​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 13 March 2021

சித்தன் அருள் - 988 - பச்சைவண்ணப் பெருமாளுக்கு/குருவுக்கு சமர்ப்பணம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

திரு.R.தேவராஜன் என்கிற இறை/அகத்தியர் அடியவர் ஒரு பாடல் தொகுப்பை வெளியிட்டுள்ளார். அதில் இரண்டாவது பாடலாக, "கோடகநல்லூர் பச்சைவண்ணப் பெருமாள்" மீது இயற்றி பாடப்பட்ட பாடலை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். 

பாடல்:திரு.ந.முரளிதரன்
இசை:R.தேவராஜன்
பாடியவர்: :R.தேவராஜன்  

பாடலை கேட்டபின், இயற்றி, இசையமைத்து, பாடிய அனைவரையும் வாழ்த்தி வணங்கிட வேண்டுகிறேன். இவர்கள், மேலும் மேலும் நிறைய பாடல்களை சமர்ப்பித்து, இறையருள்/குருவருள் பெற வேண்டிக்கொள்கிறேன்.


பச்சை வண்ண பெருமாளே
----------------------

பல்லவி :-
-----------------

பச்சை வண்ண பெருமாளே
பவளவாய் திருமாலே
ப்ரஹன் மாதவனே
உன்னை, ஐப்பசியில் காண்பேனோ
ஐயுற்றேன் நானே
தொற்று எங்களை தடுக்குமோ
உன் திருவடி
பற்ற வழி  பிறக்குமோ

சரணம் :-
----------------

குருவின் திருவருள்
குறையின்றி இருக்க
கலக்கம் எல்லாம்
காற்றாய் பறக்க
அம்பாய் அடியவர்கள்
தெம்பாய் கிளம்பிட

திரயோதசி மலர்ந்த காலை
லோப அன்னையை வணங்கிய வேளை
சேயென தழுவி
குளிர்ந்து போனாளே  
ஆசி வழங்கி போனாளே

சரணம் :-
---------------

குறுமுனி  கையால்
அபிஷேகம் கிடைக்க
ஆனந்த லயமாய்
மாதவன் சிரிக்க
பண்பாய் அன்பர்கள்
பரவசமாய் பார்த்திட

கருட பூமி வந்த நாளே
கோடி புண்ணியம்
சேரும் நாளே
நீரென அருவி
எந்தன்  க(ண்)ணிலே
சேரும்
உந்தன் பாதத்திலே


குருவே சரணம்

பாடல்:திரு.ந.முரளிதரன்
இசை:R.தேவராஜன்
பாடியவர்: :R.தேவராஜன்


குருவே சரணம்
 ----------------------------

பல்லவி :-


குருவே சரணம் குருவே சரணம்
எனை ஆட்கொண்ட மாமுனியே சரணம்
கருவே வினை தருமே பிணை
மறுபிறவி அறுக்கும் மாமருந்தே சரணம்

இடகலை பிங்கலை இடையே நடமிடும் சிவமைந்தனே சரணம்

சரணம் :-
---------------

உந்தன் தமிழ்தனை
துளியென தந்தனை
என்னுள் அமிழ்தென
நாளும் வளர்த்தனை
அருளினை தருவாய்
அறத்தினை முகிலாய்
மனத்தினில் பொதித்த
மாமுனியே சரணம்

சரணம் :-
--------------

கோபக் கனலினை
குளிர செய்தனை
பாபச் சுமையினை
பஞ்சென குறைத்தனை
அகத்தினை ஒளியாய்
சகத்தினை காப்பாய்
லோப மணாளனே சரணம்

ஸ்ரீலோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.

சித்தன் அருள்..............தொடரும்!

5 comments:

  1. ஓம் நமோ நாராயணா பத்மநாபா புருஷோத்தமா வாசுதேவா வைகுந்தா மாதவா ஜனார்த்தனா ஸ்ரீ சக்ரபாணி நின் பாதாரவிந்தங்கள் சரணம் சரணம்... ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ. 🙏🙏🙏🙏
    ...

    ReplyDelete
  2. Om lobamuthra sametha agasthiyaha namaha.

    ReplyDelete
  3. ஓம் நமோ நாராயணா !
    ஓம் அகத்தீசாய நம !
    குருவே சரணம் !

    ReplyDelete
  4. Om sri lobhamudra thayar samedha agasthiya peruman thiruvadigale potri.

    ReplyDelete
  5. அகத்தீசாய நம

    ReplyDelete