​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 30 October 2017

சித்தன் அருள் - 730 - அந்தநாள் > இந்த வருடம் (2017) - கோடகநல்லூர் - ஒரு நினைவூட்டல்!


அகத்தியப் பெருமானின் அடியவர்களுக்கு வணக்கம்!

அந்தநாள், இந்த வருடம் என்கிற தலைப்பில் வந்த அந்த புண்ணிய நாள், கோடகநல்லூரில் வரும் வியாழக் கிழமை 02/11/2017 அன்று வருகிறது என்பதை முன்னரே இங்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.  ஒரு நினைவூட்டலுக்காக, எல்லா அகத்தியர் அடியவர்களும், அன்று கோடகநல்லூர் சென்று, தாமிரபரணியில் நீராடி, பெருமாளின் அபிஷேக பூசையில் கலந்து கொண்டு, இறைவன், அகத்தியப் பெருமானின் அருள்/ஆசிர்வாதம் பெற்று, இனிதே வாழ்ந்திட வேண்டுகிறேன். பெருமாளின் அபிஷேக பூஜை காலை 10.30க்கு தொடங்கும் என அர்ச்சகர் தெரிவித்துள்ளார். அங்கு செல்பவர்கள், உடல் உழைப்பால் ஏதேனும் உழவாரப்பணி கிடைத்தால், செய்யுமாறும் வேண்டிக்கொள்கிறோம்.

எல்லா அருளும் உங்கள் அனைவரையும் சேர பிரார்த்தித்துக் கொள்கிறோம்.



4 comments:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி போற்றி

    நன்றி ஐயா

    ReplyDelete
  2. அகஸ்தியர் அருளால் குடும்பத்துடன் கலந்து கொள்கிறேன்.அய்யாவுக்கு நன்றி

    ReplyDelete
  3. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ

    ReplyDelete
  4. இன்றைய நாளில் இந்த நேரத்தில் கோடக நல்லூரில் பச்சை வண்ணப்பெருமாளை தரிசிக்கும் அனைவரும் பேறுபெற்றவர்கள் !!
    அவனருளாலே அவன் தாள் வணங்கிப் பேறுப்பெருவோம்.

    ReplyDelete