​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 3 February 2026

சித்தன் அருள் - 2093 - அன்புடன் அகத்தியர் - 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 8


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 8 (அறிவியல்  வாக்கு)

நாள் : 26/01/2026 (ஞாயிற்றுக்கிழமை) 
நேரம் : காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 
இடம் : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் , வேங்கிக்கால் , திருவண்ணாமலை 
நேரலை :-  https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=8h59m36s


==================================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் விஞ்ஞான வாக்கு 
==================================================

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன்  அகத்தியன். 

அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 8 (அறிவியல்  வாக்கு)

=============================================
# ஏன் 7ஆவது கூட்டுப்பிரார்தனையில் அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவர் இவ் ரகசியத்தை இவ்வுலகிற்கு உரைக்க வேண்டும் ? என்ன காரணம் ?
=============================================

குருநாதர் :- அறிந்தும், அப்பனே, அதனால்தான் பொறுத்திருந்தேன். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட மக்களுக்கு தெளிவில்லை என்றால், யான் என்ன சொன்னாலும் பிரயோஜனம் இல்லையப்பா. 

அடியவர் :-  ம். ஐயா, அதான் ஆறு கூட்டு பிரார்த்தனை

சுவடி ஓதும் மைந்தன் :-   அப்ப மக்களுக்கு புரியனும். 

அடியவர் :-   புரியனும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  புரியலைன்னா ? ? ? ? ?

அடியவர் :-   என்ன சொல்லி பிரயோஜனம் இல்லை. 

=============================================
# எப்படி மோட்சம் என்ற பால் கறக்க வேண்டும்? 
=============================================

குருநாதர் :- இதனால்தான், அப்பனே, நிச்சயம் ஒரு மாடுக்கு எவை என்று அறிய, அதாவது நன்காக தீனி வைத்து, பின் நன்றாக தடவி செப்பினால் தான், அப்பனே, புரியும் அப்பா.

அடியவர்கள் :- ( சிரிப்பு )

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப ஒரு மாட்டுக்கு என்ன பண்ணனும்? அதுக்கு என்ன தேவையோ, அதை கொடுத்து, இப்படி இப்படி தடவி, இப்ப சாப்பிடுறா, சாப்பிடுறான்னு சொல்லிட்டு, எல்லாத்தையும் எல்லாம் பண்ணி, கடைசில…. கடைசில புரிய வச்சாதான் புரியும். 

குருநாதர் :- அப்பா, அம்மா, நீ இதை முதலிலேயே யான் பின் நிச்சயம் எடுத்து வந்திருந்தால், ஏதோ நிச்சயம் பிணர்த்துகின்றான்….. என்ன….. என்றெல்லாம் நீங்கள் நிச்சயம் கண்டு காணாமல் சென்று விட்டு இருப்பீர்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :- அதாவது நான் முதலிலேயே இதை சொல்லி இருந்தேன்னா…. 

அடியவர் :- (முதல் கூட்டு பிரார்த்தனை, இரண்டாவது கூட்டு பிரார்த்தனையில்  சொல்லாமல் , ஆறு கூட்டு பிரார்த்தனை கழிச்சு, ஏழாவது தடவை தான் ஐயா, இந்த உண்மையை உணர்த்துறாங்க, சொல்றாங்க.) 

===========================================
# அடியவர்களுக்கு என்னென்ன தேவையோ, அதை எல்லாம் யாங்கள் கொடுத்து, இன்னும் உண்மைகள் சொல்வோம். 
===========================================

குருநாதர் :-  இன்னுமப்பா , இவர்களுக்கு  என்னென்ன தேவையோ, அவையெல்லாம் கொடுத்து, இன்னும் உண்மைகள் சொல்வோம். நிச்சயம் ஒரு பசு மாட்டுக்கு என்னென்ன எவை என்று அறிய, பின் எப்படி கொடுத்தால் பால் கொடுக்கும் என்பதெல்லாம் மனிதன் தெரிந்து வைத்திருப்பான். அது போல் உங்களை யாங்கள் தெரிவித்து, 

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( பலத்த சிரிப்புகள் , பலத்த கைதட்டல்கள் )

அடியவர் :- உங்களை எப்படி வழி கொண்டு வரணும்னு எங்களுக்கு தெரியும்பா. ஒரு பால்காரனுக்கு தெரியும். பசுமாட்டு வந்து எப்படி பால் கறக்குறதுன்னு, ரெண்டு லிட்டர், 10 லிட்டர் எவ்வளவு கறக்குறதுன்னு. 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப எப்படின்னு தெரியும். அதேபோல எங்களுக்கு தெரியும், எங்களுக்கு தெரியும். 

அடியவர் :-  உங்களை எப்படி வழி கொண்டு வரணும்னு, 

சுவடி ஓதும் மைந்தன் :- எப்படி வந்தேன்னு சொன்னா, அப்படித்தான். 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, புரியுதுங்களா? 

அடியவர் 3 :-  நாங்க லஞ்ச்ல வந்து கீழ போகும்போது, நானு ஜானகிராமன் ஐயா, சார், இவங்க எல்லாம், இதைத்தான் பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தோம். அதே ஒரு ஆறு வாட்டி, இந்த கூட்டு பிரார்த்தனைக்கு, நம்மளுக்கு சாப்பாட்டுக்கு, பாட்டு எல்லாம் போட்டு கொடுத்து, முதல் வாட்டிக்கே சாப்பாட்டுக்கு எல்லாம் யாரும் வரமாட்டாங்க இல்ல. அதனால இந்த இதெல்லாம் பக்குவப்படுத்தி, நம்மளுக்கு ஒரு மெச்சூரிட்டி லெவலுக்கு கொண்டு வந்து, இப்பதான் இந்த கதையை சொல்றாருன்னு பேசி இருந்தோம். அதை அப்படியே சொல்றாங்க. 

=============================================
# இந்த மனித பிறப்பாகிய சாம்பலை , ஒரு நிமிடத்தில் , இறைவனை அதாவது அந்த நெருப்பிழம்பை சென்று அடைய வைக்கும் அளவிற்கு, உங்கள்  ஆன்மாவிற்கு சக்தியை ஊட்டவேண்டும். அதை யாராலும் செய்ய இயலாது. நிச்சயம் சித்தர்களால் மட்டுமே சாத்தியம். 
=============================================

குருநாதர் :- அப்பனே, இதை என்று அறிய, அம்மையே, உங்களுக்கெல்லாம் நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு தான் நிச்சயம் நோய்களும் கூட இதைத்தான். நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, பின் ஒரு நிமிடத்தில், நிச்சயம் தன்னில் கூட பலமாக இதைத்தான் பின் அதாவது ஆன்மாவை மாற்ற வேண்டும். நிச்சயம் அதை யாராலும், நிச்சயம் எங்களால் மட்டுமே சாத்தியம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஒரு நிமிஷம் தான், அது யாராலும் பலமாக மாற்ற முடியும்? சித்தர்களால் மட்டும்தான். சித்தர்களால் மட்டும்தான் மாத்த முடியும். மத்தவங்க எல்லாம்…… 

குருநாதர் :- இதனால்தான் ஒன்றும் தெரியாமல் இருப்பவன், கடைசி வரை கஷ்டத்தையே அனுபவித்துக் கொண்டிருக்கின்றான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால உண்மை நிலை தெரியாம. கஷ்டம், இறைவன் எங்க, ஏதும் தேடினே இருக்கிறான்ப்பா. என்னப்பா? 

=============================================
# சித்தர்கள் நினைத்தால், சித்தர்களும் ஞானிகளும் இறைவனை அடைந்த பிறகு அங்கேயே நிலைபெற்று விடாமல், மீண்டும் இவ்வுலகிற்கு திரும்புவதற்கு காரணம் மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே. அவர்கள் உண்மை நிலையை மக்களுக்குத் தெரியப்படுத்தி வழிகாட்டுகின்றனர். தங்களின் ஆற்றலால் அவர்கள் நினைத்த போது இறை நிலைக்குச் செல்லவும் முடியும், மீண்டும் மக்கள் பணிக்குத் திரும்பவும் முடியும்.
==============================================

குருநாதர் :- இதனால்தான் சித்தர்கள், ஞானிகள், நிச்சயம், அதாவது ஒரு நிமிடம், நிச்சயம், பின் பயன்படுத்திக் கொண்டு, இறைவனை அடைந்து, நிச்சயம், பின் மீண்டும் அங்கு செல்லக்கூடாது. இங்கே மக்களுக்கு சேவையாற்றி, உண்மை நிலையை தெரிய வைத்து, மீண்டும், பின், அதாவது, வேண்டுமென்றால், மீண்டும் போய்விட்டு, மீண்டும் வருவோம் என்றெல்லாம், நிச்சயம், தன்னில் கூட. அதனால் எங்களால் செல்லவும் முடியும். மீண்டும் இங்கு வரவும் முடியும். பின், நிச்சயம். 

அடியவர் :-  விஞ்ஞானிகள். அவங்களால முடியும். எப்ப வேணாலும் நினைச்சா, போக முடியும். நினைச்சா, எவ்வளவு காலம் வேணாலும், இங்க தங்க முடியும். நினைச்சா, போக முடியும். இதற்குரிய விஞ்ஞானம் எங்களுக்கு தெரியும் என்று சொல்றாங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, புரியுதுங்களா? 

======================================
# புவியில் பிறந்தால் - குறைப்பா. குறை. 
======================================

குருநாதர் :- இதனால்தான் எது என்று புரிய, ஒரு ஒருவருக்கு ஏன் எது என்று புரிய, நிச்சயம், தன்னில் கூட. அதனால் மீண்டும் சொல்கின்றேன், இப்பொழுது யான் சொல்கின்றேன், நீங்கள் அடுத்தபடி சொல்லியாக வேண்டும். 

குருநாதர் :- புவியில் பிறந்தால், 

அடியவர் 3 :- துன்பம், கஷ்டம்.

குருநாதர் :- குறைப்பா. குறை. 

அடியவர் :-   குறை, 

அடியவர் :-  பூமியிலே வலு இழக்கின்றான் தான் இங்க விழுகிறான். வலு இல்லாதவன் தான் இங்க இருக்கிறவங்க எல்லாம். வலு இழந்த அவங்க தான். இதுல என்ன போட்டி? 

========================================
# சித்தர்கள் மனிதர்களுக்கு உதவி செய்ய, ஆன்மாவை வலுப்படுத்த  நேரம் எடுத்துக்கொள்ளும் அதே நேரத்தில் அவர்கள் அங்கும் இங்கும் ( மாந்திரிகங்கள், ஜோதிடர்கள், பிற நாடிகள் , பரிகாரங்கள், தேவையே இல்லாத பூசைகள் , வழிபாடுகள்  ….) என்று அலைந்து, வாழ்க்கையே வீணடித்து,  மீண்டும் கர்மத்தை சேர்த்து கொள்கின்றனர்.மோட்சமும் அடைவதில்லை. 
======================================== 

குருநாதர் :- இதனால்தான் சித்தர்கள், பாவங்கள், பாவம் என்று மனிதனை எண்ணி, நிச்சயம், தன்னில் கூட, யாங்கள் பின் ஏதாவது செய்து, நிச்சயம், உங்களைப் பின் வலுப்படுத்தி, பின் செய்யலாம் என்று நேரங்கள் எடுத்துக் கொள்கின்றோம். ஆனால் அதற்குள்ளே, நீங்கள் அங்கும் இங்கும் அலைந்து, பின் வாழ்க்கையே வீணடித்து, மோட்சமும் அடைவதில்லை. கஷ்டம், கஷ்டமே வாழ்க்கை. 

அடியவர் :- (ஆமா, பொறுமை இல்லை. அவங்க இறைவன் நம்மை திருத்துவதற்கு தயாரா இருக்காங்க. நம்ம அதுக்குள்ள பொறுமை இல்லாமல், சில தீய இடங்களுக்கு சென்று, அந்த இறைவன் நாம செய்யறதுக்கு ஏத்த மாதிரி பலனை கொடுக்கிற மாதிரி, நம்ம அதை மீண்டும் மீண்டும் வலுப்படுத்தாம, அதை கர்மாவை ஏத்தி, என்ன பண்றோம்? இங்க புடிச்சு, இங்க உட்கார்ந்துக்கிறோம். )

==========================================
# ஞானிகளை பிடித்துக் கொண்டு இருக்கின்ற பொழுது, நிச்சயம் இவ் துகளானது வலுபெறும் சிறிது சிறிதாக.
==========================================

குருநாதர் :- அதனால்தான் ஞானிகளை பிடித்துக் கொள்கிறார்கள் சிலர். ஞானிகளை பிடித்துக் கொண்டு இருக்கின்ற பொழுது, நிச்சயம், தன்னில் கூட மீண்டும், அதாவது, இவ் துகளானது வலுபெறும் நிச்சயம், தன்னில் கூட சிறிது சிறிதாக, 

அடியவர் :-  அதான். குருவருள் இல்லாம, இறைவனை காண முடியாது. திருவருள் கிடையாது. ஞானிகளை கெட்டியா நாம பிடிச்சுக்கணும். ஏன்னா, இறைவன்ட்ட இருந்து தான் வந்திருக்கோம். பட், இறைவனை நம்மளால பார்க்க முடியாது. ஒன்னும் பண்ண முடியாது. குருவினுடைய துணை இல்லாமல், ஞானிகளுடைய துணை இல்லாமல்  , அதான் சொல்லிட்டாங்க தெளிவா. 

==============================================
# சித்தர்களே விரும்பி மனிதர்களுக்கு சேவையாற்றுகின்றார்கள்.
==============================================

குருநாதர் :- அதனால் அப்பனே, நீங்கள் விரும்பவில்லை. யாங்களே, நிச்சயம், விரும்பி வந்து, உங்களுக்கு சேவையாற்றுகின்றோம். அவ்வளவுதான். நிச்சயம், தன்னில் கூட, பின் இங்கு ஏது புண்ணியம், பாவம் சொல்லுங்கள். நீங்களே? 

அடியவர் :-  ஆமா, நீங்க எங்களை தேர்ந்தெடுக்கல. நாங்க உங்களை தேர்ந்தெடுத்திருக்கிறோம். வழிநடத்துறதுக்கு.

சுவடி ஓதும் மைந்தன் :-  நாங்கள் வந்திருக்கிறோம். நீங்க இன்னும் வணங்கியே வாடாப்பா. வாடாப்பா, நீங்க ஒன்னும் அது இல்ல. நாங்க உங்களுக்கு தெரியாததை… 

அடியவர் :-  சொல்லித் தர வந்திருக்கிறோம். சொல்லித் தர வந்திருக்கிறோம். இதுல பாவம், புண்ணியம் எங்கப்பா இருக்குன்றாங்க. 

===============================================
# அப்பனே, தாயே சிந்தியுங்கள் - பாவம், புண்ணியம் ஏதடா? எங்கே? 
===============================================

குருநாதர் :- அப்பனே, அனைவரும் சொல்ல வேண்டும், பாவம், புண்ணியம் ஏதடா? தாயே, எங்கே? 

சுவடி ஓதும் மைந்தன் :-  இப்ப, நீங்க சொல்லலாம், பாவம், புண்ணியம் இங்க எப்படி செயல்படுதுன்னு நீங்க சொல்லலாம். சொல்லுங்க, ஐயா.

அடியவர் 4 :- இங்க இல்லையே 

சுவடி ஓதும் மைந்தன் :- இங்க எங்க பாவம்? புண்ணியம் இருக்குது? 

=======================================================
# பாவம் புண்ணியம் - இறைவனிடம் - நெருப்பு பிழம்பு இடத்தில்…
======================================================= 

குருநாதர் :- எது என்று அறிய, பின் அதாவது, அங்கேயே விட்டு, பின் மீண்டும், நிச்சயம், தன்னில் கூட, அங்கேயே தான் சேர்க்கின்றாய். இப்பொழுது புரிகின்றதா? போகன் சொல்வதை? 

சுவடி ஓதும் மைந்தன் :-  (இதற்கு முன்னர் ) போகர் சித்தர்  சொல்றது புரியுதா? எங்க புண்ணியம் எல்லாம் எங்க இருக்குது? 

அடியவர்  :- (நெருப்பு பிழம்பு இடத்தில்) அங்கேயே தான் இருக்குது

=========================================================
# செய்யும் பாவமும் , புண்ணியமும் எங்கு உள்ளது ?
# பாவமும் , புண்ணியமும் நெருப்பிழம்பு அங்கேயே பதிவு ஆகிக்கொண்டு உள்ளது 
===========================================================

சுவடி ஓதும் மைந்தன் :- அங்கேயே தான் இருக்குது. இங்க விட்டு, உடனே அங்க போயிடுறோம். அங்க போயிடுறோம். அப்ப, எங்க போய் சேவ் (save )  ஆகுது? அங்கதான் சேவ் ஆயிட்டு இருக்கு. எல்லாம் அங்க சேவ் ஆயிட்டு இருக்குது. வந்து, 

குருநாதர் :- இதனால் புண்ணியத்தை யார் அளிக்க முடியும்? சொல்லுங்கள், தாயே?

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப, புண்ணியத்தை யார் உங்களுக்கு அளிக்க  முடியும்னா, 

அடியவர்  :- இறைவன் தான் கொடுக்க முடியும். அவர் மட்டும் வேற வழியே கிடையாது. 

சுவடி ஓதும் மைந்தன் :- வேற வழியே இல்லை, கிடையாது. அப்ப, யார் அளிக்கணும்? 

அடியவர் :-  இறைவன் தான் கொடுக்கணும். 

சுவடி ஓதும் மைந்தன் :- மேல இருக்கிறவன் மட்டும்தான். 

===========================================
# இறைவனிடம் சென்று வர - சித்தர்களுக்கு மட்டுமே தெரியும்.
===========================================

குருநாதர் :- இதனால்தான் அங்கு போய் போய் வர சித்தர்களுக்கு மட்டுமே தெரியும். நிச்சயம், தன்னில் கூட மனிதனுக்கு யாருக்கும் தெரியாது. 

============================================
# சித்தர்கள் சிறிது பொறுத்திருங்கள் என்று சொல்வதன் பின்னால் உள்ள ரகசியங்கள் … எப்படி உங்களுக்கு புண்ணியங்கள் வந்து சேர்கின்றது.?
============================================

குருநாதர் :- அதனால்தான், நிச்சயம், சிறிது பொறுத்திருங்கள். சிறிது பொறுத்திருங்கள் என்றெல்லாம் அங்கு சென்று எடுத்து வந்து, பின் இறைவனிடத்தில் எது என்று கூட மன்றாடி, உங்களுக்கு சில சில புண்ணியங்கள் யாங்கள் தருகின்றோம். அதனை வைத்து பிழைத்துக் கொள்ளலாமே தவிர, நிச்சயம், தன்னில் கூட.

அடியவர் :-  பெருங்கருணை, பெருங்கருணை. 

சுவடி ஓதும் மைந்தன் :- (அதனால, நாம அங்கே போக முடியாது. சித்தர்களால் மட்டுமே அங்கே சல்லுன்னு போக முடியும், வர முடியும், வர முடியும்.) 

சுவடி ஓதும் மைந்தன் :-  புண்ணியத்தை எடுத்து போக முடியும். ஆமா, வர முடியும். பொறுத்திருன்னு சொன்னாங்க. ஒவ்வொருத்தருக்கும் வாக்குல அப்படின்னா, நாங்க மேல போறோம். இறைவன்ட்ட உங்களுக்காக மன்றாடுவோம். சில புண்ணியங்களை வாங்கிட்டு வரோம். உங்களுக்கு கொடுக்கிறோம். அதை வச்சு கொஞ்சம் பொழைச்சுக்கோங்க. பொறுத்திருக்கணும். 

=============================================
# சிதம்பர ரகசியம் - நடராச பெருமான் காலை தூக்கி ஆடும் ரகசியங்கள்…. 
=============================================

குருநாதர் :- இதனால்தான் நடராசன் எதற்கு காலை தூக்கி ஆடுகின்றான்? புரிகின்றதா? இப்பொழுது? 

சுவடி ஓதும் மைந்தன் :-  எதுக்காக ஆடுகிறார் தெரியுதா? இப்ப அவர் ஆடுறதே….. 

அடியவர் :-  (பிரபஞ்சத்தின் ) இயக்கத்திற்காக தான் 

சுவடி ஓதும் மைந்தன் :- ஆடுவது னால தான், இங்க இங்க (கிரகங்கள்) நிக்குது. இயக்கமே இல்லைன்னா எல்லா கிரகங்களும் நின்னு போயிடும். 

அடியவர் :- நின்றும் சுழற்சி நின்றும். முடிஞ்சது. 

==============================================
# கிரகங்கள் எல்லாம் ஈசன் பற்றியே புகழ்கின்றது. 
==============================================

குருநாதர் :- கிரகங்கள் எல்லாம் ஈசன் பற்றியே புகழ்கின்றது. 

சுவடி ஓதும் மைந்தன் :- கிரகங்கள் என்ன ஆகுது? ஈசனை பற்றியே புகழ்கிறது. ஆமா.

==============================
#  சிவ சக்திக்கு என்ன அர்த்தம்?
==============================

குருநாதர் :- நிச்சயம் எதற்காக புரிகின்றதா? நிச்சயம், தன்னில் கூட. இதனால்தான் பின் எவை என்று கூற? சிவ சக்திக்கு என்ன அர்த்தம்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  சிவசக்திக்கு என்ன அர்த்தம்? 

அடியவர்கள்  :- (அனைவரும்   அமைதி..சிந்தனைகள்…. )

=================================
# சக்தி = சாம்பல். சிவம் = நெருப்பு.
=================================

குருநாதர் :- அப்பா, நிச்சயம் சக்தியை சாம்பலாக வைத்துக்கொள். பின் நிச்சயம் தன்னில், பின் அதாவது சிவனை என்னவாக வைத்துக் கொள்வாய்? 

அடியவர் :-  நெருப்பு 

குருநாதர் :- எது என்று கூற அப்பா, சிவப்பு. அதனால்தான் சிவசக்தி. சிவப்பு, 

அடியவர் :-   நெருப்பு, சிவப்பு, 

சுவடி ஓதும் மைந்தன் :-  சிவ சக்தி. சக்தி. சி என்பது என்ன? 

அடியவர் :-   சிவப்பு, சிவப்பு, சிவம். ஒளிப்பிழம்பு 

சுவடி ஓதும் மைந்தன் :-  சா என்பது? 

அடியவர் :- சக்தி. சாம்பல். 

அடியவர் :-   சாம்பல், சிவசக்தி. சி..சா… சிசா, சிவம், சிவப்பு. 

============================================
# சித்தர்கள் தவிர வேறு யாராலும் மோட்சம் அளிக்க முடியாது மனிதனுக்கு.
# சித்தர்களை மட்டும் நம்புங்கள். மனிதர்களை நம்பாதீர்கள். 
============================================

குருநாதர் :- பின் எவை என்று புரிய அப்பனே, புரியாமல் இருந்து விடாதீர்கள். இருந்து விடாதீர்கள். அப்பனே, இப்படி நிச்சயம் பின் புரியாமல் இருந்துவிட்டால், மற்றவர்கள் நிச்சயம் சுலபமாக ஏமாற்றி விடுவார்கள் என்பேன். அப்பனே, எதைத்தன் உணர அப்பனே, இதனால் மனிதனால், அப்பனே, நிச்சயம் காக்கவும் முடியாது என்பேன் அப்பனே, மனிதன்  மனிதனை. 

===========================================
# முக்திக்கு அழைத்து செல்வதாக சொல்லும் மனிதன் - மிகப்பெரிய திருடன்.
===========================================

அடியவர் :-  அதான் உண்மை புரிய வச்சுட்டாங்க. நமக்கே எல்லா பேருமே வந்து வலுவிழந்து போய் கிடக்கிறோம். இதுல ஒருத்தன் வந்து உன்னை வந்து நான் எல்லாத்தையும் உனக்கு கூட்டிட்டு போறேன்னா, எவ்வளவு பெரிய பிராடு அவன். அதான் சொல்றாங்க. 

=========================================
# பொய் :- பணங்கள் வரும்  என்று சொல்லும் அனைத்து மந்திரங்களும்.
========================================= 

குருநாதர் :-  அறிந்தும் யான் இங்கு சொல்கின்றேன் ஒன்றை நிச்சயம், தன்னில் கூட. இவ் மந்திரத்தைக் கூறு. உந்தனுக்கு பணங்கள் வரும் என்று அது பொய். 

சுவடி ஓதும் மைந்தன் :-  நான் உங்களுக்கு சொல்றேன், இந்த மந்திரத்தை சொன்னீங்கன்னா பணம் வரும். அது என்னது? 

அடியவர் 3 :-  பொய்.

சுவடி ஓதும் மைந்தன் :-  பொய். 

=========================================
# பொய் :- நோய்கள் போகும்   என்று சொல்லும் அனைத்து மந்திரங்களும்.
========================================= 

குருநாதர் :-  எது என்று அறிய நோய்கள் போகும், இவ் மந்திரத்தை சொன்னால் என்று அதுவும் பொய். ஏனென்றால் பின் பொய் சொல்கின்ற மனிதனுக்கு நிச்சயம் பின் எவை என்று அறிய உண்மை சொல்ல தெரியுமா என்ன? 

அடியவர் :- ஒரு தடவை வாய் திறந்துட்டான். அவ்வளவுதான். பொய்தான், பொய் 

============================================
# பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த, புலவர் பெருமானே.
=================================================

சுவடி ஓதும் மைந்தன் :-  ஒரு தடவை பொய் சொல்லிட்டான்னா, கடைசி வரைக்கும் பொய்தான். கடைசி வரைக்கும் பொய்தான். அதான் ஒரு பழைய பாட்டு கேட்டுக்கிறேன். “பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே. உம்மை புரிந்து கொண்டாள். உண்மை தெரிந்து கொண்டாள்.”  ஐயா, புரியுதுங்களா? 

=====================================
# ஒரு நிமிட மனித வாழ்க்கையே எவ்வளவு கடினம் ?
====================================

குருநாதர் :-  எவை என்று அறிய, அறிய இதனால் நிச்சயம் பின் அதாவது தான் தான் அவ், எது என்று புரிய என்ன அனுபவிக்க வேண்டுமோ, அதை அனுபவித்து தான் ஒரு நிமிடத்தில் சென்று விடுகின்றது. ஆனால் அதை நீட்டிக்க அவ் ஒரு நிமிடமே எவ்வளவு என் கடினம் என்பது பார்த்துக் கொள்ளுங்கள். மனிதனால் பின் அவ் ஒரு நிமிடத்தில் மனிதன் என்ன செய்யப் போகின்றான்? 

அடியவர் :- ஒன்னும் பண்ண முடியாது. சித்தர்கள் எல்லாம் ஏதாவது பண்ணனும். 

============================================
# உயர் சக்திகள் மிகுந்த திருத்தலங்கள் - சிதறிக் கிடக்கின்றது.
# அவையெல்லாம் சீர்படுத்தினால், நிச்சயம் கஷ்டங்கள் விலகும் 
============================================

குருநாதர் :-  இதனால் இன்னும் கூட எது என்று கூட சிதறிக் கிடக்கின்றது. திருத்தலங்கள் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் அவையெல்லாம் சீர்படுத்தினால், அங்கெல்லாம் பின் உயர் சக்திகள் இருக்கின்றது. நிச்சயம் கஷ்டங்கள் போகும் பின். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப இன்னும் நிறைய சிவாலயங்கள் இருக்குது. 

அடியவர் :-  (சக்தி வாய்ந்த திருத்தலங்கள்  யாரும் போக முடியாம இருக்கு.)

சுவடி ஓதும் மைந்தன் :-  யாரும் போக முடியாம இருக்கு.அதையெல்லாம் சீர்படுத்தினால், இன்னும் சக்திகள் எல்லாம் அதிகமாகி உங்களுக்கு நல்லது நடக்கும். அவ்வளவுதான். 

அடியவர் :- அங்க  போக முடியல. நமக்கு சக்தி இல்லைன்றாங்க, அங்க போக.

சுவடி ஓதும் மைந்தன் :-  போக நம்மளுக்கு சக்தி இல்லை. அவங்க சக்தி வாய்ந்த திருத்தலங்கள்  இருக்கு. நமக்கு அங்க போக சக்தி இல்லை. 

=========================================
# ஒருவனை உயர்த்தினால் நிச்சயம் அவ் திருத்தலங்களை சீர்படுத்துவான். 
# அனைவரும் செல்லலாம். இதனால் உயர்ந்து நிற்பீர்கள் நீங்கள்.
# இதுதான் எங்களுடைய வேலையே தவிர, தனி வாக்கு சொல்வது அல்ல.
==========================================

குருநாதர் :-  அப்பனே, எதை என்று கூறிய அதனால்தான் ஒருவனை உயர்த்தினால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் அவ் திருத்தலங்களை சீர்படுத்துவான். அனைவரும் செல்லலாம். இதனால் உயர்ந்து நிற்பீர்கள். நீங்கள் இதுதான் எங்களுடைய வேலையே  தவிர நிச்சயம் தன்னில் கூட ஒருத்தனுக்கு தெரிவித்து எவ்வாறு ஒன்றும் ஆகப்போவதில்லை. மீண்டும் சித்தன் இல்லை. பொய் என்றுதான் சொல்லப் போகின்றான். 

அடியவர் :-  எல்லா பேருக்கும் தெரியனும். உண்மை நிலை 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஒருத்தர் யாராவது ஒரு பெரிய ஆளை தூக்கி, யாரோ ஒரு நல்ல ஆன்மீகவாதி தூக்கிவிட்டு அந்த திருத்தலங்களை என்ன பண்ணுவாங்க? சீர்படுத்துவாங்க. . இதுதான் நாங்க செய்ய முடியும். இதுதான் நாங்க பாடுபட்டு கொண்டு  இருக்கிறோம். அதை செஞ்சுட்டாங்கன்னா நீங்க என்ன போவீங்க? அங்க அங்க போய் சக்தி வாங்கிக்கிறீங்கன்னா உங்களுக்கு என்ன புரியும்?

அடியவர் :-  (இறைவனிடம் - நெருப்பிழம்பிடம் ) மேல போயிடலாம். 

சுவடி ஓதும் மைந்தன் :- டைரக்டா மேல தட்டி, மேல போயிடலாம். மேல போயிடலாம். 

===================================
# பாடல் பெற்ற ஸ்தலங்கள் சென்று - நால்வர்கள் பாடல்களை பாடி பாடி - சக்திகளை ஏற்றும் மனிதன் உண்மை தெரிந்து கொள்வான் என்று பாடி வைத்தார்கள்.
===================================

குருநாதர் :-  எவை என்று அறிய எத்தனை பாடல் பெற்ற ஸ்தலங்கள் நிச்சயம். அதனால்தான் நால்வர்கள் சென்று அப் பின் பாடல்களை பின் பாடி பாடி, சக்திகளை நிச்சயம் தன்னை கூட இங்கு வந்தால் மனிதன் உண்மை தெரிந்து கொள்வான் என்று பின் அப்பப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்பதான் பாடல் பெற்ற திருத்தலங்கள் இருக்குல்ல. அந்த இடத்துக்கு போயிட்டு இதை வந்து பாட்டு பாடி சக்திகள் புகுத்து இங்க வந்தான்னா 

அடியவர் :-  மனுஷன் சக்தி வாங்கிடுவான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அவன் சக்தி வாங்கிடுவான். தெளிவு பெற்று வருவான். மேல போயிடலாம். மேல போயிடலாம். ஆனால் இன்றைய நிலை…. 

அடியவர் :- போக முடியல. 

சுவடி ஓதும் மைந்தன் :-  போக முடியலை. 

============================
# சித்தர்களின் நிலைப்பாடு :-  அரச பதவிலே ஒருவனை மேலானவனாக வைத்து, திருத்தலங்களை  மாற்றி வைப்போம்.
===========================

குருநாதர் :-  நிச்சயம் இதனால்தான் எப்படியோ யாங்கள் முயற்சி எது என்று புரிய நிச்சயம் பின் அரச பதவிலே ஒருவனை மேல்வனாக வைத்து அவை தன் மாற்றி வைப்போம். இப்படித்தான் முடிவெடுத்திருக்கின்றோம் யாங்கள். 

=====================================
# பொய்யிலே பிறந்து , பொய் பரிகாரம் சொல்லும், பொய் புலவர்கள் 
# திருத்தலத்திற்கு சென்றால் மட்டுமே சக்திகளை கூட்டமுடியும்.
=====================================

குருநாதர் :- மற்றவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின் வருவோர்கள் எல்லாம் பொய்யாகவே, பொய் புலவர்களே வருவார்கள். நிச்சயம் இவ் கிரகத்திற்கு அதை செய்தால் நன்று. இதைச் செய்தால் நன்று. எவை என்று இவ் மந்திரத்தை செப்பு என்று. ஆனால் கடைசியில் பின் நிச்சயம் தன்னில் கூட எவரும் திருத்தலத்திற்கு செல்லப் போவதில்லை. ஏனென்றால் ஒன்றும் நடக்கப்போவதில்லை. அப்படி பின் எதை என்று கூற இறைவனை எப்படி நீங்கள் நம்புவீர்கள்? மனிதன் எப்படி நம்புவான்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப வரப்போறவங்க , எல்லாம் என்ன பண்ணுவாங்களாம்? பொய்தான். 

அடியவர் :-  பொய் தான் சொல்லுவாங்க எல்லாம். 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்படி செய்யலாம், இப்படி செய்யலாம். ஆனால் அப்ப என்ன பண்ணுவாங்க? இதெல்லாம் செஞ்சுட்டு யாருமே வந்து ஒன்னும் நடக்கலன்னா என்ன பண்ணுவாரு? இறைவனை தான் திட்டுவாங்க. ஒன்னும் நடக்கலன்னு சொல்லிட்டு. ஆனால் எங்கள் முயற்சி வேறப்பா. என்ன முயற்சி? அரச பதவியில ஒரு ஆன்மீகவாதி வச்சு….. 

================================
# மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து திரிந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் விடிவு காலம் நெருங்கிவிட்டது.
================================ 

குருநாதர் :-  இது என்று அறிய, அப்பொழுது நீங்கள் எல்லாம் இங்கு திரிந்து கொண்டிருக்கின்றீர்களே, உங்களுக்கும் விடிவு  காலம் வந்துவிடும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்போ ஒருத்தரை, நீங்க எல்லாம் இங்க ஆன்மீகம் திரிஞ்சுட்டு இருக்கிறோம்ல. எல்லாத்துக்கும் ஒருத்தரை, ஒரு பெரிய ஆன்மீகவாதி உட்கார வச்சாதான் உங்களுக்கெல்லாம் விடிவுகாலம். உங்களுக்கு தேவையான விஷயங்கள் எல்லாம் கிடைக்கும். உங்களுக்கெல்லாம் என்னென்ன ,எல்லாமே கிடைக்கும்பா. 

==================================
# குருநாதர் :-  பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன்.
==================================

குருநாதர் :-  எதை என்று ஒரு பக்திமான்கள் எப்படி இருக்கின்றார்கள் என்று பார்த்துக் கொள்ளுங்கள். பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- நான் பக்திமான் எல்லாம் பார்த்தா எப்படி தெரியுமா? இருக்கிறாங்க வந்து கஷ்டத்துல நான் பார்த்துட்டு தான் இருக்கிறேன். அது எப்படி? 

குருநாதர் :-  எவை என்று புரிய, இதனால் நிச்சயம் எது என்று புரிய, இவை மாற்றுவதற்கு சித்தர்கள் யாங்கள் இருக்கின்றோம். இதனால் பாவம் புண்ணியம் என்பது நிச்சயம் மீண்டும் எவை என்று சொல்லுங்கள் நீங்களே ?

அடியவர் :-  இறைவனிடத்தில் 

சுவடி ஓதும் மைந்தன் :-  பாவம் புண்ணியம் என்பது நம்ம கையில இல்லை. இறைவனிடத்தில் இருக்கிறது. அதனால இவர் பாவப்பட்ட ஜென்மம்பா. அவன் கீழே பிறந்துட்டான்ப்பா. பாவப்பட்ட ஜென்மம் அது பொய். ஐயா, புரியுதுங்களா? 

அடியவர் :-  முழுப்பொய். 

==================================================
# அன்பு குருநாதர் இவ் ரகசியத்தை கண்டுபிடிக்க பல,பல  யுகங்கள் தவம் செய்து கண்டுபிடித்துள்ளார்கள். 
==================================================

குருநாதர் :-  எதை என்று அறிய, அப்பனே, இதற்கு யான் அப்பனே, நிச்சயம் பின் சொல்லுவதற்கு எவை என்று அறிய இதற்கே, அப்பனே, பின் பல வழிகளில் கூட பல ஆண்டுகள். அப்பனே, பின் பல எதை என்று யுகங்களும் நிச்சயம் அப்பனே, பின் இதை கண்டுபிடிப்பதற்கே அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இதை அகத்தியர் கண்டுபிடிப்பதற்கு எத்தனை வருஷம்? பல யுகமாம். அதாவது  எப்படிடா பூமி இதெல்லாம் சுத்துது? எப்படிடா இதெல்லாம் பண்ணுது என்று தெரிய. 

========================================
# அன்பு குருநாதர் - பெருங்கருணை கடல் 
========================================

குருநாதர் :-  ஆனால் நீங்கள் சுலபமாக தெரிந்து கொண்டீர்கள் நிச்சயம் தன்னில் கூட. 

அடியவர் :-  நோகாம…

சுவடி ஓதும் மைந்தன் :-  நீங்க என்ன பண்ணீங்க? இதனால வந்து அவர் வந்து என்ன பண்ணாராம்? இது பல யுகங்கள் எல்லாம் நான் கண்டு எப்படிடா சுத்துது? பூமி எப்படிடா இது இயக்குது? துகள் எப்படி வந்துச்சு? எப்படி வந்தது? ஏன் சுத்துது? யாராவது கண்டுபிடிச்சுக்கிறாங்களா? சும்மா சுத்துமா? பூமி சும்மா? 

அடியவர் :- அது எது 23 டிகிரில சுத்துது. அது ஏன் 23 டிகிரில ஏன் சுத்துது? 

சுவடி ஓதும் மைந்தன் :-  இதெல்லாம் ஏன் சுத்துதுன்னா கண்டுபிடிச்சிருக்காங்க. இதுக்கு மேல ஒரு ஒளிப்பிழம்பு எரிஞ்சு கிட்டே இருக்கும். 

=============================================
# நெருப்பு பிழம்பு -  கடுகு போல் தான் தெரியும். 
=============================================

குருநாதர் :-  அப்பா, அது கண்ணுக்குத் தெரியாதா என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயம் தன்னில் அறிந்தும் புரிந்தும் கண்ணுக்குத் தெரியுமா என்றும் கேட்கலாம். ஆனால் அது பின் ஒரு பின் நிமிடத்திற்கு பின், அதாவது பல கோடி நிச்சயம் தன்னில் சுற்றி இருக்க, அதைத்தன் நிச்சயம் தன்னில் கூட ஒரு நிச்சயம் தன்னில் எது என்று கடுகு போல்தான் தெரியும். 

சுவடி ஓதும் மைந்தன் :- (அது பெரிய ஒரு பிளம்பு. அது ஒரு கடுகு மாதிரி தெரியும். ஒரு கடுகு போல தெரியும்.)

====================================
# இவ் ரகசியத்தை கண்டுபிடித்த மனிதன்,  ஏதோ என்று விட்டுவிட்டான் 
====================================

குருநாதர் :-  ஆனாலும் மனிதன் அதை நிச்சயம் கண்டுபிடித்து ஏதோ என்று விட்டு விட்டான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆனா கண்டுபிடிச்சிருக்காங்க. அதை வந்து விஞ்ஞானத்துல வந்து கண்டுபிடிச்சுட்டாங்க.

அடியவர் :-  அப்புறம் சூரியன் இல்ல. 

சுவடி ஓதும் மைந்தன் :- அது ஏதோ என்னடா இது? சிறிய அது என்ன ஆகுதாம்? 

அடியவர் :- கடுகு போல இருக்குது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  கடுகு போல இருக்குன்றாங்க. அதனால ஏதோ இருக்குதுடா. ஏதோ ஒருத்தரான்னு சொல்லிட்டு என்ன பண்ணிட்டான்? மனுஷன் விட்டான். 

===========================================
# மனிதர்கள் கண்டுபிடித்து அதை சொல்ல மறந்த அதுவும்   இறைவன் செயலே. 
===========================================

குருநாதர் :-  எதை என்று அறிய இதுவும் இறைவன் செயலே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இதுவும் இறைவன் செயல். இறைவன் செயலே. 

அடியவர் :-    அப்புறம் அது சூரியன் இல்லைங்களா, ஐயா? 

குருநாதர் :-  எது என்று புரிய அப்பா, ஏன்? எதற்கு? எவை என்று புரிய அப்பனே, எதற்காக இதை நீ எடுத்து வந்தாய் கூறு? 

சுவடி ஓதும் மைந்தன் :-  எதற்காக சூரியனை எடுத்து வந்தாய் ? 

அடியவர் :-  (இதுவரைக்கும் படிச்ச வரைக்கும், என்னன்னா குருநாதர் அருளால, அந்த சூரியனுக்குள்ள இருந்து ஈசன் இயக்குறாரு. அது, அதனுடைய இயக்கத்துல அணுக்களுடைய வெடிப்புல தான் வந்து , இந்த கிரகங்கள் உருவாச்சு. அந்த வெடிப்பின் போது உருவான ஆன்மாக்கள் தான் இது. குருநாதர் சொன்ன தத்துவத்தோடு ஒத்துப்போகுது. இறைவன் உள்ள ஒளிப்பிழம்பாக ஒளியாய் இருக்கிறார். நெருப்பு பிழம்பாக இருக்கிறார். அது வெடிச்சு சிதறுறப்போ சாம்பல் வந்து, சிதறி கிரகங்கள் ஆகுது. பெரிய சாம்பல் வந்து, பெரிய கற்கள் வந்து கிரகங்கள் ஆகுது. அந்த சாம்பல் வந்து, ஆன்ம துகள்கள். அது பூமியில வந்து அந்த கிரகங்களுக்குள்ள போய் அந்த ஈர்ப்பு சக்தியோட இல்லாம அது வந்து என்னன்னா பூமியில வந்து விழுந்துருது. இங்க பல பல கோடி பிறப்புகள் இருக்குது. )

குருநாதர் :-  எது என்று புரிய அப்பா, பின் இவ்வளவு யோசிக்கின்றாயே நிச்சயம் சூரியனே ஒரு கிரகம் தானப்பா. 

அடியவர் :-  புரியலைங்க, ஐயா. இதுவரைக்கும் அப்படித்தான் நினைச்சுட்டு இருந்தேன். பட் குருநாதர் ….

சுவடி ஓதும் மைந்தன் :-  சூரியனே ஒரு கிரகம் தான். ஒரு கிரகம் தான். ரைட். 

அடியவர் :- அப்புறம் இதுக்கு மேல புள்ளி போல இருக்குன்னு சொல்லி இருக்காங்க. 

அடியவர் :-  அப்பனா வேற விஷயம் ஒன்னு இருக்கு. ( அந்த நெருப்பு சூரியன் இல்ல ) 

=======================================
# அந்த பெரும் நெருப்பில் இருந்து தப்பித்து வந்தது தான் - சூரியன் 
=======================================

குருநாதர் :-  அப்பா, எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது இவையும் கூட பின் அதாவது பின் அதாவது பிழம்பில் இருந்து தப்பித்து வந்தது தான் சூரியன். 

அடியவர் :- அப்பா, ஓ ……!!!!!! 

சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த பெரிய நெருப்பு எரியுது பாருங்க. ஆமா, அதிலிருந்து தப்பித்து வந்தது தான் சூரியன்.

அடியவர் :-  (ஆச்சரியத்தில் ) சான்சே இல்ல. 

குருநாதர் :-  இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய, புரிந்து கொள்ளுங்கள். இன்னும் பின் அதாவது இப்பொழுது சொன்னாலும் இன்னும் பின் எதை என்று கூற பின் சில விஷயங்களை சொல்லிச் சொல்லி புரிய வைத்தால்தான் நிச்சயம் தன்னில் கூட. 

குருநாதர் :- அதாவது நிச்சயம் தன்னில் கூட இது பசும் எவை என்று கூட பின் எவை என்று அறிய பால் கறக்கின்றது. இதுபோலத்தான் நிச்சயம் தன்னில் கூட சிறு சிறுதாக பிள்ளையும், இன்னும் என்னென்ன தேவையோ அதையெல்லாம் கொடுத்து தான் அதுவும் சொல்ல முடியும். 

அடியவர் :- ஆமா, ஆமா. நம்மாட்டுக்கு பசுமாட்டுக்கு அகத்திக்கீரை புல்லு இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா கொடுத்து கொடுத்து பால் கறக்க பண்ணாங்கன்னு நடக்கும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆனால் சில விஷயங்கள் சொன்னா புரியாதுப்பா. 

========================================================
# பின் வரும் வாக்கின் சுருக்கம் :- "அப்பனே! உங்கள் ஆன்மா எது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்; அந்த ஆன்மாக்களாகிய யாங்களே (சித்தர்கள்/ஞானிகள்) உங்களோடு இருக்கிறோம். பிரபஞ்சத்தின் கிரகங்கள் தத்தமது வேகத்தில் சுழல்வதைப் போல, ஆன்மாக்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. உங்கள் ஆன்மாவை அழகாக மேன்மையுறச் செய்வதும், ஈர்ப்பதும் உங்கள் கைகளிலேயே (செயல்களிலேயே) உள்ளது. எனவே, ஆன்மாவை உணர நீங்கள் எத்தனையோ நன்மைகளைச் செய்ய வேண்டியுள்ளது. நன்மைகளைச் செய்து ஆன்மாவின் நிலையை அறியாதவரை, ஒரு மனிதன் மோட்ச நிலையை அடைவது என்பது நிச்சயம் சந்தேகத்திற்குரியதே."
==========================================================

குருநாதர் :-  அப்பப்பா, இதனால் உங்கள் ஆன்மா எது என்று புரிய, அப்பனே, யாங்கள் தான். அப்பனே, பின் அதாவது யாங்கள் தான். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எவ் கிரகத்தும் அப்பனே பல எவை என்று கூட வேகத்தில் நிச்சயம் தன்னில் கூட சுற்றிக் கொண்டிருக்கும். இதனால் நீங்கள் எவை என்று கூட உங்களை பொறுத்தே ஆன்மாவை அழகாக நிச்சயம் ஈர்த்து நிச்சயம் எவை என்று புரிய? அப்பனே, இதனால் அப்பனே எத்தனை எத்தனை நன்மைகள் நீங்கள் செய்ய வேண்டும்? எத்தனை எத்தனை? பின் அவ் ஆன்மாக்கள் எது என்று அறிய? நிச்சயம் தன்னில் கூட பின் மோட்ச கதையை அடைவது என்பது பின் நிச்சயம் மனிதன் நிச்சயம் சந்தேகமே. 

அடியவர் :- ஆமாங்க, ஐயா. ஏன்னா நம்ம ஒருத்தரே முடியலன்றீங்க. இதுல முன்னோர்களை வேற சேர்த்து கரை ஏத்தணும்ன்றீங்க. எல்லா பேருடையதும் மொத்தமா இருக்குறப்ப எப்படிங்கயா போக முடியும்? வாய்ப்பே இல்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால மோட்சம் என்பது ரொம்ப எளிது கிடையாது. ரொம்ப எளிதில் கிடைக்காது. 

அடியவர் :-  சித்தர்கள் அருள் இல்லாமல் ஒன்னும் பண்ண முடியாது. நகர முடியாது. 

==================================================
# சித்தர்கள் :- நாம் அனைவரையும் மோட்சம் அடைய வைப்பதில் பல சிரமங்கள் உள்ளது.
==================================================

குருநாதர் :-  எவை என்று புரியாததனால் நிச்சயம் புவியில் பிறந்தோர்கள் எல்லாம் நிச்சயம் பாவம் என்று, யாங்கள் இறங்கி வந்து, நிச்சயம் அவர்களுக்கு பக்குவம் ஊட்டி, நிச்சயம் சில கஷ்டங்களையும் போக்கி, நிச்சயம் எது என்று புரிய, பின் அடடா, பின் மேலோகத்திற்கு மீண்டும் பின் செல்ல வைப்பதில் அவ்வளவு சிரமம் உள்ளது. 

அடியவர் :-  கொடும்பாவிகள். அதனால பூமியிலே பிறந்ததெல்லாம் என்னது? இந்த ஈர்ப்பு விஷயத்தை தாண்டி, இங்கிருந்து நம்ம பிரிச்சு எடுத்துட்டு போகணும். இந்த பூமியிலிருந்து, வலுவிழந்த பூமியிலிருந்து, வந்து வலுவிழந்த ஆன்மாக்களை, சாம்பலை தூக்கிட்டு போகணும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  மேல சாம்பலை தூக்கிட்டு போறது என்பது எளிது கிடையாது. 

அடியவர் :-  ரொம்ப ரொம்ப கடினம். எளிதில் கிடையாதுன்றாருங்க அகத்தியர் வந்து 

=======================================
#   “அ”  என்று பின் “ன்” என்று  (“அ”கத்திய“ன்”)
=======================================

குருநாதர் :-  எதை என்று  புரிய எவை என்று அறிய, நிச்சயம் பின் எவை என்று புரிந்தும் கூட இதை ஏற்கனவே முன்னுரைத்து விட்டேன்.  “அ”  என்று பின் “ன்” என்று 

அடியவர் :- ம் 

சுவடி ஓதும் மைந்தன் :-   “அ” என்று , “ன்” என்று 

குருநாதர் :-  அறிந்தும் எவை என்று கூற, “அ” என்றும் “ழ்” என்றும் 

சுவடி ஓதும் மைந்தன் :-  “அ”  என்றும் “ழ்” என்றும். கடைசில “ழ்”

============================================
# ஆன்மாக்களை பக்குவப்படுத்துவது எல்லாம்  தமிழ் எழுத்துக்களில் உள்ளது. 
# குருநாதர் தமிழ் மொழியை கண்டுபிடிக்க காரணம் …ஆன்மாக்களை வலுப்பெற செய்யவே. 
============================================

குருநாதர் :-  இதை எவை என்று புரிய இதனால்தான் இவையெல்லாம் இவ் ஆன்மாக்களை பக்குவப்படுத்துவதெல்லாம் நிச்சயம் எது என்று அறிய பின் தமிழ் எழுத்துக்களே தமிழ் எழுத்துக்களிலே உள்ளது. 

அடியவர் :-  சூப்பர், ஐயா. திருப்பி தமிழுக்கு வந்துட்டாங்க.

சுவடி ஓதும் மைந்தன் :- இலக்கணத்துக்கு வந்துட்டாங்க, ஐயா. அதனாலதான் இலக்கணம் வகுத்தார் அவர். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப இதெல்லாம் வந்து இதை வந்து பலப்படுத்தனும். 

அடியவர் :-  பயங்கரமான ஒரு சூட்சுமம் இருக்கு. அப்பா, வேற லெவல். 

சுவடி ஓதும் மைந்தன் :-   ஆமா, இதை வந்து நல்லா வந்து திருப்பி வந்து அந்த பலம் ஏத்தனும். 

அடியவர் :-  அதுக்குத்தான் தமிழ் மொழி. இந்த ஆன்மத்துக்குள்ள வலு ஏத்துறதுக்கு தான், வந்து தமிழ் மொழியை குருநாதர் கண்டுபிடிச்சிருக்காங்க. 

======================================
# ஈசனாரிடம் அனுமதி பெற்றுத்தான், ரகசியங்கள்  இவையெல்லாம் சொல்ல வேண்டும். - அவன் அவன் அருளாலே அவன் தாள்  வணங்கி.
======================================

குருநாதர் :-  அதுதான் அப்பா அறிந்தும் புரிந்தும் எதை என்று அறிய இதனால் இவையெல்லாம் சொல்ல வேண்டும் என்றால் ஈசனிடம் பின் நிச்சயம் அதாவது எவை என்று அறிய அவனிடத்தில் நிச்சயம் முறையிட்டு தான் யான் மக்களுக்கு சொல்லலாமா என்று நிச்சயம். அதனால்தான் இங்கே அழைத்தேன். 

அடியவர் :- அப்பா, 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப ஒவ்வொரு ட்ரெயினும் வந்து 

அடியவர் :- உண்மை நிலை புரியணும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  உண்மை நிலை புரியணும்னா அதான் அவன் அவன் அருளாலே அவன் தாள்  வணங்கி. அவன் தாள் வணங்கி. உண்மை நிலை புரியணும். அதனால ஈசனிடம் அனுமதி வாங்கி இதை விஷயங்களை எல்லாம் வந்து சொல்ல... 

===========================================
# இவ் நெருப்பு பிழம்பை , வள்ளல் பெருமானும் கண்டுபிடித்தார். 
# கடைசியில் கடுகு போல் இருந்தது. 
# அதுதான் தெய்வம் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். 
===========================================

குருநாதர் :-  எது என்று புரிய, எது என்று அறிய, இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட. எங்கிருந்தாலும் நிச்சயம் தன்னில் கூட, அதாவது இன்னும் பின் அதாவது வள்ளல் பெருமான் நிச்சயம் தன்னில் கூட அவனும் ஒரு கண்டுபிடித்தான். கடைசியில் கடுகு போல் இருந்தது. அதுதான் தெய்வம் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஜோதி அருட்பெருஞ்ஜோதி. அப்ப என்ன பண்றாரு? அது கடுகு.. அவருக்கும் தெரிஞ்சது. அவரும் கண்டுபிடிச்சாரு. ஆமா, அவருக்குகடுகு தெரிஞ்சது. அதுதான்டா தெய்வம்னு சொல்லிட்டு போயிட்டாரு. அவ்வளவுதான். 

அடியவர் :-  ஜோதியில ஐக்கியம் ஆயிட்டாரு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஜோதியில ஐக்கியம் ஆயிட்டாரு. பார்த்தார், ஏதோ கண்டுபிடிச்சார். அவர் அப்புறம் விஞ்ஞானி தான். 

அடியவர் :-  ஆமா, அவர் பெரிய விஞ்ஞானி. பெரிய விஞ்ஞானி இருந்த இடத்துல அப்படியே மறைஞ்சிட்டாரு. 

சுவடி ஓதும் மைந்தன் :-   ம் 

=========================================
# கணித மேதை ராமானுஜம் அவர்களும் இவ் நெருப்பிழம்பு தெரிந்தது.
# பூஜ்ஜியம் தான் இறைவன் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். 
==========================================

குருநாதர் :-  எது என்று கூற இன்னும் ராமானுஜனும் எது என்று அறிய அறிய 

அடியவர் :-   ராமானுஜர். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ராமானுஜர் என்ன பண்ணாரு? 

அடியவர் :-  ம் 

சுவடி ஓதும் மைந்தன் :-   அவர் கணித மேதை. 


குருநாதர் :-  எது என்று அறிய, அவனும் எதை என்று கூற, எப்படி எவை என்று அறிய, ஆனால் அவனுக்கு தென்பட்டது ஒரு உருண்டை. நிச்சயம் பின் பூஜ்ஜியம் தான் இறைவன் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான். 

அடியவர் :-   கணித மேதை ராமானுஜத்தை பத்தி சொல்றாங்க. பூஜ்ஜியத்தை கண்டுபிடிச்சாருன்னு பாருங்க. ஆமா, ஆமா, 

அடியவர் 3:- (ஸ்ரீ)  ராமானுஜர் ??? 

அடியவர் :-  இல்ல, இல்ல. ராமானுஜன். ராமானுஜன் . (ஸ்ரீ) ராமானுஜர் கிடையாது. கணித மேதை ராமானுஜன். 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன பண்ணிட்டாரு? பூஜ்ஜியத்தை கண்டுபிடிச்சவர். பூஜ்ஜியத்தை என்ன பண்ணிட்டாரு? ஆனா அவர் ஏதோ கண்டுபிடிச்சாரு. எப்படிடா இருக்குது? ஏதுடா இருக்குதுன்னு சொன்னா அந்த ஒளிப்பிழம்பு என்ன ஆச்சு? ஒரு முட்டையா தெரிஞ்சிருக்கு. ஆனா நெருப்பு மாதிரி தெரியல. அவருக்கு வந்து , அப்ப இதுதான்டா உலகம்னு சொல்லிட்டு ஜீரோல தான் அடக்கம்டா. எல்லாமே ஜீரோ இல்லாம ஒன்னும் இல்லடான்னு சொல்லிட்டு அவர் என்ன பண்ணிட்டாரு? முட்டையை கண்டுபிடிச்சிட்டாரு. 

அடியவர் :- முட்டையை போட்டாரு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  முட்டையை போட்டாரு. 

அடியவர் :- அந்த ரெண்டு முட்டையை போட்டா இன்ஃபினிட்டி. (முடிவிலி / infinity)

==========================================
# அன்பு குருநாதர் அருளால் , கணித மேதை ராமானுஜரின் இறைவன் என்ற பூஜ்யம்  (0) மற்றும் இறைவனின் எல்லையற்ற வெளிப்பாடாகிய முடிவிலி ( இன்ஃபினிட்டி / infinity ) குறித்து ஒரு குறும் செய்தி , இவ் வாக்கின் முடிவில் பதிவிட்டுள்ளோம்.  படித்து உங்கள் ஞானத்தை மேலும் ஆழமாக்குக , அகலமாகுக.
==========================================

====================================
# தீப ரகசியங்கள் வாக்கு ஆரம்பம் 
====================================

குருநாதர் :-  இதை என்று அறிய இதனால்தான் எத்தனை எத்தனை எதை என்று அறிய ஏன் தீபத்தை ஏற்றுகின்றீர்கள் என்பது இப்பொழுது புரிகின்றதா? 

சுவடி ஓதும் மைந்தன் :-  இப்ப தீபத்துக்கு வந்துட்டாரு. இப்ப புரியுதா? ஏன் தீபம் ஏத்துறீங்கன்னு? எக்ஸ்பிளைன் பண்ணுங்க, ஐயா. கொஞ்சம் கொஞ்சம் நான் தண்ணி குடிச்சிக்கிறேன். 

அடியவர் :- நவகிரக தீபம் எதுக்காக ஏத்த சொல்றோம் அப்படின்றத. குருநாதர் ஓபன் பண்றாங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப ஏன் தீபத்தை ….

=======================================
#  பூமியில் , இங்கு நீங்கள் தீபம் ஏற்றினால் , வானில் உள்ள இறைவனின் பெரு நெருப்பு பிழம்பில் நீங்கள் ஏற்றும் தீபம்  சிறிதளவாவது அங்கு  படும். உங்களுக்கும் அவ் நெருப்பு பிழம்பிற்கும் தொடர்பு உண்டாகும். 
=======================================

குருநாதர் :-  அறிந்தும் புரிந்தும் அதாவது பல பல வேகத்தில் பின் அதாவது பின் பின் எவை என்று அறிய நிச்சயம் தன் நெருப்பு சுற்றிக் கொண்டிருக்கின்றது. நீங்கள் நிச்சயம் பூஜ்ஜியம், பூஜ்ஜியம். நீங்கள் ஏற்றினால் பூஜ்ஜியம், பூஜ்ஜியம் என்ற பின் அதாவது சிறு துளி நிச்சயம் அங்கு படும் அல்லவா?

அடியவர் :-  ம் 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, புரியுதுங்களா? உங்களை ஏன் தீபம் ஏத்த சொன்னா? ஒரு ஜீரோ, ஜீரோ மில்லியன் செகண்ட். ஐயா, புரியுது இல்லைங்களா? ஒரு மில்லி அளவாவது உங்களுக்கு வந்து என்ன பண்ணும்? அந்த அதனோட ஒளி வந்து அட்டாச் ஆகும்பா. அது எவ்வளவு பெரிய இது இருக்குது. அதனாலதான் என்ன பண்ணனும்? எல்லாரும் வந்து அதாவது…. 

அடியவர் :-  இந்த ஒன்பது கிரகங்களையும் வந்து தாண்டி இங்க வந்து விழுந்திருக்கிறோம். 

அடியவர் 4 :-   (மேடையின் கீழ் இருந்து ஒரு விளக்கம்……….. ) 

சுவடி ஓதும் மைந்தன் :- அந்த அம்மா கரெக்டா புரிஞ்சுக்கினாங்க. அம்மா, வாங்க, வாங்கம்மா. கரெக்டா புரிஞ்சுக்கினாங்க. அகத்தியர், சரியான பாயிண்ட் புடிச்சிட்டாங்க. 

