​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 20 August 2014

ஒதிமலை முருகர் பிறந்தநாள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

ஓதியப்பரின் நட்சத்திரம் (ஆவணி-பூசம்) இந்த வருடம் 23/08/2014 (சனிக்கிழமை) அன்று வருகிறது. அன்றைய தினம் ஒதிமலயில், ஓதியப்பருக்கு சிறப்பு வழிபாடுகள் உண்டு என்று கேள்விப்பட்டேன். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைத்து இந்த தொகுப்பு.

  • அன்று மதியம் ஒரு மணிவரை கோவில் திறந்திருக்க வாய்ப்பு உள்ளது.
  • சித்தர்களும் ஒதியப்பரை பூசை செய்து வழிபாடு செய்வார்கள் என்று கேள்வி.
  • மேலும் அன்று முதல் 90 நாட்களுக்கு எல்லா சித்தர்களும் அங்கு கூடி இருப்பார்கள் என்றும் ஒரு தகவல்.

விருப்பம் உள்ளவர்கள், அங்கு சென்று அவர் அருள் பெற்று வாருங்கள். எல்லாம் நல்ல படியாக நடக்க ஓதியப்பரை வேண்டிக் கொள்கிறேன்.

செல்லும் வழி : கோயம்பத்தூர் > அண்ணூர் > ஒதிமலை > 1800 படிகள் ஏறவேண்டும்!

கார்த்திகேயன்!

1 comment: