​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 7 January 2017

சித்தன் அருள் - 561 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

நாங்கள் கூறுகின்ற வாக்கின் தன்மையை ஆய்ந்து, பகுத்து, புரிந்து ஏற்றுக்கொள்வது என்பதும் ஒரு மனிதனின் பக்குவம், மனோபலம், கர்ம வினைகள்தான் தீர்மானிக்கிறது. அது நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது மனிதர்களுக்கு இல்லை என்பதால்தான் யாமும் பொட்டில் அடித்தாற்போல் கூறாமல், மேலெழுந்த வாரியாகவே கூறிக்கொண்டு செல்கிறோம். ஒருவனைப் பார்த்து எதிர்காலத்தில், உனக்கு இருதயத்தில் குறைபாடு வருமாப்பா. எனவே, இன்றிலிருந்தே, தக்க உடற் பயிற்சி செய்து, அன்ன ஆகாரத்தில் கவனமாக இருந்து, நிறைய தர்மங்களை செய்து, நிறைய பூசைகளை செய்துவா  என்றால், நல்ல வேளை கூறினீர்களே என்று எடுத்துக் கொள்ளாமல்,  எனக்கு இருதயத்தில் பாதிப்பா? எனக்கு இருதயத்தில் பாதிப்பு வந்துவிடுமா, என்று அவன் அன்றில் இருந்தே அச்சப்பட துவங்கினால், இது போன்ற வகை ஏன் கூறினோம்? என்றுதான் மகான்களுக்கும் இருக்கும். எனவே எதிர்காலத்தை தெரிந்து கொண்டு, எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று அறிந்து கொண்டு வாழ வேண்டும், என்பதற்காகத்தான் மனிதன் ஜோதிடம், அருள்வாக்கு போன்றவற்றை பார்க்கிறான். ஆனால் அவன் எதிர்காலம் அவன் எண்ணுவது போல் ஆக்கபூர்வமாக இருந்துவிட்டால் பாதகம் இல்லை. ஆனால் பெரும்பான்மையான மனிதர்களுக்கு அப்படி இல்லாதபோது எதைக் கூறுவது? அப்படி எதிர்காலத்தை பற்றி கூறி அச்சுறுத்துவதை விட, எதிர்காலத்தில் வரக்கூடிய விதி வழியாக எதிர் காலத்தில் வரக்கூடிய ஆபத்துகளை எல்லாம் மாற்றுவதற்கு அல்லது அந்த துன்பங்களை எல்லாம் தாங்குவதற்கு மனவலிமை அதிகரிக்கும் வண்ணம் பிரார்த்தனைகளையும், தர்மங்களையும் எம்மை நாடும் மனிதர்களுக்கு கூறினால் அதை, அவன் கவனமாக பின்பற்றிக் கொண்டே வந்தால் கட்டாயம், எதிர்காலம் என்பது சிறப்பாகவே இருக்கும்.  எனவே, இகுதொப்ப யாம் கூறுவது என்னவென்றால், எம்மை நாடும் தருணம், எது நடப்பினும் மனம் தளராமல் வந்தால், இறுதியில் இறைவன் அருளால், பரிபூரண வெற்றி என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

4 comments:

  1. om sri agasthiar thiruvadigale potri

    ReplyDelete
  2. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete
  3. [ROUGH TRANSLATION] How much a person understands, analyses, appreciate and accept our vakku depends on his maturity, mental strengths and karma. We don’t openly say that 99 out of 100 lack these, but we speak of this subtly. When we advise a person that, in near future he will get heart troubles, so from now on he should be careful about diet, exercise, start doing charity and pujas, instead of taking this positively, he starts living in fear of heart problems, we ourselves wonder whether we should have given the prediction. Eager to know his future and future happenings, man consults astrology and arul-vakku [nadi readings]. It is all right when future predicted is as per his expectation. But for majority of persons predicted future will not be as per his expectations, what to predict? Instead of scaring him about his future, to avoid predicted accidents and to increase mental strength to bear predicted sufferings, we keep advising prayers and charities to those who approach us. If he carefully follows and implements our advice continuously, surely future will be better. Therefore we say to you now, that when your approach us, be strong irrespective of life’s difficulties, at the end, by grace of Divine, complete success will be there, please understand.

    ReplyDelete