​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 5 June 2014

சித்தன் அருள் - 177 - ஆதிசேஷன் தரிசனம்!

[புகைப்பட நன்றி: திரு சரவணன், மலேஷியா]

ஆனால் அதற்காக அவர்களை குறை சொல்ல மாட்டேன். அவர்களுக்கு வேறுவழியில் அகத்தியன் தரிசனம் கிடைக்கும். அதுமட்டுமல்ல, எப்போதும் அனைவருக்குமே தரிசனம் காட்டவேண்டும் என்று, சித்தர்கள் ஒளி வடிவில் உலா வருவார்கள். அன்றைய தினம் 18 சித்தர்கள் ஒளிவடிவமாக காணவில்லையா? 18 சித்தர்களும் ஒன்றாக சேர்ந்து கண்ணீர் விட்டார்களே! இல்லை என்று சொல்ல முடியுமா? இன்னொன்று சொல்கிறேன். ஒரு சித்தனே மனித உருவமாக வந்து பாறையில் படுத்துக் கிடந்தானே. சற்று தவறி விழுந்திருந்தால், 2000 அடி பள்ளத்தில் விழுந்திருப்பானே. ஏன் நிகழவில்லை. அவன் சித்தனடா! அந்த சித்தனை தரிசனம் செய்தீர்களே. இத்தனை அரிய காட்சிகள் எல்லாம் யாருக்கு கிடைக்கும்? 

அன்றாடம் சதுரகிரி மலையில் ஆயிரமாயிரம் இந்த சித்துக்கள் நடந்து கொண்டிருக்கிறது. அதை அகத்தியன் மட்டும் அறிவேன். அகத்தியன் மைந்தனுக்கும் சொல்லிக் கொடுக்கிறேன். அவன் விருப்பபட்டு, ஓலைச்சுவடியில் காணவேண்டும் என்றால், அவன் கண்ணுக்கு மட்டும் காட்சி கிடைக்க அதிகாரம் கொடுத்திருக்கிறேன். அந்த பாறையில் படுத்துக் கிடந்தானே ஒருவன்; பதறிப் போனார்களே இவர்கள். சற்று விலகியிருந்தால் அவன் 2000 அடி பள்ளத்தில் விழுந்து இறந்திருப்பான். விழுந்திட, அவன் சித்தனடா. எப்படியடா விழுவான். அவன் தான் அந்தரத்தில் தொங்கிக் கொண்டே தூங்கிக் கொண்டிருக்கிறானே. அவன் எப்படி விழுவான்? சித்தனையே காட்டியிருக்கிறேன் மனிதர்களுக்கு. ஏன் என்றால் பலருக்கும் சித்தன் கண்ணுக்கு தென்படுவாரா? ஒளிவடிவாகத்தான் தென்படுவாரா என்ற கேள்வி. ஒளிவடிவமாக சித்தர்கள் காட்சி தந்தாலும், முழுவடிவில் சித்தர்கள் நடமாடுவதை காட்டியிருக்கிறேன். அந்த காட்சிகள் யாருக்கு கிடைக்கிறதோ அவர்கள் பாக்கியசாலிகள்.  எத்தனையோ பாபங்கள் இருந்தாலும், தெரிந்தோ தெரியாமலோ, காலத்தின் கட்டாயத்தால் செய்திருந்தாலும், அவர்கள் மனிதர்கள். நான் குறை சொல்ல மாட்டேன். அவர்கள் கட்டாயம் அந்த பாபத்தை செய்தாகவேண்டும். செய்தால் தாண்டா புண்ணியம் வரும். ஆனால் சில பாபங்களை அளவுக்கு மீறி செய்யக் கூடாது. செய்த பாபத்தை நினைத்து வருந்தினால், மோக்ஷம் கிடைக்கும். இவைகள் எல்லாம் விதிகளில் எழுதப்பட்டிருக்கிறது. ஆக, தெரிந்தோ, தெரியாமலோ, பிழைப்புக்காக, குடும்பத்துக்காக, உலகியல் வாழ்க்கைக்காக, சில தவறுகளை செய்யவேண்டிவரும். அந்த தவறுகள் இறைவன் படைப்பு. ஆக, அந்த இறைவன் படைத்த விதியை, அகத்தியன் எதிர்த்து போராடமாட்டேன். அவர்கள் வாழ்க்கையிலும் நல்லதை செய்வதற்காகத்தான், எத்தனையோ அதிசயங்களை செய்து வருகிறேன். என்னடா இது சம்பந்தம் இல்லாமல் எங்கெங்கோ நுழைகிறானே, என்றெல்லாம் எண்ணம் வருகிறதா. ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் இருக்கிறது. எவன் ஒருவன், அகத்தியன் பால், சரணாகதி என்று விழுந்துவிட்டானோ, அவனுக்கு எந்த வித குறையும் இல்லாமல் பார்க்க வேண்டியது அகத்தியன் கடமை. அகத்தியன் அவர்களையும் காப்பாற்றுவேன், என்ற மங்களமான வார்த்தையை சொல்லி, 18 சித்தர்களையும் ஒளிவடிவமாக, காட்டியிருக்கிறேன். முக்கண்ணனையும் காட்டியிருக்கிறேன். முத்தேவர்களையும் காட்டியிருக்கிறேன். அகத்தியன் செய்த அந்த யாகத்தின் வாசனையை நுகர வைத்திருக்கிறேன். சித்தர்கள் வழி நடத்தி, இறங்கி, பத்திரமாக கொண்டு சேர்ப்பது வரை காட்டியிருக்கிறேன்.

பைரவசித்தர், வந்தாரே தெரியுமா? அந்த பைரவ சித்தர் அங்கு வந்து, நோட்டம் கொடுத்து, தலையை சாய்த்து, சித்தர்களோடு நடந்து பின் நோக்கி போன காட்ச்சியை கண்டீர்களே. ஏன் வந்தார் தெரியுமா? மிகப் பெரிய சர்ப்பம், ஆதி சேஷன் அங்கு தான் அமர்ந்திருந்தான். அன்னவனும் அகத்தியன் நடத்துகின்ற யாகத்தை கண்டு களிக்க அமர்ந்த இடம் அது. அவனுக்கு எப்போதும் இருட்டு தேவை. பாம்பென்றால் இருக்க குழி தேவை. அங்கிருந்து மூச்சுவிட்டு, அகத்தியன் செய்த யாகத்தை கண்டான். யாரும் நடந்திருந்தால், அவன் மூச்சு பட்டிருந்தால், மயக்கம் போட்டு விழுந்திருப்பார்கள். விஷம், ஆலகால விஷம் அங்கிருந்தது. அந்த கார்க்கோடகனே அங்கு வந்து அமர்ந்ததையும், பைரவர் அதை எடுத்துக் காட்டி நடந்ததையும் யோசித்துப் பார். ஒருமுறை தலை சாய்த்து, மறுபடியும் தலை சாய்த்து, ஆதிசேஷனை வணங்கி, அவன் உத்தரவையும் வாங்கி, பைரவ சித்தர் தலை குனிந்து நடந்ததையும் தொடர்பு படுத்திப் பார். தப்பித்தவறி, அந்த விஷம் பட்டிருந்தால், அந்த விஷக் காற்று பட்டிருந்தால்; ஆதி சேஷன் யாருக்கும் கெடுதல் செய்ய மாட்டான். கார்க்கோடகன்தான் அவன். ஆனால், சீறமாட்டான். அன்றைக்கு அவன் வந்திருந்ததெல்லாம், அமர்ந்திருந்தது எல்லாம், கண் மூடி அகத்தியன் செய்கிற யாகத்தை நோக்கியே இருந்தது. அவன் கண் திறந்திருந்தால் நிலைமை வேறு. அவன் த்யானத்தில் இருக்கும் போது தான் இவன் உள்ளே சென்றிருக்கிறான். த்யானத்தில் இருக்கும் பொழுது, த்யானம் கலைக்க கூடாது என்று, யாரையும் போக விடவில்லை. தவசிகள், முனிவர்கள், முனி புங்கவர்கள் அத்தனை பேர்களுமே அங்கு அமர்ந்திருந்த காலம். அவர்கள் த்யானம் கெடக் கூடாது என்பதற்காகத்தான், யாரையுமே அங்கு செல்லாமல் தடுத்தாட்கொண்டார். அது யாரென்று யாம் அறியேன்!

