​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 14 September 2021

சித்தன் அருள் - 1034 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலையப்பர் தரிசனம்!



ஓதிமலையப்பன் தரிசனம் - குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு, மதுரை. 

ஆதி சித்தனை மனதில் எண்ணி வாக்குகள் செப்புகிறேன் அகத்தியன்!

அப்பனே நல் முறையாக இப்பொழுதும் கூட கந்தன் அங்கு சுற்றித் திரிகிறான் என்பேன் நல் முறையாக அமர்கிறான் என்பேன் அவனுக்குப் பிடித்த இடம் அங்கே இருக்கின்றது அங்கே சென்று அவன் அமர்ந்த இடத்தில் அமர உங்களுக்கும் அந்த புண்ணியம் கிடைக்கும் என்பேன். அடுத்த வாக்கில் அந்த இடத்தைப் பற்றி கூறுகின்றேன் அப்பனே நல் முறைகளாக யானே சொல்வேன் பொறுத்திருக. 

ஓதி மலையின் சூட்சுமத்தை இப்போது உரைக்கின்றேன்  நல் முறைகள் ஆகவே நிச்சயமாய் நீங்கள் செல்லலாம் என்பேன் கார்த்திகை மாதத்தில் செல்லலாம் என்பேன் அங்கு பிள்ளையோனும் (பிள்ளையார்) முருகன் பின் ஐயப்பனும் சந்தோசமாக விளையாடுவார்கள் அப்பனே அவ் சூட்சுமத்தை சொல்கின்றேன் அவர்கள் விளையாடும் இடத்தை கூட .

அப்பனை இவ்வாறு எவ்வாறு இறைவன் எப்பொழுது வருவான் என்பது சீராக கவனித்து அங்கு சென்றால் பின் அவர்களும் பார்த்துவிட கர்மாக்கள் நீங்கும் என்பேன். ஆனால் மனிதனுக்கு இது புரியாமல் போய்விட்டது என்பேன். ஆனாலும் புண்ணிய செயல்கள் செய்யும் காரணத்தால் தானாகவே அதுபோன்று அமைவதும் உண்டு என்பேன்.

மூவரும் விளையாடும் பொழுது அப்பனே ஒரு மாதத்திற்கு முன்பு உரைக்கின்றேன் அப்பனே சென்று வாருங்கள் இன்னும் சிறப்பு. 

ஆனாலும் இதில் ஒரு சூட்சுமம் உண்டு என்பேன் அப்பனே ஐப்பசி மாதத்தில் நல் முறைகளாக யான் நான் உருவாக்கிய நீரில்(காவிரிநதி நீராடல் ) நவ நாட்கள்(9) நல் முறைகள் ஆகவே பின் நீரில் பணிந்து வணங்கி நல் முறைகள் ஆகவே பின் எந்தனை(அகத்தியரை) நினைத்து பின் நீராட அப்பனே பல பாவங்கள் போகும் என்பேன் இதனை நல் முறைகள் ஆகவே அப்பனே அம்மாவாசை திதியில் இருந்து இப்படியே செய்ய வேண்டும் என்பேன்.

அப்பனே இவ்வாறு நல் முறைகள் ஆக பல பெரிய பெரிய அரசர்களும் இவ்வாறு செய்து பல சித்துக்கள் பெற்று விளையாடினார்கள் என்பேன்.

இதை நீங்கள் நிச்சயம் செய்ய வேண்டும் என்பேன் நல்லோருக்கு நான் எப்பொழுதும் உதவிகரமாக இருப்பேன் என்பேன் இச் சூட்சுமத்தை இப்போது யான் சொல்லிவிட்டேன் உங்களுக்கு.

அப்பனே எவை என்று கூற அப்பனே நல் முறைகளாக இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன் அப்பனே ஓதியப்பனே அங்கிருந்து (ஓதிமலை) நடைபயணமாக பழனிக்கு வருவான் என்பேன் அப்பனே பின் எவ்வாறு என்பதையும் கூட இதனை சாந்தி தானம் என்பார்கள் அது ஒரு நாள் மட்டும் நடக்கும் அங்கு எப்பொழுது நடக்கும் என்று கூட யான் சொல்லி விடுகின்றேன் அப்பொழுது நடைபாதையில் நீங்களும் மேலிருந்து கீழே இறங்கினால் அவன் தன் பார்வையில் நீங்கள் பட்டுவிட்டால் அற்புதம் மகன்களே.

அப்பனே ஏன் எதற்கு இதையெல்லாம் சொல்கின்றேன் அப்பனே போகன் கர்ம நிலையில் பாதிக்கப்பட்டிருந்த பொழுது அப்பனே அங்கு வந்து அமர்ந்து விட்டான் என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றான் என்ன செய்வது என்பது கூட தெரியாமல் போய் விட்டது போகனுக்கு.

அதனால் முருகனே வந்து பின் போகனே நீ இவ்வாறு அமர்ந்து இருக்கின்றாயே உந்தனுக்கு என்ன வேண்டும் என்று கேட்க

போகன் அப்பனே முருகா எந்தனுக்கு ஒன்றுமே தெரியவில்லை இவ்வுலகத்தில். 

எதை எதையோ சாதிக்க நினைத்தேன் பின் எதையும் அனுபவிக்காமல் போய்விட்டேன் உலகத்தை ஆளும் என் தாயவள் புவனேஸ்வரி  அவளும் என்னை கைவிட்டு விட்டாள் என்றெல்லாம் போகன் சொல்ல.

அப்பனே போகா என் தாய் உன்னை கைவிடவில்லை என்று முருகனும் கூற உந்தனக்கு என்ன தேவை என்பது எந்தனுக்கு தெரியும் .

இங்கிருந்து போ அதோ அங்கே ஒரு மலை தென்படுகின்றது அவ் மலைக்கு சென்று வா அங்கே என்னுடைய ஸ்தலத்தை அமைத்துக் கொள் யானும் அதற்கு உதவிகரமாக நிற்பேன் என்று நல் முறையாக முருகனும் வாக்கு உரைத்துவிட்டான். 

ஆனாலும் போகனுக்கு புரியவில்லை எந்தனுக்கு ஏதும் தெரியவில்லை முருகா எங்கு அவ் மலை இருக்கின்றது.

ஆனாலும் முருகன் பின் சொன்னான் அப்பனே என் தந்தையும் நல் விதமாக ஆசிர்வாதம் கொடுத்துவிட்டான் என் தாய் அவளையும் நீ நேசித்து நேசித்து வணங்கி வந்தாய் பின் அவளே என்னிடத்தில் அனுப்பி விட்டாள். 

அதனால் யான் முன்னே செல்கின்றேன் நீ பின்னே வா என்று சொல்ல பின் அன்றைய நாள் மட்டும் இங்கிருந்து நல் முறைகளாக முருகன் பழனிக்கு செல்வான் நடைபயணமாக நடைபாதையில் அப்பொழுது போகனும் கூடவே செல்வான் அந்நாளை யானும் சொல்கின்றேன் எந்த தேதி என்றும்கூட தைப்பூசம் என்கின்றார்களே அதன் முந்தைய தினம் தானப்பா. அதையும் இப்போதே சொல்லிவிட்டேன்.

அப்பனே இவை என்று கூற நல் முறைகளாக ஆனாலும் இதிலும் ஒரு சூட்சுமம் ஒன்று என்பேன் அப்பனே இவ்விடத்திற்கு ம் பழனிக்கும் குழந்தை வேலப்பர் (பூம்பாறை முருகன் கொடைக்கானல்) என்கின்றார்களே அதற்கும் சம்பந்தம் உண்டு என்பேன்.

அப்பனே உங்களுக்கும் சொல்கின்றேன் இவை மூன்று திருத்தலங்களும் சரி முறையாக தரிசனம் செய்தால் ஒரு நாளைக்கு அப்பனே நல்ல முறையாக விதிகள் மாறும் என்பேன்.

முதலில் தரிசிக்க வேண்டியது அப்பனே ஓதியப்பன்.

இரண்டாவதாக பழனி.

மூன்றாவதாக குழந்தை வேலப்பர்.

நல் முறையாக யான் சொல்லிவிட்டேன் இதில் தான் சூட்சுமம் அடங்கியுள்ளது என்பேன்.

அப்பனே போகன் குழந்தை வேலப்பரை  இங்கு (பூம்பாறை)  செய்து முடித்தான்.

ஆனாலும் இது இருக்க முருகனும் போகனிடம் ஒரு சூட்சுமத்தை கூறிவிட்டான் அப்பனே போகா நீ இங்கு அமைத்தாய் அமைத்தும் விட்டாய் ஆனாலும் மனிதர்கள் எவை என்று கூற இங்கே வருவார்கள் ஆனாலும் அப்பனே இதிலிருந்து நேர் திசையாக (பழனி) சென்று பின் அப்பனே அங்கே ஒருமுறை அமை.

அங்கு அமைத்தால் அப்பனே அவ்மலையைச் சுற்றி பல பல அற்புத தேவர்கள் தேவயானிகள் அப்பனே பறந்து சுற்றி செல்வார்கள் அப்பொழுது அங்கு சென்று மனிதன் அங்கு செல்ல அப்பனே தேவர்களும் தேவதைகளும் ஆசீர்வதித்து விடுவார்கள் அப்படி அங்கு சென்று செய்ய அனைத்து கர்மங்களும் விலகியே நிற்கும்

ஆனாலும் அப்பனே கர்மாக்களில் நூறில் ஐம்பதாவது கழித்து விடலாம் என்பேன்.

அப்பனே ஆனாலும் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அப்பனே போகன் எவ்வாறு என்பதையும் கூட பின் ஒரு யுகத்தில் பழனியிலும் சமாதி அடைந்து விட்டான். பின் மறு யுகத்திலும் கூட குழந்தை வேலப்பன் முருகன் அடியிலேயே அவன் இருக்கின்றான் ஆனாலும் மனிதர்கள் இதுவரை யாரும் உணர்ந்ததில்லை.

அப்பனே அங்கு செல்ல நல் முறையாக முருகனை வணங்க முருகன் வடிவிலேயே போகனையும் வணங்கலாம் என்பேன்.

