14/4/2026 சித்தர்களின் மாதமான சித்திரை திருநாள் தமிழ் புத்தாண்டு தினத்தில் குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்த வாக்கு.
வாக்குரைத்த ஸ்தலம்:அகத்தியர் தவஞான சித்தர் பீடம்.
ஸ்ரீ ஆதி வராக நல்லூர்.ஸ்ரீமுஷ்ணம் வட்டம்.கடலூர் மாவட்டம்.
ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். அப்பனே, பல உண்மைகள் இங்கு புதைந்துள்ளதப்பா... அவையெல்லாம் இன்றைய நாளிலே யான் செப்பப் போகின்றேன், அப்பனே. நிச்சயம் தன்னில் கூட.
ஏன்?, எதற்கு? இவ்வளவு கஷ்டங்கள்? எதற்காக? நிச்சயம் தன்னை கூட யாங்கள் சித்தர்கள் இங்கு வந்தோம்? எதற்காக?? என்றெல்லாம், அப்பனே, நிச்சயம் சொல்லப் போகின்றேன். அதனுள்ளே, அப்பனே, பின் திருவாசகத்தில் பின், அதாவது 42 பாடலை பாடுக.
ஆலயத்தில் கூடியிருந்த சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் இணைந்து பதிகம் பாராயணம் செய்தனர்.
திருவாசகம் 42 பதிகபாடல்
சென்னிப்பத்து
சிவவிளைவு
(திருப்பெருந்துறையில் அருளியது - ஆசிரிய விருத்தம்)
தேவ தேவன்மெய்ச் சேவகன் தென்பெ ருந்துறை நாயகன்
மூவ ராலும் அறியொணாமுத லாய ஆனந்த மூர்த்தியான்
யாவ ராயினும் அன்பரன்றி அறியொ ணாமலர்ச் சோதியான்
தூயமாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னிச் சுடருமே. 579
அட்டமூர்த்தி அழகன்இன்னமு தாய ஆனந்த வெள்ளத்தான்
சிட்டன் மெய்ச்சிவ லோகநாயகன் தென்பெ ருந்துறைச் சேவகன்
மட்டு வார்குழல் மங்கை யாளையோர் பாகம் வைத்த அழகன்தன்
வட்ட மாமலர்ச் சேவடிக் கண்நம் சென்னி மன்னி மலருமே. 580
நங்கை மீரெனை நோக்குமின் நங்கள் நாதன் நம்பணி கொண்டவன்
தெங்கு சோலைகள் சூழ்பெருந் துறை மேய சேவகன் நாயகன்
மங்கை மார்கையில் வளையுங்கொண்டெம் உயிருங் கொண்டெம் பணிகொள்வான்
பொங்கு மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னிப் பொலியுமே. 581
பத்தர் சூழப் பராபரன் பாரில் வந்துபார்ப் பானெனச்
சித்தர் சூழச் சிவபிரான் தில்லை மூதூர் நடஞ்செய்வான்
எத்தனாகிவந் தில்புகுந்தெமை ஆளுங் கொண்டெம் பணிகொள்வான்
வைத்த மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே. 582
மாய வாழ்க்கையை மெய்யென் றெண்ணி மதித்திடா வகை நல்கினான்
வேய தோளுமை பங்கன் எங்கள் திருப்பெ ருந்துறை மேவினான்
காயத் துள்ளமு தூறஊறநீ கண்டு கொள்ளென்று காட்டிய
சேய மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே. 583
சித்தமே புகுந் தெம்மையாட் கொண்டு தீவினை கெடுத் துய்யலாம்
பத்தி தந்துதன் பொற்கழற்கணே பன்மலர் கொய்து சேர்த்தலும்
முத்தி தந்திந்த மூவுலகுக்கும் அப்பு றத்தெமை வைத்திடும்
அத்தன் மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே. 584
பிறவி யென்னுமிக் கடலைநீந் தத்தன் பேரருள்தந் தருளினான்
அறவை யென்றடி யார்கள் தங்கள் அருட்கு ழாம்புக விட்டுநல்
உறவு செய்தெனை உய்யக்கொண்ட பிரான்தன் உண்மைப் பெருக்கமாம்
திறமை காட்டிய சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே. 585
புழுவி னாற்பொதிந் திடுகுரம்பையிற் பொய் தனையொழி வித்திடும்
எழில்கொள் சோதியெம் ஈசன்எம்பிரான் என்னு டையப்பன் என்றென்று
தொழுத கையின ராகித் தூய்மலர்க் கண்கள் நீர்மல்குந் தொண்டர்க்கு
வழுவி லாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே. 586
வம்ப னாய்த்திரி வேனைவாவென்று வல்வி னைப்பகை மாய்த்திடும்
உம்ப ரான்உல கூடறுத்தப் புறத்தனாய் நின்ற எம்பிரான்
அன்பரானவர்க்கருளி மெய்யடி யார்கட் கின்பந் தழைந்திடுஞ்
செம்பொன் மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே. 587
முத்தனைமுதற் சோதியைமுக்கண் அப்பனை முதல் வித்தினைச்
சித்தனைச்சிவ லோகனைத்திரு நாமம்பாடித் திரிதரும்
பத்தர்காள்இங்கே வம்மின்நீர் உங்கள் பாசந்தீரப் பணிமினோ
சித்தமார்தருஞ் சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே. 588
திருச்சிற்றம்பலம்.
அப்பனே, நலன்கள், ஆசிகள். அப்பனே,
நிச்சயம் தன்னில் கூட பாடும் பொழுதெல்லாம் அப்பனே நிச்சயம் ஈசன் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றானப்பா.
சுவடி ஓதும் மைந்தன் விளக்கம்
அகத்தியர் சொல்றாரு, "நீங்க எங்கெங்கெல்லாம் பாடுறீங்களோ அங்கெல்லாம் ஈசன் கேட்டுட்டு தான் இருக்கின்றார்.
அப்பனே, கவலைகள் வேண்டாம் என்பேன் . அப்பனே, ஈசன் என்ன முடிவெடுத்திருக்கின்றான்??? என்பதையெல்லாம் யாம் அறிவோம். அப்பனே, கவலைகள் வேண்டாம். அடுத்தடுத்து சொல்வேன்.
.அப்பனே, நல் ஆசிகள் அனைவருக்குமே. அப்பனே,
நல் விதமாக என்னுடைய ஆசிகள். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட
ஏன்?, எதற்காக? அப்பனே உன்னை அனுப்பினேன் என்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே ஒரு பிறவியில் யாம் மக்களுக்காகவே சேவை செய்ய வேண்டும் என்று நீதானப்பா கேட்டாய் என்பேன். அப்பனே,
(ஆதிவராக நல்லூரில் ஸ்ரீ அகஸ்தியர் லோபா முத்திரை அன்னைக்கு ஆலயம் எழுப்பி அகத்தியர் தவ ஞான சித்தர் பீடம் அமைத்து பல்வேறு சேவைகளை செய்து வரும் திரு அகத்திய குமரன் ஐயா அவர்களுக்கு குருநாதர் நல்கிய வாக்கு!!
இவரைப் பற்றியும் ஆலயம் பற்றியும் செய்துவரும் சேவைகளைப் பற்றியும் ஏற்கனவே நமது சித்தன் அருள் பதிவு எண் 1266.. ஜனவரி மாதம் 2023 ஆம் ஆண்டு குருநாதர் அகத்தியப் பெருமான் ஆயில்ய நட்சத்திர குருபூஜை தினத்தன்று குருநாதர் தந்த வாக்கில் ஆதிவராக நல்லூரையும் குறிப்பிட்டு அதன் பிறகு ஆதிவராக நல்லூரில் அமைந்திருக்கும் அகத்தியர் குடிலை பற்றியும் விபரங்களாக பதிவாக வெளிவந்துள்ளது அனைவரும் மீண்டும் ஒருமுறை படித்து அறிந்து கொள்ளலாம்)
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அதனால்தான் யானே அப்பனே அனுப்பினேன் உனை.
சுவடி ஒதும் மைந்தனின் விளக்கம்
திரு குமரன் ஐயா முற்பிறவியில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று குருநாதரிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க குருநாதரை பிறவியை தந்து மக்களுக்கு சேவை செய்ய அனுப்பியுள்ளார்.
அப்பனே, இதனால் நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய அப்பனே, இதனால் யாம் பார்த்துக் கொள்கின்றேன் உன் குடும்பத்தை. அப்பனே, கவலைகள் வேண்டாம்.
அப்பனே, எதை என்று புரிய. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இப்பொழுது உண்மை சம்பவத்தை சொல்கின்றேன். அப்பனே, நிச்சயம் தன்னில் ஏது என்று புரிய. அப்பனே, ஏன், எதற்காக இங்கு நீ வரவேண்டும்??? என்பவையெல்லாம் அப்பனே,
அதாவது நிச்சயம் அப்பனே, அனைத்து தேவர்களும் அப்பனே, சித்தர்களும் ஏன்? இங்கு வந்தார்கள்?? என்பவையெல்லாம் யாம் எடுத்துரைக்கின்றேன்.
அப்பனே, ஏன், எதற்காக பெருமான் இங்கு வராக அவதாரம் எடுத்தார்???
(பெருமாளின் வராக அவதாரம், மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் (தசாவதாரம்) ஆகும்.)
என்பவையெல்லாம் இப்பொழுது சொல்கின்றேன். அப்பனே,
அனைவருக்கும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட தெரிந்து கொள்ளுங்கள் என்பேன். அப்பனே,
தெரிந்து கொள்ளாமல் எதை வணங்கினாலும் அப்பனே பின் நிச்சயம் வீணே.
அதனால் அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்.
அப்பனே, கவலை வேண்டாம். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட உன்னைப் பற்றியும் இன்னும் விவரமாக அப்பனே, நிச்சயம் அனைவரைப் பற்றியும் விவரமாக யாம் எடுத்துரைப்பேன். நேரங்கள், காலங்கள் வருகின்ற பொழுது!!!!
அப்பனே, நல் விதமாக எதை என்று புரிய அப்பனே!!!!
கைலாயத்தில். அப்பனே, ஏது என்று புரிய. அதாவது பூலோகம் நிச்சயம் எதை என்று கீழ் நோக்கி எவை புரிய உடையப் போகின்றது என்று அனைவரும் அறிந்தார்கள்.
தேவர்கள்!!!
ஏது என்று அறிய பின் சிவபெருமானிடம் அனைவரும்!!!!
இவ்வாறு பின் உடைந்தால் ஏது என்று மக்கள் அனைவருமே ஏது என்று புரிய. அதாவது பின் சுற்றுகின்ற பொழுது அனைவருமே மடிவார்கள்.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
கைலாயத்தில் சிவபெருமானிடம் தேவாதி தேவர்களும் ரிஷிமார்களும் ஒன்று கூடி பூமிக்கு ஏற்படும் ஆபத்தினை குறித்து விவாதம் செய்தனர் கிரகங்கள் எல்லாம் பூமியின் மீது மோத போகின்றது அப்படி மோதினால் பூமியில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளும் மடிந்து விடும் இதற்கு என்ன செய்வது என்று ஈசனிடம் ஆலோசனை செய்தார்கள்.
அறிந்து இவை என்று கூட அறிவியல் ரீதியாகவே சொல்கின்றேன். ஏது என்று புரிய!!!
அகத்தியர் பெருமான் வவாக்கு
சரியாகவே பல நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அனைத்து கிரகங்களும் சேர்ந்து பின் புவியை தாக்கும்.
இவ்வாறு தாக்குகின்ற பொழுது பின் பலமாக ஏது என்று அறிய அவை பின் இடிக்கின்ற பொழுது இவை தன் நிச்சயம் பின் ஏது என்று புரிய பின் அதிவேகமாக இவையும் அதிவேகமாக அதாவது புவியும் அதிவேகமாக நகரும்.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்.
பல நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை கிரகங்கள் தன்னுடைய சுற்றுவட்ட பாதையில் சுற்றிக்கொண்டு வரும் பொழுது பூமியில் வந்து மோதும்... கிரகங்களும் அதி வேகத்தில் சுற்றிக்கொண்டே வர பூமியும் அதிவேகத்தில் சுற்றிக்கொண்டே வர அப்பொழுது இரண்டு வேகங்களும் ஒன்று கூடி மோதும் பொழுது பலத்த அழிவு ஏற்படும்.
இதனாலே பல வகையான பின் அறிஞர்கள் (சித்தர்கள்) ஏது என்று புரிய. பின் இப்படி ஆகக்கூடாது என்பதற்கிணங்க பல வகையில் கூட பின் சரி செய்து!!!!
அப்பனே (மீண்டும் ) அக்காலமும் நெருங்குகின்றது என்பேன். அப்பனே!!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
(அப்படி கிரகங்களும் பூமியும் மோதாமல் தடுக்க அதை சரி செய்வதற்கு சித்தர்கள் போராடினார்கள்..
ஆனால் குருநாதர் இப்பொழுது சொல்கின்றார் மீண்டும் அந்த பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த மோதல் நிகழ்வு நிகழப் போகின்றது அதற்கான கால நேரமும் வந்து கொண்டே இருக்கின்றது என்று கூறுகின்றார்.
இதனால் பல வகையில் கூட அப்பனே பின் பிழம்புகள். அப்பனே கடலும் எதை என்று கூட கொந்தளித்து. அப்பனே பல வகையில் கூட அப்பனே பின் அதாவது பின் மழை எவை என்று புரிய அனைத்தும் ஆழ்ந்துவிடுமப்பா!!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
அப்படி மோதல் நிகழ்வு நடந்து விட்டால் பூமியில் பூகம்பம் பலத்த மழை வெள்ளப்பெருக்கு நில அதிர்வுகள் அனைத்தும் ஏற்படும்.
அப்பனே இவையெல்லாம் தெரிந்து கொண்டால் நன்று.
அப்பனே நீங்களும் பூலோகத்தில் இருக்கின்றீர்கள். ஆனாலும் உண்மை நிலை தெரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை!!!
. அப்பனே ஏன் எதற்காக தெரிந்து கொள்ள வேண்டும்???. அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!
இவ்வாறாக அப்பனே பின் தெரிந்து கொண்டு. அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட தெரிந்து கொண்டாலே. அப்பனே போதுமானதப்பா
அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அப்பனே பின் யார் எதை என்று கூட பின் வணங்கினாலே. அப்பனே நிச்சயம் தன்னில் கூட பாதி. அப்பனே ஏன் எதற்கு. அப்பனே அனைவரும் சேர்ந்து. அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அப்பனே இப்பொழுதே நீங்கள் பாடினீர்கள். அப்பனே திருவாசகத்தை. அப்பனே பின் அதாவது அனைவரின் உடம்பிலும் அப்பனே பல சக்திகள் நெருங்குகிறது. இச் சக்திகள் ஒன்றாக இணைகின்ற பொழுது அனைத்தும் பாதுகாக்கப்படுமப்பா!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
அதிலிருந்து அழிவிலிருந்து மீள்வதற்கு கூட்டு பிரார்த்தனை கூட்டு வழிபாடு மிகவும் அவசியம் இப்பொழுது திருவாசகம் அனைவரும் இணைந்து பாடும் பொழுது சக்திகள் அனைவருக்கும் ஏற்பட்டது இது போன்ற சக்திகள் பல இடங்களில் ஒன்று கூடி பிரார்த்தனை திருவாசகம் முற்றோதல் செய்தால் சக்திகள் கோடி கோடி அழிவில் இருந்து காப்பாற்ற முடியும் என்று குருநாதர் கூறுகின்றார்.
குருநாதர் வாக்கு
அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அப்பனே திருவாசகம் சாதாரணம் இல்லை என்பேன். அப்பனே!!!
உலகத்தை. அப்பனே அதாவது புவியின் தன்மை கூட. அப்பனே பின் நிச்சயம் அனைவரும் ஒன்று சேர்ந்து. அப்பனே பின் பலமாக பாடினால். அப்பனே நிச்சயம் எதிரொளிக்குமப்பா!!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
பக்தர்கள் மக்கள் அனைவரும் ஒன்று கூடி திருவாசகம் பாராயணம் செய்தால் பதிகங்களை பாடினால் சக்திகள் கூடி அழிவிலிருந்து காப்பாற்றலாம் என்று குருநாதர் கூறுகின்றார்
அப்பனே நீங்கள் தலையில் அப்பனே பின் எவை என்று கூட ஒரு சுமையை சுமையை அப்பனே சுமந்து கொண்டு செல்கின்றீர்கள். அப்பனே !!
நிச்சயம் அப்பனே ஒருவர் மட்டும் அப்பனே பின் கை பிடிக்காமலே ஒருவர் கையை பிடிப்பார்கள். எப்படி????
அப்பனே ஏனென்றால் பின் உண்மை தெரியாதவர். அப்பனே!!!
அவ்வளவுதான்!!
உண்மை தெரிந்து கொண்டவர். அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய. அப்பனே பின் அப்படியே நிற்கும் என்று!!!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
ஒருவர் தலையில் எதையாவது சுமந்து செல்லும் பொழுது சிலர் அது கீழே விழாமல் இருக்க பிடிப்பார்கள் பிடித்துக் கொண்டே வருவார்கள்.
ஆனால் சிலர் சுமையை வைக்கும் பொழுதே அதை விழாதவாறு சரியாக வைத்து பிடிக்காமல் வருவார்கள்.. அவர்களுக்கு அது தெரியும் கீழே விழாது என்று!!
அப்பனே இதனால் ஏது என்று புரிய. அப்பனே இவ்வாறாக ஈசனிடம் அனைவரும் நிச்சயம் தன்னில் கூட. அப்பனே பின் தேவர்களும். அப்பனே அனைத்து. அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட. அப்பனே தேவலோகத்திலிருந்தும். அப்பனே ஏது என்று புரிய. அனைத்தும் அப்பனே நிச்சயம் சென்றனர் என்பேன் அப்பனே!!
இதனால் அப்பனே நன்கு எதை என்று புரிய. இதனால் அப்பனே அனைவரும் ஒன்று சேர்ந்தனர். அப்பனே!!
பின் பிரம்மாவும். அப்பனே விஷ்ணுவும் கூட.
அப்பனே ஆனாலும் இறைவன் ஒன்றுதானப்பா!!
ஆனாலும் ஏன்? எதற்கு? என்றெல்லாம் பிற்பகுதியில் யான் சொல்வேன்.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
இறைவன் ஒன்று தான் சிவன் பிரம்மா விஷ்ணு முருகன் விநாயகர் அம்பாள் என தனித்தனியாக அவதாரங்களாக செயல்படுவதை குறித்து ரகசியங்களை எல்லாம் குருநாதர் வாக்குகளில் கூறப்போகின்றார் வரும் காலங்களில்.
ஏனென்றால் முதல் வகுப்பிலிருந்தே தொடங்க வேண்டும். அப்பனே நிச்சயம் தன்னில் கூட
எதை எங்கு சொல்ல என்று.
கைலாயத்தில்
ஆனாலும் பின் ஈசன் நன்கு உணர்ந்தவன். அனைத்தும் கூட!!!
எதை என்று இவ்வாறு நிச்சயம் பின் புவி குலுங்க போகின்றது என்பது. நிச்சயம் தன்னில் கூட.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
ஈசன் அனைத்தும் அறிவார் பூமிக்கு ஒரு ஆபத்து நெருங்கிக் கொண்டு உள்ளது பூமி முழுவதும் அதிர்வுக்கு உள்ளாகப் போகின்றது என்பது ஈசன் அறிவார்.
அதாவது அனைவரும் சேர்ந்து பின் ஈசனாரே!!!! இவ்வாறு குலுங்குகின்ற பொழுது அனைத்தும் பூலோகத்தில் உள்ள அனைத்து பொருளும் அழியும்.
எப்படி நீங்கள் அமைதியாக இருக்கின்றீர்கள்?????. என்று!!!!
இவ்விடத்தில் வாக்குகள் நல்கும் குருநாதர் அகத்தியர் பெருமான்... ஆலயத்தில் வாக்குகள் கேட்டுக் கொண்டிருப்பவர்களிடம் கேள்வி கேட்கின்றார்.
அப்பனே உங்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படாதா???????.
அனைத்து கிரகங்களும் கூட இவ்வாறாக மோதிக் கொள்கின்ற பொழுது அதற்கும் வலிகள் ஏற்படாதா??
(பூமியை கிரகங்கள் இடிக்கும் பொழுது கிரகங்களும் பாதிப்பு சேதாரம் அடையாதா என்ற கேள்வி உங்களுக்குள் வரவில்லையா என்று குருநாதர் கேட்கின்றார்)
என்று நீங்கள் ஏன் கேட்கவில்லை??? என்னிடத்தில்!!!
கூறுங்கள்!!!.
அப்பனே எதனால் என்றால்???
அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவையெல்லாம் (கிரகங்கள் எல்லாம் பூமியை விட) வலிமையானவை என்பேன். அப்பனே இரும்பு போல்.
இவ்வாறாக எதை என்று புரிய. இவ்வாறு புரியாமலே ஆனாலும் ஈசனும் ஏது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட!!!!
மீதி போகன் உரைப்பான்.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்!
கிரகங்கள் எல்லாம் பூமியை விட சக்தி வாய்ந்தது அதனால் பூமியை இடிக்கும் பொழுது கிரகங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
குருநாதர் இதுவரை வாக்குகள் தந்துவிட்டு இதற்குப் பிறகு போகர் சித்தர் வந்து வாக்குரைப்பார் என்று.. சொல்லிவிட்டார் இப்பொழுது போகர் மகரிஷி ஜீவநாடியில் வந்து வாக்குகள் தரப் போகின்றார்.
போகர் சித்தர் பெருமானின் வாக்கு!!!
அன்றென்று என்றென்று மனமே!!!! உன்னை துடிக்காத நாளில்லை. என்றென்று மனமே!!!
எப்போதும் என் கையில் தானே. பின் வேலனே. பின் விளையாடி விளையாடி விளையாடி அனைத்தும் தந்தானே.
கும்மியடி என்ற வார்த்தையை யானே உபயோகித்து தானே. அனைத்தும் அனைத்தும் தானே!!!!
எப்போதும் எனை நினைத்தால் போதும் என்று சொன்னவனே கந்தா.
கந்தனே பின் நீயும் பின் அனைத்தும் என்றென்றும் வேலோடு வந்திட்டு!!!!. அதனையும் தானே அங்கும் இங்கும் சுற்றினாயே.
சுற்றிட்டு சுற்றிட்டு பூமி தன்னில் கூட எங்கெங்கும் எதனென்றும் அறியாத வேலவா.
வேலவா எத்தனை எத்தனை?? எத்தனை?? அவதாரங்கள்??
அண்டினேன் உன்னை!!
ஏந்தினேனே கையோடு!!
எப்போதும் அதை பின் அறிந்தேனே.
உன் அன்பும் பின் பின் பின் எத்தனை?? தான்!!
எத்தனை??? எத்தனை???? விதவிதமான பின் மனிதர்கள் தானே வந்து வந்து பின் ஆசிகள் பெற்று கொண்டாரே.
அனைவருக்கும் நீயே கந்தா கந்தா. அனைவருக்கும் நீயும் கந்தா கந்தா.
எதுவோ என்றும் தெரியாமல் வந்திட்டார்களே.
எதை என்றும் தெரியாது வந்திட்டார்களே.
அனைவருக்கும் கந்தா!! ஆசிகள் நீயும் நீயே இங்கே பார்த்துக் கொண்டிருக்கின்றாயே. கந்தா!!!
யாருக்கும் தான் பின் தெரியும்???. கண்ணா கண்ணா கண்ணா!!!!
எதை பின் முருகனை நினைத்து அகிலாண்டேஸ்வரி அகிலாண்டேஸ்வரனையும் நினைத்து பாடுகின்றேனே.
அறிந்தும் ஏது என்று கூற. குருநாதன் மிஞ்சிய பின் உலகில் ஏது என்று அறிய!!
காண்பித்தாரே பல வகைகளில் கூட உண்மை பொருளை.
ஏது என்று அறிய அனைத்தும்
அதனால் சொல்கின்றேன்.
அனைவருமே இவ்வாறாக அனைவரும் கூடி நின்று!!!
ஈசனார்!!! அறிந்தும் அகத்தியனே!!!...வா!!...... என்று அழைத்தார்.
அனைவருக்குமே ஆச்சரியம் ஏது என்று அறிய தேவர்களும் பல ரிஷிமார்களும் குருமார்களும் இருக்க!!! பின் அனைவரும் அகத்தியனை பார்த்தனர்.
அகத்தியனும் ஆச்சரியத்துடனே!!!
அறிந்தும் ஈஸ்வரியும் (பார்வதி தேவி) ஏது என்று கூற. மைந்தனே வா என்று!!!!
(பார்வதி தேவியும் அகத்தியரை அழைக்க!!)
அறிந்தும் அழகாக அகத்தியனும் போய் நின்று !!!!
ஈசனார் அகத்தியரை பார்த்து!!
ஏது என்று இவை அறிய அறிந்தும் அதாவது இப்பொழுது அனைவருமே வந்திருக்கின்றார்கள். எதற்காக? என்று தெரியுமா? என்று!!
அறிந்தும் பின் உங்களுக்கு தெரிய யான் என்ன பேச வேண்டும்?? என்று அகத்தியன் கூட!!
ஏன் எதற்கு என்று ஈசனார்!!!!...
அகத்தியனே உனக்கு ஒரு வேலையை கொடுக்கின்றேன். நிச்சயம் செய்வாயா??? என்ன!!!!.
அகத்தியர் ஈசனாரிடம்!!!
அறிந்தும் ஏது என்று புரிய பின் அவ்வாறாக நிச்சயம் பின் அதாவது பின் நீங்கள் கட்டளையிட்டால் பின் இடமில்லை. ஏது என்று புரிய அதாவது யான் மறுபேச்சை எப்படி.??
ஈசனே உங்களுடைய கட்டளைக்கு மறுபேச்சு இல்லை என்று !!!
(அகத்தியர் மறுமொழி ஈசனுக்கு)
ஈசனார் அகத்தியரை பார்த்து..
அறிந்தும் ஏது என்று புரிய அகத்தியனே!!! ஏது என்று அறிய அதாவது உனக்கு ஏது என்று புரிய அறிந்தும் கூட வில் ஒன்றை அதாவது தண்டத்தை ஒன்று ஏது என்று புரிய அதாவது நிச்சயம் பிடி.
ஈசனாரின் கட்டளையை கேட்டு கூடியிருந்த
அனைவருமே முழித்தனர்.
ஏது என்று புரிய இவ்வளவு பின் நடக்கப்போகின்றது.
ஆனால் தண்டத்தை பிடி என்கிறானே ஈசனாரும்!?!?!?
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
பூமிக்கு பெரிய ஆபத்து நிகழப் போகின்றது ஆனால் ஈசனார் அகத்தியரை அழைத்து ஒரு தண்டத்தை பிடி என்று சொல்கின்றாரே என்னவாக இருக்கும் என்று அனைவரும் புரியாமல் முழித்தனர்.
ஆனாலும் அறிந்தும் ஏது என்று புரிய!!!
அதாவது அறிந்தும் எதை என்று அறிய ஆனாலும் பின் அகத்தியன் கையில்!!
(ஈசனார் தண்டத்தை அகத்தியர் கையில் கொடுத்தார்)
மீண்டும் கொடுத்த தண்டத்தை பின் பிடிங்கி பின் வீசி எறிந்தான் ஈசனார்.
எதை என்று அறிய அகத்தியனே!!!! முடிந்தால் இதை பிடித்துக்கொண்டு வா!!! என்று.
அகத்தியனும்!!!
தந்தையே!!!! தாயே!!!!!! என்ன விளையாட்டு இது!?!?!.
அனைவரும் ஒன்று சேர்ந்து எவ்வாறு பூமியை எவை என்று அறிய காப்பாற்ற வந்திருக்கின்றார்கள்.
நீங்கள் ஏதோ!? சொல்வீர்கள் என்றால்!!!!!! நீங்கள் பின் விளையாட்டாக விளையாடுகின்றார்களே. நியாயமா?????.
ஈசனாரும்!!!
அகத்தியனே யான் பின் சொன்னால் பின் ஒரு அர்த்தம் உண்டு.
நீ சென்று தண்டத்தை பிடித்து வா என்று.
ஏது என்று அறிய இதனால் மிக வேகமாக அகத்தியர் அறிந்தும் ஏது என்று அறிய!!!
(அகத்தியர் பெருமானும் தண்டத்தை பிடிக்க சென்றார்)
அதாவது சரியாகவே நிச்சயம் மீண்டும் பிடித்து விடூவான் என்று ஈசனுக்கு தெரியும்.
ஆனால் பிடிக்கின்ற பொழுது இன்னும் வேகம்.
(தண்டம் அகத்தியர் பிடிக்க வரும் பொழுது மேலும் வேகத்தை கூட்டி அதிவேகமாக சென்று கொண்டே இருந்தது)
எவை ஏது எதை புரியாமலும் அறியாமலும் அறிந்தும் இவை என்று அறிய ஆனாலும் தண்டம் வேகம் காட்டி காட்டி!!!
எதை என்று புரிய இதனால் அறிந்தும் கடைசியில் பின் எவை என்று அறிய அதாவது பிடிக்கவே முடியவில்லை. அகத்தியனால்!!!
ஆனாலும் பின் அகத்தியன் உணர்ந்து கொண்டான்.
இது ஈசனின் லீலையே என்று!!!
ஆனாலும் எதை எப்படி ஏது என்று அறிய அதாவது பின் நிச்சயம் அகத்தியன் அனைத்தும் அறிந்தவன்.
அதனால் எதை என்று புரிய அப்படியே ஏது என்று அறிய ஒரு பின் நேர்கோட்டில் சென்று கொண்டிருக்கின்றது. இது !!!
ஆனாலும் அதை தன் எப்படி?? மீண்டும் பின் எதை என்று ஒரே இடத்தில் நின்று மீண்டும் அவ் ஈர்ப்பு விசையை கண்டறிந்தான் அகத்தியன்.
(தண்டம் ஒரு நேர்கோட்டில் ஒரு விசையோடு செல்கின்ற பொழுது.. அந்த ஈர்ப்பு விசையை கட்டுப்படுத்தி தன்வசப்படுத்த உலகத்தை மாற்றிய பொழுது தண்டம் இப்பொழுது அகத்தியரை நோக்கி வர தொடங்கியது அப்பொழுது தண்டத்தை பிடித்து விட்டார் அவ்வாறு குருநாதர் அகத்திய பெருமான் தண்டத்தை பிடித்த இடம் பூமியில் ஆதி வராக நல்லூர் இருக்கும் இடத்தில்)
இதனால் உலகத்தை சரியாக இப்படி மாற்றினான்.
மீண்டும் அது திரும்பி வந்தது.
எதை என்று அறிய எவை என்று புரிய பின் அவ் விசையை பின் பிடித்தவன் ஏது என்று அறிய சரியாகவே புவிதனில் இங்கேதான்!!!
அங்குதான் பின்!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
குருநாதர் தண்டத்தை பிடித்த இடம் . இந்த இடம்தான். . நம்ம கோயில் அந்த தண்டத்தை கொடுத்த இடம்.
உடன் இருந்த திரு அகத்தியர் குமரன் ஐயா இடைமறித்து ஐயா இங்கே தண்ட தீர்த்த குளம் என்று ஒரு இடம் இருக்கின்றது என்று கூறினார்
தண்ட தீர்த்தம். ஐயா தண்ட தீர்த்தம்னு சொல்றாரு. தண்ட தீர்த்தம்னு ஒரு குளம் இருக்கு.
அங்கு கூடியிருந்த உள்ளூர் அடியவர்களும் ஆமாம் ஐயா இங்கு தண்ட தீர்த்த குளம் என்று பெரிய குளம் இருக்கின்றது முழுவதும் தாமரை நிறைந்து இருக்கின்றது என்று கூறினார்கள்.
இதற்கும் வாய்ப்பாடு ஏது என்று புரிய அனைத்து அனைத்தும் கணக்கிலும் வல்லவன் அகத்தியன்.
அறிந்தும் ஏது என்று புரிய. அதனால் உங்கள் தலைவிதிகள் எப்படி இருந்தாலும் கணக்கை சரிபார்த்தே மாற்றுபவன் அகத்தியன்.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
உங்கள் விதியை எப்படி இருந்தாலும் கணக்கை சரிபார்த்து சரிபார்த்து மாத்திடுவாரு. மாத்திடுவாரு.
அகத்தியனும்
அறிந்தும் ஏது என்று புரிய இவ்வாறாகவே மீண்டும் பின் ஈசனார் இடத்திற்கு பின் பிடித்து வந்துவிட்டேன் என்று!!
அனைவரும் ஏது என்று புரிய இவ்வுலகத்தில் வல்லவன் அகத்தியனே.
இதனால் அனைவரும் சேர்ந்து விழா எடுங்கள்!!! என்று!!!
அகத்தியனும் வேண்டாம். தாயே!! தந்தையே!! ஆனாலும் யானும் பிடித்து வரக்கூடாது என்றுதான் எண்ணியிருந்தேன்!!...
ஆனாலும் எதை என்று புரிய !!!
அறிந்தும் ஏது என்று அகத்தியனுக்கு பட்டம் சூட்டுக!! என்று!!! ஈசனார்!!!
எதை என்று புரிய பின் அறிந்து கூட பிரம்மம். பிரம்மன் ஒரு முனையிலும் பின் விஷ்ணுவும் ஒரு முனையிலும் பின் குடை பிடிக்க ஏது என்று அறிய
ஆனாலும் பிரம்மாவும் விஷ்ணுவும் எதற்கு
அகத்தியருக்கு இப்படி????? என்று !!!
(சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்... ஈசனார் கட்டளைப்படி அகத்தியருக்கு பட்டம் சூட்டுவதற்கு குடை பிடிக்க வந்த பிரம்மாவும் விஷ்ணுவும் மனதில் அகத்தியருக்கு ஏன் இவ்வளவு சிறப்பு என்று மனதில் நினைத்துக் கொண்டார்கள்)
ஏது என்று புரிய இதனால் நிச்சயம் மீண்டும் எதை என்று அறிய ஆனாலும் பின் எவை என்று அறிய ஆனாலும் பின் அகத்தியன் மீண்டும் அனைவரும் ஒன்று சேர்ந்து ஏன்? எதற்காக? ஈசனாரே இப்படி???? இன்னும் பின் ஏது என்று சில நாட்களே இருக்கின்றது.
சரி செய்யும் நீயும்!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
குருநாதருக்கு பட்டம் சூட்டி விழா எடுப்பதற்கு விருப்பமில்லை.. ஈசனாரே? என்ன இது!!!... பூமிக்கு பேராபத்து நெருங்கி வந்து கொண்டிருக்கின்றது இந்த நேரத்தில் எனக்கு இந்த விழா அவசியமா என்று குருநாதர்.. ஈசனாரிடம் கேட்டார்.
போகர் பெருமான் வாக்கு
அப்பனே ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். ஈசன் விளையாடுவது என்பது நிச்சயம் தன்னில் கூட தன் பக்தரிடம் விளையாடுவதே பின் சந்தோஷம் என்பேன். ஈசனுக்கு!!!
விளையாடியே பக்குவத்தை கொடுப்பான். அனைத்தையும் கொடுப்பான்!!!
அதுவும் துன்பம் என்றதை கொடுத்தே இன்பம் காண்பான்.
ஆனாலும் பன்மடங்கு மீண்டும் பின் அனைத்தும் உங்களிடத்திலே உண்டு.
ஏன் ? எதற்கு? என்றால் தன் பிள்ளைகள் பக்குவம் பட வேண்டும் என்பதற்கே!!!
ஈசனார்!!
ஆனாலும் ஏது என்று புரிய அனைவரும். அதாவது நிச்சயம் தன்னில் கூட அனைவருக்கும் சொல்கின்றேன். அகத்தியனால் மட்டுமே இவ்வுலகத்தை காக்க முடியும்.
எதனால் நிச்சயம் தன்னில் கூட அகத்தியனே செல்லட்டும். இதை தாங்கி பிடிப்பான் புவிதன்னை என்று!!!
ஆனாலும் யாரும் ஒத்துக்கொள்ளவில்லை
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
.கூடியிருந்த தேவாதி தேவர்கள் யாரும் ஈசன் உடைய கருத்தில் ஒத்துப் போகவில்லை
நாங்களும் செய்வோம் ஏன் எங்களால் முடியாதா என்றெல்லாம் விவாதம் புரிந்தனர் ஈசனிடம்.
எங்களால் முடியாதா??? என்றெல்லாம் ஈசனிடம் போராடினார்கள்.
அகத்தியரும்
அறிந்தும் ஈசனாரே!!! ஏன் இப்படி???
ஏது என்று புரிய அனைவரும் ஒற்றுமையாக இருக்கின்றார்கள்!!!
நீயே !!! எதை என்று நீயே காப்பாற்றலாமே என்றெல்லாம்!!!!!
ஈசனார்.
எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அகத்தியனே!!!! ஏது என்று புரிய அறிந்து கூட!!
இவ்வுலகத்திற்கு பின் சேவைக்காகவே எதை என்று கூட நீ ஒரு சேவகனே.
அதனால்தான்!!
அனைவரும் அமைதியாக இருங்கள் என்று!!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
அகத்தியனால் மட்டுமே இந்த உலகத்திற்கு வரும் ஆபத்தில் இருந்து காப்பாற்ற முடியும் நீங்கள் அனைவரும் அமைதியாக இருங்கள் என்று அனைவரிடமும் ஈசன் கூறினார்.
ஈசனார் அகத்தியரை பார்த்து
அறிந்தும் ஏது என்று புரிய பின் அவ் சேவை மனப்பான்மை உந்தனக்கு இருக்கின்றது.
எப்பொழுது அச்சேவை மனப்பான்மை உனக்கு இருக்கின்றதோ என்னுடைய சக்திகள் அனைத்தும் பின் பெறுவாய். நீயே!!!
என்று ஈசனார்!!!
ஏது என்று புரிய பின் நிச்சயம் ஏது என்று அறிய.!!!
அதாவது படைத்தேன். ஏது என்று தெரியாமல் கூட !!
அதாவது அவ் மனப்பான்மை நிச்சயம் பின் என்னை விட ஆற்றல் உனக்கு.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
(ஈசனார் சொல்கின்றார்... நான் அனைத்தையும் சிருஷ்டித்து விட்டேன்!!
அகத்தியருக்கு சேவை மனப்பான்மை அதிகம் என்னை விட ஆற்றல் உனக்கு இருக்கின்றது என்று!!!
அதனால் காப்பாற்றும் வல்லமை உனக்கு இருக்கின்றது அதனால் நீ தான் சென்று காப்பாற்ற வேண்டும் என்று அகத்தியரிடம் ஈசனார் கூறுகின்றார்.
அனைவரும் திகைத்தனர். ஏது என்று புரிய.
(கூடியிருந்த தேவாதி தேவர்கள் அனைவரும் திகைத்தனர்)
ஆனாலும் அனைவருமே சொன்னார்கள். யாங்கள் கூட சேவை செய்கின்றோம் அல்லவா என்று.
எதை என்று புரிய.
ஆனாலும் நிச்சயம் பின் அகத்தியனும் கூட!!!!!
இப்படியே ஏது என்று புரிய பேசிக்கொண்டே இருந்தால் இடிக்கத்தான் போகின்றது. மனிதர்கள் அழியத்தான் போகின்றார்கள் என்று.
அறிந்தும் ஏது என்று கூற.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
நீங்கள் இப்படியே கூடி கூடி பேசிக் கொண்டிருந்தால் ஒன்றும் நடக்கப் போவதில்லை பூமி மீது கிரகங்கள் வந்து எடுக்கத்தான் போகின்றது மனிதர்கள் அழியப் போகின்றார்கள் அதனால்.. விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று.
அதாவது பின் ஈசனாரும்!!!! பிரம்மனே நீ ஏதாவது செய்கின்றாயா???. பின் கூறு!!!.
அதாவது எழுதி வைத்துவிட்டாய் நீ. (அனைவரின் தலைவிதியை)
பின் ஏது என்று புரிய. அதாவது கஷ்டங்கள் படட்டும் என்று.
பின் ஏதாவது!!! சொல்கின்றாயா நீ??.... என்று ஈசனார்!!!
பிரம்மனும்!!! அறிந்தும் யான் ஏன் செய்ய வேண்டும்?????
அவனவன் கர்மா அவனவனையே தாக்கும்.
யான் பார்ப்பதுதான்.
அறிந்தும் என் தவறா இது????.
அதனால் ஏது என்று புரிய. யான் பார்த்துக்கொண்டு ஏது என்று அறிய.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
ஈசனை பார்த்து பிரம்மா அவன் கர்மா அவனை தாக்கும் அவனவன் செய்த பாவங்கள் அவனை தாக்கும் இதில் நான் என்ன சொல்வது நான் என்ன செய்வது என்று பிரம்மா கூறிவிட்டார்.
ஈசனாரும்!!!
ஏது என்று புரிய. பின் அதாவது பின் விஷ்ணுவே!!! ஏது என்று அறிய. பின் ஏதாவது அறிகின்றாயா நீ.
விஷ்ணு:
அறிந்தும் யான் செல்கின்றேன் பூலோகத்தை காக்க என்று.
அறிந்து கூட அகத்தியனும் நில்.
விஷ்ணுவே!!!
ஏது என்று புரிய. புரியாமல் இதனால் மக்கள் பல வகையிலும் கூட பாவங்கள் நிறைந்துள்ளது. இதனால் நீ சென்றுவிட்டால் பின் அனைத்தும் பின் புவியும் அழிந்துவிடும். அதனோடு சேர்ந்து நீயும் அழிந்து விடுவாய்.
விஷ்ணு:
எதை என்று கூற. அறிந்தும் கூட!!!
அகத்தியனே ஏன் இவ்வாறாக உனக்கு சக்தி ஏது என்று புரிய. அவ்வாறு இருக்கின்றது. அதனால் நீ பேசுகின்றாயா என்ன?????
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
ஈசனார் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நாராயணன் நான் சென்று உலகத்தை காப்பாற்றுகின்றேன் என்று சொன்னபோது குருநாதர் அகத்திய பெருமான்... நீ செல்ல வேண்டாம் விஷ்ணுவே நீங்கள் சென்றால் மனிதர்களுடைய பாவங்கள் அதிகமாக உள்ளது அதனால் அழிவுகளும் அதிகம் ஏற்படும் உங்களுக்கும் உங்களுடைய சக்திக்கும் பாதிப்பு ஏற்படும் என்று அகத்தியர் விஷ்ணுவை தடுக்க...
அப்போது விஷ்ணு அகத்தியரை பார்த்து உனக்கு சக்திகள் அதிகம் உனக்கு ஆற்றல்கள் அதிகம் என்பதால் என்னை தடுக்கின்றாயா என்று விவாதம் புரிந்தார். நான் பூமியை காப்பாற்ற செல்லத்தான் போகின்றேன் என்று விஷ்ணு முடிவு எடுத்துவிட்டார்.
ஏது என்று புரிய. இதனால் பின் செல்கின்றேன். பார்ப்போம் என்று. எதை என்று அறிய.
ஏது என்று புரிய. இவ்வாறாக விஷ்ணு செல்கின்ற பொழுதே சூரியன் அருகில் செல்கின்ற பொழுதே பின் எவை என்று கூட தொட. எவை என்று அறிய. இதனால் பின் வெப்பம் அதிகமாகி பின் அனைத்தும் எரிந்தது.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
அகத்தியரின் பேச்சைக் கேட்காமல் விஷ்ணு பூமியை காப்பாற்றுகின்றேன் என்று கிரகங்கள் பூமியை நெருங்கும் பொழுது கிரகங்களில் முதன்மையானவரான சூரியனை நெருங்கும் போது சூரியனுடைய வெப்பம் தாங்காமல் அனைத்தும் எரிந்தது சமாளிக்க முடியாமல் திரும்பவும் ஈசன் இடத்தில் விஷ்ணு ஓடி வந்து விட்டார்.
பின் ஐயயோ!!!! என்று மீண்டும் ஈசனிடத்திலே.
விஷ்ணு மீண்டும்!!
அறிந்தும் ஏது என்று புரிய.
பின் அதாவது அகத்தியனும். பின் அதாவது பெருமானே. பின் பார்த்தாயா!!!!!.
எதை என்று புரிய. அறிந்தும் கூட அதாவது மக்களிடையில் அவ்வளவு பாவங்கள்.
அதாவது பின்னால் ஏது என்று அறிய.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
விஷ்ணுவே இப்பொழுது பார்த்தீர்களா மக்கள் உடைய பாவங்கள் அவ்வளவு அதிகமாக இருக்கின்றது அதனால் தான் அவ்வளவு வெப்பம் உங்களால் தாங்க முடியவில்லை பார்த்தீர்களா அதனால் தான் நான் சொன்னேன் என்று.
அறிந்தும் ஏது என்று புரிய.
அகத்தியனே!!! பின் அதாவது அங்கும் அமைதியாக இருக்கின்றார்கள்பேச வேண்டியவர்கள்.
நீ பேசு.
(என்று ஈசனார் அகத்தியருக்கு கட்டளை)
அறிந்தும் ஏது என்று புரிய.
ஈசனார்
இதனால் பின் அனைவரிடமும் கேட்கின்றேன். ஏது என்று அறிய.
இதனால் புரிந்தும் கூட.
அதனால் பின் நாராயணன் அறிந்து கூட.
அதாவது நிச்சயம் நீ ஒரு பின். அதாவது எதை என்று புரிய. பின் ஒரு அவதாரம் எடுத்துச் சென்றால் நிச்சயம் அப்படியே நீ காக்கலாம் என்று.
அறிந்தும் ஏது என்று புரிய. அதாவது நிச்சயம் தன்னில் கூட. அதாவது எவை என்று புரிய.
அனைவரும் முடிவெடுத்தனர். அகத்தியனே சென்று காப்பாற்றட்டும் என்று.
அறிந்தும் அகத்தியன் கூட நிச்சயம் ஆசைப்பட்டு விட்டான். அவனையே பின் அனுப்புவோம் என்று.
எதை என்று புரிய. விஷ்ணுவும் கூட அகத்தியனே போதும். நீயே!! செல்!! என்று.
எதை என்று புரிய. பின் மீண்டும் பின் அகத்தியன் கூட பின் விஷ்ணுவிடம் ஏது என்று அறிய.
இதனால் நிச்சயம் தன்னில் கூட. அதாவது பாவம் சேராது உன்னை.
பின் பன்றியின் அவதாரம் எடு.
உனக்கு யான் உதவி செய்கின்றேன்.
விஷ்ணு:
அகத்தியனே என்ன சொல்கின்றீர்கள்??? என்று.
அகத்தியர்:
(விஷ்ணுவே நீ வராக அவதாரம்) எடு.
ஏது என்று யான் உன் அருகிலே இருப்பேன். உன் கூடவே வருவேன் என்று.
ஏது என்று அறிய. அதனுள்ளே பின் அனைத்தும் இடித்தும் விட்டது.
(அதற்குள் கிரகங்கள் வந்து பூமியின் மீது மோத ஆரம்பித்துவிட்டது)
எதை என்று புரிய. மீண்டும் எவை என்று உடனே ஏது என்று அறிய. பன்றின் ரூபம்!!!
எதை என்று அறிய. பின் மீண்டும் பின் அதிவேகமாக இவர்களும் எப்படி ஏது என்று அறிய.
அறிந்தும் ஏது என்று புரிய. கலி காலம் ஏது என்று அறிய. இதனால் எப்படி ஏது என்று அறிய. அதாவது நிச்சயம் தன்னில் கூட. பின் கடைசியில் எவை என்று அறிய. பின் அதாவது பேசிக்கொண்டே விஷ்ணுவே ஏது என்று கூட சரியாகவில்லை. அனைத்து திறமைகளும் யானும் கையை பிடித்திருக்கின்றேன் உனை.
இதனால் பின் நிச்சயம் தன்னில் கூட. பின் நீட்டு நாக்கை.
எதை என்று அறிய. பின் அப்படியே ஏது என்று அறிய. நின்றிற்று புவி கூட!!!
அப்படியே எதை என்று அப்படியே சுற்ற ஆரம்பித்து விட்டது.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
பன்றி அவதாரம் அதாவது வராக அவதாரம் விஷ்ணு பகவான் எடுத்து அகத்தியர் உடன் வந்து கிரகங்கள் பூமியை மோதிக் கொண்டு பூமி அதிர்ச்சிக்கு உள்ளான பொழுது போராடி காப்பாற்றும் போது.. கலிகாலத்தில் பாவங்கள் அதிகம் அதிகம் அதனால் மிகுந்த போராட்டத்திற்கு இடையே அப்பொழுது குருநாதர் அகத்தியர் பெருமான் பன்றி அவதாரமான விஷ்ணுவைப் பார்த்து உன்னுடைய நாக்கை நீட்டி பூமியை தொடு என்று கட்டளை விட.. அப்பொழுது பூமி அதிர்வுகள் குறைந்து மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி சுற்ற ஆரம்பித்துவிட்டது.
ஏது என்று புரிய. இவ்வாறாகவே அறிந்தும் கூட ஏன் எதற்கு இன்னும் கூட அறிந்து கூட புரியவில்லையா. என்ன???
(போகர் பெருமான் நம்மை பார்த்து புரியவில்லையா என்ன என்று கேட்கின்றார்)
ஏது என்று புரிய. இதனால் பின் அங்கிருந்து எதை என்று அறிய. அழகாகவே அறிந்தும் ஏது (ஆதி வராக நல்லூர் வராக அவதாரம் ஸ்ரீமுஷ்ணம் ஆலயம் ஒவ்வொரு பூவராகவ பெருமாள் வராக அவதாரம்)
இங்கு பின் வரவேண்டும்??? என்பதை எல்லாம் இன்னும் விளக்கத்தோடு சொன்னால்தான் புரியும்.
இன்னும் நாட்கள் செல்லும். அதனைப் பற்றி தெரிவிப்பதற்கு!!!
இப்பொழுது மேலோட்டமாகவே சொல்லி இருக்கின்றேன்.
அவ்வளவுதான்!!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
போகர் பெருமான் சொல்கின்றார்... பெருமாள் வராக அவதாரம் எடுத்து ஏன் இங்கு வரவேண்டும் என்பதை பற்றி சிறிதளவு தான் சொல்லி இருக்கின்றார் இன்னும் பல ரகசியங்கள் இருக்கின்றது அவையெல்லாம் சிறிது நாட்களுக்குப் பிறகு முழுமையான ரகசியங்கள் எல்லாம் வரலாறு எல்லாம் வருங்காலத்தில் வெளிவரும் என்று கூறுகின்றார்.
போகர் பெருமான் வாக்கு
எதை என்று புரிய. இதனால் எதை என்று அறிய. இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட பின் பல வழியில் கூட இன்னல் பட்டவர்கள் ஏது என்று புரிய. இருவரும்!! ஏது என்று அறிய.
இங்கு பின் அதாவது வந்து பின் பிரம்மா விஷ்ணு எவை என்று அறிய. நிச்சயம் தன்னில் அறிந்து கூட அனைவரும் இருக்கின்றார்கள்!!!
சுவடி ஓதும் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா... உடன் இருந்த அடியவர்களிடம்
எல்லாரும் வாழ்க்கையில கஷ்டப்பட்டு துன்பத்தை அனுபவித்தவர்கள் அனைவரும் இன்று வரவேண்டும்
எல்லாம் வந்து என்ன பண்ணனும். வந்து இங்க எல்லோரும் வேண்டிக் கொள்ள வேண்டும்.பிரம்மா விஷ்ணு சிவன்.
அப்போது திரு ஜானகிராமன் ஐயா உடன் இருந்த அடியார்களிடம் இங்கு இருக்கும் ஆலயத்தில்...
ஐயா தரிசனம் செய்வித்தீர்கள்!! . விஷ்ணு தரிசனம் செய்வித்தீர்கள் சரி.
விஷ்ணு ஆலயம்
ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீ பூவராக பெருமாள்
ஈசன் ஆலயம்
ஸ்ரீமுஷ்ணம் நித்தீஸ்வரர் கோயில் திரும்முட்டம் உடைய மகா தேவர்கோயில்.
பிரம்மாவிற்கு ஆலயம் எங்கு இருக்கின்றது என்று கேட்டதற்கு ??
கூடியிருந்த அடியவர்கள் அனைவரும் ஒவ்வொன்றை சொல்ல!!!!
அடியவர்கள் அனைவரும் பிரம்மா! சிவன்! விஷ்ணு! மூவரும் இங்கு இருக்கும் ஆலயத்தில் இருக்கின்றார்கள் என்று பதில் தந்தார்கள்.
அப்போது குருநாதர் அகத்திய பெருமான்!!!
அறிந்தும் அப்பனே இருக்கின்றது. இருக்கின்றது என்று சொல்லிக்கொண்டிருக்கின்றீர்கள். அப்பனே எதை என்று புரிய.
அப்பனே இவை நிச்சயம் தன்னில் கூட !!!
அறிந்தும் ஏது என்று கூட இவை தன் பிரம்மா மறைமுகமாக எவை என்று அறிய.
(பிரம்மா மறைமுகமாக இருக்கின்றார்.)
அறிந்தும் ஏது என்று புரிய. அதாவது குளத்தின் அடியில் தன்னில் கூட பின் அவனுடைய சக்தி.
(தண்ட தீர்த்த குளத்தில் )
தண்ட தீர்த்த குளம்... ஸ்ரீமுஷ்ணம் ஆலயத்தில் இருந்து சிறிது தொலைவில் தண்ட தீர்த்த குணம் உள்ளது. இந்த குளத்தில் நீராடி இந்த குளத்தின் நீரை குடித்தால் வியாதிகள் நீங்கும் பிரம்மா மறைமுக பரம்பொருளாக குளத்தின் நடுவில் பிரம்மசக்தி உள்ளது)
இந்த குளத்தில் நீராடி நித்திஸ்வரர் சிவனையும் ஸ்ரீமுஷ்ணம் பூ வராக சுவாமி விஷ்ணுவையும் தரிசனம் செய்தால்.. தரித்திரங்கள் நீங்கி நன்மைகள் ஏற்படும்)
எதை என்று புரிய. இவ்வாறாக எதை என்று அறிய. பின் அதாவது நீராடி அறிந்து கூட அழகாக ஈசனையும் பின் அதாவது எழுந்திருக்கின்றானே. (வராக) அவதாரத்தையும் இப்படி நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் ஏது என்று புரிய. வணங்கிக் கொண்டே வந்தாலே அனைத்தும் நீங்கும்.
ஆனாலும் காலம் போன போக்கில் பின் நிச்சயம் கலியுகத்தில் பின் எவரும் வர முடியாத அளவிற்கு. அதனால் ஏது என்று கூட... அவ்வளவு பாவங்கள்!!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
இந்த ஆலயங்களுக்கு எல்லாம் வந்து வணங்குவதற்கு இப்பொழுது மனிதர்களால் முடிவதில்லை ஏனென்றால் மனிதர்களுடைய பாவங்கள் கலியுகத்தில் அதிகமாகி விட்டது அதனால் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவதற்கு அருள் வழங்கும் இந்த ஆலயங்களை பற்றி யாருக்கும் தெரியவில்லை.
குருநாதர் அகத்தியர் பெருமான் வாக்கு
இது எப்பொழுது அழிகின்றதோ அப்பொழுது மீண்டும் அனைத்து கிரகங்களும் கூட தாக்கப் போகின்றது. எவை என்று புரிய.
அப்பனே அதனுள்ளே யாங்கள் சீர் செய்வோம். நிச்சயம் தலத்தை.
சுவடி ஓதும் மைந்தனின் வாக்கு.
இந்த ஆலயங்களும் குளமும் அழிந்து விட்டால் மீண்டும் கிரகங்கள் வந்து பூமியை தாக்கும் ஆனால் சித்தர்கள் நாங்கள் விட மாட்டோம் எப்படியும் காப்பாற்றுவோம் என்று கூறுகின்றார்கள்.
அதனால் அப்பனே நிச்சயம் சித்தர்கள் ஏது என்று கூட அப்பனே இவ்வாறாக அப்பனே பல திருத்தலங்கள் அப்பனே உள்ளது என்பேன். அப்பனே!!!!
