60. அகத்திய பெருமானை பணிகின்றேன் ஐயா. ஐயா உழைக்காமல் எளிமையாக முன்னேறுவதற்கான வழியை தேடி கொண்டிருக்கிறது தற்போதைய இளைஞர் கூட்டம் போதிய வேலை வாய்ப்பும் இல்லை போதைக்கு அடிமையாகி பெற்றோருக்கும் பிறருக்கும் துன்பத்தை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறார்கள் இந்த போக்கு மாறுவதற்கும் வேலைவாய்ப்பு அமைவதற்கு வழியும் ஆசிர்வாதமும் தாருங்கள் ஐயா நன்றி!
குருநாதர்: இவர்களை நிறுத்தினாலே, நாடு உருப்பட்டுவிடும். இதனால் தான் முதலிலேயே இதை பற்றி குறிப்பிட்டுவிட்டேன்.
61. அனைத்து கோவில்களிலும் உள்ள சுவாமிகள், அரசியவாதிகளிடமும், அரசாங்கத்திடமும் கைதியாக இருக்கிறார்களே. அவரை தரிசிப்பதற்கு கூட, இவர்களை மிக நன்றாய் கவனிக்க வேண்டி உள்ளதே! இப்படி ஒரு ஆன்மீக பயணம் தேவையா? இல்லை இறைவன் சக்தியற்றவனா?
குருநாதர்: அடடா! தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்ற வார்த்தையை மறந்துவிட்டான்.
அடியவர்: அப்போ, இறைவனும் நீங்களும் கெட்டவர்களைத்தான் பக்கத்தில் வைத்துக் கொண்டிருப்பீர்கள் அல்லவா?
குருநாதர்: நீ எதை இறைவன் என்று நினைக்கின்றாயோ, அக்கல்லானது உனக்கு உதவி செய்யும் என்பதை மறந்து விட்டாயோ? அப்பா! இங்கு உன் பக்தி பொய்யாகிவிட்டதா?
அடியவர்: அப்படியானால், கோவில்களுக்கே போகாமல் இருப்பது நல்லதல்லவா?
குருநாதர்: அப்பா! எனக்கு எதுவுமே தேவை இல்லை என்று அமர்ந்துவிடு. நாங்களே காட்சி அளித்துவிடுவோம்.
அடியவர்: ஓஹோ! பொண்டாட்டி, குழந்தை, அப்பா, அம்மா என ஒருவரும் வேண்டாம் என்று இருந்துவிட்டு உங்களிடம் வந்தால், நீ உன் கடமையை செய்துவிட்டு வா என திருப்பி அனுப்புவீர்கள்!
குருநாதர்: பின் யானே கேட்க்கிறேன்! எத்தனை பேர்கள் என்னிடம் திருமணம் ஆகவில்லை என்று ஓடோடி வருகின்றார்கள் அப்பா! அப்பொழுது என்ன செய்ய வேண்டும் கூறு! வேண்டாம் என்றா சொல்ல வேண்டும். திருமணம் செய்ய வேண்டாம் என்றா சொல்ல வேண்டும். எத்தனை பேர்களுக்கு குழந்தை இல்லை என்று வருகிறார்கள். குழந்தையே வேண்டாம் என்று யான் சொன்னால் என்னவாகும் தெரியுமா? இதையும் புரிந்து கொள் அப்பா! அடிப்படை தத்துவங்களே, திருமணம் வேண்டும், குழந்தைகள் வேண்டும், காதலி வேண்டும், இதெல்லாம் கேட்கின்றார்கள், விழுந்து விழுந்து! அப்போது இறைவன் என்னடா இது என்று கொடுத்து விடுகின்றான். ஆனால் ஆடுகின்ற ஆட்டத்தை பார்த்தால், நிச்சயம் ஆடு, கடைசியில் என்னிடத்தில் தான் வரப்போகின்றாய் என்று கொடுக்கின்றான். கடைசியில் வந்து இறைவனிடம் கேட்ப்பான். அப்பொழுது இறைவன் கேட்ப்பான், "நீ தானே கேட்டாய்" என்று! மனிதர்கள் அனைவரும் இறைவனுக்கு செல்லக் குழந்தைகள். கொடுத்துவிட்டால், உணர்த்துவான், வேண்டாம் வேண்டாம் என்று. இவர்கள், வேண்டும், வேண்டும் என்று செல்வார்கள். மாயை அப்பா!
அடியவர்: உங்கள் வீட்டுக்கு விருந்தாளியாக நான் வருகிறேன். நல்லவிதமாக உணவு சமைத்து போடுவீர்களா, அல்லது தெண்டத்துக்கு ஏதாவது சாப்பிட்டுவிட்டு போடா என்று செய்வீர்களா?
குருநாதர்: அப்பா! உங்கள் வீட்டுக்கு அனைவரும் வந்திருக்கிறார்கள். ஏன் நீரை கொடுக்கின்றீர்கள், போடா வெளியே என்று அனுப்பிவிட வேண்டியதுதானே.
அடியவர்: அது அடிப்படை நாகரீகம்!
குருநாதர்: இறைவன் எப்படிப்பட்டவன் என்று யோசித்தாயா, அன்பு மகனே!
அடியவர்: இறைவன் எப்படிப்பட்டவர் என்பதை, நிறைய சொல்லிவிட்டீர்கள், காத்து நிறைய கேட்டுவிட்டோம். இல்லை என்று நான் சொல்லவில்லை. நடக்கிற உண்மையை கேட்கிறேன், என் கண் முன்னாடி நடக்கிற உண்மை இது. அரசியல்வாதிகளிடமும், அறமில்லா துறையிடமும் மாட்டிக்கொண்டு இறைவன் கைதியாக இருக்கிறார்.
குருநாதர்: அப்பா! தேவை இல்லை. உன்னிடத்தில் இருக்கின்றான் இறைவன். நீ ஏன் அவனை தேடி அவனிடத்தல் செல்கிறாய் இங்கு.
அடியவர்: சரி! இத்தனை சொல்கிறீர்களே! எதற்கு, இத்தனை கோவில்களை கட்டினீர்கள், இங்கு?
குருநாதர்: அப்பா! இவைகளை எல்லாம் ஏன் கட்டினோம் என்றால், ஆற்றல்கள். மனிதனுக்கு ஆற்றல்கள் கிடைத்து கூடுகிற பொழுது, தன்னைத்தானே உணர்வான். ஆலயங்களுக்கு சென்றால், அது நடக்கும், இது நடக்கும் என்று காலப்போக்கில் மாறிப்போனது. நீயே, உன்னுள்ளே இறைவனை வரவழைக்கலாம், நீயே திருத்தலமாக்கலாம் என்று சித்தர்கள் எழுதி வைத்தார்களே!
அடியவர்: எல்லோருக்கும் அந்த மாதிரி அமையாது. அதை புரிஞ்சுக்குங்க!
குருநாதர்: மனதில் அழுக்குகளை வைத்துக் கொண்டு, சுயநலமாக திருத்தலம் சென்றால், எதுவும் நடக்காது. இறைவன் இங்கு என்ன விருப்பப்படுகின்றானோ, அதுதான் நடக்கப்போகின்றது. இறைவன் எங்கு இருக்க விருப்பப்படுகின்றானோ அதுதான் நடக்கப்போகிறது. பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் என்ன சொல்லியிருக்கிறான்? இதே கேள்வியை உங்களை யான் பார்த்து கேட்கின்றேன்!
அடியவர்: என்னெல்லாமோ சொல்லியிருக்கார்.
குருநாதர்: அப்பா! சொல் அறிவிப்போம்!
அடியவர்: என்ன பிரயோசனம்? இந்த கலியுகத்தில், கிருஷ்ணரை போல் திருட்டுத்தனம் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.
குருநாதர்: அப்பா! அவன் திருடனில்லா!
அடியவர்: திருடன்தான்.
குருநாதர்: அனைத்தையும் அறிந்து உரைத்திருக்கின்றான்.
அடியவர்: எல்லாவற்றையும் செய்து விட்டு, கடைசியில் நானா செய்தேன், நானா கூறினேன் என்பார்.
