​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 18 January 2017

சித்தன் அருள் - 571 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவனின் கருணையைக் கொண்டு, இயம்புவது யாதென்றால் நல்லாசிகளை இறைவனருளால் இயம்புகின்ற இத்தருணம் இஃதொப்ப....மீண்டும்,மீண்டும் சில ஆண்டுகளாக இங்கு வருபவர்களுக்கு உரைப்பதுதான். பாவ வினைகள் கடுகளவு இருந்தாலும், மனிதனுக்கு மலையளவு துன்பத்தைத் தரலாம். இன்னும் கூறப்போனால், ஒரு ஞானியின் பக்குவம் கைவரப் பெறுவதே, எந்த லோகத்தில் வேண்டுமானாலும் நிம்மதியாய் வாழ்வதற்கு ஏற்ற நிலை. இஃதொப்ப கூறுங்கால் ஞானியின் வைராக்யமும், தெய்வீக விழிப்புணர்வும் வருவது, கடினம்தான் என்றாலும், அதனை நோக்கி முயன்றுகொண்டே இருப்பதே, சிறப்பு. இல்லையென்றால் இந்த உலக வாழ்வு என்றாலும், வேறு உலக வாழ்வென்றாலும் கூட அந்தந்த இயல்பு மனோதர்மத்திற்கு ஏற்ப, மன உளைச்சல்கள், வேதனைகள் வந்துகொண்டேயிருக்கும். ஒன்றை புறத்தேயிருந்து துன்பமாக, இன்பமாக பார்ப்பதைவிட பார்க்கின்ற மனிதனின் மனோபாவத்தைப் பொறுத்தே அந்த இன்பமும், துன்பமும் தெரிகிறது எனலாம். இது சற்று கடினமான கருத்துதான், என்றாலும், உண்மைதான். இரண்டு மனிதர்கள் மிகப்பெரிய வியாபாரம் செய்வதாக வைத்துக்கொண்டால் ஒருவனுக்கு பல லகரம் நட்டம் வந்துவிடுகிறது. இன்னொருவனுக்கு அதைவிட இன்னும் நட்டம் வந்துவிடுகிறது. சற்றே சிந்தித்து, இயல்பாக எடுத்துக்கொண்டு, மேலும் பிரச்சினைகள் வளராமல் பார்த்துக்கொள்கின்ற முடிவை எடுக்கின்ற மனிதன் உண்மையில், நட்டம் வந்திருந்தாலும் நட்டமில்லாத நிலையைதான் அடைகிறான். அஃதாவது நட்டம் என்பது அவனுடைய வியாபாரத்தில் இருக்கிறது. வியாபாரம் அவன் செய்தது என்றாலும் கூட, அது அவன் மனதை பாதித்தால், மேற்கொண்டு செயலாற்றல் என்பது இல்லாமல் ஆகிவிடும். ஆனால், இதுபோன்ற துன்பங்கள் வரும்பொழுது மனிதன் பெரும்பாலும் என்ன எண்ணுகிறான்? இப்படியொரு துன்பம் வந்துவிட்டதே? என்று எண்ணி, எண்ணி மருங்கிப் போவதால், கடுகளவு துன்பம் மலையளவு ஆகிறது. விதி அப்படித்தான் அவனை அச்சுறுத்தி, அவனுடைய பாவத்தைக் கழிக்கிறது என்றாலும் சற்றே மனதை திடப்படுத்தி, இறை வழிபாட்டினில் கவனம் செலுத்தினால், மாயையான இந்த லோகத்தில் இறைவனை மறுப்பதும், இறைவனை மறப்பதும், சத்தியத்தை விடுவதும், தர்மத்தை விடுவதும் மட்டும்தான், ஒரு மனிதன் அடையக்கூடிய மிகப்பெரிய நஷ்டமாகும். அஃது போக நஷ்டம் என்பதோ, கஷ்டம் என்பதோ இந்த உலகில் ஏதுமில்லை. இஃதொப்ப கருத்தினை மனதிலே திடமாக வைத்துக்கொண்டால் வாழ்வு நலமாக செல்லும்

3 comments:

  1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete
  2. [ROUGH TRANSLATION] Under Divine grace, at this time when we are giving blessings under Divine grace, we state what we have been saying to those coming here in the last few years. Even small negative karma can result in large sufferings. In fact, only the maturity of gnana can help in living peacefully in any world. Though the vairagya and spiritual alertness of gnani, are difficult to achieve, it is important to keep moving in that direction. Otherwise, in this world or in any other world, mental hassles and disturbances will occur as per mano-dharma. Since man is viewing things externally as pleasure or pain, he feels the pleasure or pain as per this mano-bhava. Though this is difficult to accept, it is a fact. There are two big traders/business-man, first one incurs financial loss of lakhs, second one’s loss is even more. If one thinks about this and decides to take these in natural course and not to invite more problems, he is loss-less though he has incurred loss. That is, loss is a feature of business, though he is conducting the business, if he allows it to affect his mind, he will lose energy to do more. But, when such situations occur, most men, pine more and more about their problems and a small problem is perceived as large. Though it is his fate which is reducing his karms through this method, he has to strengthen his mind and focus on Divine worship. In this world of Maya, denial of Divine, forget-fulness of Divine, not doing charity, giving up Truth are the only major losses to man. Apart from this, there is no other suffering or loss to man. Keep this view firmly in mind, life will be better.

    ReplyDelete