​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 11 January 2017

சித்தன் அருள் - 564 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

தெய்வ சாந்நித்யம் என்பது ஆத்மார்த்தமான பக்தியினால் வருவதாகும். அது புறத்தைப் பொருத்தது அல்ல. எனவே, எந்த ஆலயத்திலும், மனம் ஒன்றி, மனதிலே எந்த விதமான தீய எண்ணங்களும் எழாமல், வைராக்கியம் கொண்டு மனதைத் தெளிவாக வைத்து, மனதை பக்தியிலே ஆழ்த்தி, மனதை பரிபூரண சரணாகதியிலே வைத்து, வேறு உலக சிந்தனை ஏதும் ஏழா வண்ணம், இறையை இல்லத்தில் இருந்து பூசித்தாலும், அது நல்ல உள்ளத்தில் இருந்து வரும் பூசையாக இருக்குங்கால், இறைவனின் அருளும், இறைவனின் சாந்நித்யம் கிட்டும் அப்பா! இகுதொப்ப நிலையிலே இறைவனின் அருளாசி,  நிச்சயம்,நிச்சயம், நிச்சயம். ஆசிகள்!

4 comments:

  1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete
  2. om sri agasthiar thiruvadigalae potri

    ReplyDelete
  3. [ROUGH TRANSLATION] Divine sannithiyam is related to atma-level bhakti. It is not based on externals. So, with a focussed mind, without any negative thoughts, with vairagya, with clarity of mind, immersing mind into bhakti, with complete surrender in mind, devoid of worldly thoughts, when puja is done to the Divine, even at home, grace and sannithiyam of Divine will be there, since the puja is by a good mind. In such a state, Divine blessing is certain, certain, certain. Blessings!

    ReplyDelete