​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 4 January 2015

ஆச்சாள்புரம், கும்பகோணம் - பார்வையினால் நோய் தீர்க்கும் சித்தர் சுவாமி!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

நேற்று திரு.கார்த்திகேயன் அவர்கள் ஊத்துமலை பற்றிய ஒரு வீடியோவை நம்முடன் பகிர்ந்து கொண்டதை கண்டு உண்மையிலேயே மலைத்துப் போனேன். அடடா! இப்படிப்பட்ட அரிய புனிதத்தலங்கள் நம் தமிழகத்தில் இருக்க ஒவ்வொருவரும் எங்கெல்லாமோ எதற்கோ தேடி அலைகிறார்களே என்ற எண்ணம் என்னுள் வந்தது.

ஒரு சில தினங்களுக்கு முன், தனக்கு பிறந்த ஒரே குழந்தையின் உடல் நிலை சரியில்லை என்று ஒரு அகத்தியர் அடியவர் "சித்தன் அருளில்" எங்கோ கூறியிருந்தது ஞாபகத்தில் இருந்தது. உண்மையிலேயே, அதை படித்தது முதல் அகத்தியப் பெருமானிடம், எல்லோருக்கும் வேண்டிக் கொள்வது உண்டு. உடல் உபாதை, கர்மா படித்தான் வருகிறது என்றாலும், மகான்களின் பார்வை அதை வழி மாற்றிவிட்டு நிறைய அளவுக்கு நிம்மதியை கொடுக்கும் என்று நம்புபவன் நான். அதன்படியே, இந்த குழந்தையின் உபாதை என் மனதை வருத்திக் கொண்டிருந்தது. இதற்கு ஏதேனும் ஒரு வழி அகத்தியப் பெருமான் காட்டக் கூடாதா என்று தினமும் அவரிடம் வேண்டிக் கொள்வது உண்டு.

நேற்றும் வேண்டுதலை சமர்ப்பித்துவிட்டு எதேச்சையாக சித்தன் அருளை பார்க்க ஊத்துமலை பற்றிய வீடியோவை பார்க்க நேர்ந்தது. அது முடிவு பெற்றதும், எதேச்சையாக மேலே உள்ள வீடியோவை பார்க்க, ஆச்சரியத்தில் ஆச்சரியம். எத்தனை எளிய சுவாமி அவர் என்கிற எண்ணம் வந்தது. அதனுடன்,

இவரை சென்று கண்டால், நிச்சயமாக உடல் உபாதை உள்ளவர்களுக்கு ஒரு நல்ல விடுதலை கிடைக்கும் என்று என் மனது நம்புகிறது. அந்த குழந்தை என்றல்ல, யாரெல்லாம் உடல் உபாதைகளால் அவதிப்படுகிறார்களோ அவர்கள் முழு நம்பிக்கையுடன் செல்லலாம். நிச்சயம் அவர் வழிபடும் "அம்பாள் - நாராயணியின்" அருளால், குணமடைவார்கள் என்று தோன்றுகிறது. வீடியோவை பார்த்து நீங்கள் ஒரு முடிவெடுங்கள். இந்த வீடியோவை பார்க்க வைத்தது கூட அகத்தியப் பெருமானின் கருணை தான் என்று நான் நம்புகிறேன்.

ஓம் லோபாமுத்திரா சமேத அகதீசாய நமக!

5 comments:

  1. Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!

    ReplyDelete
  2. ayya's address and phone number please

    ReplyDelete
    Replies
    1. அந்த ஊரை அடைந்து "அய்யா சுவாமி" அல்லது "ஸ்கேன் சுவாமி"னு விசாரிச்ச கண்டு பிடிக்கலாம்.

      Delete
  3. சார் இப்போது அந்த சாமி அங்கு இருக்கிறாரா ?

    ReplyDelete
  4. அந்த சித்தர் இப்போது இருக்கிறாரா ? ப்ளீஸ் விலாசம் தரவும்

    ReplyDelete