​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 8 January 2015

சித்தன் அருள் - 207 - நவக்ரகங்கள் - சூரியன்!



[இன்று அகத்தியப் பெருமானின் திரு நட்சத்திரம். எல்லோரும் அவரை பணிந்து, அருள் பெற்று இன்பமாக வாழ்ந்திட வேண்டிக் கொள்கிறேன்.]

எல்லோரும் பிரம்மதேவனிடம் சென்று, விஷயத்தைச் சொன்னார்கள். பிரம்மதேவர் யோசித்தார். பின்பு தேவர்களிடம் சொன்னார். "நீங்கள் கவலைப்பட வேண்டாம். இப்பொழுது இருள் நேரம். இன்னும் சில நாழிகையில் சூரியன் கோபத்தோடு உதிக்கும் பொழுது அந்த வெப்பத்தை தாங்கிக் கொள்ள பூ போன்ற இளம் குழந்தை ஒருவன் வருவான். அவன் பெயர் அருணன்.  இந்த அருணன், காச்யபருக்கும், வினதை என்ற அதிதிக்கும் பிறந்தவன். மிக்க பலவான். சிவ சொரூபி" என்று சொன்னார்.

மறுநாள் காலையில் சூரியன் உதிக்கும் பொழுது அந்த அக்னி கதிர்களை, "அருணன்" செங்கதிரோன் நேர் முன் அமர்ந்து அவனுடைய ஒளியைத் தான் எடுத்துக் கொண்டு மறைந்தான்.

அன்று முதல், சூரியனின் மறு அவதாரமாக அருணன் தோன்றி இன்று வரை உலகத்தை ரட்ச்சித்து வருகிறான் என்பது ஒரு வரலாறு.

மார்கண்டேய புராணத்தில் சூரியனுடைய வரலாறு என்பது "இருள் மயமான அண்டத்தை பிரம்மன் ஒருநாள் வேடிக்கையாக பிடித்த பொழுது "ஓம்" என்ற ஒலி உண்டாயிற்று. அந்த ஒலி பின்னர் செங்கதிர் வீச்சாக மாறி, படிப்படியாக அதிலிருந்து வட்ட வடிவமான உருவத்தில் சூரியன் தோன்றினான் என்று சொல்லப்பட்டுள்ளது.

பிரம்ம புராணத்தில் "சிவபெருமான்தான் சூரிய மண்டலமாக ஒளிர்கிறார்: அவர் தான் "சூரியன்" அவருக்கு சூரியன் வலது கண்ணாக விளங்குகிறார்" என்று சொல்லப்பட்டுள்ளது.

சூரியனுக்கு இங்கு இரண்டு பிரசித்தி பெற்ற கோயில்கள் உண்டு. ஒன்று ஒரிசாவிலுள்ள "கோனார்க்" என்ற இடத்தில் சூரியனுக்கு சிறப்பான கோயில் உண்டு. இரண்டு தமிழ்நாட்டில் சூரியனார் கோவில் - ஆடுதுறையில் உள்ளது. இதை தவிர திருக்கண்டியூர் வீரட்டம், திருப்புறவார், பனங்காட்டூர் என்ற இடங்களிலும் சூரியனுக்கு தனித் தனி கோவில்கள் உண்டு.

சூரியனை நேரே நின்று வழிபடலாம். உருவம் அமைத்து வழிபடலாம், யந்திரத்தில் ஆவாகனம் செய்து பூசிக்கலாம். நிலத்தில் படம் வரைந்தும் பிரார்த்தனை செய்யலாம். சிவன் கோவிலில் பரிவார தேவதைகளில் ஒன்றாக வைத்து தினப்படி பூஜையும் செய்வது உண்டு.

நவக்ரகங்களில் ஒன்றாக வைத்து வலம் வந்து வணங்கும் வழக்கமும் எங்கும் காணலாம். தமிழ்நாட்டில் தைமாதப் பிறப்பாகிய மகர சங்கராந்தி அன்று சூரியனை வணங்கி, நிலத்தில் எழுதி பூசை செய்யும் வழக்கம் இன்றும் உண்டு

ஜோதிட சாஸ்த்திரத்தில் சூரியனை பற்றி சொல்லும் பொழுது, சூரியன் செம்பருத்திப் பூவை போல் இருப்பான், காச்யபரின் புதல்வன். மிகவும் பிரகாசம் உடையவன். இருட்டின் பகைவன், எல்லாப் பாவங்களையும் அழிப்பவன், பிரம்மன், விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளின் பிரதிநிதி. எப்பொழுதும் சஞ்சரிப்பவன், நவக்ரகங்களின் நாயகன், வேத மந்திரங்களில் காயத்ரி, சுயநிலை, சுய உணர்வு, செல்வாக்கு, கெளரவம், ஆற்றல், வீரம், பராக்கிரமம், சரீர சுகம், நன்னடத்தை, நேத்திரம், உஷ்ணம், ஒளி, அரசாங்க ஆதரவு ஆகியவற்றுக்கு காரணமானவன். பிதுர்காரகன், சாத்வீக குணம் கொண்டவன், இருண்ட சிவப்பு இவன் நிறம், ஆண் கிரகம்.

சூரியனுக்கு சொந்த வீடு சிம்மம். உச்சவீடு மேஷம். நீச வீடு துலாம். ரிஷபம், மகரம், கும்பம் மூன்றும் பகை வீடுகள்.

சூரியனுக்குச் சந்திரன், செவ்வாய், குரு மூவரும் நண்பர்கள்.

கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய மூன்று நட்சத்திரங்களுக்கும் அதிபதி, நாயகன்.

ஒற்றை சக்கரம் கொண்ட தேரில் வேதத்தில் ஏழு சந்தங்களை ஏழு குதிரைகளைக் கொண்டு பூட்டி பவனி வருகிறான் சூரியன்.

  • சூரியனுக்குரிய  மலர்  - செந்தாமரை.
  • சூரியனுக்குரிய  சமித்து - எருக்கு
  • சூரியனுக்குரிய தான்யம் - கோதுமை 
  • சூரியனுக்குரிய வாகனம் - தேர்; மயில்
  • சூரியனுக்குரிய அதிதேவதை - சிவன் 
  • சூரியனுக்குரிய ரத்தினம் - மாணிக்கம் 
  • சூரியனுக்குரிய உலோகம் - தம்பாக்கு
  • சூரியனுக்குரிய நிறம் - சிகப்பு 
  • சூரியனுடைய அவதாரம் - ஸ்ரீராமர்


சூரியனிடமிருந்து வல்லமை பெற்று ஸ்ரீராமர் யுத்தத்தில் வெற்றி பெற, அகத்தியப் பெருமான், ஸ்ரீராமருக்கு ஆதித்ய ஹ்ருதயம் என்னும் ஸ்லோகத்தை உருவாக்கி உபதேசம் செய்தார். ஸ்ரீராமரும் யுத்தத்தில் எதிரிகளை வெற்றி கொண்டார். இந்த ஸ்லோகத்தை தினம் காலையில் சூரிய உதயத்தின் பொழுது பாராயணம் செய்து வந்தால் அவர்கள் முகம் தேஜஸ் பொருந்தியதாக இருக்கும், பீடைகள் ஒழியும், தரித்திரம் விலகும், உத்தியோகம் கிடைக்கும். பெற்றோர்கள் நல்லபடியாக இருப்பார்கள், டென்ஷன் இருக்காது, மங்களம் உண்டாகும்.

ஒருமுறை தேடிவந்த ஒருவருக்கு நாடி வாசித்த பொழுது அகத்தியப் பெருமான் அவரிடம் தினமும் ஆதித்ய ஹ்ருதயத்தை எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருக்க அருளினார்.

வந்தவர் "அய்யா! அந்த ஸ்லோகத்தை எப்பொழுது வேண்டுமானாலும் சொல்லலாமா?" என்று வினவினார். ஏன் என்றால் அவர் கேட்டு வளர்ந்த சூழ்நிலையில், எல்லோரும், அந்த ஸ்லோகத்தை சூரிய உதயத்தின் பொழுது மட்டும் தான் சொல்லலாம். அஸ்தமனத்துக்குப் பின் அல்லது மதியத்துக்குப் பின் சொல்லக் கூடாது என்று தெரிவித்திருந்தனர்.

இதை அறிந்த அகத்தியப் பெருமான் "என்னிடமே இப்படி கேட்கிறாயே. நேரம் காலம் பார்க்காமல், நடக்கும் பொழுதும், பயணிக்கும் பொழுதும், அமர்ந்திருக்கும் பொழுதும் எப்பொழுது வேண்டுமானாலும் இதை கூறலாம்" என்று அருளினார்.

சாதாரண மனிதர்களுக்கு இதை மனப் பாடம் செய்வது சற்று ஸ்ரமமாக தோன்றும். உண்மை அதுவல்ல. அகத்தியப் பெருமானிடம் வேண்டிக் கொண்டு, இதை கூறி வந்தால், ஒரு சில நாட்களிலேயே மனப்பாடம் ஆகிவிடும். பின்னர் எந்த கோவிலுக்கு சென்றாலும், அந்த கோவிலின் ஈசான மூலையில் வடக்கு, வடகிழக்கு அல்லது  கிழக்கு நோக்கி அமர்ந்து மூன்று முறையேனும் ஜெபித்திட, மிக விரைவில் நம் வேண்டுதல்கள் நிறைவேறுவதை காணலாம். மேலும் எங்கு சென்றாலும் நல்ல பாதுகாப்பு இருக்கும்.

ஆதித்ய ஹ்ருதயம் உருவான நிலை:- அகஸ்திய மகரிஷிக்கு உலகை பற்றி கவலை அதிகமாக ஏற்பட்டது. இப்போதே இப்படி அநீதிகள் தலைவிரித்தாடுகிறதே இனி போகப்போக எப்படி இருக்குமோ? என்ற கவலை பயத்தை கொடுத்தது. இதற்கு தீர்வு காண முயற்சி எடுத்தார். அநியாயங்கள் பெருகாமல் அதை தடுப்பதும் தட்டி கேட்பதும் பெண்களாகதான் இருப்பார்கள். ஆகவே பராசக்தியிடம் முறையிடுவோம் என்ற எண்ணத்துடன் தேவியை அணுகி தன் மன கவலைகளை கூறினார் அகஸ்தியர்.

நல்ல உள்ளமும், மன தைரியமும் கொடுக்க கூடிய ஆற்றலும் சக்தியும், “ஆதித்ய ஹருதய“த்திற்கு இருக்கிறது என்று கூறினாள் பராசக்தி. எந்த ஒரு நல்ல விஷயத்தையும் முதலில் நல்லவர்களிடம் சொன்னால்தான் அது முழுமை அடையும் என்ற எண்ணத்தால் பல வருடம் ஆகியும் மந்திரத்தை வெளியிடாமல் பொறுமையாக இருந்தார், அகஸ்திய முனிவர்.

ஸ்ரீ ராமசந்திரர், இராவணனிடம் போர் செய்து கொண்டு இருந்தார். பல அம்புகளை ஏவியும் இராவணனை கொல்ல முடியாமல் மிகவும் மன வேதனையில் இருந்தார். இராவணனும் முடிவில்லாத போரினால் மயங்கி விழுந்தார். ஆனாலும் இராவணன் போரை நிறுத்துவதாக இல்லை. இன்னும் எத்தனை மணி நேரமோ, எத்தனை நாட்களோ இப்படி போரை தொடர்வது? என்ற விரக்தியின் எல்லைக்கே போனார் ஸ்ரீராமர். இறைவனாக இருந்தாலும் மனித பிறவி எடுத்தால் விதியை அனுபவித்துதான் தீர வேண்டும். ஆனால் விதியை ஒரளவு மாற்றும் சக்தி முனிவர்களுக்கு இருக்கிறது என்பதால் தன் குருவாக நினைக்கும் அகஸ்தியரை மனதால் பிராத்தனை செய்தார். பிராத்தனைக்கு நிச்சயம் பலன் கிடைக்கும் என்பது போல் அகஸ்திய முனிவர் ஸ்ரீராமரின் முன்னே தோன்றி, “ராமா… உலக நன்மைக்காக பராசக்தி ஆதித்ய ஹிருதய மந்திரத்தை எனக்கு உபதேசித்தார். அதை உனக்கு உபதேசிக்கிறேன். இந்த மந்திரத்தை உச்சரித்தால் சகல நன்மைகளும், விரோதிகளை வீழ்த்தும் சக்தியும் கிடைக்கும்.!“ என்றார் அகஸ்திய முனிவர்.

முனிவர் கூறியது போல் ஆதித்ய ஹிருதய மந்திரத்தை உச்சரித்தார் ஸ்ரீ ராமசந்திரர். அதன் பலனாக அதிக சக்தியும், புத்துணர்ச்சியோடும் இராவணனை வீழ்த்தினார். சூரியனுக்கு உகந்த ஆதித்ய ஹிருதய மந்திரத்தை உச்சரித்தால் வல்லவனுக்கு வல்லவனாகலாம் என்றார் சக்திதேவி

அந்த ஸ்லோகத்தை கீழே தருகிறேன்.