குருநாதர்: இதெல்லாம் இறைவன் லீலை!
அடியவர்: அது மாதிரி, இதுவும் எங்கள் லீலை.
குருநாதர்: உங்கள் லீலை கடைசியில் எங்கு முடியப்போகிறது ஏன்பது எங்களுக்கு தெரியும்.
அடியவர்: அதான், அதேதான். இப்ப புரிஞ்சுதா? நீங்கள் உயரத்தில் இருக்கிறீர்கள், நாங்கள் கீழே பள்ளத்தில் இருக்கிறோம். எங்களை தூக்கி விடுகிற பொழுது, சரியான விஷயங்களை சரியான முறையில் காட்ட வேண்டும்.
குருநாதர்: இதுவரை சரியான முறையில் எடுத்து வந்து கொண்டிருக்கிறேன் அப்பா! முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்று. கலியுகத்தில் சித்தர்கள் பொய் என்று நிரூபித்துவிட்டிருப்பார்கள் அப்பா! ஆனாலும் யாங்கள் விடப்போவதே இல்லை.
அடியவர்: ஒரு அடியவர், தான் வாழும் காலத்துலே, அனைவரும் நல்லவர்களாக இருந்து, இறைவன் சன்னதியில் தஞ்சமடைந்து, இருக்க வேண்டுமென ஆசைப்படுவது, தவறே கிடையாது.
குருநாதர்: இதை முதலில் 20 வயதில் கேட்டிருந்தால் எவ்வளவு உத்தமம். அனைத்தும் அனுபவித்துவிட்டு கேட்கிறார்களே, என்ன நியாயம்?
அடியவர்: அந்த வயதில் பக்குவ நிலை அமையாது,
குருநாதர்: சிவனடியார்களை பாருங்கள்!
அடியவர்: கோடியில் நாலுபேர் இருப்பார்கள். அனைவரும் இருக்க வாய்ப்பில்லை.
குருநாதர்: ஏன் கோடியில் ஒருவனாக நீயிருக்க கூடாது? நிச்சயம் தாய் தந்தையரின் வளர்ப்பில்தான் உள்ளது.
அடியவர்: அவனுக்கு அந்த ஞானம் இருந்திருந்தால், பிறப்பே எடுத்திருக்க மாட்டானே!
குருநாதர்: இறைவனை வணங்கு என்று அடித்து சொல்லி, சிறு வயதிலேயே உட்கார வைத்திருந்தால், ஞானம் வந்து விடும்! தன் மகன், மக்கள் எங்கேயாவது செல்லட்டும், பின் யாருடனாவது சந்தோஷமாக இருக்கட்டும் என்று விரும்பினால், இதுதான் நிச்சயம் வரும். என்ன விதைக்கின்றாயோ, அதுவே ஆகும்.
அடியவர்: எதை விதைத்தாலும் அதுதான் வருமென்பது உண்மை. அதெல்லாம் சரிதான். நீங்கள் சொன்ன பகவத் கீதையை படித்து, அதன் படி நடந்து, எல்லாவற்றையும், செய்து, சொல்லிவிட்டு, கடைசியில், நானா சொன்னேன், நானா செய்தேன் என்று கேட்டபொழுது, பலரையும் வேதனைப்படத்தான் வைத்தது.
குருநாதர்: அப்பா! இறைவனின் விளையாட்டு. விளையாடு. ஆனால் இறைவன் விளையாடினால், நிச்சயம்.....
அடியவர்: நான் கேட்கிற கேள்வி ஒன்றுதான். ஒரு மனிதன், தான் வாழும் காலத்தில் ஒரு நல்லது நடப்பதை, நல்லது செய்வதை காண்பது தவறா?
குருநாதர்: அப்பா! அவன் மனது நல்லதாக இருந்தால், நடப்பதெல்லாம் நல்லதாக இருக்கும். அவன் மனதில் குற்றமிருந்தால், அவன் காண்பதெல்லாம் குற்றமாக இருக்கும்.
அடியவர்: நீங்கள் ஒரு விஷயம் பண்ணுங்கள். நீங்கள் மனித ரூபம் எடுத்து வந்து திருவண்ணாமலையில் இறை ........
