உலக நன்மைக்காக மதுரையில் சிவபுராண கூட்டு பிரார்த்தனை
நாள்: 7.12.2025, ஞாயிறு இடம்: A.S திருமண மண்டபம், வில்லாபுரம், மதுரை
இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
====================================
# அன்புடன் தேரையர் சித்தர் வாக்கு
====================================
ஆதி மூத்தோனை பணிந்து, குருநாதனையும் பணிந்து, வாக்குகள் ஈகின்றேன் தேரையனே.
( மதுரை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 6 )
தேரையர் சித்தர் :- போய்க்கொண்டிருக்கின்றானே பணத்தின் பின்னே அறிந்தும் பின் நோய் வந்துவிட்டால் யாராலும் முடியாதடா.
தேரையர் சித்தர் :- சம்பாதிக்கலாம் அறிந்தும் அடுக்கடுக்காக வைக்கலாம் அடுக்கி அடுக்கி மீண்டும் சென்று விடுமடா மருத்துவத்திற்கு
சுவடி ஓதும் மைந்தன் :- நல்லா சம்பாதிக்கலாம். லட்சம் சம்பாதிக்கலாம். ரெண்டு லட்சம் சம்பாதிக்கலாம். நல்லா நீங்க அடுக்கி வைக்கலாம். பேங்க் பேலன்ஸ்ல போட்டு வைக்கலாம். கடைசில என்ன ஆகும் அது?
தேரையர் சித்தர் :- போகுமடா
சுவடி ஓதும் மைந்தன் :- போகுமடா. எங்க போகும்? ஹாஸ்பிட்டலுக்கு போகுமடான்றார் அவர்.
தேரையர் சித்தர் :- இதைத்தன் இன்னும் ஞானங்கள்
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க ஞானங்கள் பெற , உங்களை வெல்ல எப்படி நம்மளை பாதுகாக்கிறதுன்னு சொல்லிட்டு நான் உங்களுக்கு நிறைய சொல்லிக் கொடுக்கிறேன்.
தேரையர் சித்தர் :- இவைத்தன் உணர்ந்த இதை நீங்கள் பயன்படுத்தினால் இதை உணர்ந்தும் பின் மற்றவர்களுக்கும் சொல்ல, அவர்களும் பின் காப்பாற்றிக் கொள்ள, கலியுகத்தில் நல்லதடா. பின் புண்ணியம் இருந்தால்.
சுவடி ஓதும் மைந்தன் :- (நீங்க கத்துக்கோங்க. மத்தவங்க கத்துக்கொடுங்க. கத்துக்கினாங்க ஓகே இல்லைன்னா… இதுக்கும் புண்ணியங்கள் வேணும். )
தேரையர் சித்தர் :- இவைத்தன் வருங்காலத்தில் நிச்சயமாய் எதை என்று அறிந்து இவைத்தன் இதற்கும் புண்ணியங்கள் வேண்டுமடா செய்வதற்கும். அதனால் சிறிது சிறிதாக புண்ணியத்தை உங்களுக்கு வழங்குகின்ற பொழுது தானாக தோன்றுமடா இப்படி செய்யலாம் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப யாரும் செய்ய முடியாது இதை. எல்லாமே புண்ணிய கணக்கு தான். இந்த புண்ணியம் இருந்தாதான் செய்ய முடியு.ம் இவரே என்ன சொல்றாருன்னா நான் சொல்லிக் கொடுக்கிறோம்ப்பா. உங்களால செய்ய முடியாதுன்றாரு. யாரும் செய்ய முடியாது. புண்ணியம் இல்ல புண்ணியம் இல்ல புண்ணிய கணக்கு கம்மியா இருக்குது. அப்ப ஏதோ ஒரு மூலமா நானே புண்ணியத்தை அளிக்கிறேன்றார். சித்தர்களே, இந்த காலையில வந்தார் இல்லயா.. அது மாதிரி புண்ணியத்தை உங்களுக்கு நான் சேர்த்து கொடுக்கிறேன். நீங்க அதன் மூலமா புண்ணியங்களை புண்ணியத்தை சம்பாதிச்சுக்கோங்க.
தேரையர் சித்தர் :- இவைத்தன் அறிந்தும், இவைத்தன் பின் கடைசியில், இவை என்று இதைத்தன் பின் மேலே பின் புள்ளியிட்டு, புள்ளியிட்டு சொல்லடா.
(சாதாரணமாக மேலே உள்ள வாக்குகள் யாருக்கும் என்ன என்று எவ்வளவு முயன்றாலும் பபுரிந்து கொள்ள இயலாது. ஆனால் சுவடி ஓதும் மைந்தனுக்கு மட்டுமே புரியும். ஏன் என்று அடியவர்கள் யூகித்துக் கொள்க.)
