​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 14 January 2026

சித்தன் அருள் - 2066 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை சிவபுராண கூட்டு பிரார்த்தனை - பகுதி - 6






அகத்தியர் அருளால் 28.12.2025 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டுப் பிரார்த்தனை வாக்கு - பகுதி 6

நாள் : 28/12/2025 (ஞாயிற்றுக்கிழமை) 
நேரம் : காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 
இடம் : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் , வேங்கிக்கால் , திருவண்ணாமலை 
நேரலை பதிவு :  https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=8h39m14s

===========================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
===========================================

ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன். 

அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28.12.2025 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டுப் பிரார்த்தனை வாக்கு - பகுதி 6

குருநாதர் :-  அப்பனே, மீண்டும் சொல்கின்றேன், இறைவன் யார்? உங்களை நிச்சயம் இவ்வளவு வாக்குகள் சொல்லிவிட்டேன். இறைவன் யார் என்று சொல்லுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  நான் பலமுறை பல வாக்குகள் சொல்லிவிட்டேன் . இறைவன் யார்? இறைவன் யார்? 

குருநாதர் :-  அப்பனே, இது எவை என்று கூற எப்படி உள்ளது என்றால், அப்பனே, நிச்சயம். அப்பனே, பின், தோசை சுடுவார்களே திரும்பி திரும்பி, அப்பனே 

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம். அப்பனே, எவை என்று சொல்லுங்கள் பார்ப்போம். அப்பனே, எவ்வளவு அப்பனே, நிச்சயம் அறிவு இருக்கிறது யானே பார்ப்பேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  இறைவன் என்பவர் யார்? கேக்குறாங்க. தெரிஞ்சா சொல்லுங்க, 

அடியவர் :- இறைவன் யாருன்னு கேக்குறாங்க. இல்ல, எல்லாரும் சொல்லுங்க. தெரிஞ்சதை சொல்லுங்க. இவ்வளவு கிட்டத்தட்ட ஆறாவது கூட்டு பிரார்த்தனை வந்திருக்கிறோம். சோ, குருநாதர் நிறைய சொல்லி இருக்காங்க. இறைவனை பத்தி சொல்லுங்க. உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்க. ஏன் சொன்னேன்னு சொல்லுங்க. ஒவ்வொருத்தரா சொல்லுங்க. இறைவன் யார்? ஐயா, 

அடியவர் 1:- ( தொலைவிலிருந்து    ஓர் அடியவர் பதில் ) 

குருநாதர் :-  அப்பனே, சொல்லியதையே சொல்லக்கூடாது என்பேன்  அப்பனே, 

சுவடி ஓதும் மைந்தன் :- புதுசா சொல்லுங்க. புதுசா சொல்லணும். எல்லாரும் சொல்லிருக்கிறது எல்லாம் சொல்லக்கூடாது. புதுசா சொல்லணும்னா உள்ள வந்து இங்க வாங்க சொல்லுங்க. ஐயா, 

அடியவர் 2:-( தொலைவிலிருந்து    ஓர் அடியவர் பதில் ) 

குருநாதர் :-  அப்பனே, இவையெல்லாம் சொல்லிவிட்டேன். பழையது அப்பா, புதிதாக சொல்லு  அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- இதெல்லாம் நான் சொல்லிட்டோம்பா. பழையதுப்பா, இதெல்லாம் எல்லாம் சொல்லிட்டாங்க. புதுசா சொல்லுப்பா. யாராவது பேசப்போனா, மைக்ல கொடுக்கிறேன். பேச, இறைவன் யார்? இறைவன் யாரு? மைக் வருமா? 

அடியவர் 3:- ( தொலைவிலிருந்து    ஓர் அடியவர் பதில் ) 

குருநாதர் :-  அப்பனே, இவையெல்லாம் சொல்லிவிட்டேன் அப்பனே. 

அடியவர் 4:- ஆன்மாவா 

சுவடி ஓதும் மைந்தன் :- சொல்லிட்டாங்க. 

அடியவர் 5:-  நீதிமானா, நீதிபதிங்கிறாரு. இறைவன் அப்படி ஒரு நீதிபதியாம். 


குருநாதர் :-  அப்பனே, இவையெல்லாம், அப்பனே, நாங்கள் சொல்லிக் கொடுத்ததை மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். அப்பனே, அறிவை, அப்பனே, இங்கு பயன்படுத்துங்கள். 

அடியவர் 6:- அன்பே, உருவானவர் 

சுவடி ஓதும் மைந்தன் :- சொல்லியாச்சு. புதுசா சொல்லுங்க. சொல்லுங்க, 

அடியவர் 7 :-  அன்பு காட்டுபவர், அவரே, இறைவன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இதுதான் சொல்லிட்டாங்க. ஆமா, 

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம். அப்பனே, இவையெல்லாம் பழையது அப்பா. புதுசா சொல்லி சொல்றாரு. 

அடியவர் 8 :-  இறைவன் பிறவி பெருங்கடலை கடக்க உதவுபவன். 

குருநாதர் :-  அப்பனே, இதை பின், நிச்சயம், ஏற்கனவே தெரிவித்து விட்டார்கள். அப்பனே, அதைத்தான் நீ, அப்பனே, பின், புத்தகத்தில் படித்து தான் செப்பிக்கொண்டிருக்கின்றாய். 


அடியவர் 9 :-   ஜோதி ஒளிவுமானவர். 

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம், இதையும் செப்பிவிட்டார்கள். நீக்கமற நிறைந்திருக்கும் பேராற்றல். 

அடியவர் 10 :-  இறைவன் எல்லார் உள்ளத்திலேயும் இருப்பவன். எல்லார் உள்ளத்திலேயும் இருக்கின்றவன். இறைவன், 

குருநாதர் :-  அம்மையே, எது என்ற எதை என்று புரியாது. இதையும் சொல்லிவிட்டார்கள். 

அடியவர் 11 :- எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன். எங்கும் நீக்கமற. 

குருநாதர் :-  அப்பனே, அனைத்தும் ஏற்கனவே சொல்லப்பட்டவை தான் என்பேன்  அப்பனே, புதுமையாக பேசுங்கள் அப்பனே, எவை என்று புரிய. அறிவுக்கு வேலை கொடுங்கள். 

அடியவர் 12 :-  சூனியமே கடவுள். சூனியம், சூனியம், வெட்டவெளி. 

குருநாதர் :- அப்பனே, எவை என்று  அப்பனே, ஏற்றுக்கொள்ள முடியாது. 

அடியவர் 13 :- பக்குவம் இருக்கான்னு சோதிப்பவர். பக்குவம், பக்குவம் இருக்கான்னு சோதிப்பவர். 

குருநாதர் :-  அப்பனே, இல்லை, 

அடியவர் 14 :- ஐயா, உனக்குள் இருக்கும் நல்ல எண்ணமே கடவுள். ஐயா, உனக்குள் இருக்கும் நல்ல எண்ணமே கடவுள். 

குருநாதர் :-  அப்பனே, அனைத்தும் சொல்லிக் கொடுத்தது தான். அப்பனே, 

சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாமே சொல்லிக் கொடுத்தது தான். 

அடியவர் :- அவங்க சொல்லிக் கொடுத்ததை தவிர எங்களுக்கு வேற ஒன்னும் தெரியாது. ஐயா, 

குருநாதர் :-  அப்பனே, அதனால்தான். அப்பனே, சிந்தியுங்கள் என்பேன்  அப்பனே. எத்தனை வாக்குகள் உங்களுக்கு சொல்லி இருக்கின்றேன். நீங்கள் நிச்சயம் சொல்லுங்கள். 