குருநாதர்: அப்பா! எத்தனையோ முறை வந்திருக்கின்றேன்! கூட்டுப்பிரார்த்தனைக்கே வந்திருக்கின்றேன்! ஆனாலும் கண்டவர் எவர்? அத்தனை மனதும் அழுக்குகள் அப்பா!
அடியவர்: இருக்கட்டு. ஒரு நிமிடம்! நான் கூறுவதை கேளுங்கள். கவனித்துக் கொள்ளுங்கள். ஒருநாள், உங்களது எந்தவிதமான சக்தியையும் பயன்படுத்தாமல், சாதாரண மனிதனாக வந்து ஒரு நாழிகைக்குள் நீங்கள் வரிசையில் நின்று அப்பனை, தரிசனம் பண்ணிவிட்டு வந்தீர்கள் என்றால், நான் மொட்டை அடித்துக் கொள்கிறேன். என் தலையில் முடி இல்லை, ஆதலால், நீங்கள் சொல்வதை நான் கேட்க்கிறேன். குறிப்பு: யார் மனதையும் வசியப்படுத்தக் கூடாது!
குருநாதர்: அப்பா! இன்னொன்றையும் சொல்கிறேன் அப்பா! அவ்வளவு ஆற்றல் நீங்கள் பெற்றிருந்தால் தான் உண்டு. யங்கள் வந்தால், நிச்சயம் சொல்லிவிட்டால், இறைவன் நான்தான் என்று சொல்லிவிட்டால் சிரிப்பான் மனிதன். நீயா இறைவன் என்று. அவ்வளவு பக்தி மனிதனுக்கு. என்னை பற்றி யான் புகழ்வதும் இல்லை, அது சரியில்லை.
அடியவர்: நான் அதைப்பற்றி எதுவுமே கூறவில்லை. எனக்கு தெளிவு படுத்துங்கள், ஒரு நாழிகைக்குள், அண்ணாமலையாரை, அருணாச்சலத்தை வரிசையில் நின்று பார்த்து விடுவீர்கள் என்று.
குருநாதர்: அப்பா! இவை எல்லாம்! எங்கெல்லாம் மனிதர்களுக்கு காட்சி அளித்திருக்கிறேன்!
அடியவர்: காட்சி அளித்ததை பற்றி நான் சொல்லவில்லை. இப்பொழுது திருவண்ணாமலை கோவிலில் இருக்கும் நிலைமைக்காக சொல்கிறேன். சாதாரண மனிதனாக வந்து நீங்கள் தரிசனம் பண்ணி காட்டலாம் இல்லையா?
குருநாதர்: அப்பனே! அனைத்தும் பார்த்து வந்ததினால் தான் சித்தன் ஆகின்றான் அப்பனே! அனுபவித்து வராமல் சித்தன் ஆக முடியாதப்பா.
அடியவர்: அந்த அனுபவம் என்பது வேறு! நான் கேட்பது வேறு.
குருநாதர்: யானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன் அப்பனே! சாதாரண மனிதனை பார்க்க எவ்வளவு அலைகின்றார்கள்! இறைவனை பார்க்க காத்திருந்தால் என்ன? அப்பனே! திருத்தலத்திற்கு சென்றால் சில நாட்கள் இருக்க வேண்டும். ஐந்து நாட்கள், பத்து நாட்கள் என்று. ஆனாலும், இப்பொழுது அப்படி இருப்பதே இல்லை. ஏன் எதற்கு சொன்னேன் என்றால், நல் விதமாக ஆற்றல்களை பெற்று, திருத்தலங்களில் விழும் கிரகங்களின் ஆற்றல்களை கட்டி, இத்திருத்தலத்தில் பத்து, பதினைந்து நாட்கள் இருந்தால் அனைத்தையும் அழித்து விடுவோம். இதை எல்லாம் இப்பொழுது மறுத்துவிட்டார்கள் ஏன் என்றால், திருமண ஆசைக்காக திருத்தலங்களுக்கு வந்து என்னென்னவோ செய்கின்றான். அதனால் தான் அப்பனே! அனைத்தும் நாங்கள் முடிவெடுப்பதுதான் நடக்கின்றது என்பேன் அப்பனே! நாங்கள் முடிவெடுப்பது மனிதனுக்கு தவறாக தோன்றலாம். ஆனால் ஒருநாள் இது நிச்சயம் உண்மையாகவே மாறும்!