அடியவர் 4 :-  ( மேடை ஏறினார்கள் )

அடியவர் 4 :- அது ஒரு பெரிய ஒளி பிளம்புல இருந்து, நம்ம ஒரு லைட் பார்டிகிள்ஸா வந்திருக்கோம். இங்க ஒரு சின்ன விளக்கு ஏற்றும் போது, இதனோட ஒளி அங்க படுறது. சோ, அது கனெக்ட் ஆகி நம்ம அங்க போய் சேர முடியும். 

சுவடி ஓதும் மைந்தன் :- கனெக்ட் ஆகுது. அப்ப எது  கனெக்ட் ஆகுது? 

அடியவர் 4 :-  நம்மளுடையதும் , அவங்களுடையதும். ( நாம் ஏற்றும் தீபமும் , அவ் நெருப்பு பிழம்புக்கும் ஒரு மிக நுண்ணிய தொடர்பு உண்டாகின்றது  )

சுவடி ஓதும் மைந்தன் :-   அப்ப கரெக்ட். அப்ப என்ன ஆகுது?  

=======================================
# ஏன் தீபத்தில் - அவசியம்  மூலிகைகளை இட்டு ஏற்ற வேண்டும் ?
=======================================

குருநாதர் :-  ஆனாலும் அதனுள்ளே சில பின் மூலிகைகள் இட்டு நிச்சயம் ஏன் பின் ஏற்றச் சொன்னேன் என்றால், நிச்சயம் எவை என்று அறிய, பின் இதனால்தான் 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதுல சில மூலிகைகள் இட்டோம்னா என்ன ஆகும்? அது இன்னும் என்ன ஆகும்? ஈர்ப்பு சக்திக்கு மேல அந்த ஈர்ப்பு விசை 

அடியவர் :- இந்த ஒளி இன்னும் மேல போகும். 

சுவடி ஓதும் மைந்தன் :- ஜாஸ்தியாகும்.  ஒளியை ஈர்ப்பு விசை ஜாஸ்தியாகும். 

===============================================
# மூலிகைகளை தீபத்தில் இட்டால் , கஷ்டத்தை சிறிதளவாவது நிச்சயம் நிவர்த்தி செய்து கொள்ளலாம். இதுதான் ரகசியம்.
===============================================

குருநாதர் :-  இதனால் உங்கள் கஷ்டத்தை சிறிதளவாவது நிச்சயம் நிவர்த்தி செய்து கொள்ளலாம். அவ்வளவுதான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  கொஞ்சமாவது. அப்ப என்ன பண்ணலாம்? 

அடியவர் :-   ஒளி வரும். இந்த ஒளி மேல போயி அங்கிருந்து ஒளி வருது. அதனால கொஞ்சம் கஷ்டம் (குறையும்). 

==========================================
# பல நன்மைகள் உண்டாகும் - ரகசியங்கள் 
==========================================

குருநாதர் :-  எதை என்று புரிய, இதனால் சரியாக தீபத்தை ஏற்றி அதில் கூட கிராம்பு , இன்னும் கூட, பின் பச்சை கற்பூரம் சரியானது. நிச்சயம் தன்னில் கூட இன்னும் நவதானியங்களும், நிச்சயம் தன்னில்  கூட எதை என்று கூற, பசையாக்கி நிச்சயம் தன்னில் கூட ஏலக்காய் தூளையும், இன்னும் கூட நல் விதமாக இன்னும் கூட பல பல வழிகளில் கூட பின் அதாவது எதை என்று புரிய பின் அதனை இன்னும் கூட எவை என்று அறிய. நிச்சயம் பின் அருகம்புல்லையும்  கூட இவையெல்லாம் இன்னும் அதாவது வில்வ இலைகளையும் கூட பசையாக்கி நிச்சயம் தன்னில் கூட அத்தீபத்தில் இட்டு எரிய வைத்தால் சிறிதளவாவது நன்மைகள் ஏற்படும். 

==========================================
# குருநாதர் ஒரு விசேஷமான தீப வழிபாட்டின் மூலம் நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் முறை இங்கு விளக்குகிறார்கள். தீபத்தில் கிராம்பு, பச்சை கற்பூரம், நவதானியங்கள், ஏலக்காய் தூள் ஆகியவற்றைச் சேர்ப்பதுடன், அருகம்புல் மற்றும் வில்வ இலைகளை அரைத்து பசையாக்கி அந்தத் தீபத்தில் இட்டு எரியச் செய்வதன் மூலம் வாழ்வில் பல நன்மைகள் ஏற்படும். 
========================================= 

சுவடி ஓதும் மைந்தன் :- அது கனெக்ட் பண்றதுக்கு 

அடியவர் :- அந்த ஒளியை கனெக்ட் பண்றதுக்கு, இவ்வளவு சூட்சமங்கள் சொல்லி இருக்காங்க. அந்த ஒளி, நவதானிய பொடி பசை போல ஆக்கணும். அருகம்புல், வில்வம், ஏலக்காய், பச்சை கற்பூரம், கிராம்பு எல்லாத்தையும் பசையாக்கி அந்த எரியுற எண்ணெயில போட்டு…….

==============================
# வில்வ மரத்தின் ரகசியங்கள் 
==============================

குருநாதர் :-  நிச்சயம் ஈசனுக்கு வில்வம் சமர்ப்பிக்கின்றீர்களே. ஏனென்றால் நிச்சயம் எது என்று புரிய. அதாவது நிச்சயம் எது என்று அறிய நெருப்பு பிழம்பை சுலபமாக பின் ஈர்க்கும். எது என்று அறிய பின் வில்வ மரம். 

அடியவர் :-  ம் 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப அந்த ஒளியை ஈர்க்கும். 

அடியவர் :-  வில்வம் ஏன் அந்த ஒளியை ஈர்க்கும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த ஒளியை ஈர்க்கும். ஈர்க்கும். அருகம்புல்லும் ஈர்க்கும். அருகம்புல்லும்  கூட ஈர்க்கும். 

=====================================
# வில்வ இலை போன்ற அவ் நெருப்பு தொடர்புடைய பொருட்களை நாம் , சாப்பிடுவதால் , பல விஷயங்களில் நன்மைகள் ஏற்படும். உண்மை நிலை தெரிந்து கொள்ளலாம். சித்தன் அருள் - 1066: வில்வத்தை உண்டால் ஈசனே பேசுவான் என்று அதன் மருத்துவ மற்றும் ஆன்மீக மகத்துவத்தை குருநாதர் குறிப்பிட்டுள்ளார்
=====================================

குருநாதர் :- இதனால்தான் அதற்கு தொடர்புடைய பொருட்களை நாம் உண்டினால் ( உணவு உண்டால் ) நிச்சயம் நம் தனக்கு பின் அருளும் எது என்று அறிய அறிய பல விஷயங்களில் நன்மைகள் ஏற்படும். உண்மை நிலை தெரிந்து கொள்ளலாம். இதனால்தான். 

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( கை தட்டல்கள் )

அடியவர் :-  அதான் அந்த உண்மை நிலை புரியறதுக்கு ஒளி ரொம்ப முக்கியம். இந்த இந்த மாதிரி நம்ம மூலிகைகளை பச்சை மூலிகைகளை சாப்பிடுறப்போ நிறைய ஒளிபட்டு உண்மை நிலைகள் புரியும். ஏன் வந்திருக்கோம்? எதுக்கு வந்திருக்கிறோம்? நான் யாருன்றது புரியும். 

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட இறைவனுக்கு சமர்ப்பிப்பவை நிச்சயம் அனைத்தும் தூளாக செய்து கொண்டு அறிந்தும் புரிந்தும் தீபம் ஏற்றுகின்ற பொழுது அதையும் அதில் இட்டால் நிச்சயம் தன்னில் கூட இதை இதன் நிச்சயம் இன்னும் கூட பின் சக்தி அதிகமாகும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  தேங்காய்…

அடியவர் :- ம் எல்லாம் அந்த இறைவனுக்கு படைக்கிறது. எல்லாமே, எல்லாமே ஒரு தாற்பரியம் இருக்குல்ல. வாழைப்பழம், தேங்காய், அருகம்புல், வில்வம், துளசி, வேப்பிலை, இந்த மாதிரி எல்லாம் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒரு ஒரு மூலிகை படைக்கிறோம். பாருங்க, இது எல்லாமே அர்த்தம் இருக்கு. ஆமா, எல்லாத்தையும் ஒன்னா சேர்த்து கூழாக்கி போடுறப்போ பவர்ஃபுல்… வேற லெவெல்…

===================================
# யாகசாலை - ஹோமம் ரகசியங்கள் 
===================================

குருநாதர் :-  எவை என்று புரிய, அப்பனே இப்பொழுது புரிகின்றதா ஏன் யாகசாலை வளர்க்கின்றோம் என்று ?

சுவடி ஓதும் மைந்தன் :-  இதுக்கு ஹோமம் பண்றோம்ன்றது இப்ப புரியுதான்னு கேக்குறாங்க. ஹோமம் பண்றோம் தெரியுதா? 

அடியவர் :-  ஏன்னா எல்லா மூலிகையும் 108 மூலிகை போடுறோம் பாருங்க.  அங்க அந்த ஒளியை ஈர்க்கிறதுக்கு தான் அந்த ஒளியை கொஞ்சமாவது ஈர்த்து, அங்க வந்திருக்கிறவங்க கொஞ்சம் பயனடையட்டும் என்று.

===========================================
# ஹோமத்தில் இடும் மூலிகைகளுக்கு சக்திகள் இருக்கின்றது. 
சில தொல்லைகள்,  உடம்பில் உள்ள சில அழுக்குகள் நிச்சயம் நீக்கப்படுகிறது.
=========================================== 

குருநாதர் :-  எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட இதனால் நிச்சயம் அவ் பின் மூலிகைகளுக்கு சக்திகள் இருக்கின்றது. இதனால் நிச்சயம் தன்னில் கூட சில தொல்லைகள், நிச்சயம் தன்னில் உடம்பில் உள்ள சில அழுக்குகள் பின் நிச்சயம் நீக்கப்படுகின்றது. 

