​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 4 January 2017

சித்தன் அருள் - 558 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவனின் அருளைக்கொண்டு, இயம்புவது யாதென்றால், இகுதொப்ப ஒரு மனிதனின் மனோநிலை, எந்த அளவிற்கு பக்குவம் அடைகிறதோ, எந்த அளவிற்கு சாத்வீகம் அடைகிறதோ, எந்த அளவிற்கு உயர் நுண்மா நுழை ஞானம் பெறுகிறதோ, அந்த அளவிற்குத்தான் அவனை பொறுத்தவரை இந்த உலகமும், வாழ்க்கையும் உயர்வாகத் தெரியும். மனம்தான் வாழ்க்கை, மனம்தான் உலகம் என்பதை மனிதன் புரிந்து கொள்ளவேண்டும். ஒரு மனிதனுக்கு எல்லாம் வெற்றி, எண்ணியது எல்லாம் நடக்கிறது என்றால் இந்த உலகம் அவனுக்கு இனிப்பாக தெரியும். இன்னொரு மனிதனுக்கு தொட்டதெல்லாம் தோல்வி, எல்லாமே எதிராக நடக்கிறது. எண்ணங்கள் ஒருவிதமாகவும், நடைமுறை செயல்கள் வேறுவிதமாகவும் இருக்க, அவனை பொறுத்தவரை இந்த உலகம், கயப்பாக தோன்றும். எனவே இப்படி இந்த உலகை, உலகை சுற்றி உள்ள மனிதர்களை, உலகில் நடக்கும் சம்பவங்களை ஒரு மனிதன், தான் எண்ணியபடி இருந்தால் நன்மை என்று எண்ணுவது பெரிதும் தவறல்ல, என்றாலும், அப்படித்தான் நடக்கவேண்டும் என்று எண்ணி, அதற்கு மாறாக நடக்கும் பொழுது ஒருவன் வருத்தப்படுகிறானே, அதுதான் அவனுக்கு மிகப்பெரிய வேதனையையும் மன உளைச்சலையும் தருகிறது. எனவே, இப்படித்தான் என்று எதிர்பார்ப்பதைவிட, "எப்படி இருந்தாலும் அதை ஏற்று கொள்ளக்கூடிய பக்குவத்தை இறைவா, எனக்குக்கொடு" என்று மனோரீதியாக ஒருவன் வைராக்கியத்தையும், திடத்தையும் அடைந்துவிட்டால், அவனை பொறுத்தவரை துன்பமான வாழ்க்கை என்று ஒன்றுமே இல்லை. எனவே, "துன்பங்களை மாற்று, தொல்லை தரும் மனிதர்களை என்னை விட்டு அகற்று" என்று வேண்டுவதைவிட, "எல்லா நிலைகளிலும் எல்லா சூழ்நிலைகளிலும், நான் திடகாத்திரமாக, நான் தெய்வீக எண்ணத்தோடு வாழும்படியாக என் சிந்தனையை வைத்திரு இறைவா" என்று வேண்டிக் கொண்டால் அதுதான் தீர்க்கமான ஒரு முடிவாக, நல்ல ஒரு நிச்சயமான, நிம்மதியான வாழ்விற்கு, அடித்தளமாக அமையும்.

3 comments:

  1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete
  2. [ROUGH TRANSLATION] Under Divine grace, we state that the world will look positive only to those who have some mental maturity, satvik nature and some gnana. Life is what mind perceives, world is what mind perceives. To that man who keeps achieving success and gets fulfilment of his desires, the world appears pleasant. To that man who keeps meeting with failures, opposite results, divergence between thought and action, the world appears bitter. It is not wrong to hope that world and circumstances should be as per one’s expectations. But it is wrong to feel bad when desires don’t get fulfilled, such a person is putting himself to mental suffering and agitation. So, instead of expecting that [my] life should be like this, a man should achieve vairagya and determination that “Divine, give me the attitude to accept that which happens”, to him there is no suffering. So, instead of praying “Divine, remove my problems, remove the trouble makers out of my life”, pray that “in all states and circumstances, let me live with mental fortitude and attention to the Divine”, it will become foundation for a good and peaceful life.

    ReplyDelete