​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 28 May 2015

சித்தன் அருள் - 224 - "பெருமாளும் அடியேனும் - 8 - பெருமாளும் ஹயக்ரீவரும்!


[இன்றைய சித்தன் அருள் தொகுப்புக்கு செல்லும் முன் - இந்த தொகுப்புடன், திரு.சரவணன், மலேஷியா அவர்கள், சித்தன் அருளில், தனது 50வது படத்தை வரைந்து கொடுத்து, ஒருவருட சேவையையும் நிறைவு செய்துள்ளார். இத்தனை நாட்களாக அவர் படம் வரைந்து தந்து அகத்தியர் சேவையில் பங்குபெற்று, மிகச் சிறந்த முறையில் காட்ச்சிகளை நம் கண் முன் கொண்டு வந்ததற்கு நன்றியை கூறிக் கொண்டு, மேன்மேலும் அவர் அகத்தியர் அருள் பெற்று வளர வேண்டும் என நாம் எல்லோரும் அவரை வாழ்த்துவோம்.]

நாரதருக்கு படு குஷி!

இதுவரையில் தேவலோகத்தில் மட்டும் தனது திருவிளையாடல்களைச் செய்து கலகமூட்டி, பின்னர் தர்மத்தை யார் யார் மூல நிறைவேற்ற முடியுமோ, அவர்கள் மூலம் நிறைவேற்றிக் கொண்டிருந்த நாரதப்பெருமானுக்கு இப்போது திருமால் இட்ட கட்டளை, யானை வாய்க்குக் கிடைத்த கரும்பு போலாயிற்று.

தனக்கிட்ட பணியைத் தொடங்க நாரதர் அக்கணமே விடைபெற்றுக் கொண்டு தயாராகிவிட்டார்.

என்ன செய்வது என்று கவலையில் ஆண்ழ்ந்த அகஸ்தியரிடம், திருமால் அவரது தோளைத் தட்டி எழுப்பினார்.

"என்ன சிந்தனை?" என்றார் பெருமாள்.

"ஒன்றுமில்லை அய்யனே! ஏற்கனவே களிபுருஷனின் அதமச் செயல்பாடுகளைப் பற்றி தாங்கள் உரைத்தீர்கள். அதனை நினைக்கும் பொழுதே என் நெஞ்சம் பதறுகிறது. போதாக்குறைக்கு நாரதப் பெருமானையும் இப்போது கிளப்பி விட்டிருக்கிறீர்கள். இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும் பொழுது இந்த பூலோகத்தின் எதிர்காலத்தை நினைத்து பெரும் பயமாக இருக்கிறது. இதற்க்கு நான் என் பங்கை எப்படிச் செய்து இந்த பூலோகத்து மக்களைக் காக்கவேண்டும் என்று தெரியவில்லை. அதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தேன்" என்றார் அகத்தியர்.

"அகஸ்தியரே! இனிமேல்தான் உங்களுக்கும் நிறையப் பொறுப்பு ஏற்ப்படும். இந்த களிபுருஷனை  எனக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும். இப்போது கூடப் பாருங்கள், கலிபுருஷன், தன முதற்கட்ட வேலையை இந்தக் கானகத்திலேயே தொடங்கிவிட்டான்" என்று சொல்லிச் சிரித்தார் திருமால். இதைக் கேட்டு சிலிர்த்துப் போனார் அகஸ்தியர்.

"அய்யனே! தாங்கள் உத்தரவிட்டால் என் தவவலிமையால் அவனை அந்த இடத்திலிருந்து வெகு தூரத்திற்கு விரட்டி அடித்து விடுகிறேன்" என்றார் அகஸ்த்தியர்.

"அகஸ்தியரே! தங்கள் தவ வலிமையை இப்படி வீணடிக்க வேண்டாம். அந்த களிபுருஷனை அவ்வளவு சுலபமாக விரட்டியடிக்கவும் முடியாது. இப்போது பாருங்கள் கலிபுருஷன் செய்த துஷ்டதனத்தை" என்று சொன்னவர், அடுத்த வினாடி கல்லுக்குள் மறைந்து போனார்.

