​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 16 August 2026

சித்தன் அருள் - 2278 - அன்புடன் அகத்தியர் - சென்னை சத்சங்க வாக்கு - 05/07/2026 - பகுதி - 10!




அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 05/07/2026  அன்று சென்னையில் நடந்த   அன்புடன் அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கான சத்சங்க வாக்கு - பகுதி 10 

வாக்குரைத்த நாள், நேரம்  :-  05/07/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 

===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
===========================

ஆதி சிவசங்கரியின் பொற்  கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

அம்மையே, அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். 
………..
………..
………..

( பகுதி 9 அதன் தொடர்ச்சியாக ….)

( அன்பு அடியவர்கள் சிவபுராணம் பாடி முடித்த பின்னர்…) 

குருநாதர் :-  அப்பனே அறிந்தும் எது என்று புரிய அப்பனே மீண்டும் அப்பனே பின் எது என்று அறிய பின் சுங்கனின் 

( ரிஷபம் , துலாம் ராசி அடியவர்களை அழைத்தார்கள் ) 

குருநாதர் :-  எதை ஏது என்று புரிய உங்களுக்குள்ளே, இருவர் இருவராக, இங்கு வாருங்கள். 

அடியவர் :- ரெண்டு ரெண்டு பேரா வாங்க.

சுவடி ஓதும் மைந்தன் :- ரெண்டு ரெண்டு இங்க முன்னாடி வாங்க 

( அடியவர்கள் அவரே வந்தனர் ) 

===========================
# ராகு காலத்தில்:-  (1)  கால பைரவருக்கு தீபம் , (2) துர்க்கை அன்னை வழிபாடு, (3) அனுமானுக்கு வெற்றிலை மாலை சாற்றுதல் வேண்டும். ஜீவராசிகளுக்கு வழிபாட்டுடன் உணவிட நன்று. 
===========================
#  தொடர்ந்து செய்ய நன்முறைகளாகவே வெற்றி கிட்டும்.
#  நன்முறைகளாக ஒவ்வொன்றும் நல்விதமாகவே அமையும்.
#  ஆற்றல்கள் இன்னும் அதிகரிக்கும்.
===========================

குருநாதர் :-  அப்பனே கவலை வேண்டாம் அப்பனே. எம்முடைய ஆசிகள் நல்ல விதமாகவே உன்னை அழைத்துச் செல்லும். 

அப்பனே சில சில வழிகளில் கூட அப்பனே பின் எவ்வாறு நினைப்பது எது என்று புரிய,  அப்பனே சரியாகவே, 

அப்பனே பைரவனுக்கு நிச்சயம் தன்னில் கூட பின் வரும் ராகு காலத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே தீபம் ஏற்றி, 

அவ் ராகு காலத்திலே அப்பனே நல்விதமாக துர்க்கையும் வணங்கி, 

அவ் ராகு காலத்திலே அப்பனே நிச்சயம் தன்னில் அறிந்து கூட அப்பனே இவ்வாறாக பின் அதாவது வெற்றிலை மலை அப்பனே பின் அனுமானுக்கு சாற்றிட்டு வந்தாலே, 

உன் விருப்பங்கள் அப்பனே சில தடைகள் நீங்கும் அப்பா. 

அப்பனே விருப்பங்கள் அழகாக நிறைவேறும் அப்பா, கவலைகள் இல்லை அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சில மாற்றங்கள் ஏற்படுவது உறுதி அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  புரியுதுங்களா? 

குருநாதர் :-   அப்பனே இவை தொடர்ந்து செய்ய அப்பனே நன்முறைகளாகவே வெற்றி கிட்டும். அப்பனே கவலைகள் அப்பனே இல்லையப்பா. அப்பனே நன்முறைகளாக ஒவ்வொன்றும் அப்பனே நல்விதமாகவே அமையும் அப்பா. ஆற்றல்கள் இன்னும் அதிகரிக்கும் அப்பா. கவலைகள் இல்லை அப்பனே. 

===========================
# செவ்வாய் தோறும் முருகப்பெருமானை ஆலயத்தில்  அமைதியாக தியானம் செய்ய வேண்டும். 
===========================

குருநாதர் :-  யான் சொல்லியதை செய்துட்டு அப்படியே அறிந்து கூட அப்பனே பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட பின் செவ்வாய் தோறும் அப்பனே பின் முருகன் இடத்திற்கு சென்று அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட பின் அமைதியாக உட்கார்ந்து தியானம் செய். 

===========================
# நிச்சயம் வெற்றிகள் தரும் 11 செவ்வாய் கிழமை வெள்ளி வேல் வழிபாடு.
# திருச்செந்தூரில் வெள்ளி வேலை சமர்ப்பணம் செய்ய வேண்டும்.  
===========================

குருநாதர் :-  அப்பனே பின்பு எதை என்று அப்பனே எப்பொழுதும் அப்பனே ஒரு வேல் ஒன்றை அப்பனே நிச்சயம் தன்னில் கூட, விரல் அளவு அப்பனே வைத்து, அப்பனே பின் வெள்ளியிலான  அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் நல்விதமாக பின் அதாவது இவ்வாறாக பின் 11, அப்பனே பின் எவை அறிந்து கூட, அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது செவ்வாய் தோறும், அப்பனே பின் வேலை, அப்பனே கையில் வைத்துக்கொண்டு, விருப்பமானதெல்லாம் கேட்டு, அப்பனே பின்பு அப்பனே திருச்செந்தூரை அடைந்து, அப்பனே அவ் வேலை அங்கே சமர்ப்பித்து விடு. அப்பனே வெற்றிகள் நிச்சயம். ஆசிகள். ஆசிகள் அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அடுத்து உங்களுக்கு கேக்கணும். என்ன கேக்குறீங்க?  

அடியவர் :- சொல்லிட்டாருங்க அய்யா 

அடியவர் 16:- நாங்க பைரவர்  கோவில் விளக்கு போட்டுக்கிட்டு தான் இருக்கோம் அய்யா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  எக்ஸ்ட்ரா பண்ண சொல்றாரு. இன்னும் உங்களுக்கு என்னென்ன தேவையோ எக்ஸ்ட்ரா கொஞ்சம் பண்ணுங்க…. அதுக்கு தகுந்த மாதிரி உங்களுக்கு கிடைக்கும்ன்னு சொல்லறார் … உண்டுமா… ரெக்கார்ட் பண்ணிக்கிறீங்க ஐயா? 

அடியவர் :- ஆமாம் அய்யா . ரெக்கார்ட் ஆகுது..

அடியவர் 16:- வேலை மாறுதல் அய்யா …

சுவடி ஓதும் மைந்தன் :-  அதுவும் கிடைக்கும். எல்லாத்துக்கும் கிடைக்கும். இதுல இருந்தாலும் நல்ல இதுதான்… இப்ப இருக்கிற வேலை மாதிரி… எல்லாமே கிடைக்குதுமா…. 

===========================
# குலதெய்வ ஆலய மண்  வழிபாடு ரகசியங்கள்…..
===========================

அடியவர் 15 :- லாஸ்ட் வாக்குல வந்து நீங்க சொன்னீங்க ஐயா…. தடைகள் ஏற்படுறதுக்கு குலதெய்வங்களோட சாபங்களும் கோபங்களும் இருக்கிறதுனால தடைகள் வந்துட்டு இருக்கு அப்படின்னு சொல்லிட்டு… அதுக்கு பரிகாரமும் சொன்னீங்க… கோவிலுக்கு போயிட்டு நீங்க அதோட மண்ணை எடுத்து வந்து… வீட்ல பூஜை பண்ணி…. எடு பூஜை பண்ணாவே வந்து உங்களுடைய தடைகள் எல்லாம் நீங்க அப்படின்னு சொன்னீங்க…. இப்போ அந்த மாதிரி போகும்போது அந்த கோயிலோட பணிகள் நடந்துட்டு இருக்கு. கோயில் வந்து 

