​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 7 January 2021

சித்தன் அருள் - 975 - ஸ்ரீ அகத்தியர் கோவில் பாலராமபுரம், திருவனந்தபுரம் - திருநட்சத்திர விழா!



பச்சை கற்பூரத்திற்கு பல வித குணங்கள் உண்டு. வீட்டில் இருக்கும், நம்மில் இருக்கும் திருஷ்டி தோஷம், துர்சக்திகளை விரட்டி அடித்து, நாம் வாழும் சுற்றுப்புறத்தை, காற்றை சுத்தமாக்கி, நிம்மதியை தரும். வீட்டில் பூஜை அறையிலேயோ அல்லது குபேர/ஈசான மூலையில் ஒரு துணியில் கட்டி வைத்திருந்தால், வீட்டில் செல்வ வளம் பெருகும், நாம் நினைக்கிற விஷயங்கள் அப்படியே விரும்பியபடி நடக்கும். அனாவசிய பேச்சுக்கள் குறைந்துவிடும், த்யான நிலைக்கு மனதை கொண்டு செல்லும், உறங்கும் படுக்கைக்கு அடியில் சிறிது வைத்து உறங்கினால், நிம்மதியாக உறங்க முடியும். வாயுவில் உள்ள கிருமிகளை, விஷ பூச்சிகளை அழித்து விடும். இதை ஒரு தகவலாக கூறுகிறேன்.

போன வருட கோடகநல்லூர் (அந்த நாள்/இந்த வருட) அழைப்பிதழ் தொகுப்பில், "பெருமாளுக்கு உங்களால் இயன்ற பச்சை கற்பூரத்தை வாங்கிக்கொடுங்கள் என உரைத்ததின் அர்த்தம் இப்பொழுது உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன். இதை எந்த கோவிலுக்கும் வாங்கி கொடுக்கலாம். மனதில் இருத்திக் கொள்ளவும். இனி பாலராமபுரம் செல்வோம்.

வாசனாதி திரவியங்கள், மூலிகைகள், இயற்கை கிழங்கு/இல்லை பொடிகள், 108 மூலிகை பொடிகளுடன் கடைசியாக அபிஷேகம் செய்திட பச்சை கற்பூரம் வேண்டும். ஆகவே ஒரு நீண்ட பட்டியல் உருவாயிற்று. அனைத்தையும் வாங்கிட தீர்மானித்தனர். அகத்தியர் அடியவர்களுக்கு "சித்தன் அருள்" வலைப்பூ வழி தெரிவிக்க அனுமதி கேட்டேன்.  அகத்தியரும், நிவாகமும் அனுமதி அளித்தனர்.

சென்ற வருடம், பாலராமபுரத்தில் அபிஷேக பூஜையில் கலந்து கொண்டவர்கள், அகத்தியப் பெருமானிடம் சமர்ப்பித்த வேண்டுதல்கள் நிறைவேறியதா,  என்ற கேள்வி தொக்கி நின்றது. நிச்சயமாக நிறைவேற்றியிருப்பார், பொறுத்திருந்து பார்ப்போம் எனத் தோன்றியது.

யாம் பெற்ற இன்பம் அனைவரும் பெறுக என்ற எண்ணத்தில், சித்தன் அருள் வலைப்பூவில் நிகழ்ச்சியை பற்றி விவரிக்கப்பட்டது.

அன்றைய தின பூஜையில் பங்கு பெற விருப்பப்பட்ட அனைத்து அடியவர்களுக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக இது அமைந்தது.

போன வருடம் பிரார்த்தனையோடு, பங்குபெற்ற இரு அகத்தியர் அடியவர்கள், தங்கள் பிரார்த்தனையை அகத்தியர் நிறைவேற்றி விட்டதாகவும், அதற்கு நன்றி கூறும் விதமாக இம்முறை பூசையில் ஏதேனும் ஒரு சிறு பங்கை தங்களுக்கு தருமாறும் பூசை நிர்வாகிகளிடம் வேண்டிக் கொண்டனர். கருத்து வேறுபாட்டினால் பிரிந்து இருந்த கணவன் மனைவி ஒன்று சேர்ந்ததும், மகளுக்கு பிள்ளை வரம் வேண்டி பெற்றதும், அகத்தியர் அடியவர்கள் பெற்ற வரமாக அமைந்தது.

பாலராமபுரம் கோவிலை சுற்றியே அனைத்து கைத்தறி ஜவுளிக் கடைகள் உள்ளதால், குருநாதருக்கும், குருபத்னிக்கும் வஸ்திரங்கள் முதலில் வாங்கி சமர்ப்பிக்கப்பட்டது.

திரிப்பூணித்துறையில் அமைந்துள்ள ஒரு அகஸ்தியர் ஆஸ்ரமம் சார்பாக எல்லா வருடமும் காலை அன்னம் தானம் நடைபெறும். இம்முறை அவர்களும் அபிஷேக பூஜையில் கலந்து கொண்டனர்.

எல்லா விஷயங்களும் மிக நேர்த்தியாக முன்னே செல்வதை கண்டவுடன், என்ன இப்படி எளிதாக நடக்கிறதே, குருவின் எண்ணம் என்ன? என்ற கேள்வி அடியேனுள் வந்தது. அடியேன் நண்பர்களிடம் அடிக்கடி கூறுகிற ஒரு வாக்கியம் நினைவுக்கு வந்தது.

"எப்பொழுதும், ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். குருவும், இறைவனும், நாம் கேட்பதை எல்லாம் அருளுகிறார்களா, எல்லாம் எளிதாக நடக்கிறதா...................... பின்னாடி பெரிய ஆப்பு வைக்கப் போறாங்க, என்று அர்த்தம். ஆதலால், எதை கேட்க வேண்டும் என்பதில் மிக கவனமாக இருங்கள். பின்னாடி மூச்சு முட்டுதுன கதறாதீங்க!" என்பேன்.

இங்கும் அப்படியே நடந்தது!

2/1/2021 அன்று காலை 4 மணிக்கு எழுந்து குளித்து, 5 மணிக்கு புறப்பட்டு சென்று 6 மணிக்கு அபிஷேக பூசையில் கலந்து கொள்வதாக திட்டம்.

2-1-2021 காலை 4 மணிக்கு எழுந்ததும், நண்பரிடமிருந்து போன் வந்தது.

"பூசாரி அழைத்திருந்தார்! கோவிலுக்கு அருகில் ஒரு வீட்டில், ஒருவர் இயற்கை எய்தினார். ஆகவே ஈம கிரியைகள் நடத்தி, உடலை எடுத்தபின்தான் கோவிலை சுத்தி பண்ணி திறப்பார்கள். 10 அல்லது 11 மணியாகும். இப்பொழுது வர வேண்டும் என கூறுகிறேன்" என்றார்.

குருநாதரின் திருநட்சத்திர காலை நேர அபிஷேக/பூஜைகள் அப்படியே நின்றது.

பூஜைக்கென ஓடிய அனைவரும் அதிர்ந்து போயினர். மனம்  சோர்ந்து போனது!

அடியேன் அமைதியாக நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன்!

சித்தன் அருள்..................தொடரும்!

8 comments:

  1. ஓம் அகத்திய குருவடி சரணம்
    ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

    ReplyDelete
  2. எல்லாம் அவர் செயல். ஓம் லோபாமுத்ரா தாயார் சமேத அகத்திய பெருமான் திருவடிகளே போற்றி.

    ReplyDelete
  3. எண்ணம் செயல் சிந்தனை இவை அனைத்தும் அவரே என்று வாழும் பொழுது குறைகள் நமக்கு இல்லை வைரத்தை பட்டைதீட்டி ஓளிர் கூட்டுவதைப்போல் நம்மை சிறு சிறு சோதனைகள் தந்து ஆட்கொண்டு அருள் மழை பொழிகிறார்... குருவே சரணம் குருபாதம் சரணம் ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏

    ReplyDelete
  4. Om lobamuthra sametha agasthiyaha namaha.

    ReplyDelete
  5. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் திருவடிகள் போற்றி

    ஐயா நன்றி ஐயா

    ReplyDelete
  6. குரு வாழ்க! குருவே துணை!!

    ReplyDelete
  7. அகத்தீசாய நம

    ReplyDelete
  8. ஓம் அகத்தீசாய நம
    ஓம் அகத்தீசாய நம
    ஓம் அகத்தீசாய நம
    குருவே சரணம்
    குருவே சரணம்
    குருவே சரணம்

    ReplyDelete