு யான் அழகாகவே எழுதி வைத்துள்ளேனே!! அறிந்தும்!!


அதை தன் பின் எடுக்க ஆள் இல்லையே!!!

அதை தன் நிச்சயம் எடுத்து பின் ஓதி விட்டால் நிச்சயம் இவ்வுலகம் பின் அறிந்தும்!!!

இதை தன் கூட பின் கட்டளையை மீறி அதாவது ஈசன் கட்டளையே!!!
இவையெல்லாம் பின் படிப்பதற்கு அறிந்தும் கூட!!
யானே அவதாரம் எடுத்து மீண்டும் இதை ஓதி நிச்சயம் அனைவரையும் காப்பேன்!!!)





அதில் பலத்த , எப்படி எல்லாம், நிச்சயம், பின், வந்தால், பின், ஐயனை காணலாம்?. 

நிச்சயம், எங்கெல்லாம் யான் திரிந்தேன். 

எங்கெல்லாம் பல, பின், இதை என்று அறிய, இன்னும், பின், பல, பின், நிச்சயம், தன்னில் கூட, இன்னும், தங்கங்கள், வைரங்கள் இருக்கின்றது? என்பதெல்லாம், அதில் அழகாக எழுதி வைத்துள்ளானப்பா. 

============================================
# சுவாமி ஐயப்பன் சுவடி ரகசியங்கள்  - கலியுகத்தில் தெரிய வரும்
============================================

நிச்சயம், அப்பனே, கலியுகத்தில், அப்பனே, பின், அவையெல்லாம் தெரிய வரும் என்பேன் அப்பனே நிச்சயம்  தன்னில் கூட. 

அப்பனே, ஏனென்றால், எதை என்று கூட, சரியான ஆளை, அப்பனே, தேர்ந்தெடுப்பான் அப்பனே  நிச்சயம்  தன்னில் கூட, ஐயனே.

இதனால், அப்பனே, சாதாரணம் இல்லை என்பேன் அப்பனே. 

அவ்  நிலையில் அமர்ந்து கொண்டு,(யோகபட்டம்) அப்பனே, பின், நிச்சயம், தன்னில் கூட, எதை என்று புரிய. அப்பனே, இன்னும், அப்பனே, பின், ஐயனை பற்றி, ஐயனை பற்றி, அப்பனே, சபரிதன்னில் கூட, அப்பனே, பல வகையான, பின், வரலாறுகள் எல்லாம் உரைக்க போகின்றேன் என்பேன்  அப்பனே. 
உலகத்திற்கு என்பேன் அப்பனே.

தெரிந்து கொண்டால் தான், அப்பனே, நிச்சயம், பின், வெற்றி. 

அவ்வாறு தெரிந்து கொள்ளவில்லை என்றாலும், அப்பனே, நிச்சயம், மீண்டும் மீண்டும் பிறவிகள் எடுத்து எடுத்து, அப்பனே, வரவேண்டியது தான் என்பேன் அப்பனே. 

பிறவிகள் எடுத்து எடுத்து, கஷ்டங்களை படுவது, அப்பனே, எவ்வளவு கஷ்டம் என்று, அப்பனே, மனிதனுக்கு தெரியுமப்பா. 

இதனால், அப்பனே, ஒரே பிறவியில் மோட்சம் வேண்டுமென்றால், அப்பனே, அனைத்தும் இறைவனைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே. 

அதை தெரிந்து கொள்வதற்கும் புண்ணியங்கள் தேவை. 

அப் புண்ணியங்களும் கூட உங்களிடத்தில், அப்பனே, இருப்பதனால் தான், அப்பனே, யான் சொல்லுவதை கூட இப்பொழுது கேட்டுக்கொண்டிருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே. நலமாகவே, அப்பனே,

 எதை என்று கூட யார்? மூலம் எதனை, அப்பனே, எப்பொழுது பின் பெற வேண்டும்?, எப்பொழுது உள் நுழைய வேண்டும்?? என்பதை எல்லாம் யான் அறிவேன் அப்பனே. 

 அதைப்போலவே, அப்பனே, நிச்சயம், தன்னில்.  



இவ்வாறாக, அப்பனே, பின், அப்பெண்மணியும் கூட, பின் அழகாக எதை என்று அறிய. அப்பனே, அப்பொழுதெல்லாம், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட எதை என்று அறிய அறிய!!

 அப்பனே, ......ஒரு “““““““““கல்”””””, அப்பனே, இருந்ததப்பா, 

அதனால்தான், அதுவே, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட எதை என்று அறிய. அழகாகவே, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பின், அதுதான், அப்பனே பின், சபரிநாதன் என்பேன் அப்பனே. 

இப்பொழுது அழகாக காட்சி அளித்துக் கொண்டிருக்கின்றானே!!!!!........(இப்போது சிலை ரூபத்தில் ஐயப்பன் இருக்கின்றார் அப்பொழுது கல்ரூபத்தில் இருந்திருக்கின்றார்)


 அப்பொழுது கல்லில், அப்பனே, அழகாக காட்சி அளிப்பான் என்பேன் அப்பனே.

=============================================
# ஆதி மூல ஐயப்பன் சிலை - மணிமண்டபம் அங்கு புதைந்துள்ளது 
=============================================

அதையும் கூட, அப்பனே, புதைந்து தான் உள்ளதப்பா. எங்கு என்றால்????, அப்பனே, நிச்சயம், தன்  மணிமண்டபம், மணிமண்டபம் என்று சொல்கின்றார்களே. அங்கேதான் அங்கு புதைந்துள்ளதப்பா. நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, எவை என்று அறிய. 

(மணிமண்டபம் குறித்து குருநாதர் ஏற்கனவே கடந்த ஆண்டு சபரிமலை வாக்கு அன்புடன் அகத்தியர் சித்தன் அருள் 1552 ல் பதிவாக வெளிவந்துள்ளது மீண்டும் படித்து உணர்ந்து கொள்ளவும்.

மணிமண்டபம் மாளிகாபுரத்தம்மா கோயிலின் கருவறைக்கு அருகில் உள்ளது. மணிமண்டபத்தின் சுவர்கள் பித்தளைத் தகடுகளால் மூடப்பட்டிருக்கும், அதில் ஐயப்பன் தொடர்பான புடைப்புக் கதைகள் பொறிக்கப்பட்டுள்ளன. மகர விளக்குத் திருவிழாவின் போது மணிமண்டபம் ஆறு நாட்கள் மட்டுமே திறந்திருக்கும். நேர்ச்சை மணிகளை இங்குதான் கட்டுவார்கள்)





அப்பனே, இவ்வாறாக, நிச்சயம், பின், (ஐயனை)பார்த்து, பின், ரசித்தாள்...அப் பெண்மணி, அப்பனே, ஐயனே, இவ்வாறாக, நிச்சயம், தன்னில் கூட அறிந்து கூட, ஐயனே, பார்த்துவிட்டேன். 

இப்பிறவி, நிச்சயம், தன்னில் கூட போதும். ஆனாலும், இவர்கள், பின், கொல்வார்களா, எதை என்று அறிய. பின், நிச்சயம், தன்னில் கொன்று விட்டாலும் , பரவாயில்லை. நிச்சயம், பின், நினைத்துக் கொண்டிருந்தேன்  சிறுவயதிலிருந்து. 

அனைத்தும் நன்மைத்தான்  செய்தேன். 

ஆனாலும், நிச்சயம், உனை, பின், பார்க்க முடிந்தது. அதுவே போதும் என்று.

==========================
# ஐயனின்  ஆனந்த கண்ணீர்
==========================

ஆனாலும், அப்பனே, நிச்சயம், இவ்வாறாக, நிச்சயம், ஒரு பெண்மணியா !!! என்று, நிச்சயம், ஆனந்த கண்ணீர் அப்பனே, பின், ஐயன், நிச்சயம், தன்னில் கூட. 

இவ்வாறாக, எதை என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட, அறிந்தும் கூட.

இதனால், அனைவரும், பின், (ஆதி மூல அய்யப்பன் கல் சிலையை) காட்டி விட்டோம். நிச்சயம், தன்னில் கூட. 

ஆனாலும், (நகைகள்) இருக்கும் இடத்தை சொல்லிவிடு என்று. 

ஆனாலும், நிச்சயம், தன்னில் கூட, யான், அதாவது, பின், இவ்வுலகத்தில், பின், பொய்யே சொன்னதில்லை. 

அறிந்தும், புரிந்தும், சைகைகளாலே நிச்சயம், பொய் சொல்லிவிட்டேன் ஐயனை காண. 
யான், ஐயனை காண. 

நிச்சயம், ஐயன் தான் எனக்கு. நிச்சயம், அனைத்தும், சிறுவயதிலிருந்தே, நிச்சயம், ஐயன் தான் எனக்கு. 
பின், அன்னையும், நிச்சயம், தன்னில் கூட, அனைத்தும், பின், எவை என்று அறிய. 

ஆனாலும், இவன் தனக்கு முன், பின், யான் நடிப்பேனா????? என்ன?!!! என்று. 

ஆனாலும், எங்களையே ஏமாற்றி விட்டாயா??? என்பதை எல்லாம், நிச்சயம், எதை என்று புரிய. அறிந்தும் கூட, எவை என்று அறிய, உடனடியாக, நிச்சயம், இங்கே கொன்று விடுங்கள் என்றெல்லாம். நிச்சயம், வாளை எடுக்க, 

==========================================
# அய்யன் கட்டி அணைத்து தரிசனம் - 18 படியில் ஒரு மகத்தான வரம் 
==========================================

நிச்சயம், ஐயன் அழகாக, நிச்சயம், காட்சி அளிக்க, நிச்சயம், தன்னில் கூட, 

அப் பெண்மணியை கட்டி, எவை என்று அறிய, பிடித்துக் கொண்டு, நிச்சயம், தன்னில் கூட, 

இவ்வாறாக, எவை என்று அறிய. பின், 18, பின், படிகள், தன்னில் கூட, பின், ஒருவராக நீ இருப்பாய் என்றெல்லாம் அப்பனே.

==========================================
# சபரி மலையில் 18 படிகளில் ஒரு படி - இவ் உயர் பக்த  பெண்மணி 
==========================================
(7/1/2023 சித்தன் அருள் 1257 ல் சபரிமலை 18 படிகள் தத்துவ ரகசியங்கள் ஐயப்பனின் அனுக்கிரகம் குறித்து குருநாதர் வாக்குகள் எழுதியுள்ளார் அனைவரும் மீண்டும் ஒருமுறை படித்து உணர்ந்து கொள்ளவும்)




அப்படி என்பதெல்லாம், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப் படி தன்னில் ஏறினால், அப்பனே, நிச்சயம் தன்னில் பெண் சாபங்கள் போகுமப்பா.

ஏனென்றால், ஒவ்வொருவருக்கும், அப்பனே, பெண் சாபங்களோடு, மனிதன், ஒவ்வொருவருக்கும், குரு சாபங்கள், இன்னும், ராகு, கேது, பல சாபங்கள், அப்பனே, பெற்று பெற்று வருகின்றானப்பா. 

நிச்சயம், தன்னில் கூட, நிச்சயம், பின், அதாவது, எனை, பின், நினைப்பதற்கு, நிச்சயம், அனைத்து மனிதர்களின் தோஷங்களையும் போக்குவதற்கு, நீ ஒரு படியாக இருப்பாய் என்பதெல்லாம்  அப்பனே.

(18 படிகளில் ஒரு படியாக நீ இருப்பாய் என்று அந்த பெண்மணிக்கு ஐயப்பன் வரம்)


ஒரு படியாக, அவள் இப்பொழுதும் இருக்கின்றாளப்பா. 

அதை மிதித்தாலே அப்பனே, அனைத்து பாவங்களையும் கூட, அவள் தன் போக்கிக் கொண்டே இருக்கின்றாளப்பா, எதை என்று அறிய.

இதனால், அப்பனே, அனைவரும், எதை என்று அறிய,
(அமைச்சர்கள் காவலாளிகள் வீண் பழி சுமத்தியவர்கள் அனைவரும்)

 அப்படியே!!?, அப்படியே!!?, நின்று விட்டார்கள் என்பேன் அப்பனே. 

நிச்சயம் தன்னில் கூட, அசையவும் விடவில்லை.

அப்படியே, நிச்சயம், கற்களாக, பின், மாறிவிட்டார்கள் என்பேன் அப்பனே. 

இப்பொழுதும் கூட, அங்கங்கே, அவர்களும் கற்களாகத் தான் இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே. 

எப்பொழுது?? அப்பெண்மணி மீண்டும், பின், ஐயனிடம், இவர்களை எல்லாம், பின், மாற்று என்று, நிச்சயம் சொல்கின்றாளோ,!!!!???? அப்பொழுதுதான், அப்பனே,


(கல்லாக மாறி இருப்பவர்களுக்கு சாப விமோசனம்)

 இன்னும் நேரங்களும் வரவில்லை கலியுகத்தில். 

அவள் அப் “படி” தன்னிலே இருந்து, அனைத்தும், அப்பனே, பின், பின், ஏறிக்கொண்டு, ஏறிக்கொண்டு, சில வினைகளை, பின், யாரும் இல்லாதவர்களும் , நிச்சயம், தன்னில் கூட, சிலவற்றை, பின், எவையுமே இல்லாமல், சில கஷ்டங்கள் படுபவர்கள் எல்லாம், நிச்சயம், நீக்கிக் கொண்டே, நீக்கிக் கொண்டு, வந்து கொண்டே. 

இதனால், அனுதினமும், ஐயனே, நிச்சயம், தன்னில் கூட, அறிந்தும், புரிந்தும் கூட, இவ்வாறாக, அறிந்தும், எதை என்று கூட, பின், அதாவது, இவ்வாறாக கொடுத்திட்டாயே என்றெல்லாம்…. 

இன்னும் கூட, அப்பனே, பின், உடம்பில்லையே தவிர அப்பனே. 

(உடம்பில்லாமல் சூட்சும ரூபத்தில் அந்தப் பெண்மணி)

பின் நிச்சயம் தன்னில் கூட, ஆத்மார்த்ததோடு, அனைத்தும் அளித்து பின், மனிதர்களுக்கு கூட, வரங்கள் கொடுத்துக்கொண்டே, கொடுத்துக்கொண்டே, அப்பனே அனைத்தும், அப்பனே. 

அதாவது, நிச்சயம், பேச முடியாதவர்களையும், பேச வைத்துக் கொண்டு தான் இருக்கின்றாள். 

நோய்வாய்ப்பட்டவரையும் கூட, பின், அதை அகற்றிக் கொண்டே, நிச்சயம், தன்னில் கூட, எதை என்று கூற மிதித்து, மிதித்து தான் நீங்கள் செல்கின்றீர்கள் அப்பனே. 

ஆனாலும், அப் படி என்னவென்று, இப்பொழுது யான் சொல்லுவதில்லை என்பேன் அப்பனே.

(18 படிகளில் அந்தப் பெண்மணி இருக்கும் படி எந்த படி? என்று இப்பொழுது அந்த ரகசியம் சொல்வதற்கில்லை)

பின், நிச்சயம், வருங்காலத்தில், பின், யானே  தெரிவிப்பேன் என்பேன் அப்பனே.

இன்னும் அப் படிகளுக்கு பல வழியில், அப்பனே, பின், ரகசியங்கள் உள்ளது என்பேன் அப்பனே. 

யாரும் அறிந்திருக்கவில்லை. 

அப்பனே, அப் படி தன்னிற்கு,!!!!!!

 (பூசைகள்)

அப்பனே, பல வகைகளும் எதற்கு????, ஏன்?????? என்றெல்லாம், அப்பனே,

(18 படி பூஜை என்பது சபரிமலை ஐயப்பன் கோயில் 18 படிகளுக்கான ஒரு சிறப்புப் பூஜையாகும். இதில் 18 படிகளும் பூக்கள், விளக்குகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டு, கலச அபிஷேகம் செய்யப்பட்டு, கற்பூரம் ஏற்றி, ஒவ்வொரு படிக்கும் தனித்தனியாக ஆவாகனம் செய்யப்படும். இது சபரிமலையில் ஒரு முக்கிய அங்கமாகும். )








 பின், எதை என்று அறிய, இன்னும் சொல்கின்றேன் அப்பனே, 

இதனால், ஐயனின் கருணை, மிகப் பெரும் கருணை, அப்பனே, 

சொல்கின்றேன். வரும் வரும் காலத்தில் என்னென்ன?? லீலைகள் என்பதெல்லாம், அப்பனே, 

நிச்சயம், அப்பனே, பல வகையிலும் கூட, சுவடிகள் பந்தளத்தில் ஒளிந்து, ஒளித்து, ஒளித்து வைத்திருக்கின்றானப்பா. 
பின், நிச்சயம் எழுதியதை!!,

 எழுதி, அப்பனே, எழுதிக்கொண்டே இருப்பானப்பா, சுவடிகள். 
அப்பனே, ஐயன், பல வகையில் கூட, கலியுகத்தில் என்னென்ன?? நடக்கப் போகின்றது..???
எங்கெல்லாம்?? எனை, பின், அதாவது, அவன் தன்னை, பின், அதாவது, பின், பார்க்கலாம் என்றெல்லாம்… 

எப்படி எல்லாம்??, ஏது என்றெல்லாம், அப்பனே, பின், கலியுகத்தில், அக்கிரமங்கள், அநியாயங்கள் நடக்கின்ற பொழுது, நிச்சயம், எவ்வாறெல்லாம்?, எவ் மந்திரங்கள்,? எவை என்று கூட, எங்கு சென்றால்??, தீரும்? என்பதை எல்லாம் எழுதி வைத்திருக்கின்றானப்பா. 

அவையெல்லாம் யாங்கள் சொல்வோம், வருங்காலத்தில், அப்பனே, நிச்சயம் தன்னில்.கூட!!

கவலை இல்லை வேண்டாம். 

ஐயனின், அப்பனே, பரிபூரணமாக, ஆசிகள் இன்று அனைவருக்கும் கிடைத்தது என்பேன் அப்பனே. 

எம்முடைய ஆசிகள். 

மற்றொரு, அப்பனே, வாக்கிலும் சந்திப்போம். 

ஆசிகள்! 

ஆசிகளப்பா!! 

பெரும் ஆசிகளப்பா !!! 

ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.  

சித்தன் அருள்.....தொடரும்!