​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 5 January 2017

சித்தன் அருள் - 559 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

நதியின் சங்கமம் ஆழியோடு.
உயர் நற்றமிழின் சங்கமம் நற்சுவையோடு.
விதித்த விதியின் சங்கமம் அவனவன் செயலோடு.
என்றென்றும் பதியின் சங்கமம் மெய் பத்தினியோடு.
அவனவன் மதியின் சங்கமம் உயர் குணத்தோடு.
விளைந்த கதியின் சங்கமம் அவனவன் எண்ணத்தோடு.
என்றென்றும் தர்மத்தின் சங்கமம் புண்ணியத்தோடு.
தளர்வில்லா மனதின் சங்கமம் இறையோடு.
தப்பில்லா வாழ்வும் வளமோடு இருக்க 
நாள் நாளும் நிகழும் சங்கமம் நல்வினையோடு
நலமில்லா சூழலின் சங்கமம் முன் கர்மத்தோடு
நன்றாய் உயிரின் சங்கமம் ஆக்கையோடு 
அந்த ஆக்கையின் சங்கமம் ஆண், பெண் கலப்போடு
அறியுங்கால் அடியாரின் சங்கமம் உயர் தொண்டோடு
உயர் தொண்டின் சங்கமம் நல் புண்ணியத்தோடு
ஆன்மா,ஆக்கை எடுத்த பயன், புலன் ஆசை விட்டு, அன்றாடம், அறம், சத்தியம் தொடர்ந்து
மெய் ஞான வழியில் சென்று, ஆக்கை தாண்டி ஆன்மாவை இறையோடு சங்கமித்தாலே.
சங்கமிக்கும் காலம் வரை தேகம் மீண்டும், மீண்டும் சங்கமிக்கும்.
தமிழ் சங்கமம் வளர்த்த அன்னை மீனாள், பெருகூர் தன்னில் இருந்து, சங்கத்தோடு சில சந்தேகத்தோடு எம்முன் அமர்ந்த, என்றும் எம்மையே சங்கமித்து, எம்மையே சங்கல்பம் செய்து, சங்கில் இருந்து நாதம் வந்தாலும், எம் நாதமாக எண்ணி, எம்மையே சங்கநாதம் செய்யும் பூர்வ ஜென்ம தொடர்........... நல்லாசி!

4 comments:

  1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete
  2. அகத்தியர் வழி நடக்கும் போது என்னே ஒரு ஆனந்தம் !.

    அகத்தியர் திருவடிகள் போற்றி !

    ReplyDelete
  3. [ROUGH TRANSLATION] [CONDENSED] Merger of river is into sea. Merger of a man’s ordained fate is into his actions. Merger of a husband is into true wife. Merger of intellect is into good character. Merger of charity, always, is into punya. Merger of a un-perturbed mind is into Divine. Merger of a sin-free positive life, daily, is into good karmas. Merger of un-fortunate circumstance is into previous karma. Merger of good life-force is in Ajna. Merger of dasas is into service [to others]. Merger of service is into punya. Life-force in Ajna is to give up petty desires, regularly follow charity, truth, gnana, and cross Ajna and merge into Divine. Till this merger, body will be re-born, again and again. Blessings!

    ReplyDelete
  4. [ROUGH TRANSLATION] [CONDENSED] Merger of river is into sea. Merger of a man’s ordained fate is into his actions. Merger of a husband is into true wife. Merger of intellect is into good character. Merger of charity, always, is into punya. Merger of a un-perturbed mind is into Divine. Merger of a sin-free positive life, daily, is into good karmas. Merger of un-fortunate circumstance is into previous karma. Merger of good life-force is in Ajna. Merger of dasas is into service [to others]. Merger of service is into punya. Life-force in Ajna is to give up petty desires, regularly follow charity, truth, gnana, and cross Ajna and merge into Divine. Till this merger, body will be re-born, again and again. Blessings!

    ReplyDelete