​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 20 June 2017

சித்தன் அருள் - 702 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஆயிரக்கணக்கான, லக்ஷக்கணக்கான ஜபங்களை விட, உள்ளன்போடு, ஆத்மார்த்தமாக ஓரே ஒரு முறை இறை நாமத்தை ஜபித்தால் இறை தரிசனம் உண்டு. ஆனால் "லோகாயம் போக வேண்டும். இறை தரிசனம் மட்டுமே வேண்டும்" என்ற எண்ணத்தோடு ஜபித்தால், கட்டாயம் இறை த்வாபர யுகத்தில் மட்டுமல்ல, த்ரேதா யுகத்தில் மட்டுமல்ல, இந்த கலியுகத்திலும் காட்சி தருவார் என்பது உறுதி. இருந்தாலும் லகரம், லகரம் மந்திரங்களை ஜெபி என்று யாம் கூறுவதின் காரணமே, மனித மனம் ஒரு ஒழுங்குக்குக் கட்டுப்படாததால். இப்படி மந்திரங்களை சொல்லிக்கொண்டேயிருந்தால் என்றாவது ஒரு நாள் அவனையுமறியாமல் மனம் லயித்து ஒரு முறை அந்த "திரு" வின் நாமத்தை, மனம், வாக்கு, காயம், 72,000 நாடி நரம்புகளில் பரவ கூறுவான் என்றுதானப்பா, நாங்களும் கூறுகிறோம். எனவே இறை நாமத்தைக் கூறிக்கொண்டேயிரு. இறைவன் கருணையால் அது ஏதாவது ஒரு நாளில் சித்திக்கும்.

3 comments:

  1. ஓம் அகத்தீச் சுவரத்தின் அன்பே போற்றி
    ஓம்! லோபமுத்ரா சமேத அகத்தியர் திருவடி சரணம்

    ReplyDelete
  2. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete