​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 21 August 2014

சித்தன் அருள் - 190 - அகத்தியர் அருள் வாக்கு - 4


ஆறாவது கேள்வி:- இறைக்கு வணக்கம்! அகத்தீசாய நமஹ! அஷ்டவக்ர மகரிஷியை பற்றி அதிகமாக ஒன்றும் தெரியவில்லை. சிறிது விளக்கமாக அவரைப் பற்றி கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் அவரின் உபதேசப்படி, "சாட்சி பாவனை" கை வரப்பெற்றால், பல பிறவிகளாக பிராணாயாமம், யோகா பயிற்சி, புனிதப்படுத்தல் ஆகிய செய்து, மோக்ஷம் அடைய வேண்டிய அவசியம் இல்லை. இக்கணமே மோக்ஷம் அடையலாம் என்று கூறுவதை விளக்கவும். அஷ்டவக்ரரின் உபதேசப்படி அனைவரும் அல்லது அதை கடை பிடிப்பவர், நிச்சயமாக சித்தியை அடையலாமா என்று கூறுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அகத்தியரின் பதில்:-  இறைவனின் கருணையால், உடல், அதாவது தேகம் எட்டு விதமாக பிரிந்து பார்ப்பதற்கு, அவலட்சணத் தோற்றத்தோடு, தன்னை இருக்குமாறு, இறையிடம் வரம் கேட்டு வந்த மிகப் பெரிய ரிஷி. அகுதப்ப, அஷ்டவக்ர ரிஷியாகும். இகுதப்ப, பலரும் அவரை பார்த்து பரிகாசம் செய்த பொழுது அவர் மௌனமாக அதனை எதிர் கொண்டார். இகுதப்ப, அகுதப்ப அந்த மகான் மட்டுமல்ல, ஒவ்வொரு நாழிகையும் தான் உணர்ந்ததை, தான் அடைந்ததை, தான் எந்த நிலையை நோக்கி நகர்ந்து வந்திருக்கிறோமோ  அந்த நிலைக்கு ஒவ்வொரு ஆத்மாவும் வரவேண்டும் என்ற பரந்த எண்ணத்தோடு உபதேசம் செய்கிறார்கள். ஆனால், சிக்கல் எங்கே இருக்கிறது. மாயையும், அறியாமையும் விடாதவரை, ஒரே கணத்தில் உயர்ந்த நிலை எந்த ஒரு ஆத்மாவுக்கும் சித்திக்காது.  இன்னவன் கூறியது போல எழுத்தும் தேவை இல்லை, அகுதப்ப, அஷ்டவக்ரரின் முறையை கடை பிடித்தால் முன்னேறி விடலாம் என்பது மெய்யிலும் மெய்யே. ஆனால், அதை கண்டு, உணர்ந்து, கேட்டு, புரிந்து கொள்வதற்கு, ஒரு ஆத்மாவிற்கு, கோடிக்கணக்கான பிறவிகள் தாண்டிவிடுமே, எனவே, அப்படி ஒரு நிலையில் இருப்பவனுக்குத்தான், இகுதப்ப உபதேசம் உண்மையாக, மெய்யாக புரியுமப்பா. இல்லை என்றால், வெறும் செவி வாயிலாக எத்தனையோ ஞான நூல்களை மனிதன் வாசிக்கிறான் அல்லாவா, என்ன வாசித்தாலும், அதை எல்லாம் வெறும், ஏட்டோடு, செவியோடு என்று வைத்துவிட்டு, தனக்கென்று வரும் பொழுது, மிக மிக மிக கீழ்த்தரமாக நடந்து கொள்கிறானே அதை விடாதவரை, எந்த ஒரு ஆத்மாவும், மேலேறுவது கடினம். எனவே உன்னதமான உயர்ந்த அஷ்டவக்ர மகரிஷியை அன்றாடம் நினைத்து, குறிப்பாக குருவாரம் விரதமிருந்து  அன்னவரை நினைத்து மானசீகமாக வழிபாடு செய்தால், கனவிலோ, நேரில் வேறு வடிவில் வந்து மேலும் பல உபதேசங்களை அவர் செய்ய இறைவன் அருளால் காத்திருக்கிறார். 

