​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 2 July 2017

சித்தன் அருள் - 711 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

மாயை இத்தன்மையது, இப்படித்தான் என்று ஒரு எல்லை வகுத்துக் கூற இயலாது.  ஏன்? சில சமயம் ஒருவனுக்கு மாயையாக இருப்பது இன்னொருவனுக்கு மாயையாகத் தோன்றாது. அந்த தொடர்ந்த எண்ணங்களின் ஓட்டமும் எந்த அளவிற்கு ஒரு மனிதனுக்கு உயர்ந்து, உயர்ந்து, உயர்ந்து, உயர்ந்து, உயர்ந்து, உயர்ந்து, செல்கிறதோ அந்த உயர்விலே ஒரு மனிதனின் உயர்ந்த சிந்தனையிலே மாயை எனும் விழுதுகள் அறுபட்டு, அறுபட்டு சென்று கொண்டேயிருக்கும். இருந்தாலும் எந்த உயரத்தில் சென்றாலும் அங்கும் சில விழுதுகள் கட்டிப்போட்டுக் கொண்டுதான் இருக்கும். எனவேதான் மனிதன் மிகக்கடுமையாகப் போராடி நல்ல உடல் திறத்தோடு, நல்ல உள்ள திறத்தோடு, இறை பக்தியோடு, சாத்வீக எண்ணங்களோடு, சாத்வீக செயல்களோடு, சத்தியத்தோடு தொடர்ந்து போராடுவதோடு, மெய்யான மெய்ஞானம் நோக்கி தடுமாற்றம் இல்லாமல் செல்ல வேண்டும்

2 comments: