​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 19 June 2014

சித்தன் அருள் - 179 - கஞ்சமலை - முருகர் மயில் வாகனத்தை அமைத்துக் கொண்ட படலம்!


ஒருநாள், பூசை முடித்து, பலருக்கும் நாடி வாசித்து அகத்தியர் அருள் வாக்கை சொல்லி, இன்று இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என்று நினைத்த பொழுது, அகத்தியரிடமிருந்து,  உத்தரவு  பிறந்தது.

"உடனேயே நண்பர்களுடன் "கஞ்சமலைக்கு" சென்று முருகர் அருள் பெற்று அங்கே அமருக. யாம் அங்கு வந்து வாக்குரைப்போம்." என்று கூறினார்.

என்ன இது, இந்த நேரத்தில் எப்படி செல்ல முடியும்? என்று யோசித்து, அகத்தியர் சொன்னால் ஏதேனும் விஷயம் இருக்கும் என்று உணர்ந்து, நண்பர்களை அழைத்து, அவர்களுடன் புறப்பட்டேன்.

அடுத்த நாள் காலை கஞ்சமலையில் முருகர் தரிசனம் பெற்று, அகத்தியர் சொற்படி, ஒரு நல்ல இடமாக தேர்ந்தெடுத்து, அமர்ந்து, நாடியை பிரித்தேன்.

பிரித்த வேகத்திலே அகியத்தியரின் அருள் வாக்கு வந்தது.  
"நவ நாகரீக சொற்படி, சிறிது இடைவேளைக்குப் பிறகு அகத்தியன் தொடர்கிறேன். இங்கு ஒரு அதிசயத்தை நீ பார்த்தாயா? இங்கிருந்து மேற்குப்புரம் இருக்கிற என் உருவத்துக்கு தொந்தியை அதிகமாக்கி, என்னை வயதான கிழவன் போல் ஆளாக்கிவிட்டீர்கள். லோபாமுத்திராவை, 18 வயது இளம் பெண்ணாக காட்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். மனிதர்கள் எப்படிப் பட்டவர்கள் என்று யோசித்துப் பார்த்தேன்.  என்னையே கேலி செய்கிறான். எனக்கு வயது எழுபதாம், அவளுக்கு 18ஆம். அந்த உருவத்தில் தான் உருவச்சிலை அமைந்திருக்கிறது.  அதை விட்டுவிடு. நீ உட்கார்ந்த இடத்தில் அகத்தியன் வாக்கு உரைக்கப் போகிறேனே, இடத்துக்கு மேலே அகத்தியன் சிலையும் இருக்கிறது. அதைப் பார். அதை 90 வயது கிழவனாக காட்டியிருக்கிறார்கள். எப்படியடா இந்த வித்யாசம். ஆக, அகத்தியன் சொல்வதை யாருமே நம்ப மறுக்கிறார்கள் என்பதைத்தான் சொல்லிக் காட்டினேன்.  நான் அப்படிப் பட்டவனல்ல என்று என்னை நானே, சுய புராணம் போட்டு உங்களிடம் அடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நானே இருக்கிறேன் என்று சொல்லத்தான் இதை ஆரம்பித்தேன்.  ஆகவே, மனிதர்கள், நினைத்தால், கடவுள்களை, எப்படிவேண்டுமானாலும் மாற்றுவார்கள் போலும். ஆகவே, கடவுள் இதை எல்லாம் தாண்டி நிலையாக இருப்பவன். இதெல்லாம் தாண்டி இருப்பவன், ஆசைக்கு அப்பாற்பட்டவன் என்றாலும் கூட, மனிதர்கள் எப்படியெல்லாம் தங்கள் ஆசைக்கு, ஒரு உருவம் வரைந்து, தெய்வங்களை மறு பரிசீலனை செய்வது போல, இதை எல்லாம் மாற்றி அமைத்திருக்கிறார்கள் என்று லேசாக எடுத்துக் காட்டினேன். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இந்த புனிதமான இடத்தைப் பற்றி, ஏதாவது செய்தியை சொல்லித்தான் ஆகவேண்டும். யாருக்கும் தெரியாது தெய்வ ரகசியங்கள் என்று பல நேரங்களில் சொல்லியிருக்கிறேன். தெய்வ ரகசியங்களை எல்லாம் அகத்தியர் மைந்தனுக்கு அவப்போது உரைத்திருக்கிறேன். எந்தவித காரணம் கொண்டும், இதை வெளியே சொல்லக் கூடாது என்று சொல்லியிருக்கிறேன். அப்படி எதற்காக சொல்கிறாய் என்று கேட்ப்பான். அவனுக்கு தெரிய வேண்டும், காலத்துக்கு முன்னாலே, உங்களுக்கெல்லாம் பின்னாலேதெரிய வரும். பெரும்பாலும் இருப்பவர்கள் எல்லாம் அவசரக் குடுக்கைகள். சந்தோஷத்தை கட்டுப் படுத்த முடியாமல், ஆன்மீகத்தில் பரவசம் அடைந்து, தங்களை, தாங்களே என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அப்படியே எல்லோரிடமும் சொல்லிவிடுவதால், நல்லதை விட கெடுதலே அதிகம் நடக்கிறது. சில சமயம் நடக்காமலே போய் விடுகிறது. மனதை அடக்க பழக வேண்டும் என்பதற்காகவும், வாழ்க்கை துணையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், துக்கமும் வாழ்க்கையும், இரண்டும் கலந்தது என்றுதான், மனம் எப்படியெல்லாம் துடிக்கிறது, வாழ்கிறது என்று சொல்லத்தான், சில சூட்ச்சுமா ரகசியங்கள் எல்லாம் சொல்ல வேண்டும். அகத்தியன் உங்களுக்கெல்லாம் ஆன்மீக பாடங்களை நடத்த வரவில்லை. சில அதிசயமான செய்திகளைச் சொல்லி, இந்த பழம் பெரும் தமிழ்நாட்டில், எப்படி எல்லாம் சித்தர்கள் வாழ்ந்தார்கள் என்று சொல்லி, என்ன மாதிரி எல்லாம் உலகத்தை ஆட்டி வைக்கிறார்கள் என்பதெல்லாம் சொல்லி, இவற்றை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், ஏன் என்றால் நீங்கள் சித்த நிலையை நோக்கி வந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு சரியான முறையில் பாடம் கற்பிக்காவிட்டால், நீங்கள் திசை மாறி போய்விடக் கூடும். அதற்காகத்தான் அவ்வப்போது ஒரு சில பாடங்களை  சொல்லுகிறேனே தவிர, நான் உனக்கு ஞானத்தை போற்றும் .குருவாக அல்ல. ஏன் என்றால், ஞானம் என்பது அவ்வளவு எளிதில் கிடைக்காது. அனுபவம் கிடைக்காததெல்லாம் தந்திருக்கிறேன் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஏன் என்றால், இந்த ஆன்மீக பயணம் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த செய்திகள் சித்திக்கும். ஆன்மீக பயணம் இல்லாமல் அவசரக் குடுக்கைகள், எத்தனையோஆசைகளை மனதில் வைத்துக் கொண்டு செல்பவர்களுக்கெல்லாம் இந்த அகத்தியன் சொல்கிற வார்த்தைகள் ஏறாது. அகத்தியனை நம்புகிறார்கள், அது வேறு கதை. அகத்தியன் சொல்கிற வார்த்தைகளில் சூட்ச்சுமம் இருக்கிறது என்று சொல்ல, என்னை நானே கட்டாயப் படுத்திக் கொள்ள தலைப் பட்டிருக்கிறேன். காரணம், தெய்வ ரகசியங்கள் எல்லாம் மிக அற்புதமானது. இது போன்ற ரகசியங்கள் எல்லாம் இந்த பூமியில் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஆக, இதெல்லாம் அகத்தியன் உட்பட அத்தனை சித்தர்களும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு, இந்த மாந்தர்க்கு தெரிவித்தால் நன்றாக இருக்குமே என்ற பரந்த மனப்பான்மையுடன், அது வேறு விதமாக திசை மாறிவிடக் கூடாது என்பதற்காகத்தான், எங்களை நாங்களே வார்த்தைகளை கட்டுப் படுத்திக் கொண்டு, மனதை சுத்தப் படுத்திக் கொண்டு, சிறிதாக, ஆனால் சுருக்கமாக, சூட்ச்சுமா ரூபத்திலே நாங்கள் சில வார்த்தைகளை சொல்ல வேண்டி இருக்கிறது.