அப்பனே இது எதனால் வந்தது என்று நீங்கள் கேள்வியும் கேட்கலாம் என்பேன்

இவைதனை உணர அப்பனே பின் நல் முறைகள் ஆகவே  அப்பனே முருகனும் கூறிவிட்டது என்னவென்றால்

யானும் வந்துவிட்டேன் நலன்களாக   செய்துவிட்டேன். மீண்டும் உந்தனக்கு என்ன வேண்டும் போகா என்று கேட்க

பின் நல் முறைகள் ஆகவே போகனும் முருகனிடத்தில் எப்பொழுதும் உன் காலடியிலேயே இருக்க வேண்டும் என்று பணிந்து நின்றான் அதனால் தான் முருகன் தேர்ந்தெடுத்தான் என் காலடியிலேயே இரு அனைவருக்கும் ஆசிகள் கொடுத்துக் கொண்டே இரு என்று.

இங்கு வருபவர்கள் அனைத்து நோய்களையும் சீர் படுத்திக் கொள்வார்கள் என்பேன் அப்படி சீர்படுத்தி முடியாவிட்டாலும் சில மூலிகைகள் நிச்சயமாய் கிடைக்கும் என்பேன். அவ் மூலிகைகளை  பயன்படுத்திக்கொண்டு வாழுங்கள் அப்பனே.

அப்பனே பலமுறை உரைத்தது உண்டு அப்பனே இதுதானப்பா எவ்வாறு என்பதையும் கூட

பழனியப்பன் அப்பனே முறையாய் ஓதியப்பன் பின் வேலப்பன் இதனையெல்லாம் கூர்ந்து பார்த்தால் ஓர் அப்பனே புரிந்து கொள்ளுங்கள் இதன் திறமையை.

அப்பனே கூர்ந்து நோக்கினால் பழனி லிருந்து தொடங்கினால் ஒரு வளையம் போல் வரும் இதில்தான் ஒரு சூட்சுமம் அடங்கியுள்ளது என்பேன்.

அப்பனே! இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன் கூர்ந்து கவனித்தால் பக்கத்தில் இருக்கும் திருத்தலங்கள் கூட ஓம் என்று சொல்கின்றார்களே அந்த ஓம் வடிவத்தில் இருக்கும் என்பேன்.

இதனையும் பார்த்து அப்பனே இப்பொழுதும் கூட சொல்கின்றேன் புதிதாக குக்கே சுப்பிரமணியர் என்று அழைக்கின்றனர் அவ்விடத்திலிருந்து கவனித்தால் அப்பனே தெரியும் வேல் வடிவமாக.

அப்பனே நல் முறைகளாக பல சூட்சமங்கள் உண்டு என்பேன்.

அப்பனே நல்லாசிகள் அனைவரும் ஆறாவது அறிவிற்கு நல் முறையாக வாருங்கள் அனைவருக்கும் நல் முறையாக ஆசிகள் இதன்  சூட்சுமத்தை அடுத்த வாக்கில் சொல்கின்றேன் பலமாக அனைவருக்கும் என்னுடைய ஆசிகள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.................தொடரும்!

7 comments:

  1. OOTHIAPPAR THIRUVADIKAL POTRI POTRI
    AGATHIYAM SHARANAM

    ReplyDelete
  2. ஓம் சரவணபவாய நமஹ ||

    இதற்குமுன் அகத்தியர் ஐயா உரைத்த கஞ்சமலை பாலமுருகன் (சேலம் அருகில்) பற்றியும் எல்லோரும் நினைவு கொள்ள வேண்டும். கஞ்சமலை அருகில் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் ராக்கிப்பட்டி அருள்மிகு சுயம்பு ஸ்ரீ ராஜபாலமுருகன் சன்னிதானம் உள்ளது. இங்கு முருகன் சுயம்புவாக வளர்ந்து வருகின்றார். பழனி முருகன் கௌபீனம் மற்றும் விபூதியிலிருந்து தோன்றிய சுயம்பு பலமுருகனாய் நமக்கு எல்லோருக்கும் அருள் மழை பொழிகிறார். மேலும் தெரிந்துகொள்ள இந்த லிங்கில் பார்க்கவும் - http://swayambalaya.com/

    ஓம் அம் அகத்தீசாய நமஹ ||

    ReplyDelete
  3. கந்தனின் கருணையும் அகத்தியரின் வழி காட்டலும் இருந்தால் இவ்வுலகில் மனிதர்கள் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். ஓம் நம குமாராய ஓம் அகத்தீசாய நம. அகத்தியர் உரைக்கும் சூட்சுமங்களை தவறாம கடைபிடித்து வாழ்வில் வெற்றி பெற அகத்தியரை பணிந்து வணங்கி பிராத்தனை செய்வோம்.

    ReplyDelete
  4. ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
    ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
    ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
    ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
    ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
    ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்

    ReplyDelete
  5. Om Sri Lopamudra samata Agastiyar thiruvadi saranam.

    ReplyDelete
  6. அற்புதமான பதிவு இந்த பதிவை படிக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்

    ReplyDelete