​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 2 January 2016

அரிய தகவல்கள் - அகத்தியர் அடியவர்களுக்காக!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

"அகத்தியப் பெருமானின் சித்தன் அருள்" வலைப்பூவில் முருகரை பற்றிய அவர் அருளிய விஷயங்களை, மகாசஷ்டியின் போது தொகுத்து தந்ததை படித்திருப்பீர்கள். அதனூடே தராத ஒரு சில விஷயங்களை இங்கே கீழே தருகிறேன்.

"பெருமாளும் அடியேனும்" தொடருக்காக தட்டச்சு செய்யும் பொழுது ஒரு இடத்தில் ஆதிசேஷன் மிகுந்த கருணையுடன், கருடாழ்வாருக்காக பெருமாளிடம் பரிந்துரை செய்வார். அதில் அத்தனை கனிவு இருக்கும். அதை படித்த நிமிடத்தில் ஒரு கேள்வி என்னுள் எழுந்தது.

ஆதிசேஷன் நாக ரூபம். மிகுந்த கோபத்தையும், வீரியமான விஷத்தையும் கொண்ட உவமானம். அதெப்படி இத்தனை கருணை/கனிவு அவர் மனதில் தோன்றுகிறது? இங்கு ஏதோ ஒன்று மறைக்கப்பட்டுள்ளதே! என்ற எண்ணம் தோன்றியது.
​​
உடனேயே, இதை அகத்தியப் பெருமானிடம் "எப்படி ஆதிசேஷன் இப்படி கருணை கொண்டவராக இருக்க முடியும்? அத்தனை கொடிய தன்மையை பிரதிபலிக்கும் ஒரு ஜீவனை, காக்கும் கடவுளான பெருமாள் எப்படி தன் சயனத்துக்கு எடுத்துக் கொண்டார்? இதில் மறைந்துள்ள உட்பொருள்/உண்மை என்ன?"  என்று கேள்வியை வைத்தேன்.

"குஹ த்ரயம்" என்கிற வடமொழி நூலில், சுப்ரமண்யரை பற்றி விவரிக்கும் இடத்தில் "பெருமாளுக்கு ஆதிசேஷனாக வந்ததே முருகன்தான்" என்று விவரித்துள்ளார்.  முருகர் பிரம்ம ஞானத்தின் ஸ்வரூபம். எல்லா தெய்வங்களும் தங்கள் அங்கத்தில் அதை சர்ப்ப ரூபத்தில் அணிந்திருக்கிறார்கள். பகவான் விஷ்ணு அதை பள்ளிகொள்ள எடுத்துக் கொண்டார். இதற்கு உதாரணமாக, இன்றும் கர்நாடக, ஆந்திரா மாநிலங்களில், சுப்ரமண்யரை "நாக" ரூபத்தில் பூசை செய்து வருகிறார்கள் என்பதே அத்தாட்சி என்கிறார்.

அதே போல் இன்னொரு கேள்வி. ஒரு மனிதன் நித்தியம் செய்ய வேண்டிய "பஞ்சதாயன பூசை"யில் குறிப்பிடப்படுகிற தெய்வங்கள் ஐந்து. அவை, கணபதி, சூரியன், சிவன், அம்பாள், விஷ்ணு. இதில் சுப்ரமண்யரின் பெயர் இடம் பெறவில்லை. அதெப்படி சுப்ரமண்யர் இல்லாமல் ஒரு பூசையை நிறைவு செய்ய முடியும்?" என்ற கேள்வி உதித்தது.

இதற்கு தந்த விடை ஆச்சர்யமாக இருந்தது.
  1. சூரியன் பூசை - எல்லாவற்றையும் அருளும்.
  2. கணபதி பூசை - எல்லா விக்னங்களையும் விலக்கும்.
  3. சிவன் பூசை - ஞானத்தை அருளும்.
  4. அம்பாள் பூசை - மேற்சொன்ன அனைத்தையும் அனுபவிக்க, உடலுக்குள் சக்தியாக இருந்து அருளும்.
  5. விஷ்ணு பூசை - எந்த இழப்பும், பாதிப்பும் இன்றி பாதுகாத்து மேற் சொன்னவைகளை அனுபவிக்க வைக்கும்.
இந்த ஐந்து பேருக்கும் செய்கிற பூசை கடைசியில் பிரம்ம ஞானத்திடம் செல்லும்!

அந்த பிரம்ம ஞானமே "சுப்பிரமணியர்".

  • இவர்கள் அனைவருக்கும் செய்கிற பூசை சுப்ரமண்யரை சென்று சேரும்.
  • சுப்ரமண்யரை மட்டும் பூசை செய்தால், இவர்கள் அனைவரையும் பூசை செய்த பலன் கிட்டும்.
ஞானம் உள்ளவர்களுக்குத்தான் எல்லோரிடமும் அன்பாக இருக்க முடியும். பிரம்ம ஞானம் உள்ளவர்களுக்கு அவதாரம் எடுக்க முடியும். சித்தத்தன்மை அடைந்தவர்கள் பிரம்ம ஞானத்தை அடைந்தவர்கள். அப்படியானால் ஏசுபிரான் ஆக வந்தது யார் என்ற கேள்வி வந்தது. ஏசுபிரானை நினைக்கிறபொழுது, அவர் உயிர்தெழுந்தது, பகைவரையும் மன்னித்தது போன்ற குணங்களை கண்டால், இவை ஒரு சித்தரால் மட்டும்தான் முடியும் என்று என் எண்ணம். சித்தரிலும் மிகக்கனிவு கொண்ட ஒருவரால்தான் இதுவும் முடியும். இதை ஒரு கேள்வியாக யோசித்த சில நாட்களில், நாடியில் ஒரு கேள்விக்கு விடை அளிக்கையில், "சிலுவைக்காரனாக வந்ததே போகன்தானடா!" என்று அகத்தியப் பெருமான் விளக்கினார். அப்பொழுதே இந்த விஷயத்தில் அனைத்தும் விளங்கிவிட்டது எனலாம்.