கந்த ஆஸ்ரமம் என்று இதற்கு பெயர் வைத்திருக்கிறது. இதற்கு முன்பு, முருகப் பெருமான், சிறு வயது முதலே, இங்கு தான் நடமாடியிருக்கிறான், விளையாடி இருக்கிறான். சிறுவனாக தவழ்ந்து, மலர்ந்த இடம் என்று சொன்னால், நிறைய பேருக்கு தெரியாது. அது வேறு ஒரு இடமாயிற்றே, அதெப்படி முருகன் இங்கு வந்தான் என்று கேள்வி கேட்ப்பார்கள். ஏன் என்றால், இங்கு தான் முருகப் பெருமான் காலில் மணி ஓசை ஓட, இடைப்பட்ட மேகலா ஆபரணம் ஆட, கழுத்தில் மணி தொங்க, பூத்து, கண்ணில் அறிஒளி பொங்க, குடு குடுவென்று ஓடி வந்த இடமடா இது. பாலமுருகனை நீங்கள் பார்த்ததில்லை. அகத்தியன் பார்த்திருக்கிறேன். அந்த பால முருகன் எப்படி எல்லாம் விளையாடினான் தெரியுமா? அவன் அருமையான கன்னங்களில் இருந்து வருகின்ற சிரிப்பொலி எல்லாம், இந்த மலைப்புரத்தில் ஒரு காலத்தில் எதிரொலித்தது. 29 மலைகள் இங்கிருக்கிறது என்று சொன்னேன். இந்த 29 மலைகளிலும், பால முருகன் தன் பிஞ்சு விரல்களால் நடமாடியிருக்கிறான்.  சிறுவனாக ஓடியிருக்கிறான்.  தேடிப்பிடிக்க முடியாமல் பெண்மணிகள் எல்லாம் காணாமல் திகைத்திருக்கிரார்கள். செல்லுவான், அங்கு வருவான். இப்படி 29 மலைகளிலும். பிறகு தான் தெரிந்தது, 29 மலைகளிலும் எத்தனை ரகசியங்கள் இருக்கிறது என்று.  எல்லோருக்கும் காட்டவே, இந்த பால முருகன் பல அதிசயங்களை செய்து காட்டினான் என்று, அந்த கார்த்திகை பெண்களுக்குத் முதலிலே தெரியாது.  அதையும் தாண்டி வருகிறேன். பாலனை பற்றி சொல்லிக் கொண்டு போனால், நேரம் அதிகமாகும். 

முருகன் பார்த்தான். தனக்கு ஒரு அதிகார நந்தியாக ஒரு வாகனத்தை ஏற்படுத்திக் கொடு என்று அப்பனை கேட்டான். அம்மன் ஆனா தாயைப் பார்த்தான், அவளோ, சிம்ஹ சொருபிணியாக இருக்கிறாள். ஒருவர் சிம்மம், ஒருவர் காளை என்று முரட்டுத்தனமாக போய் கொண்டிருப்பது சரியாகத் தோன்றவில்லை. இதெல்லாம் எனக்குப் பிடிக்காது. எனக்கு மென்மையான வாகனம் வேண்டும் என்று கேட்ட பொழுது தான், இங்கே தான் முருகன் தன் வாகனமான மயிலை தேர்ந்தெடுத்த இடம்.

சித்தன் அருள்................ தொடரும்

13 comments:

  1. Very interesting information so kindly shared by Sri Agastya about Lord Murugan spending some of His childhood at Kanjamalai. Till now, I was under the impression that He grew up in Plaeides or Mars.

    ReplyDelete
  2. அகத்தியரிடமிருந்து செய்தி வந்துவிட்டது!

    *ஓம் அகத்திசாய நாம:*

    ReplyDelete
  3. Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!

    ReplyDelete
  4. ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி

    ReplyDelete
  5. அய்யன் அகத்தியர் மகரிஷி வாயிலாக, அப்பன் முருகன் வரலாறு.
    அற்புதம்.

    ஓம் ஸ்ரீ அகத்தீசாய நம.

    ReplyDelete
  6. Karthik sir

    Pl forgive me for asking a silly question. Where exactly this kanjamali

    ReplyDelete
    Replies
    1. http://temple.dinamalar.com/en/new_en.php?id=1062

      Delete
    2. Dear Sir

      Thanks for the link about . Extraordinary.

      Delete
  7. Does anyone know has info about Thanjavur J.Ganesan Jeeva Nadi Reading ?? I heard he will start his reading from Mid-June ??

    ReplyDelete
    Replies
    1. Dear Sir
      Pl send mail to Shri Ganesan Ayya to the following mail id and you will get prompt reply.

      arut.kudil@gmail.com

      Delete