அடியவர்: என்றேனும் ஒருநாள், இந்த உடலைவிட்டு நான் சென்றபின் நடந்து ......
குருநாதர்: அப்பா! 30 வருடங்கள் 40 வருடங்களில் ஊறியது ஒரே நாளில் அழித்திட முடியுமா அப்பா?
அடியவர்: ஐந்து வருடங்களுக்கு முன் நிலைமை இப்படி இல்லை! இரண்டு வருடங்களுக்கு முன் சிவராத்திரி அன்று இறைவனை பார்க்காமல் திரும்பி வந்தேன்.
குருநாதர்: அப்பா! எங்கிருந்தாலும், இறைவனை நினைத்தாலே போதும். அதுவே சிவராத்திரி!
அடியவர்: அதனால் தான் அடியேன் இப்பொழுது எங்கும் செல்வதில்லை. எப்படியும் போங்கள்! உமக்கு என்று மனிதர்களை, அரசியல்வாதிகளையும், அறமில்லா துறையையும் வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.
குருநாதர்: அவர்களையும் தேர்ந்தெடுப்பது இறைவன் அல்லவா? நாங்கள் சித்தர்கள் அனைவரும் வந்து, அந்த நிலையில் யாரேனும் இருக்கிறார்களா என்று பார்த்தால், பக்குவப்பட்ட நிலையில் யாரும் இல்லையப்பா! அதனால், அடித்து, நொறுக்கி, கஷ்டத்தை கொடுத்து, பின் இறைவன்தான் என்றிருந்தால், நாங்கள் மேலே தூக்கி விடுவோம் அப்பா!
அடியவர்: இத்தனை கோடி மக்களில் ஒருவர் கூடவா இல்லை இம்மக்களில்!
குருநாதர்: இல்லையப்பா! அதனால் தான் வந்துவிடுகின்றோம்.
அடியவர்: நீங்கள் சரியாக பார்க்கவில்லை! புரிந்ததா?
குருநாதர்: என்ன யான் பார்க்கவில்லையா? அனைவருக்கும், திருமணம் வேண்டும், மனைவி வேண்டும், மனைவி வந்தால் பிள்ளைகள் வேண்டும்............
அடியவர்: இறைவன் முன்னாடி சென்று நிற்கும் பொழுது, இறை என்ன வேண்டும் என்று கேட்டால், எனக்கு நீ இருக்கிறாயே, வேறு எதுவும் வேண்டாம் என்று கூறுகிற மனமிருந்தால் போதுமே?
குருநாதர்: அப்படி யாரால் கூற முடியும்? இங்கிருப்பவரை கூறச்சொல்!
அடியவர்: யான் கூறியுள்ளேன், இறைவன் கேட்ட பொழுது.
குருநாதர்: திருமணமாகி, பிள்ளைகளும் பெற்றுவிட்டாய்....
அடியவர்: அந்த நேரத்தில் தான், திருமணம் முடிந்து, பிள்ளைகளையும் அடைந்த பிறகுதான் இறைவனிடம் சொன்னேன், எனக்கு நீ இருக்கிறாயே, எனக்கு எதுவுமே தேவை இல்லை என்று சொன்னவன் நான்.
குருநாதர்: எதுவுமே தேவை இல்லை என்று சொன்னதால்தான் உன்னிடத்தில் வந்து வாக்குகள் செப்பிக்கொண்டு இருக்கின்றேன்.
அடியவர்: அது வேறு விஷயம்! சற்றுமுன், அப்படி ஒரு மனிதர் கூட இல்லை என்று கூறியது தவறு என்று தெரிவிப்பதற்காகத்தான் இதை கூறினேன்.