சுவடி ஓதும் மைந்தன் :- (18 மெய் எழுத்துக்கள் அங்குள்ள அடியவரை சொல்ல சொன்னார்கள் )
அடியவர் :- (சத்தமாக 18 மெய் எழுத்துக்களை எடுத்துரைத்தார்)
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
=================================
# அன்பு அகத்திய மாமுனிவரை, ஏன் குருமுனி என்று, சித்தர்கள் அழைக்கின்றார்கள்?
==================================
தேரையர் சித்தர் :- இவைதன் அனைத்தும் இயக்குவதற்கு என் குருநாதன் அகத்தியன் பயன்படுத்தினானடா குரு வடிவிலே. இதனால் அவன் தன் இதை பயன்படுத்தினால் எனக்கு குருவானவராக திகழ்கின்றானடா. குரு குரு.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா இது என்ன சொல்றாரு புரியுதுங்களா? எளிமையான வழியில
தேரையர் சித்தர் :- இவைத்தன் பின் சுலபமாக பாவத்தை ஒழிக்க
சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் :- ( ஓகே இதை ஒன்று சுலபமாக பாவத்தை ஒழிக்க என் குருநாதர் தயாரிச்சாரு. இதை பாருங்க மெய்யெழுத்துக்குள்ளேயே ரகசியம் வெளிப்பட்டுச்சுங்க. என் குருநாதர் வந்து, யார் தேரையர் சொல்றாரு, இது பயன்படுத்தார் குரு குரு குருன்னா குறுக்கு. குறுக்கு வழியில, குறுக்கு வழியில தயாரிச்சாரு குருநாதர். யாரு அகத்தியர் பெருமான். அதனால அவர் குருமுனி. இதை அவர் பயன்படுத்தினாலே குரு ஆயிட்டாருடா. நம்ம என்னமோ சொல்றோம்ல குள்ளமா இருக்கறதுனால குருமுனி அது கிடையாது. இது நமக்கு ஒரு எளிய வகையில வந்து புண்ணியங்களை சம்பாதிக்கிறதுக்காக, இந்த மெய்யெழுத்துக்களை கண்டுபிடிச்சு கொடுத்திருக்கிறார்ப்பா. அதனாலதான் அவர் எனக்கு குருவா இருக்கிறார் அப்படின்றாங்க. அதனாலதான் குருமுனி. குறுக்கி கொடுத்ததுனால)
தேரையர் சித்தர் :-இவைத்தன் இதில் கூட நமச்சிவாய, நமச்சிவாய என்று எழுதடா
(அனைவருக்கும் உயர் மந்திர உபதேசம் ஆரம்பம் )
https://www.youtube.com/watch?v=LsrBdk6U31U&t=5h34m25s
சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் :- ( 18 மெய் எழுத்துக்கள் எழுதி, அதனுடன் நமச்சிவாய என்று அவ் மெய் எழுத்துக்கள் முன்னாள் எழுத சொன்னார். அதன்பின் சுவடி ஓதும் மைந்தனே அவ் யந்திரத்தை எழுதி படிக்கச் சொன்னார். அடியவரும் அவ்வாறே படித்தார். பின் சுவடி ஓதும் மைந்தன் ஒரு முறை படித்தார். அதன் யந்திரம் இங்கு பட வடிவில் உங்களுக்கு இங்கு வழங்கப்பட்டுள்ளது. )
அடியவர் :- நக் நங் நச் , மஞ் மட் மண் , சித் சிந் சிப் , வாம் வாய் வார் , யல் யவ் யழ் ,
தேரையர் சித்தர் :- இவைத்தன் இதை பின் பயன்படுத்த இதைத்தன் அனைத்து உறுப்புகளும் செயல்படுமடா. இதே குருநாதரின் கருத்து.
சுவடி ஓதும் மைந்தன் :- இது என்ன ஆகுமாம்? உடம்புல இருக்கிற தசை எல்லாம் ஏதாவது ஒன்னு பார்ட்ஸ் க்ளோஸ் ஆனா, நோய் வந்துரும். ஆனா இது சொல்லும்பொழுது எல்லா தசைகளும் என்ன ஆகுமாம்? பலப்படும்.
தேரையர் சித்தர் :- கடைசியில் ஓதிடடா மீதி மூன்று. (
சுவடி ஓதும் மைந்தன் :- ( அய்யா கடைசில - ள் ற் ன் - இந்த 3 எழுத்தையும் சேர்த்து ஒரு முறை சொல்லுங்கள் )
அடியவர் :- நக் நங் நச் , மஞ் மட் மண் , சித் சிந் சிப் , வாம் வாய் வார் , யல் யவ் யழ் , ள் ற் ன்.
தேரையர் சித்தர் :- இதைத்தன் பலமாக எவை என்று அறிந்தும் நுரையீரலுக்கு சம்பந்தப்பட்டது. மீண்டும் அனைவருக்கும் தொடர்ந்து எவை என்று பின் நேராக இவைத்தன் அதிவேகமாக ஓதடா.
அடியவர் :- நக் நங் நச் , மஞ் மட் மண் , சித் சிந் சிப் , வாம் வாய் வார் , யல் யவ் யழ் , ள் ற் ன்.
தேரையர் சித்தர் :- இதைத்தன் இதைத்தன் மந்திரமாகவே எவை அறிந்தும் மந்திரம் என்றே, பின் மந்திரத்திலே மருந்தடா.
சுவடி ஓதும் மைந்தன் :- இது மந்திரம். இந்த மந்திரத்திலே மருந்து.
தேரையர் சித்தர் :- இதுவே நமச்சிவாயனடா.
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் :- ( நமச்சிவாயடா இது யாருன்னா நமச்சிவாயம். இந்த நமச்சிவாயத்தோட இது சேர்ந்துச்சுன்னா அவருடைய அருளும் கிட்டும். அப்ப என்ன ஆகும்? அதான் உடல் நலம், மனநலம் உடல் நலம். இறையருள் இங்க பெறுவதற்கு எளிய புண்ணியம் சேரும். உடல் நலமும் சரியாகும்ன்றாங்க சரியாகும் ன்றார் ஏன்னா ஒரே நேரத்துல ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். நமசிவாய நாமத்தையும் சொல்றேன்,உடல் நலமும் சரியாகும் )
தேரையர் சித்தர் :- இவைத்தன் நிற்க, அறிந்தும் இவைத்தன் சொன்னேனே திருத்தலத்தில்
சுவடி ஓதும் மைந்தன் :- இதை என்ன சொல்றாருன்னா, எங்க சொல்லணும்? திருத்தலத்தில் சொல்லணும்ன்றாங்க. திருத்தலத்தில் சொல்லணும் நீங்க.
தேரையர் சித்தர் :- மனம் உறுதிப்படுமே.
சுவடி ஓதும் மைந்தன் :- மனசு உறுதியாகும். கோயில்கள்ல போய் நல்ல திருத்தலங்களுக்கு சொன்னீங்கன்னா, மனசு உறுதியாகும்.
தேரையர் சித்தர் :- பின்பு முடிவெடுக்கும் திறன் அதிகமாகும். அனைத்தும் வெல்லலாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஓகேங்களா
தேரையர் சித்தர் :- இதைத்தன் சிறிது சிறிதாக பாவத்தை குறைக்குமடா. இதுவே இதைத்தன் அறிந்து, குருநாதனே பின் குறும் குறும் வடிவிலே பாவத்தை தொலைக்க யாராலும் சொல்ல முடியாதடா.
சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் :- அப்ப குருநாதர் என்ன சொன்னார்? பாவத்திற்கும் இதுதான். புண்ணியம் சம்பாதிக்கிறதுக்கும் இதுதான்.உங்க உடல் நலத்தை சரி பண்றதுக்கும் இதுதான். திருத்தலங்களில் சென்று அமர்ந்து இந்த நமசிவாய மந்திரத்தோடு இந்த இக்கு இஞ்சி இட்டு சேர்த்து சொல்றப்போ, மனம் உறுதியாகும். சரிங்களா. உடல் நலம் சரியாகும். பாவம் குறையும். புண்ணியம் பெருகும் என்றாங்க).
=======================================
# உங்களுக்கு அனைத்தும் கிட்டும் யந்திரம்
=======================================
# இல்லத்தில் வைத்து தினமும் முறையாக வழிபடுக.
=======================================
தேரையர் சித்தர் :- இவை எதை இல்லத்திலே, இதைத்தன் பின் தாமிர தகட்டிலே அறிந்தும், இவை எழுத, இப்படி அறிந்தும், இதைச் சொல்லச் சொல்ல, கதிர் இயக்கம் அதில் பின் படுகின்ற பொழுது, அதன் தன்மை உறுதியாகி, அறிந்தும் அனைத்தும் கிட்டுமடா, போகப்போக.
அடியவர் :- ( கூட்டுப்பிரார்த்தனை வந்த யாரோ அந்த குடும்ப பிரச்சனைக்கு எழுதி வச்சீங்க இல்ல? ஐயா வழி சொல்லிட்டாங்க. எல்லாரும் குடும்ப பிரச்சனையை கேடீங்க இல்லையா ?. இதை ஒரு மந்திர தகட்டில் எழுதி, அதாவது தாமிர எந்திர தகட்டில் எழுதி, இந்த மந்திரம் இதை இதை நீங்க சொல்லி வந்தீங்கன்னா, எல்லா பிரச்சனைகளும் சரியாகும். சொல்யூஷன் சொல்லிட்டாங்க. யார் யாரெல்லாம் இங்க விண்ணப்பம் கொடுத்தீங்க. அதாவது கல்யாணம் வேணும் , குடும்ப பிரச்சனைன்னு கேட்டீங்க இல்லையா , அதுக்கு எல்லாருக்கும் இந்த யந்திரம் மூலம் உங்களுக்கு அனைத்தும் கீரைக்கும் என்று நல்ல வழி சொல்லிட்டாங்க. )
தேரையர் சித்தர் :- இதைத்தன் இதிலிருந்து மந்திரத்தை எடுடா.