அடியவர் :-  அது உள்ள போறப்போ, நம்ம என்னன்னா ஒளியும் ஈர்க்கும். அந்த உடம்பில் இருக்கக்கூடிய சில நோய்களை நீக்கக்கூடிய தன்மை இருக்கு. அந்த மூலிகைகளுக்கு என்று சொல்றாங்க. 

குருநாதர் :-  இதை தெரியாமல் மனிதன் இறைவன் இல்லை. எங்கு செல்கின்றீர்கள் என்றெல்லாம் பிணத்திக் கொண்டிருக்கின்றான் முட்டாள். அவனை விட நிச்சயம் கீழ்த்தரமானவன் எவனும் இல்லை. 

அடியவர் :- ஆமா, இதெல்லாம் ஒண்ணுமே புரியாம பேசுறீங்க.

சுவடி ஓதும் மைந்தன் :-  இதெல்லாம் புரியாம, இதெல்லாம் தெரியாம. 

அடியவர் :-  ம் இறைவன். ஆமா, இறைவன் இல்லாம இயக்கம் எங்க இருக்குது? ஏன் இங்க பிறந்திருக்கிறோம்? எதுக்காக வந்திருக்கிறோம்? பூமி சுத்தாம நின்னா என்ன ஆகும்? ஏதாவது யோசிச்சிருக்காங்களா? இறைவன் இல்லாம இதெல்லாம் நடக்குமா? 

==========================================
# யாக சாலையில் உள்ள சாம்பலில் , ஆகாயத்தில் உள்ள இறை நெருப்பு பிழம்பு அதன் சக்தி இறங்கி இருக்கும். எனவே அடியவர்கள் அதனை உடம்பெல்லாம் பூசிக் கொண்டு ஒரு மணி  நேரம்  கழித்து தூய நீரிலே நீராடினால், பல நன்மைகள் ஏற்படும். உடம்பு வலிகள் வராது. வயித்திய நிலை ஆகாது . நிச்சயம் எவ் நோயும் தாக்காது.
=========================================

குருநாதர் :-  எது என்று புரிய அப்பப்பா, யாகசாலை உள்ளதை நிச்சயம் தன்னில் கூட பின் உடம்பெல்லாம் பூசிக் கொண்டு பின் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் பின் கழித்து நிச்சயம் பின் அதாவது பின் எதை என்று ஒரு தூய நீரிலே பின் நீராடினாலே  பல நன்மைகள் ஏற்படும் அப்பா. உடம்பு வலிகள் பின் வராது என்பேன் அப்பனே. வயித்திய நிலை ஆகாது என்பேன் அப்பனே. நிச்சயம் எவ் நோயும் தாக்காது அப்பா.

அடியவர் :-  ம் இதுதான் போகர் பெருமான் அவங்களோட பரிகாரம் சொல்லி இருக்காங்க. 108 அந்த மூலிகை ஏகசாலையில் போட்ட அந்த மூலிகையை வந்து போட்டு குளிக்க சொல்லினாங்க. 

====================================
# நோய் தாக்காத மற்றொரு ரகசியம் - பசும் நெய்யில் அருகம்புல், வில்வம் மற்றும் துளசி ஆகிய மூலிகைகளை இட்டு, தீபத்தின் வெப்பத்தில் பக்குவப்படுத்தி, அதனை உட்கொள்வதன் மூலம் உடலில் உள்ள நோய்கள் நீங்கும் மற்றும் எவ்வித நோயும் தாக்காத நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். ஞானங்கள் பிறக்கும், பக்குவங்கள் பிறக்கும்
====================================

குருநாதர் :-  அது மட்டுமில்லாமல் மற்றொரு ரகசியத்தையும் சொல்கின்றேன். சரியாக பின் பசும் நெய்யை சரியாக எவை என்று அறிந்து கூட, இதனால் பல மூலிகைகளை பிள்ளையோனுக்கும் (அருகம்புல்) , இன்னும் கூட எது என்று அறிய நிச்சயம் வில்வத்தையும், இன்னும் இன்னும் துளசி இலைகளையும் கூட, நிச்சயம் தன்னில் கூட பின் நன்றாக நிச்சயம் பின் அதாவது பின் தீபத்திலே பின் சரியாக தீபம் எரியவிட்டு, அதிலே இட்டு, நிச்சயம் தன்னில் கூட, பின் சிறு சிறுதாக நிச்சயம் பின் கடைசியில், பின் அருந்தி வந்தால் நிச்சயம் தன்னில் கூட நோய்கள் பறந்து போகும். எந்நோயும் தாக்காது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஏன் புரியுதுங்களா? 

அடியவர் :- ம் 

குருநாதர் :- இன்னும் ஞானங்கள் பிறக்கும், பக்குவங்கள் பிறக்கும். 

=====================================
# மனக்குழப்பம் அல்லது வீணான கவலைகள் ஏற்படும்போது, ஒரு தீபத்தை ஏற்றி அதன் சுடரையே உற்று நோக்குவதன் மூலம் மனம் அமைதியடைந்து அனைத்தும் சீராகும்
=====================================

குருநாதர் :-  அதனால்தான் நிச்சயம் தன்னில் கூட பின் ஏதாவது பின் அதாவது மனம் குழப்பம் ஆனாலும் சரி, நிச்சயம் ஏதாவது நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய அறிய வீண் குழப்பங்கள் ஆனாலும் சரி, நிச்சயம் ஒரு தீபத்தை முன்னே வைத்து அத்தீபத்தை பாருங்கள். போதுமானது, நிச்சயம் அனைத்தும் சமமாகும். 

அடியவர் :-  அப்பா, 

சுவடி ஓதும் மைந்தன் :-  உங்களுக்கு மனக்குழப்பம்…. 

அடியவர் :-  கவலைகள், மனக்குழப்பம் திடீர்னு மனசு சோர்வாயிரும் பாருங்க. வந்து அந்த நேரத்துல ஒரு தீபத்தை ஏத்தி அந்த தீபத்தை வச்சு பாருங்க. 

================================
# அருட்பெரும் ஜோதி ரகசியங்கள் 
================================

குருநாதர் :-  அதனாலதான்  பின் வள்ளல் பெருமானும் நிச்சயம் இதைப் பார்த்தால் துன்பங்கள் தீரும் என்பது ஒரே வரியில் சென்றுவிட்டு சென்றுவிட்டான். 

அடியவர் :-  ஆமா, ஆமா, ஆமா. அவர் அந்த ஒளி வழியாவே முத்தி வாங்கிட்டு போயிட்டாங்க. ஐயா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அது அந்த ஒளி பார்த்தாவே எல்லா பிரச்சனையும் போயிடும்ன்றாங்க. எல்லா பிரச்சனையும் பறந்து போகும்னு ஒரு வள்ளலார் என்ன பண்ணிட்டாரு. ஆமா, அருட்பெருஞ்ஜோதி சொல்லிட்டு போயிட்டார். 

அடியவர் :-  தனிப்பெரும் கருணை. 

குருநாதர் :-  இதனால்தான் அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி என்றெல்லாம் அப்பாடலை பாடுங்கள். நிச்சயம் தன்னை அகவலை சிறிது பாடுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அகவலை பாடலாம். அதனால அகவலை பாடுங்கள். 

அடியவர் :-  ஐயா, தேவராஜ் ஐயா, பாடுங்க. ஐயா, தேவராஜ் ஐயா.

பாடகர் :- ( திருவருட்பா பாடல் அகவல் பாடினார்கள் )
https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=10h02m14s

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் )


======================================================

வணக்கம் அடியவர்களே ,

ஸ்ரீநிவாச ராமானுஜன் கணிதத்தையும் ஆன்மீகத்தையும் பிரித்துப் பார்த்தவர் அல்ல. "பூஜ்ஜியம் (Zero) என்பது கடவுள்" என்ற தத்துவத்தை அவர் ஒரு கணித மேதையாகவும், ஒரு ஆன்மீகவாதியாகவும் எவ்வாறு விளக்கினார் என்பதை கீழே காணலாம்:
1. பூஜ்ஜியம் = உருவமற்ற இறைவன் (Absolute Reality)
ராமானுஜரின் தத்துவப்படி, பூஜ்ஜியம் (0) என்பது "நிர்குண பிரம்மம்" அல்லது குணங்கள் அற்ற இறைநிலையைக் குறிக்கும்.
பூஜ்ஜியம் (0): இது எதையும் கொண்டிருக்காத "வெட்டவெளி" போலத் தெரிந்தாலும், உண்மையில் இதுவே அனைத்து படைப்புகளின் தொடக்கப் புள்ளியாகும்.
முடிவிலி (infinity): இது இறைவனின் எல்லையற்ற வெளிப்பாட்டைக் (Manifestation) குறிக்கும். 
2. அண்டவியல் விளக்கம் (Mathematical Metaphysics)
அவர் ஒரு சுவாரசியமான கருத்தை முன்வைத்தார்: பூஜ்ஜியத்தையும் முடிவிலியையும் பெருக்கினால் ($0 X infinity), அது ஒரு குறிப்பிட்ட எண்ணைக் கொடுக்காமல், அனைத்து எண்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
அதாவது, இறைவன் (0) தனது படைப்பின் ஆற்றலோடு (infinity) இணையும்போது, இந்த பிரபஞ்சத்தின் அத்தனை உயிர்களும் (எண்களும்) உருவாகின்றன என்பது அவர் நம்பிக்கை.

கணித மேதை ராமானுஜரின் (0 X infinity)
ராமானுஜன் ஒருமுறை தனது நண்பர்களிடம் ஒரு சுவாரசியமான கருத்தைக் கூறினார்:
பூஜ்ஜியத்தையும் (0)  முடிவிலியையும் (infinity)  பெருக்கினால் என்ன கிடைக்கும்?
அவரது பதில்: அது ஒரு குறிப்பிட்ட எண்ணைக் காட்டாமல், உலகில் உள்ள அனைத்து எண்களையும் ஒரே நேரத்தில் காட்டும்.
விளக்கம்: இறைவன் (0), தனது எல்லையற்ற ஆற்றலோடு (infinity) இணையும்போது, இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களும் (எண்களும்) உருவாகின்றன. ஒவ்வொரு எண்ணும் கடவுளின் ஒரு குறிப்பிட்ட தன்மையைக் குறிப்பதாக அவர் நம்பினார்.
===================================================

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் )


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!