ஏழாவது கேள்வி:- ஐய வினாவாக ஒரு கேள்வியை நான் கேட்கின்றேன். பரணி, கிருத்திகை நட்சத்திரத்திலும், அஷ்டமி, நவமி திதியிலும் அனுமந்த தாசன் அவர்கள் ஓலைச்சுவடியில் கூறுவது போல், அவர் கூறுகின்ற மாத்திரத்திலே அவர் சொல்லியிருக்கின்றார் அஷ்டமியோ நவமியோ சேர்ந்தாலோ, பரணியோ, கிருத்திகையோ வந்தாலோ நான் வாக்கை அளிப்பதில்லை, அப்படி அளித்தாலும், சிறிதுகாலம் ஏற்ப்படும், தடை ஏற்ப்படும் என்று சொல்லுகின்றார். நான் குறிப்பிட்ட நேரத்தில் வரவேண்டும் என்று புத ஹோரையிலே புறப்பட்டேன். சந்திர ஹோரை, சனி ஹோரை தவிர்த்து, குரு ஹோரை வரும் பொழுது, குரு கூடிவிட்டால் எல்லாம் ஏற்பட்டு விடும் என்று நிலை கூறுவதற்காக, இது எற்ப்பட்டதோ என்று ஒரு ஐயப்பாடு என்னுள் இருக்கிறது. குரு ஹோரையை தேர்ந்தெடுத்தால், அனைத்தும் ஆகிவிடும் என்ற 
நிலை எற்ப்பட்டதோ என்ற ஐயப்பாடு என்னுள் இருக்கின்றது. ஆகையினால், தாங்கள் இந்த ஐயத்தை நீக்கவேண்டும் என்று கூறி, அனுமந்த தாசன் கூறியது போல், பரணி கிருத்திகை வந்தாலோ, அஷ்டமி நவமி வந்தாலோ, நான் வரமாட்டேன் என்பது, வாக்கை அளிக்கமாட்டேன் என்பது இல்லை. குருவிடம் சேர்ந்தால் அனைத்தும் கிடைக்கும் என்பது உண்மையா? என்பதை நான் ஐயப்பாட்டுடன் கேட்கிறேன்.

அகத்தியரின் பதில்:- இறைவனின் கருணையை கொண்டு இயம்புவது யாதென்றால், பரணியோ, அஷ்டமியோ, நவமியோ, கிருத்திகையோ, சந்திராஷ்டமமோ, எமக்கு எதுவும் இல்லையப்பா. என்னை பொருத்தவரை, பொறுமையுள்ள மனிதன் வந்து அமர்ந்தால் போதும், நாங்கள் அல்லும், பகலும் 60 நாழிகையும் வாக்குரைக்கத் தயார், இறைவன் அனுமதித்தால். ஆயினும், சுருக்கமாக, வெளிப்படையாக கூறவேண்டும் என்றால், வருகின்ற மனிதனின் பூர்வீக பாபங்கள் கடுமையாக இருக்க, அவன் வினவுவதும் லோகாய விஷயமாக இருக்க, ஏற்கனவே பாபங்கள் அவனை முன்னேற விடாமல் தடுத்துக் கொண்டு இருக்க, வேதனையுடன் வந்து அமரும் அவனுக்கு, ஏதாவது ஒரு வழியை காட்ட வேண்டும் என்றால், விதி வழி விட வேண்டும். ஆனால், அதற்க்கு, லோகாதாய விஷயமாக அவன் கேட்கின்ற வினாவிற்கு நாம் இறைவன் கருணையால் விடையை கூறி அவன் துன்பத்தில் இருந்து மேலேறி வருவதற்காகத்தான் நாங்கள் காலத்தை பார்க்கிறோமே தவிர, பொதுவாக ஞானத்தை அறிந்து கொள்வதற்கு எக்காலமும் தடை அல்ல.

சித்தன் அருள்.................. தொடரும்!

3 comments:

  1. Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!

    ReplyDelete
  2. ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி

    ReplyDelete
  3. ஓம் அகத்தீசாய நமஹ.
    சாட்சி பாவனை என்பது என்ன?
    அதைப்பற்றி சற்று விளக்கமாக கூறுங்கள் ஐயா.
    நன்றி...
    லோகநாதன் ஜி.
    loganathang24@gmail.com

    ReplyDelete