​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 22 March 2021

சித்தன் அருள் - 991 - அனந்தபத்மநாப சுவாமி கோவில், திருவனந்தபுரம்-பத்மநாப ஸ்வாமிக்கு சூரிய பகவானின் நமஸ்காரம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே 

திருவனந்தபுரத்திலுள்ள, ஸ்ரீ பெரும்தேவி தாயார் சமேத அனந்த பத்மநாபா சுவாமி கோவில் என்பது நம் குருநாதர் அகத்தியப் பெருமானுக்கு நிறையவே தொடர்புடையது என்பதை நீங்கள் அறிவீர்கள். அகத்தியப்பெருமான், சிவபெருமானின் உத்தரவால், பாரத கண்டத்தை காக்க பல விஷயங்களை நடத்திக் கொடுத்தார். அதில் மிக மிக உயர்ந்த நிலையில் அவரே விரும்பி தன் ஜீவசமாதியாக பத்மநாபசுவாமி கோவிலையும் அமைத்துக் கொண்டார். அப்படிப்பட்ட கோவிலை பின்னர் காலங்களில், விரிவுபடுத்திய பொழுது, கட்டிடக்கலையின் மிக அரிதான சூக்க்ஷுமத்தை கோபுர வடிவில் அமைத்தார். அது என்ன என்பதை கீழே விளக்குகிறேன்.

வருடத்தில் இரண்டு நாட்கள் பகலும், இரவும் சரி சம அளவாக இருக்கும் நாட்கள் இரண்டே நாட்கள் தான். அவை, மார்ச் மாதம் 21ம் தியதியும் செப்டம்பர் மாதம் 23ம் தியதியும். இந்த இரண்டு நாட்களிலும் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில், கோவிலின் கிழக்கு வாசலில் நின்று கோபுரத்தை பார்த்தால், சூரியன், தன் கதிர்களை கோபுரத்தின் ஐந்து வாசல்கள் வழியும் நுழைந்து, வெளிச்சம் போட்டு கோபுரத்தை அழகுபடுத்தி செல்வதை காணலாம்.

இப்படிப்பட்ட நிகழ்ச்சி நம் குருநாதரின் சமாதி கோவிலில் எல்லா வருடமும் நடக்கிறது என்பது மிக ஆனந்தம் கொள்ள வேண்டிய ஒரு விஷயம்.

அடியேனுக்கு கிடைத்த ஒரு காணொளியை, நீங்களும் கண்டு மகிழ இங்கு சமர்ப்பிக்கிறேன்.


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.

சித்தன் அருள் ............... தொடரும்!

4 comments:

  1. அகத்தீசாய நம நன்றி அய்யா

    ReplyDelete
  2. லோப முத்ர சமேத அகத்தீசாய நமக

    ReplyDelete
  3. Om sri lobhamudra thayar samedha agasthiya peruman thiruvadigale potri

    ReplyDelete
  4. Om sri lobamuthra sametha agasthiyaha namaha.

    ReplyDelete