​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 12 January 2017

சித்தன் அருள் - 565 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவனின் பெருங்கருணையைக் கொண்டு இத்தருணம் உரைப்பது யாதென்றால், இகுதொப்ப முழுக்க, முழுக்க லோகாய விஷயங்களுக்காகவும், புலன் ஆசைகளுக்காகவும் மட்டும் வாழக்கூடிய மனிதர்களே பெரும்பாலும் இருக்கிறார்கள். இது ஒரு வகையில்  அவனவன் கர்மவினை என்றாலும் கூட, இத்தனையும் மீறிப் போராடித்தான் வரவேண்டும் என்பது ஒரு புறம் இருக்க, அங்கொன்றும், இங்கொன்றுமாக ஏதோ யோக நிலையை நோக்கி, ஞான மார்கத்தை நோக்கி, நிஜமாகவே செல்லக்கூடிய மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். உலகிலே, சராசரி விஷயங்களும், சாமான்ய விஷயங்களும்தான், சாமான்ய மனிதர்களால் எப்பொழுதும் பின்பற்றப்படுகிறது. இகுதொப்ப சித்தர்களின் நாமத்தை உச்சரிப்பதாலோ, சதாசர்வகாலம், சித்தர்களைப்பற்றி விவாதம் செய்வதாலோ மட்டும், ஒருவருக்கு ஞானம் வந்துவிடுவதில்லை. இகுதொப்ப, சித்தர்களை பற்றி பேசுவதாலும், இறைவனைப் பற்றி பேசுவதாலும், சில மந்திரங்களை உச்சரிப்பதாலும் ஏதாவது நன்மை கிட்டாதா? அல்லது லோகாயத்தில் உள்ள கஷ்டங்கள் விலகாதா? என்றுதான் பல மனிதர்கள் வருகிறார்கள். மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் அதுவும் குற்றமில்லை என்று தோன்றினாலும் கூட, அதனையும் தாண்டி மெய்யான ஞானத்தேடலான மனிதக் கூட்டம் ஒன்று இருந்தால்தான், அந்த மனிதக்கூட்டத்தோடு தொடர்பு வைத்துக் கொண்டு, எதனையும் செய்தால்தான், கூடுமானவரை பிரச்சினைகள் இல்லாமல் இருக்கும். மற்றபடி எமது வழியில் வருகின்ற பல்வேறுப்பட்ட மனிதர்களாக இருந்தாலும், ஆன்மநேய மனிதர்களாக இருந்தாலும்,  உள்ளே, உள்முகமாக அகத்திலே பெருந்தன்மை இல்லாததால், உள்ளே வளராமல் இருப்பதால், இகுதொப்ப மாந்தர்களோடு உறவு வைத்துக் கொண்டால், பெயரளவிற்கு ஆன்மிகம் இருக்குமே தவிர, உண்மையான ஆன்மீகமாக இராது.

6 comments:

  1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete
  2. ஈசன் வாக்கு பொட்டில் அடித்தார் போலவே இருக்கிறது.

    ReplyDelete
  3. Rombe sariiiyana vaakku.. villipunarvudan indhe ulage valzhkayaiyai valvadhe nalam. .

    ReplyDelete
  4. Mige sariyanaa vaaku. . Aanmeega vilippudan ulage valzkaiyai valzhvadhe namadhu immai marumai sirappage amaivadharkana thodakkamm..

    ReplyDelete
  5. [ROUGH TRANSLATION] Under great compassion from the Divine, what we state now is that, majority of the humans are living fully engaged in worldly affairs and sensual desires. While, in a way this is due to karma, one must keep up struggle to overcome this. Here and there, there are some people who are truly pursuing paths of yoga, jnana. In this world, ordinary people are following only ordinary and average matters. In this state, just by chanting names of Siddhas or constantly debating about Siddhas, one will not get jnana. However, many people desire that by my chanting some mantras or by discussing about Divine or Siddhas, can I not get some benefit, can not my worldy troubles go away? Though this is harm-less superflously, one must cross this and engage with groups that are genuinely pursuing jnana, in this way only one’s problems will reduce to the extent possible. Though there are many people who are trying to pursue the path of Siddhas, but because in their inner mind, agam, they are narrow-minded and stagnant, by engaging with such people, it will be only nominal spirituality, and not genuine spirituality.

    ReplyDelete