​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 4 January 2026

சித்தன் அருள் - 2064 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை சிவபுராண கூட்டு பிரார்த்தனை - பகுதி - 4





அகத்திய மாமுனிவர் அருளால் 28.12.2025 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டுப் பிரார்த்தனை வாக்கு - பகுதி 4

நாள் : 28/12/2025 (ஞாயிற்றுக்கிழமை) 
நேரம் : காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 
இடம் : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் , வேங்கிக்கால் , திருவண்ணாமலை 
நேரலை பதிவு : https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=3h57m05s


இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.


=====================================
# கூட்டுப் பிரார்த்தனை வலிமை அளிக்க வந்த சிவனடியார்கள் போற்றி போற்றி !!
=====================================
( இப்போது அன்பு நிறைந்த அடியவர்கள், திருக்கைலாய தெய்வீக வாத்தியங்கள் முழங்க, அந்த புனித நொடியில், மிகுந்த பாசத்துடனும், ஆழ்ந்த மரியாதையுடனும், பெரும் மதிப்பிற்குரிய சிவனடியார்களை வரவேற்று அழைத்து வந்தனர். அடியவர்கள் கண்களில் ஒரு துடிப்பு — பாசம் கலந்த பேர் எதிர்பார்ப்பு, இதயம் முழுவதும் பரவிய ஆனந்தக் காத்திருப்பு. ஏனெனில், குருநாதர், முக்குபொடிசித்தர் அங்கு அருள்புரிய வருவதாக  முன்கூட்டியே உரைத்திருந்தார்கள். அந்த தெய்வீக தருணத்தை பின்வரும் நேரலையில் காணும் நீங்கள் அனைவரும்,   சிவனடியார்களின் பெருமையை போற்றி, அவர்களை மனமார்ந்த வணக்கத்துடன் போற்றி வணங்குக. )
(அங்குள்ள அடியவர்களை கை கூப்பி, சிவனடியார்கள் காலில் விழுந்து  ஆசி கோரி வணங்கினர் )

===============================================
சிவனடியார்கள் வருகை நேரலை :- 
https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=4h16m32s
===============================================

( சிவனடியார்கள் மேடையில் அமர்ந்த பின்னர்…) 

சுவடி ஓதும் மைந்தன் வரவேற்புரை :- 

( இந்த கூட்டுப் பிரார்த்தனையின் முக்கிய பகுதியே  இந்த வரவேற்புரை தான். நம் குருநாதர் அளித்த சில ரகசிய வாக்குகளை, சுவடி ஓதும் மைந்தன் இங்கு அனைவருக்கும் எடுத்துரைத்தார்கள். சிவனடியார்களுக்காக, ஈரேழு பதினான்கு உலகத்தை ஆளும்  சிவபெருமானே தினமும் திருவண்ணாமலையில் தினமும் நேரில் வந்து அழும் ரகசியங்கள். 

அவசியம் பின் வரும் நேரலையில்  இந்த அருமையான , அற்புதமான, பல ரகசியங்களை நிறைந்த சுவடி ஓதும் மைந்தன் வரவேற்புரையை கேளுங்கள். சுவடி ஓதும் மைந்தனின் ஒரு அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொண்டார்கள். 

குருநாதர் உத்தரவின் பேரில் சுவடி ஓதும் மைந்தன், சிவனடியார்கள் படும் பல வேதனைகளை , சித்திரவதைகளை நேரில் உணர  3 நாள் முழுவதும் அவர்களுடன் தங்கி, அவர்கள் படும் அவமானங்கள், கொசுக்கடி துன்பங்கள் முதலியவற்றை எடுத்துரைத்தார்கள். கண்ணீர் வரவழைக்கும் உரை இது. 

இவ் வாக்கினை படிக்கும் அடியவர்கள் கட்டாயம் பின் வரும்  வரவேற்புரை நேரலை  பதிவை அவசியம் பாருங்கள். உங்கள் வாழ்வில் பல நன்மைகள் உண்டு. எப்படி செய்தால் புண்ணியம் என்ற ரகசியங்கள் உங்களுக்கு புரிய வரும். )

===============================================
சிவனடியார்கள் வரவேற்புரை நேரலை :- 
https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=4h22m00s
===============================================

சுவடி ஓதும் மைந்தன் வரவேற்புரை இதன் முக்கியமான கருத்துக்கள் சுருக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
===============================================
(1. இறைவனின் உண்மையான உறவினர்கள்: திருவண்ணாமலையில் வீடு, வாசல், சொந்தம் என்று எதுவுமே இல்லாத ஏழைகளும், சாதுக்களுமே சிவபெருமானுக்கு உண்மையான சொந்தக்காரர்கள் ஆவர். இவர்கள் வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவித்து, ஈசனை மட்டுமே கதி என்று சரணடைந்தவர்கள்.

2. ஈசனின் கண்ணீர்: இந்த அடியார்கள் படும் கஷ்டத்தைப் பார்த்து, சிவபெருமான் தினமும் அழுது கொண்டே கிரிவலம் வருகிறார் என்று அகத்திய மாமுனிவர் மாமுனிவர்  ஓலைச்சுவடியில் சுவடி ஊதும் மைந்தனுக்கு தனியாக உரைத்தது. பார்வதி தேவி, ஈசனாரை  எவ்வளவு சமாதானம் செய்தாலும், தன் பிள்ளைகள் (அடியார்கள்) படும் பாட்டை எண்ணி தினமும் ஈசன் கண்ணீர் சிந்துகிறார். 

3. தானத்தின் முக்கியத்துவம்: சுயநலத்துக்காகவோ அல்லது தோஷ பரிகாரத்துக்காகவோ அன்னதானம் செய்வதால் எந்தப் பயனும் இல்லை. உண்மையான அன்போடு, கஷ்டப்படுபவர்களுக்கு செய்யும் உதவியே ஈசனைச் சென்றடையும். திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் போது சாதுக்கள் இவர்களுக்கு 10 அல்லது 20 ரூபாய் கொடுப்பது கூட மிகப்பெரிய உதவியாகும். உதவி செய்யாமல் வெறுமனே கிரிவலம் சுற்றுவது பயனற்றது.

4. சுயநலமற்ற பிரார்த்தனை: "நான் நன்றாக இருக்க வேண்டும், என் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்" என்று தன்னைப்பற்றி மட்டுமே சிந்திப்பவன் முட்டாள். மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பதே ஞானத்தின் ஆரம்பம். பிறருக்காகவும், அனைத்து ஜீவராசிகளுக்காகவும் சிவபுராணம் பாடி வேண்டுவதே உயர்ந்த பக்தி.

5. அனுபவமே பாடம்: ஏழைகளின் வலியையும், பசியின் கொடுமையையும் புரிந்து கொள்வதற்காக, அகத்திய மாமுனிவர்  தன்னை மூன்று நாட்கள் தெருவோரத்தில் படுத்து உறங்க வைத்தார் என்று சுவடி ஓதும் மைந்தன் என்று பகிர்ந்தார். அப்போதுதான் குருநாதர் எப்படி கடுமையான படங்கள் சுவடி ஓதும் மைந்தனுக்கு எடுத்துக்கொண்டு வருகின்றார்கள் என்று சற்று புரிய ஆரம்பித்தது அங்குள்ள அனைவர்க்கும்.   படிப்பை விட வாழ்க்கை அனுபவமே சிறந்தது என்பது அகத்திய மாமுனிவர்  வாக்கு.

உவமை: மின்சாரம் இருக்கிறதா என்று பார்க்க 'டெஸ்டர்' (Tester) பயன்படுவது போல, இறைவன் நமக்குக் கொடுக்கும் கஷ்டங்கள் நம்மை சோதிக்கும் ஒரு கருவியாகும். அந்த நேரத்தில் நாம் அறிவைப் பயன்படுத்தி செயல்பட வேண்டும்.)

( இவ் சிவனார் அடியவர்களை சிவபுராணம் பாட சொன்னார்கள் சுவடி ஓதும் மைந்தன். கூட்டு பிரார்த்தனைக்கு வந்திருந்த அனைவரின் துன்பங்கள் விலகுவதற்காக இவ் சிவனார் அடியவர்களை சிவபுராணம் பாட ஆரம்பித்தனர்.  )

சிவனடியார்கள் சிவபுராணம் பாடும் நேரலை :- 

https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=4h41m30s

சிவனடியார்கள் சிவபுராணம்  பாடி முடித்த பின்னர் …

சுவடி ஓதும் மைந்தன்:-  ( உலக மேன்மைக்காக, அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காக  மீண்டும்  இவ் சிவனார் அடியவர்களை சிவபுராணம் பாட சொன்னார்கள்) 

https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=4h48m54s

சிவனடியார்கள் மீண்டும் சிவபுராணம் பாடும் நேரலை :- 
https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=4h49m49s

சிவனடியார்கள் மீண்டும் சிவபுராணம்  பாடி முடித்த பின்னர் …

சுவடி ஓதும் மைந்தன்:- (  இவ் சிவனடியார்களுக்கு தர்மம் உரை. இதனை தொடர்ந்து அலை கடலென திரண்டு புண்ணியம் செய்ய முன்வந்தார்கள் கூட்டுப்பிரார்த்தனை அடியவர்கள்… )

https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=4h56m23s

=====================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
=====================================

https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=5h05m24s


ஆதி ஈசனை மனதில் எண்ணி செப்புகின்றேன்  அகத்தியன். 

===============================
# மனம் பெரியதாக இருக்க வேண்டும். அப்போது பெரியது எதிர்பார்க்க முடியும் 
===============================

குருநாதர் :- அப்பனே, மனம் என்பது பெரியதாக இருக்க வேண்டும் அப்பா. அப்பனே, அப்பொழுது மனம் என்பது பெரிதாக இருந்தால் மட்டுமே பெரியது, பெரியது எதிர்பார்க்க முடியும் என்பேன் அப்பனே. 

===============================
# மனது சிறியதாக இருந்தால், அனைத்தும் சிறியதாகத்தான் கிடைக்கும்.
===============================

குருநாதர் :-  மனது சிறியதாக இருந்தால், அப்பனே, அனைத்தும் சிறியதாகத்தான் கிட்டும் என்பேன் அப்பனே.  

====================================
# மூக்கு பொடி சித்தர் விருப்பம் - செல்லும் அனைவரும் , கிரிவலப்பாதையில் உள்ள அத்தனை சாதுக்களுக்கும் உதவ வேண்டும்.
====================================

குருநாதர் :-  இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இங்கும் மூக்கு பொடியான் உள்ளான். அவன் என்ன விரும்புகின்றான் என்றால், அப்பனே, இவை தன், அப்பனே, அத்தனை சாதுக்களுக்கும், அதாவது பின், பின், அதாவது இவ்வு மலையை சுற்றி இருக்கின்ற அனைத்து சாதுக்களுக்கும் இதைச் செல்ல வேண்டும் என்பது அவனுடைய அவா. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, மூக்குப்பொடி சித்தர் இங்க இருக்கிறார். ஏதோ ஒரு ரூபத்தில் இருக்கார். அவருடைய ஆசை என்னன்னா, இவங்களுக்கு தேவையானதெல்லாம் கொடுத்துட்டு, இன்னும் எத்தனை பேர் மலையை சுற்றி இருக்காங்க இல்ல? அவங்களுக்கும் கொடுக்கணும். இவங்களுக்கும் கொடுக்கணும். இதை எடுத்துட்டு, மலையை சுற்றி இன்னும் இருக்காங்க இல்ல, அவங்களுக்கும் கொடுக்கணும். என்னென்ன தேவையான்னு சொல்லிட்டு, ஐயா, யாராவது ஒருத்தர் எடுத்துக்கோங்க. இதை வந்து ஓகேங்களா?  

குருநாதர் :- அறிந்தும் புரிந்தும், இவை என்று அறிய, பின் மூக்கு பொடியானும் அனுதினமும் பைத்தியங்கள் உறங்குகின்றதே என்று சுற்றிக் கொண்டே தான் வருகின்றான். 

சுவடி ஓதும் மைந்தன் :- (மூக்கு பொடி சித்தர்  சாதுக்கள் எல்லாரையும் தினமும் பார்த்துட்டு இருக்கிறார். அப்படியே சுத்திட்டு இருக்கிறார். ஏதோ பைத்தியங்கள் படுத்து இருக்குதா? என்று)  

குருநாதர் :-  எதை என்று அறிய ஆனாலும், நிச்சயம் இவர்களுக்கு ஏதோ ஒன்று செய்ய வேண்டும் என்பது அவனுடைய அவா. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( அப்ப, ஏதோ யார் மூலமாவது, இவங்களுக்கெல்லாம் ஏதோ ஒன்று செய்ய வேண்டும் என்பது மூக்குப்பொடி சித்தர் அவருடைய ஆசை. )

குருநாதர் :-  இதனால், அறிந்தும் புரிந்தும் கூட, இதனால் அனைவரும் சமமே. கவலைகள் வேண்டாம். 

குருநாதர் :-  அப்பப்பா, இவர்களுக்கு தேவையானதையும் கொடுங்கள். அறிந்தும் புரிந்தும் கூட, இதனால், அப்பனே, கவலைகள் இல்லை. அப்பனே, இதுபோல், அப்பனே, தன்னிடம் எதை என்று அறிய. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, என்ன ஏது என்று, அப்பனே, பின் தன்னால் முடிந்தவரை, அப்பனே, சேவை செய்யுங்கள். மற்றவர்களுக்காக, அப்பனே, இருப்பதோ இல்லையோ, அப்பனே, அதன் பிறகு பார்த்துக் கொள்வோம். 

குருநாதர் :-  அப்பா, கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்பனே, பின் பிட்டுக்கு யான் சொல்ல தேவையில்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :- எம்பெருமான் சிவபெருமான்  என்ன செய்தார் ? நான் சொல்ல தேவையில்லைப்பா. பிட்டுக்கு மண் சுமந்தார். யாரு? சிவபெருமான். அதனால்தான் அவர் மிக கருணை படைத்தவர். அதனாலதான் இவங்க எல்லாம் இங்க கூட்டிட்டு வந்து ஏதோ ஒரு விதத்துல இவங்களுக்கு, மூக்குப்பொடி சித்தர் என்ன விரும்புறாங்களாம்?. இவங்களுக்கு மட்டும் இல்லாம பாருங்க, திருவண்ணாமலையை மலையை சுற்றி எல்லாருக்கும் நல்லதாகட்டும் என்று யாருடைய அவா? மூக்குப்பொடிய சித்தருடைய அவா. 

==============================
# தினமும் ஈசனை திட்டி திட்டி தீர்க்கும் மூக்குப்பொடி சித்தர் 
==============================

குருநாதர் :-  அறிந்தும் புரிந்தும் அவனும் அனுதினமும் ஈசனை பார்த்து திட்டித் திட்டி தீர்த்துக் கொண்டே இருப்பான். 

குருநாதர் :- எதை என்று அறிய அறிய, இவ் பைத்தியங்களை இப்படி அனாதையாக விட்டுவிட்டு, நீ அழுது கொண்டிருக்கின்றாயே. நியாயமா என்ன?

சுவடி ஓதும் மைந்தன் :- இவங்களெல்லாம் அனாதை இப்படி தவிக்க விட்டு நீ ஏன் அழுகுற என்று, யாரு? மூக்குப்பொடி சித்தர் திட்டுவார், ஈசனை. 

குருநாதர் :-  அறிந்தும் ஆனாலும் ரகசியம் என்ன அறிந்தும் புரிந்தும் இதனால் ஆனாலும் பின் நீயே பிறக்க வைப்பது அறிந்தும் பின் நீயே காக்க வைப்பது என்பது வித்தியாசம் தான். இன்னும், பின் மூக்குப் பொடியான் அதை உணரவில்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :- மூக்குப்பொடி சித்தர் சொல்கிறார்.  ஈசனே !!!!! நீயே படைக்கின்றாய், நீதான் காக்கின்றாய். பின் நீயே அழுகின்றாய் அவர்களை பார்த்து. எதுக்காக? 

குருநாதர் :- அதை உணர்ந்து விட்டால் எதை என்று புரிய. இன்னும் பின் நிச்சயம் தன்னில் கூட அதை உணராமல் வைத்திருப்பவனும் ஈசனே. ஏனென்றால் அதை உணர்த்தி விட்டால் நிச்சயம் பின் அவன் அமைதியாகி விடுவான். 

சுவடி ஓதும் மைந்தன் :- மூக்குப்பொடி சித்தருக்காக சொல்றாரு. மூக்குப்பொடி சித்தருக்காக சொல்றாரு குருநாதர். அதை உணர்த்துட்டோம்னா என்ன பண்ணுவார்? அவர் அமைதி ஆயிடுவார். இவருக்கெல்லாம் போராட மாட்டார். அப்ப அவர் அது அது உணராது இருக்கும் வரையில் எல்லாருக்கும் நல்லது. இவங்களுக்கெல்லாம் நல்லது. அவர் தெரிஞ்சிருப்பார். அதை உணர்த்து வச்சுட்டா அமைதி ஆயிடுவாரு. 

================================
# அண்ணாமலையார் திருவிளையாடல் திடீரென்று கோடீஸ்வரர்களை உருவாக்கும் ரகசியங்கள். கிரிவலம் செல்லும் அடியவர்கள் கெட்டியாக இவ் ரகசியத்தை பயன்படுத்திக் கொள்க.
================================

குருநாதர் :-  எதை என்று புரிய இன்னும் ஞானிகள் பன்மடங்கு எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் இதனால் பின் எவரேனும் எதை என்று அறிய அண்ணாமலைக்கு எவை என்று கூற. இதுபோல் நிச்சயம் பின் சேவைகள் செய்தோர் அறிந்தும் கூட ஈசனே இதைபோல் படுத்துக் கூட இருப்பான். பின் யார் அறிவது என்றெல்லாம் நீங்கள் அறியாது. இதுபோல் பின் இங்கு நிச்சயம் பின் கொடுத்திருப்பவர்கள்,  ஈசனுக்கும் கொடுத்திருப்பார்கள். திடீரென்று நிச்சயம் பின் கோடீஸ்வரர்கள் அவர்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  (யாருக்குப் பா தெரியும்… ஈசன் என்ன செய்கிறார் என்று?  இதே மாதிரி கிரிவலப் பாதையில் எங்காவது ஒரு இடத்தில் ஈசன்  படுத்துக்கிட்டே இருப்பாராம். உங்களுக்கு தெரியாமலே ‘₹10 இந்தா’ என்று சொல்லி, நீங்க ஈசனுக்கே கொடுத்துட்டீங்கன்னா.. அவர் திருவண்ணாமலையில் எங்கோ படுத்துக்கிட்டே இருப்பாராம்… அப்போ யார் என்று கூட தெரியாமல்  ‘ஈசனுக்கு உதவி’ என்று பணம் கொடுத்தவர்களுக்கு, ஈசன் என்ன செய்யப் போறார்? அவர்கள்தான் திடீரென்று  பெரிய கோடீஸ்வரர்களாகி, இன்னும் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்காங்கன்னு என்று சொல்கிறார்.)

குருநாதர் :-  எதை என்று புரிய. இதனால் அனைத்தும் இங்கு ஈசனுடைய செயலை குறைகள். இதனால்தானே வந்தார்கள் என் சீடர்கள். நல்லது. இதனால்தானே வந்தார்கள் என் சீடர்கள். நல்லது செய்ய உங்களுக்கு.

==========================
# பிறர் நலனை பற்றி யோசிப்பதே உயர்வின் அடையாளம். 
==========================

குருநாதர் :- அறிந்தும் எவை என்று அறிய. இதனால் பின் உயர்வு எப்படி கிட்டும் என்பதால் எதை என்று புரிய. பின் தன்னைப் பற்றி யோசிக்காது. பிறர் நலனை பற்றி யோசிப்பதே உயர்வின் அடையாளம். 

சுவடி ஓதும் மைந்தன் :- (உயர்வின் அடையாளம் என்ன என்றால், பிறரைப் பற்றி யோசிக்கும் மனசு. நம்மைப் பற்றிதான் நினைக்க ஆரம்பிச்சோம்னா அங்கிருந்தே வாழ்க்கை முட்டிக்கிடக்கும். வாழ்க்கை சுயநலமாக இருக்கக்கூடாது; “நம்ம நல்லா இருக்கணும், நம்ம பிசினஸ் மட்டும் வளரணும்” என்று மட்டும் நினைச்சா உயர்ச்சி வராது. வாழ்க்கையை விரிவாகப் பார்க்கனும், நம்ம மட்டும் இல்லாமல் மற்றவர்களும் முன்னேறனும் என்று நினைக்கனும். அப்படிப் பிறரை நினைக்கிற மனசு வந்தால்தான் எந்த விஷயத்திலும் வெற்றி பெற முடியும்)

==================================
# புண்ணியங்கள் செய்துவிட்டால் இறைவனும் கைகட்டி நிற்பார் 
==================================

குருநாதர் :- அப்பப்பா இறைவன் என்ன? இறைவன் அப்பா புண்ணியங்கள் தான் இங்கு சிறந்தது. புண்ணியங்கள் செய்துவிட்டால் இறைவனும் கை கட்டி நிற்பான். அப்பா வேலைக்காரன் போல். அப்பா கிழவிக்கு வந்தது போல். பின் பிட்டுண்ட…. 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம்:-  புண்ணியம் இருந்தால் இறைவன் என்ன செய்வார்? நீங்க இறைவனை வணங்குவதோ  இல்லையோ அது வேற விஷயம். புண்ணியம் இருந்ததாலே இறைவன் கைகட்டி நின்று உங்களுக்கு உதவி செய்வார்.

நீங்க பிறருக்கு சேவை செய்திருந்தால், அந்த புண்ணியத்துக்காக இறைவன் உங்களுக்கு உதவி செய்வார். இதுக்கு பெரிய உதாரணம் சிவபெருமான். ஒரு வயதான அம்மாவுக்கு புண்ணியம் இருந்ததால்தான் சிவபெருமான் அவருக்கு கைகட்டி சேவை செய்தார். - பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட லீலை-. 
  
அதே மாதிரி நாமும் என்ன செய்யணும்? புண்ணியம் சேர்த்துக்கணும், பிறருக்கு உதவி செய்யணும். அப்போ இறைவனிடம் கேட்கவே தேவையில்லை — சிவபெருமான் தானாகவே நமக்கு தேவையானதை கொடுப்பார். )

=============================================
# ஈரேழு பதினான்கு உலகத்தின் மன்னன் - ஈசனின் அவா 
=============================================

குருநாதர் :- அப்பனே, ஈசனின் அவா எதை என்று புரிய அப்பனே, நிச்சயம் அப்பனே எதை என்று அறிய அப்பனே, மற்றவர்களை எண்ணுவதே என்பேன் அப்பனே.  இதுதான். அப்பனே, நிச்சயம் திருவாசகம் கூட பேசுகின்றது என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  திருவாசகம் என்ன பேசுகின்றதாம்? ஐயா, சொல்லுங்க. மற்றவரை பத்தி யோசி. மற்றவரை பற்றி யோசி. 

குருநாதர் :- அப்பப்பா, இதை தெரியாமல் பாடிக்கொண்டே அப்பனே இருப்பான். அப்பனே, ஒன்றும் லாபம் இல்லாமல் இருப்பான். அப்பா, 

சுவடி ஓதும் மைந்தன் :- (இதைப் புரியாமலே திருவாசகத்தைப் பாடிக்கிட்டே இருப்பாங்க. அப்படிப் பாடுறதால மட்டும் பயன் கிடையாது. திருவாசகம் என்ன சொல்லுது? அது எதைப் பற்றி எழுதப்பட்டிருக்குது? திருவாசகம் அன்பைப் பற்றிதான் போதிக்குது. பிறரைப் பற்றி, பிறருக்கான கருணை, அன்பு, சேவை — இதைத்தான் சொல்லிக்கொடுக்குது ) 

========================================
# நீங்கள் பிறர் நலம் பற்றி நினைத்தாலே, தர்ம தேவன் சனீஸ்வரன், உங்களை தொடவும் கூட மாட்டார் 
========================================

குருநாதர் :- அப்பா, பிறரைப் பற்றி போதித்தாலே, அப்பனே, அறிந்தும் அறிந்தும், பிறரைப் பற்றி நினைத்தாலே, அப்பனே, சனீஸ்வரன், அப்பனே, தொடவும் கூட மாட்டான் அப்பா. இதுதான். அப்பனே, எட்டாம் திருமுறை என்றே திருவாசகத்தை வைத்தான் அப்பா, பின். 

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( பலத்த கை தேடல்கள் ) 
சுவடி ஓதும் மைந்தன் :- (அவர் என்ன சொல்றார்னா, நீங்க இல்லாதவர்களுக்கு உதவி செய்தீங்கன்னா, சனீஸ்வரன் உங்களைத் தொடவே மாட்டாராம். அதனால்தான் திருவாசகத்தை “தேன்” மாதிரி இனிமை என்று சொல்றாங்க. திருவாசகம் சொல்லுற முக்கிய அர்த்தம் என்னனா —  மற்றவர்களுக்கு சேவை செய், உதவி செய். நீங்க அப்படி சேவை செய்துட்டீங்கன்னா, சனீஸ்வரன் உங்களைத் தொட மாட்டாராம். அதனால்தான் திருவாசகத்தில் எட்டாவது பதிகத்தைக் கொண்டு வந்தாரு. )
 
குருநாதர் :- அப்பப்பா, அனைவரும் எண்ண வேண்டும். இவ்வுலகத்தில் உள்ள அனைவரும் எம் சொந்தக்காரர்கள் என்று, அப்பனே, சித்தனை வணங்குபவன் இதைச் சொல்ல வேண்டும் அப்பா. 


சுவடி ஓதும் மைந்தன் :- (சித்தர்கள் வழியில் நடக்கிறவர்கள் என்ன நினைக்கணும் என்றால், எல்லாரையும் “என் சொந்தம்” என்று பார்க்கணும். எல்லாரும் நம்முடையவர்கள் என்ற உணர்வு இருக்கணும். அதுதான் ஒரு சித்தரையும், சித்தரை வணங்குறவரையும் காட்டிலும் முக்கிய அடையாளம். அந்த மனசு இல்லையென்றால், அது பயனில்லை.)

குருநாதர் :- அப்பா, ஈசனே பெரும் சித்தன் அப்பா. யார் அறிவார்? 

சுவடி ஓதும் மைந்தன் :- ஈசனே பெரிய சித்தன். 

குருநாதர் :- அப்பா, ஓடுகின்றீர்கள். முருகன் பெரிய சித்தன். ஓடுகின்றீர்கள் அப்பனே, ஞானப்பிள்ளையோன் பெரிய சித்தன். ஓடுகின்றீர்களே  மணிகண்டன் அப்பனே, பெரிய சித்தன். அப்பொழுது இறைவன் யார்  இங்கு? 

சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாம் சித்தர் தான். எல்லாம் சித்தர் தான். அப்ப, இங்க இறைவன் யார்? இறைவன் யார்? 

குருநாதர் :- அப்பா, யாருக்கும் தெரிவதில்லை. அதனால்தான் சிலர் இறைவன் இருக்கின்றான், சிலர் இல்லை என்று சொல்லி விடுகிறார்கள் அப்பா. 

===================================
# முருகப்பெருமான் காவலாளியாக அனைத்து மலைகளிலும், கடல் அருகிலும்.
===================================

குருநாதர் :- அப்பா, சொல்கின்றேன், வேலனவன் எங்கு இருக்கின்றான் தெரியுமா? கடல் தன் அருகிலே, மலை தன்னிலே, நிலத்திலே ஏன் இருக்க வேண்டும்? 

சுவடி ஓதும் மைந்தன் :- முருகன் ஏன் கடல் ஓரத்தில் இருக்கிறார்? மலை மேல இருக்கிறார். ஏன் மலை மேல இருக்கிறார்? நிலத்துல இருக்கிறார். ஏன் நிலத்துல இருக்கிறார்? 

குருநாதர் :- அப்பா, கலியுகத்தில் இவைகளால் பெரும் பின் அழிவுகள். இதனால், அப்பனே காக்கவே. ஆனால் இதை யார் அறிவார் அப்பா?  நிச்சயம் தன் கர்மத்தை போக்க பின், நிச்சயம் அங்கு செல்வார்கள் அப்பா. ஆனாலும் அறிந்தும் புரிந்தும், அவனே ஒரு காவலாளியான்  தானே அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  பஞ்சபூத ஸ்தலங்களின் ரகசியம் எப்படி சொல்லப்பட்டதோ, அதே மாதிரி முருகப்பெருமான் ஏன் சில இடங்களில் நிலத்திலும், சில இடங்களில் நீரின் அருகிலும், சில இடங்களில் மலைமேலும்  இருக்கிறார் என்றால், நம்மை காப்பாற்றிக்கொள்ளத்தான். ஒவ்வொரு இடத்திலும் அவர் காவலராக இருந்து நம்மை பாதுகாக்கிறாரென்று சொல்லப்படுகிறது

குருநாதர் :- அப்பனே, உங்களை காப்பாற்ற இப்படி நிற்கின்றான் அப்பனே. உங்களை குறைகளை அப்பனே போக்க மாட்டானா என்ன அப்பனே?. சுலபமாக போக்கக் கொள்ள முடியுமப்பா அறிந்து கூட, ஆனால் நீங்கள் அதற்காக மனதை பெற்றிருக்கவில்லை. அவ்வளவுதான். 

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( பலத்த கை தேடல்கள் ) 

சுவடி ஓதும் மைந்தன் :-  (உலகத்தையே காப்பாற்றும் முருகனுக்கு, நம்ம குறைகளை போக்குவது  ரொம்ப எளிது. அவர் போக்கத் தெரியும். ஆனா சில நேரம் நமக்கு உதவி வராதது ஏன் என்றால், நம்ம மனசு சுத்தமா இல்லை. நம்ம எண்ணங்கள் சரியா இல்லை. மனசு, எண்ணம், நடத்தை — இவை சுத்தமா இல்லாததால்தான் அவர் உதவி உடனே கிடைக்காமல் போனதற்கு காரணம்.)

குருநாதர் :- அப்பா, அனைவரும் பின் எதை என்று கூற? பின், அப்பன் படைத்துவிட்டான். பின், காக்க வேண்டுமே என்று பிள்ளை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( நமது அப்பன் ஈசன் இந்த உலகத்தை படைச்சிட்டாரே. அப்பா, நம்ம என்ன செய்யலாம் என்று  முருகப்பெருமான் சிந்தனை )  

குருநாதர் :- ஆனால், அப்பனும் அறிந்து கூட, பின், அப்பனுக்கு தப்பாமல் பிள்ளை 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( பாசம், கருணை, பாசம், கருணை. அப்பா, இவ்வுலகை பஞ்சபூத ஸ்தலங்கள் மூலம் காத்திருக்கிறார். இப்போ பிள்ளை முருகப்பெருமான் பற்றி குருநாதர் சொல்கின்றார். ) 

குருநாதர் :- அப்பப்பா, இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட, இதில் தன்னில் கூட சுயநலமாக இருந்தால், ஒரு அதனால்தான் ஈசன் நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட. பின், அதாவது ஆட்டம் ஆடினான் என்பேன் அப்பனே. 

குருநாதர் :- இதனால், அப்பனே, அனைத்து பின் உள்ளத்திலும் கூட, அப்பனே, எது என்று புரிய. அப்பனே, பின் நல் எண்ணங்கள் வளர வேண்டும் அப்பனே. பின் தூய்மையான எண்ணங்கள் எல்லாம் வளர வேண்டும். பிறர் நலன் விரும்புதல் வேண்டும் அப்பனே. இவ்வாறாக இருந்தால் மட்டுமே இறைவன், அப்பனே, உங்கள் நலனை விரும்புவான். இல்லையென்றால், அப்பனே, பின், நிச்சயம் இறைவன் பார்த்துக் கொண்டு, நீ உன்னை படைத்ததே வீணடா என்றெல்லாம் அப்பனே. இதனால், அப்பனே, பின், அதாவது, பின், அதாவது, எதை என்று கூற பின், காசு சேர்ப்பீர்கள். பின், மருத்துவத்திற்கு அழைப்பீர்கள். அவ்வளவுதான். வாழ்க்கை முடிந்துவிட்டது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  (நம்ம எண்ணங்களை சுத்தமாக வச்சுக்கணும். மனசுல பிறருக்காக நல்ல எண்ணங்கள் வச்சுக்கணும். நீங்க இப்படி எப்போதும் நல்ல மனசோட இருந்தீங்கன்னா, வாழ்க்கையில நல்ல விஷயங்கள் தானாகவே நடக்கும். இல்லையென்றா, “காசு வேணும், பணம் வேணும்” என்று மட்டும் நினைச்சா, காசு வரலாம்… ஆனா அதுக்குப் பிறகு என்ன? கலியுகத்துல அடுத்த ஸ்டேஷன் ஹாஸ்பிட்டல் தான். அதுக்குத்தான் போக வேண்டி வரும். புரியுதா?)

குருநாதர் :- இதனால் எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய. இவ்வுலகத்தை சிறிதேனும் மாற்ற வேண்டும். இல்லையென்றால், நிச்சயம் தன்னில் கூட. அதற்காகத்தான் சித்தர்கள் வந்து போராடிக் கொண்டிருக்கின்றோம். ஈசனின் கோபம் எவ்வளவு எது என்று அறிய, நிச்சயம் நாம் படைத்தோமே. ஆனால் நன்மனதாக வாழவில்லையே மனிதர்கள் என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :-  (கருணை இருந்தால்தான் அந்த கருணையோட வருத்தம் வெளியில் தெரியும். நம்மை படைத்தவன், “நான் படைத்த மக்கள் சரியா வாழலையே” என்று ஒரு பக்கம் கவலைப்படுகிறார். அதனால்தான் சித்தர்கள் இந்த உலகத்துக்கு இறங்கி வந்து போராடுறாங்க. ஈசன் அந்த வருத்தத்தை வெளிப்படுத்தாம இருந்திருந்தா, இந்த உலகமே அழிந்திருக்கும். அதனால்தான் உலகத்தை காப்பாத்தறதுக்காக சித்தர்கள் தொடர்ந்து போராடிக்கிட்டே இருக்காங்க.)

==========================================
# உங்கள் எண்ணம் போல் உங்கள் வாழ்க்கை 
==========================================

குருநாதர் :- அப்பனே, நல்மனதாக இருங்கள். தூய்மை எண்ணத்தை வைத்துக்கொள்ளுங்கள். வைத்துக் கொள்ளுங்கள். அப்பனே, உயர்ந்த இடத்தில் வாழலாம் என்பேன். அப்பனே, அதாவது உன் உன் எண்ணங்கள் எவ்வளவு பெரிதாக இருக்கின்றதோ, அப்பனே, அவ்வளவுக்கு அவ்வளவு உயர்வாய் என்பேன் அப்பனே. உன் எண்ணங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு கீழானது இருக்கின்றதோ, அவ்வளவுக்கு அவ்வளவு தாழ்வானது. பைத்தியனே, இவர்களை நினைத்து பின் பாடலை பாடு.

( அடியவரை இவ் சிவனடியார்களை நினைத்து பாட சொன்னார்கள் ) 

=============================================
( சிவனடியார்கள் சந்தோஷம் அடைய,    சிவனடியார்கள் அவர்களுக்கு பாடல் பாடி முடித்த பின்னர் குருநாதர்  மீண்டும் வாக்கு உரைக்க ஆரம்பித்தார்கள் ….) 
=============================================

குருநாதர் :- அப்பனே, அறிந்தும் பெரும் புண்ணியம் மற்றவர்களிடம் உள்ளது அப்பா. எப்பொழுது மற்றவர்களை, அப்பனே, பின் மகிழ்ச்சியாக நீங்கள் வைத்து, அப்பனே, பின் வைத்து, எதை என்று அறிய, அப்பனே, சரியாகவே அதுவும் புண்ணியம் அப்பா. அதனால்தான், அப்பனே, உங்களுக்கு பாவங்கள் தான் அதிகமாக இருக்கின்றது. அப்பனே. இதனால், பின் இப்படி கைதட்டி, மீண்டும் இப்பாடலை பாடி, இவர்களை உற்சாகப்படுத்துங்கள் அப்பனே. அப்புண்ணியம் உங்களை சேரும் அப்பா. இதனால், அப்பனே, சில பாவங்கள், அப்பனே, போகும் அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( சிவனடியார்களை உற்சாகப்படுத்தி பாடல்கள் பாட சொன்னார்கள் )

குருநாதர் அழைத்த இசையமைப்பாளர் , பாடகர் :- (நமச்சிவாயப் பதிகம் - சொற்றுணை வேதியன், சோதி வானவன், என்ற பாடலை அழகாக பாடி முடித்தார்கள் ).

( இவ் பாடலை பாடும் போது அடியவர்கள் அழகாக நாட்டியமும் அங்கு நடந்தேறியது ) 

அவ் பாடலின் நேரலை பதிவு :- 
https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=5h29m16s

=============================
# நமச்சிவாயப் பதிகம் -  - திருநாவுக்கரசு சுவாமிகள்
============================= 

1. சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே

2. பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினனுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே

3. விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே

4. இடுக்கண்பட் டிருக்கினும் இரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே

5. வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கலம் அருமறை யாறங்கந்
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே

6. சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறு நல்கு வான்நலன்
குலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே

7. வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே

8. இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே

9. முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாதல் திண்ணமே
அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது நமச்சி வாயவே

10. மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே

=============================================
( சிவனடியார்கள் சந்தோஷம் அடைய,    சிவனடியார்கள் அவர்களுக்கு பாடல் பாடி முடித்த பின்னர் குருநாதர்  மீண்டும் வாக்கு உரைக்க ஆரம்பித்தார்கள் ….) 
=============================================
=============================================
# நமச்சிவாயப் பதிகம் - ரகசியம் வெளியானது 
# ஈசனாரை மனம் குளிர வைக்கும் நமச்சிவாயப் பதிகம் 
=============================================

குருநாதர் :-  அப்பனே, கைலாயத்தில் அழகாக அப்பனே ஈசன் கோபித்துக் கொண்டிருக்கும் பொழுது, அப்பனே அதாவது கோபத்தில் இருக்கின்ற பொழுது, அப்பனே இப்பாடலை பாடுகின்ற பொழுது, அப்பனே மனம் இரங்கினான் என்பேன் அப்பனே, ஈசன். அப்பனே, இதனால் அப்பனே எவை என்று புரிய அப்பனே, இதனால் அப்பனே ஏன் இதை எடுத்து வந்தேன் என்பதை எல்லாம். அப்பனே தானாகவே இதனால் அப்பனே மீண்டும் பாடுங்கள் அப்பனே. இதன் மூலம் அப்பனே ஈசன் மனமகிழ்ந்து ஆடிற்று அப்பனே, உங்களுக்கு ஆசீர்வாதங்கள். முதலில் ஆசீர்வாதங்கள் வேண்டும் அப்பனே, பின்பு உரைப்பேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  (அய்யா “சொற்றுணை வேதியன் சோதி வானவன்” என்ற அதே பாடலை திரும்பி பாடுங்கள். அந்தப் பாடல் மிகவும் புனிதமானது. ஈசன் கைலாயத்தில் கோபம் கொண்டிருந்தபோது, இந்தப் பாடலைப் பாடி அவர் மனம் குளிர்ந்தார் என்று குருநாதர் சொல்கிறார்கள்.  அதனால், இந்தப் பாடலைப் பாடுபவர்களுக்கு அவர் ஆசீர்வாதம் கொடுத்தாராம். நீங்களும் மனமகிழ்ந்து பாடுங்கள். மனம் திறந்து வேண்டிக் கொள்ளுங்கள்.  இந்தப் பாடலைப் பாடுவதால் உங்களுக்கும் புண்ணியம் சேரும். இந்த உண்மை எல்லோருக்கும் தெரியாது — கைலாயத்தில் ஈசனார் கோபம் அடங்க இந்தப் பாடல்தான் உதவியது. அதனால்,  பாடுங்கள்.)
குருநாதர் அழைத்த இசையமைப்பாளர் , பாடகர் :- (நமச்சிவாயப் பதிகம் - சொற்றுணை வேதியன், சோதி வானவன், என்ற பாடலை அழகாக பாடி முடித்தார்கள்.முடித்த பின்னர் குருநாதர்  மீண்டும் வாக்கு உரைக்க ஆரம்பித்தார்கள் ).

https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=5h39m40s

==================================
# ஈசன் அடியவர்களை மகிழ்வித்தால் , ஈசனார் சந்தோஷம் அடைவர், சுலபமாக நமக்கு ஈசனார் அருளாசிகள் கிடைக்கும் 
==================================

குருநாதர் :- அப்பா, அறிந்தும் அப்பனே, எதை என்று கூற? அப்பனே, இதுபோலத்தான். அப்பனே, சொந்தம் பந்தம் இல்லாதவர்களுக்கு இறைவனே துணை என்பேன் அப்பனே.

இதனால், அப்பனே, யாரும் அப்பனே, பின் எதை என்று அறிய அப்பனே, பின் இங்கு இல்லாதவன் இல்லை அப்பா.  

ஆனாலும், அப்பனே, தக்க சூழ்நிலைகள் அப்பனே மாறுகின்ற பொழுது, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. இதனால் தான், அப்பனே, அதாவது பின் அடியார்களை, அப்பனே, அதாவது நிச்சயம் தன்னில் கூட இறைவனை அடியார்களை, அப்பனே, நிச்சயமாக மனம் மகிழ்ந்து பாடினால், அப்பனே, இறைவனுக்கே, அப்பனே, பின் சந்தோஷம். 

அப்படி, இறைவன் சந்தோஷம் அடைகின்ற பொழுது, உங்களுக்கும், அப்பனே, சுலபமாக அருளாசிகள் கிடைத்துவிடும் என்பேன் அப்பனே. 

இதனால் தான், அப்பனே, வேண்டி எதை என்று அறிய அப்பனே, பெறுவதை விட, பின் மற்றவர் இயலாதவரை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சந்தித்து மனமகிழ்ச்சி அவர்களோடு, அப்பனே, பகிர்ந்து கொண்டாலே, இறைவனுக்கே ஆனந்தம் நிச்சயம் தன்னில் கூட. 


===============================
# வேற்றாகி, விண்ணாகி  பதிகம் ரகசியம் - ஈசனார் கோபத்தை தனித்து , மனசாந்தி அடையச்செய்யும் பதிகம். 
===============================

குருநாதர் :-  இதனால், அப்பனே, மீண்டும், அப்பனே, எதை என்று அறிய அப்பனே, பின் அடிக்கடி, அப்பனே, பின் அதாவது, அப்பனே, கோபம் கொள்வான் ஈசன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 

இவ்வாறு, அப்பனே, மீண்டும், அப்பனே, ஈசனை மன சாந்தி அடைய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, வேற்றாகி விண்ணாகி என்ற பாடலை இவர்களுக்காக, அப்பனே, ஈசன் இரங்கட்டும். 

அனைத்தும் இவர்களுக்கு கொடுக்கட்டும். உங்கள் புண்ணியங்கள் பெருகட்டும், அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- (வேற்றாகி, விண்ணாகி பாடல் பாடுங்கள் அய்யா.  ஐயா, பாருங்க, அப்ப அடுத்து என்னன்னா, வேற்றாகி, விண்ணாகி பாடல். இதுவும் வந்து, ஈசன் கோபித்துக் கொள்ளும் பொழுது, இது நாம் படிக்க வேண்டிய  பாடல்.  அப்ப, இதையும் படிக்க சொல்றார் இவங்களுக்காக. ஏன்னா, இவங்க நல்லவர்கள். ஈசன்  அவர் மனம் இரங்கட்டும்  இன்னும் என்று சொல்கின்றார். அப்ப எல்லாரும் சேர்ந்து இதை படிக்கும் பொழுது, உங்களுக்கும் அது புண்ணியம். இவர்களுக்கும் எல்லாம் கிடைக்கும். வேற்றாகி, விண்ணாகி பாடல் பாடுங்கள் அய்யா. ) 

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( வேற்றாகி, விண்ணாகி பதிகம் பாட ஆரம்பித்தனர்)

குருநாதர் அழைத்த இசையமைப்பாளர் , பாடகர் :- ( இவ் திருக்கயிலாயம் - போற்றித் திருத்தாண்டகம் - வேற்றாகி விண்ணாகி என்ற பாடலை அழகாக பாட ஆரம்பித்தார்)

அதன் நேரலை பதிவு :-  
https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=5h49m11s

=============================================
6.055 - திருக்கயிலாயம் - போற்றித் திருத்தாண்டகம் - வேற்றாகி விண்ணாகி
=============================================

வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத் தொலியே போற்றி
ஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி
காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.  1  

பிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றி
பிறவி யறுக்கும் பிரானே போற்றி
வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
பொய்ச்சார் புரமூன்று மெய்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
கச்சாக நாக மசைத்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.  2  

மருவார் புரமூன்று மெய்தாய் போற்றி
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி யென்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி யொளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி யோடு முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.  3  

வானத்தார் போற்றும் மருந்தே போற்றி
வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஊனத்தை நீக்கு முடலே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி
தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி
கானத்தீ யாட லுகந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.  4  

ஊராகி நின்ற உலகே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
பேராகி யெங்கும் பரந்தாய் போற்றி
பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி
நீராவி யான நிழலே போற்றி
நேர்வா ரொருவரையு மில்லாய் போற்றி
காராகி நின்ற முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.  5  

சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி
தேவ ரறியாத தேவே போற்றி
புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி
பற்றி உலகை விடாதாய் போற்றி
கல்லுயிராய் நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.  6  

பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவ மறுப்பாய் போற்றி
எண்ணு மெழுத்துஞ்சொல் லானாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.  7  

இமையா துயிரா திருந்தாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
உமைபாக மாகத் தணைத்தாய் போற்றி
ஊழியே ழான ஒருவா போற்றி
அமையா அருநஞ்ச மார்ந்தாய் போற்றி
ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
கமையாகி நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.  8  

மூவாய் பிறவாய் இறவாய் போற்றி
முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
தேவாதி தேவர்தொழுந் தேவே போற்றி
சென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றி
ஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி
அல்லல் நலிய அலந்தேன் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.  9  

நெடிய விசும்போடு கண்ணே போற்றி
நீள அகல முடையாய் போற்றி
அடியும் முடியும் இகலி போற்றி
அங்கொன் றறியாமை நின்றாய் போற்றி
கொடிய வன்கூற்ற முதைத்தாய் போற்றி
கோயிலா என்சிந்தை கொண்டாய் போற்றி
கடிய உருமொடு மின்னே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.  10  

உண்ணா துறங்கா திருந்தாய் போற்றி
ஓதாதே வேத முணர்ந்தாய் போற்றி
எண்ணா இலங்கைக்கோன் றன்னைப் போற்றி
இறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி
பண்ணா ரிசையின்சொற் கேட்டாய் போற்றி
பண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றி
கண்ணா யுலகுக்கு நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி. 11



குருநாதர் அழைத்த இசையமைப்பாளர் , பாடகர் :- ( இவ் திருக்கயிலாயம் - போற்றித் திருத்தாண்டகம் - வேற்றாகி விண்ணாகி என்ற பாடலை அழகாக பாடி முடித்தார்கள்.முடித்த பின்னர் குருநாதர்  மீண்டும் வாக்கு உரைக்க ஆரம்பித்தார்கள் ).

அதன் நேரலை பதிவு :-  
https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=6h02m21s


குருநாதர் :- அப்பனே, அறிந்தும் எதை என்று புரிய அப்பனே, இத்தனை அப்பனே, கலியுகத்தில் அப்பனே, பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே திருத்தலமாக போய்க்கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே. இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் சித்தர்கள், அப்பனே, எப்படி எப்படி எல்லாம், அப்பனே, பின் எதை என்று கூற. அப்பனே, ஆனாலும், பின் எங்களிடத்தில், அப்பனே, அனைவரும் இருப்பவர்கள் தான். ஆனாலும், பின் உங்களிடத்திலிருந்து யான் பேசுகின்றேன், மனிதத்தனமாக. அப்பனே, நிச்சயம் இயலாதவர்க்கும் யார் செய்வார்கள் அப்பா? 

அப்பனே, இருப்பவர்களே, அப்பனே, திருத்தலங்கள் அமைத்து, அமைத்து, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, அவர்களே, அப்பனே, இன்னும் இயலாதவர்கள் என்ன செய்வார்கள் அப்பா?. அப்பனே, இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, மிகப் புண்ணியம், அப்பனே, மற்றவர்களை, அப்பனே, இயலாதவர்களை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, சந்தோஷப்படுத்துவதே. இறைவனை சந்தோஷப்படுத்துவது அப்பனே, சமம் என்பேன் அப்பனே.

அப்புண்ணியங்கள், அப்பனே, எவராலும் வெல்ல முடியாது அப்பா.  இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இன்னும் என் பக்தர்களுக்கு சொல்வேன் அப்பனே.  இயலாதவர்களை அழைத்து வந்து, சந்தோஷப்படுத்தினால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, புண்ணியங்கள் ஆக்கி, அப்பனே, மீண்டும் அப்புண்ணியங்கள் உயர்ந்து, அப்பனே, நீடோடி வாழ்ந்து, அப்பனே, பின் அதாவது, நீங்கள் பணம் கேட்கிறீர்களே, அது சாதாரணமாக தானாகவே வந்துவிடும் என்பேன் அப்பனே. 

இதனால்தான், அப்பனே, சுயநலமாக எதையும் கேட்கக்கூடாது அப்பனே, எது என்றது அறிய. மீண்டும் இவர்கள் மகிழ்வதற்காக என்ன பாடல் என்று பாடிட்டு பாடுங்கள் என்பேன். அப்பனே, ஈசனே, மனமகிழ்வான், உங்களுக்கு தேவையானதை கொடுத்து விடுவான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( மீண்டும் சொல்கிறேன், இவங்களுக்கு என்ன பாடல் வேண்டுமோ அதை பாடி சந்தோஷப்படுத்துங்கள். இது ஒரு பெரிய புண்ணியம். இயலாதவர்களுக்கு நாம் செய்யும் உதவி வீணாகாது. எல்லாம் இருப்பவர்களுக்கே கோயில் என்று சொன்னார்கள்; அப்படியிருக்க, இயலாதவர்கள் எங்கே போவார்கள்? அவர்களை மகிழ்வித்தால், ஈசன் மனம் மகிழ்ந்து நமக்கும் தேவையானதைத் தருவார். அதனால், இவங்களுக்கு என்ன சந்தோஷம் என்று கேட்டு, அதை நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும். ஐயா, இவங்களுக்கு மகிழ்ச்சி தரும் பாடலைப் பாடுங்கள் ஐயா. )

சுவடி ஓதும் மைந்தன் :- ( சிவனடியார்கள் பார்த்து -  ஐயா, உங்களுக்கு என்ன பாடல் நாங்கள் பாட வேண்டும் ஐயா? )

சிவனடியார்கள் (ஆசையாக கேட்ட பாடல் ) :- தில்லை அம்பல நடராஜா….

சுவடி ஓதும் மைந்தன் :- ( ஐயா, அவங்க ஆசை. ஐயா, ஓகேங்களா? ஐயா, தில்லை அம்பல நடராஜா பாடல் பாடுங்கள்) .

குருநாதர் அழைத்த இசையமைப்பாளர், பாடகர் :- (தில்லை அம்பல நடராஜா என்ற பாடலை அழகாக பாடி முடித்தார்கள். )

அதன் நேரலை பதிவு :- 

Start - https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=6h06m25s
End -  https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=6h10m12s

கூட்டுப் பிரார்த்தனை அடியவர் :- (அதே நேரத்தில் 60 சிவனடியார்கள் அங்கு வர உள்ள தகவலை அடியவர்கள் அனைவருக்கும் தெரிவித்தார் )

இரண்டு அம்மை அடியவர்கள் முன்வந்து பாட ஆரம்பித்தனர் :-  ( மீண்டும் சிவனடியார்கள் சந்தோஷம் அடைய  “நாத விந்துக லாதீ நமோ நம” என்ற திருப்புகழ் பாடலை பாட ஆரம்பித்தனர் ) 

=================================
# திருப்புகழ் 170 நாத விந்துக லாதீ நமோ நம  (பழநி) -
===============================

அதன் நேரலை பதிவு :-  

https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=6h11m05s

(மீண்டும் சிவனடியார்கள் அவர்களுக்கு பாடல் , சிவனடியார்கள் சந்தோஷம் அடைய - முத்துத்திரு பக்தி திருநகை பாடல் )

அடியவர் 2 :- ( சிறுவன் மேடையேற்றப்பட்டார். அழகாக பாடினார் )

============================
# முத்தைத்தரு பத்தித் திருநகை - (திருப்புகழ் 6 - திருவருணை)
==========================
  
அதன் நேரலை பதிவு :-  
https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=6h15m31s

================================
# 7.095- திருவாரூர் - மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே
================================

அடியவர் 3 :-  ( மீளா அடிமை உமக்கே என்ற பதிகத்தை பாட ஆரம்பித்தார் ) 

https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=6h18m41s

கூட்டுப் பிரார்த்தனை அடியவர் :- ( இன்னும் சில சாதுக்கள் அவர்களை  மேடைக்கு வருமாறு அழைத்தார்கள் )  

இரண்டு  சிறுமிகள் :- (முன்வந்து பாட ஆரம்பித்தனர்)
https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=6h26m31s

=========================================
# (அடுத்த பாடல்) உம்மை தேடிச்சென்ற வழிகள் எம்மை அழைத்து சென்றது ஆண்டவனிடம் 
=========================================

https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=6h28m18s

=========================================
# (அடுத்த பாடல்) அம்பிகை பாடல் 
=========================================

https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=6h29m23s

==============================================
# திருக்கயிலாய வாத்தியம் முழங்க, சிவனடியார்கள் வருகை 
# சிவனடியார்கள் மேடையில் அமர்ந்தார்கள். 
==============================================

https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=6h34m30s

சுவடி ஓதும் மைந்தன் :- ( புண்ணியங்கள் எப்படி செய்வது குறித்து இங்கு உரைத்த உரையின் சுருக்கம் கீழே  ) 

https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=6h41m47s

(அகத்தியர் பெருமான் மற்றும் சித்தர்கள் கலியுகத்தில் மனிதர்கள் எவ்வாறு புண்ணியத்தைத் தேட வேண்டும் என்பது குறித்தும், உண்மையான இறை வழிபாடு எது என்பது குறித்து சுவடி ஓதும் மைந்தன்  விளக்கியுள்ள முக்கிய கருத்துக்களின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

1. கலியுகத்தில் புண்ணியம் தேடும் புதிய வழி: கலியுகத்தில் மனிதர்களுக்குப் புண்ணியம் செய்யத் தெரிவதில்லை என்று அகத்திய மாமுனிவர் வாக்கு. வசதி படைத்தவர்களை மகிழ்விப்பதாலோ அல்லது அவர்களுக்குப் பாடுவதாலோ எந்தப் பயனும் இல்லை, அது பாவத்தையே சேர்க்கும். ஒன்றுமில்லாத ஏழைகள் மற்றும் மறைந்து வாழும் சிவனடியார்களை மகிழ்விப்பதே உண்மையான புண்ணியமாகும். அவர்களைச் சந்தோஷப்படுத்தினால் மட்டுமே இறைவனின் அருளைப் பெற முடியும்.

2. சுயநலமான பக்தி மற்றும் வழிபாடுகள்: மக்கள் நோய்கள் தீரவும், வேலை கிடைக்கவும், குடும்பத் தேவைகளுக்காகவும் சுயநலத்துடனே கோவில்களுக்கும், கிரிவலத்திற்கும் செல்கிறார்கள். இறைவன் அடியார்களுக்கு உதவாமல் செய்யப்படும் அபிஷேகங்களாலும், பூஜைகளாலும் எந்தப் பலனும் இல்லை என்று சித்தர்கள் சாடுகின்றனர். சுயநலத்திற்காகச் செய்யப்படும் பிரார்த்தனைகள் நிறைவேறுவதில்லை, அதனால்தான் மனிதன் நிம்மதி இல்லாமல் வாழ்கிறான்.

3. இறைவனை அடையும் எளிய வழி: முதலமைச்சர் அல்லது பிரதமரைப் பார்ப்பது எப்படி கடினமோ, அதேபோல் இறைவனை நேரடியாக தரிசிப்பது கடினம். ஆனால், ஈசனின் குழந்தைகளாகிய ஆதரவற்ற அடியார்களுக்கு நன்மை செய்தால், இறைவனை மிக எளிதாகப் பார்க்க முடியும். ஈசன் எப்போதும் இல்லாதவர்களிடமும், கஷ்டப்படுபவர்களிடமும் தான் இருக்கிறார். அவர்களின் பசியையும் தேவையையும் தீர்ப்பவரே இறைவனின் கவனத்தை ஈர்க்க முடியும்.

4. மூக்குப்பொடி சித்தரின் பார்வை: திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் லட்சக்கணக்கான மக்களில், சுயநலம் இல்லாமல் பிறர் கஷ்டத்தை நினைத்து பார்ப்பவர்கள் வெறும் 20 அல்லது 30 பேர் மட்டுமே என்று மூக்குப்பொடி சித்தர் குறிப்பிடுகிறார். மற்றவர்கள் அனைவரும் தங்கள் தேவைக்காக மட்டுமே வருவதால், அவர்களை அவர் "பைத்தியக்காரர்கள்" என்றே குறிப்பிடுகிறார்.


5. அகத்திய மாமுனிவரின் கருணை: மனிதர்களால் தாங்களாகவே புண்ணியம் செய்ய முடியாது என்பதால், அகத்தியரே இது போன்ற கூட்டுப் பிரார்த்தனைகள் மற்றும் தர்ம காரியங்களை ஏற்பாடு செய்து, மக்கள் அதன் மூலம் புண்ணியத்தைச் சேர்த்துக் கொள்ள வழிவகை செய்கிறார். பிறர் மகிழ்ச்சி அடைவதைக் கண்டு மகிழ்வதே நம் கணக்கில் புண்ணியத்தைச் சேர்க்கும் வழியாகும்.

உவமை (Analogy): இக்கருத்தை எளிமையாகப் புரிந்துகொள்ள, "வங்கி சேமிப்பு கணக்கு" (Bank Balance) முறையை உதாரணமாகக் கொள்ளலாம்.

நமக்கு அவசர காலத்தில் உதவ வங்கியில் பணம் (Bank Balance) எப்படி அவசியமோ, அதே போல வாழ்க்கையில் கஷ்டங்கள் வரும்போது நம்மைக் காக்க "புண்ணியம்" என்ற சேமிப்பு அவசியம். வெறும் சடங்குகளை மட்டும் செய்வது என்பது செல்லாத பணத்தைச் சேர்ப்பது போன்றது; ஆனால் ஏழைகளுக்கும் அடியார்களுக்கும் உதவுவது என்பது உண்மையான பணத்தை (புண்ணியத்தை) நம் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்குச் சமம். அந்தப் புண்ணியக் கணக்கு வலுவாக இருந்தால் மட்டுமே இறைவனின் அருளைப் பெற முடியும். ) 


==============================================
# அடியவர்கள் தர்மம் -  சிவனடியார்கள் நலனுக்காக சுவடி மைந்தன் முன் பொருள் உதவி செய்யத் தொடங்கினர். சுமார் 1,08,000 ரூபாய் நன்கொடை வழங்கினர். அதன் பின்னர் குருநாதர் வாக்குகள் உரைக்க ஆரம்பித்தார்கள்.
==============================================

https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=6h54m15s

சுவடி ஓதும் மைந்தன் :- ( சேர்ந்த இந்த பணத்தை அடியவர்கள் எப்படி செயல்படுத்த வேண்டும் என்று உரைத்தபோது ) 

குருநாதர் : - அப்பனே! இருவர் போதும், அப்பனே! 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( இரண்டு பெரியவர்கள் போனால் போதும். கிரிவலப் பாதையில் உள்ள சாதுக்களுக்கு , அவர்களுக்கு, யாருக்கு என்ன தேவையோ அதை வாங்கிக் கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். ஐயா, உங்களுக்கு என்ன தேவையோ அதைச் சொல்லுங்கள். ஒரு லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார்கள்; அந்தத் தொகையை பயன்படுத்தி கிரிவலப் பாதையில் உள்ள சாதுக்கள் தேவைகளையும் பூர்த்தி செய்யச் சொல்கிறார்கள். அதற்காக இரண்டு மூத்தவர்கள் சேர்ந்து யாருக்கு என்ன தேவை என்பதை முடிவு செய்து வாங்கிக் கொடுக்க வேண்டும். புரியுதுங்களா, ஐயா ) 

குருநாதர் : -  அப்பனே, இன்னும் கூட, அப்பனே! பின் எவை என்று கூட ஆசிகள் உண்டு என்பேன். அப்பனே, இதனால் அப்பனே, அனைவரும் எவை என்று கூட பசித்து.

( கருணைக்கடல் அனைவரையும் மத்திய உணவு சாப்பிட உத்தரவு இட்டார்கள்.)


சுவடி ஓதும் மைந்தன் :-  (  ஐயா, எல்லாரும் பசிக்குதுன்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க. இன்னும் வாய்க்கு உணவு கிடைக்கல. திருப்பதி சென்று மீனாட்சி அம்மாவிடம் வாய்த்த காசுகளை தேரையர் சித்தர் எல்லோருக்கும் கொடுக்க சொல்லி இருக்காங்க; அது இன்னும் யாருக்கும் வழங்கப்படவில்லை. இப்போது உங்களுக்கு தருகிறார்கள். அவங்களுக்கும் பசி, சாப்பிட்டு வரச் சொல்லியிருக்கிறார்கள். ஐயா, கூட்டிக்கிட்டு போங்க. கொடுத்து விடுங்கள். கொடுத்தீங்களா? சரி ) 

( சிவனடியார்களுக்கு மதிய வேளை அன்னம் இட அனைவரும் தயாரானார் )

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28.12.2025 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டுப் பிரார்த்தனை வாக்கு தொடரும் ….) 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!