பெருமாள், அகத்தியரை தன் வலதுகரம் என்கிறார். திருப்பதியில், நரசிம்மராக வந்து, ஒரு அர்ச்சகரிடம், அகத்தியரை "எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவன், துச்சாடனம் பண்ணக் கூடாது" என்கிறார். இறைவனுக்கே வலதுகரமாக விளங்குபவர் என்ன வேண்டிக் கொண்டாலும் அதை இறைவன் உடனேயே நிறைவேற்றுவார். உதாரணமாக, 

குற்றாலத்தில் "பெருமாள்" விக்ரகத்தை அகத்தியப் பெருமான் தன் கைகளால் அன்புடன் தடவிக் கொடுத்து வேண்டிக் கொண்டபொழுது, இறைவன் தன் உருவத்தை "சிவலிங்கமாக"  மாற்றிகொண்டார் என்பதை, இறைவன் எல்லாவற்றிக்கும் அப்பாற்பட்டவன். ஒரு வகை வழிபாட்டுக்குள் கட்டுப்பட்டவன் அல்ல, என்பதை, இந்த மனிதர்களுக்கு புரியவைக்கத்தான் என்று எடுத்துக் கொள்ளவேண்டும் என்கிறார், அகத்தியப் பெருமான். அப்படி உருவமாற்றம் நடந்ததை, எதிர்த்த பக்தர்களை, அம்பாள் நடுவராக இருக்க, அகத்தியப் பெருமான், 5 நாட்கள் எதிர் வாதம் செய்து, இறை அருளால் வென்று, ஊரைவிட்டு ஓடிப்போக தீர்மானித்த நாராயண பக்தர்களை மனம் மாற்றி, சித்தர்களாக மாற்றி தன்னுடன் சேர்த்துக் கொண்டார், அகத்தியர். 

இங்கு ஒன்றை கவனிக்கவேண்டும். சித்தமார்கத்தில் இருப்பவர்கள். எதிர் வகை செய்தவர்களையும் மன்னித்து தன் வசம் சேர்த்து கொள்வதில், பரந்த மனப்பான்மையில் இருக்கவேண்டும் என்பதை அகத்தியப் பெருமான் நமக்கு சொல்லாமல் சொல்கிறார்.

"நடக்கட்டும் நம்புகிறோம்" என்கிற மனித எண்ணத்தை கைவிட்டு "நம்புகிறோம், நடக்கும்" என்ற அகத்தியர் வாக்கை எல்லோரும் கைப்பற்றுவோம், இனி வரும் நாட்களில். ஏன் என்றால், இது சித்தர்கள் காலம். தகுந்த காலத்தில், நம்மிடையே, ஏதேனும் ஒரு ரூபத்தில் அருகில் இருந்து வழி நடத்த தீர்மானித்த ஒரு சித்தரின் எண்ணத்தை, கிடைக்கப் பெரிய, அறிய வாய்ப்பை, நம் சிறுமையான எண்ணத்தால் இழந்து விடக்கூடாது என்பதற்காக இதை கூறுகிறேன்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

10 comments:

  1. Outstanding revelations. Last one week or so a question was inundating my mind as to how and why Snake(s) ( Gods) are given so much importance in Hindu religion. That is answered in the above narration.

    Om Agatheesaya Namaha

    ReplyDelete
  2. Om Agatheesaya Namaha, During Christmas ( a week ago) we were blessed to visit Thirupattur, had darshan of Pathanjali Mahamuni, Yes We also had similar thoughts for which Guru Agathiyar has promptly given us this article too, we believe that Pathanjali Mahamuni is Atheeseshan too, May Mahamuni and Guru Sayee guide us always, Aum Sairam

    ReplyDelete
  3. very very great spiritual informations. Thanks a lot.

    ReplyDelete
  4. மிக்க அரிய கேள்விப்படாத விடயங்களை
    விளக்கிக் காட்டீணீர்கள்.நெடு நாளைய
    சந்தேகங்கள் நிவர்த்தியாயிற்று.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  5. Ariya thagaval thanthamaikku Nandrigal iyyane- Guru thevarukku siram thazhtha namaskarangal - RaviM.S.

    ReplyDelete
  6. Sri Adisankara added lord Subramanya to panchayathana pooja to make it Shanmatham. Om Agatheesaya Namaha.

    ReplyDelete
  7. நன்றி அய்யா

    ReplyDelete
  8. அற்புதமான பதிவு! சிறந்த தகவல்கள் :-) மிக்க நன்றி!

    ReplyDelete
  9. ஓம் சரவணபவ
    ஓம் அகத்தீசாய நமக

    ReplyDelete