அடியவர் 16 :- இப்ப இல்ல எல்லாத்தையும் எடுத்துட்டு இப்ப வெளிய வச்சிட்டு 

சுவடி ஓதும் மைந்தன் :-   ஓகே…. அந்த வெளியாவோட நீங்க எடுத்துட்டு வாங்க ஐயா… வெளிய இருக்கறதையும் கூட்டிட்டு வாங்க… எடுத்துட்டு வரலாம். அதுவும், இதையும் பண்ணுங்க. ஆமா எக்ஸ்ட்ரா பண்ணுங்க. 

( குலதெய்வம் கோவில் வெளியேவும் , உள்ளேயும் உள்ள மண் எடுத்து , இல்லத்தில் வைத்து பூஜை செய்ய நன்றே….)  

சுவடி ஓதும் மைந்தன் :-    நல்லா ஆற்றல் உங்களுக்கு…. அடுத்த முறை கொஞ்சம் நல்லா இருக்குதுங்க ஐயா வந்து… இதெல்லாம் பண்ணுங்க ஐயா… தயவு செய்து வந்து….. ஆற்றல் பெருகிக்கொண்டு….. நீங்கள் இருப்பது நடந்து நல்லா இருக்குது வந்து…. அதனால இதை பண்ணுங்க நீங்க வந்து….. நல்லா இது பண்ணுங்க…. 

அடியவர் 16 :-  குழந்தை படிப்பு ?

சுவடி ஓதும் மைந்தன் :-   எல்லாத்துக்கும்மா சேர்த்து ஆமா 

===========================
# அன்புடன் மதிய உணவு அழைப்பு……
===========================

யாத்திரை குழு அடியவர் :- எல்லாருக்கும் ஒரு அறிவிப்பு. ஐயா ஆசி வாங்குனவங்க மதிய உணவு ஏற்பாடு பண்ணிருக்கோம்.  சாப்பிட வாங்க அம்மா, சாப்பிட வாங்க ஐயா.

அடியவர் 7 :- அடுத்த ரெண்டு பேரு வாங்கமா.

அடியவர்  :-  அடுத்த ரெண்டு பேரு வாங்க 

சுவடி ஓதும் மைந்தன் :-  கேட்காதவங்க வாங்கம்மா… அடுத்த ரெண்டு பேரு ரெண்டு பேரா வந்து நில்லுங்கம்மா.. 

( 2 அடியவர்கள் வந்து முன் நின்றனர் ) 

===========================
# பின்வரும் வாக்கு மிக மிக முக்கியமான தனி வாக்கு. ஆனால் ஒவ்வொரு குடும்பத்திலும் இது போல ஏராளம் உண்டு…எனவே முன்னோர்கள் வழிபாட்டை  ஒவ்வொரு குடும்பத்திலும் அவசியம் செய்ய வேண்டும் என்பதற்கிணங்க இவ் தனி வாக்கினை இங்கு அனைத்து அடியவர்கள் நலன் கருதி, கருணைக்கடல், குருநாதர் பொற்  பாத கமலத்தை  பணிந்து  இங்கு வெளியிடப்பட்டுள்ளது என்று அறிய தருகின்றோம். பின் வரும் வாக்கினை அடியவர்கள் உணர்ந்து , முன்னோர்கள் குறித்த வழிபாடுகள் நன்று செய்க…குடும்ப நலம் பெறுக….
===========================

குருநாதர் :-  எதை ஏது என்று புரிய, பல வகையான நிச்சயம் தன்னில் கூட சாபங்கள் பின் முன்னோருடைய பின் நிச்சயம் சாபங்கள், எவ்வாறு என்பதை எல்லாம். 

அவையெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட தாயை எவை என்று கூட பின் நிச்சயம் தன்னில் கூட மாற்றி அமைத்து பின் நல்லதாகவே பின் நடக்கும். 

ஒவ்வொன்றாக செய்கின்றேன். 

இதனால் எதை என்று புரிய ஏன் மனிதனுக்கு சில வகையில் தடங்கள், தாமதங்கள், மனக்குழப்பங்கள், இன்னும் என்னென்னவோ எதை என்று புரியாமலும்… 

இதனால் முன்னோர்கள் ஆசி, எவை என்று கூட சாபங்கள் எவ்வாறு என்பதை எல்லாம். 

இதனால் நிச்சயம் தன்னில் கூட படிப்படியாக அவை தன் ஆனாலும் எவ்வாறு என்பதை எல்லாம் எத் திருத்தலத்திற்கு எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட சென்றாலும் எவை என்று புரிய.. 

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட யான் தான் ஆசிகள் கொடுத்து கொடுத்து அவையெல்லாம் மாற்றி தந்து கொண்டே கொண்டே இருக்கின்றேன். 

இதனால் பொருத்தே ஆகவேண்டும். 

எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பின் பொருத்தமான இடத்தில் பொருத்தமான நல் எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பின் கேட்டதை எவை என்று புரிய பின் முருகனே தருவான். 

இதனால் கவலைகள் வேண்டாம். 

**** நல்ல விதமாக முன்னோர்களின் சாபங்கள் நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும்  கூட பின் 

**** அவைதன் சிறு சிறுதாக விலகுகின்ற பொழுது **** , 

***  பெரிது பெரிதாக நல்லது நடக்கும்****  என்பது நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட.****  

இதனால் சில வகையான பின் சாபங்கள் நிச்சயம் தன்னில் கூட பின் எப்படியோ எதை என்று புரிய பின் அதாவது எவற்றுக்கெல்லாம் எங்கு செல்ல வேண்டும் எதை என்று புரிய, எவ்வாறெல்லாம் பின் நிச்சயம் கணித்து, அறிந்தும் கூட, இதனால் கவலைகள் வேண்டாம் நிச்சயம் தன்னில் கூட ஏது என்று புரிய. 

இதனால் பின் ஏது என்று புரிய பின் அறிந்து கூட பின் இவ்வாறாக பின் அதாவது உன்னுடைய பின் இல்லத்திலும் எவை என்று அறிய நிச்சயம் தன்னில் பின் பெண் இறந்து எவை என்று புரிய நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட இவ்வாறாக அவ் பெண் முழுமை அடையவே இல்லை. 

இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட பின் மனக்குழப்பங்கள். இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட ஆண்களுக்கு பின் அதாவது ஆகாத சூழ்நிலை. இவையெல்லாம் பின் ஏற்படும். ஆனாலும் அவையெல்லாம் தடுத்து தடுத்து, அப்பெண்ணை சமாதானப்படுத்தி பின் முக்திக்கும் பின் மோட்சத்துக்கும் அனுப்புகின்றேன். அதனால் பொறுத்தே ஆக வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :-   புரியுதுங்களா?  ஒரு பெண்ணானவங்க வந்து உங்களுக்கு தெரிஞ்சு இறந்து இருக்காங்களா?  என்னன்னு தெரியல?  ஏதாவது இருக்காங்களா? 

அடியவர் 18 :-  வீட்டுக்காரரோட அத்தை இறந்தாங்க 

சுவடி ஓதும் மைந்தன் :- என்னமா 

அடியவர் 18 :-  வீட்டுக்காரரோட அத்தை அப்பா கூட பிறந்த அத்தை இறந்தாங்க 

சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா வயசானவங்க இல்ல… ஒரு 40 ஓ.. 30 ஓ… ஒரு 20 ஓ… ஒரு பத்தோ… அது மாதிரி முன்னாடி 

அடியவர் 18 :-  அதான்யா இப்ப ரீசனாவா…. முன்னாடினா…. இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னாடி… 30 வருஷத்துக்கு முன்னாடி ஒரு அத்தை இறந்திருக்காங்க…. சின்ன வயசுல 10 வயசு. 

சுவடி ஓதும் மைந்தன் :-   அதுதான். அதுதான். அந்த வந்து இப்ப என்ன இப்ப என்னன்னா வந்து… அந்த அந்த முழுமை பெறல… இன்னும் ஆத்மா வந்து… அது முழுமை பெறாததுனால ஆண்களுக்கு வந்து…. அதான் உங்களுக்கு மனக்குழப்பம் திடீர்னு… என்னடா… என்னடா இது அப்படின்னு மாறும்…. அதே மாதிரி என்ன ஆகும்னா வந்து…. ஆண்களுக்கு ஆகாதுன்றார் வந்து . 

சுவடி ஓதும் மைந்தன் :-   ஆண்களுக்கு ஆகாதுன்றார் வந்து . அப்ப அது வந்து என்ன பண்ணனும்னா நீங்க தீர்க்க முடியுமா என்றால், முடியாது. அதனால அகத்தியர் என்ன பண்றாரு… மெதுமெதுவா.. மெதுமெதுவா… அதை மாற்றி தருகின்றேன் என்றார் வந்து. அது மாற்றி தருகின்றேன். அதுவரைக்கும் நீங்க பொறுத்து தான் ஆக வேண்டும் என்றார். இதற்கு எந்த இதுவும் வந்து மாற்ற முடியாது இப்ப சூழ்நிலை நம்பிக்கை வந்தாரு,,, அதனால நீங்க வந்து நான் மாற்ற தந்தேன் கொஞ்சம் அமைதியா இருங்கன்றாரு…

குருநாதர் :- தாயே இதையும் கூட, எவை என்று கூற, சில திருத்தலங்களுக்கு நிச்சயம் நீங்க சென்று எவை என்று கூட சில புண்ணியங்கள் செய்தாலே எம்மாலும் பின் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது சித்தர்களாலும் சொல்ல முடியும். இதனால் சில திருத்தலங்களுக்கு பிறகே இப்பொழுது சொல்கின்றேன். அவையும் பின் அதி விரைவாகவே பின் நிச்சயம் முடிவு அடையும் .

சுவடி ஓதும் மைந்தன் :-  இதுக்கும்.. இது சொல்லணும்னா… சில திருத்தலங்கள்… சில இதெல்லாம் வந்து… நீங்க வந்து போயிட்டு வந்தாதான்… இது சித்தர்கள் சொல்ல முடியுமாம்.  அதனால சில புண்ணியங்கள் உங்களுக்கு பெருக்கி, இதை இப்பதான் சொல்லி இருக்கிறார் அகத்தியர் வந்து,,, இதை நீக்க வேண்டும் என்றால்,,,, அவ்வளவு சீக்கிரமா வந்து……அதை அவரே நீக்கி தரேன் என்று சொல்றாரு. 

குருநாதர் :- தாயே நல்விதமாக எதை என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் ஆண்களுக்கும் எவை என்று புரிய தன் விருப்பம் போல் எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அதாவது பின் மனக்குழப்பங்கள் இன்னும் எது என்று புரிய பின் எவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட என்றெல்லாம் நிச்சயம் தன்னில் திடீர் திடீர் எவை என்று கூற  மனம் மாறுவது. 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்படி இந்த இதுக்குனால… மனசு வந்து… மாறுறது. சண்டை எடுக்குறது. இது மாதிரி எல்லாம் அடிக்கடிக்கும் வந்து… ஆண்களுக்கு வந்து… இது மாதிரி அது வந்து… அந்த ( மோட்சம் அடையாமல் இருக்கும் ஆன்மா ) அம்மாவோட இது இருக்கிறதுனால… இப்படி எல்லாம் மாறி இது மாதிரி நடக்கும்ன்றாரு வந்து.. 

குருநாதர் :- தாயே கவலைகள் வேண்டாம் நிச்சயம் தன்னில் கூட. பின் அதாவது ராமேஸ்வரத்திற்கும் ஏற்கனவே சென்றுவிட்டாய். இதனால் எவை என்று கூற  பின் உன் இல்லத்தில் ஏது என்று போய் நிச்சயம் அனைவருக்குமே பின் உங்களால்தான் பின் மோட்ச கதி அடைய வேண்டும் என்பது விதி. 

சுவடி ஓதும் மைந்தன் :- உங்க வீட்ல யாருமே திதி எல்லாம் சரியா கொடுக்கல… 

அடியவர் 18 :-  கொடுக்குறோம் அய்யா…  

சுவடி ஓதும் மைந்தன் :- அதனால வந்து… நீங்க தான் அதை கொடுத்து… எல்லாத்தையும் மாத்தணும். அதனால கொஞ்சம் லேட்டா நடக்குற மாதிரி.. வேற ஒன்னும் கவலை இல்லைன்றாரு வந்து. 

===========================
# ராகு காலத்தில் “அனுமான் சாலிசா” ஆண்கள் படிக்க வேண்டும்..
===========================

குருநாதர் :- ஏது என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும்  கூட இதனால் ராகு எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்ற வேலையில் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது என்ன ஏது என்று புரிய அறிந்து கூட பின் அனுமானுக்கு நிச்சயம் தன்னில் கூட பின் அனுமான் சாலிசா எவை என்று கூட பின் அதாவது ஆண்கள்  படித்து வந்தால் நன்றாகும்.  

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆண்கள் வந்து உங்க வீட்ல யார் யார் இருக்கிறாங்களோ… அனுமன் சாலிசா… அனுமான் சாலிசா ஒன்னு கேட்கணும். இல்லைன்னா படிக்கணும்.. 

அடியவர் 7:- படிக்கணும் 

சுவடி ஓதும் மைந்தன் :-   அது எப்ப படிக்கணும்?  

அடியவர் 18 :-  சனிக்கிழமை 

சுவடி ஓதும் மைந்தன் :-   ராகு காலத்தில்… 

குருநாதர் :- எது என்று புரிய நிச்சயம் தன்னில் இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட இதனால் அறிந்து கூட இவ்வாறாக ஏது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட, அதாவது அறிந்தும் திருவெண்காடு ஒருமுறை சென்று பின் நிச்சயம் தரிசித்தல் நன்று. 

சுவடி ஓதும் மைந்தன் :-   திருவெண்காடு 

அடியவர் 18 :-  இப்பதான் ஒரு தடவை போயிட்டு வந்தோம்… 

சுவடி ஓதும் மைந்தன் :-   திரும்பியும் போகணும்.. 

அடியவர் 18 :- புதன் ஸ்தலம் 

சுவடி ஓதும் மைந்தன் :-   ஆமாம்..புதன் ஸ்தலம் ….திரும்பியும் வந்து போகணும் ஒரு தடவை. ஓகேங்களா?  திருவெண்காடு… 

குருநாதர் :- எதை எதை என்று புரிய தாயே நிச்சயம் தன்னில் பிள்ளைகளை அழைத்து நிச்சயம் திருவிடைமருதூர் ஏறுக. 

அடியவர் :- திருவிடைமருதூர் 

சுவடி ஓதும் மைந்தன் :-    திருவிடைமருதூர் அங்க வந்து.. 

அடியவர் 18 :-  பிள்ளைகளையும் கூட்டிட்டு போகணுமா? 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆமாம்.

குருநாதர் :- ஏன் எதற்கு இவர்களுக்கும் சில சாபங்கள். நிச்சயம் தன்னில் கூட அங்கு சென்றால் நிச்சயம் மாறும். 

சுவடி ஓதும் மைந்தன் :-   சில சாபங்கள் பிள்ளைகளுக்கும் இருக்குது வந்து… ஐயா எங்க சொல்லுங்க? 

அடியவர் :- திருவிடைமருதூர் 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆமாம். திருவிடைமருதூர் 

குருநாதர் :- கடைசியில் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட ஏது என்று கூற பிரம்மனையும் தரிசிக்க நன்று. எவை என்று கூற எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அங்குள்ள திருப்பட்டூர் சென்று ஏறுக. 

