​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 7 September 2017

சித்தன் அருள் - 720 - அருள் சுகம் தந்த சுந்தரகாண்ட அனுபவம் - 5


[வணக்கம் அடியவர்களே! இது வரை "சுகம் தரும் சுந்தரகாண்டம்" உருவான நிகழ்ச்சிகளை சொல்லி வந்திருந்தாலும், இந்த தொகுப்பு முதல் நம் அனைவரின் பிரச்சினைக்கும், இறைவன் உத்தரவால், அகத்தியப்பெருமான் எந்தெந்த ஸ்லோகங்களை கூறி வந்தால் பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெறலாம் என்று கூறியது, தெரிவிக்கப்படுகிறது. சற்று உள்வாங்கி படித்து, நடைமுறைப்படுத்தி, வாழ்க்கையில் நிம்மதியை தேடிக்கொள்ளுங்கள்.]

அகத்தியப் பெருமான் கூறலானார்.

"ஸ்ரீராம சரிதையை வால்மீகி ஏழு காண்டங்களாக விவரித்துள்ளார் எனினும், இறையே இந்த சுந்தரகாண்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. நவகிரக தசை, திசா புக்தியில் சிரமப்படுகிறவர்கள், அப்படிப்பட்ட தாங்க முடியாத பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு இறைவன் திருவடியை சேர, இறைவனே காட்டிக்கொடுத்த மகா புண்ணிய வழி. கர்மாவுக்கு ஏற்றவாறு தண்டனையை இறைவனே கொடுத்தாலும், அதுவே மனம் விரும்பி திருந்தி வாழ நினைக்கும் மனிதர்களுக்கு, மாற்று வழியை காட்ட கால காலமாக யோசித்துக் கொண்டிருந்தது என்பது, சித்தர்களாகிய எங்களுக்கு இப்பொழுதுதான் புரிய வந்தது. இதை கைப்பற்றி, மனம் ஒன்றி, தன்னையே இறைவனுக்கு கொடுப்பவனுக்கு, விடுதலை நிச்சயம். நினைத்தது நிறைவேறும்." என்றார்.

"அனுமனை பெருமைப்படுத்தவும், சுந்தரகாண்டம் உருவானது. ராமாயணத்தின் மற்ற காண்டங்களில், இறைவனே மனித அவதாரம் எடுத்தால் எப்படிப்பட்ட கர்ம வினையையும் தாங்கித்தான் கடந்து வரவேண்டும் என்று உணர வைத்த இறைவன், தன் தாசனை பணிந்து, அவர் செய்த அரிய விஷயங்களை பாராயணம் செய்வதின் மூலம், மனித இனத்தின் பிரச்சினைகளை விலக்க, வழிகாட்டியது."

"எத்தனையோ பேர்கள் சீதையை தேடி பல திசைகளிலும் சென்ற பொழுது, அனுமனே, நிச்சயமாக நல்ல செய்தியை கொண்டு வருவான் என்று ராமனுக்கு தெரிந்திருந்தது. ஏன்? அனுமனின் தாச குணம், எதையும் தீர ஆராய்ந்து செயல்படுத்தும் குணம், இயற்கையாகவே அவருள் நிறைந்திருந்த தூதுவரின் திறமை, பெரியோரின் வாழ்த்துக்களை, ஆசிர்வாதத்தை, எப்பொழுதும் வேண்டிக்கொள்ளும் எண்ணம் போன்றவையே.  அனுமன் லங்காபுரிக்கு கிளம்பும் முன் கூட, சூரியன், இந்திரன், வாயு போன்றோரின் வாழ்த்துக்களையும், ஆசீர்வாதத்தையும் பெற்றுத்தான் கிளம்பினார்."

"எந்த நல்ல காரியத்தை செய்யும் முன்னரும், செய்யும் பொழுதும் இறைவன், பெரியவர்கள், மகான்கள், ஆச்சாரியர்கள் வாழ்த்து மனிதருக்கு கண்டிப்பாக தேவை. அருளின்றி இவ்வுலகில் எதுவும் நன்று கூடாது. அதை மறந்ததின் விளைவுதான், இன்றைய மனித குலத்தின் நிலைக்கு காரணம். இதை புரிந்து கொள்பவர்கள், அதன்படி நடந்து கொள்பவர்களுக்கு, இந்த கலியுகத்திலும், இப்புவியிலேயே, குறைந்தது நிம்மதியை இறை அருளும். இறைவனுக்கு, தன்னைவிட, தன் அடியவர்களை காப்பாற்றுவதிலேயே கருத்து அதிகம். ஆதலால், இறைவனின் அடியவர்க்கு அடியவர்களாக இருந்து, இறைவன் செய்ய வேண்டிய கடமைகளை செய்பவர்களுக்கு, அந்த இறையே இறங்கி வந்து அவர்கள் தேவையை நிறைவேற்றும்."

"ஏழரைச் சனி ஆரம்பமானவர்களுக்கும், அஷ்டம சனியால் பீடிக்கப்பட்டவர்களுக்கும், சனி மகா தசையில் கேது புக்தியோ, கேது தசையில் சனி புக்தியோ நடப்பவர்களுக்கும், சுந்தரகாண்டத்தின் முதல் சர்க்கத்தை (அத்தியாயத்தில் உள்ள ஸ்லோகங்களை) தினம் பாராயணம் செய்தால், அந்த கஷ்டங்கள் நீங்கிவிடும். அவர்கள் மனதில் அச்சம் என்பதே இருக்காது" என உரைத்தார்.

'நேர்மையாக முயற்சி செய்தால் வெற்றி அடையலாம் என்றாலும், எந்த கிரகங்களினாலும் எந்த இடையூறு வந்தாலும் மனிதர்கள் அனைவரும் சுந்தரகாண்டத்திலுள்ள ஐந்து, ஆறு, ஏழாவது சர்க்கத்தை தினம் பாராயணம் பண்ணி வந்தால், நினைத்த காரியம் நிறைவேறும். தடைப்பட்ட திருமணம் நடக்கும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும், வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். இதற்காகவே எழுதப்பட்டது இந்த சர்கங்கள் என்பது, ஆன்றோர் வாக்கு".

"நம்பிக்கைதான் வாழ்க்கை எனினும், சுந்தரகாண்டனத்தின் ஒன்றுமுதல் ஒன்பது வரை உள்ள சரகத்தையும் விடாமல் தினம் படித்து வருபவர்களுக்கு, ராகு, கேது, சனி ஆகியவற்றின் தொல்லைகளிலிருந்து நிரந்தர விடிவு கிடைக்கும். இது சாத்தியமான உண்மை" என்று அகத்தியர் உரைத்தார்.

நாடியில் வந்து அகத்தியப்பெருமான் பலருக்கும், பரிகார நிவர்த்தியாக நாக பிரதிஷ்டை எனக்கூறி, நாக/சர்ப்ப தோஷம், பித்ரு தோஷம், ப்ரம்ம ஹத்தி தோஷம் என்றெல்லாம் கூறிய பொழுது, புரியாமல் இருந்த அத்தனை தோஷங்களும், மேற் சொன்ன சர்கங்களை தினம் வாசித்து வருவதால், நிவர்த்தியாகும் என்ற உண்மை புரிந்தது.

எதுவும் மறுகேள்வி கேட்காமல் அகத்திய பெருமான் கூறியதை குறிப்பெடுத்துக் கொண்டிருந்தேன்.

அதிகாலை நேரம். ஜன்னல் திறந்திருந்தால், மெலிதாக காற்று வீசியதை போல் உணர்ந்தேன். நல்ல நறுமணம், துளசி வாசனை, போன்றவை நான் அமர்ந்திருந்த அறையில் தோன்றியது. குறிப்பெடுப்பதிலேயே கவனமாக இருந்ததால், வாசனையை உணர சற்று தாமதமாகிவிட்டது.

எழுதுவதை நிறுத்திவிட்டு, சுற்றுமுற்றும் பார்த்தேன்.

"இன்றய தினம் இது போதும். பின்னர் தொடரலாம்! ஆசிகள்!" என்று கூறி அகத்தியர் அன்றைய வகுப்பை முடித்துக் கொண்டார்.

நான் எழுந்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தேன். நாடியை, குறிப்பெடுத்த புத்தகத்தை, ராமர் பாதத்தில் பத்திரமாக வைத்துவிட்டு, கை கூப்பி அவரையே ஒரு நிமிடம் பார்த்துக் கொண்டிருக்க, ராமர் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த துளசி மாலையின் முடிச்சு கழன்று, துளசி மாலை நாடியின் மேலே விழுந்தது.

அதை கண்ட என் மனம் சிலிர்த்துப் போனது என்று கூறவும் வேண்டுமோ. ஒரு நிமிடம் ஏதோ ஒரு பரவச உணர்வு உடல் முழுதும் பரவி நிற்க, என் கண்கள் குளமாயின.