அடியவர் 15 :- அடியவர்க்கு அடியவரா? ஐயா, அடியவர்க்கு அடியவரா? 

குருநாதர் :-  அப்பனே, பின் அடி வாங்கிக்கொள். போதும், இப்பொழுது 

சுவடி ஓதும் மைந்தன் :-  யார்? இல்லை, யார்? வேற அவ்வளவுதானா? சொல்லுங்கம்மா, சொல்லுங்க. நீங்க  சொல்லுங்க, சொல்லுங்க, சொல்லுங்க. 

அடியவர் 15 :- இறைவன் ஒரு காந்தகம்.

சுவடி ஓதும் மைந்தன் :-  இதெல்லாம் சொல்லியாச்சுப்பா. 

மற்றொரு அடியவர்  :- சிவா, ஐயா, பசியை போக்கும்போது, இறைவன் வந்து அந்த இடத்துல தெரிவாருங்க ஐயா. 

குருநாதர் :-  எதை என்று கூற சம்பந்தமே இல்லை. 

அடியவர் 16 :- இந்த பிரபஞ்ச பேராற்றல், காஸ்மிக் எனர்ஜி. 

குருநாதர் :- எதை என்று அறிய,  தாயே, மேலே வா. நிரூபி, 

சுவடி ஓதும் மைந்தன் :-  கணக்கு மாதிரி நிரூபி என்று சொல்லிவிட்டார். 

அடியவர் 16 :- காஸ்மிக் எனர்ஜி. ஐயா, மேல வரவேண்டுமென்று சொல்றீங்களா? ( மேடை ஏறினார் ) 

சுவடி ஓதும் மைந்தன் :-   யோசிச்சு சொல்லுங்க. ஐயா, காஸ்மிக் எனர்ஜி. அப்படின்னா என்னன்னு டிஃபரன்ஸ் இருக்கு. 

அடியவர் 16 :-  அதாவது, இறைவன் வந்து எங்கும் நிறைந்திருப்பவர். அந்த பிரபஞ்ச பேராற்றல், காஸ்மிக் எனர்ஜி வந்து நம்மளோட ஃபுல்லா யுனிவர்ஸ் ஃபுல்லா எல்லா இடத்துலயுமே இருக்கிறது. சோ, அதை, அதை மீன் பண்ணி தான் சொன்னேன். எல்லா இடத்துலயும் இருக்கிற எனர்ஜி. 

குருநாதர் :-  தாயே, இன்னும் பேச வேண்டும். நீயே தான் வந்து சிக்கிக் கொண்டாய். 

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- (பலத்த சிரிப்புகள்)

சுவடி ஓதும் மைந்தன் :-  இன்னும் நீங்க பேசணும். உங்களுக்கு தெரிஞ்சு சொல்லுங்கம்மா.  சொல்லுங்க.

குருநாதர் :-  நான் சொல்கின்றேன், எதை என்று புரிய, எவை என்று அறிய, அறிந்தும் பின் செயல்பட்டால், நிச்சயம் இறைவன் யார் என்றே தெரியாது. இதற்கு என்ன அர்த்தம்? 

சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியர் சொல்றார், இறைவன் யாருன்னே தெரியாதுப்பா. இதுக்கு என்ன அர்த்தம்? 

அடியவர் :- இறைவனை கண்ணால் பார்க்க முடியாது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, இதுக்கு என்ன சொல்றாருன்னா, அகத்தியர், இறைவன் யாருன்னே தெரியாதுப்பா. இதுக்கு என்ன அர்த்தம்?  

அடியவர் 17 :- ஐயா, ஒவ்வொருத்தங்களும் அவங்களுடைய எண்ணங்களுக்கு ஏத்தாப்புல, இறைவன்

குருநாதர் :-  அப்பப்பா, அறிந்தும் இவையெல்லாம் சொல்லப்பட்டவையே யான் இங்கு சொன்னேனே. அப்பனே, இறைவன் யார் என்று தெரியவில்லையே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இதுக்கு சொல்லுப்பா, இறைவன் யார் என்று தெரியவில்லையே. இதை சொல்லுப்பா, முதல்ல என்றார். clue கொடுத்துட்டாரு. 

மதுரை அடியவர் 18 :- ஐயா, இறைவன் யாருன்னு தெரியல. ஆனா குருவை பிடிச்சிட்டோம்னா, குரு வந்து இறைவனை காட்டுவார். ஐயா, 

குருநாதர் :-  அப்பனே, பின் அதாவது இப்படி சொன்னால்  யான் சொல்லிவிடுவேனா என்ன?  நிச்சயம் இல்லை. 

மதுரை அடியவர் 18 :-  (அய்யா உங்களை விட்டால் எங்களுக்கு ) வேற வழி இல்லை அய்யா. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஆனா சொல்லுங்க, ஐயா, அம்மா, கொஞ்சம் எக்ஸ்பிளைன் பண்ணுங்கம்மா. நீங்க தெரிஞ்சாலே எக்ஸ்பிளைன் பண்ணுங்க. யாரும் அகத்தியர் சொன்னா, ஓகே. காஸ்மிக் எனர்ஜி, 

அடியவர் 16:- ( மேடை ஏறி உரைத்தார் ) அதாவது லைட், லைட் பார்டிகிளா தான் இருப்பாங்க. இறைவன் ஒரு ஒரு துகளையும் வந்து அந்த எனர்ஜி இருக்கும். அந்த யுனிவர்ஸ்ல இருந்து ஸ்கேட்டர் ஆகி ஹோல், இது யுனிவர்ஸ்க்கும் வரும். நம்ம எல்லாருமே ஒரு ஒரு பார்டிகிள் தான். இறைவன்ட்ட இருந்து பிரிந்த ஒரு பார்டிகிள், அப்படித்தான் வரும். எனக்கு கரெக்டா இதை எக்ஸ்பிரஸ் பண்ண தெரியல. எனக்கு இது அனைத்துமே இறைவன் தான். 

===========================================
# இறைவனிடம் இருந்து பிரிந்த துகள்  நீங்கள் தான். 
===========================================

குருநாதர் :-   அப்பனே, அறிந்தும் இறைவனிடம் இருந்து பின் எவை என்று கூட சொன்னாளே , அப்பனே, பின் பிரிந்த துகள்  நீங்கள் தான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஒரு பாயிண்ட் என்ன சொன்னாங்க தெரியுங்களா? இறைவனிடம், இறைவனிடமிருந்து பிரிந்த ஒரு துகள் , பிரிந்த ஒரு துகள் , ஒரு மில்லியன், ஒரு ஒரு சின்ன, ஒரு அணுத்துகள் கண்ணுக்கு தெரியாத. அதாவது பிரிஞ்சு தான் நீங்கள் 

==============================
# நீங்கள் எல்லோரும் இறைவன்
==============================

குருநாதர் :-   அறிந்து கூட சொல், தாயே, இன்னும் அப்பனே, எது என்று அறிய அப்பனே, அப்பொழுது நீங்கள் எல்லோரும் யார்? 

அடியவர் 16:- இறைவன்.

