​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 21 May 2015

சித்தன் அருள் - 223 - "பெருமாளும் அடியேனும் - 7 - கலியுகம் பற்றி பெருமாளின் விளக்கம்!

"கலிபுருஷனை வெல்வதென்பது அவ்வளவு சாமான்யமானதல்ல. அவன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாழிகையும் அதர்மத்திற்கு உயிரூட்டி, தர்மத்தை ஒழிக்கவே பிறந்தவன்.

இந்த பூமியில் பிறக்கின்ற ஒவ்வோர் உயிரின் எண்ணத்தில் புகுந்து இயற்கைக்கு விரோதமான காரியங்களைச் செய்யத் தூண்டுவான். இதை தடுக்க கடும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும். அந்த பிரயத்தனத்தையும் கலிபுருஷன் கெடுக்கவும் முயலுவான். இதோ அவனை பற்றி சொல்கிறேன், கேளுங்கள்.

​இனிமேல் பூலோகத்தில் இயற்கையான சூழ்நிலை மாறும். மாதம் மும்மாரி பெய்யாது. தட்ப வெப்ப நிலை எப்பொழுது எப்படி மாறும், எது மலையாகும், எது கடலாகும் என்று சொல்ல முடியாது.

பசி, பஞ்சம், பட்டினிச் சாவுகள் நாளுக்கு நாள் அதிகமாகும். மக்கள் பிறப்பு அதிகமாகும். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். ஒருவரை ஒருவர் ஏமாற்றி வஞ்சம் தீர்ப்பர். ஸ்திர சொத்து கைமாறும். நியாயம் இருட்டறையில் பதுங்கிக் கொள்ளும். உயிர்பலி அதிகமாகும். வழக்குகளை விசாரிக்கும் நீதிமான்களும் நீதியை புறக்கணித்துவிட்டு பொருள் கையூட்டுப் பெற்று வழக்கை திசை திருப்புவர்.

ஆண் குரூர புத்தியுடன் செயல்படுவதால், கொலை,  ,கற்பழிப்பு அதிகமாகும். பெண்களும் நாகரீகம் என்ற போர்வையில் குல வழக்கத்தை மறந்து விட்டு, குலப் பெருமையை சீர்குலைக்கும் வண்ணம், பேச்சில், நடையுடை பாவனையில், அலங்காரத்தில் சீர்கெட்டுப் போவார்கள். பெற்றோர் சொன்னதை சிறியோர் ஒரு போதும் மதிக்க  மாட்டார்கள். ஆணுக்கு, நிகரான தொழில். பணியில் அறிவாற்றல் மிக்கவராய் பெண்கள் ஏற்றம் பெறுவார்கள். ஆனால் அதேசமயம் ஆன்மீக எண்ணம் முற்றும் மறந்துவிடும்.

ஆண்களை நம்பி பெண்கள்  இருந்த காலம் மாறி, இனிமேல் பெண்களை நம்பித்தான் ஆண்கள் இருக்கும் காலமாக மாறும். பணத்திற்கு முக்கியம் கொடுத்து, பாசத்தை முற்றிலும் மறப்பார்கள். யாரிடம் யார் எப்படி பேசுவது, பழகுவது முறைவைத்துக் கொள்வது என்பது இல்லாமல், காட்டுமிராண்டித்தனமாக மனம் மாறும்.

தர்மத்தை மறப்பதால், அண்ணன், தங்கை உறவும், தந்தை, மகள் உறவும், மாமனார், மருமகள் உறவும், ஏன் சமயத்தில் சிற்றன்னை, மகன் உறவும், சித்தப்பா, அண்ணன் மகள் உறவும், கணவன், மனைவி உறவாக மாறிவிடும்.

கோயில்களில், ஆறுகால பூஜை இருக்காது. அர்ச்சகள் கேலிக்கும் பரிகாசத்துக்கும் ஏழ்மை நிலைக்கும் உள்ளாகி, நொந்து போவார். மந்திரங்களுக்கு இனி பெருமை இருக்காது. மந்திரங்களைக் கற்போரும் அதனை, சரியாகக் கேட்கமாட்டார்கள். வேதம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். கோயில்களில், ஆகமவிதிப்படி எதுவும் நடக்காது. கோயில் கருவறையிலேயே, பஞ்சமஹா பாதகங்களும் நடக்க ஆரம்பிக்கும். உடல் சுத்தம், மனசுத்தம் குறைவதாலும், கோயில்கள் சுத்தமின்றி, வௌவால்களால் கெட்டுவிடும். அரசாங்கம் இறைதொண்டிற்கு முக்கியம் கொடுக்காமல், ஆலயங்களின் ஸ்திர சொத்தைப் பிடுங்கி வாழும் அவல நிலை ஏற்படும்" என்று விறுவிறுவென்று சொல்லி அமைதியாக அவர்களைப் பார்த்தார், திருமால்.

"தங்கள் திருவாயால் இதனைக் கேட்கும் பொழுதே எங்களுக்கு நரக வேதனையாக இருக்கிறதே. இதைத் தடுத்து நிறுத்தி பூலோகத்தை உய்விக்கத் தங்களால் இயலாதா" என்று அகத்தியப் பெருமான் திருமாலிடம் கேட்டார்.

"இதற்குள்ளாகவே நரக வேதனை என்கிறீர்களே, இன்னும் முழுமையாகக் கேட்கவில்லையே" என்றார் பெருமாள்.

"போதும், போதும் நாராயணா! இதற்கெல்லாம் விமோசனம் கிடையாதா? இந்த பூலோகத்தில் நல்லவர்களே இருக்க மாட்டார்களா?" என்று பதறிப் போய் கேட்டார் நாரதர்.

"நல்லவர்கள் நிச்சயம் இருப்பார்கள், ஆனால் அவர்கள் கஷ்டப்படுவார்கள். எங்கு சென்றிடினும் அவர்களுக்கு நீதி கிடைக்காது. பிறகுதான் இங்கு வந்து என்னை சரணடைவார்கள். அவர்களுக்கு மட்டும், நான் இறங்குவேன்!" என்றார் பெருமாள்.

"திருமாலே! இது நல்லதல்ல. இங்கு வந்தவர்களுக்குத்தான் இறைவன் அருள் பாலிப்பார் என்பதை என்னால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள இயலாது. அய்யனே! தங்களால், பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் இந்த பூலோகத்து ஜனங்கள். கலிபுருஷனால் தூண்டப் பெற்று தன்னை மறந்து செயல்படும்போது அவர்களுக்கு தங்கள் நினைப்பு எப்படி வரும்? ஆகவே தாங்கள் அவர்கள் மீது இரக்கம் கொண்டு, கலிபுருஷனிடமிருந்து காத்தருள வேண்டும்" என்று அகஸ்தியர் பவ்யமாக வேண்டிக் கொண்டார்.

"நியாயம் தான்! ஆனால் என்றைக்காவது, ஒருநாளாவது என்னை நினைத்து இருந்த இடத்திலிருந்து மானசீகமாக வேண்டி, ஒரு மஞ்சள் துணியில் சிறு காணிக்கையை அடையாளமாக வைத்து, பிரார்த்தனை செய்தால் போதும். இங்குதான் வரவேண்டும் என்பதில்லை. அப்படிப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பாபத்தையும் போக்கி அவர்களை வாழவைப்பேன். இது போதுமா அகத்தியரே" என்று பெருமாள் வாக்குரைத்தார்.

"ஐயனே! தாங்களோ கருணைக்கடல்! தங்களுக்குத் தெரியாதது ஏதுமில்லை! புத்திசாலி என்று நினைத்து தங்களிடம் ஏதாவது பேசியிருந்தால், அதற்காக என்னை மன்னித்தருள வேண்டும்" என்று மண்டியிட்டு வேண்டினார் அகத்தியப் பெருமான்.

"இதென்ன கோலம்! எழுந்திருங்கள் அகஸ்தியரே! கலிபுருஷனைப் பற்றி கேட்டுவிட்டு, பாதியிலேயே பதறிப் போனால் எப்படி? இப்போதைக்கு இது போதும். இன்னும் என்ன என்ன செய்யப் போகிறான் என்பதும் எமக்குத் தெரியும்!" என்றார் திருமால்.

"தெரிந்தும் கலிபுருஷனை இன்னும் நடமாடவிடுவது எந்த விதத்தில் நியாயம்?" என்று குறுக்கிட்டார் நாரதர்.

"அதற்குள் அவசரப்பட்டால் எப்படி நாரதரே! இனிமேல்தான் உங்களுக்கே நான் வேலை தரப்போகிறேன்" என்று நாரதரைப் பார்த்து அர்த்தமுள்ள சிரிப்பொன்றைச் சிந்தினார், பெருமாள்.

சித்தன் அருள்................... தொடரும்!

8 comments:

  1. Iraiva kaetkavae kavalaiyaga irukku ....
    Om agasthiyar potri potri

    ReplyDelete
  2. Very true.can't wait for the next post.
    Sir can could u please post twice a week.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. இறைவன் அருள் வாக்கிற்காக காத்திருக்கிறோம்

    ReplyDelete
  5. இறைவன் அருள்வாக்கிற்காக காத்திருக்கிறோம்

    ReplyDelete
  6. உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன்
    மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன்
    அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் அவன்
    துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே

    நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழியின் முதற்பாடல் இது. இறைவனை நம்பும் அனைத்து சமயங்களுக்கும் பொருந்துமாறு ஆரம்பிக்கிறார். இறைவனின் தன்மைகள் பற்றி முழுதுமாய் சொல்லமுடியாதஅளவு உயர் நலம் உடையவனாக அவன் இருக்கிறான். அவனைப் பற்றி அறிந்துகொள்ளுவதற்கான நல்லறிவைத் தந்தவனுமாய் உள்ளான். இறைத் தூதர்கள்,சித்தர்கள், முக்தர்கள் போன்ற அமர நிலை அறிந்தவர்களும் என்றும் போற்றும் அதிபதியாக உள்ளான். அப்படிப் பட்டவனின் சுடர் போன்ற அடிகளைத் தொழுது, உயர்வு கொள் மனமே என்பது எளிமையான பொருள்.

    ReplyDelete
  7. குறிப்பு:அவன், யவன் என்று ஆண்பாலில் சொன்னாலும்
    "அவன் ஆணுமல்லன்,பெண்ணுமல்லன் அன்றி அலிவுமல்லன்"
    என்று பிற பாடல்களில் சொல்லி அவனது அருவருவ நிலை பற்றி நிரம்பச் சொல்வதால் இதில் பால் வேறுபாடு கிடையாது.
    நன்றி: ஆழ்வார்க்கடியான்

    ReplyDelete
  8. Om Agastheesaya Namaha !!!
    Om Agastheesaya Namaha !!!
    Om Agastheesaya Namaha !!!

    ReplyDelete