​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 17 October 2017

சித்தன் அருள் - 728 - தீபாவளி நல்வாழ்த்துக்கள்!




அகத்தியப் பெருமானின் "சித்தன் அருளிலிருந்து" உங்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். என்றும், இனிதே நடக்கட்டும் என குருவிடம் வேண்டிக் கொள்கிறோம்! அகத்தியப் பெருமானின், அருள், வழிநடத்தல், துணை என்றும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினருக்கும், நண்பர்களுக்கும் கிடைக்கட்டும் என்று பிரார்த்தித்து, அகத்தியர் பாதத்தில் சமர்ப்பிக்கிறோம்.

சித்தன் அருள்................. தொடரும்!

6 comments:

  1. mikka nandri ayya ....happy diwali to all devotees .....om lobamudra sametha agatheesaya namah.....

    ReplyDelete
  2. Aum Loba Mudra Sametha Agathesaya Namaha;

    Aum Sai Ram

    Agnilingam Ayya, Karthikeyan Ayya and Mahamuni Sithar devotees and family, Best wishes for a blissful Diwali

    May Mahamuni shower abundance blessings this day and guide us always,

    ReplyDelete
  3. மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு.கார்த்திகேயன் அய்யா அவர்களுக்கும்,
    மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு.அக்னிலிங்கம் அருணாச்சலம் அய்யா அவர்களுக்கும்
    மற்றும் அகத்தியர் அடியவர்கள் அணைவருக்கும் வணக்கம்.

    இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்.

    தங்களுடைய குடும்பத்தினரும்,நண்பர்களும் மற்றும் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும், அனைத்து விதமான வளத்தையும் குருவருளால் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமென்று வேண்டுகிறேன்.

    இந்த ஒரு நன்னாளில் குரு அகத்தியரை பற்றி மகான் புலத்தியர் இயற்றிய செய்யுளைப்படித்து குருவின் பாதம் சரண்புகுவோம்

    அகத்தியரை பற்றி மகான் புலத்தியர் இயற்றிய செய்யுள்!
    குருவடி பெற்றாள் சரண் சரணம்
    கும்ப முனியே சரண் சரணம்
    திருவடி நாதா சரண் சரணம்
    சித்தர்களின் அருளே சரண் சரணம்
    அருள் வடிவானாய் சரண் சரணம்
    அமரர்களே கோவே சரண் சரணம்
    பொருளடி மூலங் காட்டிஇற்று போதித்த குருவே சரண் சரணம்
    போதித்த குருவே சரண் சரணம் பொதிகைவளர் அம்பலர் சரண் சரணம்
    வேதித்தெனையே ஆட்கொண்ட விமலா சரணம்
    மெய்ஞானம் சாதித்த தேவே சரண் சரணம்
    சமுசயந் தீர்த்தாய் சரண் சரணம்
    ஓதித்தருள்வாய் சரண் சரணம்
    உண்மைப் பொருளே சரண் சரணம்
    - மகான் புலத்தியர்

    மிக்க நன்றி,
    இரா.சாமிராஜன்

    ReplyDelete
  4. அனைவருக்கும் தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் சொல்வதில் TUT தளம் மகிழ்வுறுகின்றது. சுற்றம்,உறவினர்,நண்பர்கள் சூழ பாதுகாப்பான, மாசற்ற தீப ஒளித் திருநாள் கொண்டாடி மகிழுங்கள். மேலும் வருகின்ற 19/10/2017 அன்று தேனியில் பூரண தான நிகழ்வு சிறிய அளவில் நடைபெறும்.

    நமது TUT குழுமத்தின் உழவாரப்பணி கொளத்தூரில் உள்ள ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் கோவிலில் வருகின்ற 22/10/2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது.உழவாரப்பணியைத் தொடர்ந்து அபிஷேகம்,ஆராதனை நடைபெறும்.அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு தொண்டினை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

    நாள்:22/10/2017 ஞாயிற்றுக்கிழமை

    இடம் : ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் திருக்கோயில்
    கொளத்தூர் கிராமம்
    வேங்கடபுரம் அஞ்சல்
    சிங்கப்பெருமாள் கோயில்
    செங்கல்பட்டு மாவட்டம்

    சரியாக கூடுவாஞ்சேரி காலை 8 மணிக்கும் சிங்கப்பெருமாள் கோயிலில் 8:30 மணிக்கும் வேன் பிக் அப் பாய்ண்ட்கள் உண்டு. காலை உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தங்களின் வருகையை கண்டிப்பாக உறுதி செய்ய தொடர்பு கொள்ளவும்
    7904612352/9677267266

    மேலும் விபரங்களுக்கு : https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_17.html

    ReplyDelete
  5. Sir I am Ramesh I want to see Nadi plz give your address

    ReplyDelete