குருநாதர் :-   அப்பனே, இப்பொழுது சொல்கின்றாய். அப்பனே, முதலிலே இதை செப்பினால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. எத்தனை ஆண்டுகள் என் பின்னே வந்திருக்கின்றீர்கள் அப்பனே, எவை என்று அறிய. அப்பனே, நிச்சயம், அப்பனே, எவை என்று பிரிந்தது தான் அப்பனே.  

=====================================
# சிறியது சொன்னால் இங்கு நடக்குமா?  பெரியது  சொன்னால் நடக்குமா?
=====================================

குருநாதர் :-  இதனால், அப்பனே, நிச்சயம், அப்பனே, பின் எவை என்று கூற, அப்பனே, பின் அதாவது சிறிய, அப்பனே, அணு, எவை என்று அறிய, அப்பனே, இதனால் மிகப்பெரியவன் அப்பனே. இதனால், அப்பனே, அப்பன் அவன், அதாவது பெரியது சொன்னால் நடக்குமா? சிறியது சொன்னால் இங்கு நடக்குமா? 

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- (அமைதி ) 

=====================================
# இறைவன் மிகப்பெரியவன். இறைவன் அனைவரையும் இயக்கிக் கொண்டிருக்கின்றான்.
=====================================

குருநாதர் :-   அப்பனே, இதனால் அவைத்தான் இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பேன்  அப்பனே, எவை என்று புரிய. 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன பண்ணுதாம்? இறைவன் மிகப்பெரியவன், அதிலிருந்து துகள் தான். லைட்டா, நீங்க அப்ப எது இயக்கினது? மூலம், இறைவன் தான் இயக்கினுகிறான். நம்மளெல்லாம் வந்து, 

=====================================
#  நீங்கள் கேட்டவைகள் எல்லாம் எப்போது கொடுக்கப்படும் ?
=====================================

குருநாதர் :- அப்பனே, அப்பொழுது நீங்கள் கேட்டவைகள் எல்லாம் கொடுக்கப்படுமா என்ன? 

அடியவர் :- நிச்சயமா நமக்கு எந்த சுதந்திரமும் இல்லை, சுதந்திரம் இல்லை, இல்லை. 

குருநாதர் :- நீங்கள் கேட்கும் பொழுதெல்லாம்,  அப்பனே, ஒன்று, அதற்கு தகுந்தார் போல் நீங்கள் மாற வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :- ஒன்னு என்ன பண்ணனும்? இறைவன் எதிர்பார்ப்புக்கு தகுந்தார் போல நீங்க மாறனும். அது அந்த பெரிய கிரகத்துக்கு வந்து. அந்த இறைவனுடைய தகுதி இருக்குதோ, அதுக்கு நீங்க மாறனும், மாறனும். 

குருநாதர் :- அப்பனே, இதனால்தான், அப்பனே, நிச்சயம் பல பல ஞானியர்கள், அப்பனே, பின் திருவாசகத்தையும் தேவாரத்தையும் இன்னும் இன்னும் எதை எதையோ எடுத்து வந்தனர். பின் அதற்கு சமமாக நீங்கள் வரவேண்டும் என்று.  ஆனாலும், அப்பனே, ஒருத்தரும் அதை ஓதவில்லையே. எப்படி, அப்பா அதற்கு சமமாக முடியும்? பின், நிச்சயம், அக்கோள் என்ன நினைக்கின்றது என்பது உங்களுக்கு தெரியும் அப்பனே, எவை என்று புரிய, புரிந்து கொள்ளுங்கள் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :- புரியுதுங்களா? எக்ஸ்பிளைன் பண்ணுங்க, ஐயா., டீ கேட்டுருங்க, அம்மா.

ஓதுவார் அடியவர் :- அதாவது, இறைவனை நம்ம உணர்றதுக்காக தான் நம்முடைய ஞானிகள் எல்லாம் வந்து பார்த்தீங்கன்னா, தேவாரம், திருவாசகம் எல்லாம் கொண்டு வந்தாங்க. ஆனா, அது எல்லாமே நாம அதை உணர்ந்து, அதை பாடல, பாடல, அப்படின்ற மாதிரி சொல்றாரு. 

குருநாதர் :- அப்பனே, இச்சிறிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, உங்களுக்கு புரியும்படி சொல்கின்றேன். ஒரு பெரிய கல்லிலிருந்து, அப்பனே, ஒரு சிறிய, அப்பனே, கல் , அப்பனே, பின் வந்ததுதான். நீங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :- நான் உங்களுக்கு எக்ஸ்பிளைன் பண்றேன். அகத்தியர், பெரிய பாராங்கள்ல ஒரு கிரஷர் வச்சு உடைக்கிறாங்க. இல்ல, கல்லு உடைக்கிறப்போ, இல்ல, அது சின்ன ஒரு துகழ், துகள் தான். நீங்க வந்து வந்துட்டீங்க, 

குருநாதர் :- அப்பா. அத்துகளை, அப்பனே, எப்படி யார் நசுக்கி விடுவார்கள் என்று, அப்ப, நிச்சயம், அப்பனே, தெரியாதப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- யார் நசுக்குவாங்கன்னே தெரியாதுன்றாங்க. யார் அந்த துகள்  என்ன பண்ணுவாங்க? ரோட்ல வந்து சின்ன கல்லு இருக்குது, என்ன பண்ணுவாங்க? லாரி வச்சு என்ன பண்ணுவாங்க? யார் உடைக்க ஏத்துட்டு போயிட்டாருப்பாங்க. ஏன், முடிஞ்சு போச்சு. மனிதனோட இது வந்து முடிஞ்சு போச்சு. 

குருநாதர் :- அப்பனே, சிறிய கல்லானது, மிகப்பெரிய கல்லை, அப்பனே, மீண்டும், அப்பனே, பின் செல்ல வேண்டும். அதனிடத்தில் என்பேன்  அப்பனே. எப்படி, அப்பா சாத்தியம் இதற்கு சொல்லே ஆகவேண்டும் அப்பனே?  பல இடத்தில் யான் பல வழிகளில் சொல்லிவிட்டேன் அப்பனே, இதை நீங்கள் சொல்லுங்கள். 

அடியவர் 19 :- இந்த மாதிரி, பக்தி, சிறு துகள், 

குருநாதர் :- அப்பனே, எவை என்று கூட இதைப்பற்றி சொல்லிவிட்டேன். புதுமையாக சொல்லுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, இதை பத்தி நான் சொல்லிட்டேன்ட்டாரு. 

அடியவர் 20  :-இந்த பெரிய கல்லோட இந்த துகள்  வந்து போய் சேரணும், திருப்பி போய் சேரணும். 

குருநாதர் :- அப்பனே, சொல்லிவிட்டார்கள். இதை 

சுவடி ஓதும் மைந்தன் :-  சொல்லிட்டேன்ப்பா. காந்த சக்தி விஷயத்தை எல்லாம் முன்னாடியே சொல்லிட்டாங்க. வேற புதுமையா சொல்லுங்க. புதுசா, புதுசா, எதிர்பார்க்கிறார். 

அடியவர் 21 :- இயற்கையை சார்ந்து நம்ம வாழனும். 

குருநாதர் :- அப்பனே, இல்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆனா, நீங்க சொல்லுங்கம்மா.

அடியவர் 22 :- ஈசன் பல கோடி பாதரச துகள்களால் ஆனவர். 

குருநாதர் :- தாயே, பின் இதையும் சொல்லிவிட்டேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  இல்ல, அகத்தியர், அப்பதான் சொல்லி இருக்காரு. 

( பல அடியவர்கள் அங்கங்கு உரையாடல்கள் )

அடியவர் 25 :-  பரவெளியில் இருக்கக்கூடிய நிலையற்ற தன்மையிலிருந்து, அசைவற்ற ஒரு நிலையிலிருந்து, பல கோடி ஆண்டுகளாக காந்த ஆற்றல் அப்படியே அசைவற்ற நிலையில் இருக்கு. பல கோடி ஆண்டுகளுக்கு பிறகு ஒரு அசைவு ஏற்பட்டு, காந்த ஆற்றலும் வெப்ப ஆற்றலும் ஒன்னா இணைந்து, பாதரச துகள்களா மாறி, அந்த பாதரச துகள்கள் தான் பெரிய கல் என்ற ஒரு இறைவன். அந்த பெரிய கல்லிலிருந்து வந்த சிறிய சிறிய அணுத்துகளால் தான் எல்லா ஆன்மாக்களும், எல்லா உயிரினங்களும். அதுபோல, இறைவன் எப்படியோ, அப்படியே மனிதர்களையும் படைச்சிருக்காரே. அந்த துகளோட எப்படி சேரணும்னா….. 

சுவடி ஓதும் மைந்தன் :-   அதுதான் நம்ம சொல்லணும். அதுதான் கேள்வி. கேள்வி, அதுதான். அது நீங்க சொல்றது ரைட். எல்லாம் அகத்தியர் சொன்னது தான் சொல்லி இருக்கீங்க. ஐயா, அந்த துகள் என்பது வந்து மீண்டும் அங்க மேல இடத்துல சேரணும். என்ன, 

அடியவர் 25 :-  அந்த துகள்  எல்லாம் சேரணும்னா, ஒவ்வொரு, அதாவது நமக்கு இடையிலேயே ஒரு பத்து வட்ட அணுக்கள்னு ஒன்னு இருக்கு. கோயில்கள் எல்லாம் ஒன்பது கலசங்கள், 11 கலசங்கள் எல்லாம் நிக்க வச்சிருக்காங்க. அந்த கலசங்கள் எல்லாம் நமக்குள்ள இருக்கிற உள்ள உள்வட்ட அணுக்கள். அந்த உள்வட்ட அணுக்கள் தான் புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் என்ற அணுக்களும். 

குருநாதர் :- அப்பனே, அணுக்கள் புரிந்தும் கூட, அப்பனே, இவர்கள் இங்கு இருக்கின்றார்களே. இவர்களே, அப்பனே, இன்னும் எதை என்று, அப்பனே, பின் கஷ்டப்பட்டு 

சுவடி ஓதும் மைந்தன் :-  (சாதுக்களை பார்த்து) இங்கு இருக்கிறாங்க. கோயில் பக்கத்துல தான் இருக்கிறாங்கப்பா. இவங்க எல்லாம், இவங்க எல்லாம் கோயில் பக்கத்துல தான் இருக்கிறாங்க. வந்து 

அடியவர் 25 :-   இல்ல, இது நான் சொன்னது இல்ல. அகத்தியர் அப்பா சொன்னது தான் ஒரு புத்தகத்துல. 

குருநாதர் :-அப்பனே, எவை என்று அறியப்பனே, எவ் புத்தகத்தில், அப்பனே, எந்த புத்தகத்தில் எடுப்பா? எந்த புத்தகத்தில் எடுத்து படிங்க, ஐயா. அதாவது, 


அடியவர் 25 :-  _______ என்ற ஒரு வெளியீட்டுல வந்து, அகத்தியர் அப்பாவும் சொல்லி இருக்காரு. அதேபோல, வால்மீகி ஐயா இயற்றிய வால்மீகி ராமாயணம். அதேபோல, இப்ப வந்து, அதுக்கு அடுத்து ஒரு அஞ்சு பத்து வருஷத்துக்கு முன்னாடி, ஆத்மாவின் சுயசரிதம்னு ஒரு புக் வந்திருக்கு. அதுக்கு அடுத்து…

குருநாதர் :- அப்பனே, எவை என்று, அப்பனே, அதாவது அனைத்தும் செய்துவிடு. அனைத்து தவறுகளும் செய்துவிடு. அப்பனே, ஆனாலும், அப்பனே, பின் அப்பனே, கல் நின்ற இடத்தில் நோக்கி போய்விடுமா என்ன? அனைத்து தவறுகளும் செய்துவிட்டு, அப்பனே, எப்படி அப்பா பேசுகின்றாய் நீ?

சுவடி ஓதும் மைந்தன் :- ( “எல்லா தவறும் பாவமும் செய்து விட்டால், அது எப்படி திடீரென சின்ன கல் பெரிய கல்லுடன் தானாக ஓட்டும்? அதேபோல், நீங்க  எல்லாவற்றையும் சரியாகச் செய்ய வேண்டும்.)

அடியவர் :- ஐயா, பூமியில நம்ம பிறந்தது வந்து இந்த ஈர்ப்பு விசையினால் பிறந்திருக்கோம். அப்போ, அந்த ஈர்ப்பு விசையை அறுக்கணும். ஆசை என்னும் ஈர்ப்பு விசையை அறுக்கணும். அறுத்தாதான் இறைவன்ட்ட போய் சேர முடியும். இந்த துகள்.

குருநாதர் :- அப்பனே, எவை என்று அறிய? அப்பனே, இவையெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் அதாவது புதுமையாக யோசியுங்கள். என் பின், அப்பனே.

சுவடி ஓதும் மைந்தன் :-  இதெல்லாம் பரவால்ல, பரவால்ல. புதுமையா யோசிங்கப்பா. பரவால்ல, அதெல்லாம் அதை விடுப்பா. பரவால்ல, புதுமையா யோசிச்சு சொல்லுப்பான்றாரு. திருப்பியும், அந்த கல்லு வந்து திருப்பி அங்கேயே போய் சேர்க்கணும். அய்யா அங்க வாய்ப்பு கொடுங்க, ஐயா. அதை பத்தி ஓகே, நீங்க புதுமையா யோசிக்க சொல்றாரு. ஐயா, புதுமையா சொல்லுங்க, ஐயா, புதுமையா சொல்லணும், சொல்லுங்க, ஐயா. 

அடியவர் 27 :- ஐயா, ஒவ்வொருவருக்கும் பிறப்பின் நோக்கம்னு இருக்கும். அந்த நோக்கத்துல நான் ஒரு கிரகஸ்தன்னா, அதை நான் எப்படி கடைபிடிச்சு தர்மமா வாழ்ந்து பண்றேனோ, 

===================================
# நான் வாழ்ந்தது போதும் இறைவா. நான் உன்னுடன் சேர வேண்டும் என்று நினைத்தாலே போதும் 
===================================

குருநாதர் :- அப்பனே, எடுத்துக்காட்டாக, அப்பனே, சுலபமானது என்பேன்  அப்பனே, அப்பனே, நினைத்தாலே, இது தானாக அங்கு போய்விடும். 
சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  :-  (“ஒன்னும் இல்லை, உங்களுக்கு போகும் விருப்பமே இல்லை என்று அவர் சொல்கிறார். மிகச் சுலபமாகச் சொன்னது — முக்தி, இறைவனிடம் சேர வேண்டும் என்ற எண்ணமே நமக்கில்லை. எங்கிருந்து பிரிந்தோமோ அதைத் தேடாமல், வேறு ஆசைகளுக்காக ஓடிக்கொண்டிருக்கிறோம்.  அப்படி இருந்தால் எப்படி போக முடியும்? அந்த பெரிய கல் ‘நீ என் கையில வரணும்’ என்று நினைத்தால் தான் இந்த சின்ன கல் நகரும்; அதுபோல நாமும் ‘நான் அங்க போகணும்’ என்று நினைக்க வேண்டும். இதைத் தான் அவர் எளிமையாகச் சொன்னார். )
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்களை :- ( பலத்த கைதட்டல் )

