​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 15 April 2012

வாசி நிலை அறிய அகத்தியர் கூறும் வழி!

அகத்தியர் பன்னிரெண்டாயிரம்

சித்தனாகும் பூரணத்தைக் கும்பத்தில் வைத்து
சிறப்பான வாசியைத்தான் மனது மிகநாட்டி
பித்தனாய்க் கும்பகத்தைப் பிங்கலையில் வாங்கி
பேரான கண்மணியை யிடை கலையில்வாங்கி
சுத்தமுடன் மையமதில் நடுகலயிநின்று
சூரியனை வம்பரத்தில் வகையுடனே தாக்கி
நித்தமே இக்கலையில் பூரகத்தைமாட்டி
நேரான பின் காலையில் வட கலயைவாங்கே

வாங்கியே மூவாண்டு வழக்கஞ்ச்செய்து
வாசியைத்தா நெப்போதும் பழக்கம் பண்ணி
தூங்கியே திரியாதே புலஸ்தியாகேள்
துப்புரவாய்ப் பழகிவந்தா எல்லாஞ்சித்தி
ஏங்கியே வாடாதே வாசியோகம்
என்மகனே செய்துவந்தால் பழக்கமாகும்
ஓங்கியே மகத்தான வாசி தன்னை
உத்தமனே செய்துவந்தால் சித்தியாமே!



அகத்தியர்!

10 comments:

  1. it will be nice if this process is explained

    ReplyDelete
  2. DEAR sIRS,
    yOUR ARE VERY GREAT. AND I WILL MEET YOU IN NEARLY

    ReplyDelete
  3. kindly explain the process, as we are kids compared to you.

    ReplyDelete
  4. Dear sir:
    Pls tell this steps in detail that we can try and follow . Thank you

    ReplyDelete
  5. Hi Velayudham Karthikeyan avarkaluku, enna padalen porul soillavum.

    ReplyDelete
  6. https://groups.google.com/forum/#!topic/mintamil/Qwq7mzN_2Z4

    ReplyDelete
  7. http://aanmeegaiyarkai.blogspot.in/2012/11/blog-post_30.html

    ReplyDelete
  8. http://www.naavaapalanigotrust.com/index.php/2013-07-05-11-41-41

    http://www.naavaapalanigotrust.com/index.php/rajayogam/2013-07-12-07-27-10

    ReplyDelete
  9. குரு வாழ்க! குருவே துணை!!

    ReplyDelete