=======================================
# அனைத்து மந்திரங்களையும் உள் அடக்கிய ஒரே மந்திரம் , யந்திரம்
=======================================
தேரையர் சித்தர் :- அடக்குமடா, அனைத்து மந்திரங்களும் இதனுள்ளே
சுவடி ஓதும் மைந்தன் :- அய்யா, என்ன சொல்றாரு தெரியுங்களா? நமச்சிவாய இதுல வந்துருச்சு. நமோ நாராயண இதுலயே வரும்ன்றாரு. ஒரே தடவைல ஓம் முருகா சொல்றது, நமச்சிவாய சொல்றது, ஓம் நமோ நாராயணா சொல்றது, ஓம் பிரம்மமேஸ்வரா சொல்றது, சாமியே சரணம் சொல்றேன்ல, எல்லாத்துலயும் இதுல அடக்கம். ஐயா புரியுதுங்களா?
எல்லா மந்திரமும் இதுல இருக்குது. இதை நீ சொல்லிட்டியான்னா அது எல்லா மந்திரம் சொன்ன மாதிரி. இப்ப நமச்சிவாயன்னு சொன்னால், ஓம் முருகா சரணம் சொல்ல முடியாது. அனைத்து இறை நாமங்களும் இதுக்குள்ள தான் அமையுது. அப்போ இதுல உள்ள நீங்க இதை மாத்திட்டீங்க அப்படின்னா அந்த எழுத்துக்கள் இதுக்குள்ள தான் எல்லா மந்திரங்களும் இருக்குன்றாங்க. இந்த இங்கு இச்சிட்டு நமசிவாய இந்த காம்பினேஷன்ல தான் எல்லா மந்திரங்கள் ஓம் நமோ நாராயண ஓம் பிரம்மாயண ஓம் கணபதே நமஹ அதுக்கப்புறம் வந்து ஓம் முருகா சரிங்களா.
அடியவர் :- ஓம் சரவணபவ இது எல்லாம் இதுக்குள்ள தான் இருக்குன்னு சொல்றாங்க. அப்படின்றப்போ ஒரு பவர்ஃபுல்லான வந்து ஒரு மந்திரத்தை இன்னைக்கு வந்து தேரையர் ஐயா கொடுத்திருக்காங்க. இதை எல்லாரும் ஒரு எந்திர தகட்டு தாமிர எந்திர தகட்டுல அதாவது நமசிவய நமசிவய நமசிவய இக்கு இஞ்சு இட்டு இன்னும் கரெக்டா போட்டீங்கன்னா கீழ வந்து அந்த துணைக்கால் வரும் பாருங்க அதுக்கு கீழ வந்து பார்த்தீங்கன்னா அங்க எழுத்து இருக்காது வெறும் வந்து இந்த மெய்யெழுத்து மட்டும் தான் இருக்கும் சரிங்களா அதை மட்டும் தனியா சொல்லணும் கடைசியா வரிசையா இப்படி சொல்லி அப்புறம் திருப்பி அங்கிருந்து இங்க வந்து இப்படி வந்து கீழ வந்து கடைசில அந்த துணைக்கால் இல்லாத எழுத்துக்கள் ( ள், ற், ன்) மூணு எழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் மட்டும் சொன்னீங்கன்னா, இதுதான் முழு மந்திரம் சொல்ற முறை. இது வந்து உங்களுக்கு வந்து தகவல்கள் வந்து கூட்டுப் பிரார்தனை whatsapp குரூப்ல எல்லாம் join பண்ணிடுங்க. சேனல்ல ஜாயின் பண்ணிடுங்க. இதெல்லாம் பதிவுகளா வந்து உங்களுக்கு வந்து உடனடியா வரும் இதை பிராக்டிஸ் பண்ணுங்க. இதை புரியுதுங்களா?
========================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் உருவாக்கிய , பாவத்தை வெளியில் எடுக்கும் அக் ( ஃ) எழுத்தின் ரகசியங்கள்.
======================================
தேரையர் சித்தர் :- இதைத்தன் அறிந்து அனைத்தும் கடைசியில் பின் இதைத்தன் அறிந்தும் அக் ( ஃ)
தேரையர் சித்தர் :- இவைத்தன் நிச்சயம் எதற்காக?
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா கடைசியில அக்கு ( ஃ) எதனால் கேக்குறாருங்க ஐயா? உயிரெழுத்துக்கள்ல இந்த அக்கு ( ஃ) வந்தது எதற்காகன்னு கேக்குறாருங்க ? சொல்லுங்க ஐயா யாருக்காவது தெரியுமாங்க? அதை உயிரெழுத்து எதுக்கா அக் ( ஃ) ?
====================================
# அகத்திய மாமுனிவருக்கே சொந்தம் - இவ் (அக்) ஃ உயிர் எழுத்து
====================================
தேரையர் சித்தர் :- முட்டாள்களே எதை என்று யாரும் சொல்ல முடியாதடா. எதை என்று அறிய செய்த பாவங்கள் வெளியே எடுக்க தேவைப்படுகின்றது இவ் அக்கு (ஃ). அறிந்தும் எதை என்று கூற என்னென்ன பாவம் செய்து இருக்கின்றாயோ, அறிந்தும் என்னென்ன தீமைகள் உள்ளிருக்கின்றதோ, இவைத்தன் எடுக்க முதலில் அறிந்தும் இவைத்தன் பின் நிச்சயம் இவைதன் கூட குருநாதன் அகத்தினைக்கே சொந்தம்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( அக்கு (ஃ) என்றப்ப உள்ள, அகத்துல வெளிய வந்துருமாம் சில நீங்க தரித்திரம் செஞ்சிருப்பீங்க. சில பாவம் செஞ்சிருப்பீங்க. அது எல்லாம் வெளிய வந்துடும் )
======================================
# “ஃ” எழுத்தை உச்சரித்து உடலில் உள்ள அழுக்கை வெளியே எடுக்கலாம்.
======================================
தேரையர் சித்தர் :- இவை தன் பின் இவை என்று அறிய அழுக்குகள் உள்ளே தங்க தங்க, நோய் நோய் வந்துவிடுமடா. இவ் அக்கை (ஃ) பின் கொண்டு நோயை வெளியே எடுக்கலாமடா. பின்பு அவுசதங்களை உட்கொள்ளலாமடா
சுவடி ஓதும் மைந்தன் :- ( என்ன சொல்லிட்டாரு அக்கு சொல்லிட்டாரு. உன்னை என்னென்னவோ சாப்பிட்டு இருக்க, எது எதோ சாப்பிட்டு இருக்க, எதோ தின்னு அதனால பல நோய்கள் வரும். அக்கு அக்குன்னு சொல்லி என்ன ஆகுமா வந்து வெளிய போகும். இதுதான் ரகசியம். )
அடியவர் :- தெரியாத வாந்தி எடுக்கும் போது ஒரு சத்தம் வரும் இல்லையா அந்த சத்தம் (ஃ) .
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( பலத்த கைதட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- ( அய்யா புரியுதுங்களா? அகத்தியர் என்ன சொன்னாருன்னா, கலியுகத்துல தெரிஞ்சுச்சு. வேற லெவல் மனுஷன் வந்து, பெருசா பெருசா சொன்னா ஒன்னும் செய்யப்போறது இல்ல. அப்ப என்ன பண்ணலாம் என்று குருநாதர் அகத்திய மாமுனிவர் , குறுக்கு வழியை யூஸ் பண்ணலாம். அதனாலதான் இதை வந்து என்ன பண்ணாரு குருவும், குறுக்கு குறுசா, அதாவது எப்படி எல்லாம் குறைக்கணுமோ, எப்படி எல்லாம் இது சுருக்கணுமோ , என்ன பண்ணாரு அந்த குறு எழுத்துலவே அவர் வந்து எழுதிட்டாரு வந்து இப்போ போதும்டா ஈஸியா என்று சொல்லிட்டார்.
அடியவர் :- தேரையர் அய்யா சொன்னாங்க இல்லையா , ஒத்த கால்ல நின்னு தண்ணி குடிக்கணும். நீங்க பண்ணுவீங்களா? அதுக்குத்தான் குறுக்கு வழி.
தேரையர் சித்தர் :- இவை என்று கர்மாவத்தை பாவத்தை பின் தேடி தேடி சம்பாதித்துக் கொள்வான் என்பது அகத்தியன் பின் அறிந்ததே
சுவடி ஓதும் மைந்தன் :- கலியுகத்தில் மனுஷன் என்ன பண்ணுவானாம்? தேடி தேடி என்ன பண்ணுவானாம்? பாவத்தை சம்பாதிக்கிறான். பாவத்தை சம்பாதிப்பான்.