அகஸ்த்தியரும் அருகிலுள்ள மரத்தினில் மறைந்து என்ன நடக்கப் போகிறது என்பதை வேடிக்கை பாக்கத் தயாரானார்.

சில நாழிகைக்குள், நான்கு கால் பாய்ச்சலில், திருமலையே கலங்கும் அளவுக்கு புழுதியை கிளப்பியபடி, பூமி அதிர, மிருக, பறவை இனங்கள் உயிருக்கு பயந்து நாளா புறமும் சிதறி ஓட, ஹயக்ரீவர் குதிரை ரூபத்தில் அங்கு வந்து சேர்ந்தார். கண்களில் மிகுந்த கோபம். அவர் விடுகின்ற மூச்சே அனலாக கொதித்தது. 

கல்லுக்குள் மறைந்திருந்த பெருமாளும், மரத்திற்கு பின்னால் ஒளிந்திருந்த அகத்தியரும் இதை கவனித்துக் கொண்டிருந்தனர்.

வேகம் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவர்களுக்கு விவேகம் இருப்பதில்லை. இதேபோல் கோபம் அதிகமாக இருப்பவர்களிடம் உருப்படியான காரியம் எதுவும் நடப்பதில்லை, என்பது அனுபவப்பட்ட உணமை! 

இந்த பழமொழியை நிலை நிறுத்துவது போலத்தான் ஹயக்ரீவ்கரும் நான்குகால் பாய்ச்சலில் திருமலை வேங்கடவன் முன்பு வந்து நின்றார்.  ஆத்திரமும் கோபமும் கொப்பளிக்க சுற்று முற்றும் பார்த்தார்.

அற்புதமான அந்த மலையில் "பெருமாள்" ஆனந்த சொரூபனாக தன்னை நாடி வருவோர்க்கு அபாய ஹஸ்தம் காட்டி, நிம்மதியையும் சந்தோஷத்தையும் கொடுப்பவனாக கருணைக் கடலாக வீற்றிஉப்பதைக் கண்டார் ஹயக்ரீவர்.

கலிபுருஷன் சொன்னதை எண்ணிப் பார்த்தார்.

கோனேரிக் கரையில் ஏழுமலையை உருவாக்கி அதில் நிலையாக "உரு" கொண்டு தன்னந் தனியாக கல்வடிவில் "விஷ்ணு" சாந்த சொரூபமாக இருப்பதைக் கண்டு ஹயக்ரீவருக்கு எரிச்சல் ஏற்ப்பட்டது.

முன்னங்கால் இரண்டையும் உயரமாக தூக்கி கனைத்தார். இந்த கனைப்புச் சத்தம் கோனேரிக் கரையிலுள்ள அத்தனை சுற்று வட்டாரங்களிலும் பலத்த இடி சப்தம் போல் கேட்டது.

இதைக் கேட்டதும், அந்தக் காட்டில் இருந்த கொடய விலங்குகளும் பதறி, இங்குமங்கும் ஓட ஆரம்பித்தன. மரத்திலிருந்து பட்ச்சிகள் பயந்து சிறகடித்து வட்டமடித்து பின்னர் ஒன்றாகச் சேர்ந்து எங்கேயோ நோக்கிப் பறக்க ஆரம்பித்தன. எங்கு பார்த்தாலும் ஒரே தூசி மயம்.

விலங்குகள் பயந்து கொண்டு ஓடியதால் புஷ்பங்கள் சிதைந்து போயின. செடிகள் ஓய்ந்து விழுந்தன. பாம்புகள் படமெடுத்து கோபத்தால், அருகிலிருந்த பாறைக் கற்கள் மீது கொத்தின.

தன் அசுர பலத்தைக் காட்டிய ஹயக்ரீவர், தன வேகத்தைத் தாக்குப் பிடிக்கை முடியாமல் கோனேரிகே கானகம் சின்னா பின்னமாக மாறுவதைக் கண்டு மேலும் கொக்கரித்தார்.

"யார் இங்கே என் அனுமதி இல்லாமல் குடியேறியது? நேர் எதிரில் வந்து நில்"  என்று ஆக்ரோஷமாக கேட்டார்.

