​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 16 January 2017

சித்தன் அருள் - 569 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஒரு மாணவன் ஒரு தேர்வு எழுதி பூர்த்தியடைந்து வந்தவுடன், இந்த இந்த தேர்வுகளிலே, இன்ன குறைகள் நிகழ்ந்துவிட்டன. எனவே, எனக்கு மதிப்பெண் குறைந்துவிடும். எனவே, மதிப்பெண் கூடுதலாகப் பெற முயற்சி செய்ய வேண்டும், என்று முயற்சி செய்கிறான்.  அகுதொப்ப நிலையிலே, தேர்வின் மதிப்பெண்  குறைந்து இருக்கிறது. இப்பொழுது, இவன் மீண்டும் தேர்வு எழுதி, மதிப்பெண் பெற்று வரும் வரையில், இவன் பெற்ற மதிப்பெண் எவ்வளவு? என்று கேட்டால், இவன் எதைக் கூறுவான்? அதிகமாக வரும் என்று, தான் எதிர்பார்க்கின்ற மதிப்பெண்ணை கூற முடியுமா? அல்லது குறைந்த அளவு பெற்ற மதிப்பெண்ணை கூற முடியுமா? இதைத்தான் பூஜைக்கும், புண்ணியத்திற்கும் ஒரு மனிதன் எடுத்துக் கொள்ளவேண்டும். ஏற்கனவே, பிறவிதோறும் பெற்று, செய்து, அனைத்தையும் நுகர்ந்து, அது போக இப்பிறவிக்கு வந்துள்ள மனிதர்கள் ஒன்றை மட்டும்தான் எண்ணி பெருமைப்பட்டுக்கொள்ளவேண்டும். அது இல்லையே, இது இல்லையே என்று எண்ணுவதைவிட, பிறவி, இறைவன், சித்தர்கள், நவகிரகங்கள், கர்மா போன்ற வார்த்தைகளை செவிமடுத்து, ஓரளவு அந்த வழியில் வர இறைவன் அனுமதி  தந்திருக்கிறார், என்றுதான் பெருமைபட்டுக் கொள்ள முடியுமே தவிர, இருக்கின்ற இந்த மதிப்பெண்ணுக்கு என்ன உண்டோ, அதுதான். இதனையும் மீறி ஒருவன் பூசைகள் செய்தால், அதற்குண்டான பலன், பின்னால்தான் கிட்டும்.

5 comments:

  1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete
  2. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    அக்னி லிங்க அருணாச்சலேஸ்வர அய்யா தங்களை நான் தொடர்பு கொள்ள வேண்டும்.தயவு செய்து athy04@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும் அய்யா

    ReplyDelete
  3. நல்ல கருத்து. ஓம் அகத்தீசாய நம

    ReplyDelete
  4. [ROUGH TRANSLATION] After a student completes his examination paper, he evaluates that in some subjects, he has not answered correctly, his marks score will be less, so he makes efforts to study more. After he appears for re-examination, if he is asked what is his mark, will he refer to his lower marks or to the higher marks he is expecting in the re-examination? Pujas and punyas are to be taken in a similar way. Instead of saying I lack this, I lack that, be happy that: I have been permitted by the Divine and given opportunity, in this life-time after so many of my past life-times, to listen about re-birth, Divine, Siddhas, navgrahas, karma etc. and to somewhat follow this path. This is your marks score. If one goes beyond this and performs puja, the results will follow only later on.

    ReplyDelete