​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 19 January 2017

சித்தன் அருள் - 572 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இஃதொப்ப நிலையிலே ஒரு மனிதன் முழுக்க, முழுக்க ஞானியாகவோ, சித்தனாகவோ மாறிவிட வேண்டும் என்று, நாங்கள் கூறவில்லை. அது அவன் எண்ணினாலும் நடக்காது என்பது வேறு விஷயம். ஆனால் நாங்கள் கூற வருவது கூடுமானவரை தன்னலத்தைக் குறைத்து பொதுநலமான எண்ணங்களோடு வாழ்தல், பிறருக்கு முடிந்தவரை நன்மைகளை செய்தல், நன்மைகளை செய்ய முடியாவிட்டாலும் தீமைகளை செய்யாதிருத்தல், சூழ்ச்சி, வஞ்சனை இவற்றை பின்பற்றாமல், வளர்த்துக் கொள்ளாமல் இருத்தல், தம், தம் கடமைகளை நேர்மையாக ஆற்றுதல், கடமைகளை நேர்மையாக செய்ய முடியாத நெருக்கடி வரும் தருணம் அந்தப் பணியையே புறக்கணித்தல். ஏனென்றால் நேர்மையற்று ஒருவன் எதைபெற்றாலும் அதனால் அவன் பெறுவதல்ல, அனைத்தையும் இழக்கிறான் என்பதே சித்தர்கள் பார்வையில் உண்மையாகும். எனவே நேர்மையான எண்ணம், உபகாரமான எண்ணம், சதா தர்ம சிந்தனை, பரிபூரண சரணாகதி, பக்தி இவையெல்லாம் ஒரு மனிதன் வளர்த்துக் கொண்டால் இறை வழி என்பது அவனுக்கு மிக எளிதாக இருக்கும். ஆனால் முழுக்க, முழுக்க, முழுக்க இறைவனுக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டாலும் இறைவன் சோதனைக்கு ஆட்பட்டே ஒருவன் மேலேறி வரவேண்டும். நாங்கள் அடிக்கடி கூறுவதை மீண்டும் நினைவூட்டுகிறோம். மைதானத்திலே வாயு உருளை வைத்து விளையாடுகின்ற மனிதர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்துகொண்டு வெற்றிப் புள்ளிகளைக் குவிக்கப் போராடுவார்கள். ஒருவன் அந்த வாயு உருளையை உதைத்துக்கொண்டே வெற்றிப் புள்ளிக்காகப் போராடுவான். மாற்று அணியினர் அதைத் தடுப்பார்கள். அப்பொழுது அந்த வெற்றிப் புள்ளியைக் குவிக்க வேண்டிய மனிதன் "இப்படியெல்லாம் தடுத்தால் என்னால் எப்படி வெற்றிப் புள்ளியை குவிக்க முடியும்? இவர்கள் எல்லோரும் விலகிச் சென்றால் நான் எளிதாக வெற்றி பெறுவேன்" என்று கூறினால் அதை, ஆட்டத்தின் விதிமுறைகளை வகுத்துக் கொடுத்தவர்கள் ஒப்புக்கொள்வார்களா ? அதைப் போலதான் ஞானம் பெற வேண்டும், தவம் செய்ய வேண்டும், இறை வழியில் செல்ல வேண்டும், நேர்மையாக வாழ வேண்டும், பக்தி வழியில் செல்ல வேண்டும். ஆனால் பல்வேறு தடைகள் வருகிறது. மனதிலே, தேவையில்லாத எண்ணங்கள் வருகிறது என்று பல மனிதர்கள் வருத்தப்படுகிறார்கள். இவையெல்லாம் இல்லையென்றால் நன்றாக வெற்றி பெறலாம் என்றால் இவைகளைத் தாண்டி செல்வதற்குண்டான வைராக்யத்தை ஒரு மனிதன் பெற வேண்டும். உலகியல் ரீதியான வெற்றியைப் பெற வேண்டுமென்றால் எத்தனை தடையென்றாலும் அதனைத் தாண்டி செல்கிறான். தனக்குப் பிரியமான காதலியை ஒரு இடத்தில் சந்திக்க வேண்டுமென்றால் எப்படியெல்லாம் சிந்தித்து அந்த சந்திப்புக்கு எத்தனை தடை வந்தாலும் அதனைத் தாண்டி அங்கே செல்கிறான் அல்லவா? என்ன காரணம்? அந்த நோக்கத்தில் அவனுக்கு உறுதி இருக்கிறது. அதைப்போல இறைவனை உணர வேண்டும். மெய்ஞானத்தை கண்டிப்பாக இந்தப் பிறவியில் உணர்ந்துவிட வேண்டும். இறையருளை பரிபூரணமாகப் பெற்றுவிட வேண்டும் என்கிற உறுதி அணுவளவும் தளராமல் மனித மனதிலே வந்துவிட்டால், மற்ற விஷயங்கள் குறித்து அவனுக்கு எந்தவிதமான குழப்பமும் தேவையில்லை. எதை செய்தாலும், எப்படி செய்தாலும் நோக்கம் இறைவனிடம் இருந்தால் ஒரு மனிதன் எது குறித்தும் அஞ்சத் தேவையில்லை.

4 comments:

  1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete
  2. [ROUGH TRANSLATION] Under present circumstances, we are not saying that a man should transform himself into a full-fledged gnani or Siddha. It is another matter that even if he wishes so, it won’t happen. But, all that we say is that, to the extent feasible, reduce selfishness, engage in general welfare, do good to others as per capacity, if you cannot do good at least don’t do bad to others, don’t follow or cultivate cunningness or betrayal, perform your responsibilites honestly, leave a job if the job does not permit honesty. Reason is that when something is achieved dis-honestly, it is not an achievement, it is a loss, this is truth as per Siddha perspective. Therefore, straight-forward thinking, helpful mentality, regular focus on charity, complete saranagati, bhakti, when these are cultivated, it will make easy following the path to Divine. However, even when a person has done full arpan of himself to Divine, still spiritual progress can be achieved only through spiritual trials. We now repeat what we say often. In the football match, each of the two teams is attempting to score maximum goals. One team is kicking the ball to the goal-post, the other team blocks it. First team cannot complain that-- How can I score goals if they block me, if they don’t block me I can score many goals. It is against rules of the game. Similar is the path to gnana, path of tapas, spiritual path to Divine, honest living, Bhakti living. But many are un-happy that they are facing obstacles and wandering mind, in their spiritual efforts. If you don’t want these, then to overcome, the necessary vairgaya needs to be cultivated. For worldly success, man is ready to overcome many obstacles. To meet his lover at some place, he somehow thinks and overcomes obstacles in meeting his lover. Why? Because he feels strong about it. Same way, Divine has to be pursued. Somehow or other, I want to achieve gnana about the Truth in this life-time, I want to earn the full grace of the Divine, if mind is made up firmly without any shaking, then he does not have to be concerned about other things. Irrespective of what you do, how you do, so long as the attention is on the Divine, a man does not have to fear anything.

    ReplyDelete