​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 5 August 2013

முருகர் பிறந்த நாள் - செப்டம்பர் 02, 2013


வணக்கம்!

போகர் சித்தர் கூற்றுப்படி முருகப்பெருமான் ஆவணி மாதம் பூச நட்சத்திரத்தில் பிறந்ததாக அறிய முடிகிறது. இந்த வருடம் அவரது பிறந்தநாள் நாள் செப்டம்பர் 02ம் தியதி வருகிறது. நுணுக்கமாக பார்த்தால், அவர் பிறந்ததாக கூறிய திங்கட்க்கிழமை அன்று இந்தவருடம் அவர் நட்சத்திரம் வருகிறது. அகத்தியப் பெருமானுக்கு குருவாக இருந்து உபதேசம் செய்த மஹா குருவான முருகரின் பிறந்த நாளை அன்றைய தினத்தில் எந்த கோவிலிலும் உணர்ந்து செய்வதாக தகவல் இல்லை.  அகத்தியர் அடியவர்கள் ஆன நாம் அன்று அவர் ஆசிர்வாதம் / அருளை பெற ஏதேனும் ஒரு நல்லதை செய்வோம்.

என் நண்பர் பகிர்ந்து கொண்ட ஒரு தகவலை உங்களுக்கு தர விரும்புகிறேன். ஒதிமலை முருகர் கோவிலில் கடந்த மூன்று ஆண்டுகளாக அன்றைய தினம் முருகருக்கு அபிஷேக ஆராதனை செய்து வருகிறார்களாம். அந்த நேரத்தில் மனிதர்களான நாம் மட்டுமன்றி சித்தர்களும் அரூபமாக வழிபாடு நடத்துகிறார்கள். அன்று முதல் 90 நாட்களுக்கு சித்தர்கள் அனைவரும் அந்த மலையில் இருந்து முருகரை வழிபடுவார்களாம். நம்மிடம் நேர்மை இருந்து, த்யானத்தில் அமர்ந்தால் நமது மனக்கண்ணில் அவர்கள் பூசையை, அவர்களை காணமுடியும் என்று கூறுகிறார். வசதி உள்ளவர்கள் அன்றைய தினம் சென்று வாருங்கள்!

சென்று அவர் அருள் பெற்று நலமுடன் வாழ்க!

கார்த்திகேயன்!

7 comments:

  1. பயனுள்ள,அனைவருக்கும் அருள் கிடைக்ககூடிய அருமையான தகவல். நன்றிகள் பல அய்யா .

    ReplyDelete
  2. அய்யா ஒரு சிறிய விண்ணப்பம்! சரியா? தவறா? என்று தெரியவில்லை ஆனாலும்,..... அப்பன் முருகனை முருகர் என்று, அழைப்பதை விட முருகன் என்று அழைத்தால்தான் அவன் நம்முடன் நெருங்கி வருவது போல் இருக்கிறது .
    முருகா சரணம்! அழகா சரணம்! அப்பனே சரணம்!
    அருள்வாய் குருவே! அகிலம் யாவும் அருளுடன் வாழ.

    ReplyDelete
  3. ஓம் நமகுமாராய !
    ஓம் நமகுமாராய !
    ஓம் நமகுமாராய !
    ஓம் நமகுமாராய !
    ஓம் நமகுமாராய !
    ஓம் நமகுமாராய !

    ReplyDelete
  4. அன்புள்ள அய்யா அவர்களுக்கு,

    அய்யா, ஓதிமலைக்கு செல்ல பஸ் ரூட் சொன்னால் மிகவும் நன்றாய் இருக்கும்.

    அன்புடன்,

    மு.மோகன்ராஜ், மதுரை..

    ReplyDelete
    Replies
    1. கோயம்பத்தூர் காந்திபுரம் சென்று அங்கிருந்து அண்ணூர் செல்ல வேண்டும், அண்ணுரிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் ஒதிமலை. அண்ணூர்-ஒதிமலை பயணத்திற்கு போக்குவரத்து வண்டியை நாம் தான் அமைத்துக்கொள்ளவேண்டும். பஸ் கிடையாது. அடிவாரம் வரை பாதை உள்ளது.

      Delete
  5. vasathiullavar endru sollamal thannal poga muyandravarkal ena kooralame?

    ReplyDelete