குருநாதர் :-அப்பனே, அப்பனே, இப்பொழுது சொல்லுங்கள். அப்பனே, பின் நிச்சயம் கல், நீங்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். யான் செல்வேனா, யான் போக போகின்றேன் என்று சொல்ல மாட்டார்கள் அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  இப்ப சொல்லுங்கப்பா, பார்ப்போம். நான் அங்க கல்லுக்கு போறேன், என்னை அனுப்பிச்சிடுவேன்னு சொல்லிட்டு, யாருனா சொல்லுங்க, பார்ப்போம். யாரும் சொல்ல மாட்டாங்கப்பா. 

குருநாதர் :- அப்பனே, ஏனென்றால், அப்பனே, இதற்காகத்தான், அப்பனே, நிச்சயம், பின் நான் கல்லா ஆனது இறைவன். அப்பனே, இதனால், அப்பனே, நம்மிடத்திலே நிச்சயம் நீ வரவேண்டும் என்று அடித்து துவைத்து கஷ்டத்தை, அப்பனே, உட்படுத்தி, அப்பனே, போதுமடா, சாமி, நான் உன்னிடத்திலேயே வந்து விடுகின்றேன் என்று, அவ்வளவுதான். 

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்களை :- ( பலத்த கைதட்டல் )

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  :- முக்தி வேண்டும், இறைவனிடம் சேர வேண்டும் என்ற எண்ணம் எப்போது வந்தாலும், அதுவே உண்மையான விருப்பம். கல் நம்மை விரும்பி ‘என் துகள்கள் உன்னிடம் சேரட்டும், சீக்கிரம் என் அருகே வா’ என்று அழைப்பது போல, நாமும் உலக ஆசைகளை விட்டுவிட்டு அந்த அழைப்பை உணர வேண்டும். அதற்காக வாழ்க்கை கஷ்டங்களை கொடுத்து நம்மை வெறுக்க வைக்கிறார் — ‘போதும் சாமி, இனி பிறவி வேண்டாம்’ என்ற நிலைக்கு கொண்டு வர. அப்போதுதான் ஆன்மா இறைவனிடம் சேரும்.” 

குருநாதர் :- எவை என்று அறிய அறிய, அப்பனே, சுற்றி சுற்றி புத்தகங்கள் அங்கும் இங்கும் என்று சொல்கிறீர்கள் அப்பனே. பின் உன் அறிவையே, அப்பனே, பின் எவை என்று புரிய. அப்பனே, பின் இங்கு, அப்பனே, எவை என்று புரிய, அப்பனே, மங்கி, அப்பனே, இதனால்தான் அறிவுக்கு வேலை கொடு அப்பனே. இப்பொழுது பேசினானே, அவனை வரச் சொல் இங்கு. 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  :-  ஐயா, அந்த அவரை வரச் சொல்லுங்க. யாருப்பா, புத்தகத்தை படிச்சவர், ஞானாலயம், ஐயா, வாங்க, ஐயா, வாங்கப்பா. அன்பாலயா, புத்தகம் எல்லாம் சொன்னீங்களே. புரோட்டான், நீச்சான், எலக்ட்ரான், ஐயா, வாங்க, ஐயா, வாங்க, ஐயா, ஐயா, ஐயா, ஐயா, அவர் வர சொன்னாரு. நீங்க மேடைக்கு வந்துருங்க, வாங்க, கொடுத்துரலாம். இல்ல, இது ஏதோ இங்கதானே. 

அடியவர் 25 :-  (மேடை ஏறினார்கள்) 

https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=8h57m52s

குருநாதர் :- அப்பா, பக்கத்தில் உட்காரு, 

சுவடி ஓதும் மைந்தன்   :-  உட்காருங்க, ஐயா. 

அடியவர் 25 :-  (சுவடி ஓதும் மைந்தன் அருகில் அமர்ந்தார்) 

========================================
#குருநாதர் செல்லமாக சுவடியின் பக்கத்தில் அவ் அடியவரை அமர்த்திக்கொண்டார் 
========================================

குருநாதர் :- அப்பனே, இவ்வளவு படித்தாய்? ஆனாலும், அப்பனே, வாழ்க்கையே போய்விட்டது அப்பனே. வாழ்க்கையை எப்படி நடத்த போகின்றாய் என்று என்னிடத்தில் சொல். பக்கத்தில் அமர்த்திக் கொண்டேன் உன்னை. 

சுவடி ஓதும் மைந்தன்   :- இத்தனை படிச்ச, எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான், அது, இதுன்னு சொல்லிட்டு, வாழ்க்கையே இழந்து நிற்கிறியே. என் பக்கத்தில் இருந்து சொல்லு.

குருநாதர் :- படித்து என்ன பிரயோஜனம், அப்பா? அப்பனே, எலக்ட்ரான் எவை என்று அறிய? அப்பனே, என்னாலும் சொல்ல முடியும். அப்பனே, நீ சொன்னது 

சுவடி ஓதும் மைந்தன்   :- அய்யா இங்கிலீஷ்லயே (நாடி வாக்கு) வருது. 

அடியவர் 25 :-  ஐயா, நான் சொல்லலைங்க, ஐயா, நீ சொல்லியது நான் சொன்னதை தான் நான் சொன்னேன். 

===========================
# எவ்வளவு கஷ்டங்கள் வந்த போதும் இவ் அடியவர் குருநாதரை விடவில்லை. இதுதான் உயர் பக்தி.
===========================

==================================
# குருநாதர் மிகவும் பெரிய பெருமிதம்  கொண்ட  நெகிழ்ச்சியான தருணம் இங்கு நடந்தது 
==================================

குருநாதர் :- அப்பனே, இவையெல்லாம் காப்பாத்தாதப்பா அறிந்தும் கூட. அப்பனே, எது காப்பாற்றுகிறது உன்னை என்பேன் அப்பனே, ஆனால் ஏதோ, அப்பனே, பின் அனைத்தும் விழுந்து விட்டு என் மீது நம்பிக்கை வைத்துள்ளாயே. பெருமிதம் என்பேன்  அப்பனே, தட்டிக்கொடு.

சுவடி ஓதும் மைந்தன்   :-  (குருநாதர் மேல்  நம்பிக்கை கொண்ட  இவ் மகத்தான அடியவரை தட்டிக் கொடுத்தார்) 


========================================
( குருநாதரே  சுவடி ஓதும் மைந்தனை தட்டிக்கொடு என்று சொன்ன அந்த நெகிழ்ச்சியான நிகழ்வை பின் வரும் நேரலை பதிவில் அவசியம் காண்க ) 

https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=8h58m35s
========================================


கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள்  :- ( இருந்த இடத்தில் இருந்து பலத்த கைதட்டல் மூலம் தட்டி கொடுத்தார்கள் இவ் அடியவரை  )

சுவடி ஓதும் மைந்தன்   :-  ( “ஐயா, நான் தட்டி கொடுத்தேன் — அது பெரிய ஆசீர்வாதம்.
நீங்கள் எல்லாம் படித்தீர்கள், ஆனால் ஒன்றும் இல்லாத நிலையிலிருந்தும் அகத்தியர் நம்பினீர்கள். அகத்தியர் தட்டி எழுப்புவார் என்று சொல்கிறார்; ‘இவர் தான் சான்ஸ்’ என்று காட்டுவார். சித்தர் எப்போது, எப்படி செய்கிறார் என்று நமக்குத் தெரியாது. நமக்குள்ள கஷ்டத்தை நம்ம வாயிலேயே பேச வைப்பார். அவருக்கு எவ்வளவு படிப்பு, எவ்வளவு கோவில் அனுபவம், எவ்வளவு பயிற்சி இருந்தாலும், அந்த சான்ஸ் நமக்காகவே கொடுக்கப்படுகிறது.) 

சுவடி ஓதும் மைந்தன்   :-  ஏன்பா, உன் வாழ்க்கை காப்பாத்தல எதுவுமே. அப்ப காப்பாத்தலன்னா என்ன? இறைவனே, இல்ல இருக்குன்னு சொல்லிக்கணும். அந்த நிலைமை வந்துச்சு, இவருக்கு வந்து. ஆனால் என்ன சொல்லி இருக்காரு? நம்பிக்கை என் மேல நம்பிக்கை வச்சிருக்கிறியாப்பா? இது போதும்பா. என்னை  தட்டி கொடுக்க சொல்லிட்டாரு ஐயா. 

குருநாதர் :-  அப்பா, ஏங்கிக் கொண்டிருந்தாய் அல்லவா? அப்ப, நிச்சயம், அப்பனே, நாடி வேண்டும், நாடி வேண்டும் என்று. அப்பனே, உனக்கு யான் என்ன சொல்வதப்பா? நான்தான் உனக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டும். 

மற்றொரு அடியவர்   :-  நாடி கேட்டார், ஆமா, கேட்டு வந்தார். 

சுவடி ஓதும் மைந்தன்   :- ஏங்கி நிக்கிறியாப்பா? என்னை தேடி தேடி என் பின்னாடியே வருகின்றாயே. நான் உனக்கு என்ன சொல்றது? வாழ்க்கையே போயிருச்சு. 

குருநாதர் :-  அப்பனே, மனிதனால் கொடுக்க முடியுமா என்ன, அப்பனே, வாழ்க்கை? நிச்சயம் முடியாதப்பா. சொன்னவர்கள் எங்கே அப்பனே? அவரிடத்தில் கேள். நிச்சயம், அப்பனே, வெளியே போ என்று சொல்லி விடுவார்கள். 

சுவடி ஓதும் மைந்தன்   :- "வாழ்க்கையே சிதறிப்போய் இருந்த நிலையில், ‘உட்கார்ந்து இருந்தால் யார் வந்து கொடுப்பார்கள்?’ என்று உணர்த்துகிறார். அதனால்தான், ‘நான் தான் உனக்காக வாழ்க்கையை மீண்டும் ஏற்படுத்த வேண்டும்’ என்று சொல்லுகிறார். வாழ்க்கையை உருவாக்கி நிறுத்துவது சாதாரண மனிதன் அல்ல; அகத்தியரும் தான் இவருடைய வாழ்க்கையை மீண்டும் எழுப்ப வேண்டும், இல்லையெனில் அது சாத்தியமே இல்லை என்று கூறுகிறார்.

====================================
# சாவின் எல்லைக்கு சென்றாலும் , குருநாதரை விட்டு விலகவில்லை இவ் அடியவர் 
====================================

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம், எது என்று அறிய அப்பனே, பின் நிச்சயம், சாவதற்கும் துணிந்து விட்டாய். காப்பாற்றி விட்டேன் அப்பனே. அதனால்தான் மேடைக்கு அழைத்தேன் உன்னை. 

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்களை :- ( பலத்த கைதட்டல் )

குருநாதர் :-  அப்பனே, பின் எவை என்று எதை எதையோ படித்தாய் அப்பனே. இப்பொழுது சொந்தம் என்று இருப்பது யான் மட்டுமே. அப்பனே, சிந்தித்துக்கொள் அப்பனே.

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்களை :- ( பலத்த கைதட்டல் )

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, புரியுதுங்களா? எல்லாமே போயிடுச்சுப்பா. எல்லாமே இழந்தாச்சு. இப்ப, சொந்தம் என்று யார் இருக்குது? நான் மட்டும் தான் அப்பா. 

குருநாதர் :-  அப்பனே, மனிதன் காப்பாற்றுவானா? என்ன, நிச்சயம், அப்பனே, மாட்டானப்பா. இதுதான், அப்பனே, மனிதனின் தீய குணம் என்பேன்  அப்பனே, 

சுவடி ஓதும் மைந்தன் :-  மனிதன் காப்பாற்றுவானா என்ன?

குருநாதர் :-  அப்பனே, எங்கிருந்து, எங்கிருந்து, இக்கல் வந்ததோ, அக்கல்லே காப்பாற்றும். 

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்களை :- ( பலத்த கைதட்டல் )

சுவடி ஓதும் மைந்தன் :-   எங்கிருந்து நீங்க பிரிஞ்சு வந்தீங்களோ, அந்த கல்லுதான் உங்களை காப்பாற்றும். 

அடியவர் :- இறைவன், 

குருநாதர் :-  அப்பனே, எது என்று அறிய அப்பனே, நிச்சயம், தன்னில் கூட ஏதோ ஒன்றை. அப்பனே, உனக்கு யான் சொல்கின்றேன் அப்பனே. அப்பனே, பலபேர் வாக்கு கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஏன், உன்னை, அப்பனே, மேடைக்கு அழைத்தேன் என்பேன்  அப்பனே. எவ்வளவு கஷ்டங்கள் கொடுத்தாலும், அப்பனே, இறைவன், நீ தாங்கிக்கொண்டு, தாங்கிக்கொண்டு, அப்பனே, பின் நிச்சயம் நடந்துள்ளாய் என்பேன்  அப்பனே.  எவ்வளவு வலிகள் அப்பனே?  யான் அறிவேன் உன்னை.

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்களை :- ( பலத்த கைதட்டல் )

சுவடி ஓதும் மைந்தன் :-  எத்தனை கஷ்டம். இருந்தாலும், இறைவன் மேல் உள்ள  நம்பிக்கை விடல. 

குருநாதர் :-  அப்பனே, உயிரும் போய்விட்டது. உடம்பு தான் இருக்கின்றது இங்கே. அப்பனே.

குருநாதர் :- அப்பனே, ஒரே காரணத்தால், அப்பனே, அறிந்தும் புரிந்தும் கூட, என் மீது நம்பிக்கை வைத்துள்ளாய். ஆனாலும், அப்பனே, உன்னை விடப்போவதில்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :- என் மேல நம்பிக்கை வச்சிருக்கிறல. நான் உன்னை விடமாட்டேன். 

குருநாதர் :-  அப்பனே, அப்பொழுது இவனுக்கு செய்வதா? பின் உங்களுக்கு செய்வதா? அப்பனே, எடுத்து, அப்பனே, உன் நிலைமை அப்பனே, அனைவருக்கும் கூறு. இவ்வண்ணாமலையிலே கர்மம் தொலையட்டும் அப்பனே. 

