​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 8 January 2017

சித்தன் அருள் - 562 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!



அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

மனிதன் பலகீனமானவன். கர்மத்திற்கு உட்பட்டவன். பக்குவம் அடையாதவன். பக்குவம் அடையாத மனிதர்கள் எது உரைத்தாலும் அதை நீ செவியில் ஏற்கவேண்டாம். உன் பொருட்டு அனைவருக்கும் யாம் இயம்புவது என்னவென்றால், எமது வாக்கை கேட்பதாலேயே ஒரு மனிதன் மேன்மை அடைய இயலாது. இகுதொப்ப "இவனுக்கெல்லாம் சித்தர்கள் என்றென்றும் வாக்கு உரைக்கிறார்களே? ஆயினும் இவனுக்கெல்லாம் வாக்கு உரைத்தாலும், இவன் பிறர் மனம் புண்படவும், சித்தர்களுக்கு விரோதமாகவும் நடக்கிறான். இங்குதொப்ப, இன்னவனுக்கு எதற்கு சித்தர்கள் வாக்கு உரைக்கவேண்டும்?  என்று எண்ணுதல் கூடாது. யாராக இருந்தாலும் இறையின் கட்டளைப்படி வாக்கு உரைத்து, அவனின் மனநிலையை மாற்றி, நல்வழியில் திருப்ப வேண்டும், என்பதற்காக, நல்லோர், நல்லோர் அல்லாதோர் அனைவருக்கும், பல்வேறு சூழலில் வாக்கு உரைக்கவேண்டியுள்ளது. உள்ளதை, உள்ளபடி கூறி வாழுங்கால். என்றென்றும் வெற்றியும், தன்னம்பிக்கையும் உண்டாகும். உள்ளதை கூறாது, அல்லதை கூறுங்கால், தொடர்ந்து பாவசேற்றிலே  ஆழ்ந்து, ஆழ்ந்து துன்பப்பட நேரிடும். உரைத்திடுவோம், எவன் எப்படி வாழ்ந்தாலும்,  அது குறித்து கவனம் செலுத்தாது, உண்மையை நன்றாக ஆய்ந்து, உணர்ந்து, சிந்தித்துப் பேசி, உள்ளதைக் கூறி, நல்லதை செய்து வாழுங்கால், நலம் தொடரும்.  உரைத்திடுவோம், இவ்வாறெல்லாம் வாழாத மனிதனுக்கு, நல்விதமான வாழ்வு இருப்பது போல் தோன்றும். அப்படி தோன்றினாலும், அது நீடிக்காது, என்பதை புரிந்து கொள்ளவேண்டும். தெள்ளிய நெஞ்சத்திலே நல்ல விதைகளை ஊன்றி, ஊன்றி தெளித்துவிட்டால், தெளிவாய், காலப்போக்கில், அந்த நல் வித்துக்கள் எல்லாம் முளைத்து நல் வ்ருக்ஷங்களாகி, நல் கனிகளை  தரும்.அந்த கனிகள் மூலம், மேலும், மேலும் பல நல்வித்துக்கள் உருவாகும்.  எனவே, எது குறித்தும் கலங்காது, உன்னால் இயன்ற தர்மங்களை, பிரார்த்தனைகளை செய்து வாழ்ந்து வா. என்றென்றும் நலம் தொடரும் உன்னை. ஆசிகள்! சுபம்!

3 comments:

  1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete
  2. [ROUGH TRANSLATION] Man is a weak creature, under control of karma, and not matured. You need not be influenced by the words of im-mature persons. We say to all of you that merely listening to our [Siddhas] words will not make you better. Hence, don’t worry that: “why Siddhas are giving vakku to such persons who, even after listening, are hurting others and are going against Siddhas”. We, in deference to directions of Divine, give our vakku, to anyone, good and not-go-good, under various circumstances, hoping they will change their mind and behaviour for the better. When you stick to speaking the truth, you will meet with success and confidence. When you deviate from speaking truth, you will keep getting into the mud of sins and face sufferings. Instead of checking how others behave, if you properly understand, feel, think and speak truth, do good deeds, good results with follow. We say that those who don’t live this way, even if they temporarily enjoy nice life, it won’t last long – please understand this. If you plant goods seeds in a clarified mind and water the seeds, good trees will grow and yield more and more good fruits, over time. Therefore, un-perturbed [by others], do charity and worship as per your capacity. Good results will always follow you. Blessings! Subham.

    ReplyDelete