ததோ யுத்த பரிச்ராந்தம் ஸமரே சிந்தயா ஸ்திதம்
ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம் 

தைவதைச்ச ஸமாகம்ய த்ரஷ்டுமப்யாகதோ ரணம்
உபாகம்யாப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவாந் ருஷி: 

ராம ராம மஹாபாஹோ ச்ருணு குஹ்யம் ஸநாதனம்
யேந ஸர்வாநரீன் வத்ஸ ஸமரே விஜயஷ்யஸு 

ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசநம்
ஜயாவஹம் ஜபேந்த்யம் அக்ஷய்யம் பரமம் சிவம் 

ஸர்வ மங்கள மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரணாசநம்
சிந்தாசோக ப்ரசமனம் ஆயுர்வர்த்தநம் உத்தமம் 

ரச்மிமந்தம் சமுத்யந்தம் தேவாஸுர நமஸ்க்ருதம்
பூஜயஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவநேச்வரம் 

சர்வதேவாத்மகோ ஹ்யேஷ தேஜஸ்வி ரச்மிபாவந:
ஏஷ தேவாஸூரகணான் லோகான் பாதி கபஸ்திபி: 

ஏஷ பிரஹ்மா ச விஷ்ணுச்ச சிவ: ஸ்கந்தக: ப்ரஜாபதி:
மஹேந்த்ரோ தநத: காலோ யமஸ்-ஸோமோஹ்யபாம்பதி: 

பிதரோ வஸவஸ்ஸாத்யா: ஹ்யச்விநௌ மருதோ மநு :
வாயுர் வஹ்; ப்ரஜா ப்ராண க்ரதுகர்தா ப்ரபாகர : 

ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: கக : பூஷா கபஸ்திமான்
ஸுவர்ணஸத்ருசோ பாநு: ஹிரண்யரேதா திவாகர: 

ஹரிதச்வ: ஸஹஸ்ரார்ச்சி: ஸப்தஸப்திர் மரீசிமாந்
திமிரோந்மதந்: சம்பு: த்வஷ்டா மார்த்தாண்ட அம்சுமான் 

ஹிரண்யகர்ப்ப: சிசிர: தபரோ பாஸ்கரோ ரவி:
அக்கர்ப்போ (அ)திதே: புத்ர: சங்க: சிசிர நாசந: 

வ்யோமாநாதஸ் - தமோபேதீ ருக்யஜுஸ்ஸாமபாரக:
கநவ்ருஷ்டிரபாம் மித்ரோ: விந்த்யவீதீ ப்லவங்கம: 

ஆதபீ மண்டலீ ம்ருத்யூ: பிங்கல: ஸர்வதாபந:
கவிர்விச்வோ மஹாதேஜா ரக்த: ஸர்வபவோத்பவ: 

நக்ஷத்ர க்ரஹதாராணாம் அதிபோ விச்வபாவந:
தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதசாத்மன் நமோ (அ)ஸ்து தே 

நம: பூர்வாய கிரயே பஸ்ச்சிமே கிரயே நம:
ஜ்யோதிர்கணாநாம் பதயே திநாதிபதயே நம: 

ஜயாய ஜயபத்ராய ஹர்யச்வாய நமோ நம:
நமோ நம: ஸஹஸ்ராம்சோ ஆதித்யாய நமோ நம: 

நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம:
நம: பத்மப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம: 

பரஹ்மேசாநாச்யுதேசாய ஸூர்யாயா யாயாதித்யவர்ச்சஸே
பாஸ்வதே ஸர்வபக்க்ஷிய ரௌத்ராய வபுஷே நம: 

தமோக்நாய ஹுமக்நாய சத்ருக்நாயாமிதாத்மநே 
க்ருதக்நக்நாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம: 

தப்தசாமீகாரபாய வஹ்நயே விச்வகர்மணே
நமஸ்தமோபிக்நாய ருசயே லோகஸாக்ஷிணே 

நாசயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்ருஜதி ப்ரபு :
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி: 

ஏஷ ஸூப்தேஷு ஜாகர்தி பூதேஷூ பரிஷ்டித:
ஏஷசைவாக் ஹோத்ரம் ச பலம் சைவாக்ஹோத்ரிணாம் 

வேதச்ச க்ரதவச்சைவ க்ரது-நாம் பலமேவ ச
யா க்ருத்யா லோகேஷூ ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு: 

ஏநமாபத்ஸூக்ரேஷூ காந்தாரேஷூ பயேஷூ ச
கீர்த்தயன் புருஷ: கச்சித் நாவாஸூததி ராகவ 

பூஜயஸ்வைந மேகாக்ரோ: தேவதேவம் ஜகத்பதிம்
ஏதத் த்ரிகுதம் ஜபத்வா யுத்தேஷு விஜயஷ்யஸு 

அஸ்மின் க்ஷணே மஹா பாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸு
ஏவமுக்த்வா ததாகஸ்த்யோ ஜகாம ச யதாகதம் 

ஏதத் உத்வா மஹாதேஜா நஷ்டசோகோ (அ)பவத் ததா
தாராயாமாஸ ஸ"ப்ரிதோ: ராகவ: ப்ரயதாத்மவான் 

ஆதித்யம் ப்ரக்ஷ்ய ஜபத்வா தூ பரம் ஹர்ஷமவாப்தவான்
த்ரிராசம்ய சுசுர் பூத்வா தநுராதாய வீர்யவான் 

ராவணம் ப்ரேக்ஷ்ய (அ)ஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்
ஸர்வயத்நேந மஹதா வதே தஸ்ய த்ருதோபவத் 

அத ரவிரவதந் நிரீக்ஷ்ய ராமம் முதிதமநா: பரமம் ப்ரஹ்ருஷ்யமாண: 
நிசிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா ஸூரகணமதயகதோ வசஸ்த்வரேதி

என்று கூறிய அகஸ்திய மாமுனி இறுதியாக "இரகு குலத்தில் உதித்தவனே! சூரிய பகவானை மேற்கண்ட துதிகளால் போற்றுபவனுக்கு சிக்கலான நேரங்களிலும், சோதனை காலங்களிலும் பயத்தை ஏற்படுத்தக்கூடிய காலங்களிலும்.எந்த துன்பமும் ஏற்படுவதில்லை. தெய்வங்களினாலேயே போற்றப்படுகின்ற அந்த சூரிய பகவானை முனைப்புடன் கூடிய ஒருமித்த மனத்தோடு, மூன்று முறைகள், மேற்கண்ட துதிகளின் மூலமாக வழிபட்டு வருபவன், யுத்த களத்திலே வெற்றியே காண்பான் என்று அகஸ்திய முனிவரால் அருளப் பெற்ற இந்த அற்புத துதியை, மனதை அடக்கியவரும். பேராற்றல் பெற்றவரும் பெரும் தோள் வலிமை  பெற்றவருமான ஸ்ரீ ராமர் சூரிய பகவானை பார்த்தவாறே மூன்று முறைகள் ஜபித்து ராவணனை வென்ற இந்த மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்ததும், நம் பாவங்களையெல்லாம் போக்க வல்ல சிறந்த பரிகார மந்திரமான இந்த ஆதித்ய ஹ்ருதயம் என்ற மஹா மந்திரத்தை நாமும் துதித்து நன்மை அடைவோமாக!

சித்தன் அருள்...................... தொடரும்!

9 comments:

  1. Om Agastheesaya Namaha !!!
    Om Agastheesaya Namaha !!!
    Om Agastheesaya Namaha !!!

    ReplyDelete
  2. Om Agastheesaya Namaha !!!

    http://www.youtube.com/watch?v=C_cTdjSR1Eo

    http://aumamen.com/stotra/aditya-hridayam-stotram

    ReplyDelete
  3. Om Agastheesaya Namaha !!!
    Vilva marm & naga Linga markkandur engu kidaikum endru yaravathu therinthal sollungal....
    Athai sivan kovilil naduvatharku ethenum ... Rule erukieratha endu theriyapaduthavam........pls........

    ReplyDelete
    Replies
    1. Dear friend saravanan,

      good Morning.

      The Plants what you have asked are available at 'ESHA NURSARY' run by 'ESHA FOUNDATION'

      thro out Tamil Nadu. Our chennai branch cell No: is 9442590048 .It situated near Madhavaram Milk Colony.

      You can contact them thro' cell.
      they will guide u.

      One request. Please don't write tamil language in English.. Write in any one language.

      your friend

      g. alamelu venkataramanan.

      chennai

      .

      Delete
    2. Thanks Friend Alamelu Venkataramanan.

      Delete
  4. Brother Sairam

    OM Agatheesaya Namaha: Awaited for the treasure yesterday, Hope by Guru's grace you health is fine and things are good at your end, Thanks

    ReplyDelete
  5. Om agatheesaya namaha . awaiting for the next post .please shower our guru's grace on us . thanks. Viji

    ReplyDelete
  6. ஓம் அகஸ்த்திய மகரிஷி நமஹ.!!!ஐயா தங்களின் பதிவிற்காக காத்து இருக்கிறோம்.அகஸ்திய பெருமானிடம் தடைகளை தகர்க்க வேண்டுகிறோம்.

    ReplyDelete
  7. அகத்திசாய நம!

    ReplyDelete