​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 1 August 2020

சித்தன் அருள் - 887 - சனிப்பிரதோஷ நாளில் இறைவன் தரிசனம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

1. இன்று பிரதோஷம். அதுவும் சனிக்கிழமை வருகிற பிரதோஷம். இறைவன் ரூபம் ஆகாயத்தில் தெரிகிற ஒரு பழைய வீடியோ கையில் அகப்பட்டது. அதை, உங்கள் தரிசனத்துக்காக சமர்ப்பிக்கிறேன்.


2. ஒரு முப்பது நிமிடங்கள் ஓடுகிற "ஓம்" மூல மந்திரம் வீடியோவும் கீழே தருகிறேன். இன்றைய தினத்தை நல்லபடியாக கடந்து செல்லுங்கள்.


3. ஆகஸ்ட் ஐந்தாம் தியதி, அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான, அடிக்கல் நாட்டு விழா, பூமி பூஜை போன்றவை நடக்க இருப்பதால், அன்றைய தினம் அகத்தியர் அடியவர்கள், தங்கள் இல்லத்தில் காலை 10.30 மணிமுதல் 12.30 மணிவரை ஒரு விளக்கேற்றி வைத்து, இறைவனிடம், "எல்லாம் நல்லபடியாக நடத்திக்கொடு" என ஒரு வேண்டுதலையும் சமர்பிக்கும்படியும், சித்தன் அருள் சார்பாக, உங்கள் அனைவரிடமும் வேண்டிக்கொள்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............... தொடரும்! 

1 comment: