​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 14 June 2015

பழனியில் போகர் சித்தர் திருநட்சத்திர விழா!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

பழனியில் போகர் சன்னதியில் 13/06/2015, சனிக்கிழமை அன்று அவரது திரு நட்சத்திரம் (வைகாசி மாதம், பரணி நட்ச்சத்திரம்), அபிஷேக ஆராதனைகளுடன் கொண்டாடப்பட்டது. சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்து, புவனேஸ்வரி அம்மன் விக்ரகத்திற்கும், போகர் பெருமான் பூசித்த ஸ்படிக லிங்கத்திற்கும் பலவிதமான அபிஷேகங்களை செய்து, குறிப்பாக, கங்கை நதி நீரை கொண்டு வந்து ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தது கண் கொள்ளாக் காட்ச்சியாக இருந்தது. சிறப்பான பூசைகளுடன், வந்திருந்த பக்தர்கள்/அடியவர்கள் அனைவரும், சித்தர் பெருமானின் அருளை பெற்று சென்றனர்.

குறிப்பாக அபிஷேகத்தை, விக்ரகங்களை புகை படம் எடுக்க கூடாது என்று வேண்டிக் கொண்டதால், அபிஷேகத்தை புகை படம் எடுக்கவில்லை. அதற்கு முன்னரே அலங்காரத்தை புகைப்படம் எடுத்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.



அக்னிலிங்கம்

No comments:

Post a Comment