இத்தகைய வாக்குகளை முன் கூட்டியே எச்சரிக்கை செய்த காரணம், அவனது வாக்கில் சித்தர்களே வாயிருந்து தடுத்ததுதான். அதை அவனாகச் சொல்லவில்லை. சமயத்தில் சொல்ல வைத்தோம். யாகம் செய்கிறபொழுது, தொந்தரவு செய்யக் கூடாது. யாகத்தில் கலந்து கொண்டவர்கள் அவன் கோபத்துக்கு ஆளாக வேண்டிவரும். ஆக! எவ்வளவு ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும் தெரியுமா? மலை மேல் ஏறிவிட்டால் மகானை தரிசனம் செய்துவிடுவோம் என்று எண்ணிவிடக்கூடாது. மகான்களின் தரிசனம் கிடைப்பது அவ்வளவு எளிதல்லவே. ஆக பல பிரளயங்களுக்கு பிறகு நடந்த ஒரு யாகத்தைத்தான் இவர்கள் கண்டிருக்கிறார்கள். 18 சித்தர்கள் மட்டுமல்ல, வழி எங்கும் சித்தர்களை நடமாட விட்டேன், பாதுகாப்புக்காக.  யாருக்கும் எந்த வித அசம்பாவிதமும் நடக்காமல், அன்றைய தினம் பத்திரமாக  வேண்டும். அன்று யாருக்குமே எந்த வித அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஆனால் அன்றைக்கு மறுநாளைக்கு, அங்கிருந்த இரு பசுக்கள், புலியால் கொல்லப்பட்டு இருக்கிறது. அந்த அடர்ந்த வனத்துக்கு எட்டு காத தூரம் தள்ளித்தான் புலிகள் உலாவும். புலியின் உறுமலும், கரடியின் கர்ஜனையும் பலருக்கும் காதில் விழுந்திருக்கும். எதற்காகச் சொன்னேன் என்றால், அது வேற கதை. தவறான இடம் நோக்கிச் சென்றதால், அந்த பசுமாடுகள், அங்கு போகக்கூடாத இடங்கள் சில உண்டு. அதை மீறி சென்றதால், அந்த பசுமாடுகள் கொல்லப்பட்டது. அது விதி, உயிர் கொலை அல்ல. ஒரு சித்தன் தான் அந்த புலியாய் இருந்து அந்த பசுமாடுகளை மோக்ஷத்துக்கு அனுப்பிவைத்தான். இதைத்தான் சொன்னேன், பல அதிசயங்களும் சதுரகிரியில் அன்றாடம் நடக்கிறது. எதற்காகச் சொல்லுகிறேன் என்றால், இதுபோல அதிசயங்கள், 11247 அதிசயங்கள் சதுரகிரியில் நடந்து இருக்கிறது. அது ஒவ்வொன்றும் சொல்லவேண்டும் என்றால் யுகம் காணாது. அகத்தியன் சொல்வதை வேகமாக உங்களால் குறித்துக் கொள்ள முடியாது. அந்த கதைகளை பேச வேண்டிய நேரம் இது இல்லை. அஸ்வினி நட்சத்திரம் மறைந்து, பரணி நட்சத்திரம் உதயமாகிக்கொண்டு இருக்கிற நேரம் இது. இதுவரை சதுரகிரி சென்றதெல்லாம், கண்டதெல்லாம், அகத்தியன் சொன்னபடி நடந்ததெல்லாம் அத்தனையும் பக்குவமாய் இருந்தது. அகத்தியனே மனம் மகிழ்ந்து போனேன். யார் யாருக்கு இந்த பாக்கியங்கள் எல்லாம் கிடைக்கவேண்டுமோ கிடைத்தது. யார் யார் செய்த புண்ணியங்கள் எல்லாம் பிரிந்தது, கழிந்தது. செய்த தவறுகளுக்கும் பிராயச்சித்தமாகவே, இங்கு வரச் சொல்லியிருக்கிறேன். உங்கள் அத்தனை பேருக்கும் அந்த பாக்கியம் கிடைத்தது. இப்பொழுது யான் பொதிகை நோக்கி செல்லுகின்றோம். ஆங்கே சிவபெருமான் அமர்ந்து கொண்டிருக்கிறான். அவனுக்கு கால் பிடித்து விடவேண்டிய பொறுப்பு ஒன்று இருக்கிறது. அனைவருக்கும் அகத்தியனின் அருளாசி.

[அகத்தியர் அடியவர்களே, சித்தன் அருளில் சதுரகிரி பயணம் இத்துடன் நிறைவு பெற்றது. அகத்தியர் அருளால், எதேச்சையாக சதுரகிரி மகாலிங்கத்தை பார்க்கவேண்டும் என்று சென்ற எனக்கும், என் நண்பர்களுக்கும் அந்த யாகத்தில் பங்கு பெறுகிற பாக்கியம் கிடைத்தது என்பது, அளவிட முடியாத ஒரு சுகானுபவம். எங்கள் வாழ்க்கையும் அன்றே இனிதாக நிறைவு பெற்றது என்பதில் ஒரு சந்தோஷம். எல்லாம் அவர் செயல்.]

சர்வம் லோபமுத்திரா சமேத அகஸ்தியர் சித்தருக்கே சமர்ப்பணம்!

சித்தன் அருள்............. தொடரும்!

7 comments:

  1. Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய சரணம்.

    எம் பாவங்களையெல்லாம் போக்கி,எம்மை இறை வழியில்,சித்த வழியில் வழிநடத்தும் பிரபு.

    ReplyDelete
  3. Every thursday, first thing I do after logging in to visit this thread. I should thank shwethasri who has introduced me to this thread. Thank you kartikeyan sir for updating and enlighting us every week with wonderful siddhi's of Shri Agatheeswar. Waiting for more.

    Om Lobhamutra sametha Agatheesaya Namaha
    Om Lobhamutra sametha Agatheesaya Namaha
    Om Lobhamutra sametha Agatheesaya Namaha

    ReplyDelete
  4. Romba Santhosham that you particiapted in this yagam. God Bless! and Thanks for every week's posts.

    ReplyDelete
  5. Dear Karthikeyan, approx. in which year was this yagam at Saturagiri?

    ReplyDelete
  6. ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி

    ReplyDelete
  7. Om Sri Agatheesaya Nama.
    Om Sri Agatheesaya Nama.
    Om Sri Agatheesaya Nama.
    Om Sri Agatheesaya Nama.
    Om Sri Agatheesaya Nama.

    ReplyDelete