​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 17 October 2024

சித்தன் அருள் - 1698 - அன்புடன் அகத்தியர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 11





( இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-

சித்தன் அருள் - 1639 - மதுரை வாக்கு - 1

சித்தன் அருள் - 1640 - மதுரை வாக்கு - 2

சித்தன் அருள் - 1644 - மதுரை வாக்கு - 3

சித்தன் அருள் - 1645 - மதுரை வாக்கு - 4

சித்தன் அருள் - 1665 - மதுரை வாக்கு - 5

சித்தன் அருள் - 1666 - மதுரை வாக்கு - 6

சித்தன் அருள் - 1667 - மதுரை வாக்கு - 7

சித்தன் அருள் - 1672 - மதுரை வாக்கு - 8

சித்தன் அருள் - 1674 - மதுரை வாக்கு - 9

சித்தன் அருள் - 1690 - மதுரை வாக்கு - 10 )

அடியவர் :- ( வேலை வேண்டும் என்று கேட்க ) 

நம் குருநாதர்:- அப்பனே பார்த்துக்கொள்வோம். 

அடியவர்:- சரிங்க ஐயா

நம் குருநாதர்:- அப்பனே, அனைவருக்குமே வேலைதான் முக்கியம் என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். புண்ணியம் ஒன்று இருக்கின்றதே, அதை மறந்து விட்டார்கள் அப்பனே. அப்பனே தன் வழியில் செல்லச் செல்ல தானாக அனைத்தும் நிறைவேறும் அப்பனே. அதே போலத்தான் அப்பனே , புண்ணியப் பாதையில் சென்று,  அனைத்தும் செய்தால்,  தானாக நடக்குமப்பா அனைத்தும். 

அப்பனே தன் கடமையைச் செய்ய வேண்டும் முதலில். இன்னும் புரிய வைக்கின்றேன் அப்பனே. புரிய வைத்து அனைத்தும் செய்கின்றேன் போதுமா? அப்பனே நலன்கள் ஆசிகள். 

( ஒரு அடிவரை வைத்து அங்கு உள்ள பல அடியவர்களுக்கு என்னென்ன தேவை என்று கேட்கச்சொன்னார் குருநாதர். அவ் உரையாடல்களில் வந்த பொது வாக்குகள்) 

நம் குருநாதர்:- அம்மையே விரதம், தன் உள் உறுப்புக்களை , தன் இச்சைகளைக் கட்டுப்படுத்துவதே விரதம். 

( இங்கு ஒரு அடியவர் பங்குதாரர் போல் ஒரு தனியார் தொழில் முதலீடு செய்துள்ளமைக்கு, இதுவரை யாரும் அறியாத ஒரு கர்ம ரகசியத்தை எடுத்து உரைத்தார் நம் குருநாதர்) 

பணத்தைப் பெற்றுக்கொண்டு கர்மத்தை உன்னிடத்தில் சேர்த்து விட்டான். அதற்கும் யான்தான் போராட வேண்டும்.  பல பாவங்களைக் கூட. 

( தவறான இடத்தில் முதலீடு செய்து அல்லது ஒருவர் ஏமாந்து விட்டால், ஏமாற்றுபவர் கர்மா ஏமாற்றப்பட்டவருக்கு வந்து விடும். ஏமாற்றம் அடைபவர்கள் பணத்தை இழப்பதுடன், கர்மாவையும் பெற்றுக்கொள்கின்றனர் என்ற கர்ம உரையாடல் ) 

யாரையும் நம்பிவிடக்கூடாது. 

அடியவர்:- ( குழந்தைகள்தொடர்பாக உரையாடிய போது )

நம் குருநாதர்:- அனைவருமே அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். குழந்தைகள் (வாழ்க்கை) பலம் நன்றாக இருக்க வேண்டும் என்று. ஆனால்  பக்தியைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் முதலில். புண்ணியத்தைச் சொல்லிக்கொடுக்க வேண்டும். இதை (குழந்தைகளுக்கு) தெரிவித்தாலே போதுமானது. அவர்கள் உயர்ந்து விடுவார்கள். பின் நம் ( கனவுகள் ) ஆசை அவர்களை என்ன செய்யும்? 

சுவடி ஓதும் மைந்தன்:- எல்லா பிள்ளைகளுக்கும் இதுதான் சொல்லிக் கொடுக்க வேண்டும். புண்ணியங்கள் எப்படிச் செய்வது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். அதுதான் அவர்களை ஜெயிக்க வைக்கும். நம்முடைய ஆசை அவர்களை ஜெயிக்க வைக்காது என்று சொல்கின்றார் குருநாதர். 

அடியவர்:- அதை நான் இப்போ உணர்ந்து விட்டேன் ஐயா. 

ஓம் ஶ்ரீ லோபாமுத்ரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சித்தன் அருள்.....தொடரும்!