​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 30 August 2014

அகத்தியர் அருள்வாக்கு - ஒரே தொகுப்பு!!


அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!

பெங்களூருவில் திரு கணேசன் அவர்கள் பொது நாடி வாசித்தது அனைவரும் அறிந்ததே! அதில் கூறப்பட்ட விஷயங்களை, எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்கிற எண்ணத்தில் "அகத்தியர் அருள்வாக்கு" என்கிற தலைப்பில் தட்டச்சு செய்து உங்கள் அனைவருக்கும் தந்திருந்தேன்.

தற்போது, அந்த நாடி வாசிப்பு, ஒரு pdf file ஆக தொகுத்து வந்துள்ளது. அது புத்தக வடிவில் வந்த பின் அதை தட்டச்சு செய்வதை விட, வேறு ஏதேனும் ஒரு தொகுப்பை உங்களுக்கு தரலாம் என்று தோன்றியது.

எனவே, என்னிடம் வந்து சேர்ந்த அந்த தொகுப்பை கூகிள் டிரைவில் சேமித்து வைத்து, அதன் தொடர்பை கீழே தருகிறேன். அனைவரும், சென்று எடுத்துக் கொண்டு, அகத்தியர் அருள் பெற வேண்டுகிறேன்.


கார்த்திகேயன்!


4 comments:

  1. ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி

    ReplyDelete
  2. https://www.youtube.com/watch?v=HwMYvhtBL6I...................... see agasthiyar jeevanadi in kutralam.....

    ReplyDelete
  3. Thank you very much for this great contribution. Due to problems with my PC, i missed this post earlier and saw it only to day. With the blessings of the great Guru Sage Agasthiyar, I have down loaded it.

    ReplyDelete