தேரையர் சித்தர் :- ஐயோ பாவம் என்று பின் அதை குறைக்க இதையும் ஒரு நாள் திருந்துவான் என்று வருவான் என்று அகத்தியனுக்கு தெரியும்.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாத்தையும் பண்ணிட்டு ஒரு நாள் வருவான் ஐயோ பாவம் பண்ணிட்டோமேடா. எப்படிடா இதெல்லாம் வந்து திருத்துறதுன்னு சொல்லிட்டு வருவான். அப்ப இதை வந்து பயன்படுத்தினா கொஞ்சம் நல்லா ஆகுன்டா.
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( பலத்த கைதட்டல்கள் )
தேரையர் சித்தர் :- இவை தன் உணர்ந்து மற்றவனுக்கு, அப்பொழுதுதான் புத்தி வந்து, மற்றவர்களுக்கும் உதவி செய்வானடா.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்பதான் புத்தி வருமாம். அப்ப இதை சொன்னீங்கன்னா புத்தியும் வரும் ஞானங்கள் வரும். வாழ்க்கையே ஒன்னும் இல்லடா மத்தவங்களுக்காக நம்ம ஹெல்ப் பண்ணலாம்னு சொல்லிட்டு ஒரு ஞானம் வரும். அதுக்காகத்தான் ஐயா புரியுதுங்களா?
=================================
# ஆன்மீகத்தில் இருப்பவர்கள் ஏன் வாழ்க்கையில் முன்னுக்கு வருவதில்லை?
=================================
தேரையர் சித்தர் :- இவைத்தன் இதனால் பின் அதாவது இறைவன் இருக்கின்றான் எதை புரிந்து கொள்ள அனுபவித்து எவை என்று ஏன் பின் முன்னுக்கு வருவதில்லை? இறை நாமங்கள் செப்பினாலும் ஏன் தாழ்ந்தோராக இருக்கின்றார்கள்? உண்மை நிலை தெரியவில்லையேடா.. உண்மை நிலை தெரிந்தால் நீ ஆளலாமடா உன்னையும் பின் உலகத்தையும் ஆளலாமடா.
சுவடி ஓதும் மைந்தன் :- என் பக்தி இருக்குறது எல்லாம் பெருசா ஆளே ஆகுறது இல்ல இந்த மாதிரி சூட்சுமங்கள் தெரியல. தெரியல நமக்கு வந்து, பக்தி நம்ம செலுத்துறோம். ஏன் பெரிய ஆள் ஆகுறது இல்ல? ஏன் பிச்சை எடுத்துட்டு இருக்கிறோம்? நம்ம வந்து ஏன்னா வணங்க தெரியலடான்றாரு. உங்களுக்கு வந்து சொல்றாங்க. வணங்க தெரியல அப்ப சில விஷயங்கள் நீங்கள் தெரிந்து கொண்டால் உன்னை நீ வெல்லலாம். பின்பு என்ன பண்ணலாம் உலகத்தையே ஆளலாம்ன்றாங்க. உலகத்தையே ஆளலாம்.
தேரையர் சித்தர் :- அத்தனை சக்திகளும் மனிதனிடத்தில். ஆனால் மனிதன் புலம்புவதோ அவன் நன்றாக இருக்கின்றான். நான் கெட்டுவிட்டேன் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லா சக்தியும் உன் கையில இருக்குது. அவன் பயன்படுத்துறான் நீங்க பயன்படுத்தல.
தேரையர் சித்தர் :- இதைத்தன் அறிந்தும் பின் கழுத்தின் எதை என்று புரிந்தும் இதற்கும் தகுந்தார் போல் பின் அதாவது அடி வயிற்றுக்கும் கழுத்துக்கும் பின் சிறியதாக அரிதன் பின் தெரியாத அளவு நூல் அறிந்தும் பின் செல்லுமடா அதைத்தன் அறிந்தும் தெரியும்படி அவைதன் பெரிது ஆக்கினால் நீ பெரிய மனிதனடா அனைத்தும் கிட்டுமடா
சுவடி ஓதும் மைந்தன் :- அப்போ ஒரு நரம்பு இங்கிருந்து அடிவயிறு போதும் ஓகேங்களா.
தேரையர் சித்தர் :- இதைத்தன் பின் எதை என் அறிய மெதுமெதுவாக மெதுமெதுவாக அறிந்தும் பின் இவைத்தன் காற்றாக இவைத்தன் பலூனாக மாற வெற்றி.
சுவடி ஓதும் மைந்தன் :- (என்ன சொல்றாருன்னா லேசா போகுமாம் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு லேசா போகுமாம். அதுல காற்று வந்து என்ன ஆகுமாம், சின்னதாக இருக்குமாம். வந்து ஆனால் இது பலூன் மாதிரி பண்ணுடான்றாரு. இதை பலூனா பண்ணேன்னா நீ பெரிய ஆளு. ஊதி ஊதி பெருசாக்கணும். ஊதி ஊதி பெருசாக்கணும்)
தேரையர் சித்தர் :- இவைத்தன் ஊதுவதற்கு மந்திரங்கள் அவசியமாகின்றதடா. இதனால்தான் மந்திரங்கள் செப்ப செப்ப பலங்கள் ஏற்பட்டு உடம்பிற்கும் பலங்கள் ஏற்பட்டு உன்னை நீ வென்று வெற்றிக்கொள்ளலாமடா.
சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் :- அதனாலதான் மந்திரம் நிறைய ஓம் நமோ நாராயண மூலாதாரத்துல இருந்து சகஸ்ராத்துக்கு சக்தி நரம்புகள் போகுது சொல்றாங்க இல்ல அந்த அந்த சக்தி நரம்புகளை ஆக்டிவேட் பண்றதுக்கு இந்த தமிழ் எழுத்துக்கள் குருநாதர் வந்து குறுக்கு வழியில உருவாக்கி கொடுத்திருக்காங்கப்பா. ஆமா. இதை நீங்க மந்திரங்களோட சேர்த்து இந்த மெய்யெழுத்துக்களை சொல்றப்போ நீங்க வந்து இந்த மூலாதார சக்தியை வந்து நீங்க ஆக்டிவேட் பண்ணி சகஸ்ராத்துக்கு எடுத்துட்டு போகலாம்னு சொல்றாங்க
தேரையர் சித்தர் :- இவைத்தன் அனைத்து மந்திரங்களும் இதைத்தன் எவை என்று புரிந்து கொள்ள அனைத்து தேவாரம், திருவாசகம் இன்னும், பின் ஓத அனைத்தும் இவைத்தன் அவை ஓதிக்கொண்டே இருக்க இரு கைகளையும் தட்டி தட்டி எழுப்ப வேண்டும் ஒளியை. பின்பு அனைத்தும் ஆடுமடா வெற்றி நிச்சயமடா.
சுவடி ஓதும் மைந்தன் :- ( நீங்க திருவாசகம் தேவாரம், படிக்கும் போது தான் சும்மா பாடக்கூடாது. இப்படி கை தட்டிகிட்டே இருக்கணும் அங்க பாடும்போது என்ன பண்ணனும்? இங்க கை தட்டிகிட்டே இருக்கணும்…)
( கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் சிவபுராணம் பாட உடனே கை தட்ட ஆரம்பித்தனர்.)
https://www.youtube.com/watch?v=LsrBdk6U31U&t=5h49m09s
==========================================
# நீங்கள் மாபெரும் வெற்றி அடைய சிறுகுடல் பின் பக்கத்தில் ஒரு புள்ளி - அதை தட்டி எழுப்ப பயிற்சி பாடம்
=========================================
தேரையர் சித்தர் :- இவைத்தன் நிச்சயம் இப்பொழுது பாடுங்கள் அனைவரும் சேர்ந்து ஒளியை எழுப்புங்கள். இவ்வாறு ஒளி எழுப்புதல் என்பது சாதாரணம் இல்லை. எதை என்று வெற்றி அறிந்தும் இவைத்தன் பின் உள்ளே அதாவது சிறுகுடல் பின் பக்கத்தில் ஒரு புள்ளி அறிந்தும் கூட இவை தன் தட்டி எழுப்ப இசத்தம் தேவைப்படுகின்றது. இதை தட்டி எழுப்பி விட்டால் அனைத்தும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப சும்மா எல்லாம் கை தட்டல. இதை கை தட்டுறது இந்த கை தட்டுல வந்து சிறுகுடல் பக்கத்துல ஒரு புள்ளி மாதிரி ஒரு விஷயம் இருக்கும். அதை வந்து இந்த கை தட்டுல தான் அது எழும்புமாம். அதை எழுந்திச்சுன்னா நீங்க உன்னை உணர்ந்து வெற்றி கொள்ளலாமடா.
தேரையர் சித்தர் :- இதைத்தன் பாடு இவ்வாறு இதை
பாடிட்டு திருவாசகத்தை இவர் கை தட்டுனாருன்றாரு அதாவது இந்த மூலாதாரத்துல சக்தி வந்து சிறுகுடல் பக்கத்துல இருக்குன்னுட்டாங்க அதை ஆக்டிவேட் ஒரு புள்ளி மாதிரி இருக்குதாம் அதை எழுப்பணும் அப்போ அந்த கை தட்டணும் இந்த பாடிக்கிட்டே நீங்க கை தட்டுறப்போ அது அப்படியே எழுந்திருக்கும்ன்றாங்க அப்ப இவங்க திருவாசகம் பாடுவாரு எல்லாம் என்ன பண்ணனும் கை தட்டணும் தட்டுங்க சொல்லுங்க எல்லாரும் அப்படியே சொல்லிட்டு
( கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் சிவபுராணம் பாட உடனே கை தட்ட ஆரம்பித்தனர்.)
https://www.youtube.com/watch?v=LsrBdk6U31U&t=5h50m19s
( சிவபுராணம் நிறைந்த பின்னர் )
===========================================
# அதிகாலையில் மந்திரங்கள் , இறை பாடல்கள் நன்கு கைதட்டி முடித்தபின்னர் , உணவு உட்கொள்ள, அனைத்தும் சமமாகும். நோய்களும் அதிகமாக வளராது.