(இப்படி பல ஆலயங்கள் ரகசியமான ஆலயங்கள் சக்தி வாய்ந்த திருத்தலங்கள் ஏராளம் உள்ளது)
அப்பனே இவ்வாறாக ஏது என்று புரிய. அப்பனே எதை அறிய. அப்பனே முதலில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே இடித்து. அப்பனே ஏது என்று கூட அதிகமாக பின் அதிர்ந்தது. இப்பகுதியே என்பேன். அப்பனே
(கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஆதி வராக நல்லூர்)
. அப்பனே பின் இவ்வாறாக எதை என்று புரிய. அறிய. அப்பனே இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட இவை இடிக்கின்ற பொழுது அதில் உள்ள சிறு சிறு துகள்கள் எல்லாமப்பா இங்கெல்லாம் படிந்தது என்பேன். அப்பனே!!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
கிரகங்கள் பூமியை இடிக்கும் பொழுது இந்த பகுதி மிகவும் அதிர்ந்தது அதிர்ந்து சிதறிய துகள்கள் அனைத்தும் இங்கு படிந்துள்ளது!!!
அப்பனே அங்கு சென்று வந்தாலே. அப்பனே அனைத்தும் அப்பனே பின் இப்படி வட்ட முகமாக திரும்பினாலே சுற்றினாலே. அப்பனே வினைகள் தீரும்ப்பா.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
தண்ட தீர்த்தம் நீராடி வணங்கி ஸ்ரீமுஷ்ணம் பூ வராக பெருமாள் ஆலயம் நித்தீஸ்வரர் சிவன் ஆலயம் ஒரு வட்டமாக சுற்றி வணங்கி வர வேண்டும்.. இப்படி செய்தால் உங்களுடைய வினைகள் யாவும் விலகி போகும்.
குருநாதர் வாக்கு.
அப்பனே ஏன் இவ்வளவு???. அப்பனே மனிதனுக்கு சொல்ல வேண்டும்?? என்றால்??. அப்பனே தெரிந்து கொண்டு. அப்பனே அனைத்தும் வெல்வீர்களாக.
அப்பனே விதியை மாற்றும் சக்தி எங்கு உள்ளது??.
இப்பொழுது நிச்சயம். அப்பனே அதனால்தான். அப்பனே சுலபமாக (விதி)மாறிவிட்டால்.!?!?!?!?!?!?!?!
பின் மனிதன் எவ்வாறப்பா!?!?????????
அதனால்தான் நெருங்க முடியவில்லை. அப்பனே திருத்தலங்களுக்கு !!!
இங்கு இருக்கும் திருத்தலங்களுக்கு!!!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்.
ஒருவருடைய விதியை மாற்றுவது அவ்வளவு சுலபம் அல்ல!!!.. அலைய வேண்டும் தெரிய வேண்டும் விதியை சுலபமாக மாற்றி விட்டால் மனிதன் இனி எப்படி மாறிவிடுவான் அதனால் தான்.. இது போன்ற சக்தி வாய்ந்த திருத்தலங்களுக்கு மனிதர்களால் செல்ல முடிவதில்லை!
அப்பனே ஏன்? எதற்கு? எவை என்று புரிய. அப்பனே இவ்வாறாக.!!!!
அப்பனே சூரியன் இடிக்கும் பொழுது. அப்பனே பின் மிகப்பெரிய அதிலிருந்து துகள் வந்துவிட்டது என்பேன். அப்பனே!!!!
இது அப்பனே எவை என்று அறிய. அப்பனே அதாவது நெருப்பு எவை என்று கூட இங்கு அதிகமப்பா.
அப்பனே இங்கு வந்தால் பாவங்கள் எப்படி ஈர்த்துக்கொள்ளும். பின் பாவங்கள் எப்படி?. பின் நெருப்பினால் அழியும் என்பதையும் கூட.!!
அப்பா!!! தோண்ட!!!! தோண்ட!!. அப்பனே சூரியன் துகள் எல்லாம் அதிகமப்பா.
(இந்தப் பகுதியில் தான் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் உள்ளது குருநாதர் வாக்கில் குறிப்பிடும் சூரியனின் நெருப்பு துகள் தோண்ட தோண்ட நிலக்கரியாக கிடைக்கின்றது நெருப்பு கோளம் நிலக்கரியாய் மாறிவிட்டது )
அப்பனே இதனால் அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏனென்றால் பின் என் பக்தர்கள் அனைத்தும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் சொல்லிவிட்டேன். அதற்காகத்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றேன்.
அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அதனால்தான் அப்பனே இன்னும் கூட பின் என் பக்தர்கள் என்னை நம்பியே இருக்கின்றார்கள். உண்மை பொருளை அப்பனே தெரிந்து. அப்பனே தெரிவித்து விட்டால். அப்பனே அவர்களுக்கு அனைத்தும் தெரிந்துவிடும். தன்னைத்தானே வெல்லும் சக்தி வந்துவிடும்.
அப்பனே அனைவரும் வெல்லலாம்.
அப்பனே எது என்று அறிய. அப்பனே இதனாலதான். அப்பனே நிச்சயம் தன்னில் கூட பாவங்களை அப்பனே நாசமாக்கும் என்பேன். அப்பனே இவ்வூமி.
அப்பனே எதை என்று கூற. அப்பனே பின் பாவமும். அப்பனே ஏது புண்ணியமும். அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அப்பனே!!!!
(அருகில் இருக்கும் அகத்திய குமரன் ஐயாவை பார்த்து!!! திரு அகத்தியர் குமரன் ஐயா நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் ல் ஒப்பந்ததாரராக பணிகளை எடுத்து செய்து வருகின்றார்)
குருநாதர்!!!....
இப்பொழுது எரிக்கின்றாயே.
அதாவது நிலக்கரி என்று சொல்லிவிட்டாயே. அதுபோலத்தான் உடம்பில் அப்பனே இருக்கும் என்பேன். அப்பனே!!!
அப்பனே இவ்வாறாக. அப்பனே நிச்சயம் இங்கு சுற்றுகின்ற பொழுது. அப்பனே நிச்சயம் பின் பாவமும். அப்பனே பின் நிச்சயம். அப்பனே கரையுமப்பா.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
உடம்பில் இருக்கும் பாவங்களை எரிப்பதற்கு இங்கு இருக்கும் ஆலயங்களுக்கு வந்து அடிக்கடி வணங்கி சென்றால் உடலில் உள்ள பாவங்கள் அனைத்தும் நிலக்கரி எரிவது போல எரிந்து விடும்.
அப்பனே புண்ணியமும். அப்பனே கரைந்து. அப்பனே இரண்டும் செயல்படும் என்பேன். அப்பனே
அப்பொழுது இறைவனை காணலாம்!!!
அப்பனே எதை என்று அறிய அறிய. இதனால் புண்ணிய பலனும் உனக்கு சேரும். பாவக்கணக்கும் உனக்கு சேரும் என்பேன். அப்பனே!!
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட.
அப்பனே ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட. பின் புண்ணிய கணக்கு. அப்பனே பாவத்தை நிச்சயம் தன்னில் கூட. அப்பனே பார்த்துக் கொள்ளும் என்பேன்.
அப்பனே!!!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
உங்களுக்கு பாவம் ஏற்பட்டாலும் புண்ணியம் இருக்கின்ற பொழுது பாவத்தின் தன்மை குறைந்து விடும் புண்ணியத்தின் பலன்கள் அதிகமாக கிடைக்கும்.
குருநாதர் வாக்கு
அப்பனே இன்னும் சுற்ற சுற்ற உந்தனக்கு பின் எவை என்று கூற அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட. அப்பனே இவை தெரிந்து கொண்டால். அப்பனே புண்ணியம் ஆகிவிடும். ஏது என்று புரிய.
இன்னும் அப்பனே பின் சக்திகள் அதிகமாகும்.!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
இங்கு இருக்கும் ஆலயங்களுக்கு வந்து சுற்றி தரிசனம் செய்து கொண்டே இருந்தால் உண்மை என்ன என்பது தெரிந்து கொள்ளலாம் சக்திகளும் ஏற்படும் நமக்கு.
குருநாதர் வாக்கு
பிற்பகுதியில் உரைக்கின்றேன். அனைவரும் மீண்டும் அப்பனே பின் சிவபுராணத்தை ஓதுங்கள் என்பேன். அப்பனே ஒருமுறை மீண்டும் தெரிவிக்கின்றேன். ஆசிகள் !!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