"இது போதும்! இது போதும் இறைவா! உங்கள் ஆசிர்வாதம், இது புத்தகமாக வெளியிடப்படும் பொழுது, அதை வாசிக்கும் அனைவருடைய பிரச்சினைகளும் விலகி, அனைவருக்கும் அவரவர் வாழ்வில் இன்பம் பெற வேண்டும்" என்று வேண்டிக்கொண்டு பூசை அறையை விட்டு வெளியே வந்தேன்.

மனம் தானாக "ஓம் அகத்தீசாய நமஹ" என்று அழைத்து செல்ல, இன்னொரு அறையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து கண்ணை மூடி உட்கார்ந்து கொண்டிருந்தேன்.

சித்தன் அருள்........... தொடரும்!

32 comments:

  1. ஓம்ஓ விநாயகப் பெருமானே துணை...

    ஓம் ஓதியப்பர் முருகப்பெருமான் துணை...

    ஸ்ரீ லோபமுத்ரா தாயே சமேத அருள்மிகு அகத்தியர் அய்யா துணை...

    நன்றி ஐயா.... தங்கள் பதிவிறக்கி கொடுப்பதற்கு.

    தாங்கள் மற்றும் திரு.கார்த்திகேயன் ஐயா அவர்கள் இருவரும் இறைவன் அருள் நிறைந்து வாழ வேண்டும் என்று இறையை வேண்டிக் கொள்கிறேன்...

    I pray Agasthiyar Ayyan to make all your efforts easy to do this opportunity to continue...

    ReplyDelete
  2. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ

    ReplyDelete
  3. அற்புதம் ..ஓம் லோபமுத்ர சமேத அகத்தீசாய நமஹ !!

    ReplyDelete
  4. வணக்கம்
    "ஓம் ஸ்ரீ அகத்தீசாய நமஹ"
    "ஓம் ஸ்ரீ அகத்தீசாய நமஹ"
    "ஓம் ஸ்ரீ அகத்தீசாய நமஹ"
    அன்புடன் sv

    ReplyDelete
  5. u made a very great thursday sir.
    feeling very good and safe.thank u

    ReplyDelete
  6. "ஒன்றுமுதல் ஒன்பது வரை உள்ள சரகத்தையும் விடாமல் தினம் படித்து வருபவர்களுக்கு,அவர்கள் தேவையை இறையே நிறைவேற்றும்".அகத்தியப்பெருமான்

    ReplyDelete
  7. I feel blessed to read this.

    ReplyDelete
  8. please inform me where i can het this sundaragandam book

    ReplyDelete
    Replies
    1. SIR I GOT FROM AMMAN PATHIPAGAM CHENNAI.I DEPOSITED 260 INCLUDING COURIER.THEY SENT. PLS CONTACT 9445952585."SUGAM THARUM SUNDARAKANDAM BY SRIRAMASWAMY"

      Delete
  9. ஓம் அகத்திய சித்த குருசுவாமியே சரணம்...

    ReplyDelete
  10. நன்றி அய்யா ....

    ReplyDelete
  11. OM LOBA MUDRA SAMETHA AGATHEESAYA NAMAH;

    It was indeed a blessing to all those could read this

    AUM SAIRAM

    ReplyDelete
  12. அகத்தியர் அடியவர்களே!

    ​மேற்சொன்ன விஷயங்களை அறிந்தவுடன், நான் யாரேனும் அந்த தொகுப்பை புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்களா என்று தேடினேன். என் நண்பரிடமும் கூறினேன். ஒரு நாள் செய்தி வந்தது. புத்தகம் வாங்கிவிட்டதாகவும் உடனேயே அனுப்பி வைப்பதாகவும் சொன்னார். அந்த புத்தகம் வந்து சேர்ந்து வாசித்த பொழுது, எத்தனையோ பிரச்சனைகள் என்னை விட்டு விலகியது. நினைத்தது நடந்தேறியது. எல்லாம் அகத்தியரின் கை வண்ணம்.

    யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்கிற நோக்கத்தில், அது எங்கு கிடைக்கும் என்கிற நோக்கில் விவரங்களை கீழே தருகிறேன். நம்பிக்கை உள்ளவர், விருப்பம் உள்ளவர் அதை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள், தினமும் வாசித்து வாருங்கள். நல்ல பலனை அடைவீர்கள். புத்தக வெளியிட்டாளர்களுக்கு வியாபாரம் ஆகவேண்டும் என்கிற நோக்கில் இதை இங்கு தெரிவிக்கவில்லை. இதில் வியாபார உத்தியே கிடையாது. நீங்கள் எல்லோரும் நல்லபடியாக, அகத்தியர் அருளால் வாழவேண்டும் என்கிற நோக்கில் கூறுகிறேன். அத்தனை பெருமையும் அகத்தியர் பாதங்களுக்கே.

    புத்தகத்தின் பெயர் : "சுகம் தரும் சுந்தரகாண்டம்"

    கிடைக்கும் இடம்:-

    அருள் மிகு அம்மன் பதிப்பகம்
    16/116, T.P.கோயில் தெரு,
    திருமலா ப்ளாட்ஸ்,
    (ஸ்ரீ ராகவேந்திரா மடம் எதிரில்)
    திருவல்லிக்கேணி, சென்னை - 600 005
    தொலைபேசி: 42663546, 42663545
    ஈமெயில்:arulmiguammanpathippagam@yahoo.com

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கு ஆயிரம் நன்றிகள் தங்களை போல சில நல்ல ஆத்மாக்கள் இருப்பாதால் தான் நாட்டில் மழை பெய்கிறது ... இதேபோல் அனைவருக்கும் தொடர்ந்து வழிகாட்டுமாறு கேட்டு கொள்கிறேன் ......


      பிரவீன் குமார் .

      Delete
  13. https://siththanarul.blogspot.in/2014/06/blog-post.html?m=1

    For the above post ...I copied that address from this link...

    ReplyDelete
  14. sir what will happen to animals after death? I lost my pet cat today which was there for more than 15 years.

    ReplyDelete
    Replies
    1. Animals do not earn punniyam. But they have to undergo suffering according to bad karma and clear the same. You have taken care of it for the past 15 years. Nothing more to do. Let it go. Pray!

      Delete
  15. இந்த ஆண்டு ஓதியப்பர் பிறந்த நாள் பதிவுகளை எதிர் பார்த்து காத்திருக்கிறேன் அய்யா.

    ReplyDelete
  16. அன்னை லோபமுத்திரை ஸமேத அகஸ்திய பெருமானின் திருவடி சரணம் இறை அருளால் சுகம் தரும் சுந்தரகாண்டம் கிடைக்க பெற்றேன் ராமா ராமா ராமா ஜெய் ஸ்ரீ ராம்

    ReplyDelete
  17. Sir, I have purchased this book. Can we read the chapters of the book. Or the exact slogas. The slogans are are not available in the book. So is it OK to read the chapters. Please clarify. I want to start reading.

    ReplyDelete
    Replies
    1. The chapters of the book gives you info as to for what problem what sargam is to be read. The Sundara Kaandam Slogas are available in tamil print in a different book. You will have to buy it, if you want to read the slogas. I have that book @ home. Hence I tell you.

      Delete
    2. லிப்கோ பதிப்பகத்தினரின் சுந்தர காண்டம் வாங்கி படியுங்கள்.எல்லா சர்க்கங்களும் தமிழ் விளக்கத்துடன் உள்ளது.

      Delete
    3. Saravanan sir pls give your WhatsApp number I want some details about sundrakanda book

      Delete
  18. i need also slokas book sir from where i can get it pls let me know .....om agatheesaya namah

    ReplyDelete
  19. Dear Sir, Thanks a lot for your reply. Kindly give the name of the book you have. I will also try the book from LIFCO publishers. Thanks again. Om Guruve Saranam...

    ReplyDelete
  20. By his grace, i got both Sugam tharum Sundarakandam book and Valmiki Ramayaam, Sundarakannadm from Amman Pathipagam. They (Amman Pathipagam) also delivers book by post. The name of Valmiki Ramayana book i have got is Srimath-Valmiki Ramayanam-Sundar Kandam-Volume-III. Published by Gita Press Gorakpur (Ph-0551)2334721, 2331250.

    ReplyDelete
  21. Sage agathiyar about remedies in sundara kandam
    According to sage agathiyar for removing obstacles one has to read slokas from10,11,12,13 sargams.
    When ragu, ketu,Saturn, guru are in 8 from rasi one has to read all 14 sargams. For job, marriage and money problems this is the solution.
    For finding lost persons, for obstacles in marriage and to come out of poverty 18 th sargam is the remedy.
    For persons who want to complete a prayer 14 th sargam is remedy.

    For ragu, ketu dosha reading 18 th sargam is the remedy. It is also remedy for ashtama sani.
    For ragu, ketu, saturn or sevai in 7 th from rasi sargams 23 to 26 with pattabisega sargam will provide remedy. This will unite separated couples.

    ReplyDelete
  22. From where we have to calculate rasi or lakna pls clarify 9952010561

    ReplyDelete