அடியவர் :- திருச்சி 

சுவடி ஓதும் மைந்தன் :-  திருச்சி அங்க ஏறுகன்னா திருப்பட்டூர் ஒரு கோயில் இருக்கும் நாலு கோயில் ஒன்னா பண்ணனும்… திருப்பட்டூர்னா அது பார்க்கலாம் ஏறுகன்னா… அதன் மேல ஒரு கோயில் இருக்குது… அதை பார்த்துட்டு.. இதை பார்த்துட்டு.. ரவுண்ட் அடிக்கணும்…. பெருமாள் கோயில்… இன்னும் வந்து காசிநாதன் எல்லாம் … நாலு கோயில் …….பார்க்கணும் 

===========================
(திருப்பட்டூர்  பிரம்மபுரீஸ்வரர் கோயில் அருகில் உள்ள கோயில்கள் :- 

(1) திருப்பட்டூர்வரதராஜ பெருமாள் கோயில் (Varadaraja Perumal Temple): திருப்பட்டூர் ஊருக்குள் அமைந்துள்ள புகழ்பெற்ற வைணவத் தலம்.  

(2) திருப்பட்டூர் அரங்கேற்ற ஐயனார் கோயில் (Arangetra Ayyanar Temple): திருப்பட்டூர் பகுதியில் உள்ள பழமையான கிராமக் காவல் தெய்வக் கோயில். திருப்பட்டூரில் பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்கு அருகில் உள்ள மற்றொரு ஆன்மீகத் தலம்.  

(3) திருப்பட்டூர் காசி விஸ்வநாதர் கோயில் (Kasi Viswanathar Temple): திருப்பட்டூரில் அமைந்துள்ள மற்றொரு முக்கியமான சிவஸ்தலம். இங்கு வியாக்கிரபாத முனிவர் (புலிக்கால் சித்தர்) ஜீவ சமாதியும் அமைந்துள்ளது. ) 
===========================


குருநாதர் :- நன்கு எது என்று புரிய ஏது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட திருமூர்த்தி மலையை நாடு 

சுவடி ஓதும் மைந்தன் :-  திருமூர்த்தி மலை… திருமூர்த்தி மலை எங்க இருக்கு தெரியுங்களா?  அங்க நாடுன்றார் 

குருநாதர் :- தாயே இன்னும் ரகசியம் சொல்கின்றேன்.. இப்பொழுதுதான் நிச்சயம் பின் முன்னோர்கள் வழிவிட்டு இருக்கின்றார்கள். இன்னும் சொல்வேன் கவலைகள் வேண்டாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  இப்பதான் வந்து முன்னோர்களே உங்களுக்கு வழிவிட்டு இருக்காங்கமா வந்து இன்னும் நான் சொல்கின்றேன் கவலை வேண்டாம் 

குருநாதர் :- எதை ஏது என்று அறிய எதை பற்றியும் நிச்சயம் பின் கேட்க தேவையில்லை எதை என்று புரிய யான் சொல்லியதை கேள் தானாக நடக்கும் இல்லையென்றால் பின் மனப்பிரச்சனைகள் தான் பின் எவை என்று கூட ஆண்களுக்கும் பெண்களுக்கும் கூட. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இது செய்யாட்டி நீங்க வந்து.. முதல்ல இதை தீர்த்துக்கோங்க இல்லைன்னா வந்து… உங்க வீட்ல ஆண்களுக்கும் பெண்களுக்கும் வந்து… சண்டை பிரச்சனை அதெல்லாம் வந்துட்டு இருக்கு… 

அடியவர் 18 :-  ஏற்கனவே குழப்பமாவே இருக்கு 

சுவடி ஓதும் மைந்தன் :-  அது நீங்க போயிட்டு வந்துருமா நீங்க போயிட்டு வந்துருமா கோமாதான் இல்லத்துல ரொம்ப 

அடியவர் 18 :-  பசுவுக்கு ரொம்ப உடம்பு முடியாம இருக்கு.. 

குருநாதர் :- எதை ஏது என்று அறிய, தாயே கவலைகள் வேண்டாம். இதையெல்லாம் யான் பார்த்து. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதெல்லாம் நான் பார்த்து…( கொள்கின்றேன் )  

அடியவர் 18 :- அதான் குடுத்துறேன்னு கேக்குறதுக்கு 

குருநாதர் :- ஏது என்று புரிய தாயே நிச்சயம் தன்னில் இவையெல்லாம் பின் எவை என்று புரிய பின் யோசித்து செய் 

சுவடி ஓதும் மைந்தன் :-   இதெல்லாம் நீ யோசிச்சு செய்யலாமா உங்களுக்கு யோசிச்சு செய் என்றாரு அது 

அடியவர் 18 :-  அய்யா பார்த்துக்கிடுவாங்களா ஐயா காப்பாத்திகிடுவாங்களா? 

சுவடி ஓதும் மைந்தன் :- இல்ல நீ யோசிச்சு செய் என்றார் அகத்தியர் வந்து… மீதி நான் பார்த்துக்கிறேன். நீ யோசிச்சு செய்ன்றாரு. ஆமா இதுக்கு பதில் அதுதான். யோசிச்சு செய்ய வேண்டும்ன்றார்… 

குருநாதர் :- தாயே நல் ஆசிகள். கவலைகள் வேண்டாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  கவலை வேண்டாம். 

குருநாதர் :- நல்விதமாக எதை என்று புரிய எதை என்று அறிய பின் அனைத்தும் எவை என்று புரிய நான் சொல்வதை ஏற்று நட. நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூட சில பின் முன்னோர்களின் தரித்திரம் நீங்கும். நல்படியாக அனைத்தும் நடக்கும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஓகேங்களா? 

அடியவர் 18 :- அப்ப இந்த திருத்தலங்களுக்கு எல்லாம் சென்று வந்த பிறகு வீட்ல ஏதோ சுபகாரியம் 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதுதான் அப்புறம் சொல்லுவாரு போயிட்டு வாங்க இதை சொல்லுவாரு பின் அந்த இதெல்லாம் இருக்குறதுனால முன்னோர்கள் வந்து இன்னும் இது பண்ணதுனால அப்படியே இருக்குது வந்து இதை நீங்க போயிட்டு வாங்க அப்புறம் சொல்றாருன்னு சொல்லி…

(அடியவரின் இல்லத்தில் உள்ள முருகப்பெருமான் படத்தில் இருந்து பூ கீழே விழுந்து கொண்டே இருந்தது… அடியவர்கள் பெருமிதத்துடன் இது குறித்து உரையாடினார்கள். முருகப்பெருமான் திருவடிகள் போற்றி போற்றி போற்றி ….)  

குருநாதர் :- தாயே எது என்று கூற பின் நிச்சயம் தன்னில் இன்னும் பின் ஏது என்று புரிய பின் அறிந்து கூட பின் எவ்வாறு பல வகையில் பிறக்கவும் பின். ஆசிகள் ஆசிகள் 

சுவடி ஓதும் மைந்தன் :-   இன்னும் வந்து சில ஆசிகள் எல்லாம் வந்து கொடுக்க நான் ஆசி பண்றோமா… பல வகையான இன்னும் நிறைய முன்னோரோட ஆசி கிடைக்கல உங்களுக்கு வந்து… அந்த ஆசிகளும் நான் கிடைக்க உனக்கு ஏற்பாடு பண்றோம் 

சுவடி ஓதும் மைந்தன் :-   அம்மா சாப்பிட்டு வந்துருங்கமா…எல்லாரும் சாப்பிட்டு பசிக்குது… ஆமா நீங்க சாப்பிட்டு வந்துருங்கமா எல்லாரும்… 

குருநாதர் :-  பின் உணவை எவை என்று கூட பின் அனைவருக்கும் இட்டு வாருங்கள் பின்பு உரைக்கின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  முதல்ல எல்லாம் சாப்பாடு போடுமான்னு சொல்லிட்டாரு அவரே சொல்லிட்டாரு. 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!