===========================================
தேரையர் சித்தர் :- இவைத்தன் இப்படி அறிந்தும், சில பின் அதிகாலையிலே நிச்சயம் இவைதன், பின் இவ்வாறு பின் அடித்து, இதைத்தன் பின் மந்திரங்கள் ஓத, பின் உணவு உட்கொள்ள, அனைத்தும் சமமாகும். நோய்களும் அதிகமாக வளராதடா.
சுவடி ஓதும் மைந்தன் :- ( இந்த உரையில், காலையில் எழுந்தவுடன் முதலில் நன்றாக கை தட்ட வேண்டும்; அந்த கைத் தட்டுதல் உடலின் உள்ளக செயல்பாடுகளைச் சீராக்கி, சக்தி ஓட்டத்தை தூண்டி, உடல் நலத்தை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகே உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், சரியான உணவுடன் சேர்ந்து இந்த நடைமுறை புத்தி கூர்மை, உடல் வலிமை, ஆரோக்கியம் ஆகியவற்றை அதிகரிக்கும் எனவும் விளக்கப்படுகிறது. இதை தொடர்ந்து செய்தால் நோய்கள் அதிகமாக உருவாகாமல் தடுக்கலாம்.)
தேரையர் சித்தர் :- இவை சொன், பின் இவ்வுலகத்தில் சொல்ல ஆள் இல்லையே. அறிந்தும் எதனால் சித்தர்கள், பின் கலியுகத்தில், அதாவது மனிதன் அழிந்து கொண்டே இருக்கின்றான் என்று, ஒரு அறிந்தும் பின் இவ்வாறாக, இன்னும் மனிதன் நிலைமையை யாங்கள் மாற்றுவோம்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( மனிதர்கள் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை உண்மையாக அறியாமல், வழக்கப்படி கோவிலுக்கு செல்வது அல்லது சில சடங்குகளை செய்வது போன்றவற்றில் மட்டும் ஈடுபட்டு, அதே கஷ்டங்களையே தொடர்ந்து அனுபவிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இதை உணர்ந்த சித்தர்கள், மனிதகுலத்தை மாற்றி உயர்த்த சில ஆழமான உண்மைகளையும் முறைகளையும் தாங்களே வெளிப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தனர். “மனித குலத்தை நான் கண்டிப்பாக மாற்றுவேன்” என்ற உறுதியுடன், சித்தர்கள் வழங்கிய அறிவு தான் மனிதர்களை துன்பத்திலிருந்து விடுவிக்கும் சக்தி)
=================================
# அகத்திய மாமுனிவர் எப்படி இவ்வுலகத்தை காத்தார் என்று உரைக்க உள்ளார் தேரையர் சித்தர் அடுத்த பகுதியில்.
================================
தேரையர் சித்தர் :- இவைத்தன் பின் அடுத்து, பின் அதாவது பேரின்பத்தை இவ்வுலகத்தை பின் எப்படி காத்தான் என்பது எல்லாம், அகத்தியன் பற்றி சொல்கின்றேன். அதனுள்ளே பின் உலகம் எவை என்று புரிய பின் நிச்சயம் சிவபுராணத்தை பாடிக்கொண்டே வாருங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா அடுத்து என்ன பண்றாரு இவ்வுலகத்தை எப்படி அகத்தியர் காப்பாத்தினார் அப்படின்னு சொல்லிட்டு அடுத்து சொல்ல வராராம். அதுக்குள்ள நீங்க சிவபுராணம் படிக்கலாம் படிச்சுண்டே இருங்க அதுக்குள்ள சாப்பிட்டு வரலாம். கொஞ்சம் அடுத்து அகத்தியர் பத்தி தெரிவிக்கிறார். இது வந்து தேரையர். இன்னும் தேரையர் தான் வந்திருக்கிறார். படிங்க ஐயா. இனிமேல் சிவபுராணத்தை படிங்க. உலகம் படிங்க அப்படியே படிச்சு.
(அடியவர்கள் மத்திய உணவிற்க்கு தயார் ஆனார்கள். தொடர்ந்தது சிவபுராணம் பாராயணம்… )
( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் , அன்புடன் தேரையர் சித்தர் உரைத்த மதுரை கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …..)
ஓம் ஶ்ரீ லோபாமுத்ரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.
சித்தன் அருள்.....தொடரும்!