குருநாதர்: :நிச்சயம் இல்லை அப்பா! கலியுகத்தில். எந்தனுக்கு எதுவும் தேவை இல்லை என்று நீ சொல்லலாம் அப்பனே! (உன்னை) விட்டுவிடு. இங்கிருக்கும் வேறு யாராவது சொல்லட்டும்!
[யாரேனும் சொல்கிறார்களா என்று பொறுத்து காத்திருக்க, எங்கும் மயான அமைதி!]
அடியவர்: திருவண்ணாமலையில் இறைவனை தரிசனம் செய்ய நான் தான் சென்றேன், நான் தான் ஆசைப்பட்டேன்.
குருநாதர்: அப்பனே! இதுவும் இறைவன் லீலை என்றே நினைத்துக்கொள் அப்பனே! நீ மிகவும் அலைந்திருப்பதினால்தான் ஈசன் விடவில்லை, வீட்டிலேயே இருந்துகொள் என்று. இப்படியும் நினைத்துக் கொள்ளலாம் அல்லவா? ஏனப்பா!
அடியவர்: கேட்டிருக்கணும்! மத்தவங்களை மாதிரி. அப்பொழுது தெரிஞ்சிருக்கும். (ஜானகிராமன் என்னவோ சால்ஜாப்பு சொல்ல போக) ஏய்! தமிழ் பாடத்துல நான் யூனிவர்சிட்டி முதல் ரேங்க் வாங்கினவன். ஆகவே என்னை தமிழில் பேசி ஏமாற்ற வர வேண்டாம். எல்லா அர்த்தமும் எனக்கு புரியும்!
குருநாதர்: அதை ஏற்படுத்தியவனே யான் தான் அப்பா! என்னிடத்தில் கற்றுக்கொண்ட வித்தைகளை எல்லாம் கேட்கின்றாயே அப்பா!
அடியவர்: எப்பொழுதுமே, (கற்பித்த) ஆசானிடம் தானே ஆயுதத்தை பிரயோகப்படுத்த முடியும்.
குருநாதர்: அப்பா! அதனால், நிச்சயம் தன்னில் கூட, மாணவனுக்கு என்ன கொடுக்கவேண்டுமோ, யாம் அறிவோம்!
அடியவர்: அதாவது, நான் கேட்ட கேள்விக்கான பதில் சரியாகவே இல்லை.
குருநாதர்: அப்பா! சரியாகவில்லை என்றால் மீண்டும் கேளப்பா, சொல்வதற்கு உன் ஆசான் இருக்கின்றான்!
[அகத்தியர் அடியவர்களே!
இந்த கேள்வியின் விவாதம் சென்ற விதத்தை சற்று கூர்ந்து கவனியுங்கள். கோவில்களில் நடக்கும் அட்டூழியங்களுக்கு நாம் தான் காரணம். ஆம்! ஆயிரம் ரூபாய் கொடுத்து ஸ்வாமியை பார்க்க தயாராகிறோம் என்ற பக்தர்களின் குணத்தை அறிந்த ஓநாய்கள் பிடியில் கோவில்கள் உள்ளது. இதற்கு சரியான பழி வாங்கல், என் வரையில் சொல்கிறேன். எந்த காரணம் கொண்டும் கோவில் உண்டியலில் பணத்தை போடாதீர்கள். இறைவன் கேட்பதே இல்லை. நீங்கள் செய்து கூட்டுகிற பாபங்களை ஆயிரம் ரூபாய் போட்டு அழிக்க முடியாது. பணம் போடுவதால்/கொடுப்பதால் ஓநாய்களுக்கு உணவளிக்கிறீர்கள். அவர்கள்தான் கைபோட்டு வாரி எடுத்துக் கொள்கிறார்கள். அறமில்லா துறையின் கோவில்களில் வைத்திருக்கும் உண்டியல்களில் அடியேன் காசு போடுவதே இல்லை. சுமார் 45 வருடங்களாயிற்று. இறை வழியில் எனக்கு இறைவன் எந்த குறையும் வைத்ததில்லை. சிறப்பாகத்தான் என்னை வைத்திருக்கிறார். இது என் கருத்து. உங்கள் விருப்பம், உங்கள் பக்கம்!]
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