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்களை :- ( பலத்த கைதட்டல் )

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, நிலைமை சொல்லுங்க. நீங்க எப்படி அகத்தியர் மேல நம்பிக்கை வச்சீங்க? 

=============================
# கருணைக்கடல் தந்தை தனது பாசத்தை காட்டினார்கள்  இங்கு. இவ் அடியவரை உன் கஷ்டத்தை சொல் என்று சொல்லச் சொல்லி , பின்னர் அடியவர் பட்ட கஷ்டங்களை சொல்ல வேண்டாம் என்று  எண்ணி,  தானே அவரின் கஷ்டத்தை எடுத்து உரைத்தார்கள் கருணைக்கடல்.
=============================

குருநாதர் :-  அப்பனே, எவை என்று புரிய அப்பனே, நிச்சயம், தன்னில் கூட யான் சில விளக்கங்கள் அப்பனே, தெரிவிக்கின்றேன் அப்பனே. அனைத்தும் இழந்து விட்டான் என்பேன்  அப்பனே. பல புத்தகங்கள் படித்துள்ளான் என்பேன்  அப்பனே நிச்சயம், தன்னில் கூட.  அவை எவை என்று பல அப்பனே, ஆராய்ச்சிகள் எவை என்று கூட பல. அப்பனே, பின் ஜோதிடங்கள். அப்பனே, பல மனிதர்கள். அப்பனே, சொல்வதை கேட்டுள்ளான் என்பேன்  அப்பனே. ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை அப்பனே. அழிவுதான் என்பேன்  அப்பனே. அழிவும் வந்துவிட்டது. ஆனால், கையை பிடித்து யான் வந்துவிட்டேன். அப்பனே, போதுமா? 

சுவடி ஓதும் மைந்தன் :- நீ என்ன சொல்றது அப்பா.  நானே சொல்லிடுறேன். போகமாட்டார் அகத்தியர். இவர்  எல்லாத்தையும் படிச்சாரு. நிறைய பக்தி. யார் யாரோ  என்னென்னவோ சொன்னாங்க. எல்லாம் இவங்க கேட்டாங்க. பரிகாரம் சொன்னாங்க. எல்லாம் பண்ணாரு. என்னப்பா நடந்துச்சு? கடைசில யார் கூட்டிட்டு வந்தது?  நான்தான் காப்பாத்திக்கிறேன் என்று குருநாதர் உரைக்கின்றார்.. 

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம், அதனால்தான் சொல்கின்றேன். அப்பனே, அக்கல்லிருந்து. அப்பனே, சிறிய கல் அப்பனே, பிரிந்து வைத்ததை சித்தர்கள் யாங்கள் தான். பின் தூக்கி, அதனுடன் இணைக்க வேண்டும். அதனால்தான், அப்பனே, யாங்கள் தேவைப்படுகின்றோம் அப்பனே. அதனால், யாங்கள் விரும்பியபடி இருங்கள் நீங்கள் போதுமானது. 


கூட்டுப் பிரார்த்தனை அடியவர்களை :- ( பலத்த கைதட்டல் )

சுவடி ஓதும் மைந்தன் :-  பிரிந்து வந்து திருப்பி, அங்க போறதுக்கு எங்க உதவி இல்லாம போக முடியாது. எங்க உதவி இல்லாம போக முடியாதுன்றாங்க. சித்தர்கள், அதனால்தான் என்ன பண்றாங்க? வந்து, சித்தர்கள் எண்ணியபடி நீங்க இருக்கணும். இருந்தா, சேர்த்துருவோம்ன்றாங்க. 


===============================
# சித்தர்கள் நம்மிடம் விரும்புவது
=============================== 


==================================
# (1) முதலில் தர்மம் கடைபிடிக்க வேண்டும்.
===================================

குருநாதர் :- அப்பனே, யாங்கள் அப்பனே, பின் விரும்பியது முதலில் தர்மம் கடைபிடிக்க வேண்டும் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :-   ஒன்று தர்மத்தை கடைபிடிங்க. நாங்கள் விரும்புவது என்னது? தர்மத்தை கடைபிடிங்க. தர்மத்தை கடைபிடிக்கணும். 

==================================
# (2) அனைத்து ஜீவராசிகளும் இறைவனுக்கு சொந்தமானது என்று நினைக்க வேண்டும்.
===================================

குருநாதர் :-  அப்பனே, மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே, எது என்று புரிய. அனைத்து ஜீவராசிகளும், அப்பனே, இறைவனுக்கு சொந்தமானது என்று நினைக்க வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :-   இரண்டாவது பாயிண்ட், அனைத்து ஜீவராசிகளும் இறைவனுக்கே சொந்தம். அனைத்து ஜீவராசிகளும் ஒன்றே. 

==================================
# (3) அனைத்து ஜீவராசிகளும் தன்போல் எண்ணி அவற்றையும் மகிழ்விக்க வேண்டும். 
===================================

குருநாதர் :-  அப்பனே, பின் அனைத்து ஜீவராசிகளும் தன்போல் எண்ணி, அப்பனே, அவற்றையும் மகிழ்விக்க வேண்டும். 

அடியவர் :- அனைத்து ஜீவராசிகளும் தன்போல் நினைத்து, அவர்களையும் நீங்க நல்லபடி பார்த்துக்கணும். 

==================================
# (4) பொய் பேசக்கூடாது. 
==================================

குருநாதர் :-  அப்பனே, பொய் பேசக்கூடாது. 

அடியவர் :- அவற்றையும் மகிழ்விக்க வேண்டும்.  பொய் பேசக்கூடாது. 

==================================
# (5) நிச்சயம் கோபம் படக்கூடாது. 
==================================

குருநாதர் :-  அப்பனே, எவை என்று அறிய? அப்ப, நிச்சயம், தன்னில் கூட கோபமும் படக்கூடாது. 

அடியவர் :- எந்த விதத்திலும் நீங்க கோபம் காட்டக்கூடாது. 

==================================
# (6) எவர் திட்டினாலும், வாங்கிக்கொள்ள வேண்டும்.
==================================

குருநாதர் :-  எவர் திட்டினாலும், அப்பனே, வாங்கிக்கொள்ள வேண்டும். 

அடியவர் :- எவர் திட்டினாலும், நீங்க வாங்கிக்கணும். கோவப்படாம, 

==================================
# (7)  எனக்கு இறைவன் இருக்கின்றான்
==================================

குருநாதர் :-  எனக்கு இறைவன் இருக்கின்றான் என்று, 

அடியவர் :-  எனக்கு இறைவன் இருக்கிறான். அவன் பார்த்துப்பான். நீ என்ன வேணாலும் சொல்லிக்கோ. 

குருநாதர் :-   அப்பனே நிச்சயம், அப்படிப்பட்ட கல்லை, அப்பனே, யாங்கள் வந்தடைந்து, அதற்கு அனைத்தும் கொடுப்போம் அப்பனே. அழகாக எங்கள் இல்லத்தில் பின் வைத்து, அதற்கு உபசரித்து போவோம் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :-  "இந்த குணங்களை வளர்த்துக்கொள்ளச் சொல்கிறார்கள். அந்த கல்லை எடுத்துச் சென்றால் பெரிய கல்லை தேய்க்க மாட்டார்கள்; முதலில் தங்கள் இல்லத்தில் இருக்கும் சித்தர்களிடம் வைத்து, அவர்களுக்கு தேவையானதை எல்லாம் கொடுத்து தயார் செய்து விடுவார்கள். பிறகு அதை சேர்த்து, இறைவனிடம் கொண்டு சென்று சேர்ப்பார்கள். அதாவது, நீங்கள் இந்த குணங்களைப் பயன்படுத்தினால், உங்கள் ஆசைகளை நிறைவேற்றிச் செய்து, இறைவனிடம் சேர்த்துவிடுவார்கள் என்று விளக்குகிறார்.