சில நிமிட மௌனத்திற்குப் பிறகு எந்த விதப் பதிலும் எங்கிருந்தும் வராததால் ஹயக்ரீவருக்கு மேலும் கோபம் உண்டாயிற்று.

"இன்னும் ஒரு நாழிகைக்குள் என் முன் வராது போனால், இந்த மலையே துவம்சம் ஆகிவிடும்" என்று பயமுறுத்தினார்.

இதை கேட்ட ஆதிசேஷனுக்கு அடிவயிறு எரிந்த்தது.

ஒரே மூச்சில் ஹயக்ரீவரை "கபளீகரம்" செய்து விடலாமா? என்று தோன்றிற்று.

திருமால், மொனமாக ஆதிசேஷனைப் பார்த்து "பொறுமையாக இரு" என்று கண்களால் அடக்கினார்.

செடி, கொடி, மரங்களுக்கு இடுக்கில் மறைந்து கொண்டிருந்த அகஸ்த்தியருக்கு ஹயக்ரீவரின் முரட்டுத்தனம் கொஞ்சமும் பிடிக்கவில்லை. "திருமாலின் அவதாரமாகக் கருதப்படும் ஹயக்ரீவர், ஏன் இப்படி விகல்பமாக நடந்து கொள்கிறார்? இவருக்கு திருமால் தான் இங்கு வேங்கடனாதனாக அவதாரம் எடுத்திருக்கிறார் என்பது தெரியாதா? அல்லது கலிபுருஷன் ஹயக்ரீவரை வேண்டுமென்றே தூண்டிவிட்டு, சண்டை போடா அனுப்பி வைத்திருக்கிறானா? என்ன கொடுமை?" என்று மனம் வருந்தினார்.

ஆனாலும்,

ஹயக்ரீவரின் உக்கிரத்தை சந்திபடுத்த தன்னால் எதுவும் செய்யமுடியவில்லை என்று துடித்துக் கொண்டே வேங்கடவனைப் பார்த்தார்.

பெருமாள், புன்னகை பூத்தவாறே பொறுத்திரு என்று அகஸ்திய மாமுனிக்கு அடையாளம் காட்டினார்.

சில நாழிகை ஆக்ரோஷமாக நிலை கொள்ளாமல் தவித்த ஹயக்ரீவருக்கு யாரும் தன முன் வந்து பணிந்து நிர்க்காததைக் கண்டு "கலிபுருஷன்" மீது சந்தேகம் ஏற்பட்டது.

"வேண்டுமென்றே தன்னை கலிபுருஷன் தூண்டிவிட்டானா? இங்கு வந்து பார்த்தால், எல்லாமே கருங்கல்லாக இருக்கிறது. ஒரே ஒரு கற்சிலை மாத்திரம் திருமண் போட்டுக் கொண்டு அசையாமல் நிற்கிறது. மனித நடமாட்டமோ அல்லது வேறு பலமிக்க ராட்சதர்கள் நடமாட்டமோ இல்லை. மிருகங்கள் எல்லாம் கூட்டம் கூட்டமாக வேறு இடைத்தை நோககி ஓடுகின்றன. இதென்ன விசித்திரமாக இருக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்தார்.

"சரி! திரும்பி போய்விடலாம்!" என்று எண்ணித் திரும்பும் பொழுது "சரஸ்வதி தேவி" அவர் முன் தோன்றினாள்!

சித்தன் அருள்.................. தொடரும்!

6 comments:

  1. Congratulations Saravanan Palanisamy.

    ReplyDelete
  2. Congrats Mr. Saravanan sir for completing 50th picture in this auspicious thread. May God bless you.

    Om Lopamudra sametha Sri Agatheesaya Namaha
    Om Lopamudra sametha Sri Agatheesaya Namaha
    Om Lopamudra sametha Sri Agatheesaya Namaha

    ReplyDelete
  3. திரு.சரவணன், மலேஷியா great pictures sir

    ReplyDelete
  4. Anaivarukkum nandri....anaithum Agathiyarukke samarppikkiren!
    Om Agatheesaaya Nama!

    ReplyDelete
  5. Beautiful pictures by Shri. Saravanan. He will always enjoy the blessings of Agathiyar.

    ReplyDelete