அடியவர் 2:- அகத்தியர் கெஸ்ட்.

சுவடி ஓதும் மைந்தன் :-  கரெக்டா சொன்னார். பாருங்க. அகத்தியரோட கெஸ்ட்டா இருக்கலாம். 

======================
# பக்தி என்பது கத்தி
======================

குருநாதர் :-   அப்பனே, இதனால்  அப்பனே, நிச்சயம், அப்பனே, பக்தி என்பது யாருக்கும் தெரியவில்லை அப்பா. அப்பனே, மீண்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். பக்தி என்பது கத்தி என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன். அப்பனே, காக புசண்டனும் அப்பனே. நிச்சயம், தன்னில் கூட அதில் நடப்பது என்பது கடினம் தான் அப்பா. 

குருநாதர் :-   நடந்துவிட்டால், அப்பனே, வாழ்க்கை முடிந்தது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  பக்தி என்பது என்ன? கஷ்டம். கஷ்டம். கத்தி மாதிரி.  கத்தியில நடப்பது எவ்வளவு கஷ்டம். ஆனா, அந்த கத்தியில நடக்கிறது ரொம்ப கஷ்டம்தான். ஆனா, கடந்து விட்டால்….

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, ஆனால் பாதியிலே திரும்பி வருகின்றான் என்பேன்  அப்பனே.  பின் முக்கால் பங்கும், அப்பனே, பின் போயிட்டு திரும்பி வந்து விடுகின்றான். பின், அப்பனே, முடியாது என்று, அப்பனே, பின், இறைவனை. 

சுவடி ஓதும் மைந்தன் :- அதுல கால், அரை பங்கிலே நம்மளால கஷ்டம் அனுபவிக்க முடியாது. என்ன பண்றாரு? போயிட்டு ரிட்டர்ன் வந்துறாங்களாம். அந்த கத்தியிலேயே சில பேர் என்ன பண்றாங்க? முக்காவாசி போயிட்டு வந்துறாங்க.  அப்போ , இன்னும் கால் பங்குதான் இருக்குது. முடியலப்பான்றாரு. 

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம், இக்கத்தியின் மேல், அப்பனே, நிச்சயம், நடப்பதற்கு யாங்கள் உதவி புரிவோம். அவ்வளவுதான் என்பேன்  அப்பனே. 

குருநாதர் :-  அப்பனே, இதனால்தான், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, குருவானவன். அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, எவை என்று புரிய. 

============================
# ஆன்மாக்களின் அழுகுரல்  - ஓம் என்ற சத்தம் 
============================

குருநாதர் :-  அப்பனே, முக்கியமாக, எவை என்று அறிய அப்பனே, ஏன், எதற்கு என்றால், அப்பனே, சித்தர்கள். அப்பனே, அதாவது, ஆன்மாக்கள் எல்லாம், அப்பனே, நிச்சயம், அப்பனே, எவை என்று கூட, எப்படி இறைவனை காண்பது, இப்படி ஆகிவிட்டோம் என்றெல்லாம், அப்பனே, நிச்சயம், அப்பனே, எவை என்ற அழுது புலம்பிக் கொண்டே இருக்கும். அப்பனே, அழு குரல் தான், ஓம் என்ற சத்தம். 

குருநாதர் :-  அதனால்தான், அப்பனே, நிச்சயம், நீங்களும், அப்பனே, பின் அனைத்தும், அப்பனே, மந்திரங்கள், பின் சொல்கின்ற பொழுது, ஓம் என்ற, அப்பனே, பின் எழுத்தை ஒன்று சேர்த்துவிட்டால், பின் அதாவது, அதற்கும் மகிழ்ச்சி, அதற்கும் மகிழ்ச்சி, அப்பனே, பொங்கிவிடும் என்பேன்  அப்பனே. இதனால், பின் யாரோ ஒருவன் சொல்கின்றான், அவனிடத்தில் செல்லுவோம் என்று. அப்பனே, பின் அவ் ஆன்மா வந்தடைந்து, அப்பனே, எப்படியோ சில மோட்சங்களை, அப்பனே, பெற்றுவிடும் என்பேன்.  

குருநாதர் :-  அப்பனே, இன்னும், அப்பனே, பன்மடங்கு, அப்பனே, வித்தியாசங்கள் உண்டு என்பேன்  அப்பனே. ஒவ்வொரு, அப்பனே, பின் நிச்சயம் விதிக்கும் அப்பனே, எண்ணற்ற, அப்பனே, பின் விதிகள் உண்டு என்பேன்  அப்பனே. 

குருநாதர் :-  அவற்றையெல்லாம் கொண்டு வருகின்றேன் என்பேன்  அப்பனே. அனைத்தும் தெரிந்து கொண்டால், நீங்கள் உங்களை வெல்லலாம் என்பேன்  அப்பனே. வென்றிட்டு, அனைத்தும் பின் பெறலாம் என்பேன்  அப்பனே. நிச்சயம், அவ்வாறு, பின் தெரியவில்லை என்றால், அப்பனே, பின் வென்றிட்டாலும், அப்பனே, பிரயோஜனம் இல்லை என்பேன்  அப்பனே. அதை விட்டு விடுவீர்கள், நீங்கள் என்பேன்  அப்பனே. 

குருநாதர் :-  அப்பனே, அதனால்தான், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பின் எவை என்று கூட சிறிது புண்ணியம் இருக்கின்றது. அப்பனே, அப்புண்ணியம் பன்மடங்கு, பன்மடங்கு ஆக ஆக அப்பனே, நிச்சயம், தன்னில் கூட உங்களை, அப்பனே, நீங்கள் உணர்ந்து இறைவனை காணலாம் என்பேன்  அப்பனே. மீண்டும் மீண்டும் சொல்கின்றேன். அப்பனே, இறைவன், அப்பனே, கண்ணுக்குத் தெரிவான். நீங்கள் கண் எவை என்று, அப்பனே, பின் எவை என்று புரிய அப்பனே, பின் நல் மனதை பெற்றிருக்கவில்லை என்பேன்  அப்பனே. அவ்வளவுதான். 

===============================
# சிவனடியார்களுக்கு குருநாதர் உரைத்த வாக்கு 
===============================

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பின் அதாவது ஈசன், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பின் சொந்தக்காரர்கள் என்று, அப்பனே, பின் உங்கள் அருகிலேயே படுத்திருக்கின்றான் என்பேன்  அப்பனே.  உங்களுக்கு தெரியுமா? 

குருநாதர் :-  அப்பனே, உணர்ந்தவர்கள் உண்டு என்பேன்  அப்பனே.  அப்பனே, அப்பனே, இவர்களுக்கு தேநீர் கொடுங்கள். முதலில் அப்பனே. 

குருநாதர் :-  ஐயா, எல்லாரும் டீ குடுங்க. ஐயா, யாராவது ஒருத்தர் டீ விரும்புறாரு. அதனால, டீ குடுங்க.

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28.12.2025 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டுப் பிரார்த்தனை வாக்கு தொடரும் ….) 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!